Author: admin

‘ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குவதுதான் பெரியாரின் லட்சிய நோக்கமாக இருந்தது’ தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் கருத்தரங்கில் மன்னார்குடியில் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் பேச்சு

20.09.2015 அன்று திராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மற்றும் தஞ்சை பசு.கௌதமன் எழுதிய இந்து மதத்தில் அம்பேத்கரும் பெரியாரும் என்ற புத்தகத்தின் நூல் திறனாய்வு மன்னார்குடி சிட்டி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் செந்தமிழன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், முன்னாள் அமைப்பாளர் பாரி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில், இந்துத்துவ மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுதிதறிவு எழுத்தாளர்கள் நரேந்திரதபோல்கர், பேராசிரியர் கல்பர்கி ஆகியோரின் படத்தினை திறந்து வைத்து அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார், திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் உரையாற்றினர். அதனை தொடர்ந்த தஞ்சை பசுகௌதமன் எழுதிய இந்து...

பெரியார் பிறந்தநாள் விழா – மதுரை

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளன்று மாலை 3 மணி அளவில் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பப்பட்டது . மதுரை மாவட்டத் தலைவர் திலீபன் செந்தில்,மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா,மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி,மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்

கொட்டும் மழையில் ஜாதிக்கெதிரான பொதுக்கூட்டம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்” “இளையதலைமுறைக்கு வேலைவேண்டும்” என்கிற தலைப்பில் 27-09-2015,ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. தோழர் துரை.தாமோதரன் அவர்களின்”மந்திரமா-தந்திரமா”நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. தொடர்ந்து திராவிடர் கலைக்குழுவின் நாடகங்கள் அரங்கேறியது. நமது கலைக்குழுவின் பகுத்தறிவு நாடகங்கள் பகுதியில் நல்ல வரவேற்பைப்பெற்றன. கூட்டத்தற்கு நகரசெயலாளர் தோழர் வெங்கட் தலைமையேற்றார். மாவட்டத்தலைவர் சாமிநாநன்,மாவட்ட செயலாளர் சரவணன்,மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் நீண்டதொரு சிறப்புரையை நிகழ்த்தினார்கள். இறுதியாக தோழர் ப.செல்வம் நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது. கொட்டும் மழையிலும் மக்கள் இறுதிவரை கூட்டத்தை கேட்டது குறிப்பிடத்தக்கது

பெரியார் பிறந்தநாள் விழா – காஞ்சிபுரம் மாவட்டம்

தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது மாவட்ட தலைவர் செங்குட்டுவன் தலைமையில், செயலாளர் தினேஷ்குமார், அமைப்பாளர் தெள்ளமிழ்து மற்றும் திராவிட விடுதலைக் கழக தோழர்கள், தந்தை பெரியாரின் சமுதாயப் பணிகளை விளக்கி பேருந்து நிலையம், அங்காடிகளில் துண்டறிக்கை விநியோகித்தனர். பொதுமக்கள் ஆர்வமுடன் துண்டறிக்கை படித்து தோழர்களிடம் விளக்கம் கேட்டனர். பின்பு மாலை தந்தை பெரியார் பிறந்தநாள் கூட்டமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் பேரணியில் கலந்துகொண்டனர்.

ஈ வெ ரா பெரியார் – வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா

          தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு எஸ். இராமகிருஷ்ணனின் ஈவெரா பெரியார் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா பாரதி புத்தக அரங்கில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் முதல் படியை பெற்று கொண்டார்

பெரியார் விழா : காஞ்சி மாநகர் குலுங்கியது

செப்.17 அன்று காஞ்சியில் பெரியார் பிறந்த நாள் ஒருங்கிணைப்புக் குழு, பெரியார் பிறந்த நாள் விழா பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் எழுச்சியுடன் நடத்தியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். காஞ்சி மாநகரையே கலக்கிய பேரணி-பொதுக் கூட்டக் காட்சிகள்.

பெரியார் பிறந்தநாள் விழா கோபி

கோபிசெட்டிபாளையம் தந்தை பெரியார் பிறந்தநாள்விழா…. தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணி………. கோபிசெட்டிபாளையம் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்ட ஊர்வலம் தந்தை பெரியாரின் பிறந்தநாளையெட்டி நடைபெற்றது… ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம், தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக தமிழர் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடிவருகின்றனர். இந்தாண்டு தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழாவை திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மதிமுக, வி.சி.க, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணியாக வந்து பெரியார்திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது. பேரணி ல.கள்ளிப்பட்டியில் தொடங்கி கச்சேரிமேடு, எம்.ஜி.ஆர்.சிலை, தினசரி மார்க்கெட் வீதி, கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலை வந்ததடைந்தது. பேரணியின் போது பெரியாரின் கொள்கைகள் அடங்கிய...

தர்மபுரி மாவட்ட பெரியார் பிறந்தநாள் விழா

  தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் விழா 17.09.2015 தர்மபுரி மாவட்டத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் வேணுகோபால், செயலாளர் பரமசிவம், அமைப்பாளர் சந்தோஷ்குமார் மற்றும் நகர தலைவர் நாகராசன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து எழுச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார்கள்

கடலூரில் சுயமரியாதைக் கூட்டம்

கடலூரில் சுயமரியாதைக் கூட்டம்

தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!! சுயமரியாதை இயக்கம் என்பதைப் பற்றி பேசவேண்டுமென்பதாக நண்பர் பெருமாள் அவர்களால் இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. நாங்கள் திரு.பெருமாளின் குமாரத்தியின் திருமணத்திற்கு என்று அழைக்கப்பட்டு இங்கு வந்தோம். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த ஊரில் ஒரு பொது கூட்டத்தில் பேசவேண்டுமென்றஆசை அநேக நண்பர்களுக்கு இருந்ததால் நானும் இந்த சந்தர்ப்பத்தை வீணாக்காமல் சிறிது பேசலா மென்றே கருதுகின்றேன். சுயமரியாதை இயக்கத்தின் தீவிரமான கொள்கைகளை யெல்லாம் இப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது சற்று கஷ்டமானதா யிருக்குமென்றே கருதுகின்றேன். ஏனென்றால் இதற்குமுன் இங்கு இந்தப் பிரசாரம் நடத்தப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதன் தீவிரக் கொள்கைகளை நீங்கள் முதல் முதலாக கேட்கும்போது அது உங்களைத் திடுக்கிடச் செய்யும். அவற்றின் உண்மையை அறிவது என்பது இன்றே சுலபத்தில் புலப்படக்கூடியதாகாது. ஆதலால் உங்களுக்கு சிறிது நிதானமான முறையில் தான் பேச வேண்டிய வனாயிருக்கிறேன். அதாவது இந்த நான்கு, ஐந்து வருஷங்களுக்கு முன் கிராம ஜனங்களின் முன் நான் எந்த...

