Category: சிறப்பு கட்டுரை

ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி – பி.எஸ். கிருஷ்ணன்

ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி – பி.எஸ். கிருஷ்ணன்

இந்திய சமூகத்தில் ஒடுக்கப்படுகிற மக்களுக்கான இணையற்ற போராளி பி.எஸ்.கிருஷ்ணன். 1956-ல் ஐஏஎஸ் அதிகாரியாக ஆந்திர மாநிலத்தில் பதவியேற்றதிலிருந்து, மத்திய அரசின் செயலர் முதற்கொண்ட பல பதவிகளில் பணியாற்றியபோதும், ஓய்வு பெற்ற பின் மறையும் வரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக ஓயாமல் உழைத்தவர். பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், அந்த சமூகங்களுக் குட்பட்ட மதச் சிறுபான்மையினரின் முன்னேற்றத் துக்காகத் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர். இந்திய அரசு அதிகாரிகளில் பி.எஸ்.கிருஷ்ணனின் வாழ்வும் பணியும் அரிதினும் அரியவை. பார்ப்பன சமூகத்தில் பிறந்த அவர், சாதிகளை மேலிருந்து கீழ் நோக்கி அடுக்கும் பார்ப்பனியத்துக்கு எதிரான போரில் தன்னை உறுதியான சிப்பாயாக இணைத்துக் கொண்டார். எல்லாச் சமூகங்களும் சம இடம் நோக்கி நகர கீழேயுள்ள சமூகங்கள் மேல் நோக்கி வருவதற்கான இடங்களை உருவாக்குவதும் அதற்கான தடைகளை உடைப்பதும் முக்கியம் என்று கருதிச் செயல்பட்டார். “சாதி அமைப்பு இந்தியக் கலாச்சாரத்தின் கொடிய குற்றம்” என்பது...

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை மதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறுபோடவே, குடியுரிமைச் சட்டங்கள்

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை மதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறுபோடவே, குடியுரிமைச் சட்டங்கள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் – குடியுரிமை பதிவேடு – தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை யாற்றினார். அவரது உரையிலிருந்து: நாட்டில் இப்போது பெரிய விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிற பிரச்சனை, குடியுரிமைத் திருத்தச் சட்டப் பிரச்சனை. இந்தப் பிரச்சனை குறித்து, இந்த திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள்; இந்த சட்ட திருத்தத்தைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளாமலே, இதனால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு ஆபத்து வரப்போகிறது என்ற பொய்யான ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள். என்று பாரதிய ஜனதா தரப்பில் வாதாடப்படுகிறது. மற்றொரு பக்கம் இந்த சட்டம் மதத்தின் அடிப்படை யில் நாட்டை பிளவுபடுத்துகிற மிகப்பெரிய ஆபத்தை இழைத்துக் கொண்டிருக்கிறது என்று வெகுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் என்று...

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களுக்கு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி விட்டீர்களா? கழகத்தின் களப் பணிகளை ஆதரவாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, வாரம் தோறும் நடக்கும் நிகழ்வுகளை பெரியாரியல் பார்வையில் பதிவு செய்து வருகிறது. பெரியாரியல் குறித்த ஆழமான கட்டுரைகள், சமூகம், சுற்றுச் சூழல், கலை, இலக்கியம் குறித்த விரிவான கட்டுரைகளுடன் வெளி வருகிறது ‘நிமிர்வோம்’. தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத ஒரு சமுதாய இயக்கம், 2002ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாக வாரந்தோறும் பெரியார் முழக்கத்தையும், மூன்று ஆண்டுகளாக மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ இதழையும் இடைநிறுத்தமின்றி நடத்தி வருகிறது. அரசியல் கட்சிகளால்கூட ஏடு நடத்த முடியாத நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம் இந்தப் பணியை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது. தோழர்கள் இது குறித்த கவலை புரிதலுடன் களமிறங்கினால் ஏடுகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். தோழர்களே! விரைந்து கழக ஏடுகள் தொடர்ந்து...

மக்கள் தொகை பதிவேடு-குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே பா.ஜ.க. வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு

மக்கள் தொகை பதிவேடு-குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே பா.ஜ.க. வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு

குடியுரிமை சட்ட திருத்தம் (CAA)/தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR)/ தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகிய மும்முனை தாக்குதலுக்கு எதிராக  இயக்கங்கள் தொடர் கின்றன. எனினும் மோடி அரசாங்கம்  தனது நிலையை மறுபரிசீலனை செய்ய மறுப்பது மட்டு மல்ல; தினமும் புதிய பொய்களை அள்ளி வீசுவதன் மூலம் போராடுபவர்களை தனிமைப்படுத்த எத்தனிக்கிறது. CAA காரணமாக முஸ்லீம்கள் உட்பட எந்த ஒரு இந்திய குடிமகனின் உரிமையும் பறிபோகாது என மோடி அர சாங்கம் கூறுகிறது. CAA  என்பது தனியாக செயல்படப் போவது இல்லை. NPR மற்றும் NRC உடன் இணைந்து தான் CAA  பயணிக்க ஆட்சி யாளர்கள் திட்டமிடுகின்றனர். NRCயை தேசம் முழுதும் அமலாக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். “தற்போதைக்கு” என்பதன் பொருள், பின்னால் இது வரும் என்பதுதானே! NPR மற்றும் NRCக்கு இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என அடித்து சத்தியம் செய்கின்றனர். எனினும் NPRதான்...

வேத காலத்தில் தொடங்கிய கொலைவெறி தொடர்கிறது ‘ஜெ.என்.யூ’ மீது பார்ப்பனிய முகமூடிகளின் கொடூரத் தாக்குதல்

வேத காலத்தில் தொடங்கிய கொலைவெறி தொடர்கிறது ‘ஜெ.என்.யூ’ மீது பார்ப்பனிய முகமூடிகளின் கொடூரத் தாக்குதல்

புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் முகமூடி அணிந்து, ‘இந்துத்துவ பார்ப்பனிய’ கும்பல், மாணவர் களையும் பேராசிரியர்களையும் பயங்கர ஆயுதங்களுடன் குறி வைத்து தாக்கியிருப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மாணவர் தலைவர்களையும், இஸ்லாமிய மாணவர்களையும் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த  மூர்க்கத்தனமான தாக்குதலில் 34 மாணவர்கள் படுகாயத்துடன் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை மட்டும் வழங்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். விரல்கள் உடைந்து, கடுமையான தலைக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை செய்தால் தாக்குதல் நடத்திய கும்பலுக்கு எதிரான சாட்சியமாகிவிடும் என்று மனசாட்சியே இல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் அரசு  அதிகார மிரட்டலுக்கு பணிந்து செயல்பட்டிருக்கிறது. மாணவர்களைக் காப்பாற்றும் பொறுப்பிலுள்ள துணைவேந்தர் ஜெகதேஷ் குமார், மாணவர்களைக் காப்பாற்றத் தவறிய குற்றத்துக்காக பதவி விலக வேண்டும் என்று, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் கழகங்கள் வலியுறுத்தியுள்ளன. “வளாகத்தில் அமைதிப் பேரணி நடத்தியபோது என்னை குறி வைத்து...

பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை

பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை

தமிழர் வேலை வாய்ப்புகளைப் பறித்த தமிழக அரசின் ஆபத்தான சட்டத்திருத்தம் பள்ளிபாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது தமிழ்நாட்டின் அரசு வேலை வாய்ப்புகளை பிற மாநிலத்தவர் – பிற நாட்டினர் அபகரிக்கும் ஆபத்தான திருத்தச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டி காட்டினார். இந்தியாவில் தற்போது உயர்கல்விக்குச் செல்கிறவர்கள் ( 18 வயது முதல் 23 வயதுவரை) எண்ணிக்கை  சராசரி 25.2% என்று உள்ளது. இதை 2035ற்குள் 50% ஆக உயர்த்தப் போவதாக கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 25% ஆக இருக்கும் போதே 50,000 உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. 2035இல் 50% ஆக உயரும் போது 12,300 கல்லூரிகளாக இருக்குமாம். எவ்வளவு அறிவுப்பூர்வமான...

பள்ளிப் பாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை தமிழர் கல்வி-வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் ‘பார்ப்பன’ ஆட்சி கொள்கைகள்

பள்ளிப் பாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை தமிழர் கல்வி-வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் ‘பார்ப்பன’ ஆட்சி கொள்கைகள்

பள்ளிப்பாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. இரண்டு செய்திகளை முன் வைத்து தான் இந்த பயணம். ஒன்று எங்களுடைய கல்வி உரிமைகளை பறிக்கிறாய், வேலை வாய்ப்புரிமையை பறிக்கிறாய். வேலை வாய்ப்பு உரிமை என்பது, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் நமக்கு உரிமை வேண்டும் என்பது தான். அப்படித் தான் 2014இல் நாம் போராட்டத்தை முன்னெடுத்தோம். அன்பு தனசேகர் (தி.வி.க. தலைமைக் குழு உறுப்பினர்) பல்வேறு தகவல்களை திரட்டிக் கொடுத்தார். அதனடிப்படை யில், பல்வேறு இயக்கங்களை உடனழைத்துக் கொண்டு சாஸ்திரி பவன் எதிரே ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். தமிழ்நாட்டில் இயங்குகிற மத்திய அரசு அலுவலகங்களில், வெளி மாநிலத்து ஆட்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து அந்த போராட்டத்தை நாம் நடத்தினோம். அதைத் தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள் இப்போதும் அது...

