காவிமயத்தில் கரையும் கல்வித்துறை! – ர.பிரகாசு
ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் கட்டாயக் கல்வி (சர்வ சிக்சா அபியான்) சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இத்திட்டத்திற்கான நிதியில் 60 விழுக்காடு ஒன்றிய அரசும், 40 விழுக்காடு மாநில அரசும் பங்களிப்புச் செய்கின்றன. அதன்படி பார்த்தால் 2024-25 கல்வி ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு 4 தவணைகளில் ரூ.2,152 கோடி வழங்க வேண்டும். கடந்த ஜூன் மாதமே ஒன்றிய அரசு முதல் தவணையாக ரூ.573 கோடியை வழங்கியிருக்க வேண்டும். இதை வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு பல முறை கடிதம் எழுதியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை, என்றும் கடந்த சில மாதங்களாக மாநில அரசின் முழுமையான நிதியில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டை வைத்துள்ளார். கைவிரிக்கும் பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி...