மோடியின் வரலாற்று உளறல்கள்

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக வலம் வரும் மோடி – அவ்வப்போது கூட்டங்களில் உதிர்த்து வரும் வரலாற்று உளறல்கள் பற்றிய ஒரு தொகுப்பு:

தண்டியில் காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியபோது, இங்கே வேதாரண்யத்தில் வ.உ.சி. தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது.            – திருச்சிக் கூட்டத்தில் மோடி

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்துக்கு தலைமை தாங்கியது வ.உ.சி. அல்ல; இராஜ கோபாலாச்சாரி.

குப்தர் வம்சம் பற்றி நாம் நினைக்கும்போது உடனடியாக சந்திரகுப்தரின் ராஜநீதிதான் நினைவுக்கு வருகிறது.   – பாட்னா கூட்டத்தில் மோடி

சந்திரகுப்தர், குப்த வம்சத்தைச் சார்ந்தவர் அல்ல; அவர் மவுரிய வம்சத்தைச் சார்ந்தவர்.

மாவீரன் அலெக்சாண்டர் இராணுவம், உலகத்தையே படையெடுத்து வெற்றிக் கண்டது. ஆனால், பீகார் தக்சசீலாவில் பீகாரி களால் அதே இராணுவம் தோல்வி அடைந்து ஓடியது. அதுதான் பீகாரிகள் வலிமை.     – மோடி பாட்னா பேச்சு

அலெக்சாண்டர் இராணுவம் கங்கையைக் கடந்து வரவே இல்லை. பீகாரிகளால் தோற்கடிக்கப்படவும் இல்லை. தக்சசீலாவும் பீகாரில் இல்லை; அது பாகி°தானில் இருக்கிறது.

திட்டக் குழுவுக்கு தலைமை தாங்கும் பிரதமர் ஒரு பொருளாதார நிபுணர். நாளொன்றுக்கு கிராமத்தில் குடும்ப வருமானம் ரூ.26-க்கு அதிகமாகவோ அல்லது நகரத்தில் ரூ.32க்கு அதிகமாகவோ இருக்குமானால், அவர்கள் வறுமைக் கோட்டை கடந்து விட்டதாக கூறுகிறார். இது ஏற்கக் கூடியது தானா?  – கான்பூரில் மோடி

திட்டக்குழு இந்த வரையறையை ஒரு குடும்பத்துக்குச் சொல்லவில்லை. தனி மனிதருக்குச் சொல்கிறது. அத்துடன் மோடி குறிப்பிடுவதுபோல் வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படவில்லை. செலவின் அடிப்படையில் தான் திட்டக் குழு நிர்ணயித்துள்ளது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நாட்டின் வளர்ச்சி வீதம் 8.4 சதவீதமாக இருந்தது. இப்போது அய்க்கிய முன்னணி ஆட்சியில் 4.8 சதவீதம்தான்.   – மோடி

வாஜ்பாய் ஆட்சியில் முதல் 6 ஆண்டில் சராசரி வளர்ச்சி 7 சதவீதம். கடைசி 5 ஆண்டு சராசரி வளர்ச்சி 5.9 சதவீதம் என்று மறுத்துள்ளார் ப.சிதம்பரம்.

குஜராத் பெற்றுள்ள வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி.   – டெல்லி பல்கலையில் மோடி

மனித மேம்பாட்டு குறியீடுகளின்படி குஜராத் சுகாதாரத்தில் 16 ஆவது மாநிலமாகவும், கல்வி யில் 14 ஆவது மாநிலமாகவும் கட்டமைப்பு வசதிகளில் 11 ஆவது மாநிலமாகவும் இருக்கிறது.

பட்டேல் இறுதி ஊர்வலத்தில் நேரு கலந்து கொள்ளவில்லை.    – மோடி

நேரு கலந்து கொண்டார். ‘டைம்° ஆப் இந்தியா’ உள்ளிட்ட நாளேடுகள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையிலும் குறிப்பிட் டுள்ளார்.

பெரியார் முழக்கம் 07112013 இதழ்

You may also like...