Category: தலையங்கம்

தலையங்கம் – தமிழகத்தில் ஜாதி வெறிக் கொலைகள்! 0

தலையங்கம் – தமிழகத்தில் ஜாதி வெறிக் கொலைகள்!

ஜாதி எதிர்ப்புக் கருத்துகளை மக்களிடையே பரப்ப திராவிடர் விடுதலைக் கழகம், ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து பரப்புரை இயக்கங்களைத் தொடங்கியிருக்கிறது. சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மய்யமாக ஜாதியமைப்பே இருக்கிறது. அதற்குள் வெடித்துக் கிளம்பும் முரண்பாடுகளே ஜாதியக் கலவரங்களுக்குக் காரணம். இந்த ஜாதியமைப்புக்கான கருத்தியலை வழங்கி, ‘புனித’ப்படுத்துவது பார்ப்பனியம். மதவாதம் – மதவெறியாக ஜாதியம் – ஜாதி வெறியாக மிக எளிதாக ‘உருமாற்றம்’ பெற்றுவிடுகிறது. பெரியார் இயக்கம் நடத்திய மண்ணில் – ஜாதி மதவெறி சீர்குலைவு சக்திகள் தலைதூக்குகிறதே என்று உண்மையில் வேதனைப்படுவோர் உண்டு. பெரியார் இயக்கம் தோல்வி அடைந்து விட்டது என்று முத்திரை குத்தத் துடிப்போரும் உண்டு. ஆனால், பெரியாரைப் பேசும் அரசியல் கட்சிகளானாலும் பெரியாரை குறை கூறத் துடிக்கும் இயக்கங்கள் ஆனாலும் தமிழ்நாட்டில் தலைதூக்கிட முயற்சிக்கும் ஜாதிய மதவாத சக்திகளுக்கு எதிராக ஏன், ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட முன் வரவில்லையே என்று வேதனையுடன்...

தலையங்கம் – கருத்துரிமைக்கு ஆதரவாக  ஒரு தீர்ப்பு! 0

தலையங்கம் – கருத்துரிமைக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பு!

சமூக வலைத் தளங்களில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்வதை முடக்கி சிறையில் தள்ளும் கொடூரமான கருத்துரிமையை பறிக்கும் தகவல் தொழில்நுட்ப 66(ஏ) சட்டத்தை உச்சநீதிமன்றம் இரத்து செய்து விட்டது. 2008 ஆம் ஆண்டு அன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கொண்டு வந்த சட்டம் இது. அப்போது எதிர்கட்சியாக இருந்த பா.ஜ.க. எதிர்த்தது. இப்போது ஆட்சிக்கு வந்துவிட்ட பா.ஜ.க. உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்துக்கு ஆதரவாகவே வாதாடியது. அதிகாரத்துக்கு வந்த பிறகு தங்களது ஊழல் முறைகேடுகள் அம்பலமாகிடக் கூடாது என்பதே ஆட்சியாளர்களின் நோக்கம்; அதற்காக எந்த அடக்குமுறை சட்டங்களையும் அவர்கள் கையில் எடுப்பார்கள். சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே மரணத்தையொட்டி மும்பையில் முழு அடைப்பு திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்து வலைதளத்தில் கருத்து தெரிவித்த கல்லூரி மாணவி ஷாகின் மீது இச்சட்டம் பாய்ந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அவரது கருத்துக்கு விருப்பம் தெரிவித்ததற்காக மற்றொரு மாணவி கைது செய்யப்பட்டார். இதேபோல் உ.பி. ஆளும் கட்சியான...

