Category: பெரியார் முழக்கம் 2015

“பார்ப்பனர் தீர்த்துக் கட்டி விடுவார்கள்” காந்தியாரை எச்சரித்தார் பெரியார் 0

“பார்ப்பனர் தீர்த்துக் கட்டி விடுவார்கள்” காந்தியாரை எச்சரித்தார் பெரியார்

1927இல் பெங்களூரில், பெரியார், காந்தி அழைப்பை ஏற்று அவரை சந்தித்துப் பேசினார். அப்போது பெரியார் காங்கிரசை விட்டு விலகி, 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இராஜாஜி உடனிருந்hர். “இந்து மதத்தில் இருந்துகொண்டே நாமெல்லாம் சீர்திருத்தம் செய்யலாம்” என்றார் காந்தி. “இப்படி செய்தால் பார்ப்பான் உங்களை விட்டு வைக்க மாட்டான்” என்றார் பெரியார். “இராஜாஜி கூடவா அப்படி?” என்று காந்தி கேட்கிறார். உடனே பெரியார், “இராஜாஜி திறமையானவர் என்பதை ஒத்துக் கொள்கிறேன். புத்திக் கூர்மையானவர் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவர் இனத்திற்கு அதை பயன்படுத்துகிறார். பொது மக்களுக்கு பயன்படுத்துவதில்லை” என்று இராஜாஜியை வைத்துக் கொண்டே சொன்னார். “அப்படியா, பார்ப்பனரில் யாருமே யோக்கியன் இல்லையா? கோபாலகிருஷ்ண கோகலே யோக்கியமாக யில்லையா?” என்று கேட்கிறார். “மகாத்மாவின் கண்ணிற்கே ஒருவர்தான் தெரிகிறார். என் கண்ணிற்கு என்ன தெரியும்?” என்று சொல்லி பெரியார் கிளம்புகிறார். அப்போது பெரியார் சொல்கிறார், “நீங்கள் இந்து மதத்திற்கு ஜால்ரா போடும்வரை பார்ப்பான் உங்களை...

பம்பாயில் வெடித்துக் கிளம்பிய பார்ப்பன எதிர்ப்பு: அன்றைய உள்துறை அமைச்சர் பதிவு செய்த வரலாறு 0

பம்பாயில் வெடித்துக் கிளம்பிய பார்ப்பன எதிர்ப்பு: அன்றைய உள்துறை அமைச்சர் பதிவு செய்த வரலாறு

காந்தியார், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் திட்டமிட்ட சதியால் படுகொலை செய்யப்பட்ட அந்த நேரத்தில் – மராட்டிய மக்கள் எப்படிப்பட்ட உணர்வு களைக் கொண்டிருந்தார்கள் என்பதை புரிந்து கொண்டால் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் பார்ப்பனத் தன்மையை தெளிவாகவே அடையாளம் கண்டுகொள்ள முடியும்! மராட்டிய மண்ணில் – காந்தியார் கொலை செய்யப் பட்டார் என்ற செய்தி வந்தவுடன் பார்ப்பனர்களுக்கு எதிராக பார்ப்பனரல்லாத மக்கள் வீறுகொண்டு எழுந்தார்கள். கொலை செய்த கோட்சேவுக்கும், தங்களுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் சாதிக்க முயன்றாலும், மராட்டிய மக்களுக்கு அந்த மண்ணிலே உருவான இயக்கத்தின் பின்னணிகள் புரியாதா? எனவே ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எதிராக மட்டுமல்ல; பார்ப்பனர்களுக்கு எதிராகவே மராட்டிய பார்ப்பனரல்லாத சமுதாயம் கொதித்து எழுந்தது! தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் இந்த செய்திகளை எல்லாம் – அப்போது திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து விட்டன! மராட்டிய மாநிலத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பு எழுந்த அந்தக் காலக்கட்டத்திலே, அந்த மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் துவாரகா...

புதுச்சேரியில் பிரிகேடியர் பால்ராஜ்- “சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா 0

புதுச்சேரியில் பிரிகேடியர் பால்ராஜ்- “சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா

தமிழீழத்தை மீட்டெடுக்க தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் போராடி, சிங்கள இராணுவத்தாலும் இந்திய இராணுவத் தாலும் வெல்லமுடியாத தளபதியாகத் திகழ்ந்த பிரிகேடியர். பால்ராஜ் அவர்களைப்பற்றிய ”பிரிகேடியர் பால்ராஜ்- சமர்க்கள நாயகன்” (இராவணன் பதிப்பகம் பதிப்பித்த) நூல் வெளியீட்டு விழாப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் பெரியார் திடலில் 13.12.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத் திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடுசெய்திருந்தது. விழாவில் புதுச்சேரி மாநிலக் கழகத் தலைவர் தோழர். லோகு.அய்யப்பன் தலைமை உரையாற்றினார். அவ் வுரையில், ”ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியது சிங்களர்கள் அல்ல! இந்திய ஆட்சியாளர்கள்!!” என்பதைக் குறிப்பிட்டார். தோழர் இர.தந்தைப் பிரியன் வரவேற்புரையாற்றினார்.நூலினைத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் மணி வெளியிட, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர். தி.வேல்முருகன் பெற்றுக்கொண்டார். நூலின் முதல்படியினைத் தோழமை இயக்கங்களின் தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். கொளத்தூர் மணி ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால நிலையினை...

காந்தியார் மறைவு: பெரியார் வானொலியில் பேச்சு 0

காந்தியார் மறைவு: பெரியார் வானொலியில் பேச்சு

காந்தியார் மறைவு செய்தி வந்தவுடன், தமிழ்நாட்டு வானொலி நிலையம் தந்தை பெரியார் அவர்களை அழைத்துப் பேச செய்தது. கலவரங்களில் ஈடுபட வேண்டாம் என்று தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார். “பெரியார் காந்தியவர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிட வைத்தது. இந்திய மக்களனைவரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்குமென உறுதியாக நம்புகிறேன். கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகவே காந்தியார் இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாயிருந்து வந்தார். மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது, அவரது இலட்சியக் கோட்பாடுகள் உலக மரியாதையினை பெற்றுவிட்டன. காந்தியார் மீது நடத்தியிருக்கும் மோசமான தாக்குதல் கண்டனத்துக் குரியதாகும். பல திறப்பட்ட எல்லா வகுப்பு மக்களுக்கும் நியாயமாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்து கொண்ட காந்தியார், இக் கொடுந் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்களென்றால் இது மிகவும் வெறுக்கத் தக்கதாகும். இக்கொலையாளியை ஆட்டிப் படைக்கும் சதிகார கூட்டமொன்று திரைமறைவில் வேலை செய்து வரவேண்டும். வடஇந்தியாவில் நடைபெற்றுவரும் கலவரங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாயிருப்பது மதவெறியேயாகும்....

கோட்சே ஆர்.எஸ்.எஸ். நெருக்கமான தொடர்புகள் – ஆதாரத்துடன்… 0

கோட்சே ஆர்.எஸ்.எஸ். நெருக்கமான தொடர்புகள் – ஆதாரத்துடன்…

காந்தியார் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் தொடர்பு உண்டு என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உண்டு! மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையை, ‘Story of my life’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அதில் 248 ஆவது பக்கத்தில், “காந்தியாரை சுட்டுக் கொன்றது நாதுராம் கோட்சே என்பவன் புனேயில், ஆர்.எஸ்.எஸ். ஊழியனாக அவன் பணியாற்றியவன்” என்று எழுதியிருக்கிறார். ஏ.ஜே. குர்ரான் எழுதிய ‘Millitant Hinduism in Indian politics’ என்ற நூலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவருடன், சுற்றுப் பயணங்களில் உடன் சென்று கொண்டிருந்தவன் கோட்சே என்பதை எடுத்துக் காட்டி யிருக்கிறார். நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே, காந்தியாரைக் கொலை செய்யப் புறப்பட்டபோது நடந்த நிகழ்ச்சிகளை தனது வாக்குமூலத்தில் விவரிக்கிறார். காந்தியாரை சுட்டுக்கொல்ல சென்றபோது, கோட்சே பாடிய பிரார்த்தனைப் பாடலை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அது ஆர்.எஸ்.எஸ். ‘ஷாகா’க்களில் பாடப்படும் சமஸ்கிருதப் பிரார்த்தனைப் பாடல். கோட்சே ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்துவிட்டு, பிறகு அதிலிருந்து விலகிப் போய்விட்டார் என்ற...

கோட்சேயின் சமூகப் பின்னணி 0

கோட்சேயின் சமூகப் பின்னணி

கோட்சேயின் குடும்பத்தில் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்ட நிலையில், அது பிறக்காத சூழலில் கோட்சேயை பெண் குழந்தையாக பாவித்து மூக்குத்தி மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஆடைகளை அணிவித்து வளர்க்கப்பட்டார். இதனால் கோட்சேயின் பாலின அடையாளம் குழப்பமாகி அது அவருக்கு சிக்கலான இளம் பருவமாக இருந்தது. அரசியலிலும் சமூகத்திலும் ஆதிக்கத்திலேயே இருந்து வரும் சித்பவன் சாதிக் குடும்பம், திடீரென வறுமையில் வீழ்ந்தது. அதிகாரமில்லாததால் ஏற்பட்ட விரக்தியும், பாலின அடையாளச் சிக்கலும் சேர்ந்து கொண்டு அவனது ஆண்மைத் தன்மையை நிரூபிக்கும் பொருட்டு அவனை ஒரு தீவிரவாதியாக மாற்றியிருக்கலாம் என்று அரசியல் உளவியலாளர் ஆசிஸ் நந்தி, ‘உளவியலின் விளிம்பு’ (எட்ஜ் ஆப் சைக்காலஜி) என்ற நூலில் குறிப்பிடுகிறார். “பெண்கள் தனக்கு முன்னால் நிற்பதையே வெறுப்பவர். கடுமையான தலைவலியால் வாழ்நாள் முழுவதும் அவதிப்பட்டவர். ஒருமுறை இந்தத் தலைவலியால் அவதிப்பட்டபோது மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். கண்விழித்துப் பார்த்த போது தனக்கு ‘பெண் நர்சுகள்’ பணிவிடை செய்தது தெரிந்தது! உடனே ஆத்திரமடைந்து...

