Category: தலைமை கழகம்

தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – கழகத் தலைவர் கோரிக்கை

தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – கழகத் தலைவர் கோரிக்கை

தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களின் அறிக்கையை முழுதுமாக நானும் ஏற்றுக் கொள்கிறேன் தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு எனது ஒப்புதலை அளிக்கிறேன். வன்கொடுமைப் புகார்களை அளிப்பதற்கு வாய்ப்பாக ஓர் புகார் எண்ணை அறிவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் 11-5-2020   தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களுடைய அறிக்கையோடு நானும் கீழ்க்கண்ட செய்தியினை அரசின் கவனத்திற்கும், காவல்துறைத் தலைமையின் கவனத்திற்கும், பொதுமக்களின் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன். பவானியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளமதி என்ற பெண்ணும் கவுந்தப்பாடி யைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த செல்வன் என்பவரும் அவர்கள் இருவரின் முழு சம்மதத்தோடு கொளத்தூரை அடுத்த காவலாண்டியூரைச் சேர்ந்த திரு ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் 9-3-2020 அன்று திருமணம் செய்து கொண்டார்கள். செய்தியறிந்த பெண்ணின் குடும்பத்தினரும் அவர்களுக்குத் துணையாக ஏறத்தாழ நாற்பது ஐம்பது அடியாட்களும் வந்து திருமணத்தை...

தமிழகத்தை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – எவிடென்ஸ் கதிர்

தமிழகத்தை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – எவிடென்ஸ் கதிர்

தமிழகத்தை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக புகார் உதவி எண்கள் உருவாக்க வேண்டும் பத்திரிக்கை செய்தி இந்த கொரானா காலத்திலும் சாதிய கொலைகள், ஆணவ கொலைகள், காவல் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், குடியிருப்புகள் தாக்கப்படுதல், சாதி ரீதியாக இழிவுபடுத்தி அவமானபடுத்துதல் போன்ற வன்முறைகள் தலித்துகள் மீது அதிகரித்து உள்ளன. அதுமட்டுமல்ல நாற்காலியில் உட்கார அனுமதி மறுக்கின்றனர். சாதி ரீதியாக இழிவாக பேசுகின்றனர். பணி செய்யவிடாமல் சித்திரவதை செய்கின்றனர் என்று மூன்று பஞ்சாயத்து தலைவர்கள் புகார் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த நான்கு நாட்களில் 4 தலித்துகள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தலித்துகள் மீது சாதிய கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தமிழக முதல்வர் இக்கொடுமைகளுக்கு எதிராக உரிய அளவிற்கு நடவடிக்கை எடுக்க வில்லை. குழந்தைகள் மீதும் பெண்கள் மீதும் வன்முறை தடுப்புக்கு என்று உதவி எண்களை அரசு வெளியிட்டு இருக்கிறது. அவற்றின்...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 11

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 11

காட்சி – 11 இடம் : இலங்கை இராவணன் அவை. பாத்திரங்கள் : இராவணன், மேகநாதன், கும்பகர்ணன், விபீடணன், அமைச்சர்கள், அவைப் பிரதிநிதிகள், சேனாவீரர்கள், மற்றும் பலர். இராவ : சிங்கத்தின் பீடத்திலே சிறு நாயை ஏற்றி விட்டார்கள்! துரோகம் வீரத்தை விழுங்கிவிட்டது! வாலியை மறைந்து நின்று கொன்றுவிட்டு, சுக்ரீவனை மன்னனாக்கி விட்டார்களாம் அந்த ஆரியச் சிறுவர்கள். மேக : சதிக்குச் சாய்ந்துவிட்டதே அப்பா; சமருக்கு அஞ்சாத தென்னாடு. இராவ : வஞ்சகர்கள் பெருகிவிட்டார்கள் குழந்தாய்! மேக : மாற்றானின் கால்பிடித்து மன்னன் ஆவதைவிட, மானத்தை விட்ட செயல் வேறு உண்டா? இராவ : பதவிப் பித்து மானத்தை மறக்கடித்துவிட்டது ஒன்றுபட்ட தமிழகத்திலே தமிழன் வாழ்க்கையிலே பிளவு, ஆரியத்தின் ஊடுருவல்…. மேக : அந்த பேதத்தை நீக்க வேண்டியது தங்கள் கடமை அப்பா. இராவ : அதற்காகத் தமிழனும் தமிழனும் மோதிக் கொள்ள வேண்டியதுதான்; வந்திருக்கும் ஆரியர்களுக்காக வாளேந்தி நிற்பவர்கள் யார்?...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 10

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 10

காட்சி – 10 இடம் : கிட்கிந்தையில் ஒரு மலை அடிவாரம் பாத்திரங்கள் : அனுமன், அங்கதன், சாம்பவந்தன், மற்றும் பலர் அனு : நீங்கள் எல்லோரும் இங்கேயே இருங்கள். நான் மட்டும் சம்பாதி முனிவன் சொன்ன விவரப்படி இலங்கை சென்று சீதாபிராட்டியாரைக் கண்டு திரும்புகிறேன். நான் வருகிறவரையில் வேறு எங்கும் போகாதீர்கள். அங்க : *ஆமாம்! (* கி.கா. 53-ம் சருக்கம் 1-2 55-ம் சருக்கம் 1-16) சீதையைக் காணாமல் நாம் சுக்ரீவனையோ ராமனையோ பார்ப்பதற்கில்லை. அந்தக் கொடியவர்கள் குணம்தான் நாம் அறிந்ததாயிற்றே. அனு : நான் எப்படியும் சீதையைக் கண்டே திரும்புகிறேன். அங்க : அனும! நீ எப்படி இலங்கைக்குப் போவாய்? அனு : இலங்கைக்குப் போவது முடியாத காரியமென்று நினைத்துவிட்டாயா அங்கதா? அங்க : இடையிலே பெருங்கடல் இருக்கிறதாமே! அனு : இல்லை! அனுபவமில்லாதவர்கள் – ஆய்ந்து பார்க்கத் திறனில்லாதவர்கள் கட்டிய கதையப்பா அது எனது. –...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 9

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 9

காட்சி – 9 இடம் : சுக்ரீவன் கொலுமண்டபம். பாத்திரங்கள் : அங்கதன், அனுமான், ராமன், லட்சுமணன், மற்றும் பலர். [கிட்கிந்தையில் சுக்ரீவனுக்கு முடிசூட்டப்பட்ட சில காலத்திற்குப் பிறகு ஒரு நாள் சுக்ரீவன் கொலுவிருக்கிறான். அங்கதனும் அனுமானும் அருகில் இருக்கின்றனர்; ராமனும் லட்சுமணனும் உட்கார்ந்திருக்கின்றனர்.) ராமன் : சுக்ரீவ! உன் ஆசை, நிறைவேறிவிட்டது. என் கடமையும் முடிந்து விட்டது; இனி நீ எனக்கு சீதையை மீட்டுத் தரவேண்டும். லட்சு : சீதையை ராவணன் எங்கு சிறையிட்டிருக்கிறான் என்பதை முதலில் கண்டறிந்தாக வேண்டும். அனு : பிரபு, நேற்று இந்த நகை மூட்டையைத் தெற்கே உள்ள குன்றின் அடிவாரத்தில் நமது வீரர்கள் கண்டெடுத்து வந்தனர். இவைகள் ஒரு வேளை பிராட்டியாருடைய நகைகளாக இருந்தாலும் இருக்கலாம். [ராமனும் லட்சுமணனும் ஆவலோடு அந்த நகை மூட்டையை வாங்கிப் பிரிக்கின்றனர்.) ராமன் : *சீதா! அய்யோ ! இவைகள் உன் நகைகள் போலவே இருக்கின்றதே. தம்பி லட்சுமணா!...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 8

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 8

காட்சி – 8 இடம் : கிட்கிந்தையில் மலையும், காடும் அடர்ந்த ருஷ்யமுக பர்வதத்தின் ஒரு பகுதி. பாத்திரங்கள் : சுக்ரீவனும், அனுமானும். சுக்ரீவன் : இனிமேலும் நான் அரசனாக முடியும் என்று நீ நினைக்கிறாயா? அனும! அனு : ஏன் முடியாது சுக்ரீவா? சாதுர்யமும் சமயோசிதமும் நிறைந்த இந்த அனுமான் உன் அருகில் இருக்கும் போது, நீயேன் சாம்ராஜ்ய அதிபதியாக முடியாது? சுக் : *என்ன இருந்தாலும் என் அண்ணனுக்கு நான் அவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்கக் கூடாது. அவனைக் குகைக்குள்ளே விட்டு, பாறையால் மூடி விட்டு, இறந்து விட்டதாக ஊரை ஏமாற்றி அவன் மனைவியைக் கைது செய்து அரசையும் கைப்பற்றிக் கொண்டேனே அது பெரிய துரோகமல்லவா? (* *கி.கா. 10-ம் சருக்கம் 11-28 ) அனு : துரோகம், பழி, பாவம் – இவைகளையெல்லாம் பார்த்தால், பலரும் புகழ பேரரசன் ஆக முடியுமா? சுக் : அதற்காக….? அனு...

தமிழக அரசும், குடிமை சமூகமும்- பாதுகாப்பு அரண்

தமிழக அரசும், குடிமை சமூகமும்- பாதுகாப்பு அரண்

பெருமதிப்பிற்குரியீர், வணக்கம்! தமிழக அரசும், குடிமை சமூகமும்- பாதுகாப்பு அரண். இன்றைய நிலையில் கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கவும், அவசர நிலை என்ற காலகட்டத்தை கடந்து,  நிரந்தரமான தீர்வுக்கு  ஒரு தொலைநோக்கு பார்வையை முன்வைக்கவும் வேண்டிய கட்டாயத்தில் இந்தியா மற்றும் முக்கியமாக தமிழகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதுநாள்வரையில் இந்த இயக்கம் அரசின் சட்ட திட்டம் மற்றும் போலீஸ் நிர்வாகத்தின் கெடுபிடி கட்டாயங்களுடன் நடந்தேறுகிறது. நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாகவும், தூய்மை பணியாளர்கள் மற்றும்  மருத்துவ பணியாளர்களின் தன்னலமற்ற முழு நேர உழைப்பின்  மூலமாகவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் பாராட்டுக்குரிய முனைப்பும், அரசு ஊழியர்களின் கடமையும், தூய்மை மற்றும் மருத்துவ பணியாளர்களின் சீரிய பணியும் சிறப்பாக இருப்பினும், நாம் எதிர் கொண்டிருக்கும்  கொரானா தொற்று நோய்  சவாலுக்கு நீண்டகால,  நிரந்தர தீர்வாக இவை அமையாது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன: முதலாவதாக, பெருமளவிற்கு மக்கள்...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 7

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 7

காட்சி -7 இடம் : மதங்கவனத்திலே ஒரு பகுதி பாத்திரங்கள் : ராமன், லட்சுமணன். [ராமன் உட்கார்ந்து பாடிக் கொண்டிருக்கிறான்; லட்சுமணன் ஒரு மான் குட்டியைக் கொன்று தூக்கி வருகிறான்.) ராமன் : சீதா; சிங்காரப் பெட்டகமே! சிந்தை நிறை அமுதே! என் உயிர் பறிக்கும் ஓவியமே! உன்னை எங்கேயடீ கண்டு தேடுவேன்… சீதா! லட்சு : (தலையில் அடித்துக்கொண்டு) அண்ணா! கொஞ்ச நேரம் சும்மா இருக்கமாட்டே நீ? ராமன் : லட்சுமணா! என் சீதையை இராவணன் இந்நேரம் என்ன பண்றானோ தெரியலையேடா! சீதா! உன் ராமன் காட்டிலே இப்படிக் கதறுகிறேனே, இது உன் காதிலே விழலையா? சீதா, சீதா…. (குதிக்கிறான்] லட்சு : சீதா! சீதா!! சீதா!! அவள் எக்கேடு கெட்டால் என்ன? எவன் தூக்கிக்கிட்டுப் போனால்தான் என்ன? அவள் செத்தால்கூட என்ன அண்ணா ! அப்படி மோசம் வந்துவிடும் உனக்கு? அவள் போனால் அயோத்தியிலே பேரழகி *பிரபாவதி இருக்கா;...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 6

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 6

காட்சி – 6 இடம் : இராவணன் அரண்மனையில் ஒரு பகுதி. பாத்திரங்கள் : இராவணன், சீதை, மேகநாதன், இரண்டொரு வீரர்கள். [சீதை தலைவிரி கோலமாக நிற்கிறாள்.) இராவ : ஏதோ நடந்தது நடந்துவிட்டது. இனி நீ வருந்திப் பயன் இல்லை. அந்த மூடர்கள் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் உன்னை அவர்களோடு அனுப்பிவிடுகிறேன், வருந்தாதே. மேக : தந்தையே! ஆரியச் சிறுக்கிக்கா இரக்கம்! அநீதி இழைத்தவன் மனைவிக்கா மரியாதை! இராவ : எதிரிக்கும் இரங்க வேண்டியது இலங்கையின் பண்பல்லவா மகனே? மேக : இரக்கத்தைக் கோழைத்தனமென்று கருதிவிடுவார்கள் இழிந்தவர்கள். இந்தச் சிறுக்கியைச் சித்திரவதை செய்ய வேண்டும். இவள் அங்கங்களைச் சிதைத்து அனுப்பினால்தான் ஆரியர்களுக்குப் புத்தி வரும். இனியேனும் யாருக்கும் தீங்கு இழைக்க மாட்டார்கள். இராவ : இந்திரசித்தா! ஆத்திரப்படாதே… அறிவிலா மூடர்கள் செய்த வேலையை நாமும் செய்யலாமா? நமக்குத் தீங்கு செய்தவர்கள் வெட்கப்படும் அளவுக்கு மரியாதை செய்ய வேண்டாமா? அதுதானே...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 5

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 5

காட்சி – 5 இடம் : பஞ்சவடி குடிசை பாத்திரங்கள் – ராமன், லட்சுமணன், சீதை. [வழக்கம்போல் குடித்துக் குலவிக் கொண்டிருக்கிறார்கள்.) ராமன் ; லட்சுமணா! நேற்ற நடந்த அஜமேத யாகத்துலே ஏண்டா நமக்கு சரியா பங்கு வரல்லே? இந்த ரிஷிப் பசங்களுக்கு யாகம் யாகம்னு ஊர்லே உள்ள ஆடுமாடுகளை எல்லாம் ஒழிச்சுக் கட்ட, நாம் உதவுறோம். நமக்கு என்னடான்னா ஒன்னும் சரியான பங்கே வரமாட்டேங்குதே! உம்…. லட்சும : அண்ணா ! நம்ம பசிக்கு இனிமே யாகத்துக்கு அஜம் போதாது கஜம் தான் வேணும். ராமன் : அதுக்கென்னடா நடத்தினா போச்சு (சீதையிடம்) பிரிய நாயகி! என்ன அவனையே பார்த்துகிட்டு இருக்கே! போய் நேற்று குதிரைக்கால் ரசம் வச்சேல்லே, அதிலே பாக்கியிருந்தா கொண்டா. [சீதை உள்ளே போனதும்.] லட்சும : ஏன் அண்ணா ! நானோ இளைஞன், வயிறு சரிந்து வாலிபம் குலைந்து நிற்கும் அண்ணியைப் பற்றி நீ ஏன்...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 4

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 4

காட்சி – 4 இடம் – இராவணன் அந்தப்புரம். பாத்திரங்கள் : இராவணன், வண்டார்குழலி, மாரீசன், தண்டகாரண்யத்திலிருந்து வந்த அகம்பனன் என்ற ஒற்றன். அகம்பனன் : மன்னர் மன்ன! இராவணன் : யார், அகம்பனனா! என்ன? அகம் : மறத்தமிழ் பரம்பரைக்கு மாறா அவமானம். இராவ : என்ன! அகம் : ஆரியர்கள் அநீதி, அளவை மீறிவிட்டது அரசே! மாரீசன் : விவரமாகச் சொல். அகம் : ஆரிய ராம லட்சுமணர்கள், அன்னை காமவல்லியை உருக்குலைந்து விட்டனர். இராவ : என்ன! (மீசை படபடவெனத் துடிக்கிறது. கண்களில் பொறி பறக்கிறது) தகர்க்கப்பட்டதா தமிழனின் தன்மானம் ! மாறாத அவமானம் ! மாரீசன் : பதறாதே இராவணா! அகம்பனா! சொல்…. பிறகு? அகம் : அவமானம் தாங்காத அம்மையார், தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள், இராவ : (மிகுந்த சோகம்) என் குலக்கொடி மறைந்து விட்டாளா! தங்கையே, உனக்கு இந்த முடிவா கிட்ட...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 3

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 3

காட்சி – 3 இடம் : தண்டகாரண்யம் பாத்திரங்கள் : ராமன் சீதை, லட்சுமணன் (சீதை, நடுவிலிருக்க, ராமனும், லட்சுமணனும் இருபக்கங்களிலும் இருந்து கொண்டு கொஞ்சி குலவிக் கொண்டு; மூங்கில் குழாய்களில் மதுவை ஊற்றி மூவரும் அருந்திக் கொண்டிருக்கின்றனர்.) ராமன் : (போதையுடன்) லட்சுமணா! மது (சீதையைக் காட்டி) மாது மனுஷனுக்கு வேறு என்னடா வேணும்…? லட்சுமணன் : எனக்குத் தெரியாது அண்ணா ? ராமன் : என்னடா உளர்றே! லட்சுமணன் : (குடித்துக் கொண்டே எனக்குப் பாதி சுகம்தானே அண்ணா தெரியுது. (சீதையைப் பார்த்துக்கொண்டே ஒன்னு இல்லையே. (சீதை முறைக்கிறாள்.) ராமன் : (உடனே) சீதா – உம் நீ ஒன்னு போட்டுப் பாரேன்.. இல்லேன்னா நீயும் அசுர வம்சத்தைச் சேர்ந்தவளாயிடுவே சுராபானத்தின் சுகம் வேறு எதிலே இருக்கு? சாப்பிடு சீதே…. சும்மா சாப்பிடு. [சீதையிடம் கொடுக்க அவள் வாங்கிக் குடிக்கிறாள்.) லட்சுமணன் : என்ன அண்ணா ! சீதைக்கு...

ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2

ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2

ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2 இடம் : இலங்கையில் இராவணன் கொலு மண்டபம். பாத்திரங்கள் : இராவணன், மேகநாதன், கும்பகர்ணன், விபீடணன், மற்றும் அமைச்சர்கள், சேனா வீரர்கள், மந்திரி சபையினர். [நாட்டின் ஆட்சி விவகாரங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.] மேகநாதன் : தந்தையே! அந்தத் தருக்கர்களின் கொட்டத்தை அடக்காவிட்டால், நாடு நாசகாரர்களின் வேட்டைக்காடாக மாறிவிடும் – விரைவிலே அந்த வீணர்களை ஒழிக்கத் திட்டம் தேவை! சேனாதிபதி : மன்னர் மன்ன! தமிழரசி, தங்கள் மூதாட்டி தடாதகை அம்மையார் தாக்கப்பட்ட போதே இதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். கும்பகர்ணன் : கொலையும் வேள்வியும் மட்டுமே அவர்கள் குறிக்கோளாக இருக்க முடியாது. கொடி போட்டு ஆளவும் திட்டம் இருக்கும் என்று நம்புகிறேன் அண்ணா ! இராவணன் : உம்: ஆச்சர்யம்! சிங்கக் கூட்டத்திலே சிறு நரிகள்; செந்தாமரை ஓடையிலே முதலைகள் ; தமிழகத்திலே ஆரியர்கள் ! வேட்டைக்கு வேறு இடம் கிடைக்கவில்லை...

இராமாயண நாடகம் – பால காண்டமும், அயோத்தியா காண்டமும்

இராமாயண நாடகம் – பால காண்டமும், அயோத்தியா காண்டமும்

பால காண்டமும், அயோத்தியா காண்டமும் காட்சி – 1 இடம் : காட்டில் வால்மீகி ஆசிரமம். பாத்திரங்கள் : வால்மீகி, சீதை, லவன், குசன். [மெளனமாக அமர்ந்திருந்த வால்மீகி தனக்குள்ளாகவே கூறிக்கொள்கிறார்.) “உண்மையை, உலகம் ஒரு நாள் அறிந்தே தீரப் போகிறது. ஏன் நாமே அதைக் கூறிவிடக் கூடாது.” [இப்பொழுது சீதையும் லவகுசர்களும் அங்கு வருகிறார்கள்.] வால்மீகி : காலம் வந்து விட்டது சீதா! காவியத்தைத் தொடங்கப் போகிறேன்; உன் கண்மணிகளின் இதயங்களிலே புதிய கருத்துக்களைத் தூவப் போகிறேன். சீதை : எல்லாம் உங்கள் கிருபை மகரிஷே! வால் : குழந்தைகாள்! ஏடுகளை எடுத்து வந்து என்னருகில் அமருங்கள். (குசனும் லவனும் ஏடு எழுத்தாணிகளுடன் வந்து வால்மீகியின் முன்னர் அமர்கின்றனர்.) வால் : கண்மணிகாள்! காலத்தைக் கடந்து நிற்கப் போகும் ஒரு மாகாவியத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்; உலகு கண்டு வியக்க இருக்கும் அம் மா ஓவியத்தைக் கவனமாகத் தீட்டி வாருங்கள்....

பாத்திரங்கள் – இராமாயண நாடகம்

பாத்திரங்கள் – இராமாயண நாடகம்

பாத்திரங்கள் திராவிடர்கள் இராவணன் – இலங்கை வேந்தன் மேகநாதன் (இந்திரசித் – இராவணன் மைந்தன் கும்பகர்ணன் – இராவணன் தம்பி வண்டார்குழலி (மண்டோதரி) – இராவணன் மனைவி அதிகாயன் – இராவணன் சேனாபதி மாரீசன் – இராவணன் மாமன் சபரி – தமிழ் மறையவரின் பெண் வாலி – கிட்கிந்தை, மன்னன் காமவல்லி (சூர்ப்பகை) – இராவணன் தங்கை கரன் – திராவிட மன்னன் தூஷணன் – கரனது சேனாதிபதி சம்பூகன் – திராவிடத் தவசி அகம்பணன் – ஒற்றன்     ஆரியர்கள் ராமன் – ஆரியர் தலைவன் லட்சுமணன் – ராமனின் தம்பி பரதன் – அயோத்தி அரசன் சத்துருக்கண் – ராமனின் தம்பி தசரதன் – ராமனின் தகப்பனாகக் கருதப்படுபவன்.

இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்கள்

இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்கள்

இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்கள் தந்தை பெரியார் எழுதிய ராமாயணப் பாத்திரங்கள். கடலங்குடி பண்டித நடேச சாஸ்திரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு. C.R. ஸ்ரீனிவாச அய்யங்கார் B.A., எழுதிய வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு. A.V. நரசிம்ம ஆச்சாரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு கோவிந்த ஆச்சாரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு. பண்டித மன்மதநாத்தத்தர் எழுதிய வங்களா & ஆங்கில ராமாயண ஆராய்ச்சி ஆகியவையாகும். “சுமித்திரை, கோசலை, கைகேயி என்ற தசரதன் மனைவியர்கள் முறையே ஹோதா, அத்வர்யூ. உத்காதர என்ற ரிஷிகளுக்குப் பெற்ற பிள்ளைகளே ராம. பரத லஷ்மண சத்துருக்கணர்கள்.” – மன்மதநாத்தத்தர் ராமன் சீதையை பட்டமகிஷியாக மணம் புரிந்து கொண்டிருந்தாலும் போகத்துக்கா ஸ்ரீதாமா, சுதாமா, ரதினிபா, பிரபாவதி போன்ற பல பெண்களை வைத்துக் கொண்டிருந்தான். வால்மீகி ராமாயணம் அயோத்தியாகாண்டம் 3-ம் சருக்கம்; By C.R. சீனிவாச அய்யங்கார் B.A.   திரு ஸ்ரீனிவாச அய்யங்கார் தனது...

இராமாயண நாடகம் – தந்தை பெரியார் அவர்களின் மதிப்புரை

முதற் பதிப்புக்கு தந்தை பெரியார் அவர்களின் மதிப்புரை தோழர் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய இராமாயண நாடகம் என்னும் இப் புத்தகத்திற்கு என்னை ஒரு மதிப்புரை எழுதித் தரும்படி கேட்டார். எனக்குள்ள பல நெருக்கடியும் அவசரமுமான வேலைகளுக்கிடையில் இப் புத்தகம் முழுவதையும் தொடர்ச்சியாகப் படித்துப் பார்க்க நேரம் இல்லாததால் மேற்போக்காகவும், அங்குமிங்குமாகவும் பல பக்கங்களைப் படித்தேன்; அதிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், இப்போது நாட்டில் பார்ப்பனர்களும் புலவர்களும் இராமாயணத்தைப் பற்றிச் செய்து வரும் இராமாயணப் பிரச்சாரம், எவ்வித பொறுப்பும் கவலையும் இல்லாமல் மக்களுக்கு இராமாயணம் பற்றி இருந்து வரும் பக்தியையும் மூட நம்பிக்கையையும் அவர்கள் தங்களுக்கு ஆதரவாகக் கொண்டு, தங்கள் இஷ்டப்படி இராம பக்தி பெருகவும் மூட நம்பிக்கை வளரவும் பார்ப்பன உயர்வுக்கு ஏற்பவும் தக்கவண்ணம் பிரச்சாரம் செய்து வருவதைக் கண்டு வேதனைப்பட்டு, பாமர மக்கள் இடையில் இருக்கும் மூட பக்தியையும் இராமாயண சம்பந்தமான மூடநம்பிக்கையையும் எப்படியாவது ஒழிக்கவேண்டும் என்கிற...

கடவுள் – மத மறுப்பாளராக 98 வயது வாழ்ந்து காட்டிய திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் விடைபெற்றார்

கடவுள் – மத மறுப்பாளராக 98 வயது வாழ்ந்து காட்டிய திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் விடைபெற்றார்

இனமானப் பேராசிரியர் அன்பழகன், தனது 98ஆவது அகவையில் மார்ச் 7, 2020இல் முடிவெய்தினார். திராவிடர் இயக்கத் தூண்களில் ஒருவர். தமிழையும் சுயமரியாதைக் கொள்கைகளையும் தனது இரு கண்களாகப் போற்றியவர். மிகச் சிறந்த பேச்சாளர். மாணவப் பருவத்திலிருந்தே அவரது திராவிடர் இயக்கப் பயணம் தொடங்கி விட்டது. தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகாலம் இருந்து கலைஞரின் உற்ற துணைவராக செயல்பட்டவர். மிக மிக எளிமையானது அவரது வாழ்க்கை. 7 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். பெரியார் குறித்து ஆழமான அவரது உரைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. கடவுள் – ஜாதி – மதமற்ற வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர். ஒரு கடவுள் மறுப்பாளர் 98 வயது வரை வாழ முடியும் என்ற செய்தியையும் அவரது மரணம் உணர்த்தி நிற்கிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தினர். மதச் சடங்குகள் ஏதும் இன்றி திராவிடர் இயக்க அடையாளங்களோடு அவரது இறுதி நிகழ்வுகள் நடந்தன. திராவிடர்...

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

புரட்சிப் பெரியார்முழக்கம், நிமிர்வோம் இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்தை விரைவுப் படுத்துவீர்! 2020ஆம் ஆண்டில் இதழ்கள் தொடர்ந்து வெளிவர வேண்டிய பொறுப்பை தோழர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறோம். இயக்க இதழ்கள் தான் தோழர்களை இணைக்கும் இணைப்புச் சங்கிலி. தோழர்களின் செயல்பாடுகளை சுமந்து வரும் கழகத்தின் ‘தூது மடல்’. ஒரு இயக்கம் உயிரோட்டமாக தன்னை இறுத்திக் கொள்வதற்கு இயக்க இதழ்களே சுவாசக் காற்று என்பது, நீங்கள் அறியாதது அல்ல! தோழர்களே! விரைந்து செயல்படுங்கள்! பிப்ரவரி இறுதிக்குள் சந்தா சேர்ப்பு இயக்கத்தை நிறைவு செய்தாக வேண்டிய கடமை உணர்ந்து, களத்தில் இறங்குங்கள்! பெரியார் முழக்கம் 06022020 இதழ்

நடிகர் ரஜினிக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்.. வழக்கறிஞர் அருண் அறிக்கை

நடிகர் ரஜினிக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்.. வழக்கறிஞர் அருண் அறிக்கை

பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரசினிகாந்த் மீது நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்படும் . நீதிமன்ற படிக்கட்டுகள் சில நேரங்களில் மிக நீண்டதாகவும் நெடியதாகவும் இருக்கிறது . எவ்வளவு தூரமாக இருந்தாலும் இலக்கை அடையும் வரை நம்முடைய பயணம் தொடரும். மீண்டும் வழக்கு தொடர கழக தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் ஒப்புதல் வழங்கி இருக்கிறார் ஆகவே நீதிக்கான போராட்டம் தொடரும் . துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டி பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு பொய்யான செய்தியை உள்நோக்கத்தோடு வன்முறையை தூண்டும் விதமாக வெறுப்புப் பிரச்சாரம் செய்தார். ரஜினிகாந்தின் இந்த உள்நோக்கத்தோடு பேசிய பேச்சு வன்முறையை தூண்டும் விதமாகவும்,வெறுப்பு பிரச்சாரமாகவும் இருக்கிறது...

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களுக்கு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி விட்டீர்களா? கழகத்தின் களப் பணிகளை ஆதரவாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, வாரம் தோறும் நடக்கும் நிகழ்வுகளை பெரியாரியல் பார்வையில் பதிவு செய்து வருகிறது. பெரியாரியல் குறித்த ஆழமான கட்டுரைகள், சமூகம், சுற்றுச் சூழல், கலை, இலக்கியம் குறித்த விரிவான கட்டுரைகளுடன் வெளி வருகிறது ‘நிமிர்வோம்’. தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத ஒரு சமுதாய இயக்கம், 2002ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாக வாரந்தோறும் பெரியார் முழக்கத்தையும், மூன்று ஆண்டுகளாக மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ இதழையும் இடைநிறுத்தமின்றி நடத்தி வருகிறது. அரசியல் கட்சிகளால்கூட ஏடு நடத்த முடியாத நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம் இந்தப் பணியை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது. தோழர்கள் இது குறித்த கவலை புரிதலுடன் களமிறங்கினால் ஏடுகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். தோழர்களே! விரைந்து கழக ஏடுகள் தொடர்ந்து...

ஜாதி வெறியர்களின் மீது 10 பிரிவுகளில் வழக்கு, செல்வன் இணையர் இளமதி இன்னும் மீட்கப்படவில்லை

ஜாதி வெறியர்களின் மீது 10 பிரிவுகளில் வழக்கு, செல்வன் இணையர் இளமதி இன்னும் மீட்கப்படவில்லை

கொளத்தூரில் ஜாதி வெறியர்களின் வன்முறை வெறியாட்ட சம்பவத்தின் மீதான நடவடிக்கைகள் ! சேலம் மாவட்டம் கொளத்தூரில் 09.03.2020 அன்று நடைபெற்ற செல்வன் – இளமதி ஜாதி மறுப்பு திருமணத்தையொட்டி ஜாதி வெறியர்கள் நடத்திய கொலை வெறித்தாக்குதல், ஆள்கடத்தல்,கொள்ளை இவற்றின் மீதான காவல் துறையின் முதல் தகவல் அறிக்கைகள் 2. (இணைப்பு) ( 09.03.2020 அன்று கொளத்தூரில் நடந்தது என்ன ? அறிய : https://www.facebook.com/1630392030578024/posts/2651540068463210/ ) திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் கழகத்தோழர்கள் தாக்குதல் சம்பவம் நடந்த 09.03.2020 நள்ளிரவு முதல் அடுத்த நாள் காலை வரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடியதன் விளைவாக மனமகன் செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி,ஆள் கடத்தல்,கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளமதியின் தந்தை, பெரியப்பா, மாமா உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் மற்றும் கொலை முயற்சி,ஆள் கடத்தல்,கொள்ளை ஆகிய குற்றங்களுக்கான மணமகன்...

இனமானப் பேராசிரியர் பெருந்தகை  மறைந்தாரே…!!!

இனமானப் பேராசிரியர் பெருந்தகை மறைந்தாரே…!!!

இனமானப் பேராசிரியர் பெருந்தகை  மறைந்தாரே…!!! இனமானப் பேராசிரியர் இன்று முடிவெய்திவிட்டார். நிறை வாழ்வு அவர் வாழ்ந்திருக்கிறார். திராவிடர் இயக்கத்தின் ஆற்றல் மிகு பேச்சாளர், எழுத்தாளர். தான் ஏற்றுக்கொண்ட இலட்சியத்திற்காக தன் வாழ்நாள் முழுதும் தடம் பிறழாமல் வாழ்ந்து காட்டிய ஒரு உன்னதமான சுயமரியாதைக்காரர். நீண்ட பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். தமிழகத்தில் திராவிடர் இயக்கத்தில் மூத்தத் தலைவர்களில் ஒருவரை இன்றைக்கு தமிழகம் இழந்து நிற்கிறது. மாணவப் பருவத்திலிருந்து தொடங்கி, திராவிடர் இயக்கத்தின் பயணத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட ஒரு அற்புதமான சிந்தனையாளரை இழந்து நிற்கும் தமிழகத்தின் உணர்வுகளோடு திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னுடைய உணர்வுகளை, இரங்களை, துயரத்தை பகிர்ந்து கொள்கிறது. #விடுதலை_இராசேந்திரன் #பொதுச்செயலாளர்_திராவிடர்_விடுதலைக்_கழகம்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் திருவள்ளுவராண்டு 2051 (9 – 2 – 2020) – அன்று வ.உ. சி. திடலில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:   வீரவணக்கத் தீர்மானங்கள்   சாதிக் கொடுமைகளை எதிர்த்தும், சாதி ஆதிக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தோடும் களமாடிய வலியுறுத்திக் கருத்துப்போர் நிகழ்த்திய திருவள்ளுவர், ஒளவையார் தொடங்கி எண்ணற்ற தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், கருத்தாளர்கள் மற்றும் 1957 ஆம் ஆண்டு சாதிஒழிப்புக்காக சாதியைப் பாதுகாக்கின்ற சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்திச் சிறை சென்றதோடு மட்டுமின்றி, அப்போராட்டக் காலச் சூழலில்  ஈகியர்களான எண்ணற்ற தோழர்கள் உள்ளிட்ட 20 – ஆம் நூற்றாண்டின் சாதி ஒழிப்புப் போராளியர்களாக முனைந்து எழுந்த அறிஞர்கள், இயக்கச் செயற்பாட்டாளர்கள், களப் போராளியர்கள், முன்னின்ற பொதுமக்கள் என அனைவருக்கும் மற்றும் அண்மையில் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்த நிலையில் மறைவுற்ற பதினேழு ஏதுமறியா மக்களுக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது....

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்த அவதூறு வழக்கின் தற்போதைய நிலை என்ன ? நீதிமன்றம் என்ன கூறியுள்ளது ? துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டி பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு அவதூறை நடக்காத ஒரு சம்பவத்தை பெரியாரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்தோடு பேசினார். நடக்காத ஒன்றை உள் நோக்கத்தோடு பேசிய நடிகர் ரஜினிகாந்தின் இந்த அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்க திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வலியுருத்தினார்.மேலும் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்தோடு பேசிய ரஜினியின் மீது தக்க சட்ட நடவடிக்கை கோரி தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் கழகத்தோழர்கள்...

அவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி!

அவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி!

1971-ஆம் ஆண்டு சேலம் பேரணியில் நடந்த விஷயம் வெளிவந்த துக்ளக் ஏட்டை காண்பிக்காமல் அவுட்லுக்கின் ஜெராக்ஸை ரஜினி காட்டுவது ஏன் என திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார். துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த விழாவில் ரஜினி பேசுகையில் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதையின் சிலைகள் உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து கொண்டு செல்லப்பட்டது. இதை துக்ளக் பத்திரிகையில் இதழின் ஆசிரியர் சோ தைரியமாக வெளியிட்டார். அந்த புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன என்றார் ரஜினி. ரஜினியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் என்பதால் வரலாற்றை தவறாக கூறிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் கழக அமைப்புகள் கோரின. கற்பனை இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது கையில் ஒரு பத்திரிகையை காண்பித்த ரஜினிகாந்த், நான்...

நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக – கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக – கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் மீது கழகத்தின் சார்பாக பல்வேறு இடங்களில் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ள புகார்கள் சம்பந்தமாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை : – அன்பார்ந்த தோழர்களுக்கு, என் வணக்கங்கள். துக்ளக் ஏட்டின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பெரியாரை – பெரியாரின் இயக்கத்தை கேவலப்படுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு நடிகர் இரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பேசிய அவருடைய அவதூறு பேச்சுக்கு தக்க நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையங்களில் புகார் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்திருந்தோம். அவ்வாறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின் நகல் ஒன்றினையும் அந்த காவல்நிலையங்களில் புகாரைப் பெற்றுக்கொண்டதற்காக கொடுக்கப்பட்ட சிஎஸ்ஆர் இரசீது நகலையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் காவல்நிலையத்தில் புகார் பெற்று கொண்ட பின்னாலும் அதற்கான சிஎஸ்ஆர் வழங்கப்படாமல் இருக்குமேயானால்,மீண்டும் ஒருமுறை அந்த புகாரினுடைய படியை வைத்து அதனுடன் “நாங்கள் இத்தனையாம் நாள் உங்களிடம் அளித்த...

நடிகர் ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தி அறிக்கை

1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன் சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் இரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளிவந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி அதன் வழியே தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கோடும், தங்கள் எஜமானர்களை மகிழச் செய்ய வேண்டும் என பேசப்பட்டதாகவே நாங்கள் நம்புகிறோம். இந்த பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதுமட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செ வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியாரியல் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக புகார்...