கரூரில் சுயமரியாதைப் பிரசாரம்

கரூரில் சுயமரியாதைப் பிரசாரம்

  கரூர் முனிசிபல் சேர்மென் அவர்களே! வைஸ் சேர்மென் அவர்களே! முனிசிபல் கவுன்சிலர் அவர்களே!! கரூர் நகர மகாஜனங்களே!!! இன்று நீங்கள் இவ்வளவு ஆடம்பரத்துடன் வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரிகைக்கும் மற்றும் நீங்கள் ஏற்பாடு செய்திருக்கிற வரவேற்புக் கொண்டாட்டத்திற்கும் நான் சிறிதும் தகுதியுடையேன் அல்ல என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும், நீங்கள் உங்களுடைய அபிமானத்தையும், ஆமோதிப்பையும் கொண்ட ஒரு தொண்டனுக்கு நீங்கள் காட்ட வேண்டிய ஒரு அதிகமான அன்பையும் மரியாதையுமே பொருத்தமற்ற என் விஷயத் தில் காட்டியிருக்கின்றீர்கள் என்றே நான் கருதுகிறேன். ஆக இந்த அன் பையும் மரியாதையும் எனக்கு என்றோ அல்லது எனது தொண்டுக்கென்றோ கருதாமல் எனது கொள்கைக்கென்றே கருதுகிறேன். இதற்கு உதாரணம் என்ன வெனில் உங்கள் உபசாரப் பத்திரத்தில் கண்டிருக்கும் வாக்கியங் களேயாகும். ஆகவே அதற்காக என் என்றும் மறவாத நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். கனவான்களே! இன்று இந்திய நாட்டின் பல பாகங்களிலும் தேச விடுதலையின் பேரால் ஒருவித கிளர்ச்சிகள்...

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப்போகின்றது. இதற்காக அருணாசலமென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும். அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள். இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்களை டின் டின்னாய் கல் பூரத்தைக் கலந்து நெருப்பில் கொட்டி எறிப்பார்கள். சில இடங்களில் கட்டைகளை அடுக்கி அல்லது தட்டுகளை போராகப் போட்டு நெருப்பு வைத்து சட்டிசட்டியாக வெண்ணைகளை அந்த நெருப்பில் கொட்டு வார்கள். இவைகள் தவிர வீடுகளிலும், கோவில்களிலும் 10, 50, 100, 1000, 10000, 100000 என்கின்ற கணக்கில் விளக்குகள் போட்டு நெய், தேங்காய் எண்ணை, நல்ல எண்ணை, இலுப்பை எண்ணை முதலியவைகளை ஊற்றியும், எள்ளுப் பொட்டணம், பருத்திவிதைப் பொட்டணம் ஆகியவைகளை கட்டியும், பெரும் பெரும் திரிகள்போட்டும் விளக்குகள் எரிப்பார்கள். இந்த சடங்குகள் செய்வதே மேற்படி பண்டிகையின் முக்கிய  சடங்காகும். ஆகவே இந்தச் சடங்குகளுக்கு எத்தனை லக்ஷம் ரூபாய் செலவு என்பதையும் இதற்காக...

காசில்லாமல் நடத்தலாம்                          – சித்திரபுத்திரன்

காசில்லாமல் நடத்தலாம்                         – சித்திரபுத்திரன்

  ஐயா! உங்கள் கலியாணத்திற்கு மந்திரம் வேண்டுமா? பார்ப்பான் வேண்டுமா? மந்திரம் பிரதானமானால் மந்திரத்தை ஒரு கிராமபோன் ரிகார்ட்டில் பிடித்து வைத்துக் கொண்டால் தாலி கட்டுகின்றபோது கிராம போன் வைத்து தாலிகட்டி விடலாம். பார்ப்பான் வேண்டுமானால் ஏதாவது ஒரு பார்ப்பானை பொட்டகிராப் பிடித்து அதை மணவரையில் வைத்து தாலிகட்டி விடலாம். இரண்டும் வேண்டுமானால் இரண்டையும் வைத்து தாலி கட்டி விடலாம். வாத்தியம் வேண்டுமானாலும் கிராமபோனிலேயே மதுரை பொன்னுச்சாமி வாத்தியம் வைக்கலாம். ஒன்றும்  வேண்டாம், பெண்டாட்டியும் புருஷனும் ஆனால் போதும் என்றால் விரலில் மோதி ரத்தை மாட்டி கழுத்தில் மாலை போட்டு கையைபிடித்து அழைத்துக் கொண்டு போகலாம். குடி அரசு – சிறு குறிப்பு – 20.09.1931

ஜாதி முறை

ஜாதி முறை

சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளே! முன் 16 – 10 – 30ம் தேதி குடி அரசு தலையங்கம் ஒன்றில் “ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள்” 4000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்டதென்று சொல்லப்பட்டதோடு அந்த சாதிகளே தான் எல்லாப் பஞ்சம சாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள சாதி ஆதாரங்களை எடுத்துக் காட்டினோம். அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது தங்களை வேளாளர் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் ஒரு சிலர் ³ சாதிக்கிரமத்தை அதாவது ஆதிசாதி என்பவைகளான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் சற்சூத்திரர் என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொண்டு அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்காகப்...

கர்ப்ப ஆக்ஷி முறை                                              ஓர் சந்தேகம்

கர்ப்ப ஆக்ஷி முறை                                              ஓர் சந்தேகம்

நமது நண்பர் ஒருவர் கருப்பத்தடையின் அவசியத்தைத் தான் ஒப்புக் கொண்ட போதிலும் அனுஷ்டிக்கப்படவேண்டிய முறையைப் பற்றி அடியிற்கண்டவாறு ஆnக்ஷபிக்கிறார்:- அதாவது, “கர்ப்ப உற்பத்திக்கு ஹேதுக்கள் சுக்கிலம் சுரோணிதம் என்று கூறப்படுவனவேயாகும். கலவி காலத்தில் ஆடவனிடமிருந்து சுக்கிலமும், ஸ்தீரியினிடமிருந்து சுரோணிதமும் வெளியாகிறது. கர்ப்ப உற்பத்திக்கு சுக்கில ஸ்கலிதம் தான் அவசியமானதேயொழிய சுரோணித ஸ்கலிதம் அவசியமல்ல. உதாரணமாக ஒரு ஸ்தீரி பத்துக் குழந்தைகள் பெற்றிருக் கலாம். அவளுக்கு சுரோணிதமே ஸ்கலிதமாகாமலிருக்கலாம். அதாவது புருஷ இச்சையே பூர்த்தியடையாமலிருக்கலாம். ஸ்கலிதமான சுக்கிலம், கருப்பையின் வாயிலை நோக்கி நழுவிப் போகும்போது, நிதம்பத்தின் வரைகளில் தங்கியிருக்கும் சுரோணிதக் கிருமிகள், சுக்கிலத்திலுள்ள ஆண் சினைகளிடம் ஸ்வீகரித்துக் கொண்டு கருப்பையில் பிரவேசிக்கிறது. உடனே கருப்பை வாய் மூடிக்கொள்ளுகிறது. அதிலிருந்து மாதவிடாய் நின்று கர்ப்ப உற்பத்தி உண்டாகிறது. இதுகாறும் கூறியவற்றிலிருந்து சுக்கில சுரோணித கிருமிகள் கருப்பையில் பிரவேசித் தால்தான் கர்ப்பம் ஏற்படும் என்பது புலனாகிறது. கிருமிகளை கருப்பையில் புகவிடாமல் செய்தாலும், அல்லது அவற்றை சக்தியிழந்து...

