Category: குடி அரசு 1928

இந்திய சட்டசபை முடிவு 0

இந்திய சட்டசபை முடிவு

இந்திய மக்களுக்கு காங்கிரசு எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவம் உடையது என்பதைப் பற்றியும், சட்டசபைகள் எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவம் உடையது என்பதை பற்றியும், இவைகளில் உள்ள தலைவர்கள் என்போர்களும் அங்கத்தவர்கள் என்போர்களும் எவ்வளவு தூரம் பிரதி நிதித்துவம் உடையவர்கள் என்பதைப் பற்றியும் நாம் பொது மக்களுக்கு அதிகமாய் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. சாதாரணமாக காங்கிரசு என்பது பார்ப்பனர்களுடையவும் படித்த சிலருடையவும் நன்மைக்காக, அதாவது, உத்தியோகமும், பிழைப்பும் பெறுவதற்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சங்கம் என்பதாக நாம் பல நாளாக சொல்லிக் கொண்டே வந்திருக்கிறோம். அதுபோலவே சட்டசபை முதலியவைகளில் அங்கம் பெறவும் அது சம்மந்தமான தேர்தல்களில் ஏழைகளை, பாமர மக்களை நாணயக் குறைவான காரியங்களால் ஏமாற்றி சுயநலத்திற்காக ஸ்தானம் பெறவும் ஆன ஸ்தாபனங்கள் என்றும் சொல்லி வந்திருக்கின்றோம். இவற்றை இதுவரையில் எவரும் மறுத்ததில்லை. ஸ்ரீமான் காந்தியும் இவைகளை ஒப்புக் கொண்டு பாமர மக்களுக்கு அறிவுவரும்வரை இப்படித்தான் ஏமாற்றப்பட்டு வரக்கூடும் என்று சொன்னாரேயல்லாமல் பாமர மக்களுக்கு அறிவு...

நம் நாட்டுக்கு வேண்டியது என்ன? அரசியல் திருத்தமா? சமூக திருத்தமா? 0

நம் நாட்டுக்கு வேண்டியது என்ன? அரசியல் திருத்தமா? சமூக திருத்தமா?

இந்த சமயம் தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டி யதும் கூர்மையாய் கவனித்து நடக்க வேண்டியதுமான நெருக்கடியான சமயம் என்பதை நாம் பல தடவை அடுத்து அடுத்து வெளியிட்டு வந்திருக்கிறோம். இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படாது. 10 வருஷங்களுக்கு ஒரு முறையோ 20 வருஷங்களுக்கு ஒரு முறையோதான் ஏற்படுகின்றது. அதை தக்க வழியில் உபயோகித்துக் கொள்ள முடியாமல் பார்ப்பனர்கள் கொடுமை செய்து வருவது ஒரு பக்கமிருந்தாலும் பார்ப்பன ரல்லாதார்களில் அரசியல் பிழைப்புக்காரரும் கோடாரிக் காம்புகளும் முடத் தெங்குகளும் மற்றொரு பக்கமும் இருந்து கொண்டு நாடு முழுவதும் பாழாகும் வண்ணமும் சமூகம் முழுவதும் இழிவுபடும் வண்ணமும் துரோ கச்செயல்கள் செய்து வருகின்றார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் இதுசமயம் முக்கியமாய் விழித்திருக்க வேண்டியதாய் இருக்கின்றது. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக வேண்டிய காரியங்களைப் பற்றி விசாரிப்பதற்கென்றோ எவ்வகை சீர்திருத்தம் வழங்க வேண்டுமென்பதை அறியவோ, இதுசமயம் ஒரு கமிஷன் அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதை...

இரங்கூன் தனவணிக வாலிபர்  இரண்டாவது மகாநாடு 0

இரங்கூன் தனவணிக வாலிபர் இரண்டாவது மகாநாடு

இம்மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் திருவாளர் இராமன் செட்டி யார் அவர்களின் வரவேற்புப் பிரசங்கமும் தலைவர் திருவாளர் அ. வெ. தியாகராஜா அவர்கள் தலைமை முகவுரையும் வரப்பெற்றோம். அவைகளில் தனவணிகர்களுக்கான பல அரிய வுரைகள் மலிந்து கிடக்கின்றன. அவை களில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம். “………………………………. இளம் கைம்பெண்களின் நிலை அந்தோ! அவர் களை மணப்பதற்கு முற்படுபவர்கள் நமது குலத்து வீரராவார்கள். இப் பாழும் குலத்தில் ஏன் பிறந்தோம் என்று நினைந்து நினைந்து அவர்கள் உள்ளங் குழையாமற் செய்வது உங்கள் கடன்”. “………மற்றொரு பெரும் பிரச்சினை மனைவியை வெளிநாட்டிற்கு உடனழைத்துச் செல்லல். மனைவியுடன் கூட வாழல் வேண்டுமென வாலிபர்களாகிய நீங்கள் கொண்டுள்ள பேரவா பளிங்குக்கற் போலத் தெளி வாய் விளங்குகிறது. அவ்வுணர்ச்சி இயற்கை உணர்ச்சி; தெய்வீக உணர்ச்சி; அதைக் குலைப்பது கொடுமை கொடுமை…………” “………….கேவலம் பொருளே நமது குறிக்கோளன்று. பொருள் பெருக் குவது மனைவி, மக்கள், சுற்றத்தார் நாட்டார் இன்புறுவதற்குத் தானே....

இஸ்லாமிய ஊழியன் 0

இஸ்லாமிய ஊழியன்

ஒத்துழையாமைக் காலத்தில் இருமுறை சிறைசென்று பலவருஷம் சிறைவாசம் செய்த தேசபக்தர் திண்டுக்கல் ஜனாப் வி.கே. தங்கமீரான் சாயபு அவர்கள் “இஸ்லாமிய ஊழியன்” என்ற தமிழ் வாரப் பத்திரிகை யொன்று ஆரம்பிக்கப் போவதாய் நாம் தெரிவிக்கப்பட்டிருக்கிறபடியால் ³ பத்திரி கையை நாம் ஆவலோடு எதிர்பார்ப்பதுடன் பொதுஜனங்கள் ஆதரவளிப் பார்கள் என்றும் நம்புகிறேன். குடி அரசு – செய்திக் குறிப்பு – 19.02.1928

அருப்புக் கோட்டையில் பார்ப்பனத் தொல்லை 0

அருப்புக் கோட்டையில் பார்ப்பனத் தொல்லை

அருப்புக் கோட்டையில் சில பார்ப்பனர்கள் தொல்லை விளை வித்து வருவதாக தெரிகின்றது. 7, 8 பார்ப்பனரல்லாத வாலிபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துக் கொண்டதாகவும் அரஸ்ட் செய்து ஜெயி லில் வைத்து ஜாமீனில் விட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதுவும் திருவண்ணாமலைக் கேசு போலவே இந்தக் கேசும் பார்ப்பனர்களிடம் நடக்கக் கூடாது என்று விண்ணப்பம் போட வேண்டிய நிலைக்கு வரும் போல் தெரிகின்றது. அந்த ஊரில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் இல்லை யாதலால் மதுரையிலிருந்து யாராவது பார்ப்பனரல்லாத வக்கீல் போக வேண்டியிருப்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு இந்த கேசின் செலவுக் காக திருவண்ணாமலை கேசு செலவுக்கு பொதுஜனங்கள் உதவியது போலவே உதவ வேண்டும் என்று அப்பீல் செய்துக் கொள்ளுகிறோம் குடி அரசு – வேண்டுகோள் – 19.02.1928