தலையங்கம் – அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் அடக்குமுறை 0

தலையங்கம் – அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் அடக்குமுறை

பார்ப்பனர்களின் ஒடுக்குமுறை பண்பாடுகளை தமிழர்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்பதுதான் பார்ப்பனப் பாசிசம். மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, சட்டத்தையும் அதிகாரத்தையும் காட்டி அச்சுறுத்தி, பார்ப்பன பண்பாடுகளை திணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி ஆட்சி மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியும் அதன் காவல்துறை செயல்பாடுகளும் மோடி ஆட்சியைவிட தீவிரமான மதவாத ஆட்சியாகவே செயல்பட்டு வருகிறது. திராவிடர் கழகம் அவர்களுக்கு சொந்தமான பெரியார் திடலில் விரும்பியவர்கள் தாலியகற்றும், பெண்ணடிமைக்கு எதிரான ஒரு கருத்துப் பரப்புதலை நடத்துவதற்கு முன் வந்தால் அதை தமிழக அரசும் காவல்துறையும் ஏன் தடுக்க வேண்டும்? இந்த நிகழ்வைக்கூட இப்போது நடத்த வேண்டிய நிலையை உருவாக்கியது யார்? ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, ‘சர்வதேச மகளிர் நாளில்’, ‘பெண்களுக்கு தாலி வேண்டுமா?’ என்ற ஒரு விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருந்தது. அதை ஒளிபரப்புவதற்கே எதிர்ப்பு தெரிவித்து ‘வெடிகுண்டு’களை வீசக் கிளம்பியது ஒரு கூட்டம். அதன் காரணமாக நிகழ்ச்சி ஒளிபரப்பாமல் நிறுத்தப்பட்டது. கணவனுக்கு அடங்கிப்போய் ‘கல்லானாலும்...

தலையங்கம் – திருநங்கைகள் உரிமை 0

தலையங்கம் – திருநங்கைகள் உரிமை

திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, மாநிலங்களவையில் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கக்கூடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். இதை ஒருமித்த தீர்மானமாக நிறைவேற்றிட அவையின் முழுமையான ஆதரவைப் பெறுவதற்கு ஒத்துழைத்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியையும் கருத்து மாறுபாடுகளுக்கு அப்பால் பாராட்ட வேண்டும். பிறப்பின் அடிப்படையில் சமூகத்தில் வேறுபாடுகளையோ, இழிவுபடுத்துதலையோ சகிக்க முடியாது. அதை ஒழித்தாக வேண்டும் என்பதே பெரியாரியல். திருநங்கைகள் உரிமைகளும் அவர்களின் சுயமரியாதையும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இப்போது மேலவையில் குரல் வாக்கெடுப்பு வழியாக நிறைவேற்றப்பட்டுள்ள ‘திருநங்கைகள் உரிமைச் சட்டம்-2014’ நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களவை காட்டிய வழியில் வழிமொழிந்து திருநங்கைகளின் உரிமைக் கதவுகளை திறந்துவிட வேண்டும் என்பதே மனித சமத்துவம் பேணும் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தனிநபர் கொண்டுவந்த ஒருவரைவுத் தீர்மானம் ஒரு மனதாக ஏற்கப்பட்டு, சட்டமாக்கப்பட்டுள்ளது. இது...

தலையங்கம் – தீர்ப்பு வந்துவிட்டது! 0

தலையங்கம் – தீர்ப்பு வந்துவிட்டது!

19 ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்ட ஒரு வழக்கை இரண்டே நிமிடங்களில் தீர்ப்பளித்து தீர்வு கண்டுவிட்டது கருநாடக உயர்நீதிமன்றம். ஜெயலலிதா மற்றும் அவரது குழுவினரான சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்பட எவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து ஏதும் சேர்க்கவில்லை என்பதே நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆம்! இப்போது இவர்கள் சட்டப்படி ஊழல் ஏதும் இழைத்திடாத குற்றமற்றவர்கள்! “நான் புடம் போட்ட தங்கமாக மீண்டு வந்துவிட்டேன்” என்று ஜெயலலிதாவும் அறிவித்திருக்கிறார். அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களும் அந்த கட்சியினரும் வெற்றியைக் கொண்டாடி மகிழும்போது எதிர்கட்சிகளோ வியப்பிலும் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளன. எப்போதுமே இந்த ‘பாரத புண்ணிய பூமி’யில் ஊழல் இரண்டு முகம்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று ‘பிராமண’ ஊழல்; மற்றொன்று ‘சூத்திர’ ஊழல். குற்றம் செய்தவர்கள் பார்ப்பனர்களாக இருந்தால், அவர்களை தண்டிக்கக் கூடாது என்று மனுசா°திரம் கண்டிப்பாக கூறிவிட்டது. அந்த ‘மனு’ இப்போது வேறு வடிவங்களில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதற்கு அண்மைக்கால உதாரணங்களே உண்டு. லல்லுபிரசாத், ஓம்பிரகாஷ் சவுதாலா, கனிமொழி, அ.இராசா...