2019இல் கழகத்தின் களப் பணிகள்

2019இல் கழகத்தின் களப் பணிகள்

2019ஆம் ஆண்டில் திராவிடர் விடுதலைக் கழகம் ஆற்றிய களப்பணிகளை திரும்பிப் பார்க்கிறது. வழக்கமாக கழகத் தோழர்கள் நடத்தும் பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகள், தமிழர் திருநாள் விழா நிகழ்ச்சிகள், தெருமுனைக் கூட்டங்களைத் தவிர, ஏனைய நிகழ்வுகள், கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வெளி வந்த பதிவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏடுகளுக்கு சந்தாக்கள் சேர்க்கும் பணிகளில் பல மாவட்டங்களில் தோழர்கள் முனைப்புக் காட்டி செயல்பட்டனர். செயல்படாத மாவட்டங்களும் உண்டு. கழகத்தின் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் இதற்காக மாவட்டம் தோறும் கழகப் பொறுப்பாளர்களை சந்தித்து சந்தா சேர்ப்பு இயக்கத்தை விரைவுபடுத்தினர். கழகத்துக்காக சொந்தமாக தலைமைக் கழகம் உருவானது – 2019ஆம் ஆண்டில். இது மிகவும் குறிப்பிடத்தக்கது. மக்களவைக்கான தேர்தல் நடந்ததும் 2019ஆம் ஆண்டில்தான். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற முடிந்தது....

அன்று ‘அவதாரங்களாக’ வந்த பார்ப்பனர்கள் இன்று ‘ஆட்சி அதிகாரங்களாக’ வருகிறார்கள் ‘குடியுரிமை’ சட்டத்தின் பின்னணி

அன்று ‘அவதாரங்களாக’ வந்த பார்ப்பனர்கள் இன்று ‘ஆட்சி அதிகாரங்களாக’ வருகிறார்கள் ‘குடியுரிமை’ சட்டத்தின் பின்னணி

பார்ப்பனர் – திராவிடர் போராட்டம் ரொம்பவும் வளர்ந்துவிட்டது; பார்ப்பனர்களும் துணிந்துவிட்டார்கள்; துணியக் காரணமும் இல்லாமல் இல்லை. இன்று ஆட்சி அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறது. அநேகமாக அவர்கள் ஆதிக்கத்திற்கு இதுவே கடைசி காலமாகவும் இருக்கக் கூடும். இன்று தவறின், நாளை ஆட்சி யார் கைக்குச் செல்லுமோ என்று அஞ்சுகிறார்கள். ஆகவே ஆட்சி தம் ஆதிக்கத்தில் உள்ள போதே நம்மீது பாய்ந்து தம் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். –  பெரியார், ‘விடுதலை’ 19.03.1948 இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைத்து வேத பார்ப்பன புரோகிதக் கும்பல் இந்துக்களை அணி திரட்டுகிறது. இதுவே ‘அவாளின்’ நீண்டகால தந்திரம். பார்ப்பனரல்லாத ‘இந்து’க்களை ‘வர்ணம்-ஜாதி’களாக்கி, ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ என்று இழிவு படுத்தும் பார்ப்பனர்கள், தங்களின் சமூக-புரோகித மேலாதிக்கத்தை வெகு ‘இந்து’ மக்களிடம் மறைப்பதற்கு ஓர் எதிரியைக் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. அதற்கு ‘இஸ்லாமியர்கள்’ பலிகடாவாக்கப்படுகிறார்கள். காஷ்மீரில் 370ஆவது பிரிவை நீக்கி இஸ்லாமியர் களின் சிறப்புரிமையை பறித்தார்கள். அயோத்தியில் 400 ஆண்டுகளுக்கு மேலாக...

அரசியல் கைதிகளைக் கிரிமினல் கைதிகளாக நடத்தியது, அன்றைய ஆட்சி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் நடத்தியது ஏன்? (2) கொளத்தூர் மணி

அரசியல் கைதிகளைக் கிரிமினல் கைதிகளாக நடத்தியது, அன்றைய ஆட்சி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் நடத்தியது ஏன்? (2) கொளத்தூர் மணி

அரசியல் சட்ட எரிப்பு நாளில் காணொளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி தஞ்சை மாநாட்டில் பெரியார் ஜாதி ஒழிப்பைப் பற்றி மிக ஆவேசமாகப் பேசுகிறார். தன்னுடைய தொண்டர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஜாதியை ஒழிப்பதற்கு ஆயிரம் பாப்பனரைக் கொன்றால்தான் முடியும் என்றால் கொல்லத் தயாராக இருக்கிறீர்களா? என்று கேள்வியெழுப்புகிறார். மக்கள் ஆரவாரித்து உடன்பாடான பதிலைக் கொடுக்கிறார்கள். அந்த மாநாட்டில் தான் ஜாதியைப் பாதுகாக்கிற இந்தச் சட்டப் பிரிவுகளை நீக்கவில்லை யென்றால் வருகிற நவம்பர் 26 நாளன்று அரசியல் சட்டத்தில் ஜாதியை பாதுகாக்கும் பிரிவுகளை எரிப்போம் என்று அறிவிக்கிறார். ஏன் நவம்பர்26ஐ அவர் தேர்ந்தெடுத்தார் என்றால், அரசியல் சட்ட வரைவு  எழுதப்பட்டு அதை நவம்பர் 25 அன்று நாடாளுமன்றத்தில்  நம்முடைய பெரும் மதிப்பிற்குரிய அம்பேத்கர் அவர்களால் முன் வைக்கப்பட்டு அதற்கான ஒப்புதலை கொடுக்குமாறு நாடாளுமன்றத்தைக்  கோருகிறார்; 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் தான் அந்த...

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்? கொளத்தூர் மணி

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்? கொளத்தூர் மணி

அரசியல் சட்ட எரிப்பு நாளில் காணொளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிக்கு சமூக மேம்பாட்டிற்கு காரணமாக இருந்த தந்தை பெரியார் எடுத்த போராட்டங்களில் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏறத்தாழ நாம் அறிய உலகில் எந்த நாட்டிலும் , அந்த நாட்டின் போராட்டங்களில் அரசியல் சட்டம் எரித்ததாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. அப்படி ஒரு போராட்டத்தை பெரியார் முன்னெடுத்தார். அதற்கு என்ன காரணம் என்பதையும் அதைநோக்கி பெரியார் நகர்வதற்கான சூழலையும் சற்று நாம் பார்த்து விடுவது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இந்தியாவில் பெரியார் பொது வாழ்க்கைக்கு வந்த பொழுது ஈரோடு அளவில் இருந்த பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு வந்து அதன் தலைவராக பணியாற்றிய ஆறாண்டு காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் போராடு பவர்களைப் பற்றி ஒரு கருத்து உருவாகிறது. இந்திய விடுதலை போராட்டம் என்பதே...

இலாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கும், மோடி ஆட்சி

இலாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கும், மோடி ஆட்சி

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், ஷிப்பிங் கார்ப்பரேசன், கன்டெய்னர் கார்ப்பரேசன், தெரி நீர்மின் உற்பத்தி கார்ப்பரேசன், வடகிழக்கு மின்சக்தி கார்ப்பரேசன் ஆகியவற்றைத் தனியாருக்கு விற்க முடிவெடுத் துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். இவையனைத்தும் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள்.  மத்திய அரசு எதிர் கொள்ளும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப் பதற்காகத் தான் இந்த முடிவு என்கிறார் அமைச்சர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை பொதுத்துறை நிறுவனங்கள். அவற்றைத்  தனியாருக்கு விற்பது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமே பாதிக்கப்படுவதில் போய்த்தான் முடியும். வளர்ச்சியின் அடித்தளம் பொதுவாக கச்சா எண்ணெய், சுத்திகரிப்பு, எரிவாயு, உருக்கு, மின்சாரம், நிலக்கரி, சிமெண்ட், உரம் ஆகிய 8 தொ ழில்களை பொருளாதாரத்தின் முதன்மையான தொழில்கள் என்று அரசு அடையாளப்படுத்துகிறது. இதன் பொருள்,  ஒட்டுமொத்தத் தொழில் வளர்ச்சிக்கு இவை அடிப்படையானவை என்பதே.  இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள்தான் கடந்த 72 ஆண்டுகளில் நமது தேசம் அடைந்துள்ள வளர்ச்சிக்கு அடித்தளமாக...

