இனியும் சந்தேகமா?

மனுதர்ம சா°திரத்தை கொளுத்துவதை பற்றி ஆசாரச்சீர்திருத்தப் போர்வையை போர்த்துக்கொண்டிருக்கும் ஸ்ரீமான் பம்பாய் கே.நடராஜர் என்கின்ற பார்ப்பனரே வெகுதூரம் துக்கப்பட்டார் என்றால் மற்ற பிராமணர் கள் வருணாசிரம மகாநாடு கூட்டுவதில் நாம் ஒன்றும் அதிசயப்படவில்லை. ஆனால் இன்னமும் பார்ப்பனர்கள் வருணாசிரமப் பிரசாரமும் மகாநாடும் நடத்த தைரியமுடையவர்களாயிருக்கிறார்கள் என்பது தெரிந்த பின்னும், பார்ப்பனர்களும் நாமும் சகோதரர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமை உண்டா என்றுதான் கேட்கிறோம்.

குடி அரசு – செய்தி விளக்கம் – 08.01.1928

You may also like...

Leave a Reply