தலையங்கம் – மீண்டும் குலக் கல்வி திட்டம்! 0

தலையங்கம் – மீண்டும் குலக் கல்வி திட்டம்!

1954ஆம் ஆண்டு தமிழ்நாட்டு முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரி, பச்சைப் பார்ப்பன வெறியுடன் கொண்டு வந்த ‘குலக் கல்வித் திட்டம்’ இப்போது மீண்டும் உயிர் பெறுகிறது. ‘சூத்திரர்’களுக்கு கல்வி உரிமையை பார்ப்பன நீதி நூலான மனு சா°திரம் மறுத்தது. அவர்களுக்கு இழி தொழில்களை கட்டாயமாக்கியது. அந்த மனு சா°திர அடிப்படையில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து டாக்டர் எ°.ஜி. மணவாள இராமானுஜம் தலைமையில் மாநாடு கூட்டினார் பெரியார் (24.1.1954). கல்வித் திட்டத்தை திரும்பப் பெற 3 மாதக் கெடுவிதித்து, ஒற்றைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1954, மார்ச் 29இல் குலக் கல்வித் திட்ட எதிர்ப்புப் படை சுயமரியாதை வீரர் நீடாமங்கலம் ஆறுமுகம் தலைமையில் சென்னை நோக்கி புறப்பட்டது. படை சென்னை வரும் முன்பே ஆச்சாரியார் பதவி விலகினார். 13.4.1954இல் முதல்வராக பதவியேற்ற காமராசர், குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். இப்போது வரலாறு திரும்புகிறது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் தங்களது பாரம்பர்ய தொழிலில் விடுமுறை நாள்களில்...

தலையங்கம் – பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் நிறைவேறுமா? 0

தலையங்கம் – பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் நிறைவேறுமா?

மத்திய அரசுக்கான பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மூன்றாக வகைப்படுத்தும் பரிந்துரையை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மத்திய அரசிடம் அளித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஜாதிகளுக்கிடையே முன்னேறிய ஜாதியினர், பின்தங்கிய நிலையில் உள்ள ஜாதியினருக்கான வாய்ப்புகளைப் பறித்து விடுவதால் அனைத்து ஜாதியினருக்கும் சமவாய்ப்பு வழங்குவதே இதன் நோக்கம் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கூறுகிறது. ஜாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு, அனைத்துப் பிரிவினருக்கும் சமத்துவம் வழங்குவதே இடஒதுக்கீட்டின் நோக்கம். எனவே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் மிகச் சரியானது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. நோக்கம் வரவேற்கப்பட வேண்டியது தான். ஆனால், சமூகநீதிக்கு ‘நந்தி’களாக நிற்கும் உச்சநீதிமன்றங்களும், பார்ப்பன அதிகார வர்க்கமும் உண்மையில் சமத்துவத்தை நோக்கி, இத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிப்பார்களா என்ற நியாயமான சந்தேகம் எழவே செய்கிறது. முதலில், மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் 7 சதவீதம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்று அரசின் புள்ளி விவரங்கள்...

தலையங்கம் – ஜாதி வெறி சக்திகளின்கொலை வெறி 0

தலையங்கம் – ஜாதி வெறி சக்திகளின்கொலை வெறி

தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்றுவரும் ஜாதிவெறி சக்திகளின் ஜாதிவெறி நடவடிக்கை களையும், இதனை கண்டு கொள்ளாத தமிழக அரசையும் திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. சமீப காலமாக தமிழ் நாட்டில் ஜாதிவெறியர்களின் நடவடிக்கைகள் நவீன ஊடகங்கள் வழியாகவும் மிகவும் வெளிப்படையாக நடந்தேறிக் கொண்டிருக் கிறது. ஏற்கனவே ‘வாட்ஸ் அப்’ எனும் நவீன தொடர்பு ஊடகம் மூலம்பொறியாளர் கோகுல் ராஜ் கொலையில் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவன தலைவர் யுவராஜ் எனும் ஜாதிவெறியர், ஜாதி வெறியூட்டும் வகையிலும், காவல்துறைக்கு பகிரங்கமான மிரட்டல் விடுத்தும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் பேசி அதனை அனைவரும் கேட்கும் வகையில் பரப்பினர். தற்பொழுது முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை எனும் அமைப்பின் நிறுவனர், தலைவர் செங்குட்டுவன் வாண்டையார் எனும் ஜாதி வெறியர் மிகவும் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தும், காவல்துறைக்கு சவால் விடுத்தும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயலிலும் இறங்கி அதனை வாட்ஸ் அப்...

தலையங்கம் – மீண்டும் அவசர நிலையா? 0

தலையங்கம் – மீண்டும் அவசர நிலையா?

இந்தியாவில் மீண்டும் நெருக்கடி நிலை வராது என கூற முடியாது என்று அத்வானி, ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டி – பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது. அத்வானி, மோடியைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை, ஆளும் கட்சியினர் மறுக்கின்றனர். அவர் பொதுவாகக் கூறிய கருத்து என்கிறார்கள். 1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள ‘அடிப்படை உரிமைகளை’ தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவசர நிலையை அறிவித்தார். ‘மிசா’ சட்டத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப் பட்டனர். ‘மிசா’ சட்டம் என்றால், (ஆயiவேநயேnஉந டிக ஐவேநசயேட ளுநஉரசவைல ஹஉவ) எந்தக் காரணமும் இல்லாமல் ஒரு வருடம் வரை சிறையில் அடைக்கும் சட்டம். பத்திரிகைகள், அரசு அதிகாரிகளால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் அனுமதித்த செய்திகள் மட்டுமே வெளியிட முடியும். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அத்வானியும், ‘மிசா’வில் கைது செய்யப்பட்டவர்தான். ‘அவசர நிலை’ இந்தியாவில் சட்டப்படி இப்போது...

தலையங்கம் – பாராட்டுகிறோம்; ஆனால்… 0

தலையங்கம் – பாராட்டுகிறோம்; ஆனால்…

இது உண்மைதானா என்று வியக்க வைக்கும், ஒரு செய்தி வந்திருக்கிறது. தமிழக காவல்துறையும் கல்வித் துறையும் இணைந்து, ஜாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக, தமிழகம் முழுதும் வீதி நாடகங்கள் உள்ளிட்ட கலை வடிவங்களில் பரப்புரை நடத்துகிறது என்பதுதான் அந்த செய்தி. தமிழகக் காவல்துறைக்கு இப்படி ஓர் அரிய ஆலோசனை எங்கிருந்து வந்தது என்று நமக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு திட்டத்தை காவல்துறையும் கல்வித் துறையும் உருவாக்கி, களமிறங்கியதற்காக நாம் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், இந்த அடிப்படையான பிரச்சினையை தனது தோளில் சுமந்து, பல ஆண்டுகளாகவே களத்தில் நிற்கும் அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோதே இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, முடிவெட்ட மறுத்தல், செருப்பு அணிய, சைக்கிள் ஓட்ட, அலைபேசி பேச தடை என்று பல்வேறு வடிவங்களில் தீண்டாமைகள் தொடருகின்றன. இவற்றின் விவரங்களைத் தொகுத்தும் இரட்டைக் குவளை முறைகளை பின்பற்றும்...

தலையங்கம் – நகரமயமாகும் தமிழ்நாடு! 0

தலையங்கம் – நகரமயமாகும் தமிழ்நாடு!

இந்தியாவின் “சமூகப் பொருளாதார – ஜாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு” விவரங்கள் வெளியிடப்பட் டுள்ளன. இன்னும் ஜாதி கணக்கெடுப்புப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன்படி கிராமங்களில் வாழும் மக்களில் 30 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக வாழ்க்கையைக் கடப்பதற்கு கூலி வேலை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 23.5 சதவீதம் பேர். கிராமங்களில் உயர்நிலைப் பள்ளியை நிறைவு செய்தவர்கள் 5.4 சதவீதம். 3.4 சதவீதம் மட்டுமே கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள். கிராமப்புறங்களில் 90 சதவீதக் குடும்பங்களில் ஊதியம் பெறும் ஊழியர்கள் எவரும் கிடையாது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ‘கல்வி’க்காக தனிக் கடவுளைக் கொண்டுள்ள நாடு இது. ‘பாரதப் பூமி’, ‘புண்ணிய பூமி’, ‘மகான்கள் அவதரித்த’, ‘வேதம் செழித்த’, ‘அவதாரங்கள்’ எடுத்த பூமி என்று பெருமை பேசப்படும் நாட்டின் நிலை இதுதான். மக்களை வறுமையில் மூழ்கச் செய்துவிட்டு, ‘இந்து’ தேசத்தை உருவாக்கிட துடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் என்ன...

தலையங்கம் – தீண்டாமையைத் திணிக்கும் ‘திருவிழா’ கலவரங்கள் 0

தலையங்கம் – தீண்டாமையைத் திணிக்கும் ‘திருவிழா’ கலவரங்கள்

  தலித் மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஜாதிவெறித் தாக்குதல் அதிகரித்து வருவது தமிழ்நாட்டுக்கே அவமானம்! ஆடி மாதம் வந்துவிட்டால் போதும்; கிராமத் திருவிழாக்களில் ஜாதி வெறியாட்டம் போடத் தொடங்கிவிடுகிறது. சங்கராபுரம் வட்டத்தில் சேஷ சமுத்திரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் அம்மன் தேர் ஊர்வலம், ஊர் பொதுச் சாலையில் வரக்கூடாது என்று ஜாதிவெறியோடு தேர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, தலித் மக்கள் குடியிருப்புகளையும் எரித்ததோடு, பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினரையும் தாக்கியுள்ளனர். இந்தியாவின் ‘சுதந்திர’ நாளை தேசியக்கொடி ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில் சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை நாட்டின் ‘குடிமக்களாகவே’ ஏற்க முடியாது என்று ஜாதி வெறியர்கள் ஆணவத்தோடு கொக்கலிக்கிறார்கள். இதில் மிகப் பெரிய கொடுமை, பா.ம.க. நிறுவனர், மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கைதான். தாழ்த்தப்பட்ட மக்களின் அம்மன்  தேர், பொது வீதியில் வரக் கூடாது என்று தடுக்கும் ‘தீண்டாமை-ஜாதி’ வெறியையோ, தேர் மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்ததையோ,...

