கடவுள் ?
என்ன சமாதானம்? கடவுள் என்ற வார்த்தை ஒரு குறிப்பற்றதாய் இருந்து வருகிறது. கடவுள் என்ற வார்த்தை தோன்றி எவ்வளவு காலம் இருக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. அப்படியிருந்தும் கடவுள் என்றால் என்ன? என்று இன்று எப்படிப்பட்ட ஆஸ்திகராலும் சொல்லமுடிவதில்லை. ஆகவே ஒவ்வொரு ஆஸ்திகனும், தனக்குப் புரியாத ஒன்றையே தன்னால் தெரிந்துகொள்ள முடியாததும், பிறருக்கு விளக்க முடியாததுமான ஒன்றையே, குரங்குப் பிடியாய்ப் பிடித்துக்கொண்டு கடவுள் கடவுள் என்று கட்டி அழுகிறான். கடவுளுக்கு லக்ஷணமோ, இலக்கியமோ, குறிப்போ ஏதாவதொன்று விளக்கமாய்ச் சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டிருந்தால், இவ்வளவு காலத்துக்குள்ளாக கடவுள் சங்கதியில் இரண்டிலொன்று, அதாவது உண்டு, இல்லை என்கின்ற ஏதாவது ஒரு முடிவுக்கு உலக மக்கள் வந்திருப்பார்கள். கம்பர்கூட சீதையின் இடையை வர்ணிக்கும்போது, “”சீதையின் இடையானது கடவுள்போல் இருந்தது” என்று வர்ணிக்கிறார். அதாவது கடவுள் எப்படி “”உண்டோ, இல்லையோ” என்பதாகச் சந்தேகப்படக் கூடியதாய் இருக்கின்றதோ, அதுபோல் சீதையின் இடையானது கண்டு பிடிக்க முடியாத அவ்வளவு...