ஃபாத்திமா – பார்ப்பனரல்லாதார் மீதான வரலாற்றுக் கொடூரங்களின் தொடர்ச்சி  – கீற்று நந்தன்

ஃபாத்திமா – பார்ப்பனரல்லாதார் மீதான வரலாற்றுக் கொடூரங்களின் தொடர்ச்சி – கீற்று நந்தன்

அய்.அய்.டி. நிறுவனங்களில் நடந்தேறி வரும் பார்ப்பனியக் கொடூரங்கள் குறித்து திராவிடர் இயக்கங்களும், முற்போக்கு சக்திகளும் தொடர்ச்சியாகப் பேசியும், போராடியும் வந்துள்ளனர். ஆனால், அவற்றின்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முந்தைய காங்கிரஸ் அரசும், தற்போதைய பாஜக அரசும் துணிந்ததில்லை.  அய்.அய்.டி. என்றில்லை, நடுவண் அரசு நிறுவனங்கள், கோயில்கள், நீதிமன்றங்களில் பார்ப்பனிய மேலாண்மையை மறைமுகமாக அங்கீகரித்தே நடுவண் அரசுகள் சுதந்திர காலம் தொட்டு இயங்கி வந்திருக் கின்றன. பார்ப்பனரல்லாதார் மீது பார்ப்பனியம் தொடுக்கும் கொடுமைகளின் வரலாற்றுத் தொடர்ச்சியாகத் தான் ஃபாத்திமாவின் தற்கொலையையும் பார்க்க வேண்டியிருக்கிறது. நந்தன், வள்ளலாரைக் கொன்றுவிட்டு, ‘ஜோதியில் அய்க்கியமானார்கள்’ என்று பொய்யுரைத்த பார்ப்பனியம்தான், இன்று மாணவர்களின் தற்கொலையை ‘பாடத் திட்டங்களின் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என நாக்கூசாமல் கூறுகிறது. கடந்த 2019, நவம்பர் 9ஆம் தேதி சென்னை அய்.அய்.டி.யில் விடுதியில் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு சுதர்சன் பத்மநாபன் என்ற...

மருத்துவப் பட்டம் மேல் பட்டப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பறி போகிறது

மருத்துவப் பட்டம் மேல் பட்டப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பறி போகிறது

மருத்துவப் பட்டமேற்படிப்பிற்கான அகில இந்திய NEET PG 2020ஆம் ஆண்டிற்கான தேர்வில், அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இல்லை… நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ பட்டமேற் படிப்பிற்கான இடங்களுக்கு (MD, MS) அகில இந்திய நீட் பீஜி தேர்வு ஜனவரி மாதம் மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில் மொத்தமுள்ள 30,774 இடங்களில் 50% அதாவது, 15,387 இடங்களுக்கு மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இந்த 15,387 இடங்களில் இப்போதுள்ள இடஒதுக்கீடு முறையில் 50 சதவீதம் (7,693 இடங்கள்) பொதுப்பிரிவிலும், 22.5 சதவீதம் (3,462 இடங்கள்) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், 27 சதவீதம் (4,155 இடங்கள்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்க வேண்டும். ஆனால், இந்த அறிவிக்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு OBC மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும்,...

அய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது?

அய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது?

கேரளாவிலிருந்து சென்னை அய்.அய்.டி.க்கு படிக்க வந்த பாத்திமா லத்தீப் என்ற இஸ்லாமிய மாணவி, அய்.அய்.டி. விடுதியில் நவம்பர் 9ஆம் தேதி தூக்கிட்டு உயிரை மாய்த்திருக்கிறார். மத ரீதியாகத் தான் துன்புறுத்தப்பட்டதால் இந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். தனது அலைபேசியில் தன்னை துன்புறுத்தி, மதிப்பெண்களைக் குறைத்த சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்கள் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். கேரள முதலமைச்சர் இப்பிரச்சினையை தமிழக முதல்வரிடம் கொண்டு வர, தமிழகக் காவல்துறை சி.பி.சி.அய்.டி. துறை வழியாக விசாரணை நடத்தி வருகிறது. கோட்டூர்புரம் காவல்துறை மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அய்.அய்.டி. நிர்வாகத்தின் குரலையே எதிரொலித்து வழக்கை மூடி மறைக்க முயற்சித்தது. இப்போது கேரள மாநில முதல்வர் தலையீட்டால் வழக்கு விசாரணையில் புதிய திருப்பம் உருவாகி யிருக்கிறது. இந்தப் பின்னணியில் அய்.அய்.டி. வரலாற்றை மீண்டும் சுருக்கமாக நினைவுகூர வேண்டியுள்ளது. சென்னை அய்.அய்.டி.யில், தலித், பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மீது திணிக்கப்படும் பாகுபாடு களை எதிர்த்து 1998இல்...

தமிழர் – சிங்களர் முரண்பாடு கூர்மையடைகிறது இலங்கை தேர்தல் முடிவுகள்: உணர்த்தும் உண்மைகள்

தமிழர் – சிங்களர் முரண்பாடு கூர்மையடைகிறது இலங்கை தேர்தல் முடிவுகள்: உணர்த்தும் உண்மைகள்

இலங்கை தேர்தலில் சிங்கள பெரும் பான்மையே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (இலங்கை மக்கள் முன்னணி) வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 52.5 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ராஜபக்சேயின் சகோதரர் இவர். இலங்கை அரசியல் சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியில் போட்டியிட முடியாது என்பதால் அவர் சார்பாக அவரது தம்பி நிறுத்தப்பட்டார். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்திய இராணுவம் அங்கே அமைதிப் படை என்ற பெயரில் சென்றபோது இந்திய இராணுவத்தை வெளியேற உத்தரவிட்டவர் அப்போது ஜெயவர்த்தனேயைத் தொடர்ந்து அதிபரான பிரேமதாசா. பிரேமதாசா விடுதலைப் புலிகள் ஒப்பந்தம் ஒன்றும் அப்போது உருவானது. சில மாதங்களில் பிரேமதாசா குண்டு வெடிப்பில் பலியானார். இலங்கையில் இப்போது ஆளும் கட்சியான அய்க்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா போட்டியிட்டார். வடக்கு – கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களும் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்து,...

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை

அக். 16இல் சென்னை அம்பத்தூரில் நிகழ்த்திய உரை: சென்ற இதழ் தொடர்ச்சி ஏதோ பெரியார் தான் சூத்திரன், சூத்திரன் என்று சொல்லிக் கொண்டுள்ளார் என்று சொன்னார்கள். ஆனால் 1996 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பிலேயே சூத்திரன் என்று கூறுகிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை முடக்கு வதாகவே பாஜ.க. ஆட்சி கல்விக் கொள்கை இருப்பதை ஆதாரங்களுடன் விளக்கினார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. ஆரியர்கள் வடக்கில்தான் படையெடுத்து வந்தார்கள். ஆனால் தெற்கில் பண்பாட்டுப் படையெடுப்பைத்தான் நடத்தினார்கள். அந்த பண்பாட்டு படையெடுப்புக்கு எதிர்ப்பாக பண்பாட்டுப் புரட்சியை பெரியார் செய்தார். பார்ப்பன எதிர்ப்பு என்பது பண்பாட்டு எதிர்ப்பு. பார்ப்பன பண்பாடு என்பது ஒவ்வொரு துறைதோறும் நம்மை அடிமைப்படுத்திய, கேவலப்படுத்திய பண்பாடு. நாம் கட்டிய கோயிலில் நமக்கு வழிபாடு நடத்தக்கூட உரிமை இல்லை என்று சொன்னார்கள். பெரியார் நடத்திய கடைசிப் போராட்டம் இதற்காகத்தான். பெரியார் நடத்திய போராட்டங்களில் நாத்திகப் போராட்டங்கள் இரண்டு மட்டும்தான். விநாயகர் சிலையை உடைத்தார், இராமர்...

உச்சநீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்

உச்சநீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்

அயோத்திப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொது அமைதி கருதி வரவேற்றாலும், தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் (நவம். 11, 2019) தலையங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. அந்த ஏடு எழுப்பியுள்ள கேள்விகளின் சுருக்கமான தமிழ் வடிவம்: 1949ஆம் ஆண்டு மசூதிக்குள் இராமன், சீதை சிலைகள் போடப்பட்டதையும் மசூதியை இடித்ததையும் சட்ட விரோத நடவடிக்கைகளாக தீர்ப்பு கூறியிருப்பது மதச்சார்பின்மை கொள்கைக்கு உளவியலாக வலுசேர்க்கிறது என்றாலும் உச்சநீதிமன்றம் இராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதித்ததோடு இந்துக்களுக்கே அந்த இடம் உரிமையானது என்று தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தாலும் தீர்ப்பு அதை நியாயப்படுத்தியிருக்கிறது. நிலத்துக்கான உரிமை கோரி இரண்டு சமூகங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. வழக்கில் இணைத்துக் கொண்ட ஒரு சமூகம், திட்டமிட்டு வன்முறைகளை உருவாக்கியது. மசூதியை இடித்தது விசுவ இந்து பரிஷத். இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது பாரதிய ஜனதா. இந்த வன்முறையை அரங்கேற்றிய பிரிவு 1989ஆம் ஆண்டு ‘குழந்தை...

உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா?

உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா?

உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்திருக்கலாம் என்பதற்கு தொல்லியல் துறை அறிக்கையை ஒரு ஆவணமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. தொல்லியல் அறிக்கை ஏற்கனவே ஆய்வாளர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளரும் பல வரலாற்று நூல்களை எழுதியவருமான டி.என். ஜா, இந்த தொல்பொருள் ஆய்வின் நம்பகத் தன்மைக் குறித்து ‘தி வயர்’ இணைய ஏட்டுக்கு ஏற்கனவே பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை. அயோத்தியில் இந்த அகழ்வாய்வை நடத்தியபோது தொல்பொருள் துறையின் இயக்குனராக இருந்தவர் பி.பி. லால். அவர் வெளியிட்ட முதல் ஆய்வு அ றிக்கையில் பாபர் மசூதிக்கு கீழே நடத்தப்பட்ட அகழ்வாய்வில் “தூண் தளங்கள்” இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. (கோயில் இருந்திருக்கலாம் என்பதற்கு இந்தத் ‘தூண் தளங்களே’ ஆதாரம் என்று சங்பரிவாரங்கள் கூறி வந்தன) பிறகு 1989ஆம் ஆண்டில் ‘இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தில்’ (அய்.சி.எச்.ஆர்.) இது குறித்து அவர் ஒரு கட்டுரை...

நமது நெறி திருக்குறள்; நமது மதம் – மனித தர்மம் திருக்குறள்: பெரியார் கருத்து என்ன?

நமது நெறி திருக்குறள்; நமது மதம் – மனித தர்மம் திருக்குறள்: பெரியார் கருத்து என்ன?

பெரியார் திருக்குறளையே கடுமையாகக் கண்டித்தார் என்று பா.ஜ.க. – சங். பரிவாரங்கள் பேசி வருவதற்கு மறுப்பாக பெரியாரின் திருக்குறள் பற்றிய கருத்துகளின் ஒரு தொகுப்பு. ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவர்க்கும் சிறப்பாக இந்த நாட்டுப் பழங்குடி மக்களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் அருளிய ‘திருக்குறள்’ ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும் நெறிக்கும் நாகரிகத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல விவரங்களை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை, திராவிடரல்லாத மக்களுக்கு உணரச் செய்ய முடிகிறது. நமது சரித்திரத்திற்கும் நாகரிகத்திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும் பல காவியங்களி லிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியு மாயினும் அவை பெரும்பாலும் பண்டிதர் களுக்குத் தான் புரியும். அவர்களுக்குத்தான் பயன்படும். ஆனால், திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக் குரிய தக்க ஆதாரமாய் அமைந்திருக்கிறது. திருக்குறள் ‘தெய்வீகத் தன்மை பொருந்திய’ ஒருவரால் எழுதப்பட்டது என்பதாகவோ அல்லது...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி – திரிபுவாதிகளுக்கு பதில் திருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி – திரிபுவாதிகளுக்கு பதில் திருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்

யாரெல்லாம் புறஞ்சேரியில் தங்கி இருந்தார்கள் என சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பாட்டு பாடும் பார்ப்பனர்கள் எல்லாம்  ஜாதியில் இருந்து தள்ளி வைக்கப்பட்டனர். பெரியார் குறளை எதிர்த்தார் என்று திரிபுவாதம் பேசும் பா.ஜ.க. – சங் பரிவாரங்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் விளக்கப் பொதுக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை சரியான பதில் அளித்திருக்கிறது. வள்ளுவர் – ஓர் இந்து; திருக்குறள் – ஓர் இந்து மத நூல் என்று இப்போது பா.ஜ.க.வினர் பேசுவதற்கு முன்பாகவே அக். 16இல் சென்னை அம்பத்தூரில் நிகழ்த்திய உரை: பெரியாரை தமிழின விரோதி, தமிழ் மொழி விரோதி, தமிழ் இலக்கிய விரோதி என்று ஒரு கூட்டம் ஒருபக்கம் பேசிக் கொண்டிருக்கிற வேளையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டைப் பற்றி, அதனுடைய விளக்கக் கூட்டமாக இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 1949இல் பொங்கலை ஒட்டி நடந்த 2 நாள் திருக்குறள்...

இந்தியாவில் ஆயுதப் போராட்டம் வழியாக ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கத் துடித்தவர் ஹெட்கேவர்

இந்தியாவில் ஆயுதப் போராட்டம் வழியாக ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கத் துடித்தவர் ஹெட்கேவர்

ஹெட்கேவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று பா.ஜ.க.வினர் பேசுவது உண்மைகளைத் திரிப்பதாகும். ஹெட்கேவர் வாழ்க்கை வரலாற்று விவகாரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தால், அது ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டைப் பிரதி பலிக்கும் என்பதால், நாமும் அந்த ஆராய்ச்சியில் சற்று ஆழமாக நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். மெட்ரிகுலேஷன் தேர்வை நாக்பூரில் முடித்து விட்டு மருத்துவப் படிப்பு படிக்க கல்கத்தா போகிறார்! இந்து வெறியரான  மூஞ்சே என்ற பார்ப்பனர்தான் அவருக்கு உதவிபுரிகிறார். வன்முறை இயக்கங்களில் மிகவும் ஈர்க்கப்பட்ட ஹெட்கேவர், கல்கத்தாவில் போய் படித்தால், இத்தகைய அமைப்புகளோடு தொடர்பு கொள்ள முடியும் என்று விரும்பினார். ஞானத் தந்தைகளாக அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் திலகரும், சிவாஜியும்தான். 1910ஆம் ஆண்டிலிருந்து 1915ஆம் ஆண்டுவரை கல்கத்தாவில் மருத்துவக்கல்வி பயின்ற இவர் தங்கிய விடுதி அப்போது மாணவர்களின் அரசியல் அரங்கங் களாக செயல்பட்டன. பல வன்முறை இயக்கங்கள், புரட்சி இயக்கங்களைச் சார்ந்தவர் களும் அங்கு வருவது உண்டு. இந்த கல்கத்தா வாழ்க்கைப்பற்றி, ஹெட்கேவரின் வாழ்க்கை...

இராமானுஜர் சீர்திருத்தம் – நாமத்தை பூணூலை காப்பாற்றியதே தவிர சமத்துவத்தை உண்டாக்கியதா? பெரியார்

நிதானமும், சாந்தமும், பொறுமையும், கட்டுப்பாடும் கொண்டு வெறுப்பில்லாமலும், துவேஷமில்லாமலும் நல்ல வார்த்தையும், கூட்டுறவிலும், நயமாகவும், கெஞ்சியும் நமது நாட்டில் எத்தனை காலமாக (சீர்திருத்தம்) செய்து வந்திருக்கிறது? இதுவரை செய்து வந்த சீர்திருத்தங்கள் என்ன ஆயிற்று? இன்னும் எத்தனை நாளைக்குப் பரீட்சைப் பார்ப்பது என்கிற விஷயங்களை யோசித்தால் மேற்கண்ட வார்த்தைகள் சீர்திருத்தத்திற்கு விரோதிகளா யுள்ளவர்களிடம் மரியாதை பெறுவதற்காகவும், தங்களது சொந்த புகழுக்காகவும், பெருமைக் காகவும் பேசப்பட்ட வார்த்தைகள் அல்லது பலவீனத்தின் தோற்றம் என்று ஏற்படுமே ஒழிய வேறொன்றுமே இருக்காது. சிலர் இம் மாதிரியான நமது அபிப்பிராயத்திற்கு விரோத மாய் சில பெரியோர்களான விவேகானந்தர், காந்தி முதலியோர்களுடைய வார்த்தைகளை எடுத்துக் காட்டுவார்கள். இம்மாதிரியான அப்பெரியோர்களுடைய வார்த்தைக்கு நான் முற்றும் முரண்பட்டவன் என்பதை நான் கண்ணியமாய் ஒப்புக் கொள்ளுகிறேன். காரணம், அவ்வார்த்தைகள் சொன்ன பெரியோர்களை சுவாமியாகவும், மகாத்மாவாகவும் மக்கள் கொண்டாடினார்கள்; கொண் டாடுகிறார்கள்; படம் வைத்து பூசிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவ்வார்த்தைகளால் சீர்திருத்தம் வேண்டிய...

கீழடி: வெளிச்சத்துக்கு வரும் ஆய்வுகள்

கீழடி ஆய்வை முடித்துவிட்டு ஒரு பக்க அறிக்கையோடு விடைபெற்றது மத்திய தொல்லியல் துறை. தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்விற்குப் பிறகே உண்மைகள் வெளிவரத் தொடங்கின. உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது, சென்ற வாரத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி தொடர்பான அறிக்கை. “கீழடியில் கிடைத்த கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளம். எழுத்தறிவும், சிறந்த கைவினைத் தொழில்நுட்பமும், உள்நாடு மற்றும் வெளிநாடு வணிக வளமும் கொண்ட இந்நாகரிகத்தின் காலம் கிமு 600” என்று அது கூறுகிறது. அதாவது, கீழடியின் வயது 2600 என்று கூறும் அந்த அறிக்கை, அந்தக் கால கட்டத் திலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததையும் விரிவான ஆதாரங்களோடு நிறுவ முயல்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கண்ட முயற்சியின் விளைவு இது என்பதையும், கீழடியை அணுகும் விதத்தில் இனியேனும் மத்திய அரசு சிறப்புக் கவனம் அளிக்க...

