Category: பெரியார் முழக்கம் 2016

மனிதர்களை சாக்கடைக்குள் இறக்கும் அவலத்தை தடுத்து நிறுத்திய கழகத் தோழர்கள்

மனிதர்களை சாக்கடைக்குள் இறக்கும் அவலத்தை தடுத்து நிறுத்திய கழகத் தோழர்கள்

சாக்கடைக் குழிக்குள் மனிதர்களை இறக்குவதை சட்டம் தடை செய்தாலும் நடைமுறையில் அரசு நிறுவனங்களே மீறிக் கொண்டிருக்கின்றன. சென்னை மாநகராட்சி, சாக்கடையில் மனிதர்கள் இறங்குவதைக் கண்டு கொள்வதே இல்லை. ஒப்பந்தக்காரர்களிடம் இந்தப் பணியை ஒப்படைத்து விட்டதாகக் கூறி தப்பி விடுகிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி சாக்கடைக் குழியில் தொழிலாளர்கள் இறங்கியதை கழகத் தோழர்கள் தடுத்து நிறுத்தி ஒப்பந்தக்காரர் மீது காவல் துறையிலும் புகார் கொடுத்து வழக்கு பதிய செய்துள்ளனர். இது குறித்த செய்தி: சென்னை மாவட்டம் 123 ஆவது வட்டத்தில் சில துப்புரவு தொழிலாளர்கள் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்து  கொண்டிருந்தனர். அந்த பக்கமாக சென்ற திராவிடர் விடுதலைக் கழகம் மயிலை பகுதி தோழர்கள் அதை கண்டவுடன் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை வேலை வாங்கிய ஒப்பந்தக்காரர் பிரகாசு மற்றும் மாநகராட்சி அதிகாரி சுந்தர்ராஜன் இருவரிடமும் தோழர்கள் கேள்விகளை முன் வைத்து வாதத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கழிவுகளை...

மக்களுக்காக உண்டியலை திறந்து விட்ட பாதிரியார்!

மக்களுக்காக உண்டியலை திறந்து விட்ட பாதிரியார்!

நாடு இப்போது இருக்கும்  இக்கட்டான இந்த  சூழலில் … இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை , ஒரு சர்ச் பாதிரியார் வெளியிடுவார் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது! கொச்சி அருகே காக்கநாடு பூக்காடுபடியில் உள்ள மார்ட்டின் டி போரஸ் கிறிஸ்தவ  தேவாலயத்தில் நடந்த சம்பவம் இது. அந்த சர்ச்சின்  பாதிரியார்தான், இந்த  அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கடந்த ஞாயிறு காலை பிரார்த்தனை முடிந்த  பின்,  சற்று நேரம் அமைதியாக இருந்த  அந்த சர்ச் பாதிரியார், சர்ச்சில் கூடி இருந்த மக்களை உற்று நோக்கினார். அவர்கள் முகத்தில் வெளிப்படையாக தெரிந்த கவலையை அவர் கண்கள் கண்டு கொண்டன. “அன்பானவர்களே…  நமது தேவாலயத்தின் உண்டியல் இன்று பிற்பகலுக்கு பின் திறக்கப்படும்.” பாதிரியார் இப்படி சொன்னவுடன், மக்கள் கொஞ்சம் திகைத்துப் போனார்கள். தொடர்ந்தார் பாதிரியார் : “பணம் தேவைப்படுபவர்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப உண்டியலில்  இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.. நீங்கள் எடுத்த பணத்தை உங்களுக்கு...

நவ.26 ஜாதி ஒழிப்பு வீரர்கள் நாளில்… உரத்து சிந்திப்போம்!