சூழ்ச்சியும் ஏமாற்றமும் 0

சூழ்ச்சியும் ஏமாற்றமும்

திருவண்ணாமலை கோயில் வழக்கு ஆர்கியுமெண்டிற்காக ஸ்ரீமான் ஏ. ராமசாமி முதலியார் வரப்போகிறார் என்று திருவண்ணாமலை பொது ஜனங்களும் முனிசிபாலிட்டியாரும் ஸ்ரீ முதலியாருக்கு பல வரவேற்பு களும் மீட்டிங்குகளும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் இந்த பொதுஜனங்கள் ஏமாற்றமடையட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலும் ஸ்ரீ முதலியாருக்கு இவ்வளவு வரவேற்பா என் கின்ற பொறாமையின் பேரிலும் ஸ்ரீ முதலியார் அன்று திருவண்ணா மலைக்கு வராமல் இருக்கும்படி செய்யவேண்டுமெனக் கருதி, டிப்டி கலெக்டர் கச்சேரியில் கோயில் கேசை திருவண்ணாமலை மெஜிஸ்ட் றேட்டிடமிருந்து மாற்றவேண்டுமென்பதாக ஒரு விண்ணப்பம் போட்டு கேஸ் விசாரணையை நிறுத்தும்படி உத்திரவு வாங்கிவிட்டார்கள். நல்ல வேளையாய் இந்த உத்திரவு போய்ச் சேருவதற்கு முன்பாகவே ஸ்ரீமான்கள் ராமசாமி முதலியாரும் கண்ணப்பரும் புறப்பட்டு விட்டதால் கிரமப்படி எல்லா வரவேற்புகளும் மீட்டிங்குகளும் வெகு ஆடம்பரமாகவே நடந்து விட்டன. பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியின் பயனாய் எதிர்பார்த்த காரியம் ஏமாற்றமடைந்து விட்டதால் பிறகு மாற்று விண்ணப்பத்தைப் பற்றி கவலை எடுத்துக்...

சங்கீதமும் பார்ப்பனீயமும் 0

சங்கீதமும் பார்ப்பனீயமும்

சென்னை சங்கீத மகாநாட்டில் பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான் ஸ்ரீமான் காஞ்சீபுரம் சி. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் விஷயத்தில் பார்ப்பனர்கள் எவ்வளவு நாணயக் குறைவாயும் குற்றமாயும் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கும் நிரூபத்தால் அறியலாம். இவற்றை நமது பார்ப்பனரல்லாத பிரபுக்கள் சற்றும் லக்ஷியம் செய்யாமல் பார்ப்பனரல்லாத வித்வான்கள் எவ்வளவு பாண்டித்யமுடையவர்களாயிருந்தாலும் அதை லக்ஷியம் செய்யாமல் பார்ப்பனர்கள் என்கின்றதற்காகவே அவர்களை ஆதரிக்க முற்படுகிறார்கள். நமது நாட்டுப்பிரபுக்களின் முட்டாள்தனத்திற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். அன்றியும் பார்ப்பனரல்லாத வித்வான்களும் தங்கள் சுயமரியாதையைப் பற்றி ஒரு சிறிதும் கவலையில்லாமல் பார்ப்பன வித்வான்கள் என்பவர்கள் எவ்வளவு குறைவுபடுத்தினாலும் லக்ஷியம் செய்யாமல் சுவாமிகளே ! என்று வாயைப் பொத்தி முதுகை வளைத்துக் காட்டிக் கொண்டு அவர்கள் பின் தொடருகின்றார்களே யொழிய மானத்துடன் வாழ ஒருப்படுவது அருமையாய் இருக்கின்றது. இவைகளை அனுசரித்தே ஒவ்வொரு ஊரிலும் பார்ப்பனரல்லாத சங்கீத சமாஜம் ஏற்படவேண்டும் என்றும் அங்கெல்லாம் பார்ப்பனரல்லாத வித்வான்களை...

தமிழர்களே உங்களுக்கு புத்தி இல்லையா 0

தமிழர்களே உங்களுக்கு புத்தி இல்லையா

தமிழ்நாடும் தமிழ் மக்களும் மனிதத் தன்மையாகிய “சுயமரியாதையை இழந்து மிருகங்களிலும், பூச்சி புழுக்களிலும் கேவலமாய் வாழும் நிலைமை ஏற்பட்டதற்கு முக்கிய காரணங்களில் பார்ப்பன மதமாகிய இந்து மதமும் அம்மத ஆதாரங்களாகிய வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் முதலிய ஆபாச புரட்டுகளே முக்கிய காரணம்” என்று வெகுநாளாகச் சொல்லி வருகிறோம். அநேக விதங்களில் அறிவைக் கொண்டும் அனுபவங் களைக் கொண்டும் யாவருக்கும் நன்றாய் விளங்கும்படி விவரமாய் எழுதியும் வந்திருக்கின்றோம். இவற்றை மறுத்து இதுவரை யாரும் எவ்வித சமாதானமும் சொல்லாமல் “மதம் போச்சு” “நாஸ்திகமாச்சு” “தெய்வம் போச்சு” என்று பொய் அழுகை அழுகிறார்களேயல்லாமல் சற்றாவது கவனித்துப் பார்த்து இதற்கு என்ன செய்ய வேண்டும் இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஒருசிறிதாவது கவலை கொள்ளாமல் இருப்பதுடன் செய்ய முயற்சிப்பவர்களையும் காலை வாரி விட சூழ்ச்சிகள் நடந்த வண்ணமாகவும், எதிர் பிரசாரங்கள் நடந்த வண்ணமாகவும் இருந்து வருகிறது. அன்றியும் முன்னையை விட பார்ப்பனப் பிரசாரமும்...

மந்திரிகளின் நிலை 0

மந்திரிகளின் நிலை

சென்னை அரசாங்க மந்திரிகளின் நிலை ஆட்டம் கொடுத்திருக்கும் விஷயம் யாவரும் அறிந்ததே. மந்திரிகளின் நியமனத்தின் போது காங்கிரஸ் பார்ப்பனர்களும் ஒத்துழையா பார்ப்பனர்களும் ஐகோர்ட் ஜட்ஜ் பார்ப்பனர் களும் நிர்வாகசபைப் பார்ப்பனர்களும் உள் உளவாய் இருந்து பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஒப்பந்தம் பேசிக் கொண்டு பார்ப்பனரல்லாதாரிலேயே மூவரைப் பிடித்து சுயேச்சைக் கக்ஷி மந்திரிகள் என்று பெயர் தந்து மந்திரி சபையை சிருஷ்டித்தார்கள். உதாரணமாக இம்மந்திரிகளை நியமிக்கும் விஷயத்தில் ஒத்துழையாமைக்கார ஸ்ரீமான்கள் ராஜகோபாலாச்சாரியார், ஸி. விஜயராகவாச்சாரியார் முதலியோரும், காங்கிரஸ் முட்டுக்கட்டைகளாகிய ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சீனிவாசய்யங்கார் முதலியோரும் சட்ட மெம்பர் ஐகோர்ட் ஜட்ஜுகள் முதலியோரும் வெளிப்படையாகவே எடுத்துக் கொண்ட முயற்சி யாவருக்கும் தெரிந்ததே. இவர்கள் தயவால் ஸ்தானம் பெற்ற மந்திரிகளும் மேற்கண்ட பார்ப்பனர்கள் சொன்னபடியெல்லாம் ஆடினதும் பார்ப்பனரல்லாதார் கட்டைக் குலைத்து அவர்களது இயக்கத் தையே பாழாக்க எவ்வளவு தூரம் கொடுமைகள் செய்யலாமோ அவ்வளவு தூரம் செய்ததும் மறக்கக் கூடியதல்ல. கடைசியாக பார்ப்பனரல்லாதார் கோவையில் மகாநாடு கூடி இம்...