பெரியாரை விமர்சிக்கும் ‘தமிழ் தேசியர்’களின் குழப்பம் ப. திருமாவேலன்

மறைமலை அடிகள், பாவாணர், இலக்குவனார் முன் வைத்த கருத்துகளைப் படித்துவிட்டு பிறகு பெரியாரிய எதிர்ப்பாளர்கள் பேச வரட்டும். தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர்களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க் கைக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டிருக்கின்ற பழைய ராஜராஜ சோழன்கள், பழைய பலவேட்டு அறிஞர்கள், தங்களின் இழந்த ஜமீன்களை மீண்டும் மீட்பதற்காக இற்றுப்போன தங்களுடைய ஜரிகைக் குல்லாக்களோடு எத்தனை நாடகங்களைப் போட்டாலும், தமிழ்த் தேசியத்தினுடைய இயக்கம் என்பதை மீட்டெடுக்க...

மாநிலங்களுக்கான நிதி உரிமை: நடுவண் ஆட்சி பறிக்கிறது

மாநிலங்களுக்கான நிதி உரிமை: நடுவண் ஆட்சி பறிக்கிறது

பாஜக தலைமையிலான மத்திய அரசு ‘ஒரே நாடு – ஒரே சந்தை – ஒரே வரி’ என்பதை படிப்படியாக செயல்படுத்தியது போலவே, ‘ஒரே நாடு – ஒரே ஆட்சி’ என்ற நிலைக்கும் திட்டமிடுகிறதோ என்று தோன்றுகிறது. அதாவது, மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே மக்கள் சார்ந்த அத்தனை விஷயங்களையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாகவே இருக்கின்றன. இதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்களை நீர்த்துப் போக திட்டமிடுகிறது. மக்களுக்குத் தேவையான அனைத்தும் மத்திய அரசு நினைத்தால்தான் முடியும் என்று நம்பவைக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. இந்தியா கூட்டுறவு- கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் இயங்கிவருகிறது. ஒவ்வொரு மாநிலமும் கலாச்சாரம், சந்தை, மக்கள் தொகை என தனித்துவமாக விளங்கிவருகின்றன. அந்தந்த மாநிலத்துக்குத் தேவையானதை மாநில அரசுகள்தான் நிர்வகிக்கவும் தீர்மானிக்கவும் முடியும். அதுதான் சரியானதும் கூட. ஆனால், எல்லா வற்றையும் மத்தியில் இருந்தே கட்டுப்படுத்தவும் செயல்படுத்தவும் அரசு திட்டமிடுகிறது. கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு 15ஆவது...

தீபாவளி: பகுத்தறிவுக்கு எதிரானது

தீபாவளி: பகுத்தறிவுக்கு எதிரானது

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து – புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000-த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் – அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது...

தமிழகத்தில் இரயில் பெட்டி தொழிற்சாலை தனியார் துறைக்குப் போகிறது

தமிழகத்தில் இரயில் பெட்டி தொழிற்சாலை தனியார் துறைக்குப் போகிறது

இரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்), சென்னையில் இருக்கிறது. இங்கே, கடந்த சில வாரங்களாக அமைதியற்றச் சூழல் நிலவுகிறது. கார்ப்பரேஷனாக மாற்றப் போகிறோம் என்ற பெயரில் தனியார் மயமாக்குவதற்கான முயற்சி நடப்பதாக தி.மு.க. அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வின் தொழிற் சங்கங்கள் உட்பட அத்தனை தொழிற் சங்கங்களும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன. தனியார் ரயில்களுக்கு அனுமதி அளிப்பது, ஐ.சி.எஃப் உள்ளிட்ட ரயில்வேயின் முக்கிய உற்பத்திக் கேந்திரங்களை கார்ப்பரேஷனாக மாற்றுவது என்ற முடிவானது, மத்திய அரசின் 100 நாள் செயல்திட்டத்தின் முக்கியமான அம்சம். அதன்படி, டெல்லி – லக்னோ இடையே தனியார் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கி யுள்ளது. அடுத்து, டெல்லி – அகமதாபாத் இடையே தனியார் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளது. இதையடுத்து உற்பத்திக் கேந்திரங்களை கார்ப்ப ரேஷனாக மாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருவதாகவும் தகவல் வருவதால், பதறிக்கிடக்கிறார்கள் தொழிலாளர்கள். ‘‘தமிழகத்தின் பெருமையை தனியாருக்குத் தாரைவார்க்கத் துடிக்கிறார்கள்!’’ மேற்கு...

காந்தி 150ஆவது பிறந்த நாளிலும்  7 தமிழர்கள் விடுதலைக்குத் தடை ஏன்?

காந்தி 150ஆவது பிறந்த நாளிலும் 7 தமிழர்கள் விடுதலைக்குத் தடை ஏன்?

பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி சுமார் 400 நாட்கள் ஓடிவிட்டன. அதுவும் உச்சநீதிமன்றம் தமிழக அமைச்சரவைக்கு  அரசியல் சட்டம் வழங்கியுள்ள 161ஆவது பிரிவு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று தெளிவாக்கிய பிறகு அமைச்சரவை எடுத்த முடிவு அது. அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் உடன்பட வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாக விளக்குகிறது. தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, தன்னிச்சையாக ராஜீவ் கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிட அனுமதித்தபோது சென்னை உயர்நீதிமன்றம் ஆளுநருக்கான உரிமைஅமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில் செயல்படுவது மட்டுமே என்று தெளிவுபடுத்தி ஆளுநரின் முடிவை நிறுத்தியது. அதற்குப் பிறகு தி.மு.க. அமைச்சரவை கூடி நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தபோது ஆளுநர் பாத்திமா பீவி அதற்கு ஒப்புதல் வழங்கினாரே தவிர, தற்போது ஆளுநர் செய்ததுபோல் கிடப்பில் போடவில்லை. காந்தியின் 150ஆவது பிறந்த நாளில் 617 சிறைவாசிகளை விடுதலை செய்ய...

அண்ணா பல்கலையில் ‘பகவத் கீதை’ ஏன் நுழைகிறது?

அண்ணா பல்கலையில் ‘பகவத் கீதை’ ஏன் நுழைகிறது?

இந்திய தத்துவத்தில் கருத்து முதல்வாதம் என்பது வெறும் ஆன்மீக வாதமாக மட்டும் இருக்கவில்லை. மாறாக சமூகத்தில் நிலவிய பிற்போக்கு கருத்துகளை, குறிப்பாக வர்ணா சிரமத்தை-கருத்து முதல்வாதம் வலுவாக தூக்கிப் பிடித்தது. வர்ணாசிரமத்தை -சமூகத்தின் பிரிக்க முடியாத அம்ச மாக நிலைநாட்டிட கருத்து முதல்வாதமும் ஏற்றத்தாழ்வான சமூகக் கோட்பாடுகளை முன்வைத்த சட்டக் கோட்பாடுக ளான மனுஸ்மிருதியும் அர்த்தசாஸ்திரமும் ஒன்றுக் கொன்று துணை போயின. அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு “தத்துவம்” என்ற பெயரில் ஒரு பாடத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதனை எடப்பாடி அரசாங்கம் அனுமதித்துள்ளது என்பது தெளிவு. திராவிட இயக்கத்தின் ஒரு பகுதி எனும் தகுதியை அ.தி.மு.க. வெகு நாட்களாகவே இழந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் துணை அமைப்பாக மாற்றிவிடுவார்களோ என கருதும் அளவிற்கு இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் கூட்டணியின் சரணாகதி வேகமாக அரங்கேறி வருகிறது. இந்த சரணாகதியின் தற்போதைய நிகழ்வுதான்...

ஆர்.எஸ்.எஸ். ‘தேச பக்தி’ இயக்கமா? முகத்திரையை கிழிக்கும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்

ஆர்.எஸ்.எஸ். ‘தேச பக்தி’ இயக்கமா? முகத்திரையை கிழிக்கும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்

மொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமைகளைப் பேசுவதே ‘தேச விரோதம்’ – ‘ஆன்டி நேஷனல்’ என்று பார்ப்பனர்கள் கூப்பாடு போடு கிறார்கள். இவர்கள் பேசும் ‘தேசபக்தி’ வரையறைக்குள் ஆர்.எஸ்.எஸ். வருகிறதா? மொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமைகளைப் பேசினாலே ‘தேச விரோதிகள்’ – ‘ஆன்டி இண்டியன்’ என்று எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் ஓலமிடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். மட்டுமே ‘தேச பக்தி’ கொண்ட அமைப்பு என்கிறார்கள். நாங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். என்ற ‘தேசபக்த’ நெருப்பில் புடம் போட்டு வந்தவர்கள் என்று பூணூலை உருவுகிறார்கள். உண்மையில் இவர்கள் பேசுகிற தேசபக்தி என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கும் இந்திய தேசியத்துக்கும் தேசியக் கொடிக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பதுதான். சரி, அந்த அளவுகோலின்படியாவது இவர்கள் தேச பக்தர்கள் தானா? இல்லை என்பதே இதற்கான பதில். இது குறித்து ஆய்வாளரும் எழுத்தாளருமான ஏ.ஜி.நூரானி ‘டான்’ இதழில் எழுதிய கட்டுரையை ‘டெக்கான் குரோனிக்கல்’ ஏடு (செப். 29,...

