Category: தலையங்கம்

தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்

தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்

உண்மைகள் வெளிச்சத்துக்கு வர 23 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை சந்தித்துள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குத் தண்டனைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் மறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது மரணதண்டனை எதிர்ப்பு இயக்கம் தயாரித்து வெளியிட்டுள்ள ‘உயிர் வலி’ ஆவணப்படம் இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. ராஜிவ் கொலைக்கான மனித வெடிகுண்டு ‘பெல்ட்’டில் பயன்படுத்தப்பட்டது, போறிவாளன் வாங்கித் தந்த பேட்டரிதான் என்பதே அவரை தூக்கு மரத்தின் கொட்டடியில் கொண்டுபோய் நிறுத்துவதற்கான ஒரே சான்றாதாரம். தடா சட்டத்தின் கீழ் துன்புறுத்தி பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை இதற்கு சான்று ஆவணமாக உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டது. பேரறிவாளனிடம் சாட்சியத்தைப் பதிவு செய்த சி.பி.அய். அதிகாரி தியாகராசன், அய்.பி.எஸ். இப்போது இந்த ஆவணப் படத்துக்கு வழங்கியுள்ள பேட்டி, புதிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. பேரறிவாளன் தன்னிடம் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உள்ளது உள்ளபடியே பதிவு செய்யாமல் தவிர்த்து...

தலையங்கம்: இடித்தது சுற்றுச் சுவரை மட்டும் அல்ல!

தலையங்கம்: இடித்தது சுற்றுச் சுவரை மட்டும் அல்ல!

ஈழப் போரில் சிங்கள இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள், தாயகத்தின் விடுதலைக்காக இராணுவத்தை எதிர்த்துப் போராடி களப்பலியான மாவீரர்கள் நினைவாக தஞ்சையில் கடுமையான உழைப்பினால் கட்டி எழுப்பப்பட்ட முள்ளி வாய்க்கால் முற்றம் – தமிழினத்தின் வரலாற்றுச் சின்னம்! இழிவையும், மடமையையும், மக்கள் பொதுப் புத்தியில் ஏற்றிக் கொண்டிருக்கிற கோயில்கள் அல்ல இவை. இந்த முற்றம், தமிழர்களின் உள்ளத்தில் விடுதலை வேட்கையை கனலாக மூட்டி நிற்கிறது. தமிழ்நாட்டில் இத்தகைய எழுச்சியூட்டும் முற்றங்கள் தான் கோயில்களுக்கு மாற்று என்று நாம் கருதுகிறோம். இந்த முற்றத்தைக் கட்டி எழுப்ப எத்தனையோ தமிழர்கள் தங்களை அர்ப்பணித்து உழைத்திருக்கிறார்கள். தங்கள் ஆற்றல்களை பங்களிப்புகளாக வழங்கியிருக்கிறார்கள். அது செங்கல்லும் சிமெண்டும் கலந்த கட்டிடம் மட்டுமல்ல; உணர்வுகளைச் சுமந்து நிற்கும் பாசறையும்கூட! அத்தகைய முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை நெஞ்சில் ஈரமின்றி அதன் சுற்றுச் சுவரையும் அழகு மிளிர உருவாக்கப்பட்டிருந்த...

தலையங்கம்: மீண்டும் ‘377’

தலையங்கம்: மீண்டும் ‘377’

டெல்லி உயர்நீதிமன்றத்தால் 2009 இல் நீக்கம் செய்யப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவுக்கு இப்போது உச்சநீதிமன்றம் உயிர் கொடுத்திருப்பது நாடு முழுதும் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. “இயற்கைக்கு விரோதமாக உடல்உறவு கொள்வது தவறு; மீறுவோருக்கு ஆயுள் தண்டனை” என்று கூறும் இந்தச் சட்டம் 1860 இல் மெக்காலே உருவாக்கிய குற்றவியல் சட்டத்தில் இடம் பெற்றதாகும். பிரிட்டிஷ்காரர்கள் அன்றைய இங்கிலாந்தில் இதே போன்ற சட்டம் இருந்ததால் இந்தியாவுக்கும் கொண்டு வந்தார்கள். இன்று இங்கிலாந்திலேயே அந்த சட்டம் நீக்கப்பட்டுவிட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் ஆணும்-ஆணும் அல்லது பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. திருமணத்தின் அடுத்தக்கட்டப் பரிமாணம் ‘இது’ என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது. 18 ஆப்பிரிக்க நாடுகளும், 20 ஆசிய நாடுகளும் இந்த ‘ஓர் பால்’ திருமண முறையை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன. 78 நாடுகள் இதை குற்றமாகக் கருதுகின்றன. பாலின உறவுகள் தனி மனித உரிமைகளின் பாற்பட்டது....

தலையங்கம்: ‘மக்கள் சந்திப்புத் திட்டத்தை’ தீவிரப்படுத்துவோம்!

தலையங்கம்: ‘மக்கள் சந்திப்புத் திட்டத்தை’ தீவிரப்படுத்துவோம்!

‘மக்கள் சந்திப்புத் திட்டம்’ – கழக சார்பில் தோழர்களின் வேலைத் திட்டமாக முன் வைக்கப்பட்டுள்ளது. கழகத்தின் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோர், தோழர்களை மாவட்டந்தோறும் நேரில் சந்தித்து இதற்கான நன்கொடைப் படிவங்கள், துண்டறிக்கைகளை வழங்கியுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியாரியல் செயல்பாடுகளையும் அதன் முன்னுரிமைத் திட்டங்களையும் மக்களிடம் விளக்குவதற்கும் அவர்களின் ஆதரவை நன்கொடை வழியாக உறுதி செய்யவுமே இத்திட்டம். பெரியார் கொள்கைகள் உருவாக்கிய தாக்கம், தமிழ்நாட்டை வேறு மாநிலங்களிலிருந்து தனித்துவம் மிக்கதாக மாற்றியது. ஒப்பிட்டளவில் சமூக மாற்றத்துக்கு தமிழகத்தை பக்குவப்படுத்திய பெருமையும் சிறப்பும் பெரியாரியலுக்கு உண்டு. ஆனால், தமிழ்நாட்டை இன்று வேறு திசை நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய ஆபத்தான முயற்சிகள் முனைப்பாக அரங்கேறி வருகின்றன. திராவிட அரசியல் கட்சிகள், பதவி அரசியல் என்ற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கான கொள்கை அடையாளங்களை கைவிட்டுவிட்டார்கள். தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாமல்...

‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு!

‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு!

71 ஆண்டுகளுக்கு முன் பெரியார் எழுதிய கட்டுரை ‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு! 1945ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ இதழில் கும்பகோணம் ‘மகாமகம்’ குறித்து பெரியார் எழுதிய கட்டுரை இது. 71 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கருத்துகள் இன்றைக்கும் பொருந்தி வருவதை இக்கட்டுரையைப் படிக்கும்போது புரிந்துணர முடியும். கும்பகோணத்தில் மகாமக உற்சவம் நடக்கப் போகிறது. அதற்குத் திராவிட மக்களை வரும்படியாக, கும்பகோணம் பார்ப்பனர்களால் அழைப்புக்குமேல் அழைப்பு விடுத்த வண்ணமாக விளம்பரங்கள் காணப்படுகின்றன. பார்ப்பனப் பத்திரிகைகள் மாமாங்கத்தைப் பற்றிப் பிரமாதப்படுத்தி மக்களை அங்குச் சேர்ப்பிக்க – தள்ளிவிட முயற்சிக்கின்றன. இந்த 20 ஆவது நூற்றாண்டுக்குப் பக்கத்தில் வாழும் திராவிட மக்கள் இப்படி ஓர் அறிவும், மானமும் சூன்யமான ஓர் உற்சவத்தை மதித்து, கும்பகோணம் சென்று கூமட்டைகள் ஆவதென்றால், இதை உலகின் 8ஆவது அதிசயமென்றுதான் சொல்ல வேண்டும். கும்பகோணத்தில் இவ்வளவு கூட்டம் சேர்க்கப்படுவதற்கு மாமாங்கத்தன்று அங்கு என்ன புதிய சங்கதி காணப்படப் போகிறது என்பதை யோசிப்போம்....

தலையங்கம் உரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்!

தலையங்கம் உரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்!

இந்து கோயில்களில் நுழைவதற்கே ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ அனைவருக்கும் பார்ப்பனர்கள் தடை போட்ட காலம் ஒன்று இருந்தது. அதுவே ‘ஆகம விதி’ – அதுவே தெய்வீக நடைமுறை என்று இறுமாப்பு பேசினர். இந்த ‘ஆகமம்’, ‘அய்தீக’ பூச்சாண்டிகளைப் புறந்தள்ளிவிட்டுத் தான் பெண்கள் உள்பட அனைத்துப் பிரிவினரும் கோயில்களுக்குள் நுழைந்து வழிபடவும் கோயில் ‘திருக்குளங்களில்’ நீராடவும் உரிமை வழங்கப்பட்டது. அதுதான் 1947ஆம் ஆண்டின் 5ஆவது சட்டமாகிய ‘ஆலய பிரவேச உரிமை’ சட்டம். ‘ஆகமம்’, ‘அய்தீகத்துக்கு’ எதிராக அப்படி ஒரு சட்டம் வராதிருக்குமானால், இப்போது கும்பகோணம் ‘மகாமகத்தில்’ முழுக்குப் போடும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே இருந்திருக்கும். சைவ மடாதிபதிகளுக்கே கூட அந்த உரிமை கிடைத்திருக்காது. கோயில் நுழைவு உரிமை கிடைத்தாலும்கூட கோயில் ‘கருவறை’க்குள் கடவுளை நேரடியாக வணங்குவதற்கோ அல்லது உரிய பயிற்சி பெற்று அர்ச்சகராவதற்கோ ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ மற்றும் பெண்களுக்கு உரிமை கிடையாது என்று கூறி, பார்ப்பனர்கள் தங்கள் சமூக மேலாதிக்கத்தை விட்டுத் தர மறுக்கிறார்கள்....

தலையங்கம் யாழ்ப்பாணத்தில் அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர்

தலையங்கம் யாழ்ப்பாணத்தில் அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர்

அய்.நா. மனித உரிமை ஆணையர், சையத் அல் உசேன், கடந்த வாரம், தமிழ் ஈழப் பகுதிகளுக்கு நேரில் சென்று போரில் பாதிக்கப்பட்ட மக்களையும், தமிழர் அமைப்பினரையும் நேரில் சந்தித்திருக்கிறார். வடக்கு மாகாண முதலமைச்சரும் அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான விக்னேசுவரன், ஆணையரை சந்தித்து சிங்கள அரசால் நீண்டகாலமாக சிறைபடுத்தப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட இனப்படுகொலையின்போது ‘காணாமல்’ போனவர்களின் உறவினர்கள் அவர்களின் உருவப் படங்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் ‘நலன்புரி நிலையம்’ என்ற உதவி மய்யத்தில் தமிழர்களை ஆணையர் சந்தித்துள்ளார். அப்போது போரில் பாதிப்புற்று, சொந்தப் பகுதிகளுக்கு திரும்ப முடியாது தவிக்கும் தமிழர்கள், “எங்களுக்கு விமான நிலையமும் வேண்டாம்; துறைமுகமும் வேண்டாம்; எங்கள் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்திடமிருந்து மீட்டுத் தாருங்கள்” என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திடவும், நேர்மையான மறுவாழ்வுக்கும் இலங்கை அரசுக்கும்...

தலையங்கம் ‘ரோகித்’களை காவு கேட்கும் ஜாதிவெறி!

படிக்கக் கூடாத கூட்டம் என்ற ‘மனு’ சாஸ்திரத்தால் தடை செய்யப்பட்ட சமூகம், சமூகப் புறக்கணிப்புகளைக் கடந்து, உயர் கல்வி வரை எட்டிப் பிடிக்கும்போது அங்கும் ஜாதியம், அவர்களின் உயிர்களைக் காவு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் இந்த ‘பாரத சமூகத்தின்’ பார்ப்பன ஜாதி தர்மம்! நெஞ்சு பதறுகிறது. அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் சமூகக் கல்வியில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்த 26 வயது தலித் மாணவர் ரோகித் வெமுலா, ஜாதி வெறி கொடுமைகளை எதிர்கொள்ள முடியாது தனது உயிரைப் பலியிட்டுக் கொண்டார். பார்ப்பன ஆதிக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் உயர்கல்வி நிறுவனங்கள், இடஒதுக்கீட்டின் கீழ் வரும் ‘தலித்’ மாணவர்களை அவமதிப்பதும், புறக்கணிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. பார்ப்பன உயர்ஜாதிப் பேராசிரியர்கள் பலரும் இந்த மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியேறிடக் கூடாது என்று தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், ‘சங்பரிவார்’ மாணவர் அமைப்பான ‘வித்யார்த்தி பரிஷத்’ உயர்கல்வி வளாகங்களில்...

தலையங்கம் இனியும் தேவையா, இந்த ஆகமங்கள்?

தலையங்கம் இனியும் தேவையா, இந்த ஆகமங்கள்?

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது, அரசியல் சட்டத்துக்கு உடன்பாடானதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. “பெண்கள் நுழைவதற்கு தடைவிதிப்பதற்கான அடிப்படை என்ன? இதற்கு நிர்வாகம் முன் வைக்கும் காரணங்கள் எவை? கோயிலுக்குப் போவதோ, போகாமல் இருப்பதோ, பெண்களுக்கான தனிப்பட்ட விருப்பம். ஆனால், அவர்களை 1500 ஆண்டுகளாக அனுமதிக்க மறுத்தது ஏன்? அனுமதிக்கக் கூடாது என்பதற்காக உங்களிடம் உள்ள சான்றுகள் எவை? என்று வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகள் ஆயத்தில் ஒருவரான தீபக் மிஸ்ரா, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு கேள்விகளை தொடுத்திருக்கிறார். வயதுக் கட்டுப்பாடு இல்லாமல் அனைத்துப் பெண்களையும் அய்யப்பன் கோயில் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் நான்கு பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்துள்ள வழக்கு இது. (தற்போது 10 வயதுக்குக் கீழே உள்ள – 50 வயதுக்கு அதிகமான பெண்கள் மட்டுமே இந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.) 1987ஆம் ஆண்டில் கன்னட நடிகை ஜெய்மாலா, அய்யப்பன் கோயில்...

தலையங்கம் ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?

தலையங்கம் ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?

திமிறிக் கொண்டு ஓடும் காளைகளை மடக்கிப் பிடித்து, அதன் கொம்புகளால் ‘தமிழர்கள்’ உடல் கிழிக்கப்பட்டு சிந்தும் இரத்தத்தைப் பார்க்க தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வத்தோடு துடித்துக் கொண்டிருக்கின்றன. மாட்டை அடக்கும் முயற்சியில் மனிதர்கள் செத்துப் பிணமாவது கூட இவர்கள் பார்வையில் தமிழர் வீரமாக போற்றப்படுகிறது. ஜாதி இல்லாமல் வாழ்ந்தது தான் தமிழர் பண்பாடு. இப்போது ஜாதி வெறியையும் தீண்டாமை ஒடுக்குமுறைகளை யும் அப்பட்டமாக வெளிப்படுத்தும்போது ‘இதுதான் தமிழ்ப் பண்பாடா’ என்று மாட்டுக்காக மல்லுக்கட்டுகிறவர்கள் ஏன் கேட்கவில்லை? எங்கே போனது தமிழ்ப் பண்பாடு? இதைக் கேட்டால், காதை திருப்பிக் கொள்கிறார்கள். “மாடுகளை வண்டிகளில் பூட்டி, சித்திரவதை செய்யப்படுவதை எவரும் எதிர்ப்பது இல்லை. ஆனால், மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டை மட்டும் மிருக சித்திரவதை என்பது என்ன நியாயம்?” என்று தொலைக்காட்சிகளில் வாதிடுகிறார்கள். மிருகவதையைவிட இதில் மேலோங்கி நிற்பது மனித வதைதான் என்பதை வசதியாக மறைத்து விடுகிறார்கள். 1999இல் ஜல்லிக்கட்டு நடந்தபோது தலித் மக்களை...

தலையங்கம்: தூக்குத் தண்டனை ஒழிப்பில் மேலும் ஒரு மைல் கல்!

தலையங்கம்: தூக்குத் தண்டனை ஒழிப்பில் மேலும் ஒரு மைல் கல்!

தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுதும் வலிமைப் பெற்றுவரும் சூழலில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நம்பிக்கை ஒளியைத் தருகிறது. கருணை மனுவுக்கு விண்ணப்பித்து நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த 15 தூக்குத் தண்டனை கைதிகளின் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மனித உரிமை வரலாற்றில் ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும். தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்திசிங் ஆகியோரடங்கிய அமர்வு வழங்கியுள்ளஇந்த தீர்ப்பு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நிலவிய குழப்பங்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த சைமன், மாதையன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம் ஆகியோர், இந்தத் தீர்ப்பின் வழியாக தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது ஆறுதலைத் தருகிறது. 8 ஆண்டுகள் 6 மாத சிறைவாசத்துக்குப் பிறகு, ‘தடா’ நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அத்தண்டயைக் குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்...

தலையங்கம்: முதலமைச்சரின் கண்துடைப்பு அறிவிப்பு

தலையங்கம்: முதலமைச்சரின் கண்துடைப்பு அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நிர்ணயித்த  60 சதவீத மதிப்பெண் நிர்ணயத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல மாதங்களாக சமூக நீதி அமைப்புகள், இயக்கங்கள் வலியுறுத்தி வந்தபோதும், அதை மதிக்காமல் ‘கேளாக் காதுடன்’ இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, இப்போது 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்திருக்கிறார். ஒவ்வொரு மாநில அரசும் தகுதித் தேர்வு மதிப்பெண் நிர்ணயிப்பை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு குறைத்துக் கொள்ளலாம் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கூறியிருந்தாலும்கூட, முதலமைச்சர் அந்த உண்மையை மறைக்கவே துடித்தார்; பழியை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் மீது தூக்கிப் போட்டார். அந்த அமைப்பு நிர்ணயித்த மதிப்பெண்ணைத்தான் தமிழக அரசு பின்பற்றுகிறது என்றார். ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை தமது ஆட்சி பின்பற்றி வருவதாக – ஏதோ, தமிழ்நாட்டு மக்கள் விவரம் தெரியாதவர்களாகக் கருதிக் கொண்டு...

தலையங்கம்: ஏமாற்றம்தான்; ஆனாலும்…

தலையங்கம்: ஏமாற்றம்தான்; ஆனாலும்…

இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மாந்தநேயத்துக்கு எதிரான குற்றங்களை தனக்குத் தானே இலங்கை அரசு விசாரிக்கும் நாடகத்துக்கு இம்முறையாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற சர்வதேச தமிழினத்தின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே பதிலாகக் கிடைத்துள்ளது. அய்.நா.வின் 25ஆவது மனித உரிமை மன்றத்தில் இங்கிலாந்து, மொரிசியசு, மான்டி நிக்ரோ, மாசிடோனியா நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவு தீர்மானம், கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தமிழர் பகுதிகளை இராணுவ மயமாக்கிவரும் இலங்கை அரசு, தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, இராணுவத்தையும் சிங்கள மக்களையும் குடியேற்றி வருவதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபையை செயல்பட முடியாத நிலைக்கு முடக்கி வைத்து விட்டது. மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குவதிலிருந்து அன்றாட சிவில் நிர்வாகம் வரை இராணுவம் கையில் எடுத்துக் கொண்டுவிட்டது. இந்த நிலையில் சர்வதேச நேரடிக் கண் காணிப்புக்கு உடனடியாக இலங்கை அரசு உட்படுத்தப்படா விட்டால், தமிழர் நில ஆக்கிரமிப்புகள் மேலும் தீவிரமாகிவிடும் என்ற நியாயமான அச்சம்...

பெண்களை இழிவுபடுத்தும் ‘அய்யப்பன் பக்தி’

office 2010 key windows 7 key sale windows 10 home-key windows 10 education windows 10 pro key office 2016 key windows 10 key office 2013 key windows 7 key  Buy Windows 7  |  Sale Windows 7 Ultimate Keys   |  Windows 10 Home Key Sale  |  windows 8.1 key sale  |  Windows 10 Product Key Sale  |  Microsoft Office 2016 Serial Keys  |  Windows 7 Professional Download ISO  |  MS Office 2016 Key For Activation Latest Full Free Download  |  How to download and install the Microsoft Office 2016   |  Windows 10 Product Key [UPDATED]  |  Windows 7 Ultimate ISO download  |  Legit Windows 7 Product Key Online Store, PayPal...

தலையங்கம் 26.11.1957

தலையங்கம் 26.11.1957

பெரியார் இயக்க வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற நாள் நவ. 26, 1957. அன்றுதான் உலக வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தை அந்நாட்டின் ‘குடிமக்களாக’ அறிவிக்கப்பட்டவர்கள் தீ வைத்து எரித்த நாள். எரித்தவர்கள் 10,000 பேர். கைதானவர்கள் 3,000 பேர். 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அந்த போராளிகள், நீதிமன்றத்தில் எதிர் வழக்காடவில்லை. ஜாதியைப் பாதுகாக்கும் இந்த அரசியல் சட்டத்தைக் கொளுத்த எனக்கு முழு உரிமை உண்டு என்று நீதிமன்றங்களில் வாக்குமூலம் அளித்தனர். அந்தப் போராளிகள், “நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்” என்று நீதிபதி முன் நெஞ்சுயர்த்தி கூறினார்கள். அன்றைய சிறைச்சாலை கொடுமை யானது. சட்ட எரிப்பு வீரர்கள் கிரிமினல் கைதிகளாகக் கருதப்பட்டனர். மிக மிக மோசமான உணவு; மோசமான சுகாதாரம். சிறைச்சாலைக்குள்ளே உடல்நலம் பாதிக்கப் பட்டு ஜாதி...

தலையங்கம் : பெண்கள் உரிமைகளை மறுக்கும் தேர்தல் களம்

தலையங்கம் : பெண்கள் உரிமைகளை மறுக்கும் தேர்தல் களம்

ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் வாக்காளர்களாக இருந்து என்ன பயன்? அரசியலைத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் பெண்களுக்கு முற்றாகவே மறுக்கப்பட்டுத்தான் வருகின்றன. 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம், பாதிக் கிணற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தொடர்ந்து ஆண் ஆதிக்க அரசியல் தலைவர்கள் தடைபடுத்தியே வருகிறார்கள். நாட்டின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மோடி, தனக்குத் திருமணமாகி, ஒரு மனைவி இருக்கிறார் என்ற உண்மையைக்கூட வெளிப்படுத்திடாமல் மறைத்து வைத்துள்ளார். மூன்று முறை சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டியிடும் விண்ணப்பப் படிவத்தில் இதை மறைத்துவிட்டு, இப்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான விண்ணப்பத்தில் மட்டும் குறிப்பிடுகிறார். “மோடி ஏன் மறைத்தார்; இவர் பதவிக்கு வந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா?” என்ற கேள்விகள் எதிர்முகாம்களில் முன் வைக்கப்படுகின்றன. நாம் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறோம். பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஒரு பெண் களத்தில் இறக்கப்பட்டு, அந்தப் பெண் மூன்று முறை தாக்கல் செய்த தேர்தல் விண்ணப்பப் படிவத்தில்...

தலையங்கம்: ‘ஏழு தமிழர் விடுதலை’யை அரசியலாக்குவதா?

தலையங்கம்: ‘ஏழு தமிழர் விடுதலை’யை அரசியலாக்குவதா?

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு சதாசிவம் கோவையில் 18-04-2014 அன்று நடைபெற்ற நீதிபதிகளின் மாநாட்டின் முடிவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் “வழக்கின் தீர்ப்பினை ஒரு வாரத்திற்குள் (தான் ஓய்வு பெறும் நாளுக்கு முன்னதாக) வழங்கப்படும், அதுவரைப் பொறுத்திருங்கள்” எனக் கூறியுள்ளார். அவரது பதவிக்காலம், அவரது பிறந்த நாள் அடிப்படையில் 26-04-2014 – உடன் நிறைவடைகிறது. அந்த அடிப்படையில் 25-04-2014க்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அதுவரை பொறுத்திருங்கள் என்றும் கூறியுள்ளார். அவர் பேட்டியில் கூறியிருக்காவிட்டாலும், எந்த ஒரு நீதிபதியும் தான் விசாரித்த வழக்குகளின் தீர்ப்பை, தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக வழங்குவது என்பது மரபான ஒன்றுதான். ஆனால் ஏதோ 24-04-2014 அன்று தமிழ்நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுவதைக் கணக்கில் கொண்டே, பேட்டி கொடுக்கப்பட்டதைப் போல, தலைமை நீதிபதியின் இயல்பான பேட்டியை விமரிசனம் செய்து தி.மு.க. தலைவர் கலைஞர்...

தலையங்கம்: ‘கடவுள்’ ஒருவர் இருக்கிறாரா?

தலையங்கம்: ‘கடவுள்’ ஒருவர் இருக்கிறாரா?

“கடவுள் எப்படி எங்கள் குழந்தையை இப்படி ஒரு கொடூரமான முறையில் எடுத்துக் கொள்ளலாம்?” என்று கேட்கிறார், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பில் பலியான இளம் பெண் பொறியாளர் சுவாதியின் பாட்டி! காலம் முழுதும் கடவுளை நம்பிக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் நியாயமான கோபத்துக்குப் பின்னால், கொந்தளிக்கும் உணர்வுகளை குறைத்து மதிப்பிட முடியாது. பேத்தியைப் பறி கொடுத்த துயரத்தின் வெளிப்பாடு – அவர் நம்பும் கடவுளின் நேர்மையை சந்தேகிக்க வைத்துவிட்டது. எப்படியோ குண்டு வைப்பதை கடவுளால் தடுக்கவும் முடியவில்லை. இப்போது மக்களின் கோபம் ஆட்சியின் செயலின்மை மீதுதான். ‘கடவுள்’ தப்பி விட்டார்! ‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பது’ என்று கூறுவார்கள். எல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆட்சி நிர்வாகம் சுறுசுறுப்பாகக் களமிறங்கிவிடும். ஆரவாரம், பதட்டம், குற்றவாளிகள் தேடுதல், பாதுகாப்பு கெடுபிடிகள் – இவை எல்லாம் சில வாரங்கள் தொடரும். தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து செய்தி கிடைக்காத சோகத்தில் மூழ்கிக் கிடந்த...

தலையங்கம் : கால்டுவெல் தந்த கருத்தியல் (1814-2014)

தலையங்கம் : கால்டுவெல் தந்த கருத்தியல் (1814-2014)

1814ஆம் ஆண்டில் அயர்லாந்து நாட்டில் பிறந்த இராபர்ட் கால்டுவெல், 200 ஆம் ஆண்டுகளில் நினைவு கூரப்படுகிறார். மதம் பரப்புவதற்குத்தான் அவர் இந்தியா வந்தார். ஆனால், அவரது தொண்டு திராவிட மொழிகளின் ஆய்வுகளை நோக்கித் திரும்பியது. ‘திராவிடம்’, ‘திராவிட இயல்’ என்ற கருத்தியலை தனது ஆய்வு மூலம் நிறுவிக் காட்டிய பெருமைக்குரியவர் கால்டுவெல்! கால்டுவெல்லுக்கு முன்பு பிரிட்டிஷ் புலமையாளர்கள் பலரும் ‘இந்தியா’ எனும் நிலப் பகுதி மக்கள், ‘இந்தோ-ஆரிய’ மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்தே உருவானவை என்றும் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். வில்லியம் ஜோன்ஸ், ஹீம் போல்ட் போன்ற “புலமையாளர்கள்” சமஸ்கிருதத்தையும், அதன் பார்ப்பன பண்பாட்டையும் உயர்த்திப் பிடித்தனர். ஆரியப் பார்ப்பனர்கள், அய்ரோப்பிய பண்பாட்டுடன் தங்களை இணைத்து பெருமை பாராட்டிய காலத்தில், கால்டுவெல் முன் வைத்த ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆய்வு’ – ஆரிய மொழிக் குடும்பம் வேறு, திராவிட மொழிக் குடும்பம் வேறு...

தலையங்கம் : அதிகார மாற்றம்

தலையங்கம் : அதிகார மாற்றம்

‘இந்து இராஷ்டிரத்தை’ உருவாக்கும் கொள்கையைக் கொண்டவர்களிடம் அரசியல் அதிகாரம் போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்பதை மக்களிடம் உணர்த்த விரும்பியதால்தான் திராவிடர் விடுதலைக் கழகம் – இடதுசாரி கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், தலித் அமைப்புகளை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. எந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதைவிட எந்தக் கொள்கை வெற்றி பெற வேண்டும் என்ற பார்வையில் கழகம் எடுத்த முடிவு இது. இப்போது ‘இராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ என்ற ‘இந்து இராஷ்டிரத்தை’ அமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துவிட்டது. அந்த அமைப்பு களமிறக்கிய நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராகிறார். நாடாளுமன்றம், வாக்குரிமை என்ற “ஜனநாயக” வழிமுறைகளில் ‘இராம இராஜ்யத்தை’ அமைக்கும் முயற்சி என்பதேகூட ஒரு விசித்திர முரண்பாடுதான். பார்ப்பன அதிகாரம் மட்டுமே இராமஇராஜ்யத்தை வழி நடத்தியதாக இராமாயணங்கள் கூறுகின்றன. இந்தியா, இறையாண்மை கொண்ட சோஷலிச மதச்சார்பற்ற குடியரசு என்று வலியுறுத்தும் அரசியல் சட்டத்துக்கு உண்மையாக இருக்க வேண்டியவர் ஒரு...

தலையங்கம் : கள்ள மவுனம்! 0

தலையங்கம் : கள்ள மவுனம்!

19 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையால் “தூக்கிலிடப்பட்ட” தனது கணவரின் மரணத்துக்கு நீதியைப் பெற்றிருக்கிறார், அஞ்சலை! அரியலூர் மாவட்டம் வேப்பூர் ஆதி திராவிடர் குடியிருப்பில் வசித்துவரும் அஞ்சலை நடத்திய போராட்டம் இப்போது உதவி ஆணையராக உள்ள ஒரு காவல்துறை அதிகாரிக்கு கைவிலங்கிடச் செய்திருக்கிறது. மைனர் பெண் ஒருவர் காதலனுடன் ஓடிய வழக்கு அது. பெண்ணின் தந்தை, மகளைக் கண்டுபிடித்துத் தர உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கிய பாடலூர் காவல் நிலைய ஆய்வாளர் கஸ்தூரி காந்தி என்பவர் அடைக்கலம் தந்த சந்தேகத்தின் பேரில் பாண்டியன் எனும் சுமை தூக்கும் தலித் தொழிலாளியை விசாரிக்கிறார். ஏதும் தெரியாத அந்த அப்பாவி கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கினார். காவல்துறை நடத்திய படுகொலை இப்போது நிரூபிக்கப்பட்டு, அதிகாரி கஸ்தூரி காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் இயக்கங்களுடன் இணைந்து அஞ்சலை நடத்திய போராட்டம் வீண் போகவில்லை. குறிப்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் இந்த வழக்கைத் தொடர்ந்து...

தலையங்கம் : தடை போட வேண்டுமாம்!

தலையங்கம் : தடை போட வேண்டுமாம்!

மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஒரு விசித்திர வழக்கை சந்தித்திருக்கிறது. ‘பிராமணர்’களை எதிர்த்தும் அவதூறூகவும் பேசி வரும் தி.க. தலைவர் கி.வீரமணி, தந்தை பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் “பிராமணருக்கு” எதிராகப் பேச தடைவிதிக்க உத்தரவிடவேண்டும் என்பது வழக்கு. வழக்கைத் தொடர்ந்தவர் சிவகாசியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற வழக்கறிஞர். விசாரித்த நீதிபதிகள் வி.இராம சுப்பிரமணியன், வி.எம். வேலுமணி மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். “விமர்சனம் என்பது கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி கருத்துரிமைக்கு அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறது. சரியான விமர்சனங்களை வரவேற்க வேண்டும். விமர்சனம் முறையற்றதாக நியாயமற்றதாக இருக்குமானால், ஒன்று அதை புறக்கணிக்கலாம். மற்றொன்று சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரலாம். விமர்சனம் எல்லை மீறினால் புத்தர் காட்டிய வழியில் அமைதி காக்கலாம். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சகமனிதர்களை தனது வைப்பாட்டி மக்கள், சூத்திரர்கள்...

தலையங்கம் : இருக்கின்றாய், இதயமாக!

தலையங்கம் : இருக்கின்றாய், இதயமாக!

இதயத்தின் துடிப்புக்கு ஜாதி கிடையாது, மதம் கிடையாது, ஆண்-பெண் பாகுபாடு கிடையாது. தேசம்-மொழிகளையும் கடந்து நிற்கிறது. இந்த உடலின் இயக்கம்; மனித உடலும், உடல் இயக்கமும் வெளிப் படுத்தும் ஒரே அடையாளம் மனிதர்கள் என்ற ஒன்றை மட்டும்தான். 27 வயதே நிறைந்த இளைஞன் லோகநாதன் சாலை விபத்துக்குள்ளாகி அவரது மூளையின் இயக்கம் மரணித்துவிட்ட நிலையில் இதயம் மட்டும் உயிர்ப்புடன் துடித்தது. அதே நேரத்தில் அடையாறு தனியார் மருத்துவமனை ஒன்றில் இதயப் பாதிப்புக்கு உள்ளான மும்பையைச் சார்ந்த அலோவி என்ற 27 வயது பெண்ணுக்கு மாற்று  இருதயம் ஒன்று கிடைத்துவிட்டால் உயிர் பிழைத்துவிட முடியும்! மரணத்தைத்தழுவிவிட்ட தனது மகனின் இருதயம் வேறு ஒரு உடலில் துடித்துக் கொண்டிருக்குமானால் – அன்பு மகனின் மறக்க முடியாத நிலைத்த நினைவாக இருக்குமல்லவா? அப்படி ஒரு அறிவார்ந்த முடிவுக்கு வந்தார் அந்தத் தாய். அவர் அரசு மருத்துவமனையில் செவிலியர். பெருமைக்குரிய அவரது பெயர் இராஜலட்சுமி. துடிக்கும் இருதயத்தை...

தலையங்கம் மதவெறிக்கு எதிராக  விஞ்ஞானிகள் – படைப்பாளிகள்

தலையங்கம் மதவெறிக்கு எதிராக விஞ்ஞானிகள் – படைப்பாளிகள்

மோடியின் பார்ப்பனிய மத ஆட்சி -குறுகிய காலத்திலேயே பின்னடைவுகளை சந்திக்கத் தொடங்கி விட்டது. மக்களாட்சி முறையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் – அந்தக் கட்டமைப்புக்குள் மதவெறி ஆட்சியை நிறுவிட முயலும் முயற்சிகளும் அதற்கான வெறுப்புப் பேச்சுகளும் உலகம் முழுதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. சுமார் 40 எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் கலை படைப்புகளுக்காக கிடைத்த விருதுகளை திருப்பி அளித்து எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர். மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவது அணுகுண்டைவிட ஆபத்தானது என்று 120 விஞ்ஞானிகள் கூட்டாக கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளனர். உயிரியல் துறையின் தலைசிறந்த விஞ்ஞானியும், ‘தேசிய அறிவு ஆணையம்’ என்ற அமைப்பில் தலைவராக இருந்தவருமான ‘பத்மபூஷன்’ விருது பெற்ற பி.எம். பார்கவா, தனது விருதை திருப்பி அனுப்பிவிட்டார். “இந்த அரசுக்கு சகிப்புத் தன்மை இல்லை; பகுத்தறிவு மீதும் அறிவியல் மீதும் தாக்குதலை நடத்துகிறது” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “மதத்தை அரசியலோடு கலக்கக் கூடாது. நம்பிக்கைகள் வீட்டிற்குள்ளேயே...

தலையங்கம் – நேபாளத்தில் ‘இந்து’ மத ஆட்சி ஒழிந்தது!

தலையங்கம் – நேபாளத்தில் ‘இந்து’ மத ஆட்சி ஒழிந்தது!

உலகின் ஒரே ‘இந்து’ நாடு என்று பார்ப்பனியம் பெருமையுடன் பறைசாற்றி வந்த ‘நேபாளம்’ – மதச்சார்பற்ற நாடாகி விட்டது. ‘இந்து மன்னர்’ ஆட்சி நடந்தது. அந்த மன்னர் விஷ்ணுவின் ‘மறு அவதாரம்’ என்று, மக்களை பார்ப்பனியம் நம்ப வைத்தது. மனு சாஸ்திரமே நாட்டின் சட்டமாக இருந்தது. மன்னர் ‘க்ஷத்திரியர்’; அவர் ‘பிராமண புரோகிதர்’ காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். சங்கராச் சாரி பார்ப்பனர்கள், தங்களின் தாய் நாடாக நேபாளத்தைக் கருதி வந்தனர். 1994ஆம் ஆண்டு முதல் ‘மனு தர்ம’ மன்னராட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கியப் போராட்டத்தைத் தொடங்கினர். 2006இல் ஆயுதப் போராட்டத்தை கை விட்டு, அரசியல் பாதைக்குத் திரும்பினர். அதைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு 239 ஆண்டுகால மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி முறையைக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டது. ‘மதச்சார்பற்ற’ கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த...

தலையங்கம் – விஷ்ணுபிரியாவின் விபரீத மரணம்! 0

தலையங்கம் – விஷ்ணுபிரியாவின் விபரீத மரணம்!

நாமக்கல் மாவட்டத்தை கடந்த சில மாதங்களாகவே ஜாதிவெறி சக்திகள் தங்களின் மேலாதிக்கத்துக்குள் கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் இப்போது ஒரு காவல்துறை பெண் அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை வரை சென்றிருக்கிறது. தலித் சமூகத்திலிருந்து அதுவும் ஒரு பெண் டி.எஸ்.பி தேர்வு பெற்று காவல்துறையில் பணியாற்ற வருகிறார் என்றால், அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. அவர்,எத்தனையோ தடைகளை தனது கடும் முயற்சியாலும் திறமையாலும் வென்று, கடந்து வந்திருப்பார் என்பதில் இருவித கருத்துக்கு இடமிருக்க முடியாது. கோகுல்ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரியும், உள்ளூர் ஆதிக்க ஜாதியைச் சார்ந்த பெண்ணும் சந்தித்தார்கள் என்ற ‘குற்ற’த்துக்காக ஜாதி வெறி கும்பல் ஒன்று கோகுல் ராஜ் தலையை துண்டித்து, தண்டவாளத்தில் வீசியது. இதில் தேடப்படும் முதன்மை குற்றவாளியான கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்த யுவராஜ் என்ற நபர், இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நபர் தலைமறைவாக இருந்து கொண்டு ‘வாட்ஸ்அப்’ வழியாக காவல்துறைக்கு சவால்விட்டு ஜாதி வெறியைத் தூண்டி,...

தலையங்கம் ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் துரோகம் 0

தலையங்கம் ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் துரோகம்

சிறீலங்காவில் இரண்டு பெரும் சிங்களர்களின் கட்சிகளான அய்க்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு என்ற பெயரில் சிங்களப் பேரினவாத ஆட்சியை அமைத்து விட்டன. தமிழர்களின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரதேசத்தில் 16 இடங்களில் தேர்வு பெற்று நாடாளுமன்றம் சென்றாலும் தமிழரின் முக்கியத்துவம் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டு விட்டது. சிங்கள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து ‘போர்க் குற்றங்கள்’ தொடர்பாக இலங்கைக்கு எதிரான தனது நிலைப் பாட்டை அமெரிக்கா மாற்றிக் கொண்டு விட்டது. இலங்கை அரசின் ‘ஒப்புதல் கலந்தாலோசனை’யுடன் இலங்கை அரசே நடத்தும் உள் நாட்டு விசாரணையை மட்டுமே அய்.நா.வில் தீர்மானமாகக் கொண்டு வரப் போவதாக அமெரிக்காவின் தெற்காசிய நாடுகளுக்கான அதிகாரி நிஷா பி°வால் கூறியிருக்கிறார். (இவர் பிறப்பால் குஜராத்தி பனியா – அமெரிக்காவில் குடியேறியவர்) நடந்து முடிந்த இலங்கை தேர்தலில் எதிரும் புதிருமான சிங்களர் கட்சிகள் கைகோர்த்து ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இந்த அறிவிப்பையும் இணைத்துப்...

தலையங்கம் – இளவரசனை பலி கொண்ட ஜாதி வெறி 0

தலையங்கம் – இளவரசனை பலி கொண்ட ஜாதி வெறி

ஜூலை 4, வரலாற்றில் ஜாதியத்தின் கோர முகம் தலைவெறித்தாடிய நாள்! வன்னிய சமூகத்தைச் சார்ந்த திவ்யாவும், தலித் சமூகத்தைச் சார்ந்த இளவரசனும் ஜாதி கடந்து காதலித்தக் “குற்றத்துக்காக” ஜாதி வெறியர்களால் தண்டிக்கப்பட்டு, இளைஞன் இளவரசன் தனது வாழ்க்கையை ரயிலில் விழுந்து முடித்துக் கொண்ட நாள்! இளவரசன் மரணத்துக்குத் தூண்டியது – ஜாதி வெறியைக் கட்டமைத்து அரசியலில் குளிர்காய முனையும் ஒரு கூட்டம்! நீதிமன்றம் வரை பிரச்சினையை கொண்டுச் சென்று இளம் காதலர்களைப் பிரித்து அந்த சோகத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கூத்தாடியது இந்த ஜாதி வெறிக் கும்பல். இந்தக் கொடுமை தொடர்கிறது. தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு, படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் தலித் பெண்கள். முதல் தலைமுறையாக இவர்கள் படிக்கத் தொடங்குவதும், சுயமரியாதையோடு வாழ விரும்புவதும் ஜாதி ஆதிக்கக் கும்பலுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. தேர்தலுக்குப் பிறகு, பா.ம.க.வுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக கடலூர் மாவட்டம் வடக்கு மாங்குடி கிராமத்தில் வாழ்ந்த தலித் மக்கள் தாக்கப்பட்டு, இருவர்...

தலையங்கம் தேன் கூட்டைக் கலைக்கிறார்கள்! 0

தலையங்கம் தேன் கூட்டைக் கலைக்கிறார்கள்!

மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து இந்தி மொழித் திணிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது பா.ஜ.க. ஆட்சி. பிரதமர் இந்திமொழியை மட்டுமே தனது பேச்சு மொழியாகப் பயன்படுத்துவார் என்று முதல் அறிவிப்பு வந்தது. அது அவரது உரிமை. ஆனாலும்கூட குஜராத்தை தாய்மொழியாகக் கொண்ட அவர், இந்தியை ஏன் பேச்சு மொழியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவதாக, சமூக வலைதளங்களில் மத்திய அரசு அதிகாரிகள் கருத்துக்களை வெளியிடும்போது, இந்தி மொழிக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று மோடி ஆட்சி அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தபோது இந்தி பேசும் மாநிலங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு என்று சமாதானம் கூறினார்கள். ஆங்கிலத்தின் இணைப்பு மொழிக்கான பயன்பாட்டை, படிப்படியாக அகற்றிட வேண்டும் என்பதே இதற்கான உள்நோக்கம் என்பது எவராலும் புரிந்து கொள்ளக்கூடியதே யாகும். இப்போது தமிழ்நாட்டில் ‘தினத்தந்தி’ நாளேட்டில் (8.7.2014) மத்திய இரயில்வே துறை, இந்தி மொழியில் மட்டுமே ஒரு விளம்பரத்தைச் செய்துள்ளது. அந்த விளம்பரம் இரயில்வே...

தலையங்கம் – தனியார் மயமாகும் தொடர்வண்டித் துறை! 0

தலையங்கம் – தனியார் மயமாகும் தொடர்வண்டித் துறை!

உலகின் பொதுத் துறை நிறுவனங்களிலேயே மிகப் பெரியது இந்திய தொடர்வண்டித் துறை. ஒவ்வொரு நாளும் 2 கோடியே 30 இலட்சம் மக்கள் பயணிக்கும் இந்தத் துறையின் அடிப்படை நோக்கமே, ஏழை எளிய மக்களுக்கான சேவை என்பதுதான். ஆனால், இந்த அடிப்படை நோக்கத்தையே மாற்றி வசதிப் படைத்த பணக்காரர்களுக்கும், இந்தி பேசும் மாநிலங்களுக்குமான துறையாக (ஞசடி சுவைஉh-ஞசடி ழiனேi) மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டு மோடி ஆட்சியின் தொடர்வண்டித் துறைக்கான நிதிநிலை அறக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு பயணிகள் கட்டணத்தில் 14.2 சதவீதமும், சரக்குக் கட்டணத்தில் 6.5 சதவீதமும் உயர்த்திவிட்டார்கள். இப்போது பயணிகள் கட்டணத்தை அவ்வப்போது உயர்ந்து கொண்டிருக்கும் எரிபொருள் விலையோடு இணைத்து விட்டார்கள். இனி, எரிபொருள் விலை உயரும் போதெல்லாம் பயணிகள் கட்டணங்களும் உயரும். “உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். மந்திரம் ‘பிராமணர்’களுக்குக் கட்டுப்பட்டது” என்ற ‘வேத’ சுலோகத்தைப்போல் “கட்டண உயர்வு,...

தலையங்கம் – சமஸ்கிருத வாரம்! 0

தலையங்கம் – சமஸ்கிருத வாரம்!

‘சமஸ்கிருத வாரம்’ கடைபிடிக்க வேண்டும் என்று மோடி ஆட்சியில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியிருப்பது, சி.பி.எஸ்.ஈ. போன்ற மத்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தமிழக அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கும்தான். பல்வேறு அரசியல் கட்சிகள் இதை எதிர்த்திருப்பதோடு, தமிழக முதல்வரும் எதிர்த்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி ஒன்றைத் தவிர, அநேகமாக அனைத்துக் கட்சிகளும் இந்தத் திணிப்புக்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும்! சமஸ்கிருதம்  – ஒரு மொழி மட்டுமல்ல; அது, பார்ப்பன மேலாதிக்கத்தின் குறியீடும் ஆகும். மோடியின் பா.ஜ.க. ஆட்சி, பார்ப்பனப் பண்பாடே இந்தியப் பண்பாடு என்ற கொள்கைப் பார்வையோடு இந்த முயற்சிகளில் இறங்கி யிருப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே ‘சமஸ்கிருதத்தை’ பேசுவதாக 2001 மக்கள் தொகை அறிக்கையில் பதிவு செய்திருப்போர் 14,135 பேர் மட்டுமே. இதுவும்கூட 1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 49,736 ஆக இருந்து...

தலையங்கம் – சுப்ரமணியசாமிகள்! 0

தலையங்கம் – சுப்ரமணியசாமிகள்!

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் போட்டுத் தந்த துரோகப் பாதையில் வீரியத்துடன் நடைபோடுகிறது, பா.ஜ.க. ஆட்சி. அய்.நா.வால் போர்க் குற்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இலங்கை அதிபர் இராஜபக்சே, மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்சி மனு போடுகிறது. அய்.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களால் இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட மனித உரிமையாளர்கள் குழு இந்தியாவுக்கு வருவதற்கு ‘விசா’ வழங்க மறுத்து விட்டார்கள். ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறீலங்காவுடன் இணைந்து வெளிப்படையாக செயல்படும் சுப்ரமணியசாமி என்ற பார்ப்பனர், பா.ஜ.க.வின் ‘செயல் உத்திக் குழு’ தலைவர் பதவிக்கு முடிசூட்டப்பட்டுள்ளார். பதவி கிடைத்தவுடன் இலங்கைக்குப் போய் இராஜபக்சேயையும் அவரது தம்பி, கோத்தபய இராஜபக்சேயையும் சந்தித்து இலங்கை அரசுக்கு ஆதரவாக வேகம் வேகமாக காய்களை நகர்த்தக் தொடங்கிவிட்டார்....

தலையங்கம் ‘வேதகாலம்’ திரும்புகிறது! 0

தலையங்கம் ‘வேதகாலம்’ திரும்புகிறது!

மோடியின் ஆட்சி நாட்டை மீண்டும் வேத காலத்துக்கு அழைத்துச் செல்ல உறுதி ஏற்றிருப்பதாகவே தெரிகிறது. ஒன்றன்பின் ஒன்றாக அதற்கான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 14,135 பார்ப்பனர்கள் மட்டுமே தாய்மொழியாகப் பதிவு செய்துள்ள சமஸ்கிருதத்தை இந்தியாவின் அனைத்து மாநில சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளிலும் வார விழாக்களாகக் கொண்டாடி போட்டிகள் நடத்தி அனைத்து மொழிகளுக்குமே ‘சமஸ்கிருதமே தாய்’ என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மனித வளத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதைத் தொடர்ந்து ஓம் பிரகாஜ் என்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த ஜூன் 6, 2014இல் நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில், தனி நபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ‘சமஸ்கிருத மேம்பாட்டுச் சட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதா, மத்திய, மாநில அரசுப் பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப்பாடமாக்குவதோடு, செயல்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு...

தலையங்கம் இவர்கள் செய்த குற்றம் என்ன? 0

தலையங்கம் இவர்கள் செய்த குற்றம் என்ன?

மனித உயிர்கள் இங்கே மலிவானவை; அதுவும் ஜாதியில், பொருளாதாரத்தில் அழுத்தப்பட்டுக் கிடக்கும் மக்களின் உயிர் மதிப்பில்லாதவை. தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் நடந்திருக்கும் நிகழ்வு ‘மனிதம்’ இந்த சமூகத்தில் மரணித்து விட்டதா என்று கேட்கத் தூண்டுகிறது. இரண்டு நாள்கள் நடக்கும் இசக்கி யம்மனின் கோயில் திருவிழாவுக்காக கிராமத் தில் பல ஊர்களிலிருந்தும் குடும்பத்துடன் கூடியிருக்கிறார்கள். முதல் நாள் இரவு, அந்த ஏழை ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கோயில் மைதானத்திலேயே கழிக்க அவர்களின் குழந்தைகள் அதற்கு அருகே கம்பி வேலி அமைக்கப்பட்ட ஒரு மைதானத்தில் விளையாடப் போய் விட்டார்கள். அங்கே நிறுத்தபட்டிருந்த ஒரு கார், இவர்களின் விளையாட்டுக் கருவியானது. கார்கள் – இந்தக் குழந்தைகளின் நிஜ வாழ்க்கையோடு நெருங்க முடியாது. அது அவர்களுக்கு கனவுலக குதூகலம். கடனைத் திருப்பித் தராதவரிடமிருந்து ஒரு வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்து, நிறுத்தி வைத்திருந்த கார் அது. முள் வேலியைத் தாண்டிய நான்கு குழந்தைகள். காரைக் கண்ட...

தலையங்கம் நாத்திகர் மரபு : நீதிமன்றம் தரும் வெளிச்சம் 0

தலையங்கம் நாத்திகர் மரபு : நீதிமன்றம் தரும் வெளிச்சம்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி முடித்த மேட்டூர் நாத்திகர் பேரணிக்கும் வழமைபோல காவல்துறை அனுமதி மறுத்து, உயர்நீதிமன்றத்தின் வழியாக அனுமதி பெற வேண்டியிருந்தது. வினாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி காவல்துறை கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி தமது ஆணையில் நாத்திக மரபு குறித்து பதிவு செய்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். “ஆத்திகம்-நாத்திகம் இரண்டுமே இந்திய மரபில் ஒன்றுக்கொன்று உதவி வந்திருக்கிறது. இரண்டில் எந்த ஒன்றையும் ஒழிக்கவோ, புறந்தள்ளவோ முடியாது. இரண்டு கருத்தியல்களும் ஒன்றை ஒன்று எதிர்த்தாலும், இரண்டுமே சமூகப் பிணைப்பை வலிமைப்படுத்துவதற்கான இழையோட்டத்தை வழங்கியிருக்கிறது. எனவே இதுபோன்ற ஊர்வலங்களும் (நாத்திகப் பேரணி) சமூக செயல்பாடுகளுக்கான பங்களிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது” – என்று நீதிபதி வி.இராம சுப்பிரமணியன் அனுமதிக்கான ஆணையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். சமூக மாற்றத்துக்கு முரண்பாடுகளுக்கிடையிலான போராட்டத்தை கூர்மையடையச் செய்தல் அவசியம் என்ற கண்ணோட்டத்தோடு உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நாம் வரவேற்கிறோம். ‘வேதம்’ ஆரிய பார்ப்பனர்களால் திணிக்கப்பட்ட காலத்திலிருந்தே வேத...

தலையங்கம்  – குரு-உத்சவ் 0

தலையங்கம் – குரு-உத்சவ்

  ‘சமஸ்கிருத வாரத்தை’த் திணித்த பா.ஜ.க. ஆட்சி, இப்போது ஆசிரியர் நாளை ‘குரு-உத்சவ்’ என்று சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்து மனிதவள மேம்பாட்டுத் துறை ஆணையிட்டுள்ளது. இந்தியாவை “சமஸ்கிருத மயமாக்கும்” முயற்சிகள் தீவிரமாகி வருகின்றன. ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் நாள் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் நினைவாக ஆசிரியர் நாளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் பெயரை இப்போது சமஸ்கிருதமாக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே நடந்த “திருப்பணிகள்”தான் இப்போது மீண்டும் தூசி தட்டி அமுல்படுத்துகிறார்கள். அப்போது ‘வித்யா பாரதி’ என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசு நிதி உதவியோடு நாடு முழுதும் ‘இந்துத்துவ’ கல்வித் திட்டத்தை செயல்படுத்தியது. ‘வித்யா பாரதி’யின் பொதுச் செயலாளராக இருந்த தீனானாத் பட்டா என்பவர், இந்துத்துவ கலாச்சாரத்தின் அடிப்படையிலான ஒரு மாற்றுக் கல்வி முறையை உருவாக்குவதுதான் இதன் நோக்கம் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். ‘வித்யாபாரதி’ நாடு முழுதும் நர்சரி முதல் கல்லூரி வரை, 14000...

தலையங்கம் – தேசிய சுயநிர்ணய உரிமைக்கு கிடைத்த வெற்றி 0

தலையங்கம் – தேசிய சுயநிர்ணய உரிமைக்கு கிடைத்த வெற்றி

ஸ்காட்லாந்து நாட்டில் நடத்திய வாக்கெடுப்பில் (செப். 18, 2014) அந்நாடு, பிரிட்டனுடன் இணைந்து நிற்பதற்கு ஆதரவாக 55 சதவீத மக்களும், தனி நாடாக வேண்டும் என்று 45 சதவீத மக்களும் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பு முறையை ஏற்றுக் கொண்ட பிறகு, அதில் பெரும்பான்மை மக்களின் முடிவே இறுதியானது. சில ஏடுகள் ‘பிரிவினை வாதம்’ தோற்றுப் போய்விட்டது என்று கொச்சைப்படுத்துகின்றன. உலகில் பல்வேறு தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமைக்காக நடத்தும் போராட்டங்களுடன் முடிச்சுப் போட்டு, இனி எங்கும் பிரிவினையே கூடாது என்று தங்கள் நாட்டாமை தீர்ப்புகளை வழங்குகிறார்கள். உண்மையில், ஸ்காட்லாந்தில் நடந்த வாக்கெடுப்பு “தேசிய சுயநிர்ணய உரிமை” என்ற கொள்கைக்குக் கிடைத்துள்ள வெற்றி. தங்களுக்கான சுயநிர்ணய உரிமையை ‘ஸ்காட்லாந்து’ மக்கள், முறையான வாக்கெடுப்பு வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முடிவு, பிரிந்து செல்வதாகவும் இருக்கலாம் அல்லது இணைந்திருப்பதாகவும் இருக்கலாம்; பிரச்சினை அதுவல்ல. முடிவெடுக்கும் உரிமை மக்களுக்கே உண்டு! இதில் முக்கியமாக ஒரு கருத்தை சுட்ட வேண்டும். 650...

தலையங்கம் – தமிழக அரசியல்-அரசுகளில் திடீர் மாற்றம் 0

தலையங்கம் – தமிழக அரசியல்-அரசுகளில் திடீர் மாற்றம்

அரசியலில் தனக்கு எதிரிகளே இல்லாமல் காணாமல் போய் விட்டார்கள் என்று சில வாரங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியபோது, ஊழல் தடுப்புச் சட்டம் தனக்கு எதிரியாக வந்து நிற்கப் போகிறது என்று அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். 18 ஆண்டுகாலம் பல்வேறு தடைகளைத் தாண்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு செப்டம்பர் 27ஆம் தேதி முடிவுக்கு வந்தது. 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் முதல்வர் பதவியையும் இழந்தார். ரூ.100 கோடி அபராதத் தொகை. அவருடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டுள்ள சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வி.என்.சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறை; ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்று பதவி இழக்கும் முதல் முதலமைச்சர் ஜெயலலிதாதான். 4 ஆண்டுகால தண்டனைக் காலத்துடன் சேர்த்து அடுத்த 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட சட்டம் தடை...

தலையங்கம் – வரலாற்றுப் புரட்டு 0

தலையங்கம் – வரலாற்றுப் புரட்டு

இந்துத்துவம் – புனைவுகளை வரலாறுகளாக கட்டமைக் கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் வர்ணாஸ்ரம சமூக அமைப்பை நிலைப்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள். வர்ணக் கலப்பில் பிறந்தவர்கள் மீண்டும் வர்ணத்தின் கீழ்கொண்டுவரப்பட முடியாததால், ஜாதிகளாக பிரிக்கப்பட்டனர். ஜாதிப் பிரிவுகள் ஜாதியமைப்பாகி அதுவே தீண்டாமைக்கும் வழி வகுத்தது. இந்த வரலாற்று உண்மைகளை புறந்தள்ளிவிட்டு, ‘தீண்டாமை’ உருவாக்கியதே இஸ்லாமியர்கள் என்ற புதிய கதைகளை கட்டமைக்கிறார்கள். உ.பி.யில் பா.ஜ.கவைச் சார்ந்த விஜய் சாங்கர் சாஸ்திரி என்ற முன்னாள் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் (இவர் ஒரு தலித்), பட்டியல் இனப் பிரிவினரின் “வரலாறுகளை” மூன்று தொகுதிகளாக எழுதியுள்ளார். வால்மீகி, காதிக்ஸ் மற்றும் சாம்கர் ஆகிய தலித் மக்களின் வரலாறாக முன் வைக்கப்பட்ட மூன்று தொகுதிகளை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்வில்தான் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறது என்ற கருத்தை முதன்முதலாக வெளியிட்டார். முஸ்லிம் மன்னர்கள ஆட்சியில் கட்டாய மத மாற்றத்தை ஏற்க மறுத்தவர்களே...

தலையங்கம் – பிரதமரின் பேச்சா, இது? 0

தலையங்கம் – பிரதமரின் பேச்சா, இது?

புராண காலங்களிலேயே இந்தியா, மரபணு விஞ்ஞானத்திலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் சிறந்து விளங்கியது என்று ஒருவர் பேசியிருக்கிறார். பேசியவர், ஏதோ ‘புராண கதாகாலட்சேபம்’ நடத்தும் வைதீகர் அல்ல; இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி. பேசிய இடம் – சர். எச்.என்.ரிலையன்சு அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆய்வு மய்யத் திறப்பு விழா! புராண காலத்து அறிவியலை உறுதிப்படுத்த மோடி கூறியிருக்கும் எடுத்துக்காட்டுகள் என்ன தெரியுமா? மகாபாரதத்தில் கர்ணன், தாயின் கர்ப்பப்பையிலிருந்து பிறக்கவில்லையாம். எப்படி பிறந்தார்? அந்தக் காலத்திலேயே மரபணு விஞ்ஞானம் இருந்ததாம். அதேபோல் விநாயகன் தலையில் யானையை பொருத்தியிருப்பது அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறதாம். மோடியின் இந்த ‘ஆராய்ச்சி’யைக் கேட்டு மருத்துவர்கள் விலா நோக சிரித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மோடியின் ‘மேதை’மையை வெளிப்படுத்தும் இந்த ‘சிந்தனை’களை ஊடகங்கள் பலவும் திட்டமிட்டு இருட்டடித்து, மோடியைக் காப்பாற்றியுள்ளன. இந்த அபத்தத்தை எந்த ஒரு விஞ்ஞானியும் ஏன் மறுக்க முன்வரவில்லை என்று ‘ஹெட்...

தலையங்கம் – மோடியின் பார்ப்பன ஆட்சி 0

தலையங்கம் – மோடியின் பார்ப்பன ஆட்சி

மோடியின் அமைச்சரவை பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் நிரம்பி வழிகிறது. முக்கிய துறைகளின் பொறுப்பை திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல், பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்று மோடி முடிவுக்கு வந்துவிட்டார் போலும்! 21 புதிய அமைச்சர்கள் நியமனத்துக்குப் பிறகு அமைச்சரவை யின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லப்பட்டாலும் அவர் பிறந்த ‘வைசிய’ சமூகம் முன்னேறிய ஜாதிப் பிரிவிலிருந்து பிறகுதான் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அடுத்த நிலையில் உள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இராஜபுத்திர’ முன்னேறிய சமூகத்தைச் சார்ந்தவர். இவர்களைத் தவிர முக்கியப் பொறுப்புகளின் அதிகாரம் பார்ப்பனர்களுக்கே ‘தாரை’ வார்க்கப்பட்டுள்ளது. ஆர்.எ°.எ°. அமைப்பு, ‘பார்ப்பனர்-வைசியா-இராஜபுத்திரர்’ என்ற சமூக மேலாதிக்கக் குழுவினரின் கட்டுப்பாட்டில் அவர்கள் நலனையே பிரதிபலிக்கக்கூடிய அமைப்புதான். அதுவே அமைச்சரவையிலும் எதிரொலிக்கிறது. வெளிநாட்டுத் துறை அமைச்சராக உள்ள சுஷ்மா சுவராஜ், நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி, கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, சிறு,குறு மற்றும்...

தலையங்கம் – கருநாடக “இந்து” துறவிகளைப் பாருங்கள்! 0

தலையங்கம் – கருநாடக “இந்து” துறவிகளைப் பாருங்கள்!

தமிழ்நாட்டில் இந்து மதத்தின் காவலர்களாக புறப்பட்டிருக்கும் அமைப்புகள், எவ்விதச் சமூக சிந்தனையுமின்றி பெரியார் இயக்கத்தைக் கண்மூடித்தனமாக எதிர்த்து வருகின்றன. ‘இந்து ஒற்றுமை’ பற்றி கூப்பாடு போடும் அவர்கள், அதற்கு தடையாக இருக்கும் ஜாதி, தீண்டாமைப் பற்றி பேசுவதே இல்லை. ‘தீண்டாமைக்கு’ உள்ளாக்கப்படும் மக்களும் ‘இந்துக்கள்’ தானே என்பது குறித்து இவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்ததைப்போல், தமிழகத்திலும் வரவேண்டும் என்றால் உடனே ‘நாத்திகப் பிரச்சாரம்’ என்று கூக்குரலிடுகிறார்கள். இதோ, கருநாடகத்திலிருந்து ஒரு நல்ல செய்தி! மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும் என்று கருநாடகத்தில் 3 நாள் பட்டினிப் போராட்டம் நடந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களே காவி உடை தரித்த இந்து மத சாமியார்கள் தான் என்பதே இதில் முக்கிய அம்சம். தலித் மற்றும் பகுத்தறிவாளர்களும் இந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி. பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி...

தலையங்கம்  ‘இராஜா’க்களின் மிரட்டல் 0

தலையங்கம் ‘இராஜா’க்களின் மிரட்டல்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் என்ற பதவியில் இருக்கும் எச்.ராஜா, “மோடியை கடுமையாக விமர்சித்தால் அவர் செல்லும் இடங்களில் பேசிவிட்டு வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது” என்றும், “வைகோ நாக்கு தடித்து பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் எச்சரிக்கை செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மோடி அதிகாரத்தில் இருக்கிறார் என்ற ஆணவம்தான், இவர்களை இப்படியெல்லாம் பேச வைக்கிறது போலும்! மோடி அப்படி ஒன்றும் விமர்சனத்துக்கு அ ப்பாற்பட்டவரும் அல்ல. சார்க் மாநாட்டில் பல்வேறு நாட்டின் அதிபர்கள் பங்கேற்கும் மாநாட்டில், “இராஜபக்சே மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்” என்று மோடி, ‘தேர்தல் அரசியலை’ப் பேசியிருப்பது சரியா? தமிழர்களை இனப்படுகொலை செய்தவர் இராஜபக்சே. ‘மனித உரிமை மீறல்’ குற்றத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டியவர் என்று அய்.நா.வின் கண்டனத்துக்கு உள்ளாகி நிற்கும் மனிதர். அவருக்கு மோடி வாழ்த்துக் கூறுவது பற்றி இந்த ‘இராஜா’க்களுக்கு ஆத்திரம் வரும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. இவர்கள்...

தலையங்கம் – அதிகார உச்சத்தில் பார்ப்பனர்கள்! 0

தலையங்கம் – அதிகார உச்சத்தில் பார்ப்பனர்கள்!

பார்ப்பனர்கள் சமூக-அரசியல்-பொருளாதாரத் துறைகளில் தொடர்ந்து ஆதிக்க சக்திகளாகவே நிலைப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் பார்ப்பனர்கள் ஏதோ விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டதுபோல எழுதவும் பேசவும் தொடங்கியிருக்கிறார்கள். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் சேஷாத்திரி என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், பார்ப்பனர்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுதியிருக்கிறார். சமுதாயத்தை இப்போதும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தங்களின் மேலாண்மையைத் திணித்துக் கொண்டிருப்பது பார்ப்பனர்கள்தான். சிற்பி உருவாக்கிய ‘கடவுள் சிலைக்கு’, சக்தியூட்டக் கூடிய தங்களின் மந்திரம் தான் என்கிறார்கள். கட்டி முடிக்கப்பட்ட கோயிலானாலும், புனரமைக்கப்பட்ட கோயிலானாலும் அதன் தீட்டுகளை கழித்து தூய்மைப்படுத்தும் ‘கும்பாபிஷேக’ உரிமை, தங்களுக்கு மட்டுமே உண்டு என்பதை நிலைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். கோயிலுக்குள் கர்ப்பக்கிரகம் வரை நுழைந்து கடவுளை நெருங்கவும், அந்தக் கடவுளிடம் தங்களது சம°கிருத மொழியிலேயே உரையாடவும் தாங்கயே உரிமைக்குரியவர்கள் என்று மார்தட்டுகிறார்கள். திருமணமானாலும், வீடு திறப்பு என்றாலும் 60ஆம் திருமணமானாலும் இறந்தவர்களுக்கு ‘திதி’ என்றாலும் அதற்கு வேத மந்திரங்களை ஓதி கடவுள்களை ஏற்கச் செய்யும் ‘காப்பீட்டு உரிமைகள்’...

தலையங்கம் – எது ‘தாய் மதம்’? 0

தலையங்கம் – எது ‘தாய் மதம்’?

இந்துக்கள் அல்லாதவர்கள் – இந்து மதத்துக்கு திரும்புவது, மதமாற்றம் அல்லவாம்! அதற்குப் பெயர் ‘தாய் மதம் திரும்புதல்’ என்கிறது சங் பார்ப்பன பரிவாரம்! வழமைபோல் இதுவும் அவர்கள் முன் வைக்கும் ஒரு புரட்டுவாதம் தான்! இந்தியாவில் வாழும் அனைத்து மக்களின் தாய் மதம் ‘இந்து’ என்றால், ‘இந்து’ என்ற சொல் – வேதம், புராணம், சமஸ்கிருதம் உள்ளிட்ட – எந்த நூலிலும் இடம் பெறாதது ஏன்? இது 1927 ஆண்டிலேயே பெரியார் எழுப்பிய கேள்வி; இதுவரை விடை கிடைக்காத கேள்வி. பார்ப்பனர்கள் தங்களின் ‘பிதாமகனாக’ கொண்டாடும் இராஜகோபாலாச்சாரி எனும் இராஜாஜி, “இந்து மதம் என்பது அண்மைக் காலத்திய புதிய பெயர்” என்கிறார். (ஆதாரம்: Hinduism-Docrine and way of life) “இந்துமதம் தெளி வற்றது; வரையறை ஏதும் இல்லாதது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த நீதிபதி இராசமன்னார் ஒரு தீர்ப்பில் கூறினார். (மைக்கேல் எதிர் வெங்கடேசன் வழக்கு -1952) “இந்து...

தலையங்கம் – படைப்பாளிகளுக்கு எதிரான மிரட்டல்! 0

தலையங்கம் – படைப்பாளிகளுக்கு எதிரான மிரட்டல்!

சமூகம் சார்ந்த இலக்கியங்களைப் படைத்து வரும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலுக்கு மதவாத சக்திகள், ஜாதியவாதிகளைத் தூண்டிவிட்டு நடத்தி வரும் போராட்டம் வன்மையான கண்டனத்துக்கு உரியது. இது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவாகும். இந்த நிலையில் படைப்பிலக்கியவாதிகள் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நம்பிக்கையைத் தருகிறது. திருச்செங்கோடு தேர்த் திருவிழா நாளில் திருமணமான ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் உறவு கொள்ளும் ஒரு பழக்கம், சில நூறு ஆண்டுகளுக்கு முன் நிலவியதை கதைக்களம் சுட்டுகிறது என்பதாலேயே திருச்செங்கோட்டையே இழிவுபடுத்துவதாக மதவாத சக்திகள், உள்ளூர் மக்களைத் தூண்டிவிட்டு கதவடைப்பு நடத்தும் அளவுக்கு எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளனர். ஒரு படைப்பாளி, சமூக தொன்மங்களை தனது கற்பனை கலந்து படைப்பாக்கும் உரிமைகளை அச்சுறுத்துவது மிக மோசமான வன்முறை என்றே கூற வேண்டும். தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் சங்பரிவாரங்கள், இத்தகைய பிரச்சினைகளை ஆங்காங்கே உருவாக்கி வருகின்றன. அந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது தெரிகிறது....

தலையங்கம் – தமிழ்நாட்டில் நடப்பது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா? 0

தலையங்கம் – தமிழ்நாட்டில் நடப்பது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா?

தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடநூல்கள், எந்த அளவு மோசமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கி ‘இந்து’ தமிழ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரையைப் படித்த எவருமே அதிர்ச்சியும், தலைகுனிவும் அடைந்திருப்பார்கள். தமிழ்நாட்டில் நடப்பது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியா அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா என்று சந்தேகப்பட வேண்டி யிருக்கிறது. 1927ஆம் ஆண்டே தனது பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஜாதி எதிர்ப்பு இயக்கத்தை வாழ்நாள் முழுதும் நடத்தி வந்த பெரியாரை, ‘ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’ என்று இந்த பாட நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஜாதிப் பெயரை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருந்த எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், வாஞ்சி அய்யர் போன்றவர்களின் பெயர்களை ஜாதிப் பெயரை நீக்கி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹிட்லர், முசோலினி ஆகியோரின் வெளிநாட்டுக் கொள்கைகள் முற்போக்கானவை என்றும், திராவிடர் இயக்க ஆதரவோடு ஒழித்துக் கட்டப்பட்ட தேவதாசி முறையை பெருமைப்படுத்தி, அவர்களை ‘ஆலய சேவகிகள்’, ‘இறைப்பணி, கலைப் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள்’ என்றும் புகழாரம்...

தலையங்கம் – சர்வதேச விசாரணைகளை முடக்க சதியா? 0

தலையங்கம் – சர்வதேச விசாரணைகளை முடக்க சதியா?

எதிர்பார்த்ததுதான் நடக்கிறது; இலங்கையில் இராஜபக்சே வீழ்த்தப்பட்டு, மைத்ரிபாலா சிறிசேனா அதிபராக்கப்பட்டதன் பின்னணியைத்தான் குறிப்பிடுகிறோம். ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலையையும் அவர்களின் நியாயமான தமிழீழ கோரிக்கையையும் அப்படியே மூடி மறைத்து, இறுதிப் பயணத்துக்கு அனுப்புவதற்கு இந்த ஆட்சி மாற்றத்தைப் பயன்படுத்தக் கூடும் என்பதே உலகத் தமிழினத்துக்கு எழுந்த சந்தேகம்; இது உண்மைதான் என்பதை அரசியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசின் “போர்க் குற்றங்கள்” குறித்து (கவனிக்க: இனப்படுகொலை அல்ல) அய்.நா.வின் மனித உரிமைக் குழு எதிர்வரும் மார்ச் மாதம் நடக்கும் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க இருந்தது. இப்போது செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டுவிட்டது. இதை அறிவித்திருப்பவரே அய்.நா.வின் மனித உரிமைக் குழு ஆணையர் சையத் ராய் அல்ஹுசேன்தான். புதிய ஆட்சி இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க முன் வந்திருப்பதால், அவர்களுக்கு அதற்கான காலத்தை வழங்கிட வேண்டும் என்பதே, அவர் கூறியுள்ள காரணம், அய்.நா. மனித உரிமைக்குழுவின் இந்த அறிக்கை “போர்க் குற்றமீறல்”...

தலையங்கம் – ‘கோட்சே’யின் குண்டுகள் ஓய்ந்திடவில்லை! 0

தலையங்கம் – ‘கோட்சே’யின் குண்டுகள் ஓய்ந்திடவில்லை!

மகாராஷ்டிராவில் பார்ப்பன மதவெறியின் குண்டுக்கு மற்றொரு போராளி பலியாகிவிட்டார். 83 வயதான மூத்த பொதுவுடைமைத் தோழர் பன்சாரா, தனது துணைவியார் உமாவுடன் கடந்த பிப்.16 அன்று காலை நடைப்பயிற்சியை முடித்துக் கெண்டு இல்லத்துக்குள் நுழைய இருந்த நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த இரு நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பன்சாராவின் உடலுக்குள் 3 குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் கடந்த பிப்.20ஆம் தேதி இந்த முதுபெரும் போராளி வீர மரணத்தை தழுவினார். தலையில் குண்டு பாய்ந்த அவரது துணைவியார் தீவிர சிகிச்சையில் உயிருக்குப் போராடி வருகிறார். சங்பரிவாரங்களின் வரலாற்றுப் புரட்டுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தவர் பன்சாரே. மராட்டிய வீரன் சிவாஜியை இந்துமத வெறி அடையாளத்துக்குள் திணித்துக் கொண்டிருக்கும் சங்பரிவாரங்களை அம்பலப்படுத்தி ஏழை எளிய மக்களின் நலனை நேசித்தவனே சிவாஜி என்று விளக்கி ‘சிவாஜி கோன் சோட்டா?’(யார் இந்த சிவாஜி?) நூலை எழுதியவர். (அன்றைக்கு திராவிடர் இயக்கம்கூட சிவாஜியை இதே கண்ணோட்டத்தில் தான் அணுகியது....

தலையங்கம் – பார்ப்பன பரிவாரங்களின் மிரட்டல்! 0

தலையங்கம் – பார்ப்பன பரிவாரங்களின் மிரட்டல்!

‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி முன் சங் பரிவாரங்கள் வன்முறை வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி ஊழியர் மீது கடும் தாக்குதல் நடத்தி காமிராவையும் உடைத்திருக்கிறார்கள். காரணம் இதுதான்: மகளிர் நாளை முன்னிட்டு, ‘பெண்களுக்கு தாலி தேவையா?’ என்ற சிறப்பு விவாதம் ஒன்றை இந்த நிறுவனம் ஒளிபரப்ப திட்டமிட்டிருந்தது. விவாதம் ஒளிபரப்புவதற்கு முன்பே தடை செய்யவேண்டும் என்பதே சங்பரிவாரங்களின் கோரிக்கை. மிரட்டலுக்கு அஞ்சி தொலைக்காட்சி நிறுவனம் நிகழ்ச்சியை இரத்து செய்துவிட்டது. ஏற்கெனவே பண்பாடு குறித்த ஒரு விவாத அரங்கமும், எதிர்ப்பின் காரணமாக இந்தத் தொலைக்காட்சி நிறுத்திவிட்டது. ஒரு ஊடகம் – எதை ஒளிபரப்ப வேண்டும், எதை ஒளிபரப்பக் கூடாது என்பதை நிர்ணயிக்கும் உரிமை, தங்களுக்கே உண்டு என புறப்பட்டிருக்கிறது, சங்பரிவாரம். இந்தத் தாக்குதலை காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது என்பது மற்றொரு தலைகுனிவான செய்தி. தாலி என்பது பெண்களை அடிமைப்படுத்தும் சின்னம் என்று பெரியார் இயக்கம், பெண்ணுரிமை பார்வையில் முன் வைத்து வரும்...