குருசாமி – குஞ்சிதம்

 

திருச்செல்வர்கள் எஸ். குருசாமி, எஸ். குஞ்சிதம் ஆகிய இருவர் களும் இவ்வருஷம் கடைசியாக நடந்த செப்டம்பர் மாதப் பரீட்சையில்      பி. ஏ. வகுப்பில் தேறியிருக்கிறார்கள். திருமணம் நடக்கும் போது திரு.  குரு சாமி பி. ஏ. வகுப்பில் ஒரு பாடம் மாத்திரம் தேறியிருந்தார். திரு. குஞ்சிதம் மாணவியாயிருந்தார். திருமணம் நடந்து “சதிபதி”களாக வாழ்ந்து கொண்டே இருவரும் படித்து பரீட்சையில் தேறியிருப்பதற்கு நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு அவர்களது முயற்சியைப் பாராட்டுகிறோம்.

குடி அரசு – பெட்டிச் செய்தி – 26.10.1930

 

You may also like...

Leave a Reply