அக்.2 ஆர்ப்பாட்டத்துக்கு தயாராவீர்! தோழர்களே!

அக்.2 ஆர்ப்பாட்டத்துக்கு தயாராவீர்! தோழர்களே!

அனைவருக்குமான கல்வி, சமத்துவத்துக்கான கல்வி பற்றிப் பேசியது எல்லாம் போதும்; சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே அதையே பேச வேண்டுமா? அதைவிட தரமான கல்விதான் இப்போது முக்கியம் என்கிறது – புதிய கல்விக் கொள்கை. போதுமான மாணவர்கள் வராத பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு வேறு பள்ளிகளுடன் இணைத்து விட வேண்டும் என்கிறது புதிய கல்விக் கொள்கை. இராஜகோபா லாச்சாரி பள்ளிகளை மூடிய அதே காலத்துக்கு மீண்டும் இழுத்துச் செல்கிறது, இந்தக் கல்விக் கொள்கை. 5ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு நடத்த வேண்டுமாம்; தேர்ச்சி பெறும் வரை அதே வகுப்பில் குழந்தை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமாம்; இந்தத் தேர்வுக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமாம்; இப்படிக் கூறுகிறது, இந்தக் கல்விக் கொள்கை. 1953இல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிச் சிறுவர்கள், பிற்பகலில் அரை நேரம் அவரவர் பெற்றோர் செய்த குலத் தொழிலை செய்ய உத்தவிட்டார் இராஜ கோபாலாச்சாரி. 5ஆம் வகுப்போடு மாணவர்களைப் பள்ளியிலிருந்து...

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?

உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற ஆயுதத்தை வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED- organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்து கொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்? பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை...

பணமதிப்பு நீக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது பொருhளதார பின்னடைவு

இந்தியப் பொருளாதார சூழல் தற்போது எப்படி இருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பல முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றன. நுகர்வு குறைந்துள்ளது. உற்பத்தி அதள பாதாளத்தில். தனியார் முதலீடு முற்றிலும் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் பொருளாதாரத்தை மீட்க பல சலுகைகளை, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், அடிப்படையில் ஒரு விஷயத்தை அரசு நினைவில்கொள்ள மறுக்கிறதோ என்று தோன்றுகிறது. ஜார்கண்டில் 40 வயதான விவசாயி ஒருவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை நம்பி தன்னுடைய விவசாய நிலத்தில் கிணறு வெட்டினார். இப்போது கிணறு இருக்கிறது. ஆனால், அவர் உயிரோடு இல்லை. வெட்டிய கிணற்றிலேயே குதித்து தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டார். அவருடைய தற்கொலைக்குக் காரணம், அரசு தர வேண்டிய மானியத்தை தராததுதான். இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் நிலையும் கிட்டதட்ட இதுதான். ஒரு தனிநபருக்கு அரசு சரியான நேரத்தில் கொடுக்க வேண்டிய...

பெரியார் பிறந்த நாள் சிந்தனை தன்னைப் பற்றி பெரியார்

காலில் விலங்கோடு திரிந்த சிறுவன் தன் பிற்காலத்தில் சமூகத்தின் விலங்கொடிக்கத் தயாரானார். பெரியார்  தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை. சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925இல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக்கூற வேண்டியது அவசியமல்லவா? அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால் தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா? என்பது விளங்கும். எனக்கு சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க...

மாநில அடையாளங்களை அழிப்பதால் உருவாகும் ஆபத்து – பிரேர்ணா சிங் –

மாநிலங்களின் தனித்துவத்தை அழித்து ஒற்றை தேசியமாக இந்தியாவை மாற்றத் துடிக்கிறது பா.ஜ.க.வின் நடுவண் ஆட்சி. மாநிலங்களுக்கான அடையாள உணர்வுதான் வளர்ச்சிக்கும் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் ஆதார சுருதியாக இருக்கிறது என்பதை ஆய்வு நோக்கில் முன் வைக்கிறது, கட்டுரை. நாம் வாழும் இடம்தான் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. அருகருகே உள்ள வெவ்வேறு நாடுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் தொடங்கி கல்வி என்று பல்வேறு விஷயங்களில் மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பதை உணர முடியும். அமெரிக்காவின் ஹெய்ட்டி மாநிலத்தில் பிறக்கும் குழந்தை, அங்கிருந்து 50 மைல்கள் தொலைவில் உள்ள கியூபாவில் பிறக்கும் குழந்தையை ஒப்பிட – தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் வாய்ப்பை 12 மடங்கு அதிகம் பெற்றிருக்கிறது. அதேபோல், நீங்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கீனா பாஸோவில் பிறந்தவர் என்றால், அண்டை நாடான கானாவுடன் ஒப்பிடும்போது நீங்கள் கல்வியறிவு பெறாதவராக இருப்பதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். ஒரே தேசத்தின்...

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் தேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும், புதிய கல்விக் கொள்கை

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் தேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும், புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை – இடஒதுக்கீடு குறித்தோ ஜாதி பிரச்சினைப் பற்றியோ பேசாமல் மூடுவதற்கான பரிந்துரைகளையே வலியுறுத்துகிறது என்றார் கல்வியாளர் கஜேந்திர பாபு. (சென்ற இதழ் தொடர்ச்சி) பொதுத் தேர்வு முறையை சொல்கிறார்கள் அல்லவா, இப்போது 10 ம் வகுப்பு தேர்வுகளை யார் நடத்துகிறார்கள்? தமிழ்நாட்டில் அரசு 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கு தேர்வுகளை நடத்துகிறது. இதில் போதுமான மதிப்பெண் வரவில்லையென்றால் ஒரு மாணவர் தனது தேர்வுத் தாளை மறு கூட்டலுக்கு அனுப்ப லாம். திருத்தியதையும் புகைப்படமாக பார்க்கலாம். தமிழ்நாட்டில் ஓரளவிற்கு தேர்வு முறை ஊழல் இல்லாமல் நடக்கிறது. பறக்கும் படை போன்றவை களும் தேர்வு நேரங்களில் கண்காணிப்பில் உள்ளன. இந்தக் கொள்கை என்ன சொல்கிறதென்றால்?  மாநில தேர்வு முறை, மத்திய தேர்வு முறை மட்டுமில்லாமல் தனியார் கம்பெனிகளும் தேர்வு முறைக்கு விண்ணப்பித்து அனுமதியை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறது. மாநிலத்திலோ அல்லது மத்திய அரசிடமோ விண்ணப்பித்து அந்த உரிமத்தைப்...

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் திறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் திறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை – இடஒதுக்கீடு குறித்தோ ஜாதி பிரச்சினைப் பற்றியோ பேசாமல் மூடுவதற்கான பரிந்துரைகளையே வலியுறுத்துகிறது என்றார் கல்வியாளர் கஜேந்திர பாபு. (சென்ற இதழ் தொடர்ச்சி) 70 ஆண்டுகாலம் கழித்து வரக்கூடிய தேசிய கல்விக் கொள்கையில் ஜாதியக் கொடுமையைப் பற்றி இருக்க வேண்டும் என்று நான் எதிர் பார்ப்பேனா? மாட்டேனா? வாழ வேண்டிய வயதில், படித்த இளைஞர்களை ஜாதியின் பெயரால் கொலை செய்கிறார்களே அதைப் பற்றி எதாவது இந்த அறிக்கையில் இருக்கிறதா? அப்படி இருந்தால் வரவேற்கலாம். Multi Discipline என்று சொல் கிறார்களே! அப்படி என்றால் என்ன? Tradition, Ethicsயை கற்றுக் கொடுக்க சொல்கிறார்களே! எந்த Traditionயை கற்றுக் கொடுப்பது? அச்சம், நாணம், மடமை இவையெல்லாம் யாருக்கு இருக்கும் குணம்? நாய்க்கு இருக்கும் குணமென்று பாரதியார் சொல்கிறார். பெண்ணைப் பார்த்து அச்சம் கொள்ளாதே என்று சொன்னார். அது தான் Tradition, புத்தகத்தில் வருமா அது? மூன்று வருடம் BSC Chemistry, BSC...

