கழகச் செயலவை டிச.28இல் சென்னையில் கூடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 8.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமை குழுவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார்.

அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி,  பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, இணைய தள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈசுவரன், மடத்துக்குளம் மோகன், சூலூர் பன்னீர்செல்வன், அய்யனார், இரா. உமாபதி, பாரி சிவக்குமார், மேட்டூர் சக்தி ஆகியோர் பங்கேற்றனர்.

கழகத்தின் பரப்புரைத் திட்டங்கள், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், கழக அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. டிசம்பர் 28 சனிக்கிழமை சென்னையில் கழகச் செயலவைக் கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. செயலவையில் தோழர்களின் கருத்துகளைக் கேட்டு, செயல் திட்டங்களை விவாதித்து இறுதி முடிவு  எடுப்பதென செயலவை தீர்மானித்துள்ளது.

பெரியார் முழக்கம் 12122019 இதழ்

You may also like...