அறிவிப்பு

‘குடிஅரசு’ இது சமயம் 16 பக்கங்கள் கொண்டு வெளிவருவதால், பல அன்பர்களால் எழுதியனுப்பப்படும் நீண்ட கட்டுரைகள் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம். வழக்கமாக எழுதிவரும் கட்டுரைகளே சில சமயங்களில் இடமின்மையால் நிறுத்தி வைக்கப்படுகின்றன. சமயம் வாய்க்கும் போது அவைகளை பிரசுரிக்க  உள்ளோம். அன்பர்கள் மன்னிப் பார்களாக. தவிர நமது பத்திரிகை ஒரு கொள்கை பிரசார பத்திரிகை            யாதலால் அதில் செய்திகளுக்கும், வர்த்தமானங்களுக்கும் இடம் ஒதுக்க முடிவதில்லை. ஆதலால் செய்திகள் போட முடியாமைக்கு வருந்துகிறோம். கொள்கை சம்பந்தமான செய்திகள் மிக மிக சுருக்கமாகவும், முக்கியமாகவும் இருந்தால் மாத்திரம் கவனிக்கக்கூடும் என்பதை வணக்கமாக தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

( ப – ர் . )

குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 07.12.1930

You may also like...