அமித்ஷாவின் வெறிப் பேச்சு

அமித்ஷாவின் வெறிப் பேச்சு

1929லேயே இந்தியை எதிர்த்தார் பெரியார் ‘இந்தியாவின் அடையாளம் இந்தி’ என்ற அமித்ஷா கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் தென்னகம் முழுவதும் எழுந்துள்ளது. இந்தித் திணிப்பை எதிர்த்தும் அதைத் திணிப்பதன் நோக்கத்தை விளக்கியும் 1929ஆம் ஆண்டிலேயே  90 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் எழுதிய கட்டுரை. சமீபத்தில் சென்னை மாகாணத்திற்கு சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களை ஹிந்திப் பிரசாரம் என்னும் பேரால் பார்ப்பனப் பிரசாரம் செய்ய அழைத்துவரப் போகின்றதாகத் தெரிய வருகின்றது. இந்த வழியில் பார்ப்பனப் பிரசாரம் செய்வதோடு மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாத மூடர்களிடமிருந்து சுமார் ஒரு லக்ஷம் ரூபாயாவது கொள்ளை அடிக்கக் கருதியிருக்கின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது. கதரின் பேரால் அடித்த கொள்ளையாகிய ஐந்து லக்ஷம் ரூபாய் இன்னும் ஜீரணம் ஆகாமல் அப்படியே கல்லுப் போல் பார்ப்பார்கள் வயிற்றில் கிடக்க, சென்ற வருட காங்கிரசின் பேரால் கொள்ளை அடித்த சுமார் 20, 30 ஆயிரம் ரூபாயும் அப்படியே கிடக்க இப்போது இன்னும் ஒரு லக்ஷம்...

ஆய்வாளர் ஜெயரஞ்சன் பி.பி.சி.க்கு பேட்டி தமிழ்நாட்டைப் பாதிக்கும் ஒரே நாடு; ஒரே ரேசன் கார்டு திட்டம்

ஆய்வாளர் ஜெயரஞ்சன் பி.பி.சி.க்கு பேட்டி தமிழ்நாட்டைப் பாதிக்கும் ஒரே நாடு; ஒரே ரேசன் கார்டு திட்டம்

ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு திட்டம் விரைவில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப் படுமென தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருக்கிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து உணவுப் பாதுகாப்பு விவகாரங்களில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் பேசினார். பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அளித்த நேர்காணலிலிருந்து: ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு திட்டம் என்பது என்ன? இதை எப்படி செயல்படுத்தப்படும்? இந்தத் திட்டத்தின் முக்கியமான அம்சம், உணவுப் பொருள் வழங்கலை எளிமையாக்குவது (ஞடிசவயbடைவைல) என்பதுதான். இப்போது உணவு தானியங்களை வழங்குவது என்பது மாநில அரசிடம் இருக்கிறது. ஒவ்வொரு மாநில அரசும் தனது கொள்கைக்கு ஏற்றபடி இந்த உணவு தானியங்களை நியாய விலைக்கடைகளில் வழங்குகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. யாருக் கெல்லாம் குடும்ப அட்டை இருக்கிறதோ, அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்....

சமண-புத்த மதங்களை அழித்தது யார்? சைவத்தின் மதமாற்ற வன்முறைக்கான வரலாற்றுச் சான்றுகள்

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மதமாற்றங்கள் செய்து வருகின்றன என்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநான் ஒரு தீர்ப்பில் கூற கடும் எதிர்ப்பு வந்தவுடன் அப்பகுதியை திரும்பப் பெற்றுக் கெண்டார். உண்மையில் தமிழ்நாட்டில் சமண-பவுத்த மடங்களை அழித்து சைவமாக்கியதோடு அதற்காக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டதும், சைவர்கள்தான் என்பது வரலாறு.  அதற்கான வரலாற்றுச் சான்றுகளை முன் வைக்கிறது இக்கட்டுரை. கி.பி. அய்ந்து ஆறு ஏழாம் நூற்றாண்டு களில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பவுத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில் பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பவுத்த மதங்களைத் தழுவியிருந்தனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் ‘பக்தி’ இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பவுத்த மதங்களை அழித்திட முற்பட்டனர். ‘சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப்படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல்,...

‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார் – முனைவர் மு.பா. குப்புசாமி

திருக்குறள் குறித்து பெரியார் தெரிவித்த கருத்துகள் – நடத்திய மாநாடுகள் – மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்து ஒரு பார்வை. பெரியாரது முக்கியக் கொள்கைகளில் ஒன்று கடவுள் மறுப்பாகும். கடவுள் பெயரால்தான் அனைத்துச் சீர்கேடுகளும் நடைபெறுகின்றன என்பதும் சமூகம் சீர் அடைய வேண்டுமானால் கடவுள் பற்றிய கற்பிதங்கள் உடைபட வேண்டும் என்பதும் பெரியார் கருத்து. சைதாப்பேட்டை திருவள்ளுவர் மன்றத்தில் பெரியார் கடவுளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: தமிழனுக்கு எப்போதும் உருவக் கடவுள் இருந்ததில்லை. கடவுள் சக்தியை விஞ்ஞான அறிவு மீறி வருகிறது. அறிவுக்கு மதிப்பு மிகுந்து கடவுளுக்கு மதிப்பு மங்கி வருகிறது. சுகாதார அதிகாரிகளால் மாரியாத்தாள் மதிப்பிழந்தாள். திருக்குறளின் வெற்றி மெய்மை அறிவொளியின் வெற்றி (‘விடுதலை’ 9.11.1949) – எனக் குறிப்பிடுகின்றார். திருவள்ளுவர் கடவுள் பெயரால் பிரிந்து கிடக்கும் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் குறளினை பெரியார் மேற்கோள் காட்டுகிறார். “எந்த நாட்டில், சாதிப் பற்றியும், மதங்கள் பற்றியும் கடவுள்கள் பற்றியும் கூட்டங்கள் இருந்து...

காஷ்மீர்: வரலாறும் துரோகமும் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த வரலாற்றுப் பின்னணியையும்

370 சிறப்புப் பிரிவு வழங்கிய உரிமைகளை படிப்படியாக இந்திய அரசு பறித்ததால் அம்மக்களிடையே உருவான எதிர்ப்பையும் சுருக்கமாக விவரிக்கிறது, கட்டுரை. தங்கள் வாழ்வுரிமை பறிபோகும் என்ற பதற்றமே காஷ்மீர் மக்களை அலைக்கழிக்கிறது என்பதைப் பார்க்க மறுப்பவர்களால் காஷ்மீர் பிரச்சனையை புரிந்து கொள்ள இயலாது. இந்தியா விடுதலை பெற்றபோது 601 சமஸ் தானங்கள் இருந்தன. இதில் 552 சமஸ்தானங்கள் இந்தியாவோடும், 49 சமஸ்தானங்கள் பாகிஸ்  தானோடும் இணைந்தன. மற்ற 3 சமஸ்தானங்கள் எவரோடும் இணைய மறுத்தன. ஜுனாகட் சமஸ்தானம் ஹைதராபாத் சமஸ்தானம் காஷ்மீர் சமஸ்தானம் ஜுனாகட் சமஸ்தானத்தின் நவாப், தனது சமஸ்தானத்தை பாகிஸ்தானோடு சேர்ப்பதாக அறி வித்தார். இந்துக்கள் அதிகம் இருந்த இங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1948 பிப்ரவரி 7ல் இந்திய அரசாங்கம் படைகளை அனுப்பி, மக்களிடம் நேர்முக வாக்கெடுப்பு நடத்தி, இதனை இந்தியாவுடன் இணைத்தது. ஹைதராபாத் சமஸ்தானம் (இன்றைய தெலுங்கானா பகுதி) மிகப்பெரியது. இங்கு மன்னராக இருந்த நிஜாம் இந்தியாவுடன்...

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி அனைவருக்கும் கல்வி வழங்கும் உரிமையை அரசு கைவிட்டது ஏன்?

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி அனைவருக்கும் கல்வி வழங்கும் உரிமையை அரசு கைவிட்டது ஏன்?

ஜூலை 12, 2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் கோவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் புதிய கல்வித் திட்ட நகல் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நிகழ்த்திய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) ஒரு பள்ளி வளாகத்திற்குள் சென்றீர்க ளென்றால், நீங்கள்  ஒரு பள்ளியில் எவையெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ அவையனைத்தும் அனைத்துப் பள்ளியிலும் இருக்க வேண்டும். என் வீட்டிற்கு அருகில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது, நீங்கள் எவையெல்லாம் ஒரு பள்ளியில் இருக்க வேண்டுமென்று கூறினீர்களோ அவை யனைத்தும் என் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் இருந்தால், நான் அதை தவிர்த்து விட்டு ஏன் வேறு பள்ளியில் சேர்க்கப் போகிறேன். உலகம் முழுக்க இருக்கக் கூடிய நடைமுறை, ஒரே சீரான பள்ளி அமைப்பு என்பதாகும் ஆனால் இந்தியாவில் 70 ஆண்டுகாலம் அதைப் பற்றி பேசுவதற்குக்கூட தயாராக இல்லையென்பது எப்படி? சரி கோத்தாரி குழுவின் கல்விக் கொள்கை...

கடும் பொருளாதார சரிவு  நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி

கடும் பொருளாதார சரிவு நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி

15 மாதங்களில் இல்லாத வகையில், சரிவை சந்தித்துள்ளது. விற்பனை, உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையால், நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, சரிவை சந்தித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், இரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின், ஆகஸ்ட் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கையை வெளியிட் டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆகஸ்ட் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி குறித்த, பி.எம்.ஐ., குறியீடு, 51.4 புள்ளிகளாக சரிந்துள்ளது. இது, 2018, மே மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட குறைந்த அளவாகும். 2018, மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 52.5 புள்ளிகளாக இருந்தது. கடந்த ஜூலை மாதம் முதலாகவே, பெரும்பாலான அளவீட்டுக்கான குறிகாட்டிகள் வீழ்ச்சியடைந்ததால், உற்பத்தி வளர்ச்சி, தன் வேகத்தை இழந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி, வேலைவாய்ப்பு, புதிய ஆர்டர்கள் ஆகிய முக்கியமான, பி.எம்.ஐ.,...

அசல் நகலில் இடம் பெற்ற சமஸ்கிருத திணிப்பு கொள்கை சுருக்கப்பட்ட நகலில் மறைக்கப்பட்டது ஏன்?

அசல் நகலில் இடம் பெற்ற சமஸ்கிருத திணிப்பு கொள்கை சுருக்கப்பட்ட நகலில் மறைக்கப்பட்டது ஏன்?

ஜூலை 12, 2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் கோவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் புதிய கல்வித் திட்ட நகல் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நிகழ்த்திய உரை: தேசிய கல்வி வரைவு என்பதை கிட்டத்தட்ட 5 ஆண்டு காலமாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். 2015லிருந்தே மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பள்ளிக் கல்வியிலேயே ஒரு 20 தலைப்புகள், உயர் கல்விக்கு ஒரு 13 தலைப்புகள் என்று தலைப்புகள் கொடுத்து, இந்த தலைப்புகளின் மீது  கருத்துக்களைச் சொல்லுங்கள் என்று மனித வளத் துறை வலைதளத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களில் இது சம்மந்தமாக கூட்டங்கள் நடத்தப்போகிறோம், அனைத்து உயர்கல்வி இடங்களிலும் கூட்டம் நடத்தப்போகிறோம், கிராமங்கள் அளவிற்கு எத்தனை கூட்டங்கள் நடத்தப் போகிறார்கள் என்று ஒரு கணக்கை போட்டு வைத்திருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்ட பாதி அளவான இலக்கை கூட அதாவது 50 சதவீதத்தை கூட அவர்களால் அடைய...

காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதா?

காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதா?

370ஆவது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறி வந்தது மோடி ஆட்சி. பார்ப்பன தேசிய ஊடகங்களும் மக்களின் எதிர்ப்பை மூடி மறைத்து வந்தன. பி.பி.சி. உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள், காஷ்மீரில் மக்களின் போராட்டத்தை ஒளி பரப்பின. அலைபேசி, இணைய தொடர்புகள் முடக்கப்பட்டன. பிறகு இயல்பு நிலை திரும்பி விட்டதாகக் கூறி தொடர்புகள் தரப்பட்ட நிலையில், மீண்டும் ஒரே நாளில் மீண்டும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன. இப்போது காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இராணுவம், துணை இராணுவப் பிரிவுகளைச் சார்ந்த 9.5 இலட்சம் படையினர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் குவிக்கப்பட்டுள்ளதாக ‘டெக்கான் கிரானிக்கல்’ ஏட்டின் ஸ்ரீநகர் செய்தியாளர் எழுதுகிறார். அங்குலம் அங்குலமாக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள் என்றும் கடைகள் மூடப்பட்டு விட்டன என்றும் அந்த செய்தியாளர் கூறுகிறார். ஏராளமான மருந்து மாத்திரைகளோடு 100 மருத்துவர்கள் இராணுவத்துக்கு மருத்துவ உதவி வழங்க விமானம் வழியாகக்...

பள்ளிகளில் தீண்டாமை ஜாதி வெறியைத் தூண்டும்  ஜாதிக் கயிறுகளுக்கு தடை போடுக!

பள்ளிகளில் தீண்டாமை ஜாதி வெறியைத் தூண்டும் ஜாதிக் கயிறுகளுக்கு தடை போடுக!

பள்ளி மாணவர்கள் அவரவர் ஜாதி அடையாளங்களைக் குறிக்கும் வண்ணத்துடன் கைகளில் கயிறு கட்டிக் கொள்ளும் பழக்கம் தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் இருந்து வருகிறது. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட ஜாதி மற்றும் பட்டியல் இனப் பிரிவு மாணவர்கள் இத்தகைய அடை யாளங்கள் வழியாகப் பள்ளிகளில் பாகுபாடுகளுடன் ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றனர். நெற்றியில் வைக்கப்படும் ‘விபூதி – குங்கும’த்திலும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு அடையாளம் வரையறுக்கப் பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் தலித், பிற்படுத்தப்பட்ட ஜாதி மாணவர்களுக்கிடையே மோதல்கள் நடந்துள்ளன. கொலைகளும் நடந்துள்ளன. கடந்த 31ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த ஜாதிக் கயிறு, ஜாதிப் பொட்டு, ஜாதி  மோதிரங்களை அணியும் வழக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். பள்ளிக் கல்வித் துறை  அமைச்சர் செங்கோட்டையன், இந்தச் சுற்றறிக்கை பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று கூறினார். இப்படி ஒரு சுற்றறிக்கை ஆதிதிராவிடர்...

பெரியார் கருத்துகளை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் திருச்சி சிவா முழக்கம் ‘விதவை’ப் பெண்களைக் காக்க தனிச் சட்டம் கொண்டு வருக!

பெரியார் கருத்துகளை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் திருச்சி சிவா முழக்கம் ‘விதவை’ப் பெண்களைக் காக்க தனிச் சட்டம் கொண்டு வருக!

நாட்டில் “விதவைகள்” நலத்திற்காகப் பொருத்தமான சட்டம் கொண்டுவர வலியுறுத்தி, மாநிலங்களவையில் திருச்சி சிவா (திமுக) தனி உறுப்பினர் தீர்மானம் கொண்டு வந்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமையன்று மாநிலங்களவை உறுப்பினர்களின் தனி உறுப்பினர் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் நாளாகும். இதில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா,  நாட்டில் விதவைகள் படும் துன்பங்களை அடுக்கி, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பொருத்தமான சட்டத்தை நிறைவேற்றிட அரசாங்கம் முன்வர வேண்டும் என ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதன்மீது உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் விதவைகளின் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 61 ஆயிரத்து 278 ஆகும். அதாவது நாட்டின் மொத்த பெண்களின் தொகையில் 7.37 சதவீதமாகும். இது உலகிலேயே அதிகம் உள்ள விதவைகளின் எண்ணிக்கையாகும். விதவைகள் நம் நாட்டில் பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். விதவைகள் மறுமணம் என்பது அபூர்வமாகும். அவர்கள் பொருளாதார ரீதியாக,...

தமிழில் பெயர் சூட்டும் இயக்கம்; ‘வினாயகன் சிலை’களுக்கு மாற்றாக ‘வள்ளுவர் சிலை’ பேரணி பார்ப்பனியத்துக்கு எதிராக ‘வள்ளுவர் நெறி’யை மக்கள் பண்பாடாக மாற்றுவோம்  திருக்குறள் மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் உரை

தமிழில் பெயர் சூட்டும் இயக்கம்; ‘வினாயகன் சிலை’களுக்கு மாற்றாக ‘வள்ளுவர் சிலை’ பேரணி பார்ப்பனியத்துக்கு எதிராக ‘வள்ளுவர் நெறி’யை மக்கள் பண்பாடாக மாற்றுவோம் திருக்குறள் மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் உரை

திருக்குறள் மாநாட்டில் கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 1949ஆம் ஆண்டு பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடு பற்றி பலரும் பேசினார்கள். அம் மாநாட்டின் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1949 ஜன. 15, 16ஆம் தேதிகளில் சென்னை பிராட்வேயில் ஒரு மாநாட்டுப் பந்தல் போடப்பட்டு ‘வள்ளுவர் குறள் – தமிழர் நெறி விளக்க மாநாடு’ என்ற தலைப்பில் அந்த மாநாட்டை பெரியார் கூட்டினார். சி.டி.டி. அரசு  அறிமுக உரையாற்ற, சோமசுந்தர பாரதியார் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். முதல் நாள் மாநாட்டில் தமிழறிஞர்கள் திரு.வி.க., திருக்குறள் முனுசாமி, தெ.பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் இராசமாணிக்கனார், இலக்குவனார் ஆகியோர் உரையாற்றினர். இரண்டாம் நாள் 16.1.1949 அன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது.  இராவ் பகதூர் சக்கரவர்த்தி நயினார் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். பேரறிஞர் அண்ணா தலைவரை முன்மொழிந்தும், நாவலர் நெடுஞ்செழியன் வழிமொழிந்தும் உரையாற்றினர். சி. இலக்குவனார், கா....