அருஞ்சொல் பொருள்

 

அசூயை        –        பொறாமை

அபேக்ஷித்தல் –        விரும்புதல்

அமிதம்        –        அளவுக்கு அதிகமாக

அத்தாக்ஷி      –        உறுதியான சான்று

அபுரூமாக      –        அபூர்வமாக, அரிதாக

அநித்தியம்     –        நிலையற்றது

அவிழ்தம்      –        மருந்து, ஒளடதம்

ஆகுர்தி         –        உருவம், உடல்

ஆக்கினை      –        கட்டளை, ஆணை

ஆவாகனம்     –        எழுந்தருளுமாறு மந்திரத்தால்                                  தெய்வத்தை வேண்டி அழைத்தல்

ஆஸ்பதம்      –        இடம், பற்றுக்கோடு

இத்தியாதி      –        இவை போன்ற

கடாக்ஷம்       –        கடைக்கண்

கிருத்துருவம்   –        வஞ்சனை

சகோதரம்      –        குலம்

சம்சயம்        –        அய்யம், சந்தேகம்

சம்ரக்ஷணை   –        காப்பாற்றுகை

சவதமாக       –        விலை மலிவாக

சிம்டா –        சிட்டிகை, பெருவிரல் ஆட்காட்டி விரல்                  சேர்த்து எடுக்கும் அளவு

சுசி     –        தூய்மை

சுதாவில்       –        தன் விருப்பாய், தானாக

தயாபரத்துவம் –        அன்புடைமை, அருளுடைமை

தாரதம்மியம்   –        ஏற்றத் தாழ்வு

திருஷ்டாந்தம் –        எடுத்துக்காட்டு

தொந்தம்       –        கட்டு, பந்தம், துயர்

நிர்பயமாய்     –        அச்சமின்றி

நிஷ்டூரம்       –        கொடுமை

நேர்ச்சை       –        நேர்த்திக் கடன்

பாதராவிந்தம்   –        பாதத் தாமரை, காலடி

பாலாரிஷ்டம்   –        குழந்தைப்பருவ தொடர் நோய்

பிராக்கு        –        இன்னொரு செய்தியில்

கவனத்தை செலுத்துதல்

மிரவணை      –        ஊர்வலம்

முறைதலை    –        நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தில்                                 திருமணத்திற்கு முன்பும் பின்பும் பெரும்

பொருட்செலவில் செய்யப்படும்சடங்குகள்

மூளாவண்ணம்         –        விதண்டா வாதம், பிறர்கூறுவதை

மறுத்து தன்கொள்கையை நாட்டாது                            வீணே கூறும் வாதம்

மூலைவிதி     –        தலைவிதி

வர்த்தமானம்   –        நிகழ்காலம், தற்கால நிகழ்வுகள்

விதாயம்       –        முடிவு

யதாபிரியர்கள் –        பழமைவாதிகள், மாற்றம் விரும்பாதோர்

ஜட்கா வண்டிக்காரர்    –        குதிரை வண்டிக்காரர்,                                                                                                       (பணமில்லாதவர்கள் )

3 ஆவது பாரம்         –        கூhசைன  குடிசஅ, 8 ஆம் வகுப்பு

You may also like...