தலையங்கம் – பார்ப்பனியத்தின் சதி வலை 0

தலையங்கம் – பார்ப்பனியத்தின் சதி வலை

‘இந்து’க்களை ஒரே அணியாக தமிழகத்தில் திரட்ட முடியாத நிலையில் வெவ்வேறு ஜாதிக் குழுக்களை தங்கள் கட்சிக்குள் கொண்டுவந்து சேர்க்கும் முயற்சிகளில் பா.ஜ.க. இறங்கியிருக்கிறது. இந்து மத அடையாளங்களுக்குள் முடங்கிவிடாமல் தமிழகத்தில் பல்வேறு படி நிலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஜாதிக் குழுக்கள் அந்த அடையாளத்தை முன்னிறுத்தி, தங்கள் உரிமைப் போரை முன்னெடுத்தன. இதுவே பெரியார் வலியுறுத்திய ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற கோட்பாடு. பார்ப்பன மேலாண்மைக்கும் ஆதிக்கத்துக்கும் அரணாக நின்ற ‘இந்து ஓர்மை’க்கு வேட்டு வைத்தது, இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பெரியார் போராட்டத்தால் அரசியல் சட்டத்தில் நிகழ்ந்த முதல் திருத்தத்தின் வழியாக ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ சமூக கல்வி அடிப்படையிலான இடஒதுக்கீடாக மாறி அது தமிழ்நாட்டில் ஆட்சிகளைக் கடந்து தீவிரமாக செயலாக்கம் பெற்றது. உரிமை மறுக்கப்பட்ட ஜாதிக் குழுக்கள் முன்னேறத் தொடங்கின. உண்மையில் ‘தலைவிதி’, ஜாதி தர்மம்’ என்ற பார்ப்பனக் கோட்பாடுகளை உடைத்து நொறுக்கிக் கொண்டு உருவானதே இந்த முன்னேற்றம்! இந்த நிலையில், இந்த ஜாதிக் குழுக்களை மீண்டும்...

தலையங்கம் – போராட்டக் களமாகும் தமிழகம் 0

தலையங்கம் – போராட்டக் களமாகும் தமிழகம்

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என்ற போராட்டம், அரசியல் கட்சிகளையும் தாண்டி மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது. சசிபெருமாள் என்ற காந்தியவாதி, கைபேசி கோபுரத்தின் மீது ஏறி நின்று நடத்திய போராட்டத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டத்தின் வேகம் அதிகரித்திருக்கிறது. மதுவிலக்கு குறித்து ஜூலை 19இல் தர்மபுரியில் கூடிய திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை நிறைவேற்றிய தீர்மானத்தின் ஒரு பகுதியை சுட்டிக்காட்ட விழைகிறோம். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில், ‘மதுக்குடி’ தனிப்பட்ட சிலரின் பழக்கமாக இருந்த நிலை மாறி, இன்று சமூகத்தையே சீர்குலைத்து வருகிறது. மாணவர்களையும் இளைஞர்களையும் போதை அடிமைகளாகவும் குடிநோயாளிகளாகவும் மாற்றிவருவது ஆபத்தான அறிகுறியாகும். மதுக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், விற்பனைக்கு கூடுதலாக இலக்கை நிர்ணயிப்பதும் ஒரு மக்கள் நலன் பேணும் ஆட்சிக்கான செயல் திட்டமாக இருக்க முடியாது. அதே நேரத்தில் முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதிலும் பல ஆபத்துகள் இருக்கவே செய்கின்றன. கள்ளச் சாராயம் வர்த்தகமாகி, காவல்துறை-கள்ளச் சாராய வியாபாரிகள் இரகசிய...

தலையங்கம்-மனிதனுக்கு கீழோ-மேலோ எந்த ஜாதியும் இல்லை! 0

தலையங்கம்-மனிதனுக்கு கீழோ-மேலோ எந்த ஜாதியும் இல்லை!