கல்வியும் கல்வி மந்திரியும் 0

கல்வியும் கல்வி மந்திரியும்

  சென்னை அரசாங்க கல்வி மந்திரி திவான்பகதூர் கனம் குமாரசாமி ரெட்டியாரவர்கள் திருநெல்வேலியில் முனிசிபாலிடியாரால் வழங்கிய ஒரு உபசாரப்பத்திரத்திற்கு பதிலளிக்கும் போது பேசியிருப்பதில் காணப் படுவதாவது: – “இன்று தேசமிருக்கும் நிலையில் நமக்கு வேண்டியது ஆரம்பக் கல்வியேயாகும். உயர்தரக் கல்வியை நிறுத்தியாவது ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டியது இன்றியமையாதது. இந்தக் கவலைமீது இதுவரை கல்வி முறையில் சரியானபடி கவனம் செலுத்தப் படவில்லை. சரியான கொள்கையும் திட்டமும் ஏற்படுத்தாததே இதற்குக் காரணம். மக்களுக்கு வரவர அறியாமை அதிகரித்துக் கொண்டு வருவது யாவரும் அறிந்ததாகும். கல்வி விஷயத்திலாகும் வீண் பணச் செலவு அதிகம். செலவுக்குத் தகுந்த பலனில்லை. என்னுடைய உத்தியோக காலத்தில் கல்வி முறையை நேர்மையான வழியில் திருப்பி ஆரம்பக் கல்வியை நாட்டில் எல்லாப் பக்கமும் புகுத்தி எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் இந்த நாட்டில் இல்லையென்று ஏற்பட்டால் அதுதான் கல்வி விஷயத்தில் நான் செய்த நல்ல காரியமாகும்” என்று பேசியிருக்கிறார். இதை நாம் மிகுதியும்...

“தேசீயக் கிளர்ச்சி”யும்  “சீர்திருத்த” முயற்சியும் 0

“தேசீயக் கிளர்ச்சி”யும்  “சீர்திருத்த” முயற்சியும்

  இன்று இந்திய மக்களில் பெரும்பான்மையோருடைய உணர்ச்சி களை காங்கிரஸ் ‘தேசீயக் கிளர்ச்சி’யும் வட்ட மேஜை மகாநாட்டு “சீர்திருத்த” முயற்சியுமே கவர்ந்து கொண்டிருக்கிறது. கிளர்ச்சியில் சிறை சென்றும் அடிபட்டும் செல்வமிழந்தும் கஷ்டப்படும் மக்கள் பலர் இருக்கிறார்கள் என்பதில் ஆnக்ஷபணையில்லை. சீர்திருத்தம் அளிக்கும் முயற்சியில் சர்க்கார் பெரும் துகைகளைச் செலவு செய்து பெரும் எதிர்ப்பு களைச் சமாளித்து கமிட்டி விசாரணைகள் நடத்துவதும், வ. மே. மகா நாடுகள் கூட்டி யோசிப்பதுமான காரியங்கள் நடைபெற்று வருவதும் யாவ ரும் அறிந்ததாகும். என்றாலும் இவ்விரண்டினுடைய முடிவு என்ன என்ப தும் அதனால் நாட்டுக்கு நன்மை என்ன என்பதும் அநேகமாக ஏற்கனவே நம்மால் முடிவு செய்யப்பட்டு விட்ட விஷயங்கள் தானே யொழிய வேறில்லை. அதாவது கிளர்ச்சியினால் அநேகர்கள் தேச பக்தர்களாகவும், தியாகி களாகவும் ஆகலாம். முயற்சியினால் பலருக்கு பெரிய பெரிய பட்டமும், பதவியும், உத்தியோகங்களும் கிடைக்கலாம். இதைத் தவிர நாம் எதிர் பார்க்கும் காரியம் கிடைக்குமென்று நம்புவதற்கில்லை....

விபசாரமே ஜாதிக்குக் காரணம் 0

விபசாரமே ஜாதிக்குக் காரணம்

  அடுத்து வருகிற சென்ஸஸ் கணக்கில் (ஜனக் கணிதத்தில்) இந்துக்கள் என்பவர்கள் ஜாதிப் பெயரைக் கொடுக்கக் கூடாதென்பதாக லாகூர் ஜட்பட் டோரக் மண்டலத்தாரும் மேலும் அநேகர்களும் தீவிர முயற்சியெடுத்து வருகிறார்களென்பது யாவர்க்குந் தெரியும். மற்றும் இந்தியாவிலுள்ள சீர்திருத்தவாதிகளென்பவர்களிலும் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் முதல் தாழ்ந்த ஜாதியார் என்று பிற மக்களால் சொல்லப்படும் ஆதிதிராவிடர்கள் என்கின்றவர்கள் முதலிய எல்லாராலும் அநேகமாக மேடைகளில் பத்திரிகைகளில் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. இதைப் பற்றி நமது “குடிஅரசி”லும் அநேக அறிஞர்களால் கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதோடு சுயமரியாதை மகாநாடு, பார்ப்பன ரல்லாதார் மகாநாடு, சீர்திருத்த மகாநாடு முதலிய மகாநாடுகளில் இதைப் பற்றி பல தீர்மானங்கள் செய்யப்பட்டு அதையநுசரித்தே அநேக கனவான் கள் ஜாதிக் குறிப்பைக்காட்டும் பட்டம் முதலியவைகளையும் விட்டிருப்பது யாவருக்கும் தெரியும். ஆகவே ஜாதிப் பிரிவும் வித்தியாசங்களும் இருக்கக் கூடாதென்பது இந்தியாவின் ஒரு முகப்பட்ட அபிப்பிராயமென்பதும், கோரிக்கையென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். பொதுவாகப் பார்க்கும் போது...

சித்திரபுத்திரன் 0

சித்திரபுத்திரன்

  கடவுள் கருணை இந்த இரண்டு நூற்றாண்டுகளில் பூகம்பத்தால் கடவுள் தன்னடி சோதிக்குச் சேர்த்துக் கொண்ட மக்கள் கணக்கு. பெக்கிங் (சீனா) 100000 கெய்ரோ       40000 காஷான்       40000 லிஸ்பன்       50000 மொராக்கோ    12000 தென் அமெரிக்கா       50000 அலப்போ       20000 தென் இத்தாலி 14000 மென்சோடா    12000 பெரு எக்வாடா         25000 கராகாடோ     37000 ஜப்பான்        30000 இந்தியா        20000 பிரான்சிஸ்கோ, சிசிலி  77000 மத்திய இத்தாலி        30000 கான்சு சினா    300000 ஜப்பான்        220000 சில்லரையாக பல இடங்களில்  100000 ஆக மொத்தம் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட ஜனங்களாகும். இது தவிர இடியாலும், மின்னலாலும், எரிமலை நெருப்பாலும், வெள்ளத்தாலும், புயல் காற்றாலும் தன்னடி சேர்த்துக் கொண்ட மக்களின் அளவு இதைப்போல் பல மடங்குகள் இருக்கும். இவ்வளவு ஜீவகாருண்யமுள்ள கடவுளின் கருணையை எப்படி புகழ்வது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆதலால்...