சங்கராச்சாரி மடத்து ஸ்ரீமுகம் 0

சங்கராச்சாரி மடத்து ஸ்ரீமுகம்

பொட்டுக் கட்டுவதை ஒழிக்க வேண்டும் என்று ஸ்ரீமதி முத்துலக்ஷிமி அம்மாள் அவர்களால் கொண்டுவரப்பட்ட மசோதாவானது இந்து மதத்திற்கு விரோதமென்றும் அதை இந்துக்கள் நிறைவேற்ற விடக் கூடாது என்றும் ஸ்ரீ சங்கராச்சாரியார் மடத்தில் தீர்மானம் செய்து சிஷ்ய கோடிகளுக்கு வினி யோகிக்கப்பட்டு இருக்கின்றதாம். இந்த மாதிரியான இந்து மதத்தின் பெருமையை கமீஷனுக்கு தெரிவிக்க வேண்டாமா? குடி அரசு – செய்திக் குறிப்பு – 12.02.1928

இது கமிஷனுக்கு தெரிய வேண்டாமா? 0

இது கமிஷனுக்கு தெரிய வேண்டாமா?

மதுராந்தகத்தில் சமீபத்தில் நடந்த நாடகத்திற்காக போடப்பட்ட ஒரு துண்டு விளம்பரத்தின் அடியில் ‘பஞ்சமர்களுக்கு டிக்கட்டு கொடுக்கப்படமாட்டாது பிராம்மண ஸ்திரீகளுக்கு தனி இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்த ஊர் சேர்மன் இந்த நிபந்தனையின் பேரிலேயே நாடகக் கொட்டகைக்கு லைசென்சு கொடுத்திருக்கிறாராம். துண்டு விளம்பரம் நமது பார்வைக்கு வந்திருக்கிறது. கூத்தாடிப் பெண்களும் கூத்தாடி ஆண்களும் கூடி கூத்தாடுகிற இடத்தில் கூட ஆதிதிராவிடர்கள் போகக் கூடாது என்பதும், அங்கு கண்ணே பெண்ணே என்று பேசிக் கொண்டு மூக்கையும் காதையும் கன்னத்தையும் கடித்துக் கொண்டு விளையாடுவதைப் பார்க்கப் போகும் பார்ப்பனப் பெண்களுக்கும்கூட தனி இடம் ஒதுக்கித் தருவது என்பதும் பார்ப்பன ஆதிக்கத்தை காட்டுகின்றதா இல்லையா என்று கேட்பதோடு இது சைமன் கமிஷனுக்கு தெரியவேண்டாமா? என்று கேட்கின்றோம். குடி அரசு – செய்திக் குறிப்பு – 12.02.1928

க ற் பு 0

க ற் பு

– சித்திரபுத்திரன் ஸ்ரீமான் ஞ.சு. பரமசிவ முதலியார் எழுதியதற்கு பதில் இந்த வியாசத்தின் காரணமான ஆதி வியாசம் 8-1-28 தேதி ‘குடி அரசில்’ வரையப்பட்டிருக்கிறது. அதற்கு ஸ்ரீ பரமசிவ முதலியாரின் மறுப்பு 22-1-28 ² ‘குடி அரசில்’ பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. ஆதலால் இதைப் படிக்கும் நண்பர்கள் மேல்கண்ட இரண்டு வியாசங்களையும் வைத்துக் கொண்டு வாசிப்பது நலமென தெரிவித்துக் கொள்ளுகின்றோம். நாம் “வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்து குறள் எழுதியிருந்தால் இக்கருத்துக்களை கூறியிருக்க மாட்டார்” என்று குறிப்பிட்டிருந்ததற்கு ஸ்ரீ முதலியார் அதை ஒருவாறு ஒப்புக் கொண்டு “தன்னலங்கொண்ட ஒரு கூட்டத்தார் ஏற்றுக் கொள்ளவில்லையானால் நீதியானது அநீதியாகி விடுமோ” என்று பதிலிருத்தியிருக்கிறார். இங்கு ஸ்ரீ முதலியார் பெண்களை தந்நலங்கொண்ட கூட்டத்தார் என்று குறிப்பிட்டது பெண்களுக்கு நீதி வழங்கியதாகுமா? என்பதை யோசிப்பதோடு பெண்கள் தர்மம் எழுதுவதில் ஆண்கள் இம்முறை கொண்டு பிரவேசிப்பது தன்னலங்கொண்டதாகாதா? என்பதையும் சிந்திக்க வேண்டுகின்றோம். (இந்த இடத்தில் ‘கருத்து’ இன்னது என்பதை முடிவு கட்டாவிட்டாலும்)...

கமிஷன் பகிஷ்காரம் 0

கமிஷன் பகிஷ்காரம்

இதுவரை நடந்த சம்பவங்களால் கமிஷன் பகிஷ்காரமென்பது அர்த்தமற்றதாய் விளங்குகின்றது என்பதும், சென்னை பம்பாய் முதலிய மாகாண பார்ப்பனரல்லாதார் இயக்கங்கள் முழுதும் கமிஷனிடம் ஒத்துழைக்க தயாராயிருக்கின்றன என்பதும் விளங்கிவிட்டது. அதாவது ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் ஸ்ரீமான் கிருஷ்ணநாயர் அவர்கள் ஸ்டேட்மெண்டும் பம்பாய் பார்ப்பனரல்லாதார் தீர்மானமும் பார்த்தவர்களுக்கு இனிது விளங்கும். மற்றபடி மகமதியத் தலைவர்களின் பெரும்பான்மை அபிப்பி ராயமும் பத்திரிகைகளின் அபிப்பிராயமும் முழு ஒத்துழைப்பில் இருக் கின்றது. ஆதி இந்துக்களின் அபிப்பிராயமும் அதைவிட மீறி நிற்கின்றது. மற்றபடி பார்ப்பனர்களின் இயக்கம் என்று கருதப்பட்ட காங்கிரசின் பேரால் மாத்திரம் சிலர் பகிஷ்காரப் பேச்சு பேசினாலும் காரியத்தில் கமிஷனுக்கு அனுகூலமாய் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. தவிர, பார்ப்பனர்களின் முக்கியமான பகிஷ்கார எண்ணமெல்லாம் இந்தியாவிலிருக்கும் ஜாதித் திமிரும் பார்ப்பன ஆதிக்கமும் வெள்ளைக்காரருக்குத் தெரியக் கூடாது என்பது ஒன்று மாத்திரமேயல்லாமல் வேறு கவலை ஒன்றும் பார்ப்பனர்க ளுக்கு இல்லை என்பது உறுதியாய் விட்டது. இனி யாரும் அதைக் கேட்ப தில்லை...

அரசியல் நாணயம் 0

அரசியல் நாணயம்

சைமன் கமிஷன் பகிஷ்கார வேலை நிறுத்தத்தைப்பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தோம். இந்த ஒரு வாரமாய் அதைப்பற்றி தேசீயப் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் வயிறு வளர்ப்புப் பத்திரிகைகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும் சற்றும் மானம் ஈனம் என்பது இல்லாமல் சரமாரியாய் பொய்யையும் புளுகுகளையும் மனங் கொண்டவரையில் எழுதி பத்திரிகைகளை நிரப்பி வருகின்றன. பொய் எழுதுபவைகளுக்கு எவ்வித தண்டனையும் இல்லை என்கிற காரணத்தாலும் பாமர ஜனங்களுக்கு உண்மையை எடுத்துக் கூறும் பத்திரி கைகள் அதிகமாக இல்லாததினாலும் தங்கள் அக்கிரமங்களை சுலபத்தில் யாரும் கண்டு பிடித்துக் கொள்ள முடியாது என்கின்ற எண்ணம் மேலும் மேலும் இவ்விழி தொழிலில் இறங்கி வாழத் தைரியம் கொடுத்து வருகின்றது. ஆனபோதிலும் சென்னை அரசியல் பத்திரிகைகள் என்பவை களிலேயே சில தம்மையும் அறியாமல் எழுதிவிட்ட சில குறிப்புகளை மாத்திரம் முதலில் இங்கு குறிப்பிடுகின்றோம். அதாவது, ‘சுதேசமித்திரனின்’ 4ம் தேதி தலையங்கத்தில் குறிப்பிடுவதாவது, “…………..இதுவரையில் நமக்கெட்டியிருக்கும் செய்திகளில் சென்னை ஒன்றில் தான் துர் அதிர்ஷ்டவசத்தினால்...