காந்தியார் கொல்லப்பட்ட அந்த நேரத்தில்… 0

காந்தியார் கொல்லப்பட்ட அந்த நேரத்தில்…

1948 ஜனவரி 30, பார்ப்பன கொலைவெறிக்கு காந்தியார் பலிகடா ஆன நாள் அதுதான்! புதுடில்லியில் உள்ள பிர்லா மாளிகையில் – தனது அறையிலிருந்து காந்தி புறப்பட்டார்; அதுவரை சர்தார் வல்லபாய் பட்டேலுடன் பேசிக் கொண்டிருந்தவர் – பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது என்று பட்டேலிடம் விடைபெற்றுக் கிளம்பி, பிரார்த்தனை மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். காந்தியாரின் பேத்தி ஆவா காந்தி, மருமகள் மனு காந்தி ஆகியோர் தோள் கொடுக்க – தோட்டத்தைக் கடந்து பிரார்த்தனை மேடைக்கு வந்தார்; மண்டபத்தை அடைய இன்னும் 4 அடிகளே எடுத்து வைக்க வேண்டும். 500 பேருக்கு மேல் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது; அப்போது கூட்டத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 35 வயதுடைய இளைஞன் ஒருவன் வந்தான். தனது உடலை வளைத்து குனிந்து ‘பிராணம்’ (சல்யூட்) செய்தான். காந்தியார் திரும்பி மரியாதை செலுத்தினார். ‘இன்று பிரார்த்தனைக்கு நேரம் ஆகி விட்டது அல்லவா?’ என்று கேட்டான். காந்தியார் சிரித்துக் கொண்டே, ‘ஆம்; நேரமாகி...

இராமாயண எரிப்பு ஏன்? 0

இராமாயண எரிப்பு ஏன்?

இராமாயணத்தை ஆரியர் – திராவிடர் போராட்டம் என்றும்; ‘இராமாயணக் கதை திராவிடரை இழிவுபடுத்துவதற்காகவே ஆரியர்களால் கற்பனை செய்யப்பட்ட கட்டுக்கதை’ என்றும்; ‘இராமாயணக் கதை ஆரியருக்குத் திராவிடர்கள் மீது இருந்த வெறுப்பைக் காட்டுவதற்கென்றே ஆரியரால் (பார்ப்பனரால்) புனையப்பட்ட கதை’ என்றும்; ‘இராமன் ஆரியத் தலைவன் – இராவணன் திராவிட அரசன்’ என்றும்; மற்றும் ‘இராமாயணம் புத்தனுக்குப் பின் கற்பனை செய்து பார்ப்பனரால் எழுதப்பட்டது’ என்றும்; ‘இராமாயணம் நடந்த கதையல்ல, சரித்திரத்தில் பட்டது அல்ல, நீதியும் அல்ல’ என்றும்; ‘இராமாயணம் பார்ப்பனர்கட்கு அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைத் தொகுப்பு’ என்றும் – மற்றும் பலவாறாகச் சரித்திர ஆசிரியர்கள் முதல் ஆய்வாளர்கள் உள்படப் பார்ப்பனராலும், வெளிநாட்டு அறிஞர்களாலும், சுயமரியாதை உணர்ச்சியுள்ள தமிழறிஞர்களாலும் ஆதாரங்களுடன் சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றிற்கு ஆதாரங்களும் நம்மிடம் இருக்கின்றன. அவைகட்கு அன்று முதல் இன்று வரை எந்த அறிவாளியும் – தமிழரில் எந்தப் புலவரும் ஆட்சேபணையோ, மறுப்போ கூறியது கிடையாது. மற்றும், இந்த...

தீண்டாமையை எதிர்த்த காந்தி மீது மலம் வீசிய பார்ப்பனர்கள் 0

தீண்டாமையை எதிர்த்த காந்தி மீது மலம் வீசிய பார்ப்பனர்கள்

ஆய்வாளர் இராமச்சந்திர குகா வெளியிடும் தகவல் தீண்டாமையை எதிர்த்து காந்தியார் பேசியதற்காக சங்பரிவாரங்களின் முன்னணி அமைப்பாகிய ‘இந்து மகாசபை’ காந்திக்கு கருப்புக் கொடி காட்டி, கலவரம் செய்ததோடு காந்தியாரை 1934ஆம் ஆண்டிலேயே கொல்லவும் முயற்சி செய்தது. இந்த வரலாற்று உண்மைகளை எழுதியிருப்பவர் இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளராக கருதப்படும் இராமச்சந்திர குகா இது குறித்து ‘இந்து°தான் டைம்°’ நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து: “காந்தியின் தீண்டாமை எதிர்ப்புப் பிரச்சாரம் கடும் அச்சுறுத்தலை சந்திக்க வேண்டியிருந்தது. காரணம், தீண்டாமை எதிர்ப்பு – இந்து பழமைவாதத்தின் ஆணிவேரையே அசைப்பதாகும். அப்போது சங்கராச்சாரிகள், காந்தியை கடுமையாகக் கண்டித்தனர். “சம°கிருதம் பற்றி துளிகூட தெரிந்திராத ஒரு பனியாவுக்கு, இந்து புனித நூல்கள் பற்றி என்ன தெரியும்? இந்து புனித சா°திரங்கள் தீண்டாமையை அங்கீகரித்திருக்கிறது. அதையெல்லாம் மறுத்துப் பேச காந்திக்கு யோக்கியதை கிடையாது” என்று சங்கராச்சாரியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் காந்தியை இந்து மதத்திலிருந்து விலக்கி...

காந்தி மீது 9 முறை நடந்த கொலை முயற்சிகள் 0

காந்தி மீது 9 முறை நடந்த கொலை முயற்சிகள்

சுனிபாய் வைத்யா என்ற குஜராத் மாநிலக்காரர் காந்தி கொலை பற்றி சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நூலை எழுதினார். அப்போது அவருக்கு வயது 85. சர்வோதய இயக்கத்திலும், வினோபாவின் பூமி தான இயக்கத்திலும் பங்கு பெற்றவர். இவர் குஜராத்தில் ‘பூமி புத்ரா’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். இந்திராவின் அவசர நிலைக் காலத்தில் 7 மாதம் சிறையில் இருந்தவர். காந்தியைக் கொன்ற கோட்சேயை – மாவீரனாக சித்தரித்து, மராட்டியத்தில் ஆர்.எ°.எ°.காரர்கள் நாடகம் நடத்தியபோது இந்த முதியவர் கொதித்தெழுந்து, காந்தி கொலை பற்றிய ஒரு நூலை வினா-விடை வடிவத்தில் எழுதினார். குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட அந்த நூல் வேறு பல மாநில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மதுரையில் ‘சர்வோதய இலக்கியப் பண்ணை’ என்ற அமைப்பின் சார்பில் – இதன் தமிழ் பதிப்பும் வெளி வந்திருக்கிறது. அதில் காந்தியைக் கொலை செய்வதற்கு – சுமார் 9 முறை முயற்சிகள் நடந்தன என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்....

காயத்ரி-ராஜேஷ் ஜாதி மறுப்பு மணவிழா 0

காயத்ரி-ராஜேஷ் ஜாதி மறுப்பு மணவிழா

காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயலாளர் தினேஷ்குமார் சகோதரரும், மு. ரமணி -கு.குருசாமி மகனுமான மு.இராஜேஷ், மறைமலை நகர் கே.நாகலட்சுமி-சு.கேசவன் ஆகியோரின் மகள் கே. காயத்ரி ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த விழா 4.1.2015 ஞாயிறு மாலை 5 மணியளவில் கூடுவாஞ்சேரி சாரதாம்பாள் திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, வே. மதிமாறன், வ. வேம்பையன், மு.பிச்சைமுத்து, மா. சமத்துமணி, சு. செங்குட்டுவன் (மாவட்ட தலைவர்) வாழ்த்துரை வழங்கினர். பெண் வீட்டார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். தி.வி.க. – தி.க. தோழர்கள் ஏராளமாக வந்திருந்தனர். கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 15012015 இதழ்

7000 ஆண்டுகளுக்கு முன்பு விமானம் விட்டார்களாம்! 0

7000 ஆண்டுகளுக்கு முன்பு விமானம் விட்டார்களாம்!

பிரதமர் மோடி தொடங்கி வைத்த, மும்பையில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரசில் (ஜன.3-7) படிக்கப்பட்ட சில கட்டுரைகள் – சர்வதேச விஞ்ஞானிகளிடையே இந்தியாவை கேலிக்கும் அவமானத் துக் கும் உள்ளாக்கியிருக்கிறது. ‘சமஸ்கிருதத்தில் அறிவியல்’ என்ற தலைப்பில் ஒரு தனி அமர்வு அமைக்கப்பட்டதாம் அதில் ‘ஆய்வு’ கட்டுரை ஒன்றை படித்திருக்கிறார், விமான கேப்டனாக இருந்த போடாஸ் என்பவர், 7000 ஆண்டு களுக்கு முன்பே, முன்னோர்கள் விமானம் ஓட்டியதாகவும், அந்த விமானம் பூமியில் மட்டுமல்ல, வானமண்டலத்திலேயே கிரகங்கள் விட்டு கிரகங்களுக்கு பறந்ததாகவும் – ஏதோ, பள்ளிக்கூட மாணவன் தேர்வு மதிப்பெண்ணுக்கு எழுதும் கற்பனைக் கட்டுரை போல தரம் தாழ்ந்த ஒரு ‘ஆய்வை’ முன் வைத்திருக்கிறார். கொதித்துப் போன, அமெரிக்காவில் ‘நாசா’வில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானி காந்தி ராமனும், 200க்கு மேற்பட்ட அறிவியல் விஞ்ஞானி களும் இந்த உரையை வன்மையாகக் கண்டித்ததோடு, இதுபோன்ற கட்டுரைகள், இந்திய அறிவியலின் பெருமைகளை மிகவும் கீழ்த்தரமாக்கி விடும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்....

தலையங்கம் – படைப்பாளிகளுக்கு எதிரான மிரட்டல்! 0

தலையங்கம் – படைப்பாளிகளுக்கு எதிரான மிரட்டல்!

சமூகம் சார்ந்த இலக்கியங்களைப் படைத்து வரும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலுக்கு மதவாத சக்திகள், ஜாதியவாதிகளைத் தூண்டிவிட்டு நடத்தி வரும் போராட்டம் வன்மையான கண்டனத்துக்கு உரியது. இது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவாகும். இந்த நிலையில் படைப்பிலக்கியவாதிகள் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நம்பிக்கையைத் தருகிறது. திருச்செங்கோடு தேர்த் திருவிழா நாளில் திருமணமான ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் உறவு கொள்ளும் ஒரு பழக்கம், சில நூறு ஆண்டுகளுக்கு முன் நிலவியதை கதைக்களம் சுட்டுகிறது என்பதாலேயே திருச்செங்கோட்டையே இழிவுபடுத்துவதாக மதவாத சக்திகள், உள்ளூர் மக்களைத் தூண்டிவிட்டு கதவடைப்பு நடத்தும் அளவுக்கு எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளனர். ஒரு படைப்பாளி, சமூக தொன்மங்களை தனது கற்பனை கலந்து படைப்பாக்கும் உரிமைகளை அச்சுறுத்துவது மிக மோசமான வன்முறை என்றே கூற வேண்டும். தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் சங்பரிவாரங்கள், இத்தகைய பிரச்சினைகளை ஆங்காங்கே உருவாக்கி வருகின்றன. அந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது தெரிகிறது....

பறிக்கப்பட்ட உரிமைகள்: பட்டியலிடுகிறார் விக்னேசுவரன் 0

பறிக்கப்பட்ட உரிமைகள்: பட்டியலிடுகிறார் விக்னேசுவரன்

இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை சிங்களம் வழங்குமா என்பது அய்யத்துக்குரியதுதான். தமிழர்களின் வடக்கு மாகாணத்தில் இராஜபக்சே காலத்தில் ஒரு தேர்தல் நடத்தப்பட்டு, தமிழர்கள் பேராதரவோடு தமிழ் தேசியக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. இலங்கையின் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.ஆர். விக்னேசுவரன் மாகாண முதல்வராக உள்ளார். கடந்த 2014, நவம்பர் 9ஆம் தேதி சென்னையில் ‘பி.யு.சி.எல்.’ (மக்கள் சிவில் உரிமைக் கழகம்) ஏற்பாடு செய்திருந்த ‘கண்ணபிரான் நினைவு அறக்கட்டளை’ யின் சார்பில் ‘பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் ஆழமான கருத்துரையை வழங்கினார். அப்போது இலங்கை அரசு வடக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்களின் ஆட்சி உரிமைகளை பறித்து வைத்துள்ளதை பட்டியலிட்டார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் புதிய ஆட்சி, பறிக்கப்பட்டுள்ள உரிமைகளை மீண்டும் வழங்குமா? என்ற கேள்வியோடு அவர் வெளியிட்ட உரிமை பறிப்புகளை பட்டியலிடு கிறோம். (ஆர்) 1. தலைமைச் செயலாளர்...

சரித்திரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டார், இராஜபக்சே! ஆட்சி மாற்றம்: தமிழர்களுக்கு தீர்வைத் தருமா? 0

சரித்திரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டார், இராஜபக்சே! ஆட்சி மாற்றம்: தமிழர்களுக்கு தீர்வைத் தருமா?

இலங்கையில் சுதந்திரா கட்சியின் சார்பில் 10 ஆண்டுகாலம் அதிகாரத்திலிருந்து தமிழர்களை இனப்படுகொலை செய்து அய்.நா.வின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள இனக் கொலைக் குற்றவாளி இராஜபக்சே தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்று, இனப் படுகொலைக்கு துணை நின்ற மைத்ரிபால சிறிசேனா, இராஜபக்சேயிடமிருந்து வெளியேறி, எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளராக நின்று வெற்றி பெற்று விட்டார். சிறிசேனாவுக்கு 51.28 சதவீதமும், இராஜ பக்சேவுக்கு 47.28 சதவீத ஓட்டுகளும் கிடைத் துள்ளன. தமிழர்களின் தாயகமான யாழ்ப்பாணத்தில் சிறிசேனாவுக்கு 74.42 சதவீத வாக்குகளும், இராஜ பக்சேவுக்கு 21.85 சதவீத ஓட்டுகளும், வன்னியில் முறையே 78.42, 19.07 சதவீத வாக்குகளும், திரிகோண மலையில் முறையே 71.84, 26.87 சதவீத வாக்குகளும் மட்டக் களப்பில் முறையே 81.62 , 16.22 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டணி இந்தத் தேர்தலில் இராஜபக்சேவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சிறிசேனாவுக்கு ஆதரவு அளித்தது. ஆக இராஜ...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

இந்து பெண்கள் நான்கு குழந்தைகளைப் பெற வேண்டும் என்று பேசிய பா.ஜ.க. எம்.பி. சக்ஷிக்கு – அமீத்ஷா விளக்கம் கேட்டு, நடவடிக்கை. – செய்தி அப்படி பேசியது சரி தான்னு இங்கே தொலைக்காட்சி விவாதங்களிலே உட்கார்ந்து அடம் பிடித்த பேர்வழிகளுக்கும் நோட்டீசு அனுப்புங்கய்யா… இந்த கொசுத் தொல்லையை தாங்க முடியல்லே, நாராயணா! நித்யானந்தா ‘ஆண்மை’ உள்ளவர். – இரகசிய போலீஸ் அறிக்கை அது முக்கியமில்லீங்க. அவரு ‘ஆன்மிக’வாதியான்னு கண்டுபிடிக்க, ஏதாவது வழி இருக்கான்னு பாருங்க. மாநில தகவல் ஆணையர் கே.எஸ். ஸ்ரீபதிக்கு முன் நாற்காலியில் அமர்ந்ததற்காக தகவல் பெற வந்த சிவ. இளங்கோ என்பவர் கைது செய்யப்பட்டார். – செய்தி புரியுது! ‘பிராமணர்’ முன் கைகட்டி நிற்க வேண்டிய ‘சூத்திரன்’ – சமமாக உட்காரக் கூடாது என்ற மிக முக்கியமான தகவலை, தகவல் அதிகாரி ஸ்ரீபதி – உலகத்துக்கு இதன் மூலம் அறியத் தந்திருக்கிறார்! ‘இந்து மகாசபை’ எதிர்த்துப் போராடிய ‘பி.கே.’...

இத்தாலி சர்வாதிகாரி முசோலினியுடன் ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் 0

இத்தாலி சர்வாதிகாரி முசோலினியுடன் ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள்

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரும் முசோலினியும் ஓரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தவர்கள். இத்தாலியின் கொடூரமான சர்வாதிகாரி. அவர் தொடங்கிய பாசிஸ்ட் கட்சி, இத்தாலி முழுதும் ஆயுத முனையில் அரசு அலுவலகங்களையும் அரசு நிதியங்களையும் கைப்பற்றியது. மூன்றே ஆண்டுகளில் தன்னை எதிர்த்த 10 பேர் தலையை வெட்ட உத்தரவிட்டார். 1945இல் தனது மனைவியோடு சேர்த்து எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர். அந்த பாசிஸ்டை ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான மூஞ்சே என்ற சித்பவன் பார்ப்பனர் நேரில் சந்தித்துப் பேசியதோடு, முசோலினி நடத்திய கொடூரமான சர்வாதிகார அமைப்பைப்போல் ஆர்.எஸ்.எஸ்சை யும் உருவாக்கினார். மிகவும் இரகசியமாக சங்பரிவாரப் பார்ப்பனர்கள் காப்பாற்றி வந்த இந்த செய்தியை ‘எக்னாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ இதழில் (ஜன.22, 2000) ஒரு ஆய்வாளர் ஆதாரங்களுடன் வெளிக் கொண்டு வந்தார். அந்த ஆய்வாளர் பெயர் மார்கியா கசோலாரி. ‘நேரு நினைவு அலுவலகம் மற்றும் நூலக’ ஆவண காப்பகத்தில் இருந்த மூஞ்சே எழுதிய நாட்குறிப்பில் இந்தத்...

பார்ப்பன பல்லக்கு சவாரி 0

பார்ப்பன பல்லக்கு சவாரி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் கோயிலில் இப்போதும் பார்ப்பன பல்லக்குச் சவாரி நடக்கிறது. வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரைக் கோயிலில் இருந்து அவரவர்களின் வீட்டுக்கு ‘சூத்திரர்’கள் பல்லக்கில் சுமந்து செல்ல வேண்டுமாம். ‘சொர்க்க வாசல்’ திறப்புக்குப் பிறகு ஆண்டுதோறும் ‘பிரம்ம ரத மரியாதை’ என்ற பெயரில் இது நடக்கிறது. சீமான் தாங்கி என்றும் இதற்குப் பெயர் உண்டாம். சூத்திர பக்தர்களுக்கு ‘சொர்க்க வாசலை’ திறக்கும் இந்த பார்ப்பனர்கள், தாங்கள் மட்டும் சொகுசாக பல்லக்கில் சொந்த ‘வீடு’ போய்ச் சேர்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் அறநிலையத் துறை இதை தடை செய்தது. அதை எதிர்த்து ஸ்ரீரங்கம் அர்ச்சகப் பார்ப் பனர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கு தொடர்ந்த பார்ப்பனர்களைக் கண்டித்து வழக்கையும் தள்ளுபடி செய்தது. மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த பார்ப்பன ‘பல்லக்கு சவாரி’, இந்த ஆண்டு நீதிமன்றத் தடையையும்...

திருச்செங்கோட்டில் களமிறங்குகிறது கழகம் 0

திருச்செங்கோட்டில் களமிறங்குகிறது கழகம்

‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தும் வேத, புராண, சாஸ்திரங்களைத் தடைசெய்! பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல் திருச்செங்கோடு பெண்களை இழிவுபடுத்துவதாக ஜாதி-மத வாத சக்திகள் அச்சுறுத்தி, மிரட்டி ஒரு இலக்கியவாதியின் படைப்பை முடக்கியுள்ளன. ஆனால், பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் ‘மனு சா°திரம்’ பெண்களை இழிவுபடுத்தும் புராணங்களை ‘புனிதமாக’ப் போற்றுகிறார்கள். பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து ‘புனிதங்கள்’ என்ற பெயரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ‘இழிவுகளுக்கு’ எதிராக பெரியார் இயக்கம் போராடி வருகிறது. ஆனால், பெரியார் இயக்கம் ‘மதத்தைப் புண்படுத்துவதாக’ குற்றம் சாட்டுகிறார்கள். ‘பெரும்பான்மை’ மக்களை இழிவுபடுத்தும் வேத புராண சாஸ்திரங்களை தடை செய்யக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் திருச்செங்கோட்டில் ஜன.23இல் பொதுக் கூட்டம் நடத்தவிருக்கிறது. அதையொட்டி மக்களிடையே பரப்புவதற்காக கழகம் வெளியிட்ட துண்டறிக்கை: சூத்திரன் என்றால் யார்? இந்து மதத்தில் பார்ப்பனர்களைத் தவிர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சூத்திரர்கள் என இந்து மத சாஸ்திரங்கள்...

‘படைப்பாளி’களை மிரட்டும் மத-ஜாதி வெறி சக்திகள் 0

‘படைப்பாளி’களை மிரட்டும் மத-ஜாதி வெறி சக்திகள்

பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலுக்கான எதிர்ப்புகள் குறித்த ஒரு தொகுப்பு. பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல் வெளி வந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. முதல் பதிப்பு வெளிவந்தது 2010 டிசம்பரில். இப்போது திடீரென எதிர்ப்பு ஏற்பட்டது ஏன்? இதற்கு பெருமாள் முருகன் தரும் பதில்: “திடீர் எதிர்ப்புக்கு எனக்கு காரணம் தெரிய வில்லை. இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 2014இல் வெளி வந்த பிறகுதான் எதிர்ப்பு வந்திருக்கிறது. ஆங்கிலத்தில் படித்த யாரோ சிலர், இதை தூண்டிவிட்டிருக்கும் வாய்ப்புகள் உண்டு”. மேலும் அவர் கூறுகிறார்: முதன்முதலாக ஜாதி அமைப்புகளும் இந்து அமைப்புகளும் ஒரே மேடையில் கைகோர்த்திருக் கின்றன. இந்து முன்னணி மற்றும் மூன்று ஜாதி அமைப்புகள் இணைந்து இந்த எதிர்ப்பை உருவாக்கி வருகின்றன. இந்த எதிர்ப்பு அந்த நாவலுக்கானது மட்டும் என்று நான் நினைக்கவில்லை. காரணம், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ‘திருச்செங்கோடு’ ஊர்ப் பெயரை அடுத்த...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

பாபா ராம்தேவ், பாபா ரவிசங்கர் – மோடி அரசின் பத்மபூஷன் விருதுகளை ஏற்க மறுப்பு. – செய்தி அதுக்காக, மனசு உடைஞ்சுடாதீங்க. நித்யானந்தா, ஜெயேந்திரரை கேட்டுப் பாருங்க. அவுங்க மறுக்க மாட்டாங்க. காந்தியின் கொள்கைகள் இந்தியாவில் இன்னும் உயிரோட்டத்துடன் உள்ளது. – காந்தி சமாதியில் ஒபாமா இது எங்களுக்கே தெரியல்லீங்களே… ஒரு வேளை அமெரிக்க புலனாய்வுத் துறை கண்டுபிடிச்சு சொல்லியிருக்கும்போல! நானும் என் கணவரும் இலண்டனில் படித்தோம். எனது மகளை அமெரிக்கா வில் படிக்க வைக்கப் போகிறேன். – தொழில் துறை அமைச்சர் நிர்மலா ஆக, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை தீவிரமா செயல்படுத்த தொடங்கிட்டீங்க… ஓசூரில் விசுவ இந்து பரிஷத் மாநாட்டுக்கு காஞ்சி ஜெயேந்திரன் தலைமை தாங்கினார். – செய்தி சரியான தேர்வு. சிறையிலிருந்து தனது ‘பூத உடலை’ விடுதலை செய்து கொண்டவர்; ‘ஆன்ம’ விடுதலைக்கு வழி காட்ட மாட்டாரா, என்ன? திருமணமாகாத நூறுக்கும் மேற்பட்ட எரிக்கப்படாத இளம் பெண்கள்...

உறுதிப்படுத்துகிறார், கோபால் கோட்சே கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் தான்! 0

உறுதிப்படுத்துகிறார், கோபால் கோட்சே கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் தான்!

காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே, ஆர்.எஸ்.எஸ்.காரர்தான் என்று உறுதி செய்து, காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சே அளித்த பேட்டி இது. 1994இல் ‘பிரன்ட் லைன்’ பத்திரிகையில் வெளி வந்தது இந்த பேட்டி. நீங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்தவரா? நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். சில்இருந்தவர்கள்தாம். நாதுராம் (கோட்சே) பட்டாரிய்யா, நான், கோவிந்த் ஆகிய நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்த வர்களே. நாங்கள் எங்கள் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ்.சில்தான் அதிகமாக வளர்ந்தோம். நாதுராம் (கோட்சே) ஆர்.எஸ்.எஸ்.சில் இருந் தாரா? அவர் ஆர்.எஸ்.எஸ்.சை விட்டு விலகிட வில்லையா? நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.இல் (காரியவாஹ்) செயலாளராக இருந்தான். அவன் காந்தி கொலை வழக்கில் கொடுத்த வாக்குமூலத்தில்தான் ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகி விட்டதாகக் குறிப்பிடுகின்றார். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்.சின் அப்போதைய தலைவர் கோல்வால்கரும், ஆர்.எஸ்.எஸ்.சும், காந்திஜியின் கொலைக்குப் பின் பயங்கர கெடுபிடிகளுக்கு உள்ளானதுதான். ஆனால்,...

மோடி ஆட்சிக்கு உச்சநீதிமன்றம் குட்டு 0

மோடி ஆட்சிக்கு உச்சநீதிமன்றம் குட்டு

பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு முறைகேடாக வழங்கிய சலுகைகள், அந் நிறுவனங்களின் வரி ஏய்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழியாக அம்பலப்படுத்திய அமைப்பு ‘கிரீன் பீஸ்’ என்ற தொண்டு நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு மோடி அரசு இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் அதன் தலைமை அமைப்பு வழங்கிய ரூ.1.87 கோடியை முடக்கியது. இந்த நடவடிக்கையை எதிர்த்து, ‘கிரீன் பீஸ்’ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தது. வழக்கை விசாரித்த நீதிபதி சக்தார், அரசின் நடவடிக்கையை இரத்து செய்தார். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படு வதால் ஒரு அமைப்பின் நிதியை முடக்கிட முடியாது. இது தேச விரோத நடவடிக்கை என்றும் கூற முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறி யுள்ளார். ‘கிரீன் பீஸ்’ நிறுவனத்தின் வங்கிக் கணக்கை முடக்குவதற்கான ஆவணங்கள் ஏதும் அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட வில்லை. உள்துறை அமைச்சகம் முதலில் விசாரணைகளை நடத்தி, தேவைப்பட்டால் கணக்கை முடக்க வேண்டும். ஆனால்,...

அமெரிக்காவில் மதம் மாறும் பார்ப்பனர்கள் 0

அமெரிக்காவில் மதம் மாறும் பார்ப்பனர்கள்

தேசத்தை – மதத்தை மாற்றிக் கொண்டு அதிகாரத்தைப் பிடிக்கும் அமெரிக்கப் பார்ப்பனர்கள் பற்றி சங்பரிவாரங்கள் வாய் திறப்பதில்லையே, ஏன்? சங்பரிவார் பார்ப்பனர்கள் ஏழை முஸ்லிம் மக்களை ‘தாய் மதம்’ திருப்புவதாகக் கூறி ‘இந்து’ மதத்துக்கு மாற்றுகிறார்கள். அதற்கு அவர்கள் சூட்டியுள்ள பெயர் ‘கார் வாப்சி’. அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறிய பார்ப்பனர்கள், தங்களது ‘தேசத்தையே’ மாற்றிக் கொள்வது பற்றி சங்பரிவாரங்கள் வாய் திறப்பது இல்லை. அமெரிக்காவில் பார்ப்பனர்கள் ‘பச்சை அட்டை’ வாங்கிக் கொண்டு அமெரிக்க குடிமகன்களாக வாழ்வதற்குத்தான் போட்டிப் போட்டுக் கொண்டு நிற்கிறார்கள். இந்த பார்ப்பனர்கள், தேசத்தின் அடையாளத்தை மட்டும் மாற்றிக் கொள்வதில்லை. ‘இந்து’ மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு, கிறிஸ்தவ மதத்துக்கு தாவுகிறார்கள். இப்படி மதம் மாறிய பார்ப்பனர்களை ஏராளமாக பட்டியலிட முடியும். அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா வருவதற்கு முன்பு, ஒரு ‘பரிசை’ வழங்கியுள்ளார். என்ன தெரியுமா? இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய ஒரு ‘அமெரிக்க இந்தியரையே’, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அறிவித்துள்ளார்....

தணிக்கைக் குழு காவி மயமாகிறது 0

தணிக்கைக் குழு காவி மயமாகிறது

திரைப்படத் தணிக்கைக் குழு வின் தலைவராக நியமிக்கப்பட் டுள்ள பகல்ஜீ நிகலானி, பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.சோடு நெருக்கமான உறவு கொண்டவர். தனது அடை யாளத்தை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் அவர் ‘தணிக்கைக்கு’ உட்படுத்தாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். “நான் பா.ஜ.க.வைச் சார்ந்தவன் என்பதை பெருமையுடன் கூறுகிறேன். தேசத்தின் குரலாக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர்தான் எனது கதாநாயகன்” என்று கூறியுள்ள இவர்தான், நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடிக்காக ‘ஹர் ஹர் மோடி’ என்ற பிரச்சாரப் படத்தையும் தயாரித்தவர். தணிக்கைக் குழு தலைவராக இருந்த லீலா சைமன் மற்றும் குழு உறுப் பினர்கள். தணிக்கைக் குழுவில் அரசின் தலையீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூண்டோடு பதவி விலகியதைத் தொடர்ந்து, தணிக்கைக் குழு இப்போது ‘சங் பரிவார்’ ஆட்களைக் கொண்டு நிரப்பப்பட்டிருக்கிறது. பஞ்சாபில் தன்னையே கடவுளாக அறிவித்துக் கொள்ளும் ஒரு சீக்கியக் குழுவின் தலைவரான ராம் ரகீம்சிங் தயாரித்த ‘கடவுளின் தூதர்’ என்ற படத்துக்கு லீலா சைமன் தலைமையிலான தணிக்கைக்...

பார்ப்பன மிரட்டலை சந்திக்க தமிழகம் தயாராகிறது! கோட்சே சிலை எதிர்ப்பு மாநாடு! 0

பார்ப்பன மிரட்டலை சந்திக்க தமிழகம் தயாராகிறது! கோட்சே சிலை எதிர்ப்பு மாநாடு!

தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பார்ப்பன மதவாத சக்திகளை எதிர்கொள்ள பார்ப்பனரல்லாத இயக்கங்கள், சமூக நீதி இயக்கங்கள், ஒடுக்கப்பட் டோர் அமைப்புகள் தயாராகி வருகின்றன. 24-01-2015 சனிக்கிழமை அன்று ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள மல்லிகை அரங்கில் காந்தியை படுகொலை செய்த “நாதுராம் கோட்சே சிலை எதிர்ப்பு” மாநாடு நடைபெற்றது. நாட்டின் பன்முகத்தன்மையைத் தகர்த்தெறிந்து இந்துத்துவ நாடாக்கும் முயற்சியை அணிதிரண்டு முறியடிப் போம் என்ற முழக்கத்தோடு மதவெறி எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த மாநாடு பிற்பகல் 2-30 மணி முதல் இரவு 10-00 மணி வரை இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. முதல் அமர்விற்கு தமிழக பசுமை இயக்கம் தலைவர் டாக்டர் வெ.ஜீவானந்தம் தலைமை ஏற்றார். தமிழினப் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னையன் தொடக்கவுரை ஆற்றினார். உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி, தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ப.பா.மோகன், சமூக நீதி வழக்குரைஞர்கள் நடுவம் ஒருங்கிணைப்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

ஸ்ரீரங்கம் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்கு நிதி மோசடி வழக்கில் முன் ஜாமீன் கிடைத்தது. – செய்தி முன் ஜாமீன் முதல் வெற்றிதான்! அடுத்து தேர்தலிலும் ‘ஜாமீன்’ வாங்கிக் காட்டுவோம்! இது உறுதி! கோயில் வளாகங்களுக்குள் ‘கோட்சே’வுக்கு சிலை அமைப்போம். – இந்து மகாசபை அறிவிப்பு அதோடு, ‘இராமன்’ சிலையும் சேர்த்துக்குங்க அவனும் ‘சம்பூகனை’க் கொலை செய்திருக்கிறான். ஒபாமா வரவேற்பு நிகழ்ச்சியில் மோடி அணிந்திருந்த உடையின் மதிப்பு ரூ.10 இலட்சம். – செய்தி தப்பா நினைச்சுக்காதீங்க… அப்பத்தான் அமெரிக்காகாரன்இந்தியாவை நம்பி கடன் கொடுப்பான்! வேத மந்திரம் ஓதி, 11 கிறிஸ்தவர்களை தமிழ்நாட்டில் ‘இந்து’ மதத்துக்கு மாற்றியுள்ளோம். – இந்து முன்னணி பரவாயில்லையே! மதமாற்றத்துக்கெல்லாம் ‘மதந்திரங்கள்’ இருக்கா! அப்போ ஜாதி மாறுவதற்கு ஏதேனும் மந்திரம் வச்சிருக்கேளா? தமிழ் நாட்டில் 5720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது. – மத்திய அரசு தகவல் எங்க நாட்டுல பள்ளிகளை கோயில்களாக மதிக்கிறோம். எனவே இரண்டுக்கும் கழிப்பறை கட்ட மாட்டோம்;...

0

‘என்கவுன்டர்’ சதி: அமீத்ஷா விடுவிக்கப்பட்ட கதை

குஜராத்தில் ‘என்கவுன்டர்’ கொலைகளுக்கு சதித் திட்டம் தீட்டிய அப்போதைய உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சிறப்பு நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது. இது எப்படி நடந்தது? தமிழ் ஊடகங்களோ தொலை காட்சிகளோ இருட்டித்த உண்மைகள் இங்கே வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படு கின்றன. அமீத்ஷா, குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது மோடியை கொல்ல முஸ்லிம் தீவிரவாதிகள் சதி செய்ததாக பல ‘என்கவுன்டர்’ கொலைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன. மும்பையைச் சார்ந்த இர்ஷத் ஜஹான் என்ற கல்லூரி மாணவி உள்பட நான்கு பேர் பம்பாயிலிருந்து அகமதாபாத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு கொல்லப் பட்டனர். காவல்துறையினரே திட்டமிட்டுக் கொலை செய்தார்கள் என்று குஜராத் நீதிமன்றங்களே உறுதி செய்தன. இந்த என்கவுன்டரில் தொடர்புடைய 32 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை மோடி ஆட்சி கட்டவிழ்த்துவிட்டது. 2000த்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மதத்தின் பெயரால் வெறியூட்டப்பட்டவர்கள் ஆயுதங்களுடன் வெளிப்படையாக இந்த கலவரத்தை...

அதிகாரிகள் மதப் பிரச்சாரம் செய்யலாமா? சங்பரிவாரங்களின் இரட்டைவேடம் 0

அதிகாரிகள் மதப் பிரச்சாரம் செய்யலாமா? சங்பரிவாரங்களின் இரட்டைவேடம்

அய்.ஏ.எஸ். அதிகாரிகள் மதப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அய்.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கருக்கு உத்தரவிட்டுள்ளார். மதச் சார்பற்ற ஒரு நாட்டில் அதிகாரிகள் மதப் பிரச்சாரகர்களாக மாறக் கூடாது என்ற கருத்து வரவேற்கப்பட வேண்டியதாகும். அதிகாரி உமாசங்கர், கிறிஸ்துவ சுவிசேஷப் பரப்புரையாளராக ஊர்தோறும் பயணம் செய்கிறார். தனது ‘சுவிசேஷ’ப் பிரச்சாரத்தின் வழியாக பார்வையற்றவர்களுக்கு பார்வை பெற்றுத் தருவதாகவும் பேச இயலாதவர்களை பேச வைப்பதாகவும் கூறுவதும் அறிவியலுக்கு எதிரானது. நேர்மைக்கு புகழ் பெற்ற ஒரு அதிகாரி, கடும் மன உளைச்சலில் இப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்றே தெரிகிறது. ஆனாலும், அவரது மதப் பிரச்சாரம் ஏற்கவியலாது என்பதே நமது உறுதியான கருத்து. அதே நேரத்தில், அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை மாட்டக் கூடாது என்ற அரசு ஆணைகள் மதிக்கப்படுவது இல்லை. காவல் நிலையங்கள், பஜனை மடங்களாக காட்சியளிக்கின்றன. தேர்தல் ஆணையர் நீதிபதி என்ற நிலையில் உள்ளவர்கள் பூணூல் மேனியோடு...

விமானம் விட்ட கதை 0

விமானம் விட்ட கதை

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா வில் விமானம் ஓட்டியதாக, பம்பாயில் நடந்த விஞ்ஞான காங்கிரசில் முன்னாள் விமான ஓட்டி ஒருவர் அறிக்கை வாசித் தார். இது குறித்து ஏற்கெனவே மறுப்புகள் வெளிவந்துள்ளன. ‘முன்னோர்கள்’ பற்றி கூறப்படும் பெருமைகளை அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டால் ஒழிய ஏற்றுக் கொள்ள முடியாது. இது பற்றி ‘தமிழ் இந்து’ நாளேட்டில் மற்றொரு மறுப்புக் கட்டுரை ஜனவரி 19இல் வெளி வந்திருக்கிறது. “கலிலியோ இன்று கொண் டாடப்படுவதன் காரணங்களில் ஒன்று, அவர் அரிஸ்டாட்டிலின் கூற்று ஒன்று தவறு என்று நிரூபித்ததால்தான். இரு பொருட் களை உயரத்திலிருந்து கீழே போட்டால், பருமனான பொருள் முதலில் தரையில் விழும் என்று அரிஸ்டாட்டில் சொல்லியிருந் தார். இதைச் சரி என்று – அரிஸ்டாட்டில் போன்ற மாமேதை சொன்னதால் – இரண்டாயிரம் ஆண்டுகள் நம்பிக் கொண்டிருந் தார்கள். கலீலியோ, அரிஸ்டாட்டில் சொன்னது தவறு என்று நிரூபித்தார். நம்மிடம் விமானம் பற்றிய தொழில்நுட்பம் இருந்திருக்கலாம்; ஆனால்...

பெங்களூரில் மாநாடு போல் நடந்த பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள் 0

பெங்களூரில் மாநாடு போல் நடந்த பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள்

பெங்களூர், சிவாஜி நகர், வேளாண்மை அறிவியல் நிறுவன அரங்கில் ‘கற்பி ஒன்று சேர் ’ அமைப்பின் தலைவர் ஜார்ஜ் ஒருங்கிணைப்பில் 26-01-2015 திங்கள் அன்று பிற்பகல் 3-00 மணி முதல் 8-00 மணிவரை பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு நடந்தேறியது. நிகழ்ச்சி கர்நாடக மாநில ரிபப்ளிகன் கட்சி, சமதா சைனிக் தள் ஆகியவற்றின் தலைவராகிய முனைவர் வெங்கடசுவாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்டையா, சப்தகிரி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேந்திரநாத், பெங்களூர் பல்கலைக் கழக சமூகவியல்துறை தலைவர் முனைவர் சமதா தேஷ்மானே ஆகியோர் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சமூகப் புரட்சிப் பணிகளை தமிழிலும், கன்னடத்திலும் விரிவாகப் பேசினர். கூட்டத் தலைவரும் கன்னட தலைவர்களும் பெரியாரைப் பற்றியும் அவரது போராட்டங்களைப் பற்றியுமே அதிகம் பேசினர். நிகழ்ச்சியில் பெரியார், அம்பேத்கர் ஆகியோரை பற்றிய ஆறு, ஆறு பாடல்களைக்...

திருச்சியில் கோட்சே ஆதரவாளர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் காந்தி நினைவு நாளில் கழகத்தினர் கைது! 0

திருச்சியில் கோட்சே ஆதரவாளர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் காந்தி நினைவு நாளில் கழகத்தினர் கைது!

ஆக. 29ஆம் தேதி தொடங்கப்பட்டதுதான் விசுவ இந்து பரிஷத். ஆனால், அதை காந்தி நினைவு நாளில் தொடங்கப்பட்டதாக மாற்றிக் கொண்டார்கள். பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள், சாமியார்கள் இடம் பெற்றுள்ள அமைப்பு விசுவ இந்து பரிஷத். பாரதிய ஜனதா கட்சி உருவாவதற்கு முன்பே 1964ஆம் ஆண்டிலே ஆர்.எ°.எ°. தலைவர் கோல்வாக்கர் ஆலோசனை பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அயோத்தியில் ‘இராமன்’, மதுராவில் ‘கிருஷ்ணன்’, காசியில் ‘விசுவநாதன்’ ஆகிய மூன்று மதக் கடவுள்களுக்கும் அங்கே அமைந்துள்ள மசூதிகளைத் தகர்த்துவிட்டு கோயில்கள் கட்டவேண்டும் என்று அறிவித்தது. பிற மதத்தினரை ‘இந்து’ மதத்துக்கு மாற்றுவதற்காகவே ‘தர்ம பிரச்சார்’ என்ற தனிப் பிரிவை, விசுவ இந்து பரிஷத் உருவாக்கியுள்ளது. 1966ஆம் ஆண்டு பசுவதை தடைச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, டெல்லியில் காமராசரை உயிரோடு கொளுத்த திட்டமிட்டு, அவரது வீட்டுக்கு தீ வைத்து, சங் பரிவாரங்களோடு சேர்ந்து விசுவ இந்து பரிஷத்தும் வெறியாட்டம் நடத்தியது. இந்த விசுவ இந்து பரிஷத்,...

கழக செயலவை தீர்மானம் வெற்றி: காவல்நிலையங்களில் கண்காணிப்பு காமிராக்கள் 0

கழக செயலவை தீர்மானம் வெற்றி: காவல்நிலையங்களில் கண்காணிப்பு காமிராக்கள்

26.10.2014 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழக செயலவை, காவல் நிலையங்களில் ‘மரண தண்டனை’ வழங்கிவிட்டு, உண்மைக்கு மாறான காரணங்களைக் கூறி, காவல்துறையினர் தப்பி விடுவதை சுட்டிக் காட்டி, தீர்மானம் நிறைவேற்றியது. அத் தீர்மானத்தில், “காவல்நிலைய விசாரணைகளில் நடக்கும் உண்மைகளைக் கண்டறிய, எதிர்காலத்திலாவது கண்காணிப்புக் காமிராக்களை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பொருத்த வேண்டும்” என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. திராவிடர் விடுதலைக் கழகம் முன் வைத்த இந்த ஆலோசனை, இப்போது உயர்நீதிமன்ற உத்தரவு வழியாக நிறைவேற்றப்படவிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐ. பிரகாஷ்ராஜ் தொடர்ந்த பொதுநல வழக்கில் காவல்நிலையத்தில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எப்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, முதல் கட்டமாக 251 காவல் நிலையங்களில் மார்ச் 9ஆம் தேதிக்குள் கண்காணிப்பு காமிராக்களை பொருத்துமாறு காவல்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது. பணி நிறைவடைந்த அறிக்கைiயும்...

புதுவை கூட்டத்தில் – கழகத் தலைவர் பேச்சு பிரிட்டிஷ் ஆட்சியிடம் 5 முறை மன்னிப்புக் கேட்ட ‘வீரர்’ சாவர்க்கர் 0

புதுவை கூட்டத்தில் – கழகத் தலைவர் பேச்சு பிரிட்டிஷ் ஆட்சியிடம் 5 முறை மன்னிப்புக் கேட்ட ‘வீரர்’ சாவர்க்கர்

இந்தியத் துணைக்கண்டத்தில் மக்களிடையே மதவெறியெனும் நச்சு விதையைத் தூவிவரும் சங் பரிவாரங் களின் சதி வரலாறுகளை அம்பலப் படுத்தும் விதமாக கடந்த 30.01.2015 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.00 மணியளவில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்திலுள்ள பெரியார் திடலில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்” காந்தியைப் படுகொலை செய்து கீதை உபதேசம் செய்யும் கோட்சே வகையறாக்களைக் கண் டித்து” எனும் தலைப்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முதல் நிகழ்வாக மதவெறிக்கெதிரான பாடல்களைத் தோழர். சமர்ப்பா பாடினார். தோழர்கள் ஆ.ஆனந்தன், கி.வேலன், கோ.சேனாபதி, கு. உதயகுமார் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு புதுவை மாநில திவிக செயலாளர் ஏ.சிவானந்தம் தலைமை வகித்தார். பார்ப்பனர்களின் சதிகளை அம்பலப்படுத்தும்விதமாக தொடக்க வுரையாற்றினார் புதுவை மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன். அவரைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை ஆற்றினார். அவர் உரையில் காந்தியார் பார்ப்பனன் நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டதற்கான காரணங்களை விளக்கினார்....

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

குடும்பக் கட்டுப்பாடு மாத்திரையை முதன்முதலாக உருவாக்கிய விஞ்ஞானி கார்ல் ஜெராசி, 91ஆம் வயதில் அமெரிக்காவில் மரணமடைந்தார். – செய்தி ‘குழந்தைகளைத் தருவது கடவுளே’ என்ற மூடநம்பிக்கையை முறியடித்து, 91 வயது வாழ்ந்து காட்டிய விஞ்ஞானிக்கு வீரவணக்கம்! இஸ்லாம் கிறிஸ்துவ மதத்திலிருந்து ‘இந்து’ மதம் திரும்பியவாகள் ஜாதியற்றவர்கள்; அவர்கள் ஜாதி ஒழிப்புப் போராளிகள். – ஆர்.எஸ்.எஸ். ஏடு ‘விஜயபாரதம்’ அப்ப, ஆர்.எஸ்.எஸ்.ஸை கூண்டோடு இஸ்லாம் மதத்துக்கு மாற்றி, மீண்டும் ‘இந்து’ மதத்துக்கு திரும்பினா, ஆர்.எஸ்.எஸ்.லேயே ஜாதி ஒழிஞ்சுடும்ல; யோசிங்க. ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. – பா.ஜ.க.வினர் நேரடி மோதல் – கைகலப்பு. – செய்தி இப்படி ‘இந்து’க்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு இந்து ஒற்றுமையை பா.ஜ.க. குலைப்பது தேசத்துரோக மல்லவா? மத சகிப்புத் தன்மை பற்றி ஒபாமா எங்களுக்கு புத்தி சொல்ல வேண்டாம். – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் கூறுவதிலாவது கொஞ்சம் சகிப்புத் தன்மையை காட்டக் கூடாதா, ராஜ்நாத், ஜி! ‘வாஸ்து’...

காசு கொடுத்து  உதை வாங்கும் கதை 0

காசு கொடுத்து உதை வாங்கும் கதை

இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கேற்க, இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மோடி ஆட்சி சிறப்பான வரவேற்பு அளித்தது. மரபுகளை மீறி, விமான நிலையம் சென்று மோடி, ஒபாமாவை வரவேற்றார். மோடி விதவிதமான ஆடைகளை அணிந்து, ஒபாமா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ‘ஒபாமா-மோடி’யின் நெருக்கமான நட்பு குறித்து ஊடகங்கள் புகழ்ந்து எழுதின. கடந்த மாதம் 27ஆம் தேதி டெல்லியில் ஸ்ரீகோட்டை யில் இளைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, மோடியின் வரவேற்பு மாயைகளில் தாம் மூழ்கிடவில்லை என்பதை இடித்துக் காட்டி பேசினார். “இந்தியாவின் வெற்றி, அது மதத்தின் அடிப்படையில் பிளவுபடாதபோது தான் தொடர்ந்து நீடிக்கும். பாரம்பர்ய அடிப்படையில் மதப் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகளை எதிர்த்து நிற்க வேண்டும்” என்று பேசினார். இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவு மத சுதந்திரத்தை வலியுறுத்தியதையும் அவர் எடுத்துக் காட்டினார். இந்திய ஆளும் வர்க்கம் அதிர்ச்சியடைந்தது. ‘இந்தப் பேச்சு மோடி ஆட்சிக்கு எதிரானது’ என்று எதிர்க்கட்சிகள்...

இடஒதுக்கீட்டால் ‘தகுதி, திறமை’ பாதிக்கப்படவில்லை 0

இடஒதுக்கீட்டால் ‘தகுதி, திறமை’ பாதிக்கப்படவில்லை

இடஒதுக்கீடு கொள்கை ‘தகுதி திறமை’க்கு எதிரானது என்று பார்ப்பனர்கள் இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து முன் வைக்கும் வாதத்தில் உண்மையில்லை என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி பொருளாதார ஆய்வு மய்யத்தின் பேராசிரியர் அஷ்வினி தேஷ்பாண்டே, அமெரிக்காவின் மிச்சிகன் பொருளாதார பல்கலைக்கழக பேராசிரியர் தாமஸ் வெய்ஸ்கோஃப் இருவரும் இணைந்து உலகின் மிகப் பெரும் பொதுத் துறை நிறுவனமான இந்திய தொடர்வண்டித் துறையில் இந்த ஆய்வை நடத்தினர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதால் தொடர்வண்டித் துறையில் உற்பத்தியோ திறனோ பாதிப்புக் குள்ளானதா என்ற இந்த ஆய்வு 1980-லிருந்து 2002 வரையுள்ள ஆண்டுகளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டது. இந்த ஆய்வை உலகின் தலைசிறந்த ஆய்விதழான ‘வேல்ட் டெவலப் மென்’ (World Devleopment) வெளியிட் டுள்ளது. பிரிவு ‘ஏ’ முதல் ‘டி’ வரை பல்வேறு நிலைகளில் பணியாற்றும் 1.3 மில்லியன் ஊழியர்களிட மிருந்து மிக விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்களையும் கூடுதலாக...