இளைய தலைமுறைக்கு ஒரு வரலாற்றுச் செய்தி. நவம்பர் 26, 1957 தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய நாள். அன்றுதான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற புரட்சிகரப் போராட்டம் நடந்தது. போராட்டத்தை அறிவித்தவர் பெரியார். அது என்ன போராட்டம்? இந்தியாவின் அரசியல் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தீ வைத்து எரிக்கும் போராட்டம். அப்படி ஒரு போராட்டம் நடந்ததா என்று வியப்படையாதீர்கள். உண்மையில் நடந்தது. அரசியல் சட்டம் தமிழ்நாடு முழுதும் வீதிகளில் எரிக்கப்பட்டது. பெரியார் இயக்கத்தின் தொண்டர்கள் 10000 பேர் எரித்தார்கள். கைதானவர்கள் 3000க்கும் மேல். அவர்களில் பெண்கள், ஆண்களும் சிறுவர்களும் இருந்தார்கள். 3 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைப் பெற்றார்கள். மற்றொரு வியப்பான செய்தி தெரியுமா? இவர்கள் அனைவரும் பிணையில் வெளிவர மனு போட வில்லை; எதிர் வழக்காடவில்லை! “ஆம் சட்டத்தை எரித்தோம்; நீதிமன்றம் வழங்கும் தண்டனையை ஏற்கத் தயாராக வந்துள்ளோம்” என்று நெஞ்சு நிமிர்த்தி...

மேட்டூரில் ஒரு நாள் பயிலரங்கம்

20-10-2016 அன்று காலை 11-00 மணியளவில்  மேட்டூர் பாப்பாயம்மாள் திருமண மண்டபத்தில், சேலம் மேற்கு மாவட்ட கழக சார்பில் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. முற்பகல் அமர்வில் புலவர் செந்தலை கவுதமன்  ”திராவிடர் இயக்க வரலாறு” என்ற தலைப்பில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் கருத்துரையாற்றினார். அதன் பின்னர் தோழர்கள் எழுப்பிய அய்யங்களுக்கு விளக்கம் அளித்தார். மதியம் 2-00 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 3-00 மாணிக்கு தலைவர் கொளத்தூர் மணி “புதியக் கல்விக் கொள்கையும் பழைய குலக் கல்வித் திட்டமும் “ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். அய்யங் களைதலுக்குப் பின்னர் மாலை 5-30 மணியளவில் பயிலரங்கம் நிறைவுற்றது. பயிலரங்க ஏற்பாடுகளை மேட்டூர் நகரக் கழக செயலாளர் சுரேஷ்குமார், குமரேசன் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர். வகுப்பின் துவக்கத்தில், திராவிடர் இயக்கத்தின் அடிவேரான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் அமைப்பின் தொடக்க நாளான 20-11-1916இன் நூற்றாண்டு நிறைவு...

3000 தோழர்கள் சிறையில் வாடிய மகத்தான வரலாறு 1957 நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு நாள்!

1957 நவம்பர் 26இல் பெரியார் இயக்கம் ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்த நாள். 3000 தோழர்கள் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை பெற்றனர். அந்த நாள் நினைவாக சில வரலாற்றுக் குறிப்புகள். இன்றைக்கும் போர் வீரர்களின் நினைவுக் கல்வெட்டுகளில் அவர்களுடைய பெயர்கள் தெரியாத காரணத்தால் ‘பெயர் தெரியாமல் மரித்துப் போன போர் வீரர்கள்’ என்று எழுதப்படுவது வழக்கம். அதேபோல் பெரியார் நடத்திய ஜாதி ஒழிப்புக்கான அரசியல் சட்ட எரிப்புப் போரில் பங்கேற்று மாதக் கணக்கில் சிறைக் கொடுமைகளை அனுபவித்த பெயர் தெரியாத தோழர்கள் பலர் உண்டு. சட்ட எரிப்புப் போரில் பங்கேற்ற பெரியாரின் கருஞ்சட்டைத் தொண்டர்களின் உறுதிமிக்க தியாக வரலாற்றிலிருந்து சில செய்திகள்: சிறையிலிருந்த தோழர் திருவாரூர் முத்துகிருட்டிணனின் மனைவிதான் அவரது கடையையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். காலராவினால் திடீரென முத்து கிருட்டிணன் மனைவி இறந்து விட்டார். மனைவிக்கு இறுதி மரியாதை செலுத்த முத்துகிருட்டிணன் பரோல்கூட...

பெரியார் முன்கூட்டியே கைதானார்!