உரிமைக்காக ஜாதி மாநாடுகள் கூட்டுவதை ஆதரித்த பெரியார், ஜாதி பெருமைக்காகக் கூட்டப்படுவதை அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார். “இந்த நாடு பல சாதி, பல வகுப்பார் அடங்கியதாக இருக்கிறது. எப்போது நமது நாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப் போய்விட்டதோ அன்று முதலே தனிச்சாதி மாநாடு கூட வேண்டியது அவசியமேற்பட்டுவிட்டது. ஒவ்வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக்கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று சேருவது என்று பலபேர் குற்றஞ் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிலர் இத்தகைய மாநாடுகளை வகுப்பு மாநாடுகள் என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன். இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூற முடியாது. இத்தகைய மாநாடுகள் கூட்ட வேண்டியது மிகவும் அவசியமாகவே இருக்கிறது. ஒரு வகுப்பார் தாங்கள் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வகையில் ஒருவித ஏற்பாடும் செய்யாமல் தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தாங்களும் மனிதர்கள், தாங்களும் மற்றோருக்குச் சமமானவர்களே, தங்களைத் தாழ்ந்தவர்களெனக் கூறுவது...

தலையங்கம்-‘புண்ணிய’ முழுக்குகளில் பலியாகும் அப்பாவி உயிர்கள் 0

தலையங்கம்-‘புண்ணிய’ முழுக்குகளில் பலியாகும் அப்பாவி உயிர்கள்

மதத்தை மக்களிடம் நிலைநிறுத்துவதற்கு மதவாதிகள் உருவாக்கிய சடங்குகள், அதன் மீது திணிக்கப்பட்ட நம்பிக்கைகள் மக்களின் சிந்தனைகளை முடக்கிப் போட்டு விட்டன. இந்த நம்பிக்கைகள்தான் மக்களை விழாக்களில் இலட்சக்கணக்கில் கூடுவதற்கு தூண்டுகின்றன. பெரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறன் மிக்க நிர்வாகக் கட்டமைப்புகள் இல்லாதபோது அப்பாவி பக்தர்கள் உயிர்ப்பலியாகி விடுகிறார்கள். காதைக் கிழிக்கும் அளவுக்கு மதங்களையும் அதன் மீதான அரசியலையும் நீட்டி முழங்கிக் கொண்டிருப்பவர்கள், மத உணர்வில் வீழ்ந்துபட்ட பக்தர்கள் இப்படி உயிர்ப்பலியாகும் போது வாயை இறுக மூடிக் கொண்டுவிடுகிறார்கள். மதத் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி, அப்பாவி மக்கள் பலியாகும் அவலம் தொடர்கதையாகிவிட்டது.ஆந்திராவில் கோதாவரியாற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ‘கோதாவரி புஷ்கரம்’ விழாவில் முழுக்குப் போட வந்த மக்களில் 29 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த துயர செய்தி அண்மையில் வெளி வந்திருக்கிறது. இந்த ‘புண்ணிய முழுக்குப்போடும் விழாவுக்கு கட்டுக்கடங்காத வகையில் கூட்டத்தைக் கூட்டச் செய்ததில் சாமியார்களுக்கு ஜோதிடர்களுக்கு...

தலையங்கம்-பெண்களும் நீதிமன்றங்களும்

தலையங்கம்-பெண்களும் நீதிமன்றங்களும்

பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுக்குள்ளான ஒரு நபரை சிறையிலிருந்து விடுவித்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சமரசம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடர்ந்திட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த ஆணை பலரையும் வியப்படையச் செய்தது. இந்த ஆணை கடும் விமர்சனங்களை எதிர் கொண்டது. இதைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து வந்த ஒரு பாலியல் வன்முறை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு நேர் எதிராக இருந்தது. இத்தகைய வழக்குகளை சமரசத் தீர்வு மய்யங்களுக்கு அனுப்பக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டது உச்சநீதிமன்றம். இதனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தான் பிறப்பித்த ஆணையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி, மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டார். இதேபோன்று, உயர்நீதிமன்றத்தில் மற்றொரு நிகழ்வு கடும் எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. ஆம்பூரைச் சார்ந்த பவித்ரா என்ற பெண், காணாமல் போனார் என்பதால், ஆம்பூரில் இஸ்லாமியர்களுக்கும் காவல்துறைக்குமிடையே பெரும் கலவரமே நடந்து முடிந்துள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் தந்த...