பழனி முருகனுக்கே மொட்டை போடும் புரோகிதர்கள் கூட்டம்
தமிழ்நாட்டில் பக்தர்கள் அதிகம் கூடும் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோயில். அதிக வருமானம் வரக்கூடிய கோயிலும் கூட! இந்தக் கோயிலில் 32 பார்ப்பன அர்ச்சகக் குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் பூஜைகளையும் சடங்குகளையும் நடத்தி வருகின்றன. 32 பார்ப்பன அர்ச்சகர்கள் யார்? அவர்கள் பெயர் என்ன? முகவரி என்ன? என்பது குறித்து தங்களிடம் எந்தப் பதிவேடுகளும் இல்லை என்று கோயில் நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டபோது பதில் அளித்துள்ளது. அருண்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல்களைக் கேட்டார். இந்த 32 அர்ச்சகப் பார்ப்பனர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதற்கான அரசு ஆணைகளும் இல்லை. ஒரு அர்ச்சகர் முதுமை அடைந்து விட்டால் தனது குடும்பத்தின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு அவரே அர்ச்சகர் உரிமை வழங்கிவிடுகிறார். அர்ச்சகர் பதவி, பரம்பரை அடிப்படையில் வழங்கப்படக் கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் 1971ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட...