Category: பெரியார் முழக்கம்

பழனி முருகனுக்கே மொட்டை போடும் புரோகிதர்கள் கூட்டம்

பழனி முருகனுக்கே மொட்டை போடும் புரோகிதர்கள் கூட்டம்

தமிழ்நாட்டில் பக்தர்கள் அதிகம் கூடும் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோயில். அதிக வருமானம் வரக்கூடிய கோயிலும் கூட! இந்தக் கோயிலில் 32 பார்ப்பன அர்ச்சகக் குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் பூஜைகளையும் சடங்குகளையும் நடத்தி வருகின்றன. 32 பார்ப்பன அர்ச்சகர்கள் யார்? அவர்கள் பெயர் என்ன? முகவரி என்ன? என்பது குறித்து தங்களிடம் எந்தப் பதிவேடுகளும் இல்லை என்று கோயில் நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டபோது பதில் அளித்துள்ளது. அருண்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல்களைக் கேட்டார். இந்த 32 அர்ச்சகப் பார்ப்பனர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதற்கான அரசு ஆணைகளும் இல்லை. ஒரு அர்ச்சகர் முதுமை அடைந்து விட்டால் தனது குடும்பத்தின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு அவரே அர்ச்சகர் உரிமை வழங்கிவிடுகிறார். அர்ச்சகர் பதவி, பரம்பரை அடிப்படையில் வழங்கப்படக் கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் 1971ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட...

அமெரிக்காவில் டிரம்ப்-மோடியை வரவேற்ற இந்துத்துவ பார்ப்பனர்கள் பின்னணி என்ன?

அமெரிக்காவில் டிரம்ப்-மோடியை வரவேற்ற இந்துத்துவ பார்ப்பனர்கள் பின்னணி என்ன?

இந்தியாவுக்கு விசுவாசமின்றி அமெரிக்காவிடம் மட்டுமே தேசப்பற்று காட்டுவோம் என்று உறுதிப் பத்திரம் தந்து, அமெரிக்க குடிமக்களாகப் பதிவு செய்த பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதிப் பிரிவினர் மோடிக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா நடத்தினார்கள். மோடியின் பார்வையில் இவர்கள் ‘தேச விரோதிகள்’ என்றாலும் பார்ப்பனர்களாக இருப்பதால் தேசபக்தர்களாகி விடுகிறார்கள். இந்தக் கேள்விகளை எழுப்பி ‘இந்து’ ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையின் சுருக்கம். டிரம்ப் – மோடி பங்கேற்ற அமெரிக்காவின் ஹுஸ்டன், டெக்சாஸ் மாநிலங்களில் நடந்த பேரணி யில் (மக்கள் கூடுகை) 50,000 அமெரிக்க இந்தியர்கள் பங்கேற்றதாக செய்திகள் வந்துள்ளன. டிரம்ப், மோடியின் அரசியல் கொள்கை ஒரு பகுதி அமெரிக்க இந்தியர்களுக்கு உற்சாகம் தரலாம். ஆனால் பெரும் பான்மை மக்களுக்கு நெருக்கடியை உருவாக்குவ தோடு அவர்களுக்கிடையே சமூகத்தில் பிளவுகளை கூர்மைப்படுத்தும் ஆபத்தும் அடங்கியுள்ளது. இந்தப் பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும் பான்மையான அமெரிக்க இந்தியர்கள் யார்? அமெரிக்காவின் குடிமக்களாக தங்களை மாற்றிக் கொண்டவர்கள். அமெரிக்கக் குடிஉரிமைக்கு உரிமை...

மண்ணின் மைந்தருக்கே வேலை: தமிழகத்தில் சட்டம் நிறைவேற்றுக!

மண்ணின் மைந்தருக்கே வேலை: தமிழகத்தில் சட்டம் நிறைவேற்றுக!

தமிழ்நாட்டில் பல இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிலையில், மத்திய அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட நாட்டுக்காரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளமே அழிந்துபோகும் ஆபத்தை நாம் சந்திக்க வேண்டி வரும்.  வேலை வாய்ப்புகளை அழிப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே வடநாட்டுப் பண்பாட்டில் மூழ்கச் செய்யும் ஆபத்தும் இதில் அடங்கியுள்ளது. இந்த பேராபத்தைத் தடுக்க, மகாராஷ்டிரா ஆந்திரா இராஜஸ்தான் மாநில அரசுகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் குறைந்தது 75 விழுக்காட்டு  வேலைவாய்ப்புகளை – தனியார் தொழில் நிறுவனங்களிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதுவே தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வாக இருப்பதைத் தமிழக அரசு உணர வேண்டும் என்றும் மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது. – பள்ளிபாளையம் மாநாட்டுத் தீர்மானம் பெரியார் முழக்கம் 26092019 இதழ்

தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் திருத்தப்பட்ட விதியைத் திரும்பப் பெறுக!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் திருத்தப்பட்ட விதியைத் திரும்பப் பெறுக!

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்காக செயல்படவேண்டிய தமிழக அரசு, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) விதிகளைக் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள்  திருத்தி அமைத்தது. இந்தத் திருத்தத்தின் காரணமாக, வெளி மாநிலத்தவர் தமிழக அரசுப் பணிவாய்ப்புகளைப் பறிப்பதற்கு தமிழக அரசால் கதவு திறந்து விடப்படுள்ளது. இதன் காரணமாக கடந்த 2019, மே மாத இறுதியில் நடத்தப்பட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் பணியிடங்களில் 39 இடங்களைப் பிற மாநிலத்தவர்கள் பெற்றுவிட்டனர். அதுபோலவே  கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் பதவிகளிலும் இதுவே நடந்தது. மின்னணு தொடர்பியல் துறைக்கான விரிவுரையாளர்களுக்கான 36 பதவிகளில் 31ஐயும், இயந்திரப் பொறியியல் துறைக்கான விரிவுரையாளர் பணிகள் 67இல் 46 பணிகளையும் வெளிமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்கள் பறிக்க வழிவகுக்கும் 26.11.2016இல் திருத்தப்பட்ட விதிகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது....

நடுவண் அரசுப் பணிகளுக்கு மாநில அளவிலே தேர்வு நடத்துக!

நடுவண் அரசுப் பணிகளுக்கு மாநில அளவிலே தேர்வு நடத்துக!

தமிழ்நாட்டில் நடுவண் அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர் ஆக்கிரமிப்பைத் தடுக்க மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை அகில இந்திய அடிப்படையில் நடத்தாமல் மாநில அளவிலான தேர்வாக நடத்த வேண்டும் என்பதோடு,  வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் என்ற கோரிக்கையை நடுவண் அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் குஜராத் மாநிலத்திலேயே இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டதைத் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 2017 ஆம் ஆண்டு நடந்த பணியாளர்த் தேர்வில் 116 வேலை வாய்ப்புகளில் 15 மட்டுமே கிடைத்த நிலையில், குஜராத்தியர்  புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் குஜராத் மாநில அரசும் தன்னை இணைத்துக் கொண்டு குஜராத்திகளுக்கே வேலை வழங்கக் கோரியது. அதுமட்டுமின்றி குஜராத்தில் 85 விழுக்காடு வேலை வாய்ப்புகளை குஜராத்தியருக்கு...

காமராசர் நினைவு நாளான அக்.2இல்  புதிய கல்விக் கொள்கை நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம்

காமராசர் நினைவு நாளான அக்.2இல் புதிய கல்விக் கொள்கை நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம் கழக மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த தீர்மானம். ஆரியர்களின் வேத காலத்திலிருந்தே, பெரும்பான்மை உழைக்கும் மக்களான ‘சூத்திர பஞ்சம’ மக்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளன. உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை கல்வி உரிமை தடையின்றி கிடைக்கவும், உயர் கல்வியை நோக்கி அவர்கள் முன்னேறிச் செல்வதற்குமான இலகுவான சமூகச் சூழலை உருவாக்கி சமூக நீதி அடிப்படையிலான கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். அதை முழுமையாக சிதைத்து வெகு மக்களிடம் கல்வி சென்று அடைந்து விடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் தடைகளை எழுப்பி கல்வி அனைவருக்கும் பரவிடாது தடுக்கவே புதிய கல்விக் கொள்கை வந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் நோக்க உரையிலேயே இது வெளிப்படையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  “சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து எல்லோருக்கும் கல்வி – சமமான கல்வி வழங்குவதிலேயேதான் நாம் முயற்சித்தோமே தவிர, அதை விட முக்கியமான ‘தரமான கல்வி’ பற்றி கவலைப்படவே இல்லை என்று...

எழுச்சி நடைபோட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு

எழுச்சி நடைபோட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு

‘சமூக நீதியைப் பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தைத் திணிக்காதே’ என்ற முழக்கங்களை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்களுக்கான பரப்புரைப் பயணக் குழுக்கள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஒன்று சேர்ந்தன. சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருப்பூர், கோபி, மேட்டூரிலிருந்து கழக செயல்பாட் டாளர்கள், பெண்களும் ஆண்களும் மக்களைச் சந்தித்து தமிழகத்தைச் சூழ்ந்து நிற்கும் வேலை, கல்வி உரிமைகள் பறி போகும் ஆபத்துகளை எடுத்து விளக்கினர். கலை நிகழ்வுகள், மேடைப் பேச்சுகள், துண்டறிக்கைகள், நூல்கள் வழியாக மக்களிடம் கருத்துகள் கொண்டு போய் சேர்க்கப் பட்டன. கட்சிகளைக் கடந்து கிராமங் களிலும் நகரங்களிலும் மக்கள் பேராதரவுடன் இந்தப் பரப்புரைப் பயணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. செப். 20ஆம் தேதிபிற்பகல் பயணக் குழுவினர் பள்ளிப்பாளையம் நோக்கி வரத் தொடங்கினர். நேரு திடலில் நிறைவு விழா மாநாடு மாலை 6 மணியளவில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்....

கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கோவை போத்தனூரில் உள்ள சங்கம் திருமண மண்டபத்தில் 8.9.2019 அன்று மாலை 7 மணிக்கு தோழர்கள் கனிமொழி – பத்மநாதன் ஆகியோருக்கு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையேற்று நடத்தி வைத்தார். திமுகவின்  முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, அந்தியூர் செல்வராஜ், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்,  தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி உரையாற்றினர். திருமணத்தில் கோவை பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 19092019 இதழ்

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை

சென்னை பல்கலைக் கழகத்தில் 2018ஆம் ஆண்டு இதழியல் துறையில் பட்டம் பெற்றவர் கிருபா மோகன் என்ற மாணவர். இந்த ஆண்டு தத்துவவியல் துறை யில் ‘பவுத்தம்’ தொடர்பான முதுகலைப் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார். இவர் இதழியல் துறையில் படிக்கும் போது, அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தின் செயலாளர் ஆவார். தற்போது தத்துவவியல் துறையில் ஒரு மாதங்களாக வகுப்பு நடைபெற்ற நிலையில், அந்த துறையின் தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி, கிருபா மோகனிடம் “நீங்கள் முறை யாக எலிஜிபிலிட்டி சர்டிஃபிகேட் எனப்படும் தகுதிச் சான்றிதழை தரவில்லை. அதனால் உங்களின் சேர்க்கையை இரத்து செய்கின்றோம்” என்று கூறியுள்ளார். ஆனால் கிருபா மோகன் அதே பல்கலையில் முதலில் படித்த காரணத்தால் எலிஜிபிலிட்டி சர்டிஃபிகேட் தேவையில்லை என்று வாதிட்டுள்ளார். தன்னுடைய சேர்க்கை இரத்து செய்யப்பட்டதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்தும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தரப்பில் இருந்தும் தரப்பட்ட அழுத்தமே காரணம் என்றும் கிருபா மோகன் கூறியுள்ளார். கிருபா மோகன் தற்போது...

நியூட்டனும் அய்ன்ஸ்டினும் ‘பிரம்மா’வுக்குள் தான் அடக்கம்

நியூட்டனும் அய்ன்ஸ்டினும் ‘பிரம்மா’வுக்குள் தான் அடக்கம்

மோடி அமைச்சரவையில் பல அறிவுக் கொழுந்துகள் இருக்கிறார்கள். டார்வின் பரிணாம வளர்ச்சி கோட்பாடே தவறு. மனிதர்களை குரங்குகள் என்று பேசலாமா என்று ஆவேசப்பட்டார் முன்னாள் பா.ஜ.க. மத்திய அமைச்சர். அவர் பெயர் சத்யபால் சிங். மகாராஷ்டிராவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர். குரங்குகள் இழிவானவை என்று கூறும் இவர்கள்தான் அனுமானை கடவுளாக்கி ‘அனுமான் ஜெயந்தி’யும் கொண்டாடுகிறார்கள். மாற்றுக் கருத்து பேசுவோர் கூட்டங்களில் எல்லாம் கலவரம் செய்யவே சில கும்பல் தமிழ்நாட்டில் அலைந்து  கொண்டிருக்கிறது. அப்படி கலவரம் செய்யும்போது அவர்கள் போடுகிற முழக்கமே ‘ஜெய் அனுமான்; ஜெய்காளி’ என்பதுதான். இப்போது மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் பியுஷ்கோயல் என்பவர் ஒரு அசத்தலான அறிவியல் ஆராய்ச்சியை அவிழ்த்து விட்டிருக்கிறார். “நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது என்பதற்கு கூறப்படும் புள்ளி விவரக் கணக்குகளை நம்பி விடாதீர்கள். கணிதத்திற்கும் பொருளாதாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுபோல் கணிதத்துக்கும் அறிவியலுக்கும்கூட சம்பந்தம் இல்லை. புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த அய்ன்ஸ்டின்...

கழகத்தில் இணைந்தனர்

கழகத்தில் இணைந்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஸ்ரீராம், மாதவன், சுரேஷ், விஜய், கரண், அசோக்ராஜ், சின்னப்பதாஸ், மாரியப்பன், மணிகண்டன், தமிழ், மணிசேகரன், தேவேந்திரன், அருண் ஆகியோர்  திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்துள்ளனர். கும்பகோணம் அம்மன்பேட்டை கிளை அமைப்பாளராக ராஜ்குமாரும், கும்பகோணம் நகர அமைப்புச் செயலாளராக அசோக்கும் கழகத்தால் தலைமை ஒப்புதலோடு நியமிக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டக் கழகத் தலைவரும் தலைமைக் கழகப் பேச்சாளருமான சாக்கோட்டை இளங்கோவன் முயற்சியில் இவர்கள் கழகத்தில் இணைந்துள்ளனர். பெரியார் முழக்கம் 19092019 இதழ்

‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது பொறியாளர் சுந்தர்ராசன்

‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது பொறியாளர் சுந்தர்ராசன்

எது “மோசமாக நடக்கக்கூடும்” என்று சொல்லப்பட்டதோ அது மோசமாக நடந்துகொண்டிருக்கிறது.   ஏதோ பகவத் கீதை வசனம் போல் இருக்கிறது என்று நினைக்கவேண்டாம். புகுஷிமா அணுவுலை இப்பூமிக்கு மோசமான ஆபத்தாக முடியும் என்று சொல்லப்பட்டு வந்தது, இப்போது உண்மையாகிவுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமாவின் மூன்று உலைகள் வெடித்து சிதறின. விபத்து ஏற்பட்டு பல ஆண்டுகள் கழித்து உலைகளை சுத்தப்படுத்தும் பணிகள் துவங்கின. வெப்பத்தையும், கதிர்வீச்சையும் குறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நீரும், அணுக்கழிவுகளை சேமித்துவைக்கும் குளங்களில் இருந்த நீரும், அணுவுலைகளுக்குள் புகுந்த தண்ணீரும் என “அதிக கதிர்வீச்சு” கொண்ட நீர் 1000 தொட்டிகளில் சேமித்துவைக்கப்பட்டது. இதுதவிர நாளொன்றிற்கு சுமார் 500 டன் “குறைந்த கதிர்வீச்சு” கொண்ட நீர் பசிபிக் பெருங்கடலில் சென்று சேர்ந்து கொண்டிருந்தது.  தினம் தினம் கடலுக்குள் செல்லும் நீரை தடுப்பதற்காக கட்டப்பட்ட “பனிச்சுவர்” முழுமையாக வெற்றிபெறவில்லை, 500 டன் நீர் 100 டன்னாக குறைந்ததே தவிர முழுவதுமாக கட்டுப்படுத்தமுடியவில்லை....