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

  அரசியல்   அரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்பு.   ஈ. வெ. ரா.   அரசியல் சீர்திருத்தம் என்பது அயோக்கியர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. ஈ. வெ. ரா. கடவுள் அவசியம் அறிவும், ஆராய்ச்சியும், மன உறுதியும் அற்றவர்க்கே கடவுள் உணர்ச்சி அவசியமாகும். வேஷக்காரர்களுக்கும் வஞ்சகர்களுக்கும் கடவுள் மிக அவசியமாகும். சோம்பேறிகளுக்கும், ஊரார் பிழைப் பில் உண்டு களித்திருப்பவர்களுக்கும் கடவுள் மிக மிக அவசிய மாகும். ஈ. வெ. ரா. குடி அரசு – துணுக்குகள் – 09.11.1930

கிருஷ்ணன் அர்ஜுனன் சம்வாதம்    0

கிருஷ்ணன் அர்ஜுனன் சம்வாதம்   

  – சித்திரபுத்திரன்   அர்ஜுனன்: – சகே சீனாம் நிகே சீனாம் காகதி புருஷோத்தமா?   கிருஷ்ணன்:- அஹம் சந்யாசி ரூபேணாம் புரோஷ்டிதாம் தனஞ் சயா! இதன் பொருள். அர்ஜுனன்: – ஹே புருஷோத்மா! தலையில் மயிருடனும், மயிரில்லாமல் மொட்டத் தலையுடனும் இருக்கும் (படியாய் நீ செய்திருக் கின்ற) விதவைகளுக்கு என்ன கதி? கிருஷ்ணன் :- ஹே அர்ஜுனா! நானே சந்நியாசியாக பூமியில் அவதரித்து அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வேன். அர்ஜுனன்: –  ஹே கிருஷ்ணா! உன்னை ஒரு பெரிய கடவு ளென்று சொல்லிவிட்டு பிறகு நீ இப்படிச் செய்தாய், அப்படிச் செய்தாய், கண்ட ஸ்திரீகளுடன் கலந்தாய், உதைபட்டாய், அடிபட்டாய், அழுவாரற்ற பிணமாய் செத்தாய் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்களே இதைப் பற்றி உனக்கு சிறிதும் அவமானமில்லையா? கிருஷ்ணன்:- ஹே அர்ஜுனா! அதைப் பற்றி நீ சிறிதும் கவலைப் படவேண்டாம். இதெல்லாம் எனது திருவிளையாடலென்றும் இவற்றைப் படித்த கேட்ட ஒவ்வொருவரும் இதனைக்...

திரு. பன்னீர்செல்வம் 0

திரு. பன்னீர்செல்வம்

  உயர்திரு ராவ் பகதூர் பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் ஸ்தல ஸ்தாப னங்களில் இருக்கும் வெகு சில கண்ணியமான தலைவர்களில் முக்கியமான வர்களுக்குள் ஒருவராவர். அவர் மீது நாணையத் தவறுதலான வார்த்தைகள் இதுவரையிலும் யாருமே பிரஸ்தாபித்தது கிடையாது. அவரைப்போல் பார்ப்பனரல்லாத மக்கள் விஷயத்தில் தனது ஆதிக்கத்தில் உள்ள எல்லா இலாக்காக்களிலும் விகிதாச்சார உரிமை கொடுத்தவர்கள் மிக மிக அருமையாகும். அப்படிப்பட்டவரை சென்னை ஐகோர்ட்டார் ஏதோ ஒரு விண்ணப்பம் போட்டதின் காரணமாய் நாணையமற்றவர் என்றும், யோக் கியர் அல்லாதவர் என்றும் ஐக்கோர்டு ஜட்ஜ்ஜிகள் பேசியதாக பத்திரிகை களில் காணப்படுகின்றன. கோர்ட் விவகாரங்களில் விண்ணப்பம் போடும் விஷயங்களைக் கொண்டு ஒருவனை யோக்கியன், அயோக்கியன் என்று தீர்மானிப்பதாயிருந்தால் இந்த இந்தியாவில் கோர்ட்டு சம்மந்தமுள்ள மக்களில் 100க்கு வீசம் பேர் கூட இருக்கமாட்டார்கள் என்று நாம் உறுதி யாய்ச் சொல்லுவோம். கோர்ட்டு சட்டங்களே உண்மைக்கு நியாயமளிக்க முடியாதபடி தான் இருக்கின்றன. அவைகளைக் கையாளும் வக்கீல்கள் அவ்விண்ணப்பம் போடும் விஷயத்தில்...

ஜாதி மதப் பெயர் கொடுக்காதீர்கள் 0

ஜாதி மதப் பெயர் கொடுக்காதீர்கள்

  முக்கியமான வேண்டுகோள் இவ்வருஷக் கோடியில் சர்க்காரால் ஜனங்களுடைய எண்ணிக்கை யை எடுக்கும் சென்சஸ் வேலை நடைபெறும். அதில் கணக்கெடுப்பவர்கள் உங்களிடம் வந்து விசாரிக்கையில் நீங்கள் ஜாதி மதத்தைப் பற்றி கேட்கப் படுவீர்கள். அப்போது முறையே இந்தியன் என்றும் பகுத்தறிவுக்காரன் என்றும் மாத்திரம் தான் சொல்ல வேண்டுமே ஒழிய எவ்வித மதத்தின் பேரா வது ஜாதியின் பேராவது சொல்லக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளு கிறேன். ஏனெனில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க இந்தியாவில் எல்லாப் பிரமுகர்களும் ஒரே முகமாய் நின்று மும்முரமாய் வேலை செய்யும் போது நாம் மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பது மூடத்தனமும் கவலை யும் சுயமரியாதையும் அற்ற தன்மையுமாகும். அதுபோலவே இந்தியர்களில் யாராவது தன்னை இந்து என்று மதத்தின் பெயரைச் சொல்லுவதும் சுத்த முட்டாள் தனமாகும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லையென்றும் அப்படியிருப்பதாகச் சொல்லும் மதத்தின் தத்துவமும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் 20...

அரசியல் வியாபாரம் 0

அரசியல் வியாபாரம்

  டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திற்கு மூன்று தீர்மானங்கள் அனுப்பப்போவதாகத் தெரிகின்றது. அதாவது, சில பாதுகாப்புகளுடன் குடியேற்ற நாட்டந்தஸ்துக்கு குறைந்த எந்தத் திட்டமும் திருப்தியளிக்காது என்று இச்சபை அபிப்பிராயப் படுவ தாக இந்த கவர்ன்மெண்ட் பிரிட்டிஷ் கவர்மெண்டாருக்குத் தெரிவிக்க வேண்டுமென இச்சபை சிபார்சு செய்கிறது. பலாத்காரமற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட அரசியல் குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்யவேண்டுமென்று சம்மந்தப் பட்ட அதிகாரிகளுக்கு சிபார்சு செய்யும்படி இச்சபை சிபார்சு செய்கிறது. அரசியல் கைதிகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி விசாரணை செய்ய ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று இச்சபை கேட்டுக் கொள்ளுகிறது. என்பவையாகும். ஆகவே, இம்மூன்று தீர்மானங்களையும் நம்மைப் பொறுத்தவரை நாம் இவைகளை அரசியல் வியாபாரத் தீர்மானங்களென்றே சொல்லுவோம். இதற்காக  ஜஸ்டிஸ் கட்சியார்கள் பயந்து கொள்ளவோ திக்கு முக் கலாடவோ தேவையில்லையென்றும் சொல்லுவோம். ஏனெனில் இந்த மாதிரி காரியங்களின் நடவடிக்கைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூப்பாடு போடும் “தேசியப் பத்திரிகைகள்” என்பவைகள்...

இரண்டு கேஸ் விடுதலை 0

இரண்டு கேஸ் விடுதலை

  ஈரோடு ஆலயப் பிரவேச வழக்கில் 3 பேர் தண்டனை அடைந்து அவ் வழக்குகள் ஹைக்கோர்ட்டு அப்பீலில் இருந்தது நேயர்களுக்கு ஞாபக மிருக்கும். அதுபோலவே சுசீந்திரம் தெருப் பிரவேச வழக்கிலும் 12 பேர்கள் தண்டனை அடைந்து அவ்வழக்கும் திருவாங்கூர் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டிருந்ததும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கும். இவ்வாரம் மேற்படி இரண்டு வழக்குகளும் அப்பீலில் விசாரிக்கப் பட்டு தண்டனைகள் முழுவதும் தள்ளப்பட்டு கேஸ்கள் விடுதலையாகி விட்டன. முதல் கேசு. அதாவது ஈரோடு கோவில் பிரவேச வழக்கு போலீசாரு டைய அக்கிரமத்தினாலேயே கொண்டு வரப்பட்டதாகும். அவர்களுக்குச் சலுகை காட்டினது ஜில்லா பெரிய அதிகாரியாகும். இவ்வழக்கை அதிகாரி கள் நியாயம் தெரியாமலோ, சட்டம் தெரியாமலோ நடத்தினார்கள் என்ப தாக யாரும் சொல்ல முடியாது. அவர்கள் வேண்டுமென்றே சிலரைத் திருப்தி செய்யத்தான் இப்படிச் செய்தார்கள் என்றே நாம் சொல்லவேண்டி யிருக்கிறது. இரண்டாவது கேசாகிய சுசீந்திரம் வழக்கும் அக்கிரமாகவே நடத்தப் பட்டது என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. அதன் ஜட்ஜுமெண்ட்...

பொது உடைகள்-I 0

பொது உடைகள்-I

  இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந் திரமோ பெருவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளு வதற்கு முன்பாக இந்தியர்கள் ஒரே சமூகத்தார் ஒரே லக்ஷியமுடையவர் என்கின்ற நிலையை அடைய வேண்டியது மிகவும் முக்கியமானது என்ப தைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம். இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தாரென்றும், ஒரே லக்ஷியமுடையவர்கள் என்றுமான பிறகுதான் அவர்கள் முன்னேறவும் விடுதலைப் பெற்று சுதந்திரமடையவும் முடிந்தது என்பதை யறியலாம். ஆனால் நமது இந்தியாவைப் பற்றி பேசப் புறப்படுவோமேயானால் இது ஒரே சமூக மக்கள் கொண்ட நாடு என்றோ, ஒரே லக்ஷியமுள்ள மக்களைக் கொண்ட நாடு என்றோ யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் இந்தியாவானது பல மதங்களாய் பல ஜாதிகளாய் பிரிந்திருப்பதோடு பல உள்வகுப்புகளாகவும் பிரிந்திருப்பதல்லாமல் பாஷைகளிலும், உடை களிலும், நடை பாவனைகளிலும் பல...

மந்திரி மார்கள் 0

மந்திரி மார்கள்

  சென்னை மாகாணப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டபின் அமைக்கப் படவேண்டிய மந்திரிசபை அமைக்கப்பட்டாய் விட்டது. அதாவது திவான் பகதூர் க்ஷ. முனுசாமி நாயுடு அவர்கள் முதல் மந்திரியாகவும், திரு. ஞ. கூ. இராஜன் பாரிஸ்டர் அவர்கள் இரண்டாவது மந்திரி யாகவும், திவான் பகதூர் ளு. குமாரசாமி ரெட்டியார் அவர்கள் மூன்றாவது மந்திரியாகவும் நியமனம் பெற்றிருக்கின்றார்கள். இவர்களைப் பாராட்டி வரவேற்கு முன்பாக பழைய மந்திரிகளை அவர்களது அருமையான தொண்டுக்காகப் பாராட்டி வழியனுப்ப வேண்டி யது அறிவும் நடுநிலைமையுமுள்ளோர் முறையாகும். அந்தப்படி பாராட்டி வழியனுப்புவதில் சிறிது கூட மிகைப்படுத்தாமல் உண்மையை உள்ளபடி சொல்லுவதானாலும் இதில் போதிய இடம் கிடைக்க மாட்டாது என்றே கருதுகின்றோம். முதலாவதாக, அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அதாவது இராஜிநாமா கொடுத்த மூன்று மந்திரிகளின் நாணய விஷயம் மிக பரிசுத்தமானது என்பது அவர்களுடைய எதிரிகள் கூட இதுவரை அதைப்பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ளாததாலேயே நன்றாய் விளங்கும். இரண்டாவது, பார்ப்பனரல்லாதார் நன்மையின் பொருட்டு...

சம்பளக் கொள்ளை  திரு. சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் 0

சம்பளக் கொள்ளை  திரு. சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார்

    கோவையில் கூடிய நடு வகுப்பு உத்தியோகஸ்தர்கள் மகாநாட்டில் தலைமை வகித்த திரு. சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் எம்.எல். சி. அவர்கள் செய்த தலைமை உபன்யாசத்தில் கண்ட ஒரு விஷயத்தை நாம் பாராட்டுகின்றோம். அதாவது “உயர்ந்த சம்பளம் வாங்குபவர்கள் சம்பளத் தைக் குறைத்து குறைந்த சம்பளம் வாங்குபவர்களின் சம்பளத்தை உயர்த்தி எல்லோருடைய சம்பளத்தையும் ஒருவிதமாய் நிர்ணயிக்கவேண்டும்” என்று பேசி இருக்கின்றதானது மிகுதியும் போற்றத்தக்கதாகும். குடிகளுக்கு வரிப்பளுவு அதிகமாயிருப்பதும் சர்க்கார் வேலையில் இருப்பவர்களில் அநேகருக்குச் சரியான ஜீவனத்திற்குப் போதாத சம்பளமிருப்பதற்குக் காரணம் சில உத்தியோகஸ்தர்களுக்கு ஏராளமான சம்பளங்களும் தகுதிக்கும் தேவைக்கும் அதிகமான சவுகரியங்களும் ஏற்பட்டிருப்பதே யாகும். என்றைய தினம் அரசியல் புரட்டு நமது நாட்டில் தோன்றிற்றோ அன்று முதலே பெரிய பெரிய உத்தியோகமும் அவற்றிற்குக் கொள்ளை கொள்ளை யான சம்பளமும் அதிகப் பட்டுக்கொண்டும் உயர்த்திக்கொண்டுமே வந்திருக்கின்றது. இனியும் உயருகின்றது. இவை முதலான கொடுமைகளை யெல்லாம் யோசித்தே ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் எந்த...

சட்டசபைக்குப்  பார்ப்பனர்  செல்வதின் ஆபத்து 0

சட்டசபைக்குப்  பார்ப்பனர்  செல்வதின் ஆபத்து

  திருவாளர் ராவ்பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் எம். எல். ஏ. இந்திய சட்டசபைக்கு நமது பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர். அவர் சமூக சட்டம் செய்ய சட்ட சபைக்கு அதிகாரம் இருக்க கூடாதென்றும் மத விஷயங்களில் எந்தச் சீர்திருத்தவாதியும் பிரவேசிக்கக் கூடாதென்றும் , கல்யாண வயதைப் பற்றி சாஸ்திரங்களில்  என்ன கூறியிருக்கிறதோ அதற்கு சிறிது கூட மாற்றம் செய்யச் சீர்திருத்த வாதிகளையாவது சர்க்காரையாவது சட்டசபைகளை யாவது அனுமதிக்கக் கூடாது என்றும் பேசி அதற்காக கட்டுப்பாடான பிர சாரம் செய்ய வேண்டுமென்றும் தன்னால் கூடிய வரை தான் சட்ட சபையில் பார்த்துக்கொள்வதாகவும் கூறியிருக்கின்றார். சுயராஜ்யம் கிடைத்தப் பிறகு சமூக சட்டம் செய்து கொள்ளலாம் என்று மக்களை ஏமாற்றி அரசியல் குழியில் விழுகும்படி செய்யும் பார்ப்பன தேசீயவாதிகளும்  அவர்களது பத்திரிகைகளும் இதற்கு யாதொரு பதிலும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டேயிருக்கின்றன. நாம் இந்தப் பித்தலாட்டங்களை எடுத்துக் காட்டினால் அது தேசத் துரோகம் என்பதாகவும் சுய ராஜ்யத்திற்கு முட்டுக் கட்டையாகவும்...