1957 நவம்பர் 26 – சட்ட எரிப்புக்கு முதல் நாள் பெரியார் திருச்சியில் முன்கூட்டியே கைது செய்யப்பட்டு விட்டார். இது குறித்து ‘விடுதலை’ ஏடு வெளியிட்ட செய்தி: ஜாதி ஒழிப்புக்கு, பெரியார் கொடுத்த 15 நாள் கெடு 18.11.57 அன்று முடிவடைந்தது. எந்தப் பயனும் இல்லாததால் நவம்பர் 26இல் சட்டம் கொளுத்தும் போராட்டம் உறுதி செய்யப்பட்டு விட்டது. 26.11.57 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் அச்சடிக்கப்பட்ட தாள் கட்டினை எரிக்க நாடு முழுவதும் தோழர்கள் பெயர்கள் பட்டியல் தந்து போராட்டத்திற்கு ஆவலாக அணியாயிருந்தனர். பெரியார் அவர்கள், 25.11.57 இல் சீரங்கம் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு விரைவுத் தொடர் வண்டி (எக்ஸ்பிரஸ்) மூலம், சென்னைக்கு வந்து நவம்பர் 26இல் சென்னையில் எழும்பூர் பெரியார் திடல் (டிராம் ஷெட்) கூட்டத்தில் பேசி இறுதி யில், அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்தத் திட்டமிட் டிருந்தார்கள். இந்நிலையில், 25.11.57 மாலை பெரியார் அவர்கள், அவரது புத்தூர்...

வீரமணி-மேரி ஜாதி மத மறுப்பு மணவிழா

திராவிடர் விடுதலைக் கழகத் தின் செயலாற்றல் மிக்க தோழர் சூலூர் பன்னீர் செல்வம்-தமிழ்ச் செல்வி ஆகியோரின் மகன் வீரமணி, பெங்களூர் கழகத் தோழர் ஜார்ஜ்-தாமரை பரணி ஆகியோரின் மகள் மேரி ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு வாழ்க்கை இணை ஏற்பு நிகழ்வு பெங்களூரில் 5.11.2016 அன்று கேப்டன் ஓட்டலில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். டாக்டர் எம். வெங்கடசாமி, முனியன் சின்னப்பா, ‘தலித் சமரசேனா’ அமைப்பைச் சார்ந்த கணேஷ் கோலகிரி, கண் மருத்துவர் சுரேந்தர், பெங்களூர் பல்கலைப் பேராசிரியர் முனைவர் சமந்தா தேஷ்மானே, மகாதேவ பிரசாத்,  வழக்கறிஞர் துரை அருண், கழக அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி, கருநாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் இராஜன், கழக அமைப்பாளர் இல. பழனி, பெங்களூர் கழகத் தோழர்கள் சித்தார்த்தன், இராவணன், தயாளன், குமார், வேலு, இராமநாதன், ‘பூவுலகின்...

வடசென்னையில் கழகக் கூட்டம்: பெண்கள் பெருமளவில் பங்கேற்பு

வட சென்னை மாவட்டக் கழகச் சார்பாக புளிந்தோப்பு கே.பி.பார்க்கில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழக பாடகர் அருள்தாஸ் பகுத்தறிவு பாடல்களை பாடி கூட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து காவை இளவரசனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அப்பகுதி மழலைகளை மட்டுமில்லாமல் இளைஞர்களையும், பெண்களையும் பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து முனைவர் சுந்தரவள்ளி பெரியாரின் சிந்தனைகள், கொள்கைகள், இன்றைக்கும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார், இந்துத்துவத்தின் திணிப்பு போன்றவைகளை பற்றி குழந்தைகளுக்கும் புரியும் எளிய முறையில் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் முழுமையான டாஸ்மாக் போதையில் இந்துத்துவ பிரதிநிதியாக வந்து இதெல்லாம் பேசக்கூடாது என்றார். எதெல்லாம் என்று கேட்டதற்கு அவரிடம் பதிலில்லை. அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது அது மட்டும்தான் போலும். நம் தோழர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதைத் தொடர்ந்து பேசிய முனைவர், அந்த அண்ணனுக்காகவும் தான் எங்கள் பிரச்சாரம் என்றார். அடுத்து பேசிய சென்னை மாவட்ட செயலாளர்...

வினா… விடை…

வினா… விடை…

‘நோட்டு’அறிவிப்பால் – திருப்பதியில் பக்தர்கள் வருகை பாதியாக குறைந்தது. – திருப்பதி தேவஸ்தானம் கவலை கவலைய விடுங்க சார்; உண்டியலில் காணிக்கை போட்டால் உச்சவரம்பில்லாமல், புதிய ரூபாய் நோட்டுகளை மாத்தலாம்னு ஒரு அறிவிப்பை விட்டுப் பாருங்க கூட்டம் பிச்சிக்கிட்டு நிக்கும்! பெரியார் முழக்கம் 17112016 இதழ்

பணமாற்றம் செய்ய ‘க்யூ’ வரிசைக்கு பெரும்புள்ளிகள் வராதது ஏன்?