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது 0

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது

சென்னை கடற்கரையில் பார்ப்பனரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ் காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக்கையில் காங்கிரசு வீரப் புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின் மத்தியில் இரண்டு செருப்புகளை வீசி எறிந்துவிட்டு ஓடிப்போய் விட்டார்கள் என்றும் அந்தச் செருப்புகள் ஏலம்போடப்பட்டன வென்றும் கேள்விப்பட்டோம். ஆனால் அடுத்த சில தினத்தில் அதே கடற்கரையில் பார்ப்பனர்களால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் பல பார்ப்பன ரல்லாதார்களை கூலிக்குப் பிடித்துக் கொண்டு போயிருந்துங்கூட கல்லும் செருப்பும் பறந்ததோடு கலகமும் அடிதடியும் காயமும் ஏற்பட்டு விட்டதாம் காங்கிரசுகாரர்கள் தாங்கள்தான் மிக புத்திசாலிகள் என்பதாக கருதி காலித் தனத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அந்த சமயம் வெற்றி கிடைத்ததுபோல் காணப்பட்டாலும் வட்டியுடன் திரும்பவும் அனுபவித்து விடுகின்றார்களேயொழிய இதுவரை ஒரு இடத்திலாவது தப்பித்துக் கொண்டதாகச் சொல்வதற்கே இல்லை. பஹிஷ்கார இயக்கப் பிரசாரத்திற்கு ஸ்ரீ சத்தியமூர்த்தி தலைவராகி விட்டார், ஸ்ரீ...

எதிர்பார்த்தபடியே கமிஷன் பகிஷ்காரம் கூலிக்கு மாரடிப்பவர்களின் காலித்தனத்தில் முடிந்தது 0

எதிர்பார்த்தபடியே கமிஷன் பகிஷ்காரம் கூலிக்கு மாரடிப்பவர்களின் காலித்தனத்தில் முடிந்தது

“காங்கிரஸ்”, “தேசீயம்” என்பவைகளின் புரட்டுகள் வெளியாகி தலைவர்கள், தேசபக்தர்கள் என்கின்றவர்களின் சுயநலத்தையும் அயோக் கியத்தனங்களையும் பாமர மக்கள் அறிய நேர்ந்து விட்ட பிறகு வேறு வேஷத்தின் மூலம் வெளியாகலாம் என்று காத்திருந்த பல தலைவர்கள் சைமன் கமிஷன் பகிஷ்காரம் என்கின்ற ஒரு புதிய வேஷம் போட்டுக் கொண்டு வெளியில் தலைநீட்ட முயற்சித்து வந்ததைப்பற்றி பலமுறை எழுதிவிட்டு, கடைசியாக கமிஷன் பகிஷ்காரம் காலித்தனத்தில் முடியும் என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தோம். அது போலவே சென்னை மீட்டிங் குகளும் வேலை நிறுத்தங்களும் காலித்தனத்திலேயே முடிந்து விட்டது. நேற்று சென்னையில் நடந்த சம்பவங்களைப்பற்றி சென்னைப் பத்திரிகை யில் உள்ள விஷயங்களை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கின்றோம். அதைப் பார்த்தால் ஆரம்பமுதல் முடிவுவரை காலித்தனத்திலே முடிந்திருப்பது யாவருக்கும் நன்றாய் விளங்கும். சில்லரைக்கடை வியாபாரிகளை தடி கொண்டு விரட்டி அடித்து மூடச் செய்தும், கடை அடைக்க ஒப்பாதவர்களின் கடைக்குள் நுழைந்து சாமான்களுக்கு சேதம் விளைவித்தும், சாமான்களை கொள்ளை அடித்தும், தொந்திரை செய்தும், வண்டியில்...

நெருக்கடியான சமயம் 0

நெருக்கடியான சமயம்

பார்ப்பனரல்லாதார்களைப் பொருத்தவரையில் அரசியல் நிலைமையிலும் சமூகயியல் நிலைமையிலும் தற்சமயத்தை பொறுப்புடன் நன்றாய் கவனித்து பார்ப்போமானால் இதை ஒரு நெருக்கடியான சமயம் என்றே சொல்ல வேண்டும். என்னவெனில் காந்தியடிகளின் தலைமையில் ஒத்துழையாமையின் போது பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் செய்த தியாகத்தின் பலனாய் மாய்ந்து மறையக் கிடந்த பார்ப்பனீயமானது பல பார்ப்பனர்களின் சூழ்ச்சியில் ஒருவாறு சமாளித்துக் கொண்டதுடன் ஒத்துழையாமையும் ஒழிக்கப்பட்டு அதன் பலன் முழுவதும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உபயோகப்படுத்தப்பட்டு வந்ததை அறிந்தே ஏறக்குறைய இரண்டு மூன்று வருடங்களாக சில தொண்டர்கள் எவ்வித எதிர்ப்புக்கும் பழிப்புக்கும் அஞ்சாது முனைந்து நின்று பார்ப்பன சூழ்ச்சியையும் அவர்களைப் பற்றி பிழைப்புக்கும் சில பார்ப்பனரல்லாத புல்லுருவிகளின் சுயநல சூழ்ச்சியையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் பாமர மக்களுக்கு விளக்கிக் காட்டியதின் பலனாய் பார்ப்பனரல்லாதார் சமூகம் அரசியல் தலைவர்கள் என்போர்களின் புரட்டையும் தேசாபிமானம் என்னும் வயிற்றுப் பிழைப்பு ஏமாற்றலின் தன்மையையும் ஒருவாறு அறிந்து கொள்ள இடமேற்பட்டதுடன் சமூக வாழ்விலும் தங்களது தாழ்ந்த...

ஆதிதிராவிட மகாநாடு 0

ஆதிதிராவிட மகாநாடு

சென்னையில் சமீபத்தில் கூடிய ஆதிதிராவிட மகாநாட்டைப்பற்றி பார்ப்பன பத்திரிகைகளும் அவற்றைப் பின்பற்றி வாழும் பார்ப்பனரல்லாத சில பத்திரிகைகளும் அம்மகாநாட்டையும் மகாநாட்டு தீர்மானங் களையும் நசுக்க எண்ணங்கொண்டு அதைப் பற்றி வெகுகேவலமாக எழுதியும் பேசியும் வருகின்றார்கள். இதைப்போன்ற ஒரு கொடுமையான காரியம் வேறு ஒன்று இருப்பதாகச் சொல்லமுடியாது. ஆதிதிராவிட சகோதரர்கள் இந்தியாவின் ஜனத்தொகையில் சுமார் நாலில் ஒன்று அல்லது ஐந்தில் ஒன்று என்பதாக 6, 7 கோடி மக்கள் இருந்தாலும் அதைப்பற்றி ஒரு சிறிதும் லட்சியம் இல்லாமல் அப்படி ஒரு கூட்டம் இருப்பதாகக் கூட வெளியார்கள் அறிவதற்கும் இல்லாமல் சூழ்ச்சி செய்து மறைத்து வைத்து விட்டு அவர்களது சுதந்திரத்திற்காக இப்பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளான பார்ப்பனரல்லாதாரும் அவர்களது பத்திரிகைகளும் எவ்வித உதவியும் செய்யாமலிருப்பதோடு ஆதிதிராவிடர்களாக ஏதாவது முயற்சித்தாலும் அதையும் கொலை செய்யப் பார்க்கின்றார்கள். என்ன கொடுமை! என்ன கொடுமை!! அதாவது சமீபத்தில் சென்னையில் கூடிய ஆதிதிராவிட மகாநாட்டு நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் பற்றி ஒரு சிறிதும்...

கமீஷன் பகிஷ்கார நாடகம்  அகில இந்திய வேலை நிறுத்தம் 0

கமீஷன் பகிஷ்கார நாடகம் அகில இந்திய வேலை நிறுத்தம்

ராயல் கமிஷன் பஹிஷ்கார நாடகமானது இதுவரையில் தீர்மான ரூபங்களாகவும் தட்டிப்பேச ஆள் இல்லாத இடங்களில் மேடைப் பேச்சாகவும் இருந்து வந்ததானது இப்போது அதாவது பிப்பரவரி µ மூன்றாம் தேதியில் காரியத்தில் காட்டப்படப் போவதாக தெரிய வருகின்றது. அதாவது இம்மாதம் 15 தேதியில் காசியில் சர்வகக்ஷி பகிஷ்கார மகாநாடு என்பதாக ஒன்றுகூடி அகில இந்திய ஹர்ட்டால் (வேலை நிறுத்தம்) செய்வது என்பதாக தீர்மானங்கள் செய்திருப்பதாய் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது. அதை அனுசரித்து நாடெங்கும் வேலைநிறுத்தங்கள் செய்வதற்கு வேண்டிய பிரசாரங்களும் ஆங்காங்கு நடத்த முயற்சிகளும் செய்யப்படுவதாய் காணப்படுகின்றது. பகிஷ்கார விஷயமாய் ஒவ்வொரு கக்ஷிக்காரர்களும் ஒவ்வொரு தலைவர்கள் என்பவர்களும் சொல்லிவந்த விஷயங்களை மறுத்து அதில் உள்ள புரட்டுகளை வெளியாக்கியும் எத்தனையோ கட்டுரைகள் எழுதியும் சொற்பெருக்குகள் பொழிந்தும் வந்திருந்தும் இதுவரை அவற்றில் ஒன்றுக்காவது சமாதானமோ பதிலோ இல்லாமல் தங்கள் வழக்கபடி புரட்டுகளையே பாமர மக்கள் ஏமாறும்படி எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் வருகிறார்களே ஒழிய மக்கள் உண்மையை...

தொழிலாளர் இயக்கம் வெற்றி பெறாத காரணம் என்ன? 0

தொழிலாளர் இயக்கம் வெற்றி பெறாத காரணம் என்ன?

சென்னையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் தொழிலாளர் இயக்கம் உருப்பெறாது என்பதே நமதபிப்பிராயம். ஏனெனில் பார்ப்பனர்களும் அரசியல் பிழைப்புக்காரர்களும் அதைக் கைப்பற்றி தங்கள் சுயநலத்திற்கு உபயோகித்துக் கொள்ளுகின்றார்கள். தொழிலாளர்கள் இயக்கம் சென்னை யில் தோன்றிய காலம் தொட்டே நாம் இந்த அபிப்பிராயம் சொல்லி வரு கின்றோம். ஸ்ரீமதி பெசண்டம்மைக்கும், ஸ்ரீ சீனிவாசய்யங்காருக்கும், சிவராவுக்கும், சத்தியமூர்த்திக்கும், வரதராஜுலுக்கும் மற்றும் இவர்கள் போன்றோருக்கும் தொழிலாளர் சம்மந்தமோ தலைமை ஸ்தானமோ இருக்க வேண்டிய அவசியமென்ன என்று கேட்கின்றோம் இவர்கள் தொழிலாளர் களா? அல்லது தொழில்திரம் அறிந்தவர்களா? அல்லது தொழிலாளி போன்ற ஏழ்மை வாழ்க்கை வாழ்கின்றவர்களா? தேச மக்களை ஏமாற்றி தங்கள் தங்கள் யோக்கியதைக்குமேல் சம்பாதித்துக் கொண்டும் தங்கள் தேவைக்கும் அனுபோகத்திற்கும் மேலான வாழ்க்கை வாழ்ந்து கொண்டும் பாமர மக்களை பலிகொடுத்து வாழும் இழிதுறையான அரசியல் வாழ்வில் இருந்து கொண்டிருக்கும் மனிதர்கள் எப்படி ஏழைகளும் வாயில்லாப் பூச்சிகளுமான தொழிலாளர்களின் கஷ்டத்தை அறியக் கூடியவர்களாவார்கள்? எனவே இவர்களைத் தலைமையாகக் கொண்டு...

சீர்திருத்தப் புரட்டு 0

சீர்திருத்தப் புரட்டு

நமது நாட்டுப் பார்ப்பனர்களின் பொதுநலச்சேவை, சீர்திருத்தம் என்ப வைகள் அதாவது காங்கிர° என்றும், சமூக சீர்திருத்தம் என்றும், ஆசாரச் சீர்திருத்தம் என்றும் இப்பார்ப்பனர்கள் பேசுவதெல்லாம் சுத்தப் புரட்டு என்றும் இவைகளை வேறொருவர் செய்வதற்கில்லாமல் ஏமாற்றி தாங்களே செய்பவர்கள் போல காட்டி மக்களை ஏமாற்றி வெறுந் தீர்மானங்களை ஏட்டில் எழுதிவிட்டு காரியத்தில் நடவடிக்கையில் வரும் போது குறுக்கே படுத்துக் கொண்டு விதண்டாவாதம் பேசுவதே வழக்கம் என்றும் எழுதி வந்திருக்கின்றோம். உதாரணமாக, ஆசார திருத்தத்தின் பேரால் பம்பாயில் போய் வயிறு பிழைக்கும் ஸ்ரீ மு. நடராஜன் என்கின்ற ஒரு பார்ப்பனர் இந்தியா முழுமைக் கும் தான் ஒரு ஆசாரத்திருத்தக்காரர் என்ற விளம்பரம் பெற்றவர்.. அவரது ஆசாரத் திருத்தமானது ஸ்ரீமான்கள் ஆ.மு.ஆச்சாரி. கூ.சு.ராமச்சந்திர ராவ்ளு.சத்தியமூர்த்தி முதலிய வருணாசிரம பிரசாரக்காரர்களைவிட மோச மான திருத்தம் என்றே சொல்லுவோம். உண்மையாய் பேசவேண்டுமானால் அவர் ஆசாரத்திருத்தம் என்கின்ற பெயரால் வருணாசிரமத்தை பரப்ப வந்த சூழ்ச்சிக்கார பார்ப்பனர் என்றே சொல்லவேண்டும். ஏனெனில்...

காங்கிர° தீர்மானங்களும் ஸ்ரீ காந்தியும் 0

காங்கிர° தீர்மானங்களும் ஸ்ரீ காந்தியும்

காங்கிரசின் யோக்கியதையைப் பற்றி ஸ்ரீ காந்தி அவர்கள் தமது அபிப்பிராயம் வெளியிட்ட பிறகுதான் தமிழ்நாட்டு மக்களில் பலருக்கு ‘குடி அரசு’ இதுவரையில் உண்மையைத் தான் சொல்லி வந்திருக்கின்றது என்று புலப்பட்டு இருக்கின்றது. உண்மையை ஒழிக்காமல் பேசவேண்டுமானால் நமது நாட்டில் காங்கிர° என்கின்ற ஒரு கொடிய யமன் போன்ற இந்த °தாபனம் இருக்கும் வரையில் ஏழை மக்கள் விடுதலை என்பதைக் கன விலும் நினைக்க வேண்டியதில்லை என்றே கல்லிலும் எழுதி விடுவோம். வெள்ளைக்காரனின் கொடுமையான ஆக்ஷிமுறை ஏதாவது ஒரு காலத்திலாவது நமது நாட்டை விட்டு ஒழிய வேண்டுமானால் முதலாவது காங்கிர° ஒழிந்து தீரவேண்டும். பிறகு தான் இந்து மதமும் பார்ப்பன ஆதிக்கமும் ஒழியவேண்டுமென்று சொல்லுவோம். ஏனெனில் இந்து மதத்தின் பேரால் பார்ப்பனர்கள் மாத்திரம்தான் மக்களை ஏமாற்றி பாழ்படுத்த முடியும் காங்கிரசோ அப்படியில்லை. காங்கிர சின் பேரால் எல்லா வகுப்பு அயோக்கியர்களும் அன்னக்காவடிகளும் அநாமதேயங்களும் காலிகளும் மக்களை ஏமாற்ற வசதியிருக்கின்றது. இந்து மதம் ஒரு...

இதுவா ராஜிக்கு சமயம் 0

இதுவா ராஜிக்கு சமயம்

10-01-28 தேதி சென்னை கோகலே ஹாலில் ராயன் கமிஷன் பகிஷ்கார விஷயமாய் பெசண்டம்மை, ஸ்ரீமான்கள் பி.சிவராவ், எல்.கோவிந் தராகவய் யர், எம். ராமச்சந்திர ராவ். சி. விஜயராகவாச்சாரியார், கே.ஆர். வெங் கிடராமய்யர் ஆகிய பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத கட்சித் தலைவர்களில் ஸ்ரீமான் கள் பணகால் ராஜா, சர் பாத்ரோ, கிருஷ்ண நாயர் ஆகியவர்களைக் கூப்பிட்டு ராஜி பேச ஏற்பாடு செய்ததாகத் தெரிகின்றது. இக்கூட்டத்தில் பெரிதும் அரசியல் திட்டத்தைக் குறித்தும், கமிஷன் பகிஷ்காரத்தைக் குறித்தும் பேசினார்களாம். நமது சுயமரியாதையையும் சமத்துவத்தையும், இப்பார்ப்பனர்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கும் வரை அவர்களுடன் கலந்து ராஜீயத்திட்டம் போடுவதோ அல்லது அவர் களுடன் கலந்து அரசியல் கிளர்ச்சி நடத்துவதோ பகிஷ்காரத்தில் இறங்கு வதோ போன்ற அறியாமை வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம். சுயராஜ்யமும், அரசியல் கிளர்ச்சியும், பகிஷ்கார கூச்சலும் படித்த வர்கள் உத்தியோகம் பெறுவதற்காகவா? அல்லது ஏழைக் குடிகளைக் காப்பாற் றுவதற்காகவா? என்பதை ஒவ்வொருவரும் நெஞ்சில் கையை வைத்துப் பார்க்கட்டும். அவ்வுத்தியோகம்...

நீல்சிலையைப் பற்றி காங்கிர° வேடிக்கை பார்க்க வந்த இரு சகோதரர்களுக்குள் நடந்த சம்பாஷணை. 0

நீல்சிலையைப் பற்றி காங்கிர° வேடிக்கை பார்க்க வந்த இரு சகோதரர்களுக்குள் நடந்த சம்பாஷணை.

தம்பி : நீல் சத்தியாக்கிரகம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்களே, அது என்ன ஆச்சுது? அண்ணன் : அது உனக்குத்தெரியாதா. “தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி ஏறினது” போல் நீல் சிலையை உடைக்கப் போய் கிருஷ்ணசாமி அய்யர் சிலையின் மூக்கு போய் விட்டது. தம்பி : அப்படிச் சொன்னால் எனக்கு விளங்கவில்லை, நடந்த சங்கதியைத் தெளிவாய்ச் சொல்லு, அண்ணன்: நீல் துரை சிலையை சத்தியாக்கிரகக்காரர்கள் சம்மட்டி யால் அடிக்கப் போனார்கள், அதைப் பலாத்காரம் என்று ‘குடி அரசு’ எழுதுச்சு. ஆனால் ஸ்ரீமான் காந்தி அதைப் பலாத்காரம் அல்ல சம்மட்டியால் உடைக்கலாம் என்று சொன்னார். அப்பவும் ‘குடி அரசு’ அது பலாத்காரம் தான் என்று சொல்லிற்று. அப்புறம் ஸ்ரீமான் காந்திக்கு புத்தி வந்து சம்மட்டி யால் அடிக்காதே களிமண் உருண்டையால் அடி என்று சொல்லிவிட்டு போய் விட்டார். இப்பொழுது சாமிக்கு புஷ்பத்தால் அர்ச்சனை செய்வது போல் தொண்டர்கள் நீல் சிலையை களிமண்...

புது வருஷத்தின் பார்ப்பன ஆதிக்க நிலை 0

புது வருஷத்தின் பார்ப்பன ஆதிக்க நிலை

சென்னையில் காங்கிர° கூட்டப்பட்டதின் பயனாக பார்ப்பனர்களின் யோக்கியதையும் அவர்களின் ஆயுதமாகிய தேசீயத்தின் யோக்கியதையும் யாவருக்கும் விளங்கியிருந்தாலும், பார்ப்பனர்கள் இன்னமும் நம்பிக்கை இழக்காமல் தைரியமாய் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும், ஏனெனில் பல விதத்திலும் அவர்களுக்கு பார்ப்பனரல்லாதார் உதவி இருப்ப தாகத்தான் சொல்ல வேண்டும். உதாரணமாக இப்போது பார்ப்பனர்களுக்குத் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்க பிரசாரத்திற்கு முக்கிய உதவியாயிருக்கும் பார்ப்பனரல்லாதார்களில் முக்கியமானவர்கள் ஸ்ரீமான்கள் முத்துரங்க முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார், வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப், குழந்தை, அண்ணாமலை பிள்ளை, குப்புசாமி முதலியார், கோவிந்தராஜு முதலியார், ஐயவேலு ஆகி யோர்களே ஆவார்கள். மற்றபடி ஸ்ரீமான்கள் சாமி வெங்கடாசலம் செட்டி யார். சாமி நாயுடு, ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் முதலியோர்களிடத்தில் நம்பிக்கையில்லாத தன்மையைத் தெரிவித்து விட்டார்கள். ஸ்ரீமான் முத்துரங்க முதலியாரின் யோக்கியதையைப் பற்றி நாம் சொல்லவேண்டியதில்லை. பெரிய வருணாசிரம தர்மி. பார்ப்பனர்களைப் பூலோக தேவதைகளாகக் கொண்டவர். அவர் எழுதிக் கொடுத்ததைப் படிப்ப தும் சொல்லிக் கொடுத்ததைச்...

பதவிப் போட்டி  சுயமரியாதை அளிக்காது 0

பதவிப் போட்டி சுயமரியாதை அளிக்காது

சமீபத்தில் சட்ட மெம்பர் வேலை காலியாகப் போகின்றது. ஏனென்றால் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்களின் 5 வருஷ காலா வதி இனி 2 , 3 மாதத்தில் முடிவடையப் போகின்றபடியால் அந்த ஸ்தானம் காலியாக வேண்டியது கிரமமாகும். ஆனால் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டமெம்பர் வேலைபார்த்த காலத்தில் தனது உத்தியோகம் இனியும் கொஞ்சகாலம் நீடிக்க வேண்டும் என்கின்ற உத்தேசம் கொண்டே வெள்ளைக்காரருக்கு அனேக உதவி செய்திருக்கின்றார். கையினால் செய்வதானால் பதினாயிரக்கணக்கான மனிதர்க்குக் கூலி கொடுக்கதக்க வேலைகளை ஒரு சிறிது தயவு தாக்ஷண்ணியம் பாராமலும் இந்தியாவில் மாதம் 1-க்கு லக்ஷக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் வேறு நாடுகளுக்குக் கூலிகளாகப் போகிறார்கள் என்பதைக் கருதாமலும் இந்திய நாட்டுப் பணம் இந்தியர்களால் வரியாகக் கொடுத்த பணம் ஒரு சிறிதும் இந்தியாவில் தங்காமல் வெளிநாட்டிற்குப் போகின்றதே என்கின்ற கவலையில்லாமலும் கையினால் செய்வதற்குப் பதிலாக பத்து லக்ஷம் இருபது லக்ஷம் என்பதாகப் பணம் கொடுத்து வெள்ளைக்காரர்கள் நாட்டுயந்திரங்களுக்காகப் பணம்...