நாடார் முன்சீப்பு 0

நாடார் முன்சீப்பு

  சென்னையில் ஹைக்கோர்ட் வக்கீலாக இருந்த உயர்திரு. நடராஜ நாடார் பி.ஏ.பி.எல் அவர்கள் ஹைகோர்ட் ஜட்ஜுகளின் தயவினால் விருத் தாசலம் (தென்னாற்காடு ஜில்லா) முன்சீப்பாய் இம்மாதம் நியமனம் பெற்று உத்தியோகம் ஒப்புக் கொண்டார். இந்த கனவான் சுமார் ஒன்றரை வருஷத் திற்கு முன்பாகவே முன்சீப் லிஸ்டில் தாக்கல் செய்யப்பட்டவர். இந் நியமனம் வகுப்புவாரி உரிமை வலியுறுத்தப்பட்டதன் மூலமே கிடைக்கப் பட்டதாகும். இல்லையானால் இதற்கும் ஒரு அய்யரோ, அய்யங்காறாகவே தான் வந்திருப்பார். இந்த உத்தியோகத்தில் இவரைச் சேர்த்து இப்போது இரண்டே நாடார்கள் நியமனம் பெற்றிருக்கிறார்கள். சப் ஜட்ஜியாகவோ, ஜில்லா ஜட்ஜி யாகவோ பிரிட்டீஸ் அரசாங்கம் ஏற்பட்டது முதல் இதுவரை யாரும் வந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். நாடார் சமூகத்திற் கென்று ஏதாவது உத்தியோகம் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அதை சில கிறிஸ்தவர்கள் வந்து தாங்களும் நாடார் என்று சொல்லி கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடுகின்றார்கள். நாடார் மக்களும் ஏமாந்து விட்டுக் கொண்டே...

குருசாமி – குஞ்சிதம் 0

குருசாமி – குஞ்சிதம்

  திருச்செல்வர்கள் எஸ். குருசாமி, எஸ். குஞ்சிதம் ஆகிய இருவர் களும் இவ்வருஷம் கடைசியாக நடந்த செப்டம்பர் மாதப் பரீட்சையில்      பி. ஏ. வகுப்பில் தேறியிருக்கிறார்கள். திருமணம் நடக்கும் போது திரு.  குரு சாமி பி. ஏ. வகுப்பில் ஒரு பாடம் மாத்திரம் தேறியிருந்தார். திரு. குஞ்சிதம் மாணவியாயிருந்தார். திருமணம் நடந்து “சதிபதி”களாக வாழ்ந்து கொண்டே இருவரும் படித்து பரீட்சையில் தேறியிருப்பதற்கு நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு அவர்களது முயற்சியைப் பாராட்டுகிறோம். குடி அரசு – பெட்டிச் செய்தி – 26.10.1930  

விபசாரம் 0

விபசாரம்

  விபசாரம் என்னும் வார்த்தையானது அநேகமாய் ஆண் பெண் சேர்க்கை சம்பந்தப்பட்டதற்கே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் முக்கியமாக அதாவது ஒரு பெண் தனக்குக் கணவன் என்றோ, தன்னை வைத்துக் கொண்டிருக்கின்றவன் என்றோ வேசித் தொழிலிலிருப் பவளானாலும் யாராவது ஒரு புருஷனிடம் தற்கால சாந்தியாய் தன்னைக் குத்தகையாய் அனுபவிப்பவன் என்றோ சொல்லப்படும் படியான அந்தக் குறிப்பிட்ட ஆண் மகனைத் தவிர மற்றொருவரிடமோ, பல பேர்களிடமோ சேர்க்கை வைத்துக் கொண்டிருப்பதற்கே, கணவனாலும் வைப்புக்கார னாலும், குத்தகைக்காரனாலும் மற்றும் பொது ஜனங்களாலும் சொல்லப் படுகின்ற, அதாவது ஒரு பெரிய குற்றம் சாட்டுவதற்கும் பழி சுமத்துவதற்கும் உபயோகிக்கும் சொல்லாகும். ஆனால், அதே பெண்ணை அந்தக் கணவனோ வைப்புக்காரனோ மற்றொருவருக்குத் தன் சம்மதத்தின் பேரில் கூட்டி விடுவானானால் அதை அவர்கள் விபசாரம் என்று சொல்லுவதில்லை. இந்த சங்கதி பொது ஜனங்களுக்குத் தெரிந்தாலும் கணவனைத்தான் அவர்களும் வசை கூறி குற்றம் சொல்லுவதே தவிர பெண்ணை விசேஷ மாக முன் சொல்லப்பட்ட...

பெண்கள் சொத்துரிமை  0

பெண்கள் சொத்துரிமை 

  இந்த வாரத்தில் பெண்கள் சொத்துரிமை விஷயமாய் ஒரு மகிழ்ச்சி அடையத்தக்க சேதி நமது தகவலுக்கு எட்டி இருக்கின்றதை மற்றொரு பக்கத்தில் காணலாம். 3, 4 வாரங்களுக்கு முன் நாம் “இனியாவது புத்திவருமா” என்னும் தலைப்பின் கீழ் பெண்கள் சொத்துரிமையைப் பற்றி எழுதியிருந்தது வாசகர் கள் கவனித்திருக்கக் கூடும். அதற்கு அனுகூலமாக இவ்வாரம் சென் னையில் ஒய். எம்.சி.எ. கட்டடத்தில் நடந்த ஒரு மீட்டிங்கின் நடவடிக்கை யானது நமக்கு சிறிது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது. அதாவது, பெண்களுக்கு ஆண்களைப் போலவே சொத்துரிமை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி இரு கனவான்கள் தங்கள் அபிப்பிராயத்தை மிக வலிமையாய் வற்புருத்திப் பேசி இருக்கின்றார்கள். அவர்கள் பேசி யிருப்பவைகளில் முக்கியமானவை எவையெனில், மனிதருக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய வித்தியாச மில்லை என்பதும், ஆண்கள் அடைய விரும்பும் சீர்திருத்தங்கள் போலவே பெண் களுக்கும் அளிக்க வேண்டும் என்பதும், ஆண்களைப் போலவே பெண் களுக்கும் சொத்துக்கள் அநுபவிப்பதென்பது சர்வ...

சிவநேயர் சிறுமை 0

சிவநேயர் சிறுமை

  நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் என்னும் நாட்டுக் கோட்டைச் செட்டி யார்மார்கள்  தென்னிந்தியாவிலுள்ள  மற்ற சமூகத்தார்களை விட செல்வ வான்களாவார்கள். எல்லோருமே வியாபார பழக்கமுள்ளவர்களாதலால் சற்று புத்திக்கூர்மையாயும்  இருக்கப்பட்டவர்களாவார்கள். அப்படிப்பட்ட சமூகத் தார் ஜாதி சமய விஷயத்தில் பிடிவாத குணமுடையவர்களாகவும், குருட்டு நம்பிக்கையும், மூடபக்தியும் உடையவர்களாகவும் இருந்து வருவ தால் அவர்களது செல்வங்கள் பெரிதும் கோடிக்கணக்காகப் பாழாக்கப் படுவது மல்லாமல் நாகரீக வளர்ச்சியில் மிகுதியும் பின்னடைந்தவர்க ளாகவே அநேகர் இருந்து வருகின்றார்கள். பல மக்களிடம் பழகும் சந்தர்ப் பங்களும், பல நாடுகள் சென்றுவரும்  சவுகரியங்களும் அவர்களுக்கு ஏராளமாயிருந்தும் மேல்கண்ட ஜாதி சமய விஷயத்தில் உள்ள பிடிவாத குணத்தால் உண்மையான நாகரீகத்தின் புறமும் செல்வத்தின் கிரமமான  செலவின் புறமும் சிறிது கூடத் திரும்பிப் பார்க்க முடியாமல் கண்ணைக் கட்டி பரந்த காட்டுக்குள் விடப்பட்ட சுயேச்சைக்காரர்கள்போல் வகை தொகை தெரியாமல் செலவு செய்து கொண்டிருக்கவேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். இந்த சமூகத்தார்களில் இப்படிப்பட்டவர்களே பெரும் பகுதியாய் இருந்து வருவதில் ...