இனிப்போ, கசப்போ அதன் பெயர் மருந்து. அதையும் அருந்தச் சொல்வது அரசன் என்கிறபோது மக்கள் ஏற்கத்தான் வேண்டும். பழைய ஆயிரமும், ஐந்நூறும் செல்லாது என்ற ‘அரச’ அறிவிப்புக்கு இதுதான் இப்போதைய சமாதானமாக இருக்க முடியும். ஆனால், ஒட்டு மொத்த மக்களும் இந்த மருந்தை ஒன்றே போல்தான் சுவைக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. பெரும்பாலான நடுத்தர, ஏழை மக்கள் நவம்பர் 9ஆம் தேதி இரவு ஒன்பது மணியிலிருந்து வங்கிகளின் வாசலில் நின்றுகொண்டுதான் இருக் கின்றனர். அனைவரின் கைகளிலும் 5 ஆயிரம் முதல் முப்பதாயிரம் வரை யில், அவ்வளவும் பழைய ரூபாய் நோட்டுகள். பணம் இருக்கிறவர்கள், வங்கிப் பக்கம் தென்படவே இல்லை. அரசியல்வாதிகளோ, தொழில் அதிபர் களோ, சினிமா நட்சத்திரங்களோ வங்கி வரிசையில் காணவில்லை. அவர்களிடம் இருக்கிற பணத்தை யார் மாற்றுகிறார்கள் என்பதுதான் பிரதான கேள்வியாக இப்போது எழுந்துள்ளது. பண மாற்றத்துக்கு முக்கிய மேலிடத்தை அணுகும் வி.ஜ.பி.க் களிடம், அதிகார மைய ஆட்கள், “இதில்...

‘இராம லீலா’வுக்கு எதிரான அசுரர்களின் கலகக் குரல்!

அறிவியல் ரீதியிலான ஆய்வுகளே இல்லாத காலத்திலேயே  பார்ப்பன புராணங்களை வாசித்து, தனது சொந்த புரிதலின் அடிப்படையில் அரசியல் உள்ளடக்கத்தை வழங்கியவர் பெரியார். பார்ப்பனியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அறிவுத் தளத்தோடு நின்றுவிடவில்லை. மக்கள் மத்தியில் இயக்கங்களாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன. ‘தேவ-அசுர’ப் பேராட்டத்தில் பார்ப்பனியத்துக்கு எதிரான ‘அசுர மரபு’ இன்னும் உயிர்த் துடிப்போடு பழங்குடி மக்களிடம் இருப்பதையும், பார்ப்பன மரபுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரியார் இயக்கம் நடத்திய மக்கள் இயக்கங்களையும் வரலாற்று பின்புலத்தோடு, படம் பிடிக்கிறது இக்கட்டுரை. அமர், அசுர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ஜார்கண்ட் மாநில பழங்குடியினரிலேயே சிறுபான்மை யிலும் சிறுபான்மையினரான அசுர் பழங்குடியினத்த வரின் மொத்த மக்கள் தொகை சுமார் 26,500. அம் மக்கள் இன்றும் தங்களை அசுர வாரிசுகளாகக் கருதிக்  கொள்கின்றனர். அங்கே மகிஷாகர், அசுர்களின் மூதாதையர்., மகிஷன், இராவணன், சம்பூகன் போன்றோரின் துண்டிக்கப்பட்ட தலையிலிருந்த வழிந்தோடிய குருதி, தொன்மங்களாகவும் இனக் குழுச் சடங்குகளாகவும் இன்றும் பழங்குடி மக்களின்...

சங்பரிவாரங்கள் திப்பு சுல்தானை எதிர்ப்பது ஏன்?

கர்நாடக மாநில அரசு ‘திப்பு சுல்தான் ஜெயந்தி’ என்று பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் நடத்துகிறது. இதற்கு பா.ஜ.க. சங்பரிவாரங்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் இறங்கி வருகின்றன. திப்புசுல்தான் மீது இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2012 பிற்பகுதியில் பாஜகவிலிருந்து வெளியேறி கர்நாடக ஜனதா பக்சா கட்சி யினை துவக்கிய எடியூரப்பா, திப்பு சுல்தான் மாடல் தலைப்பாகையை அணிந்து கொண்டு கையில் வாளுடன் முஸ்லிம் மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து பா.ஜ.க.வில் சேர்ந்து மீண்டும்அதன் தலைவராகி தற்போது நவம்பர் 10ல் நடைபெற்ற திப்பு ஜெயந்தி விழா எதிர்ப்பில் முன்னணியில் உள்ளார். மைசூர் மன்னரான திப்பு சுல்தான் (1750-1799) சமூக அடையாளங்களைக் கடந்து கலாச்சார நிகழ்வுகளில் ஒவ்வொருவருடைய உருவ மாகத் தோற்றமளிக்கிறார். மைசூரின் வேங்கையாக திப்பு சுல்தான் கருதப்பட்டார். 19ஆம்நூற்றாண்டின் கன்னட நாட்டுப்புற பாடல்களில், போர்க்களத்தில் மரணமடைந்த திப்புவின்மரணம் பாடல்களாக வலம் வந்தன. கர்நாடகாவின்...

தலையங்கம் இதுதான் பார்ப்பனர்களின் தகுதி திறமையா?

மக்களின் புழக்கத்தில் 80 சதவீதமாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இவை செல்லத் தக்கதல்ல என்று பிரதமர்  மோடி ஒரே இரவில் அறிவித்தபோது இப்படி ஒரு அதிர்ச்சி இந்தியாவின் ‘கருப்பு பொருளாதார சந்தைக்கு’ தேவைதான் என்றே நாம் கருதினோம். நாட்டின் பொருளா தாரத்தை சர்வதேச சந்தைக்கு திறந்து விடும் உலக மயமாக்கல் கொள்கைக்குப் பிறகு அந்நிய முதலீட்டுச் சுரண்டல்கள் கருப்புப் பொருளாதார சந்தைகள் பெருகி, அரசியல் கட்சிகள், பெரும் தொழிலதிபர்கள், ‘பகாசுர கம்பெனிகள்’ கொழிக்கத் தொடங்கின. பார்ப்பன பனியா வர்க்கம் மேலும் தனது அதிகாரத்தை வலிமைப்படுத்திக் கொண்டது. இந்த நிலையில் மோடியின் இந்த அதிரடி நடவடிக்கை கருப்புப் பணச் சந்தையை முடக்குமா என்ற சந்தேகத்தை பொருளியல் நிபுணர்கள்  எழுப்பினார்கள். அவர்களின் கேள்விகளை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. ஆனாலும்கூட புழக்கத்திலுள்ள போலி ரூபாய் நோட்டுகளை இது கட்டுப்படுத்தும் என்ற அளவில் இந்த முயற்சி வரவேற்கப்பட்டது. இப்போது இந்த அதிரடியால் அவதிக்குள்ளாகி...

மூடப்படும் அரசுப் பள்ளிகள்: கொளத்தூர் மணி கண்டனம்

திருநெல்வேலி மாவட் டம் பாவூர் சத்திரத்தில் பெரியார் 138ஆவது பிறந்த நாளான 17.9.2016இல் கல்வியை காவி மயமாக்கும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து கீழப்பாவூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத் தின் சார்பில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே பொதுக் கூட்டம் நடைபெற்றது. கீழப்பாவூர் ஒன்றிய கழகத் தலைவர் குறும்பை அ. மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு பொருளாளர் ந. சங்கர், துணைச் செயலாளர் மூ.சபாபதி முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட கழக அமைப்பாளர் பொ.பெ.சு. அன்பரசு வரவேற்புரையாற்றினார். காவை இளவரசனின் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்வோடு பொதுக்கூட்டம் தொடங்கியது. நிகழ்வில் நெல்லை மாவட்ட கழகத் தலைவர் பால்வண்ணன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு மற்றும் இராம. உதயசூரியன் (ம.தி.மு.க.), கலிவரதன் (ஆதித் தமிழர் பேரவை), கூ.சு. இராமச்சந்திரன் (தி.மு.க.), டேனியல் (வி.சி.க.), சொ. சு. தமிழினியன் (விசிக) ஆகியோர் உரைக்குப் பின் கழகத் தலைவர்...