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் தேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும், புதிய கல்விக் கொள்கை

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் தேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும், புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை – இடஒதுக்கீடு குறித்தோ ஜாதி பிரச்சினைப் பற்றியோ பேசாமல் மூடுவதற்கான பரிந்துரைகளையே வலியுறுத்துகிறது என்றார் கல்வியாளர் கஜேந்திர பாபு. (சென்ற இதழ் தொடர்ச்சி) பொதுத் தேர்வு முறையை சொல்கிறார்கள் அல்லவா, இப்போது 10 ம் வகுப்பு தேர்வுகளை யார் நடத்துகிறார்கள்? தமிழ்நாட்டில் அரசு 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கு தேர்வுகளை நடத்துகிறது. இதில் போதுமான மதிப்பெண் வரவில்லையென்றால் ஒரு மாணவர் தனது தேர்வுத் தாளை மறு கூட்டலுக்கு அனுப்ப லாம். திருத்தியதையும் புகைப்படமாக பார்க்கலாம். தமிழ்நாட்டில் ஓரளவிற்கு தேர்வு முறை ஊழல் இல்லாமல் நடக்கிறது. பறக்கும் படை போன்றவை களும் தேர்வு நேரங்களில் கண்காணிப்பில் உள்ளன. இந்தக் கொள்கை என்ன சொல்கிறதென்றால்?  மாநில தேர்வு முறை, மத்திய தேர்வு முறை மட்டுமில்லாமல் தனியார் கம்பெனிகளும் தேர்வு முறைக்கு விண்ணப்பித்து அனுமதியை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறது. மாநிலத்திலோ அல்லது மத்திய அரசிடமோ விண்ணப்பித்து அந்த உரிமத்தைப்...

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் திறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் திறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை – இடஒதுக்கீடு குறித்தோ ஜாதி பிரச்சினைப் பற்றியோ பேசாமல் மூடுவதற்கான பரிந்துரைகளையே வலியுறுத்துகிறது என்றார் கல்வியாளர் கஜேந்திர பாபு. (சென்ற இதழ் தொடர்ச்சி) 70 ஆண்டுகாலம் கழித்து வரக்கூடிய தேசிய கல்விக் கொள்கையில் ஜாதியக் கொடுமையைப் பற்றி இருக்க வேண்டும் என்று நான் எதிர் பார்ப்பேனா? மாட்டேனா? வாழ வேண்டிய வயதில், படித்த இளைஞர்களை ஜாதியின் பெயரால் கொலை செய்கிறார்களே அதைப் பற்றி எதாவது இந்த அறிக்கையில் இருக்கிறதா? அப்படி இருந்தால் வரவேற்கலாம். Multi Discipline என்று சொல் கிறார்களே! அப்படி என்றால் என்ன? Tradition, Ethicsயை கற்றுக் கொடுக்க சொல்கிறார்களே! எந்த Traditionயை கற்றுக் கொடுப்பது? அச்சம், நாணம், மடமை இவையெல்லாம் யாருக்கு இருக்கும் குணம்? நாய்க்கு இருக்கும் குணமென்று பாரதியார் சொல்கிறார். பெண்ணைப் பார்த்து அச்சம் கொள்ளாதே என்று சொன்னார். அது தான் Tradition, புத்தகத்தில் வருமா அது? மூன்று வருடம் BSC Chemistry, BSC...

கோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்

கோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்

தலையில் அடிபட்டு, நினைவு தப்பி ‘கோமா’ நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, மந்திரங்களை ஓதி சிகிச்சை அளிக்கும் விபரீத வேலையில், மத்திய பாஜக அரசின் தலைமையிலான நாட்டின் உயர் மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு (கூhந ஐனேயைnஊடிரnஉடை டிக ஆநனiஉயட சுநளநயசஉh -ஐஊஆசு) ஈடுபட்டுள்ளது. இந்த விபரீதத் திட்டத்திற்கு ஆராய்ச்சி என்ற பெயரில், ஓராண்டு, ஈராண்டு அல்ல, கடந்த 3 ஆண்டுகளாக, மாதம் ரூ. 28 ஆயிரம் விகிதம் நிதி ஒதுக்கீடும் வழங்கியுள்ளது. அதுவும் ஏதோ ஒரு மருத்துவமனையில் அல்ல, நாட்டின் புகழ்பெற்ற தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில்தான் இந்த அவலம் அரங்கேற்றப்பட்டு உள்ளது. ரிக் வேதத்தில் இடம்பெற்ற ‘மகாமிரித்யுன்ஜயா’ என்ற மந்திரத்தை ஓதுவதன் மூலம், நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்த முடியும் என்று, டாக்டர் அசோக் குமார் என்பவர் கூறியுள்ளார். இதற்காக ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்கி, ஐசிஎம்ஆர் அமைப்பிடம் விண்ணப்பமும் அளித்துள்ளார். முதலில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் இதற்காக விண்ணப்பித்தபோது, இது...

பாராட்டுகிறோமய்யா, பட்டு தீட்சிதரே!

பாராட்டுகிறோமய்யா, பட்டு தீட்சிதரே!

அரசின் அறநிலையத் துறை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படாமல் பல கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்ட தில்லை நடராசன் கோயில் பார்ப்பன தீட்சதர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அரசு நிர்வாகத்தில் சில காலம் இருந்தபோது வசூலான உண்டியல் தொகையில் நூறில் ஒரு சதவீதம்கூட இப்போது கணக்கில் வருவது இல்லை; தீட்சதர்கள் சுருட்டிக் கொண்டு விடுகிறார்கள். அரசு அதிகாரி மேற்பார்வையின் கீழ் கோயில் நிர்வாகம் கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்து தீட்சதப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள்.  அவர்களுக்காக வாதாடியவர் சுப்பிரமணியசாமி. தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தீட்சதப் பார்ப்பனர்கள் சரிகட்டி விட்டார்கள். அதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு இந்த வழக்கில் உறுதியாக எதிர் வழக்காடாமல் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டியது. தீட்சதர்களுக்கு வாதாடிய சுப்பிரமணிய சாமியும் எதிர்த்து வாதாடிய தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களும் கைகோர்த்தே நின்றார்கள். ‘தீட்சதர்கள் மானுடப் பிறவிகள் அல்ல; அவர்களின் மூதாதையர் வானுலகில் இருந்து...

அமித்ஷாவின் வெறிப் பேச்சு

அமித்ஷாவின் வெறிப் பேச்சு

1929லேயே இந்தியை எதிர்த்தார் பெரியார் ‘இந்தியாவின் அடையாளம் இந்தி’ என்ற அமித்ஷா கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் தென்னகம் முழுவதும் எழுந்துள்ளது. இந்தித் திணிப்பை எதிர்த்தும் அதைத் திணிப்பதன் நோக்கத்தை விளக்கியும் 1929ஆம் ஆண்டிலேயே  90 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் எழுதிய கட்டுரை. சமீபத்தில் சென்னை மாகாணத்திற்கு சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களை ஹிந்திப் பிரசாரம் என்னும் பேரால் பார்ப்பனப் பிரசாரம் செய்ய அழைத்துவரப் போகின்றதாகத் தெரிய வருகின்றது. இந்த வழியில் பார்ப்பனப் பிரசாரம் செய்வதோடு மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாத மூடர்களிடமிருந்து சுமார் ஒரு லக்ஷம் ரூபாயாவது கொள்ளை அடிக்கக் கருதியிருக்கின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது. கதரின் பேரால் அடித்த கொள்ளையாகிய ஐந்து லக்ஷம் ரூபாய் இன்னும் ஜீரணம் ஆகாமல் அப்படியே கல்லுப் போல் பார்ப்பார்கள் வயிற்றில் கிடக்க, சென்ற வருட காங்கிரசின் பேரால் கொள்ளை அடித்த சுமார் 20, 30 ஆயிரம் ரூபாயும் அப்படியே கிடக்க இப்போது இன்னும் ஒரு லக்ஷம்...

பெண்ணடிமைப் பண்பாடுகளை  பொது வெளிகளில் தகர்த்தவர் பெரியார்

பெண்ணடிமைப் பண்பாடுகளை பொது வெளிகளில் தகர்த்தவர் பெரியார்

பெரியார் பிறந்த நாளையொட்டி ‘தமிழ் இந்து’வின் ‘பெண் இன்று’ வார சிறப்பு மலரில் பிருந்தா சீனிவாசன் எழுதிய கட்டுரை. பிறந்தநாள், நினைவுநாள் போன்ற நாட்களில் ஆண்டுக்கொரு முறை சடங்குக்காக மட்டும் நினைவுகூரப்பட வேண்டியவர் அல்ல பெரியார். ஒவ்வொரு நாளும் நம் ஒவ்வொரு செயலிலும் பெரியார் நமக்குத் தேவைப்படுகிறார். காரணம், சாதிய ஒடுக்குமுறைகளும் ஆணாதிக்கமும் மேலோங்கியிருந்த காலத்திலேயே பெண்ணுரிமையைப் பேசியவர் அவர். அறிவிலும் சிந்தனையிலும் நாம் முன்னேறி விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலேயே பெண்ணுரிமை குறித்துப் பேசுவது பாவச்செயல் போல் கருதப்படுகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமைச் சிந்தனையைப் பரப்பியதாலேயே அவர் பெரியாராக உயர்ந்துநிற்கிறார். பெண்களுக்கும் எதிரி : பண்பாடு, கலாச்சாரம் போன்றவை பெண்களை எப்படி காலங்கலாமாக அடிமைப் படுத்தி வைத்திருக்கின்றன என்பதைப் பொதுவெளியில் போட்டுடைத்தவர் அவர். அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பின. ஆனால், எதைக் கண்டும் சளைக்காமல் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார். ஆண்களைச் சாராமல் தனித்து...

பேனர்களும் நடைபாதை கோயில்களும்

பேனர்களும் நடைபாதை கோயில்களும்

சென்னையில் பேனர் வைக்கத் தடை செய்யப்பட்டிருந்தாலும் ஆளும் கட்சி யினருக்கு  அது பொருந்தாது. அ.இ.அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது வீட்டுத் திருமணத்துக்கு வைத்திருந்த பேனர் சரிந்து வேளச்சேரி பகுதியில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பொறியாளர் உயிர்ப் பலியாகிவிட்டார். ஸ்கூட்டரில் வந்த அந்தப் பெண் மீது பேனர் விழ, பெண் கீழே விழ, எப்போதும் ‘உயிர்க் கொல்லி’யாகப் பறக்கும் தண்ணீர்  லாரி,  அந்தப் பெண் மீது ஏறி உயிரிழந்து விட்டார். நெஞ்சை உலுக்கி விட்டது கொடூரமான இந்த இளம் பெண்ணின் மரணம். ‘பேனரை’ அச்சடித்துக் கொடுத்த அச்சகத்துக்கு சீல் வைத்திருக்கிறது, தமிழகக் காவல் துறை. பேனரைத் தயாரித்துக் கொடுத்த அச்சக உரிமை யாளருக்கு அது சாலையில் சட்ட விரோதமாக வைக்கப்பட இருக்கிறது என்பது எப்படி தெரியும் என்று யாரும் கேட்டு விடக் கூடாது. துணி பேனரை அச்சடிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவரை தேடிப் பிடித்து கைது செய்யாமல் விட்டார்களே, என்று நிம்மதி அடைய வேண்டியதுதான்....

குடியாத்தம் இரா.ப.சிவா- ஜெ.பிரவினா மணவிழா

குடியாத்தம் இரா.ப.சிவா- ஜெ.பிரவினா மணவிழா

திராவிடர் விடுதலைக் கழகம் வேலூர் மாவட்ட செயலாளர் இரா.ப.சிவா-ஜெ.பிரவினா ஆகி யோரது வாழ்விணை ஏற்பு விழா 01.09.2019 அன்று காலை 10 மணி யளவில் குடியாத்தம், அம்மணாங் குப்பத்தில் உள்ள மதுரா மஹாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஜெ.செந்தமிழ் வரவேற்பு கூறினார். மருத்துவர் நா.எழிலன் (இளைஞர் சங்கம்), பால்.பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்), ப.திலிபன் (வேலூர் மாவட்ட செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார்.   நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார். பெரியார் முழக்கம் 12092019 இதழ்

பொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்…

பொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்…

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இந்தக் காலாண்டில் 8 சதவீதம் எதிர்பார்க்கப்பட்டது 5 சதவீதமாக குறைந்துள்ளது. நிலக்கரி, உரம், சிமெண்ட், மின்சாரம் போன்ற எட்டு முக்கிய தொழில் துறைகளில் 7.3 சதவீதம் இருந்த வளர்ச்சி இன்று 2.1 சதவீதமாக குறைந்துள்ளது. கட்டுமானத் துறை வளர்ச்சி விகிதம் ஒன்றரை ஆண்டு களில் காணாத சரிவை சந்தித் துள்ளது. ஒரே ஆண்டில் (2018லிருந்து 2019 க்குள்) வங்கி மோசடி நாற்பதாயிரம் கோடி ரூபாயிலிருந்து எழுபதாயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது (இது 2013இல் வெறும் பத்தாயிரம் கோடியாக இருந்தது). சென்ற 5 ஆண்டுகளில் 5.56 இலட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி செய்யப் பட்டது. அதன் பிறகும் பெரிய தொகையில் கடன் பெற்று திருப்பித் தர முடியாதோர் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் பொருளா தாரம் மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது. வாகன உற்பத்தித் துறை மிகவும் சரிவை கண்டுள்ளது. விற்பனை...

ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது?

ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது?

ஜம்முவில் நடக்கும் இராணுவ ஆட்சி மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து வீடுகளில் முடக்கி வைத்து விட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை, ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல், ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சரியாக ஒரு மாதமாகிவிட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீர் மக்களிடமிருந்து அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். செல்பேசி, தரைவழித் தொலை பேசி, இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளுதல் என எவ்விதமான தகவல் தொடர்பும் அவர்களுக்குக் கிடையாது. பிரதான சாலைகள் அனைத்திலும் பாதுகாப்புப் படையினரின் தடுப்பரண்கள் வைக்கப்பட் டிருப்பதாலும், பொதுப் போக்குவரத்து இல்லாததாலும் மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து எங்கும் செல்வதற்கான உரிமை பறிக்கப் பட்டவர்களாக இருந்து வருகிறார்கள். அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு வரமுடியாத சூழ்நிலை இருப்பதால் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. செய்தித்தாள்கள் தங்கள் பதிப்புகளை வெளியிட முடியவில்லை. தகவல் தொடர்பு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட் டிருப்பதால் ஊடகவியலாளர்களால் தங்கள் செய்தி நிறுவனங்களுக்கு முறையாக செய்திகளை...

ஆய்வாளர் ஜெயரஞ்சன் பி.பி.சி.க்கு பேட்டி தமிழ்நாட்டைப் பாதிக்கும் ஒரே நாடு; ஒரே ரேசன் கார்டு திட்டம்

ஆய்வாளர் ஜெயரஞ்சன் பி.பி.சி.க்கு பேட்டி தமிழ்நாட்டைப் பாதிக்கும் ஒரே நாடு; ஒரே ரேசன் கார்டு திட்டம்

ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு திட்டம் விரைவில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப் படுமென தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருக்கிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து உணவுப் பாதுகாப்பு விவகாரங்களில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் பேசினார். பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அளித்த நேர்காணலிலிருந்து: ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு திட்டம் என்பது என்ன? இதை எப்படி செயல்படுத்தப்படும்? இந்தத் திட்டத்தின் முக்கியமான அம்சம், உணவுப் பொருள் வழங்கலை எளிமையாக்குவது (ஞடிசவயbடைவைல) என்பதுதான். இப்போது உணவு தானியங்களை வழங்குவது என்பது மாநில அரசிடம் இருக்கிறது. ஒவ்வொரு மாநில அரசும் தனது கொள்கைக்கு ஏற்றபடி இந்த உணவு தானியங்களை நியாய விலைக்கடைகளில் வழங்குகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. யாருக் கெல்லாம் குடும்ப அட்டை இருக்கிறதோ, அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்....

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து! புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து! புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது

மதத்தை அரசியலாக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் பதட்டத்தை உரு வாக்கி வருகிறது. வணிகர்கள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியினரால் நன்கொடை கேட்டு துன்புறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர். இந்து அரசியல் அமைப்புகளே தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன. போலி தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே இந்த ஆண்டு விநாயகன் சிலை ஊர்வலம் நடத்துகிறோம் என்று இந்து முன்னணி வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இப்படி அறிவித்த பிறகும் விநாயகன் சிலை நிறுவுவோர் பெற வேண்டிய அரசுத் துறை அனுமதிகளை காவல் துறையே பெற்றுத் தருகிறது. ‘விநாயகன்’ என்பதே தமிழ் வழிபாட்டுக்குரிய கடவுளாக இருந்தது இல்லை. புலிகேசி மன்னன் காலத்தில் மராட்டியத்துக்கு படை எடுத்துச் சென்றபோது வெற்றியின் நினைவு சின்னமாக படைத் தளபதி வாதாபியிலிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டதுதான் ‘விநாயகன்’ சிலை. திலகர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக விடுதலை பெறவேண்டும் என்று நடத்திய போராட்டங் களுக்கு ‘விநாயகனை’ அரசியலுக்குப் பயன் படுத்தினார். அந்த மத...