தலையங்கம் – தமிழ்நாட்டில் நடப்பது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா? 0

தலையங்கம் – தமிழ்நாட்டில் நடப்பது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா?

தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடநூல்கள், எந்த அளவு மோசமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கி ‘இந்து’ தமிழ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரையைப் படித்த எவருமே அதிர்ச்சியும், தலைகுனிவும் அடைந்திருப்பார்கள். தமிழ்நாட்டில் நடப்பது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியா அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா என்று சந்தேகப்பட வேண்டி யிருக்கிறது. 1927ஆம் ஆண்டே தனது பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஜாதி எதிர்ப்பு இயக்கத்தை வாழ்நாள் முழுதும் நடத்தி வந்த பெரியாரை, ‘ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’ என்று இந்த பாட நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஜாதிப் பெயரை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருந்த எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், வாஞ்சி அய்யர் போன்றவர்களின் பெயர்களை ஜாதிப் பெயரை நீக்கி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹிட்லர், முசோலினி ஆகியோரின் வெளிநாட்டுக் கொள்கைகள் முற்போக்கானவை என்றும், திராவிடர் இயக்க ஆதரவோடு ஒழித்துக் கட்டப்பட்ட தேவதாசி முறையை பெருமைப்படுத்தி, அவர்களை ‘ஆலய சேவகிகள்’, ‘இறைப்பணி, கலைப் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள்’ என்றும் புகழாரம்...

எழுத்தாளர்கள் குணா-கண்ணன் மீது பாய்ந்த ஜாதி வெறி 0

எழுத்தாளர்கள் குணா-கண்ணன் மீது பாய்ந்த ஜாதி வெறி

பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலை திருச்செங்கோடு ஜாதிவெறி சக்திகள் அச்சுறுத்தி முடக்கியதுபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இரண்டு தலித் இளைஞர்கள் ஜாதி வெறிக்கு எதிராக எழுதிய நூலுக்கு ஜாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை ஊரைவிட்டே ஓட வைத்து விட்டனர். அவர்களின் வீடுகள் தாக்கப்பட்டன; உடைமைகளும் ஜாதி வெறியர்களால் அழிக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி வட்டம் குளந்திரான்பட்டு கிராமத்தைச் சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இளைஞர் துரை. குணா, ‘ஊர் கூடி தேர் இழுப்பவர்கள்’ என்று எழுதிய நாவலுக்கு ஊர் ஜாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஊரில் குடியிருக்க விடாமல் அச்சுறுத்தி வெளியேற்றி விட்டனர். அதே மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சார்ந்த தலித் தோழர் ம.மு. கண்ணன் எழுதிய ‘கானாயீனாவின் கணினி’ என்ற நாவல், ஜாதி வெறி குறித்துப் பதிவுகளை செய்திருந்ததால், அவரது குடிசை வீட்டைக் கொளுத்தி, அவர் சேமித்து வைத்திருந்த அரிய நூல்களையும் ஜாதி வெறியர்கள் எரித்துவிட்டனர். 3...

‘ஜாதி’  மறுப்பு மணம்: வழக்கறிஞர்களுக்கு பாராட்டு! 0

‘ஜாதி’ மறுப்பு மணம்: வழக்கறிஞர்களுக்கு பாராட்டு!

வழக்கறிஞர்கள், தங்கள் வழக்கறிஞர் அலுவலகங்களை திருமணம் செய்வதற்குப் பயன் படுத்தக் கூடாது என்றும், திருமணம் என்றாலே அது ‘கொண்டாட்ட மாக’ நடப்பதுதான் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எ;!.இராஜேசுவரன், பி.என். பிரகாஷ் அமர்வு 17.10.2014 அன்று தீர்ப்பு வழங்கியது. பெரியாரின் சுயமரியாதை திருமணம்கூட இரகசியமாக நடத்துவது அல்ல என்றும் ‘கொண்டாட்டமாக’ பலரையும் கூட்டி வைத்து நடத்துவதுதான் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். எளிமை, சிக்கனத்தை வலியுறுத்தி பெரியார் அறிமுகப் படுத்திய சுயமரியாதைத் திருமணமுறைக்கும் நீதிமன்றம் தவறான விளக்கங்களை அளித்தது. உயர்நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை மறுத்து 26.10.2014 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் விடுதலைக்கழக செயலவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. “கொண்டாட்டமாகவும் விழாவாகவும் நடத்தப்படுவதுதான் திருமணம்” என்று உயர்நீதிமன்றம் வரையரைப்பது ஒரு பண்பாட்டுத் திணிப்பு என்று தீர்மானம் சுட்டிக் காட்டியது. அதிக எண்ணிக்கையில் திருமணங்களை நடத்தி வைத்து, குற்றவாளிகளைப் போல அதைப் பதிவு செய்த வழக்கறிஞர்களையும் நீதிமன்றத் தீர்ப்பு கடுமையாக குறை...

0

வாழ்த்துவோம்! வரவேற்போம்! பிப்.14 உலக காதலர் நாள்

பழந்தமிழர் பண்பாடு காதலைப் போற்றுகிறது; தமிழ் இலக்கியங்கள் காதலைப் பேசுகின்றன; இப்போது காதலுக்கு ஏன் தடை கற்கள்? பழந்தமிழகத்தில் – • தெருவில் உப்பு விற்றப் பெண்ணும் • மீன் விற்ற பெண்ணும் • பரணில் கிளி விரட்டிய பெண்ணும் • தந்தைக்கு சோறெடுத்துச் சென்ற பெண்ணும் – ஆண்களைச் சந்தித்து விரும்பியவர்களைத்தேர்ந்தெடுத்தார்கள். – இதுவே நம் இலக்கியங்கள் கூறும் பண்பாடு! காதலைப் பற்றி பெரியார் கூறுகிறார்: உணர்ச்சிகளால் உந்தப்படும் காதலை மறுக்கும் பெரியார், அறிவார்ந்த புரிதலோடுக் கூடிய காதலை வரவேற்கிறார். காதல் பற்றி பெரியார் கருத்து. “உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்!” – குடிஅரசு 21.7.45 “ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து...

பொது சிவில் சட்டம்: சில வரலாற்றுத் தகவல்கள் 0

பொது சிவில் சட்டம்: சில வரலாற்றுத் தகவல்கள்

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவை என்று சங்பரிவாரங்கள் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளன. பொது சிவில் சட்டம் குறித்த சில வரலாற்றுத் தகவல்கள்: ஆர்.எஸ்.எஸ். முன் வைக்கும் முக்கிய மூன்று விஷயங்களை, சங் பரிவாரங்கள் வழிமொழிந்து பிரச்சாரம் செய்வதும், பி.ஜே.பி. ஆட்சிக்கு வருகிற போதெல்லாம் அந்த பிரச்சாரம் தீவிரமடைவதையும் காணலாம். அவை 1) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட வேண்டும். 2) பொது சிவில்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். 3) பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயில் கட்ப்பட வேண்டும். இதன் மூலம் ஒரே மதம், மொழி, கலாச்சாரத்தைக் கொண்ட இந்து இராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும். இது அடிப்படையில் இந்தியாவின் பன்முகத் தன்மையை நிராகரித்து, இந்திய மக்களின் ஒற்றுமையை உடைக்கும் செயலாகும். வலதுசாரிகளான சங்பரி வாரங்களின் கனவு நிறைவேற இதுவரை இந்திய மக்கள் அனுமதிக்கவில்லை. ஆனால், தற்போது தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துள்ள...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

திருப்பதி ‘வேத பல்கலை’ வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்; வேதம் படிப்போர் முகமூடி அணிய வனத்துறை வேண்டுகோள். – செய்தி ‘பூணூல்’ போடாட்டாலும் பரவாயில்லை; ஓய்! முதலில் முகமூடியை போடுங்கோ! இப்ப அதுதான் முக்கியம்! காதலர் தினத்தை எதிர்த்து இந்து முன்னணியினர் நாய்க்கும் நாய்க்கும் திருமணம் செய்தனர். – செய்தி இந்த ‘சூத்திரர்கள்’ நாய்க்குத்தான் திருமணம் செய்ய முடியும்; ‘மனுஷாளுக்கு’ விவாகம் செய்யும் உரிமை ‘அவாளுக்கு’த்தான்! டெல்லி தேர்தலில் 70 தொகுதிகளில் 3இல் மட்டுமே பா.ஜ.க. வெற்றி. – செய்தி அப்படின்னா, ‘இராமனின்’ பிள்ளைகளை டெல்லி மக்கள் ‘வனவாசத்துக்கு’ அனுப்பிட்டாங்கன்னு, சொல்லுங்க. குருவாயூர் கோயிலில் பின்பற்றவேண்டிய கடமைகளை ‘பகவான்’ கிருஷ்ணனிடம் அருள்வாக்காக கேட்டறிந்தார் சோதிடர் ராமன் நம்பூதிரி. – செய்தி இனி ராமன் நம்பூதிரி மட்டும்தான் தன்னிடம் பேச வேண்டும்; அந்த உரிமை வேறு யாருக்கும் இல்லை என்று ‘கிருஷ்ணன்’ கூறியிருப்பாரே! தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் தகுதியும், அரசியல் முதிர்ச்சியும் எங்களைத் தவிர...

“பலதார மணம்” அடிப்படை உரிமையாகுமா? 0

“பலதார மணம்” அடிப்படை உரிமையாகுமா?

ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள (ஞடிடல பயஅல) இஸ்லாமிய மதச் சட்டம் அனுமதிக்கிறது என்பதால், அரசு ஊழியராக உள்ள முஸ்லிம் – இரண்டாவது திருமணம் செய்து கொள்ள லாமா? இப்படி ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. உ.பி.யில் நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றும் குர்ஷித் அகமதுகான் என்ற அரசு ஊழியர் முதல் மனைவி சோபினா பேகம் இருக்கும்போதே, அஞ்சும்பேகம் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து முதல் மனைவியின் சகோதரி, தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். காவல்துறை விசாரணைக்கு ஆணையம் உத்தரவிட்டது. இரண்டாவது திருமணம் செய்தது உறுதியானதைத் தொடர்ந்து மாநில அரசு தலையிட்டு, அரசு ஊழியர் நன்னடத்தை விதியை மீறியதாக அவரை பதவி நீக்கம் செய்தது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் ஒருவர், அரசு நன்னடத்தை விதியின் கீழ் அரசிடம் முன் அனுமதி பெற்றாக வேண்டும். வேலை நீக்கம் செய்யப்பட்ட குர்ஷித்,...

“ஏ.கே.70” 0

“ஏ.கே.70”

டெல்லியில் 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றி சாதனைப் படைத்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ராம் லீலா மைதானத்தில் கூடியிருந்த தொண்டர்கள் கையில் பிடித்திருந்த பதாகைகளில் ‘ஏ.கே.70’ என்று எழுதப்பட்டிருந்தன. ‘ஏ.கே.47’ துப்பாக்கியைப்போல் அரவிந்த் கெஜ்ரிவால் 70 இடங்களைப் பிடித்து, பா.ஜ.க. – காங்கிரசை வீழ்த்தியதை இப்படி குறியீடாக தொண்டர்கள் வெளிப்படுத்தினர். டெல்லி நகரத்தின் அடித்தள மக்கள் – ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, அனைத்துப் பிரிவினரும் ‘ஆம் ஆத்மி’யை ஏற்றுக் கொண்டுள்ளனர். 2014 மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 60 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்த பா.ஜ.க., அதில் 57 தொகுதிகளை இப்போது பறி கொடுத்திருக்கிறது. காங்கிரசுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. காங்கிரசுக்கான வாக்கு வங்கி தான் முழுமையாக ‘ஆம் ஆத்மி’க்கு திரும்பியிருக்கிறது என்று பா.ஜ.க. கூறும் சமாதானம் ஏற்கக்கூடியதாகஇல்லை. அந்த வாக்கு வங்கி, ஏன் பா.ஜ.க. பக்கம் திரும்பவில்லை என்ற...

சாதி வெறியர்களுக்கு துணை போகும் காவல்துறை 0

சாதி வெறியர்களுக்கு துணை போகும் காவல்துறை

காவல்துறைகளில் – அந்த மாவட்டத்தின் ஆதிக்க ஜாதிப் பிரிவினரை அதிகாரிகளாக நியமிக்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காரணம், காவல்துறை அதிகாரிகள் ஜாதி உணர்வோடு ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீதான குற்றங்களிலிருந்து தங்கள் ஜாதியைச் சார்ந்த குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கத்துடனேயே செயல்படுகிறார்கள். இந்த உண்மையை உறுதிப்படுத்தும் தகவல்கள் வெளி வந்துள்ளன. தமிழகத்தில் 28 மாவட்டங்களில் ‘எவிடென்°’ அமைப்பு, தலித் மக்கள் மீதான படுகொலை சம்பவங்கள் குறித்து அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதன்படி பெரும்பாலான புகார்களில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத் தினருக்கும் குற்றவாளி களுக்குமிடையே சமரசம் செய்யும் முயற்சிகளையே காவல்துறை மேற் கொண்டிருக்கிறது. கொலைக் குற்றம் குறித்து புகாரைப் பெற்றவுடன், ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகளை காவல்துறை செய்வதுஇல்லை. புகாரைப் பெற்றவுடன் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில்லை. சவப் பரிசோதனை அறிக்கைகயை கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்குவதுஇல்லை. தலித்...

தலையங்கம் – சர்வதேச விசாரணைகளை முடக்க சதியா? 0

தலையங்கம் – சர்வதேச விசாரணைகளை முடக்க சதியா?

எதிர்பார்த்ததுதான் நடக்கிறது; இலங்கையில் இராஜபக்சே வீழ்த்தப்பட்டு, மைத்ரிபாலா சிறிசேனா அதிபராக்கப்பட்டதன் பின்னணியைத்தான் குறிப்பிடுகிறோம். ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலையையும் அவர்களின் நியாயமான தமிழீழ கோரிக்கையையும் அப்படியே மூடி மறைத்து, இறுதிப் பயணத்துக்கு அனுப்புவதற்கு இந்த ஆட்சி மாற்றத்தைப் பயன்படுத்தக் கூடும் என்பதே உலகத் தமிழினத்துக்கு எழுந்த சந்தேகம்; இது உண்மைதான் என்பதை அரசியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசின் “போர்க் குற்றங்கள்” குறித்து (கவனிக்க: இனப்படுகொலை அல்ல) அய்.நா.வின் மனித உரிமைக் குழு எதிர்வரும் மார்ச் மாதம் நடக்கும் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க இருந்தது. இப்போது செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டுவிட்டது. இதை அறிவித்திருப்பவரே அய்.நா.வின் மனித உரிமைக் குழு ஆணையர் சையத் ராய் அல்ஹுசேன்தான். புதிய ஆட்சி இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க முன் வந்திருப்பதால், அவர்களுக்கு அதற்கான காலத்தை வழங்கிட வேண்டும் என்பதே, அவர் கூறியுள்ள காரணம், அய்.நா. மனித உரிமைக்குழுவின் இந்த அறிக்கை “போர்க் குற்றமீறல்”...

கடற்கரையில் காதலர்களுக்கு கழகத்தினர் வாழ்த்து! 0

கடற்கரையில் காதலர்களுக்கு கழகத்தினர் வாழ்த்து!

14.2.2015 அன்று சென்னை மாவட்டம் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதவெறி அமைப்பான இந்து மகாசபை சார்ந்தவர்கள் உலக காதலர் தினத்தை கொச்சைப்படுத்தி நாய்களுக்கு திருமணம் செய்தும், காதலர்களுக்கு கட்டாய தாலி கட்டுவோம் என்பதை எதிர்த்தும், காதலர்களுக்கு இனிப்புகள் வழங்கி, ஜாதி, மதங்களை கடந்து உலக காதலர் தினத்தை கொண்டாடிய நிகழ்வு காலை 10 மணியளவில் சென்னை மெரினா கண்ணகி சிலை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். கழகத்தின் சார்பில் இப்படி ஒரு விழா எடுப்பதை அறிந்த இந்து மகாசபை அமைப்பினர், கண்ணகி சிலை அருகில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை இரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கழகத் தோழர்கள் காதலர்களுக்கு இனிப்பு கொடுத்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். (தோழர் மாங்காடு சேகர் இனிப்பு களுக்கு ஏற்பாடு செய்திருந்தார்) காவல் துறை நேரடியாகவும், மறைமுகமாகவும் காதலர்களை அச்சுறுத்தியதாலும் ஊடகங்கள், காமிராக்களில்...

ஈரோட்டில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய மருத்துவர்களுக்கு கழகம் பாராட்டு! 0

ஈரோட்டில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய மருத்துவர்களுக்கு கழகம் பாராட்டு!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய “பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள்”, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தொகுத்த “காந்தியை சாய்த்த கோட்சேவின் குண்டுகள்”, தஞ்சை பசு கௌதமன் தொகுத்த “ஏஜிகேவின் நினைவுகளும். நிகழ்வுகளும்”, புதுச்சேரி இராவணன் பதிப்பகம் தொகுத்த “பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் (போர்களத்தின் வெற்றிகள்)” ஆகிய நூல்களின் அறிமுக விழா ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பிப்ரவரி 12 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ப.இரத்தினசாமி தலைமையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் பொள்ளாச்சி விஜயராகவன் வரவேற்று உரையாற்றினார். தலைமைக் குழு உறுப்பினர்கள் திருப்பூர் துரைசாமி, கோபி இராம இளங்கோவன், தமிழ் உணர்வாளர், பகீரதன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றி னார்கள். பின்னர், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் குருவரெட்டியூர் நாத்திக ஜோதி, நாமக்கல்...

தலையங்கம் – ‘கோட்சே’யின் குண்டுகள் ஓய்ந்திடவில்லை! 0

தலையங்கம் – ‘கோட்சே’யின் குண்டுகள் ஓய்ந்திடவில்லை!

மகாராஷ்டிராவில் பார்ப்பன மதவெறியின் குண்டுக்கு மற்றொரு போராளி பலியாகிவிட்டார். 83 வயதான மூத்த பொதுவுடைமைத் தோழர் பன்சாரா, தனது துணைவியார் உமாவுடன் கடந்த பிப்.16 அன்று காலை நடைப்பயிற்சியை முடித்துக் கெண்டு இல்லத்துக்குள் நுழைய இருந்த நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த இரு நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பன்சாராவின் உடலுக்குள் 3 குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் கடந்த பிப்.20ஆம் தேதி இந்த முதுபெரும் போராளி வீர மரணத்தை தழுவினார். தலையில் குண்டு பாய்ந்த அவரது துணைவியார் தீவிர சிகிச்சையில் உயிருக்குப் போராடி வருகிறார். சங்பரிவாரங்களின் வரலாற்றுப் புரட்டுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தவர் பன்சாரே. மராட்டிய வீரன் சிவாஜியை இந்துமத வெறி அடையாளத்துக்குள் திணித்துக் கொண்டிருக்கும் சங்பரிவாரங்களை அம்பலப்படுத்தி ஏழை எளிய மக்களின் நலனை நேசித்தவனே சிவாஜி என்று விளக்கி ‘சிவாஜி கோன் சோட்டா?’(யார் இந்த சிவாஜி?) நூலை எழுதியவர். (அன்றைக்கு திராவிடர் இயக்கம்கூட சிவாஜியை இதே கண்ணோட்டத்தில் தான் அணுகியது....