நெல்லைக் கண்ணன் கைதுக்கு வாழ்வுரிமை கூட்டமைப்பு கண்டனம்

நெல்லைக் கண்ணன் கைதுக்கு வாழ்வுரிமை கூட்டமைப்பு கண்டனம்

பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக 01.01.2020 நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக ஆலோசனைக் கூட்டமும் தொடர்ந்து பத்திரிக்கை யாளர் சந்திப்பும் 02.01.2020 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. எந்த உள்நோக்கமும் இல்லாமல் வட்டாரப் பேச்சு வழக்கில் நெல்லை கண்ணன் பேசியதற்கு, பாஜக தலைவர்கள் உள்நோக்கம் கற்பித்த தோடு அதனைப் பெரிதுபடுத்தி தமிழக அரசு அவரை கைது செய்யும் அளவிற்கு கொண்டு சென்றது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும், தமிழக அரசு அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. அதேவேளை, தொடர்ச்சியாக மதம், சாதி, மொழி, இனம் அடிப் படையில் மக்களிடையே பாகு பாட்டை உண்டாக்கி கலவரத்தை தூண்டுகிற விதத்தில் பேசி வரும் எச்.ராஜா போன்ற ஆர்.எஸ்.எஸ். – பாஜக தலைவர்களை பல்வேறு புகார்கள், வழக்குகளுக்கு பின்னரும் கைது செய்யாமல் இருப்பது உள் நோக்கம் கொண்டது. எனவே, நெல்லை கண்ணனை விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், கலவரத்தைத் தூண்டும்...

குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் பேரணியில் கழகம் பங்கேற்பு

குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் பேரணியில் கழகம் பங்கேற்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 23ஆம் தேதி நடந்த மாபெரும் பேரணியில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். தி.மு.க. கூட்டணி கட்சிகளைத் தவிர, இஸ்லாமியர் அமைப்புகள், பல்வேறு இயக்கங்கள் பங்கேற்றன. திராவிடர் விடுதலைக் கழகம் பேரணியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் பங்கேற்றது. அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் இரா. உமாபதி, அய்யனார், அன்பு தனசேகர்  மற்றும் மயிலை சுகுமார், வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஏசுகுமார், ராஜீ, தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், எம்.ஜி.ஆர். நகர் கரு. அண்ணாமலை உள்ளிட்ட சென்னை மாவட்டக் கழகத் தோழர் கள் ஏராளமாகப் பங்கேற்றனர். ஈரோட்டிலிருந்து 20க்கும் மேற்பட்ட தோழர்களும் குடியாத்தம் பகுதி, காஞ்சிபுரம் பகுதி கழகத்தினரும் பேரணியில் பங்கேற்றனர். கழகக் கொடிகளுடன் ஒலி பெருக்கி வழியாக கழகத் தோழர்கள்...

கழக நாள்காட்டி வெளிவந்து விட்டது

கழக நாள்காட்டி வெளிவந்து விட்டது

செயலவையில் 2020ஆம் ஆண்டுக்கான நாள் காட்டிகள் விற் பனைக்கு கொண்டு வரப்பட்டன. கழகத் தோழர்கள் நாள் காட்டிகளை வாங்கிச் சென்றனர்.  கழக ஏடுகளுக்கான உறுப்பினர்கள் சேர்க்கும் இரசீது புத்தகங்களையும் தோழர்கள் பெற்றுச் சென்றனர். இவ்வாண்டு நாள்காட்டியில் சமூகத்துக்குப் போராடிய பெண் போராளிகள் படம் இடம் பெற்றுள்ளன. தொடர்புக்கு : தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர். பேசி: 9941759641 நாள்காட்டி ஒன்றின் விலை : ரூ. 70/- ஓவியர் பரதன் வடிவமைப்பில் உருவாகும் நாள்காட்டி: ஒவ்வொரு ஆண்டும் கழக நாள்காட்டியை இயக்க ஆதரவாளர் ஓவியர் பரதன் – எம்.எஸ். ஆப்செட் நிறுவனம் வழியாக அதற்கான படங்களை  எந்த கட்டணமும் இன்றி சிறப்புடன் வடிவமைத்து தருகிறார். கழக சார்பில் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். பெரியார் முழக்கம் 02012020 இதழ்

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்த தோழர்கள் உறுதி

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்த தோழர்கள் உறுதி

கழக செயலவைக் கூட்டத்தில் பேசிய கழகப் பொறுப்பாளர்கள், 2020ஆம் ஆண்டில் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று அறிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக செயலவை, சென்னை இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் டிசம்பர் 28, 2019 அன்று காலை 10.30 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. தென்சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் மயிலை சுகுமார், கடவுள், ஆத்மா மறுப்பு முழக்கங்களைக் கூறினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தொடக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத்தின் கடந்தகால செயல்பாடுகள் – பெரியாரியலை எதிர்நோக்கும் ஆபத்துகள், கழக அமைப்புகள் முனைப்போடு செயல்பட வேண்டிய தேவை, அடுத்து மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து தலைமைக் குழுவில் நடந்த விவாதங்கள், கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ குறித்த வரவு செலவு கணக்குகளை விளக்கி ஒரு மணி நேரம் பேசினார். தொடர்ந்து கழகத்...

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சிகளை முறியடிக்க மக்களை ஒன்று திரட்டுவோம் பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சியைத் தடுக்க மக்கள் சக்தியை அணி திரட்டுவோம் என்று திராவிடர் விடுதலைக் கழக செயலவை அறைகூவல் விடுத்துள்ளது. நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் ஆபத்தையும் செயலவை எச்சரித்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: இந்தியாவின் மதச் சார்பற்ற அடையாளத்தை உருக்குலைத்து ‘இந்து இராஷ்டிரமாக்கும்’ முயற்சிகளை பா.ஜ.க. நடுவண் ஆட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கான வழிகாட்டும் அதிகாரங்களை ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துக் கொண்டுள்ளது. மெஜாரிட்டி மக்களாக இந்துக்களைக் கொண்ட ஒரு நாடு இந்து நாடாகவே இருக்க வேண்டும் என்று சங்பரிவாரங்கள், பா.ஜ.க. முன் வைக்கும் கருத்துகளின் உள்ளடக்கம் மிக மிக ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ‘மெஜாரிட்டி இந்துக்கள்’ போர்வைக்குள் மைனாரிட்டி பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு மெஜாரிட்டி இந்துக்களின் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகளை சிதைத்து, பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாடே...

கழகச் செயலவை டிச.28இல் சென்னையில் கூடுகிறது

கழகச் செயலவை டிச.28இல் சென்னையில் கூடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 8.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமை குழுவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி,  பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, இணைய தள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈசுவரன், மடத்துக்குளம் மோகன், சூலூர் பன்னீர்செல்வன், அய்யனார், இரா. உமாபதி, பாரி சிவக்குமார், மேட்டூர் சக்தி ஆகியோர் பங்கேற்றனர். கழகத்தின் பரப்புரைத் திட்டங்கள், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், கழக அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. டிசம்பர் 28 சனிக்கிழமை சென்னையில் கழகச் செயலவைக் கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. செயலவையில் தோழர்களின் கருத்துகளைக் கேட்டு, செயல்...

நீலம் பண்பாட்டு மய்யம் நடத்திய அரசியலமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம்

நீலம் பண்பாட்டு மய்யம் நடத்திய அரசியலமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம்

நீலம் பண்பாட்டு மய்யம் சார்பில் ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம்’ நவம்பர் 26ஆம் தேதி மாலை சென்னை சேத்துப்பட்டு உலக பல்கலைக் கழக சேவை மய்யத்தில் நடந்தது. ‘பிளாக் பாய்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இயக்குனர் ரஞ்சித் அறிமுக உரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அரசியலமைப்பு நகலை அறிமுகம் செய்து, புரட்சியாளர் அம்பேத்கர் நிகழ்த்திய ஆழமான உரையை சுட்டிக் காட்டிப் பேசினார். அம்பேத்கர் மொழி வழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு எழுதிய நூலில் வடநாடு பிற்போக்கானது; தென்னாடு முற்போக்கானது. இந்தி பேசும் மாநிலங்கள் தென்னகத்தை அடக்கியாளுவதற்கேற்ப மாநிலப் பிரிவினை நடத்தியிருக்கிறது. இந்தியாவுக்கு தென்னாட்டில் ஹைதராபாத்திலும் ஒரு தலைநகரம் உருவாக்க வேண்டும் என்று எழுதியிருப்பதை சுட்டிக்காட்டினார். நிகழ்வில் ஆம்ஸ்ட்ராங் (பகுஜன் சமாஜ் கட்சி), சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), திருமுருகன் காந்தி (மே 17), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஜக்கையன் (ஆதி...