உச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ நீதிபதி பானுமதி கேள்வி

உச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ நீதிபதி பானுமதி கேள்வி

உச்சநீதிமன்றத்திற்கான நீதிபதிகள் தேர்வில் சீனியாரிட்டி புறக் கணிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி பானுமதி குற்றம்சாட்டியுள்ளார். மூத்தோர் முன்னுரிமைப்படி இல்லாமல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதாகரை புறக்கணித்து, இமாச்சல் பிரதேச தலைமை நீதிபதியான வி.ராமசுப்ரமணியத்தை (இவர் ஒரு பார்ப்பனர்) கொலிஜியம் பரிந்துரைத்தது ஏன் என்றும் நீதிபதி பானுமதி கேள்வி எழுப்பியுள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஆகஸ்ட் 28இல் நடந்த கொலிஜியம் கூட்டத்தில், ரவீந்திர பட், வி. ராமசுப்பிரமணியன், கிருஷ்ணா முராரே மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகிய 4 பேரையும் உச்சநீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந் துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரைகளில் சீனியாரிட்டி பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான பானுமதி குற்றம் சாட்டியுள்ளார். சீனியாரிட்டி அடிப்படையில் இமாச்சல பிரதேசத்தின் தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன் 42ஆவது இடத்தில் உள்ளதாகவும், அதே சமயம் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சுதாகர் 3ஆவது இடத்தில் இருப்பதையும் அவர் சுட்டிக்...

‘சந்திரயான்-2’:  அறிவியலும் மூடநம்பிக்கையும்

‘சந்திரயான்-2’: அறிவியலும் மூடநம்பிக்கையும்

இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான்-2, கடைசி நொடியில் பின்னடைவை சந்தித்ததாக தகவல்கள் வந்தன. ‘சந்திரயான்-2’இல் கலன், லேண்டர், ஆய்வு ஊர்தி என்ற மூன்று முக்கிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் விக்ரம் என்று பெயர் சூட்டப்பட்ட லேண்டரின் தொடர்பு கடைசி நேரத்தில் துண்டித்து போனது. இப்போது அதன் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர். “திட்டம் முழுமையாக தோல்வி அடைய வில்லை; வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம்; விரைவில் லேண்டர் தொடர்பு மீட்கப்படும்” என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அறிவியலுக்கு பின்னடைவுகள் தற்காலிகம்தான்; அது எப்போதும் முன்னேறிச் செல்லும். ‘சந்திரனை’ கடவுள்கள் பட்டியலில்  சேர்த்துள்ள நாடு இது. சந்திரனைப் பாம்பு விழுங்குவதுதான் சந்திரகிரகணம் என்று நம்பி அன்று முழுக்குப் போட்டு ‘பாவத்தை’க் கழிக்கும் மூட நம்பிக்கை இப்போதும் இருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலரும் இந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்தவே செய்கிறார்கள். ‘சந்திரயான்-2’ திட்டத்தை ஏழுமலையானிடமும், உடுப்பி...

புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது !

புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது !

மதத்தை அரசியலாக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் பதட்டத்தை உருவாக்கி வருகிறது. வணிகர்கள், இந்து முன்னணி,இந்து மக்கள் கட்சியினரால் நன்கொடை கேட்டு துன்புறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர்.இந்து அரசியல் அமைப்புகளே தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன. போலி தமிழ்த்தேசியத்துக்கு எதிராகவே இந்த ஆண்டு விநாயகன்சிலை ஊர்வலம் நடத்துகிறோம் என்று இந்து முன்னணி வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.இப்படி அறிவித்த பிறகும் விநாயகன் சிலை நிறுவுவோர் பெற வேண்டிய அரசுத் துறை அனுமதிகளை காவல் துறையே பெற்றுத் தருகிறது.‘விநாயகன்’ என்பதே தமிழ் வழிபாட்டுக்குரிய கடவுளாக இருந்தது இல்லை. புலிகேசி மன்னன் காலத்தில் மராட்டியத்துக்கு படை எடுத்துச் சென்றபோது வெற்றியின் நினைவு சின்னமாக படைத் தளபதி வாதாபியிலிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டதுதான் ‘விநாயகன்’ சிலை. திலகர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக விடுதலை பெறவேண்டும் என்று நடத்திய போராட்டங்களுக்கு ‘விநாயகனை’ அரசியலுக்குப் பயன்படுத்தினார். அந்த மத அரசியல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சுதந்திரத்துக்குப் பிறகும் தொடர்ந்தது. இந்து முன்னணி...

எச். ராஜா கிராமத்துக்குள் நுழைய விடாமல் துரத்தப்பட்டார்

எச். ராஜா கிராமத்துக்குள் நுழைய விடாமல் துரத்தப்பட்டார்

கடலூர் மாவட்டம் அரியநாச்சி எனும் கிராமத்தில் கோயிலை புதுப்பிப்பது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சார்ந்த இரு பிரிவினருக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் செயலாளர்களில் ஒருவரான பார்ப்பனர் எச். ராஜா ஒரு பிரிவினருக்கு ஆதரவாக அக்கிராமத்துக்குள் நுழைய முயன்றார். அப்போது அரியநாச்சி கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எச். ராஜாவை கிராமத்துக்குள்ளேயே நுழைய விடாது கருப்புக் கொடி காட்டி தடுத்தனர். ஆன்மீகத்தின் பெயரால் மக்களைப் பிளவு படுத்தும் எச். ராஜா ஒழிக என்று முழக்கமிட்டனர். கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. வேறு வழியின்றி எச். ராஜா அவமானப்பட்டு திரும்பிப் போனார். தி.மு.க., அ.தி.மு.க.வினர் இணைந்து கண்டன சுவரொட்டிகளை ராஜாவுக்கு எதிராக ஒட்டியது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 0509209 இதழ்

தோழர் சக்திவேல் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு நன்கொடை

தோழர் சக்திவேல் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு நன்கொடை

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ச. விஜய்-அம்மு, ஜாதி மறுப்பு சுயமரி யாதை இணை யேற்பு விழா 25.8.2019 அன்று மாலை 7 மணியளவில் சென்னை பெரும் பாக்கத்திலுள்ள சமூக நலக் கூடத் தில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மணவிழாவை நடத்தி வைத்தார். கழக ஏட்டுக்கு மணவிழா மகிழ்வாக ரூ.5000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 0509209 இதழ்

மயிலாடுதுறை மா.க. கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு; நினைவு நூல் வெளியீடு

மயிலாடுதுறை மா.க. கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு; நினைவு நூல் வெளியீடு

திராவிடர் விடுதலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகியோரின் மூத்த சகோதரர் மா.க. கிருட்டிண மூர்த்தி (85) ஆகஸ்டு 19ஆம் தேதி முடிவெய்தினார். கூட்டுறவுத் துறையில் இணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மா.க. கிருட்டிணமூர்த்தி, தீவிரமான பெரியாரிஸ்ட். தனது சகோதரர்களை பெரியார் இயக்கத்தை நோக்கிக் கொண்டு வந்தவர். அவரது விருப்பப்படி உடல் புதுச்சேரி ‘மகாத்மா காந்தி’ அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. படத்திறப்பு நிகழ்வு ஆகஸ்டு 29 அன்று மயிலாடுதுறை வாசுகி மகாலில் மாலை 6 மணியளவில் நடந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். திராவிடர் விடுதலைக்கழகத் தோழர்களும் திராவிடர் கழகத் தோழர்களும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் நண்பர்களும் உறவினர்களும் திரளாகப் பங்கேற்றனர். நிகழ்வில்  மா.க. கிருட்டிணமூர்த்தி மகன் கி. தளபதிராஜ் எழுதிய ‘விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?’ என்ற நூல் வெளியிடப்பட்டது....

‘மகாராஷ்டிரா’ ஆட்சி அறிவிப்பு: மண்ணின் மைந்தருக்கு வேலை தந்தால் ‘ஜி.எஸ்.டி.’ கிடையாது

‘மகாராஷ்டிரா’ ஆட்சி அறிவிப்பு: மண்ணின் மைந்தருக்கு வேலை தந்தால் ‘ஜி.எஸ்.டி.’ கிடையாது

ஆந்திராவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில  அரசு மண்ணின் மைந்தர்களுக்கே 80 சதவீத வேலை வாய்ப்புகளை வழங்கும் கொள்கையை உருவாக்கி இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு மண்ணின் மைந்தர் வேலை வாய்ப்புக் கொள்கையை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகும். 80 சதவீத வேலை வாய்ப்புகளை மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க மறுக்கும் தனியார் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரிச் சலுகைகள் முழுமையாக இரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிரா தொழில் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கடந்த ஆக. 26ஆம் தேதி அறிவித்தார்.  இவர் சிவசேனாக் கட்சியைச் சார்ந்தவர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள், தொழிற் சாலைகள், எண்ணிக்கை 3.8 இலட்சம். இதில் 2.4 மில்லியன் பேர் வேலை செய்கிறார்கள். பெரியார் முழக்கம் 0509209 இதழ்

கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்

கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்

வேட்டைக்காரன் புதூரில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண விளக்கப் பொதுக்கூட்டம் 26.08.2019 அன்று மாலை 6 மணிக்கு  பொள்ளாச்சி வேட் டைக்காரன் புதூரில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஒன்றியச் செயலாளர் அரிதாசு தலைமை வகித்தார்.  ஒன்றிய தலைவர் அப்பாதுரை முன்னிலை வகித்தார். நிகழ்வில் கழக பொருளாளர் துரைசாமி, செயற்குழு உறுப்பினர் மடத்துகுளம் மோகன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி உரையாற்றினர். முனைவர் சுந்தர வள்ளி,  திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். தோழர்கள் வினோதினி – மணி இணையர்களின் குழந்தைக்கு நிறைமதி என கழகத் தலைவர் பெயர் சூட்டினார். சபரிகிரி நன்றி கூறினார். இந்நிகழ்வில், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஆனமலை பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரத்தில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு பயணத் தின்  பிரச்சார பயண விளக்க  பொதுக் கூட்டம் 26.08.2019 அன்று மாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட...

அய்.நா. பொதுச் செயலாளருக்கு மனு சிறிலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் முன்நிறுத்துக!

அய்.நா. பொதுச் செயலாளருக்கு மனு சிறிலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் முன்நிறுத்துக!

“சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். ஆகஸ்ட் – 30 அனைத்துலக காணாமல் ஆக்கப் பட்டோர் நாளில் ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் ஐ.நா. வுக்கு கோரிக்கை ஆகஸ்ட் 30 காணாமல் போனோர் நாளை முன்னிட்டு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில்  ஈழத்தில் வலிந்து காணாமலடிக்கப்பட்ட ஈழத் தமிழருக்கு நீதிக்கோரி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஐநா. பொதுச் செயலருக்கும் ஐநா மனித உரிமை ஆணையருக்கும் விண்ணப்ப மடல் கொடுக்கப்பட்டது. இந்த விண்ணப்ப மடலை வழங்கிய குழுவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்ணன், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், தடயவியல் நிபுணரும் மருத்துவருமான  சேவியர், பேராசிரியர் பேச்சிமுத்து   ஆகியோர் பங்குபெற்றனர். யுனிசெப் அலுவலக அதிகாரியிடம் சிறிலங்கா அரசப் படையால் காணாமலடிக்கப்பட்ட...

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி அனைவருக்கும் கல்வி வழங்கும் உரிமையை அரசு கைவிட்டது ஏன்?

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி அனைவருக்கும் கல்வி வழங்கும் உரிமையை அரசு கைவிட்டது ஏன்?

ஜூலை 12, 2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் கோவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் புதிய கல்வித் திட்ட நகல் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நிகழ்த்திய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) ஒரு பள்ளி வளாகத்திற்குள் சென்றீர்க ளென்றால், நீங்கள்  ஒரு பள்ளியில் எவையெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ அவையனைத்தும் அனைத்துப் பள்ளியிலும் இருக்க வேண்டும். என் வீட்டிற்கு அருகில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது, நீங்கள் எவையெல்லாம் ஒரு பள்ளியில் இருக்க வேண்டுமென்று கூறினீர்களோ அவை யனைத்தும் என் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் இருந்தால், நான் அதை தவிர்த்து விட்டு ஏன் வேறு பள்ளியில் சேர்க்கப் போகிறேன். உலகம் முழுக்க இருக்கக் கூடிய நடைமுறை, ஒரே சீரான பள்ளி அமைப்பு என்பதாகும் ஆனால் இந்தியாவில் 70 ஆண்டுகாலம் அதைப் பற்றி பேசுவதற்குக்கூட தயாராக இல்லையென்பது எப்படி? சரி கோத்தாரி குழுவின் கல்விக் கொள்கை...

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அதிகார வர்க்கத்தை அரசு நிர்வாகத்தில் திணிக்கும் மோடி ஆட்சி

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அதிகார வர்க்கத்தை அரசு நிர்வாகத்தில் திணிக்கும் மோடி ஆட்சி

தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய 9 பேரை, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில், அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையான அதிகாரத்தில், இணைச் செயலாளர்களாக நியமித்து மோடி அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு பங்களா, வாகன வசதியுடன், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் மாதத்துக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வரைசம்பளமும் வழங்கப்பட உள்ளது. குடிமைப் பணித் தேர்வுகளில் (அய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்எப்எஸ், அய்ஆர்எஸ்) தேர்ச்சி பெற்றவர்களே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதி அடிப்படையில், மத்திய அரசின் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் கூடுதல் செயலாளர்கள் பதவிகளில் நியமிக் கப்படுவது வழக்கம். அனுபவத்தின் அடிப்படையில், லேடரல் எண்ட்ரி  முறையிலும் இந்த நியமனங்கள் நடக்கும் என்றாலும், தனியார் துறைகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். வருமான வரித் துறை, கஸ்டம்ஸ், ரயில்வே, தொலைத் தொடர்பு, அஞ்சலகம் மற்றும் வணிகம் உட்பட 37 அரசுத் துறைகளில் பணியாற்றிய அனுபவம்...

கடவுள் – மத மறுப்பாளர் நேரு முன்மொழிந்த ‘அறிவியல் மனித நேயம்’

கடவுள் – மத மறுப்பாளர் நேரு முன்மொழிந்த ‘அறிவியல் மனித நேயம்’

ஆக. 31, 2019 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டில் நேருவின் பகுத்தறிவு கொள்கை பற்றி அசோக் வோஹ்ரா எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். நேரு வாழ்நாள் முழுதும்தீவிர பகுத்தறிவாளராகவே இருந்தார். கடவுள் பற்றிய கருத்தே அறிவுடைமைக்கு எதிரானது என்று கூறிய அவர், இதுதான் கடவுள் என்பதற்கான வரையறையே இல்லை என்றார். தன்னுடைய ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’ நூலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ஒரு கடவுள் உருவமாகவோ அல்லது ஏதோ ஒரு புலப்படாத ஒரு அற்புத சக்தியாகவோ இருப்பதாக என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை. மனித சமூக வளர்ச்சி பற்றிய மானுடவியலில் அத்தகைய கடவுளுக்கோ, அற்புத சக்திக்கோ இடமில்லை. ஆனாலும் பலரும் இந்த சக்திகளை நம்புவது எனக்கு வியப்பூட்டுகிறது. தங்களுக்கான தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக் குறித்த எந்த கருத்தையும் என்னால் ஏற்கவே முடியாது” என்று எழுதியிருக்கிறார். “இல்லாத ஒரு கடவுள்தான் மனிதனை வழி நடத்தி உள்ளத்தை அமைதிப்படுத்துகிறார் என்பதை எப்படி ஏற்க...

இதுதான் மத ஊர்வலமா? இந்து முன்னணியே பதில் சொல்!

இதுதான் மத ஊர்வலமா? இந்து முன்னணியே பதில் சொல்!

‘மதம் அன்பைப் போதிக்கிறது; இந்து மதம் போல் சகிப்புத்தன்மையுள்ள வேறு மதம் இல்லை’ என்று பார்ப்பனர்களும் பார்ப்பனியர்களும் ‘வாய்கிழிய’ப் பேசுகிறார்கள். ஆனால் மதத்தின் பெயரால் நடக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் எப்படி நடக்கின்றன? ஒரே நாளில் ஏடுகளில் வெளி வந்த சில செய்திகளைத் தொகுத்து தருகிறோம். “அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுதும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு ஒரு இலட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10,000 போலீசார் இந்தப் பணி யில் உள்ளனர். அதிலும் சிலைக்கு ஒரு போலீசார் என்று 24 மணி நேரமும் ‘ஷிப்டு’ முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.”            – ‘தினத்தந்தி’, செப். 3 “ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலில் அனுமதியின்றி 5 அடி உயர விநாயகன் சிலை நிறுவப்பட்டிருந்தது. போலீசார் அந்த விநாயகர் சிலையை அகற்றினர். உடனே இந்து முன்னணி மாநில செயலாளர் பரமேசுவரன் தலைமையில் இந்து முன்னணியினர்...