மறுமணம் தவறல்ல 0

மறுமணம் தவறல்ல

  திருச்சியில் இம்மாதம் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த நீலாவதி-  ராமசுப்பிரமணியம் திருமணத்தின் போது ஒரு கேள்வி பிறந்தது. அதாவது “ஒரு மனைவியிருக்க மறுமணம் செய்யலாமா?” என்று கூட்டத்தில் ஒருவர் எழுந்து கேட்டார். அதற்கு அப்போதே பதில் சொல்லப்பட்டதானாலும், இந்த விஷயத்தில் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டவருக்குள்ளாகவே பலருக்கு அம்மாதிரி மறுமணம் செய்து கொள்வது  தவறு என்கிற அபிப்பிராயமும், சந்தேகமும் இருப்பதாலும் பொது ஜனங்களிலும் பலர், “மனைவியிருக்க மறுமணம் செய்துகொள்வது சீர்திருத்தக் கொள்கைக்கு விரோதம்” என்று கருதுவதாலும், இதைப் பற்றிய நமது அபிப்பிராயத்தை இவ்வாரம் தலையங்கமாக எழுதலாம் என்று கருதி தொடங்குகின்றோம். முதலாவது இந்தக் கேள்வியைப் பற்றிக் கவனிக்கும் முன்பு மணம் என்பது என்ன? என்பதை முதலில் விளக்கிக் கொள்ள வேண்டும். மணம் என்பதை நாம் மணமக்கள் சௌகரியத்திற்காக என்று செய்து கொள்ளப் படும் ஒரு ஒப்பந்த ஏற்பாடு என்றுதான் கருதுகின்றோம். அதில் இருவர் களுடைய சுயேட்சையும் சேர்ந்தோ அல்லது தனித்தனியோ கட்டுப்...

கடவுளின் நடவடிக்கை 0

கடவுளின் நடவடிக்கை

  – சித்திரபுத்திரன் உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் ஒரு சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால் தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு) கின்றது என்று சொல்லப் படுமானால் அவரை நடுநிலைமையுடையவரென்று சொல்லுவதைவிட பாரபக்ஷமுடையவரென்று சொல்வதற்கே மிக மிக இடமிருக்கின்றன. அவரை கருணையுடையவரென்று  சொல்லுவதைவிட கருணை யற்றவரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரத்தியக்ஷ உதாரணங்கள் யிருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே  தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட அவரால் அதிக தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது. அவர் அறிவாளி என்று சொல்வதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜுவு இருக்கின்றது. (அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன. அவர் ஜீவன்களுக்கு நன்மையை செய்கின்றாரென்பதை விட தீமையை செய்கின்றார் என்பதற்குப் போதிய...

திருச்சியில்  நீலாவதி – ராம சுப்ரமணியம் திருமணம் 0

திருச்சியில்  நீலாவதி – ராம சுப்ரமணியம் திருமணம்

  சகோதரிகளே! சகோதரர்களே!! இன்றைய தினம் நாம் நீலாவதி – ராமசுப்பிரமணியம் திருமணத்தை முன்னிட்டு இங்கு கூடியிருக்கிறோம். இடம் இல்லாததனால் மிக நெருக்க மாக இருக்கிறது. அநேகம் ஜனங்கள் கீழே நிற்கின்றனர். இம் மாதிரிக் கல்யா ணங்கள் நமது கொள்கைகளைப் பிரசாரம் செய்வனவாகவே  இருக்கின்றன. அறிவு கொண்டு உண்மை  நோக்கத்தோடு இவ்விருவரின் திருமணம்  நடை பெறப் போகின்றது. திருமணம்  நடந்த பிறகு நண்பர்கள் இரண்டொரு வார்த்தைகள் சொல்வார்கள். திருமணத்தை நடத்திக் கொள்ளு மாறு மண மக்களைக் கேட்டுக்கொள்ளுகின்றேன். (மணமக்கள் இருவரும் ஒருவருக் கொருவர் மாலையிட்டு மோதிரங்களை மாற்றிக் கொண்டனர்) இங்கு எல்லோரும் விஜயம் செய்து இப்பொழுது நடைபெற்ற திருமணத்திற்குச் சாட்சி அளித்தோம். அது நமது கடைமையுமாகும். இப் பொழுது நடைபெற்று வரும் மற்ற மணங்கள் எப்படி நடைபெறுகிற தென்றால், ஒரு பெண்ணையும் ஆணையும் பிடித்து இருவரின் சம்மத மில்லாமலேயே கட்டாயப்படுத்திச் செய்யப்படுகிறது. அந்தப் பெண்ணா னவள் கொஞ்சமும் சுதந்தரமற்று மாமன், மாமி,...

இனியாவது புத்தி வருமா?                    பெண்களுக்கு சொத்துரிமை 0

இனியாவது புத்தி வருமா?                    பெண்களுக்கு சொத்துரிமை

  இந்திய நாட்டில் அநேகமாய் உலகத்தில் வேறு எங்கும் இல்லாததும்  மனிதத்தன்மைக்கும் நியாயத்திற்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் அவற்றுள் அவசரமாய் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லவென்பதையும், மனிதத் தன்மையும் நாகரீகமுடையவுமான சமூகம் எனவும்  உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டுமானால் மற்றும் உலகிலுள்ள மற்ற பெரும்பான்மை யான நாட்டார்களைப் போலவே அந்நிய நாட்டினர்களின் உதவியின்றி தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், ஆக்ஷி நிர்வாகம் செய்யவும்  தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால்  முக்கியமானதாகவும் அவசரமாய் தீர்க்கப்பட வேண்டியதாகவுமிருக்கும் கொடுமைகள் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம். அவைகளில் முதலாவது எதுவென்றால்  இந்திய மக்களிலேயே பல கோடி  ஜன சங்கியையுள்ள பல சமூகங்களை பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து அவர்களை பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும் உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதாகும். இரண்டாவதானது எதுவென்றால்  பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு பிறவியில் சுதந்தரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும் ஆண்களுக்கு...