கரன்சி ஒழிந்தது; கல்வீச்சு நின்றது!

கரன்சி ஒழிந்தது; கல்வீச்சு நின்றது!

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் ஏற்பட்ட பயன் ஒன்றை கண்டுபிடித்து காதில் பூ சுற்றியிருக்கிறார் மத்திய இராணுவ அமைச்சர்  பாரிக்கர். காஷ்மீரில் இராணுவத்தினர் மீது, மக்கள் (அதாவது பயங்கரவாதிகள்) கல்வீசுவது நின்று விட்டதாம்; ஒரு கல் வீசினால் ரூ.500 என்று ‘தீவிரவாதிகள்’ கொடுத்து வந்தார்களாம்! இனிமேல் இந்தியாவில் இராணுவத்துக்கு எதிரான எந்த பயங்கரவாத நடவடிக்கையும் அப்படியே நின்று போய்விடும் என்று நம்புவோமாக! அதேபோல் பாகிஸ்தான் இந்திய எல்லையிலும், சீனா-இந்திய எல்லைப் பகுதியிலும் இனி குண்டுகள் வெடிக்காது. அந்த செய்தியையும் பாரிக்கர் நாட்டுக்கு அறிவிக்கும் நாள் விரைவில் வரக் கூடும். அப்படியானால் ‘பாரத’ தேசத்தில் இராணுவத்துக்கே இனி வேலை இல்லை என்ற நிலை வந்தாலும் வரலாம். இதேபோல், “10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளை ஒழித்து விட்டால் பிச்சைக் காரர்களை ஒழித்து விடலாமே” என்று ஒரு நண்பர் யோசனை கூறுகிறார். இதுவும் கூட ஒரு நல்ல யோசனைதான்! ஆக,...

கழக சார்பில் புதிய மாத இதழ் : புத்தக சந்தை ரூ.2 கோடி கட்டமைப்பு நிதி திரட்ட இலக்கு கழக தலைமைக்குழு முக்கிய முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கடந்த நவம்பர் 13, ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் மயிலாடு துறையில் ‘புத்தகச் சோலை’ அரங்கில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நிகழ்ந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இயக்கத்தின் வளர்ச்சி, கட்டமைப்பு, பெரியாரியலை முன்னெடுப்பதற்கான அணுகுமுறைகள், புதிய நூல்களை வெளியிடுதல், அதை மக்களிடம் விற்பனை செய்வதற்கான புத்தக சந்தைகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. புதிய மாத இதழ் ஒன்றை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.  கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டு அதற்கான பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொறுப்பாளர்                             மாவட்டங்கள் இரா. உமாபதி           ...

ஓயாத வடகலை, தென்கலை ‘குடுமி பிடி’

காஞ்சிபுரம் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்று பார்ப்பனர்கள் ‘குடுமி’பிடிச் சண்டை போட்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு இலண்டனில் உள்ள ‘பிரிவீ கவுன்சில்’ வரை போனது. ஒரு வாரம் வடகலை நாமத்தையும் மறுவாரம் தென்கலை நாமத்தையும் மாற்றி மாற்றிப் போடுமாறு தீர்ப்பு வந்தது. இதே போல் திருவரங்கம் கோயில் யானைக்கும் பிரச்சினை வந்தது. யானைக்கு நாமத்தை மாற்றி மாற்றிப் போட்டதால் நெற்றிப் புண் உண்டாகி யானையே மரணமடைந்து விட்டது என்ற செய்தியும் உண்டு. இந்த ‘நாம’ப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. திருப்பதி ‘ஏழுமலை’யானுக்கும் இதே பிரச்சினைதான்! தென்கலை நாமம் (‘ஒய்’ எழுத்து), வடகலை நாமம் (‘யு’ எழுத்து). இரண்டுமே ஏழுமலையானுக்கு சாத்துவதுஇல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பொது அடையாளத்தை ‘நாமமாக’ போடுகிறார்கள். தமிழில் ‘ப’ எழுத்து வடிவத்தில் போடப்படுகிறது. இந்த முடிவில் இப்போது மீண்டும் குழப்பம் வந்துள்ளதாம். கடந்த நவம்பர்...

