அந்தக் கால ஜாதி சங்கங்கள் உரிமைக்குப் போராடின கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை
கோயில் கட்டுகிறவர்கள் – கல்லூரி வியாபாரம் நடத்துகிறவர்கள் – தங்கள் சுயநலனுக்காக ஜாதி வெறியைத் தூண்டி விடுகிறார்கள் என்று ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ பரப்புரை இயக்கத்தை 20-03-2015 அன்று சென்னை பெரம்பூரில் தொடங்கி வைத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சில பகுதிகள். (சென்ற இதழ் தொடர்ச்சி) 1930 இல் நடைபெற்ற கொங்கு வேளாளர் மாநாட்டில், “இனி விதவைகளை வெள்ளாடை உடுத்த கட்டாயப்படுத்தக் கூடாது; விரும்பிய ஆடைகளை உடுத்த அனுமதிக்க வேண்டும்; குழந்தை இல்லாத இளம் கைம்பெண்களுக்கு மறுமணம் அனுமதிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறை வேற்றினார்கள். கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற நாடார் சங்கங்கள் இருந்தன. இப்படி மக்கள் நலனில் அக்கறையுள்ள ஜாதி சங்கங்கள்தான் அந்த காலத்தில் இருந்தன. ஆனால் இப்போது எதற்காக ஜாதி சங்கங்கள் இருக்கின்றது? ஜாதி சங்கங்களை வைத்திருப்பவர்கள் யார்? ஒரு ஊரில் புதுக் கோவில் உருவானால், முன்பெல்லாம் அது கந்துவட்டிக்காரனால்...