தலையங்கம் தமிழக அரசு, இஸ்லாமிய சிறைவாசிகளிடம் பாகுபாடு காட்டக் கூடாது
அண்ணா பிறந்தநாளையொட்டி முன் விடுதலை செய்யப்பட உள்ள சிறைவாசிகளின் பட்டியலில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டில் உள்ள நியாயங்களை மறுத்துவிட முடியாது. அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளில் 700 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து, `முன் விடுதலை’ என்ற சலுகையைப் பெறுவதற்குத் தகுதியுள்ள சிறைவாசிகள் குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது. அந்த ஆணையில், பயங்கரவாதம், மதமோதல், வகுப்பு மோதல், பாலியல் வன்கொடுமை, சாதி மோதல், அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள், சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு என 17 குற்றங்களை வகைப்படுத்தி, இந்தக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் தலைவர்களின் பிறந்தநாளில் முன்விடுதலை...