விளங்கவில்லை 0

விளங்கவில்லை

ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப்பு அவர்கள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விஷயம் ஒருவாரு முடிவு பெறவேண்டும் என்று பார்ப்பனத் தலைவர்க ளுக்கு எழுதியிருக்கின்றார். இதற்கு பார்ப்பனர்கள் ஒரே பதில் சொல்லி விட்டார்கள். அதாவது “தேசம் பெரியதே ஒழிய பார்ப்பனர் பார்ப்பனரல்லா தார் என்கிற விஷயம் பெரிதல்ல, ஆதலால் இந்த சமயத்தில் இதை எல்லாம் பேசுவது தப்பு” என்று சொல்லிவிட்டார்கள். ஸ்ரீ ஜோசப் அவர்களுக்கு இதை எழுதுவதற்கு முன்பே பார்ப்பனர்கள் இப்படித்தான் சொல்வார்கள் என்பது தெரியாமல் போய்விட்டதா? அல்லது தெரிந் திருந்தாலும் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் தனக்கும் அக்கரை இருப்பதாய் காட்டிக் கொள்ளலாம் என்றா என்பது நமக்கு விளங்கவில்லை. குடி அரசு – செய்திக் குறிப்பு – 08.01.1928

இனியும் சந்தேகமா? 0

இனியும் சந்தேகமா?

மனுதர்ம சா°திரத்தை கொளுத்துவதை பற்றி ஆசாரச்சீர்திருத்தப் போர்வையை போர்த்துக்கொண்டிருக்கும் ஸ்ரீமான் பம்பாய் கே.நடராஜர் என்கின்ற பார்ப்பனரே வெகுதூரம் துக்கப்பட்டார் என்றால் மற்ற பிராமணர் கள் வருணாசிரம மகாநாடு கூட்டுவதில் நாம் ஒன்றும் அதிசயப்படவில்லை. ஆனால் இன்னமும் பார்ப்பனர்கள் வருணாசிரமப் பிரசாரமும் மகாநாடும் நடத்த தைரியமுடையவர்களாயிருக்கிறார்கள் என்பது தெரிந்த பின்னும், பார்ப்பனர்களும் நாமும் சகோதரர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமை உண்டா என்றுதான் கேட்கிறோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 08.01.1928

காங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம் 0

காங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம்

விளையாட்டுப் பிள்ளைகள் மண் கொழிக்கும் சங்கம் சென்ற காங்கிரசைப்பற்றி ஸ்ரீமான் காந்தி தமது ‘யங் இந்தியா’ பத்திரிகையில் ஜனவரி 5 தேதி எழுதியதாவது, “நான் விஷயாலோசனைக் கமிட்டியின் கூட்டங்களொன்றுக்கும் செல்ல முடியவில்லையெனினும், மிகவும் பொறுப்பற்ற வகையில் பேச்சும், வேலையும் நடந்தது என்றும் ஒழுங்கீனமாய் அங்கத்தினர்கள் நடந்து கொண்டார்களென்றும் தெரிந்து கொண்டேன். இன்னது விளையும் என்று சிந்திக்காமலே முன்பின் யோசனை இல்லாமல் மிகவும் உபயோகமற்ற தீர்மானங்களை திடீரென விஷயாலோசனைக் கமிட்டியில் பிரேரேபித்து அவைகளை அக்கமிட்டியாரும் யோசனையின்றி ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். சென்ற வருஷம் நிராகரிக்கப்பட்ட பூரண சுயேச்சைத் தீர்மானம் நிறைவேறிவிட்டது.அது யோசனையில்லாமலே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் சாமான்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்று செய்த தீர்மானமும் அதேமாதிரி சிறிதும் கவலையற்ற தன்மையில் நிறைவேற்றப்பட்டது. காரியத்தில் நடத்த முடியாது என்று அறிந்தும் இத்தகைய தீர்மானங்களை வருஷா வருஷம் காங்கிரஸ் நிறைவேற்றுவதால்தான் அது தன் கௌரவத்தை இழந்து கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட தீர்மானங்கள் செய்வதால் நமது பலஹீனத்தை வெளிப்படுத்துவதுடன் ஊராரெல்லாம்...

புது வருஷ விண்ணப்பம் 0

புது வருஷ விண்ணப்பம்

புது வருஷ விஷயமாய் நாம் எழுதுவதில் அரசியல் விஷயத்திற்கு பிரதானம் கொடுத்து எழுத வரவில்லை; ஏனெனில் அரசியல் விஷயத்தை மிகுதியும் அலட்சியமாய்க் கருதுவதே ‘குடி அரசின்’ கொள்கை என்று பொதுஜனங்கள் எண்ணும்படி இருக்கவேண்டும் என்பதே நமது கவலை. ஆனாலும் அரசியலின் பேரால் மக்கள் ஏமாற்றப்படும் நிலைமை ஏற்படும்போது அலட்சியமாய் இருப்பதற்கில்லாமல் அதன் புரட்டுகளை வெளியாக்கவேண்டிய நிலையில் அரசியலைப் பற்றியும் எழுத நேரிடுகின்றது. மற்றப்படி தேசீயம் அரசியல் என்கின்றவைகள் எவ்வளவுக்கெவ்வளவு மக்களால் மறக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரத் தில் விடுதலை உண்டு என்பது நமதபிப்பிராயம். நிற்க, இந்த தலையங்கத்தில் நாம் எழுத புகுந்ததெல்லாம் புது வருஷத்தின் நிலை நமது முயற்சிக்கு எவ்வளவு பயனளிக்கக் கூடியதாயிருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ளவேதான். எனவே நாம் யோசித்து பார்க்கும் அளவில் புது வருஷத் தில் நமக்கு பல இடையூறுகள் தோன்றலாம் என்பதாகவே அறிகின்றோம். அவ்விடையூறுகளை லட்சியம் செய்யாதவரை பலனுண்டாகும் என்றும் லட்சியம் செய்து அதற்காக ஏதாவது இணங்க...

காங்கிரசும் ராயல் கமிஷன்  பஹிஷ்காரப் புரட்டும் 0

காங்கிரசும் ராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டும்

ராயல் கமிஷனை பஹிஷ்கரிக்கும் விஷயமாய் அரசியல்வாதிகள் இடும் கூச்சல்கள் எல்லாம் புரட்டு என்றும் அது பெரிதும் வகுப்பு உரி மைக்கு விரோதமாய் போடும் கூச்சல்கள் என்றும் ஆதிமுதல் கொண்டே எழுதி வந்திருக்கின்றோம். உதாரணமாக, வகுப்பு உரிமை வேண்டுமென்று கேட்கப்படும் எந்தக் கூட்டத்தாராலாவது பஹிஷ்காரம் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றதா என்பதைப் பார்த்தால் தெரியவரும். அத்துடன் கமிஷனை பஹிஷ்கரிக்கும் ஒவ்வொரு கூட்டமும் வகுப்புரிமை கூடாதென்பதையும் வற்புறுத்திக் கொண்டே வருகின்றது. எனவே கமீஷனை அடியோடு பஹிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்லும் தத்துவம் கமீஷனில் எல்லா வகுப்புகளுக்கும் சம உரிமை கிடைக்கும்படியான நிலைமை ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்கின்ற பயத்தாலேயே ஒழிய கமீஷனால் இந்திய அரசியல் சுதந்திரத்திற்கு ஏதாவது கெடுதி வந்து விடுமோ என்கின்ற காரணத்தாலல்லவென்றே சொல்லுவோம். மிதவாதிகள்கூட பஹிஷ்காரத்திற்கு ஆதரவளிக்கின்றார்கள் என்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றலாம். மிதவாதிகள் பஹிஷ்கரிக்கும் காரணம் தியாக புத்தியுடனோ அல்லது அரசாங்கத்துடன் விரோதித்துக் கொள்ளத்தக்க வீரத்துடனோ அல்லவென்று உறுதியாய்ச் சொல்லுவோம். முக்கியமாக மிதவாதிகள்...

மூடநம்பிக்கை 0

மூடநம்பிக்கை

வெள்ளிக்கிழமை விளக்குவைத்த நேரம் – சித்திரபுத்திரன் நகை வியாபாரி:- அய்யா! தாங்கள் என்னிடம் காலையில் காசுமாலை வாங்கி வந்தீர்களே அது தங்களுக்குத் தேவையா? இல்லையா? என்பதை தெரிவித்துவிட்டால் வேறு ஒருவர் வேண்டும் என்று சொல்லி மத்தியானமிருந்து கடையில் காத்துக் கொண்டிருக்கிறார் அவருக்காவது கொடுத்துவிடலாம் என்று வந்திருக்கின்றேன். எனக்குப் பணத்துக்கு மிகவும் அவசரமாயிருப்பதால் தயவு செய்து உடனே தெரிவித்து விடுங்கள். வைதீகர்:- செட்டியாரே அந்த நகை தேவையில்லை. வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது பூனை குறுக்கே போச்சுது, அப்பொழுதே வேண்டியதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். வீட்டில் பெண்டுகள் பார்த்து மிகவும் ஆசைப்பட்டு மாலையிலுள்ள காசை எண்ணிப் பார்த்தார்கள். அதில் 68 காசுகள் இருந்தது. எட்டு எண்ணிக்கை கொண்டது எதுவும் எங்கள் குடும்பத்திற்கு ஆயி வருவதில்லை. அதனால் அவர்களும் உடனே கீழே போட்டுவிட்டார்கள். ஆனதினால் அது எங்களுக்கு வேண்டியதில்லை. நகை வியாபாரி:- அப்படியானால், தயவு செய்து கொடுத்துவிடுங்கள். வேறு ஒருவர் காத்துக் கொண்டிருக்கின்றார். வைதீகர்:- ஆஹா,...

க ற் பு 0

க ற் பு

– சித்திரபுத்திரன் கற்பு என்கின்ற வார்த்தையானது மனித சமூகத்தில் சரிபகுதியான எண்ணிக்கையுள்ள பெண்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காக மாத்திரமே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்கின்ற தத்துவத்தின் மேல் இதை எழுதுகின்றேன். கற்பு என்கின்ற வார்த்தையை பகுபதமாக்கி பார்ப்போமானால் கல் என்பதிலிருந்து வந்ததாகவும் அதாவது படி – படிப்பு என்பது போல் கல் – கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்படுகிறது. அன்றியும் “கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை” என்கின்ற வாக்கியப்படி பார்த்தால் கற்பு என்பது சொல் தவறாமை. அதாவது நாணயம், சத்தியம் என்கின்ற கருத்து கொண்டதாக இருக்கின்றது. அதை பகாப்பதமாக வைத்துப் பார்த்தால் ‘மகளிர் நிறை’ என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்கின்ற பெண்களையே குறிக்கும் பதம் எப்படி சம்மந்தப்பட்டது என்பது விளங்கவில்லை. நிறை என்கின்ற சொல்லுக்கு பொருள் பார்த்தால் அழிவின்மை, உறுதிப்பாடு, கற்பு என்கின்ற வார்த்தைகள் காணப்படுகின்றது. ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்மந்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் கிடைக்கா விட்டாலும் அழிவில்லாதது, உறுதி...

மற்ற மகாநாடுகள் 0

மற்ற மகாநாடுகள்

ஆசாரத் திருத்த மகாநாடு இதற்கு ஸ்ரீமான் கே. நடராஜன் அக்கிராசனாதிபதி – இவர் வாயால் வெகு வேகமாகப் பேசிவிட்டு காரியத்தில் ஒன்றும் செய்யக் கூடாது என்பதையே கருத்தில் வைத்துத் தலைமை உபன்யாசம் செய்தார். இம்மகா நாட்டுக்கு காரியதரிசி ஸ்ரீ கந்தசாமி செட்டியார். இவர் ஜஸ்டிஸ் கட்சியையும் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கத்தையும் சேர்ந்தவர்கள் ஆசாரத் திருத்த மகாநாட்டுக்குப் பிரதிநிதிகளாக வரக்கூடாது என்றும், மீறி வந்தால் அவர் களுக்குப் பிரதிநிதிச் சீட்டு கொடுக்கமுடியாது என்றும் காரிய தரிசி ஹோதா வில் எழுதிவிட்டார். அக்கடிதம் சமீபத்தில் பிரசுரமாகும். மகாநாட்டுக்குச் சென்ற ஸ்ரீமான் ஆரியா அவர்களை பார்ப்பனர்கள் அவமானப்படுத்தினார்கள் – இதை கண்டிக்க அக்கிராசனாதிபதிக்கு சக்தியோ சௌகரியமோ சம்மதமோ இல்லாமல் போனதோடு தந்திரமாக சமா தானம் சொல்ல முன்வந்தார். சமஸ்தானப் பிரஜைகள் மகாநாடு இதற்கு ஸ்ரீ. சீனிவாசய்யங்கார் தலைவர். ஸ்ரீமான். சத்தியமூர்த்தி உபசரணைத் தலைவர். இவர்கள் தீர்மானம் எழுதி ஓட்டு எண்ணாமலே நிறைவேறி விட்டதாக தீர்மானம் செய்தவர்கள்...

காங்கிரஸ் என்னும் ஏமாற்றுந்திருவிழாவின் முடிவு 0

காங்கிரஸ் என்னும் ஏமாற்றுந்திருவிழாவின் முடிவு

சென்ற வாரம் சென்னையில் ஏமாற்றுந் திருவிழா என்பதாகப் பெயரிட்டு, தலையங்க மெழுதியிருந்தோம். இவ்வாரம் அத்திருவிழா முடிந்து விட்டதால் அதைப்பற்றி சிலவார்த்தைகள் கூறுவோம் நாம் சென்ற வாரம் கூறியபடியே காங்கிரஸ் என்பது பாமர மக்களை படித்த கூட்டத்தார் ஏமாற்றுவதற்கென்று ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்றும், அதிலும் அப்படித்த கூட்டத்தார் என்பதில் முக்கியமானவர்கள் நமது தென்னாட்டுப் பார்ப்பனர்களே என்றும் அவர்கள் இஷ்டப்படியெல்லாம் ஏறக்குறைய காங்கிரஸ் ஆரம்பமான காலம் முதற் கொண்டு ஆட்டப்பட்டு வந்திருக்கின்றது என்றும், காங்கிரஸ் என்பதாக ஒன்று நமது நாட்டில் ஏற்பட்ட பிறகே, மக்களின் ஒற்றுமை குலையவும், ஒழுக்கங்கெடவும், ஏழை மக்களுக்குப் பலவழிகளிலும் கஷ்டம் ஏற்படவுமான காரியங்கள் ஏற்பட்டுக் கொண்டு வருகின்ற தென்றும் எழுதி வந்திருக்கின்றோம். நிற்க, இவ்வருஷம் சென்னையில் நடந்த காங்கிரசானது, காங்கிரசையும், பார்ப்பனர்களையும் பற்றி நாம் இவ்வளவு காலம் எழுதி வந்ததையும், பேசி வந்தததையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் மெய்ப்பித்து விட்டது என்றே சொல்லுவோம். இக்காங்கிரசில் நிறைவேற்றி இருக்கும் தீர்மானங்கள்...