மந்திரிகள் 0

மந்திரிகள்

  அக்டோபர் மாதம் 23 தேதி வரை இப்போதைய மந்திரிகளே ஆட்சி நடத்துவார்கள். பிறகு டாக்டர் சுப்பராயன் அவர்களே மந்திரிசபை அமைத் தாலும் அமைக்கக்கூடும். அல்லது ஜஸ்டிஸ் கட்சியார் என்பவர்கள் சார்பாக என்று திரு. பி. முனுசாமி நாயுடு அவர்கள் அமைத்தாலும் அமைக்கக்கூடும். யார் யார் “தலையில் பிரம்மா நீ மந்திரியாய் இரு என்று எழுதியிருக் கிறாரோ” என்பது இப்போது தெரியவில்லை. ஆனால் நியமனம் ஆனவுடன் தெரிந்துவிடும், அதோடு நியமனமான பிறகு மத்தியில் ஒரு சமயம் அது போய் விடுவதாயிருந்தாலும் அதுவும் “பிரம்மா எழுதின சங்கதி” உத்தியோகம் போன பிறகுதான் தெரியும். எனவே பிரம்மா இந்த விஷயங்களை இவ்வளவு இரகசியமாய் யாரும் அறிய முடியாமல் எழுதி வைத்திருப்பதிலிருந்து, இரகசியத்தைக் காப்பாற்றுவதில் பிரம்மாவானவர் நமது கவர்னர் பிரபுவை விட கெட்டிக் காரர் என்று தான் சொல்ல வேண்டும். இது ஒரு புறமிருக்க, நியமனமாகும் மந்திரிகளும் எதிர்பார்க்கும் நபர்களும் கூட தாங்கள் நியமனம் ஆன...

நீலாவதிக்கும் 0

நீலாவதிக்கும்

நீலாவதி – ராம சுப்ரமணியம்                      திருமண அழைப்பு ஐயா:-  “குடி அரசு”, “திராவிடன்”, “குமரன்” பத்திரிகைகளுக்கு வியாசம் எழுதிவரும் மதிநிறைச் செல்வி திருச்சி   மதிநிறைச் செல்வன் கொத்தமங்கலம் ராம சுப்ரமணியத்திற்கும் பிரமோதூத ´ ம் புரட்டாசி µ 19-ம் (5-10-30) தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு திருச்சியில், தென்னூர் ரோட் 4 நெம்பர் இல்லத் தில் திருமணம் நடத்த ஏற்பாடாகி இருக்கிறபடியால், அதுபோது தாங்கள் தயவுசெய்து தங்கள் வாழ்க்கைத் துணையுடன் எழுந்தருளி சாக்ஷியளிக்க விழைகின்றோம். ஈரோடு                 ஈ. வெ. ராமசாமி 1-10-30                                                      ஈ. வெ. ரா. நாகம்மாள் குடி அரசு – அழைப்பு – 05.10.1930  

வைசிறாய் பிரபுக்கு வேண்டுகோள் 0

வைசிறாய் பிரபுக்கு வேண்டுகோள்

  லாகூரிலுள்ள ஜட்பட் ரோரக் மண்டலமென்னும் சங்கமானது ஹிந்து சமூகத்தில் காணப்படும் ஜாதி வித்தியாச மென்னும் உயர்வு, தாழ்வை ஒழிக்க மிகவும் பாடுபட்டு வருகின்றது. அடுத்த சென்சஸின் போது (ஜனத்தொகைக் கணக்கு கொடுக்கும் போது) ஹிந்துக்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிடலாகா தென்பது அதன் கொள்கை. ஆகவே அச்சங்க நிர்வாகிகள், இந்திய சென்சஸ்  கமிஷனரைக்  கண்டு தங்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிட விரும் பாதவர்களை கூறும்படி வற்புறுத்தலாகாதெனக் கேட்டுக் கொண்ட தற்கு அவர் வைசிராயிடம் அறிவித்துக்கொள்ளும்படி சொன்னதால் மேற்படி சங் கத்தார் வைசிறாய்க்குச் செய்து கொண்ட விண்ணப்பத்தின் சாராம்சமாவது:- பற்பல மாகாணங்களிலுமுள்ள  ஹிந்து சமூகத்தினரில்  பலர் ஹிந்து மதத்துக்கு  ஜாதி வித்தியாசம்  அவசியமில்லை யென்றும் அத்தகைய வித்தியாசத்தால் தான் உயர்வு தாழ்வு ஏற்பட்டு  இந்து சமயத்தினர் முன்னேற் றமடைய முடியாமல் போய்விட்டதென்றும் உணர்ந்திருக்கின்றனர். இத்த கைய ஜாதி வித்தியாசம் பண்டைக் காலத்தில் அவசியமாயிருந்த போதிலும் இன்றுள்ள நிலைமையில் அம்முறை தீமையே தரத்தக்கதாக இருக்கின்றது....

கலெக்டர் கவனிப்பாரா? 0

கலெக்டர் கவனிப்பாரா?

  கோபிசெட்டிபாளையம் டிப்டி கலெக்டரவர்கள் தேவஸ்தான மரங் களை கள்ளுக்கு விடும்படி தர்மகர்த்தாக்களை நிர்பந்திக்கிறாரென்றும், கள்ளுக்கடைக்காரர்களுக்கு மரம் கிடைக்காவிட்டால் மணியக்காரர்கள் மீது நடவடிக்கை  எடுத்துக் கொள்ளுவதாகச் சொன்னதாகவும் நம்பத்தகுந்த இடங்களிலிருந்து செய்தி கிடைத்திருக்கிறது. இது உண்மையானால் சர்க்காரிடத்தில்  பொது ஜனங்களுக்கு துவேஷமும், பொது ஜனங்களு டைய வரிப்பணத்திலிருந்து வருடம் 4 லட்ச ரூபாய் செலவு செய்து சர்க்கா ரால் செய்யப்படும் மதுவிலக்கு பிரசாரத்தினிடத்தில் சந்தேகமும், கெட்ட எண்ணமும் ஏற்பட இடமுண்டாவதோடு சர்க்காருக்கு நல்ல பேர் கிடைக் கும் படியாகச் செய்யப்பட்டு வரும் பிரசார முதலியவைகளுக்கு இடஞ்சலும் ஏற்படுமாகையால் நமது ஜில்லா கலெக்டர் அவர்கள் தயவு செய்து இந்த விஷயத்தைக் கவனித்து இந்தப்படி நடப்பதை நிறுத்தவும். இந்தப்படிக் கில்லையானால் ஒரு அறிக்கை வெளியிடவும் முயற்சி செய்வாரென்று நம்புகிறோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 28.09.1930

நாஸ்திகம் 0

நாஸ்திகம்

  உலகத்திலேயே நாஸ்திகம் என்று சொல்லப்படும் வார்த்தையானது அநேகமாய் பெரும்பான்மையான மக்களால் வெறுக்கப்படக் கூடியதாக இருந்து வருகின்றது. காரணம் என்னவென்று பார்ப்போமானால் அவ்வார்த் தையில் கடவுள் என்பது இல்லை என்கின்ற பொருள் அடங்கியிருப்பதாகக் கொள்வதேயாகும். மக்கள் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதைப் பற்றி மாத்திரமே ஆத்திரப்படவும் வெறுப்புக் கொள்ளவும் புரோகிதர்கள், பாதிரிகள், மௌல்விகள், பண்டிதர்கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டு விட்டார்களே தவிர கடவுள் என்பதைப் பற்றிய விளக்கம் யாவருக்கும் தெளிவாக்கப் படாமல் இருப்பதோடு அது (கடவுள் என்பது) மனதிற்கும் புத்திக்கும் எட்டாதது என்பதாகவும் அப்படிப்பட்ட ஒன்றை நம்பித்தானாக வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தப் பட்டுவிட்டது. இப்படியிருந்த போதிலும் என்றையதினம் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து உண்டு என்று கற்பிக்கப் பட்டதோ அன்று முதலே கடவுள் இல்லை என்கின்ற வாதம் ஏற்பட்டு வெகு காலமாகவே இவ்வாதப் பிரதிவாதம் நடந்து வருவதோடு நாளது வரை முடிவுபெற முடியாமலே இருந்து வருகின்றது. உதாரணமாக, கடவுள் இல்லை என்று சொல்லும்படியான...