விளங்கவில்லை

ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப்பு அவர்கள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விஷயம் ஒருவாரு முடிவு பெறவேண்டும் என்று பார்ப்பனத் தலைவர்க ளுக்கு எழுதியிருக்கின்றார். இதற்கு பார்ப்பனர்கள் ஒரே பதில் சொல்லி விட்டார்கள். அதாவது “தேசம் பெரியதே ஒழிய பார்ப்பனர் பார்ப்பனரல்லா தார் என்கிற விஷயம் பெரிதல்ல, ஆதலால் இந்த சமயத்தில் இதை எல்லாம் பேசுவது தப்பு” என்று சொல்லிவிட்டார்கள். ஸ்ரீ ஜோசப் அவர்களுக்கு இதை எழுதுவதற்கு முன்பே பார்ப்பனர்கள் இப்படித்தான் சொல்வார்கள் என்பது தெரியாமல் போய்விட்டதா? அல்லது தெரிந் திருந்தாலும் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் தனக்கும் அக்கரை இருப்பதாய் காட்டிக் கொள்ளலாம் என்றா என்பது நமக்கு விளங்கவில்லை.

குடி அரசு – செய்திக் குறிப்பு – 08.01.1928

You may also like...

Leave a Reply