பரப்புரைப் பயணம் மீண்டும் செப். 17இல் தொடங்குகிறது

பரப்புரைப் பயணம் மீண்டும் செப். 17இல் தொடங்குகிறது

ஆகஸ்ட் 25ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கிய ‘மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண’த்துக்கு தமிழகம் முழுதும் காவல் துறை வழங்கிய அனுமதியை திடீரென மறுத்தது. வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு, தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுறுவல் ஆகிய பிரச்சினைகளை காவல்துறை காரணமாகக் கூறியது. அதைத் தொடர்ந்து கழகத்தின் பரப்புரைப் பயணம் தள்ளி வைக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளில் மீண்டும் பரப்புரைப் பயணம் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடங்குகிறது. செப். 20இல் நாமக்கல் பள்ளிப் பாளையத்தில் நிறைவு விழா மாநாடு நடைபெறும். காவல்துறைக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. தோழர்களே, தயாராவீர்! பெரியார் முழக்கம் 0509209 இதழ்

கடும் பொருளாதார சரிவு  நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி

கடும் பொருளாதார சரிவு நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி

15 மாதங்களில் இல்லாத வகையில், சரிவை சந்தித்துள்ளது. விற்பனை, உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையால், நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, சரிவை சந்தித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், இரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின், ஆகஸ்ட் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கையை வெளியிட் டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆகஸ்ட் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி குறித்த, பி.எம்.ஐ., குறியீடு, 51.4 புள்ளிகளாக சரிந்துள்ளது. இது, 2018, மே மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட குறைந்த அளவாகும். 2018, மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 52.5 புள்ளிகளாக இருந்தது. கடந்த ஜூலை மாதம் முதலாகவே, பெரும்பாலான அளவீட்டுக்கான குறிகாட்டிகள் வீழ்ச்சியடைந்ததால், உற்பத்தி வளர்ச்சி, தன் வேகத்தை இழந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி, வேலைவாய்ப்பு, புதிய ஆர்டர்கள் ஆகிய முக்கியமான, பி.எம்.ஐ.,...

அரசியல் விநாயகனுக்கு மாற்றாக புத்தர் சிலை ஊர்வலம்

அரசியல் விநாயகனுக்கு மாற்றாக புத்தர் சிலை ஊர்வலம்

இந்து முன்னணி அமைப்பாளர் கே. பக்தவத்சலம், சென்னை இந்து முன்னணி தலைமை அலுவலகத்திலிருந்து அளித்த பேட்டியில், ‘இந்த ஆண்டு விநாயகன் சிலை ஊர்வலம், அரசியல் முழக்கத்தை முன் வைத்து நடத்தப்படுகிறது’ என்று கூறியிருக்கிறார். “பக்தி இலக்கியத்தை பரப்புவோம்; போலி தமிழ் தேசியத்தை வீழ்த்துவோம்” – இதுதான் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள விநாயகன் சிலைகளின் ஊர்வலங்களுக்கான முழக்கமாம். (The theme for this year is ‘Promote divine Tamil and Crack down on fake Tamil identity. – The Hindu Aug.29, 2019) இவர்கள் வீழ்த்தப்போவது தமிழ் தேசியத்தையா அல்லது போலி தமிழ் தேசியத்தையா என்பது இங்கே பிரச்சினையல்ல. இந்த ஊர்வலம் மதத்துக்கான ஊர்வலம் அல்ல; அரசியல் ஊர்வலம். அதுவும் பா.ஜ.க.வின் அரசியலுக்காக ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்காக நடத்தப்படும் ஊர்வலம். ஏதோ ‘விநாயக சதுர்த்தி’க்கான மத ஊர்வலம் போலவும், மத ஊர்வலங்கள் நடத்துவதற்கான உரிமைகளை சட்டப்படி மறுக்க முடியாது என்பது...

காவல்துறை திடீர் தடை:  பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு !

காவல்துறை திடீர் தடை: பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு !

காவல்துறை திடீர் தடை:  பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு ! மண்ணிண் மைந்தருக்கு வேலை கொடு ! தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! என்கிற முழக்கத்தோடு திராவிடர்_விடுதலை_கழகம் ஆக. 26-31 வரை தமிழ்நாட்டின் 5 முனைகளில் இருந்து தொடங்கிய பரப்புரைப் பயணம் முறையாக காவல்துறையின் அனுமதி பெற்று துவங்கப்பட்டது ஆனால் தற்போது ஆக. 25இல் தொடங்கிய கழகத்தின் பரப்புரைக் குழுக்களுக்கும்,ஆக. 26இல் தொடங்கிய பரப்புரைக் குழுக்களுக்கும் காவல்துறை திடீரென அனுமதி மறுத்துள்ளது. எனவே பரப்புரைப் பயணத்திட்டமும் பள்ளிப்பாளையம் நிறைவு விழா மாநாடும் தள்ளி வைக்கப்படுகிறது. புதிய பயணத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். – கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் முழக்கம் 29082019 இதழ்

திருப்பூர்- கோவையில் விநாயகர் சதுர்த்தி நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மனு

திருப்பூர்- கோவையில் விநாயகர் சதுர்த்தி நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மனு

விநாயகர் சதுர்த்தியின் போது கடை பிடிக்க வேண்டிய சட்ட நடை முறை கள் அடங்கிய விண்ணப்பம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் திராவிடர் விடுதலைக் கழகத் (திருப்பூர் மாவட்டம்) தோழர்களால் 19.08.2019 அன்று காலை 10 மணிக்கு அளிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியின் போது கடைபிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை தொடர் புடைய அதிகாரிகளிடம் வழங்கி நடைமுறைபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.  கழக பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில் இராசு, முத்து, அய்யப்பன் ஆகியோர் சென்றிருந்தனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – சிலை அமைப்பது தொடர்பாக – சென்னை உயர்நீதிமன்றத்தின் (றுஞ சூடி 25586/2004. னுவ.17.09.2004) வழிகாட்டுதல்-தமிழக அரசின் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)துறையின் அரசாணை எண் 598, நாள் 09.08.2018 நிபந்தனைகளை விதி முறைகளை  செயல் படுத்தக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 21.08.2019  அன்று கோவை  மாநகர காவல் ஆணையாளர், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம்...

‘பெரியாரின் வேர்களைத் தேடி’ தஞ்சையில் மூன்று நாள் கருத்தரங்கு

‘பெரியாரின் வேர்களைத் தேடி’ தஞ்சையில் மூன்று நாள் கருத்தரங்கு

தஞ்சையிலுள்ள அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறையும் ‘ரிவோல்ட்’ அமைப்பும் இணைந்து மூன்று நாள் பன்னாட்டு மாநாட்டை ஆகஸ்டு 23, 24, 25 தேதிகளில் நடத்தியது. ‘ஊடகங்களில் பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் வேர்களைத் தேடி’ எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், சூழலியாளர்கள் பங்கேற்றுப் பேசினர். முதல் நாள் : ஆகஸ்டு 23 முதல் நாள் காலை அமர்வுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பசு. கவுதமன் வரவேற்புரையாற்ற பேராசிரியர் ந. முத்துமோகன் முதன்மை உரையாற்றினார். பேராசிரியர் மு. நாகநாதன், புலவர் செந்தலை கவுதமன், இரா. எட்வின், சுப. குணராசன், முனைவர் தமிழ் காமராசன், சூழலியல் ஆய்வாளர் நக்கீரன் உரையாற்றினர். மனித நேயர் எஸ்.எஸ். ராஜ்குமார், ஆய்வு விமர்சனத்துன் நெறிப்படுத்தினார். இரண்டாம் நாள் அமர்வில் மருத்துவர் ஷாலினி, ‘பெரியாரின் பெண்ணியம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் இந்திரா, அமந்தா, ஓவியா,...

அசல் நகலில் இடம் பெற்ற சமஸ்கிருத திணிப்பு கொள்கை சுருக்கப்பட்ட நகலில் மறைக்கப்பட்டது ஏன்?

அசல் நகலில் இடம் பெற்ற சமஸ்கிருத திணிப்பு கொள்கை சுருக்கப்பட்ட நகலில் மறைக்கப்பட்டது ஏன்?

ஜூலை 12, 2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் கோவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் புதிய கல்வித் திட்ட நகல் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நிகழ்த்திய உரை: தேசிய கல்வி வரைவு என்பதை கிட்டத்தட்ட 5 ஆண்டு காலமாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். 2015லிருந்தே மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பள்ளிக் கல்வியிலேயே ஒரு 20 தலைப்புகள், உயர் கல்விக்கு ஒரு 13 தலைப்புகள் என்று தலைப்புகள் கொடுத்து, இந்த தலைப்புகளின் மீது  கருத்துக்களைச் சொல்லுங்கள் என்று மனித வளத் துறை வலைதளத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களில் இது சம்மந்தமாக கூட்டங்கள் நடத்தப்போகிறோம், அனைத்து உயர்கல்வி இடங்களிலும் கூட்டம் நடத்தப்போகிறோம், கிராமங்கள் அளவிற்கு எத்தனை கூட்டங்கள் நடத்தப் போகிறார்கள் என்று ஒரு கணக்கை போட்டு வைத்திருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்ட பாதி அளவான இலக்கை கூட அதாவது 50 சதவீதத்தை கூட அவர்களால் அடைய...

1944இல் சேலம் திராவிடர் கழகப் பெயர் மாற்ற மாநாடு சந்தித்த எதிர்ப்புகள்

1944இல் சேலம் திராவிடர் கழகப் பெயர் மாற்ற மாநாடு சந்தித்த எதிர்ப்புகள்

1944ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி சேலத்தில் கூடிய தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாட்டில் தான் அமைப்பின் பெயர் திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது. பெரியார் எழுதி அண்hணவால் படிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அத்தீர்மானம், ‘அண்ணாத் துரை தீர்மானம்’ என்று வரலாற்றில் அமைக்கப்படுகிறது. பெயர்மாற்றம் மட்டுமல்லாது இயக்கம் பண்பு மாற்றமும் பெற்றது. அதுவரை தேர்தலில் போட்டியிட்டு வந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அதற்குப் பிறகு தேர்தலில் போட்டியிடாத சமுதாயப் புரட்சி இயக்கமாக மாறியது. 75 ஆண்டுகாலம் நிறைவு பெற்றுள்ளது. பெரியாரின் திராவிடர் கழகம் 1944ஆம் ஆண்டில் பெயர் மாற்றம் கொண்டு வரப்பட்ட மாநாட்டில் என்ன நடந்தது என்ற வரலாற்றுத்தகவலை ‘விடுதலை’ நாளேடு 2.9.1944இல் பதிவு செய்துள்ளது.   16ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு சேலத்தில் நடத்த 1940ஆம் வருஷத்திலேயே திருவாருரில் அழைக்கப்பட்டது. அதன்பிறகு 43ஆம் வருஷம் சேலத்தில் நிர்வாக சபை கூட்டம் போட்ட காலத்தில் சேலம்...

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

‘தமிழ்நாட்டை வஞ்சிக்காதே; சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரில் குலக் கல்வியைத் திணிக்காதே; தமிழ்நாட்டை வடநாடாக்காதே!’ என்ற முழக்கங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 6 முனை பரப்புரைப் பயணங்கள் தொடங்கின. சென்னையிலிருந்து சென்னை பரப்புரைக் குழு ஆகஸ்டு 25 காலை 10 மணிக்கு இராயப்பேட்டை பெரியார் சிலையிலிருந்து பயணத்தைத் தொடங்கியது. மே 17, இயக்கத் தோழர்களின் பறை இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. பயணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர்விடுதலை இராசேந்திரன் பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். சென்னை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் ரூதர் கார்த்திக் பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றினர். தொடர்ந்து பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரத்தில் பரப்புரை நடந்தது. மக்கள் திரளாகக் கூடி நின்று கருத்துகளைக் கேட்டனர். துண்டறிக்கைகளை விருப்பத் துடன்...

சென்னையில் சுவரெழுத்து

சென்னையில் சுவரெழுத்து

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணம் வரும் ஆகஸ்டு 26 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் 5 நாட்கள் நடைபெறுகிறது. அதற்கான சுவர் விளம்பரங்கள் சென்னையில்,  “மண்ணின் மைந்தர்களுக்கு வேலை கொடு” என்று  இராயப்பேட்டை, மைலாப்பூர், எழும்பூர், அடையாறு, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் எழுதப்பட்டது. பெரியார் முழக்கம் 22082019 இதழ்

தேசிய மருத்துவ ஆணையம் சமூக நீதிக்கு எதிரானது

தேசிய மருத்துவ ஆணையம் சமூக நீதிக்கு எதிரானது

தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் நோக்கத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை யில் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம் இத்தனை ஆண்டுகாலமாகச் செயல்பட்டுவந்த இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு, `தேசிய மருத்துவ ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு செயல்படவிருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். மருத்துவர்கள் பற்றாக்குறை, தகுதியில்லாத மருத்துவர்கள், மருத்துவக் கல்வியில் குளறுபடிகள், ஊழல் நிறைந்த இந்திய மருத்துவ கவுன்சில்… இவையெல்லாம் தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு கூறும் காரணங்கள். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை புதிய ஆணையம் சரிசெய்யுமா என்றால், ‘இல்லை’ என்றே கூற வேண்டும். எப்படி… வரிசையாகப் பார்க்கலாம். ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், இந்தியாவில் 1,600 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைதான் இருக்கிறது. தமிழகத்தில் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இந்தப்...

உபநிஷத்துகள் கூறுகின்றன : சிலை வழிபாடு மூடர்களுக்கு மட்டுமே உரியது!

உபநிஷத்துகள் கூறுகின்றன : சிலை வழிபாடு மூடர்களுக்கு மட்டுமே உரியது!

அத்திவரதர் சிலை தரிசனத்துக்கு மக்கள் திரண்டார்கள். ஆனால்  வேதங்களுக்கு விளக்கவுரை வழங்கிய உபநிஷத்துகள் சிலை வணக்கம் மூடர்களுக்கே உரியது என்று கூறுகிறது. “அக்நி ரதே லோத் துவிஜாதீ நரம் முனி நாம் ஹிருதி தைவதம்: பர்மாஸ்வ பாபுத்தாரம் சர்வத்ர சமதர்கின” – உத்தரகீதை – சுலோகம். இதன் பொருள் : துவிஜர்களுக்குத் தெய்வம் நெருப்பில்; முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில்; புத்தி இல்லாத மூடர்களுக்குத்  தெய்வம் விக்கிரகத்தில்; சமதிர்ஷ்ட்டி உடையவர்களுக்கு தெய்வம் எங்கும். “தீர்த்தே தாதையோ எக்ஞே – கார்ஷ்ட்டே பாஷாண கேபதா சிவம்பசிய தீ மூடாத்மா சிலோதெஹெபர் திஷ்டி தர.” – ஸகந்தம் – ஞானயோக காண்டம் இதன் பொருள் : தீர்த்ததிலும், தானத்திலும், தபசிலும், யக்ஞத்திலும், கட்டையிலும், கல்வியிலும் சிவன் இருப்பதாக மூடர்கள் நினைக்கிறார்கள். சிவன் தனக்குள்ளாகவே இருக்கிறது. “சிவம் ஆத்ம நிபஸ்யந்தி ப்ரதி மாஸு நயோகிநோ, அக்ஞானம் பாவ நார்த்தாய மரதிம பரிகல்பிதா.” இதன் பொருள் : யோகிகள்...

இலஞ்சம்-வணிகம்-அரசியல் செல்வாக்கு-ஊழல் ஆன்மீகத்தின் முகத்திரையைக் கிழித்த அத்திவரதர் தரிசனம்

இலஞ்சம்-வணிகம்-அரசியல் செல்வாக்கு-ஊழல் ஆன்மீகத்தின் முகத்திரையைக் கிழித்த அத்திவரதர் தரிசனம்

அத்திவரதருக்கு திரண்ட பக்தர்கள் கூட்டம், தமிழ்நாட்டில் ஆன்மீக வளர்ச்சியைக் காட்டுவதாக பார்ப்பனர்கள், பா.ஜ.க.வினர் கூறுகிறார்கள். கூட்டம் கூடியது உண்மைதான். ஆனால், ஆன்மீகம் தன்னுடன் ஊழல்- வணிகம்- மோசடிகளையும் இணைத்துக் கொண்டு விட்டது என்பதும், கடவுள் மீது உண்மை யான பக்தியோ அதன் சக்தி தன்னைத் தண்டித்து விடும் என்ற அச்சமோ இல்லை என்பதையும் நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறது. அத்திவரதர் தரிசனம் வழியாக நடந்த மோசடி – ஊழல் – அரசியல் செல்வாக்கு – வணிகம் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது ‘ஜூவி’ கட்டுரை. கட்டுரையை படித்தாலே ஆன்மீகத்தின் முகத்திரை கிழிந்து விடும். “பெருமாளே… உனக்கு முன்னாடியே இவ்வளவு அநியாயமா?” அத்திவரதரை தரிசித்து விட்டு வந்த பெரும்பாலான பக்தர்களின் மனக் குமுறல், இதுவாகத்தான் இருந்தது. குறைந்தது ஐந்து மணி நேரமாவது நின்று, அடிபட்டு, மிதிபட்டு அத்திவரதரை நெருங்கும் பக்தர்கள், பெருமாளை தரிசிப்பதற்குள் நொந்து நூலாகி விட்டனர். அப்பாவி பக்தர்களின் பக்தியைப் பயன்படுத்தி, பல்வேறு தரப்புகளிலும்...