சென்னையில் தோழர் இராவணன் படத்திறப்பு நிகழ்வு ! சென்னை 30112019

சென்னையில் தோழர் இராவணன் படத்திறப்பு நிகழ்வு ! சென்னை 30112019

நாள் : 30 11 2019 சனிக்கிழமை நேரம் : மாலை 6 மணி இடம் : தலைமை அலுவலகம், திராவிடர் விடுதலைக் கழகம், மயிலாப்பூர், சென்னை. தலைமை : தோழர் அய்யனார், தலைமைக்குழு உறுப்பினர் முன்னிலை : தோழர் :உமாபதி, சென்னை மாவட்ட செயலாளர். படத்தை திறந்து வைத்து உரையாற்றுபவர்கள் : தோழர் கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை இராஜேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.

இராவணன் முடிவெய்தினார்

இராவணன் முடிவெய்தினார்

பெரியாரியலையே முழு நேரப் பணியாக ஏற்றுத் தொண்டாற்றிய பெரியாரியல்  போராளி இராவணன் (45) முடிவெய்தி விட்டார். திருப்பூரிலிருந்து அவரது பெரியாரியல் பயணம் தொடங்கியது. தமிழ்நாடு திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் என்று தொடர்ந்து செயல்பட்டவர். மதுரைக்கு அருகே உள்ள அதிகாரப்பட்டி என்ற கிராமத்தைச் சார்ந்த இராவணன், திருப்பூருக்குப் பணிக்கு வந்தபோது, ‘பெரியாரிஸ்டாக’ மாறினார். 15 ஆண்டுகாலம் தனது குடும்ப உறவுகளைத் துண்டித்துக் கொண்டு இயக்கத்தோடு இணைந்து முழு நேர ஊழியராக பெரியாரியக்கங்களில் களப்பணியாற்றினார். 2007ஆம் ஆண்டு தஞ்சையில் அன்றைய பெரியார் திராவிடர் கழகம், ஜாதி ஒழிப்பு மாநாடு-பேரணி ஒன்றை நடத்தி சட்ட எரிப்பில் சிறைச் சென்ற போராளிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தது. அப்போது திருப்பூரில் தனது வேலையை உதறிவிட்டு, முழு நேரப் பணியாற்ற கழகத்துக்கு வந்து மாநாட்டு அலுவலகப் பொறுப்பேற்று செயல்பட்டார். அது முதல் எந்தப் பயனையும் எதிர்பார்க்காது முழு நேரப் பணியாற்றி வந்தார்....

பார்ப்பனர்கள் வன்முறைப் பேச்சுகள்: அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பார்ப்பனர்கள் வன்முறைப் பேச்சுகள்: அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சமூக அமைதியைக் குலைக்கும் நோக்கத்தோடு இரு பிரிவினருக்கு மிடையே மோதலையும் பதற்றத்தையும் உருவாக்கிடும் கருத்துகளைத் தெரிவித்த பார்ப்பனர்கள் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பில் 22.11.2019 அன்று நடந்த சென்னை செய்தியாளர் சந்திப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டார். புகார்கள் தரப்பட்டு வழக்குப் பதிவு செய்த பிறகும் கைது செய்யப்படாததோடு, புகார் மனுவைப் பெற்றுக் கொண்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்ய மறுப்பதையும் பேட்டியில் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார். பேட்டி விவரம்: “கேரளாவில் நடந்த பிராமணர் உலக மாநாட்டில் பேசிய வெங்கடகிருஷ்ணன் என்ற பேராசிரியர் ஜாதி ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தியதோடு ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை நாயுடன் ஒப்பிட்டும் பேசினார். பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில்  அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நாகை திருவள்ளுவன் நேரில் காவல்துறையிடம் புகார் அளித்தார். 153ஏ, 153பி, 5.5ஏ, 5.5பி உள்ளிட்ட பிரிவுகளில் முதல் தகவல்...

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! “சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?”

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! “சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?” திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை : அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது. இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன.ஆனால் இது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்துவைத்த வாதங்கள் அத்தனைதையையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதும், இந்துத்துவாவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ராமர் கோயிலை இடித்து விட்டு தான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன.அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. 1949...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச் செய்யப்படுவதா? அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரான இந்த இந்துத்துவ அடையாள திணிப்புகள் தமிழக அரசின் விழாக்களில் திட்டமிட்டு செய்யப்படுமானால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கை ! பெரியார் பல்கலைக் கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழா 24.10 2019 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பல்கலைக் கழக துணைவேந்தர் பொ. குழந்தைவேலு, உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் பெரியாரின் படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது தற்செயலாய் நடந்தது அல்ல. இந்துத்துவவாதிகளால் திட்டமிடப்பட்ட கடும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும். இந்நிகழ்வு நடைபெற்ற சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் ஆளுயர பெரியார் சிலை உள்ளது. இந்த பெரியார் சிலையின்...

தீவாளி, நல்விழா நாளா? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தீவாளி, நல்விழா நாளா? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன்என் றவனை அறைகின் றாரே? இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே? இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது? இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர் பன்னு கின்றனர் என்பது பொய்யா? இவைக ளைநாம் எண்ண வேண்டும். எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா? வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம். ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும் தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது! ‘உனக்கெது தெரியும் உள்ளநா ளெல்லாம் நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா? ‘ என்று கேட்பவனை ‘ஏனடா குழந்தாய்! உனக்கெது தெரியும் உரைப்பாய் ‘என்று கேட்கும்நாள் மடமை கிழிக்கும்நாள் அறிவை ஊட்டும்நாள் மானம் உணருநாள் இந்நாள். தீவா வளியும் மானத் துக்குத் தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவீரே! நிமிர்வோம் அக்டோபர் 2019 மாத இதழ்

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்

  09.10.2019 அன்று ஜாதி  ஒழிப்பு போராளி தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாளை யொட்டி  பரமக்குடி யிலுள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செய லாளர் சந்திர போஸ் ஆகியோர் காலை 10:30 மணிக்கு புகழஞ்சலி செலுத்தினர். உடன் திராவிடர் விடுதலைக் கழக மதுரை மாவட்டச் செயலாளர் மணி அமுதன், மேலூர் பொறுப்பாளர் சத்யமூர்த்தி, ஆய்வு மாணவர் மாளவிகா, பொன்னான்டி உள்ளிட்ட மதுரை மாவட்டக் கழகத்  தோழர்கள் மற்றும் தியாகி இமானுவேல் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாலை 5 மணிக்கு  தியாகி இமானுவேல் பேரவை மானாமதுரையில் ஏற்பாடு செய்திருந்த ‘ஜாதி ஒழிப்பு கருத்தரங்’கிற்கு  தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செயலாளர் சந்திர போஸ் தலைமை தாங்கினார்.  தமிழ்த் தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் கே.எம்.ஷெரீப், கழகத் தலைவர் கொளத்தூர்...

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச்செய்யப்படுவதா ?  கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச்செய்யப்படுவதா ? கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !

” *பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச்செய்யப்படுவதா ?* *”கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !”* அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரான இந்த இந்துத்துவ அடையாள திணிப்புகள் தமிழக அரசின் விழாக்களில் திட்டமிட்டு செய்யப்படுமானால் *கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கை !* பெரியார் பல்கலைக் கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழா 24.10 2019 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாநில ஆளுனர் பன்வாரிலால் புரோகித்,தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,பல்கலைக் கழக துணைவேந்தர் பொ.குழந்தைவேலு,உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் பெரியாரின் படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.இது தற்செயலாய் நடந்தது அல்ல. இந்துத்துவ வாதிகளால் திட்டமிடப்பட்ட கடும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும்.(காண்க : அழைப்பிதழ் ) இந்நிகழ்வு நடைபெற்ற சேலம் பெரியார் பல்கலைக் கழக...

சீமான், விளம்பர விரும்பி… கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்!”  – கொளத்தூர் மணி

சீமான், விளம்பர விரும்பி… கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்!” – கொளத்தூர் மணி

  நன்றி:- ஜூனியர் விகடன் `ஆமாம், நாங்க தான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். இந்திய ராணுவத்தை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பி, தமிழின மக்களை அழித்தொழித்த தமிழின துரோகி ராஜீவ் காந்தியை, தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்’ – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்தக் கடும் சர்ச்சைப் பேச்சு தான் தமிழக, ஏன் இந்திய அரசியலில் ஹாட் டாபிக். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவரும், சீமானின் அரசியல் முகம் அறியாத கால கட்டத்திலேயே தனது இயக்கத்தின் கூட்டங்களில் மேடையேற்றிப் பேச வைத்தவருமான திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்தோம். “உங்களுக்கும் சீமானுக்குமான தொடர்பு எப்படி உருவானது?” “திரைப்பட வாய்ப்பு தேடி கிராமங்களிலிருந்து புறப்பட்டு வரும் பலருக்கும் அடைக்கலம் கொடுப்பார் கவிஞர் அறிவுமதி. அப்படி வந்தவர் தான் சீமான். 2001 ஆம் ஆண்டு, தந்தை...

கோவையில் 2019 டிசம்பர் 15 நீலச் சட்டைப் பேரணி

கோவையில் 2019 டிசம்பர் 15 நீலச் சட்டைப் பேரணி

கோவையில் 2019 டிசம்பர் 15 நீலச் சட்டைப் பேரணி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்வைத்து, எதிர்வரும் 2019 டிசம்பர் 15 ஞாயிறு அன்று கோவை மாநகரில் நீலச்சட்டைப் பேரணியும், ஜாதி ஒழிப்பு மாநாடும் நடத்துவதென 20-10-2019 ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது கழகத் தோழர்களும், ஜாதி ஒழிப்பில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும், நீலச் சட்டையோடு பேரணியிலும் மாநாட்டிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டு, ஜாதி ஒழிப்புக்கு வலுசேர்க்க, உடனே திட்டமிடுமாறு உரிமையுடன் வலியுறுத்துகிறோம் கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தமிழகம் தழுவி கழகம் ஆர்ப்பாட்டம் கல்வி நகலைக் கிழித்து கழகத்தினர் கைது

தமிழகம் தழுவி கழகம் ஆர்ப்பாட்டம் கல்வி நகலைக் கிழித்து கழகத்தினர் கைது

காமராசர் நினைவு நாளான அக்.2 ஆம் தேதி புதிய கல்விக் கொள்கை நகலைக் கிழித்தெறியும் ஆர்ப்பாட்டங்களை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தித் தொகுப்பு: சென்னை : தேசிய கல்விக் கொள்கையின் நகல் கிழிப்புப் போராட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் காமராசர் நினைவு நாளான அக். 2ஆம் தேதி பகல் 11.30 மணியளவில் நடந்தது. காமராசர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தோழர்கள் புதிய கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெறு என்ற முழக்கத்துடன் கல்விக் கொள்கை நகலை கிழித்து எறிந்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெண் தோழர்கள் உள்ளிட்ட 70 தோழர்கள் கைதானார்கள். சிந்தாதிரிப் பேட்டையில் திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டனர். அங்கே பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் புதிய கல்வித் திட்டத்தின் ஆபத்துகளை...

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம்

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம்

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டமானது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணியளவில் துவங்கியது. சேலம் மாநகர அமைப்பாளர் தோழர் பாலு அவர்களின் கண்டன முழக்கங்கள் எழுப்ப அதை தொடர்ந்து கழக தலைவர் அவர்கள் புதிய தேசிய கல்வி கொள்கையின் நகல் கிழித்தெரியும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி கண்டன உரையாற்றினார். அதை தொடர்ந்து நம் தோழர்களின் கண்டன முழக்கங்களோடு புதிய தேசிய கல்வி கொள்கையின் வரைவு நகல்கள் கிழித்தெரிய பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் டேவிட் ஒருங்கிணைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 110 தோழர்கள் கலந்து கொண்டனர். 5 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 85 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோட்டை கமலா மஹால் மண்டபத்தில்...

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள்

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள்

தீர்மானம் எண் : 1 தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் ! தமிழ்நாட்டில் பல இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட நாட்டுக்காரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளமே அழிந்துபோகும் ஆபத்தை நாம் சந்திக்க வேண்டி வந்துவிடும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அழிப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே வடநாட்டு பண்பாட்டில் மூழ்கச் செய்து விடும். இந்த பேராபத்தைத் தடுக்க, மகாராஷ்டிரா ஆந்திரா இராஜஸ்தான் மாநில அரசுகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் குறைந்தது 75 விழுக்காட்டு வேலைவாய்ப்புகளை – தனியார் தொழில் நிறுவனங்களிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதுவே தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வாக...

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு !

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு !

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு ! 20.09.2019 வெள்ளிக்கிழமை ஈரோடு,பள்ளிபாளையம்,நேரு திடலில் மாநாடு நடைபெற்றது எங்கள் தலைமுறையை வாழவிடு ! தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! எனும் முழக்கத்துடன் தமிழ்நாட்டின் 5 முனைகளில் இருந்து 2 கட்டங்களாக மக்களை சந்தித்த பரப்புரை பயண குழு தோழர்கள் பறிக்கப்ப்படும் தமிழர்களின் உரிமைகள் குறித்து பரப்புரை செய்து அதன் நிறைவு விழா மாநாடாக இம்மாநாடு நடைபெற்றது. உரிமை முழக்க பாடல்களுடன் துவங்கியது மாநாடு. சிறப்பான வீதி நாடகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றன.அடுத்ததாக பரப்புரை பயண குழு தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கழக நிர்வாகிகள் உரைகளை அடுத்து கழகத்தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒரே தத்துவம் ஒரே கலாச்சாரம் கொண்டதா இந்து மதம்…????  அசுரர்களை வரவேற்கும் திருஓணம்..!!

ஒரே தத்துவம் ஒரே கலாச்சாரம் கொண்டதா இந்து மதம்…???? அசுரர்களை வரவேற்கும் திருஓணம்..!!

ஒரே தத்துவம் ஒரே கலாச்சாரம் கொண்டதா இந்து மதம்…???? அசுரர்களை வரவேற்கும் திருஓணம்..!! தேவர் அசுரர் போராட்டங்களை சித்தரிப்பது தான் நமது புராணக் கதைகள். வேறு வகையாக சொல்லவேண்டுமானால், ஆரிய திராவிடப் போராட்டத்தில் ஆரியர்களை எதிர்த்து கேள்வி கேட்ட திராவிடர்களை, ஆரியர்கள் சூழ்ச்சியின் வாயிலாக அழித்து ஒழித்ததை நியாப்படுத்தும் கதைகளே புராணக் கதைகள். வரலாறுநெடுக இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், கேரளத்தின் கதையோ வேறு விதமாக இருக்கிறது. கேரளத்தில் இன்றைக்கு மலையாளிகள் திருஓணம் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். வாமணன் திருமால் வடிவம் எடுத்து அங்கே நல்லாட்சி செய்த மாவேலி யிடம் மூன்று வரங்களை கேட்டான். மாவேலி ஒரு அசுரன். தேவர்களை எதிர்த்தவன். தேவர்களை எதிர்த்த அசுரனை சூழ்ச்சியால் ஒழிப்பதற்காக, வாமணன் என்ற வேடம் எடுத்து, மாவேலி அரசனிடம் எனக்கு மூன்று அடிகளைத் தர வேண்டும் என்று அவன் கேட்டான். மன்னனும் ஒப்புக் கொண்டார். தேவனாகிய வாமணன் முதல் அடியில் உலகம் முழுவதையும்...