70 ஆண்டு மூட நம்பிக்கையை தகர்த்த – ஆத்தூர் தோழர்கள் அறிவியல் பரப்புரை

70 ஆண்டு மூட நம்பிக்கையை தகர்த்த – ஆத்தூர் தோழர்கள் அறிவியல் பரப்புரை

சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகே ஒரு கிராமத்தில் 70 ஆண்டு களாக மாடி வீடுகளே கட்டப்படுவது இல்லை; அது ‘சாமி குத்தம்’ என்று மக்கள் அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் கழகத் தோழர்கள் அந்த கிராமத்தில் அறிவியல் பரப்புரை நடத்தி மக்களின் அச்சத்தைத் தகர்த்தனர். இது குறித்த செய்தி: சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மல்லியக்கரை அஞ்சலுக்குட்பட்ட கருத்த ராஜப்பாளையம் என்ற கிராமத் தில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அடுக்கு மாடி வீடும் கட்டப்படவில்லை.காரணம் அங்கு அனைவராலும் மிகவும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ள பெரியசாமி கோவிலின் கோபுரத்தின் உயரத்திற்கு மேல்  அந்த பகுதியில் எந்த ஒரு வீடு கட்டினாலும் அவர் இறந்து விடுவார் அதுபோல் இறந்தும் இருக்கிறார் என்ற மிகப்பெரிய மூட நம்பிக்கையில் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த செய்தி ‘சன்’  மற்றும் ‘மக்கள்’ தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பட்டுள்ளது. செய்தித்தாள் களிலும் வெளி வந்துள்ளது. அங்கு பொருளாதார வசதி...

பாதிரியார் சகாயராஜ் தீண்டாமை வெறி சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம்: தோழர்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மையனூர் கிராமத்தில் ஏசு குழந்தை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமையாளர் பாதிரியார் சகாயராஜ் இந்த பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்களை செப்டம்பர் 5 அன்று அங்கு படிக்கும் மாணவர்களின் செருப்பை திருடியதாக பிடித்து, அதற்கு தண்டனையாக அடித்தும்,  விளையாட்டு திடலை சுற்றிவரச் சொல்லியும் கொடுமைப்படுத்தி யுள்ளனர். நான்கு பேரில் இருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிட்டு,  இருளர் சமூகத்தை சேர்ந்த இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று வெளியூர் போக பணம் இல்லாததால் வீடு திரும்ப முயன்றபோது, பள்ளி ஊழியர்கள் பார்த்து பள்ளிக்கே கொண்டு சென்றனர். செய்தி பெற்றோர்களுக்கு தெரிந்து அவர்கள் பாதிரியார் சகாயராஜை சந்தித்து விவரம் கேட்டபோது, அவர் பெற்றோர்களை மிரட்டியதோடு இது பிற்படுத்தப்பட்டோர் பலம் வாய்ந்த பகுதி அவர்களை அழைத்து உங்களை தாக்குவேன். நாளை காலை வந்து விடுப்பு சான்றிதழ் (கூஊ) பெற்றுக்கொள்ளுங்கள் என்றிருக்கிறார். இவர்களும் இது...

வினா… விடை…

வினா… விடை…

ஆகமவிதிகள் மீறாமல் கோயில்களை பழுது பார்க்க உயர்நீதிமன்றம் 60 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளது. – செய்தி ஒரு சந்தேகம். உறுப்பினர்கள் ஆகம விதிப்படித் தான் நியமிக்கப்பட்டிருக் காங்களா? பெரியார் முழக்கம் 10112016 இதழ்

நன்கொடை

கழக வளர்ச்சி நிதிக்கு பெங்களூர் தோழர்கள் சிவகுமார் – ரூ.5000, எம்.ஜி.ஆர். மணி – ரூ.3000, சித்தார்த்தன்- ரூ.2000, ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதிக்கு விழுப்புரம் மதியழகன்-ரூ.100, நாகராசன்-ரூ.100 ஆகியோர் நன்கொடையாக வழங்கினர். பெரியார் முழக்கம் 10112016 இதழ்

கிறிஸ்துதாஸ் காந்திக்கு எதிரான மிரட்டலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி அவர்கள் ஊடகத்தில் புராண கற்பனை கதாபாத்திரமான இராமனை கொளுத்துவேன் என்று தன் கருத்தினை பதித்ததற்காக …  பார்ப்பன இந்துத்துவ ஊடகம் ‘தினமலர்’ அவரை பற்றிய விவரங்களுடன் செய்தியை வெளியிட்டு, அவரின் அலைபேசி எண்ணையும் அதில் பதித்து, பார்ப்பன அடிமைகளை தூண்டும் விதமாக செய்திகளை வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாய் பார்ப்பன கும்பல் ஒரு முன்னாள் அதிகாரி என்றும் கருத்தில் கொள்ளாமல் தன் காலித்தனத்தை காட்டும் விதமாக, அவரை தரக்குறைவான வார்த்தை களாலும், அவரை ஜாதியின் பெயரால் இழிவு படுத்தியும், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளது. அவர்களை கண்டித்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மதச் சார்ப்பின்மை இயக்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் 3.11.2016 வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலைய செயலர் தபசி குமரன் தன் கண்டனத்தை இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக பதிவு செய்தார். பெரியார் முழக்கம் 10112016 இதழ்

டெல்லி மக்களை முகமூடி போட வைத்த ‘மகாவிஷ்ணு’

டெல்லி மக்களை முகமூடி போட வைத்த ‘மகாவிஷ்ணு’

‘மகா விஷ்ணு’ டெல்லியில் பொது மக்களை யெல்லாம் முகமூடி போட வைத்து விட்டார். தீபாவளி பட்டாசு வெடிப்புக்குப் பிறகு புதுடில்லியில் ‘காற்று மாசு’ அதிகரித்து மக்கள் உயிருக்கு ஆபத்துகளை உருவாக்கியுள்ளது.  பஞ்சாப், அரியானா மாநிலங்களில் வைக்கோல் போன்ற விவசாய கழிவுப் பொருள்களை எரிப்பது இதற்கு ஒரு காரணம். இதை மேலும் சிக்கலாக்கியது தீபாவளி பட்டாசு வெடிப்பு. புதுடில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, தொழிற்சாலைகள் மூடப் பட்டுள்ளன. மக்கள் முகமூடியுடன் நடமாடுகிறார்கள். இந்திய வானியல் துறை முன்னாள் தலைமை இயக்குனரும் விஞ்ஞானியுமான ‘இலட்சுமண் சிங்’ நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். மணப்பாறையில் பெரியார் பிறந்த நாள் மணப்பாறை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் பெரியார் பெருந்தொண்டர்  சேகர் தலைமையில் நடைபெற்றது. தனபால், திராவிடர் கலைக் குழு சங்கீதா;  திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட பிரதிநிதி துரைஅழகிரி, ஆதி...

நாச்சியார்கோவிலில் கொளத்தூர்மணி பேச்சு இடஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டமல்ல

தஞ்சைமாவட்டம் திருவிடைமருதூர்ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 17.10.2016 அன்று மாலை 6மணியளவில் நாச்சியார்கோவில் வடக்கு வீதியில் அமைக்கப்பட்ட சுயமரியாதைச் சுடரொளி குடந்தை ஆர்பிஎஸ் ஸ்டாலின் நினைவு மேடையில் தலைமை கழக பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்றது. துவக்கத்தில், மக்கள்பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் குழுவினரின் பகுத்தறிவு பண்பாடும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர் சா. வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார்.  திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு, நாகை மாவட்ட செயலாளர் தெ. மகேசு, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.  பின்னர், பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமை உரையாற்றினார். இறுதியாக, கழகத் தலைவர் கொளத்தூர்மணி சிறப்புரையாற்றினார்.  அவர் தனது உரையில், “ஜாதி ஒழிப்பிற்கு ஒரு இடைக்கால நிவாரணம் என்றால் அது அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும்...

“தீபாவளி புனிதமா ? வணிகமா?” சென்னையில் தோழர்கள் துண்டறிக்கை விநியோகம்

விழிப்புணர்வு துண்டறிக்கை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட தோழர்களால் தியாகராய நகர் கடைவீதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மாணவர்கள், மாணவியர்கள், தாய்மார்கள் என மக்கள் ஆர்வமாக துண்டறிக்கையை வாங்கி படித்தது அவர்களின் தேடலை, தேவையை நன்கு உணர்த்தியது. சிலர் இருபது முப்பது துண்டறிக்கை களை அவர்களின் பகுதியில் விநியோகிக்க வாங்கிச் சென்றதும், ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க கம்யூனிஸ்ட் தோழர் தாமாக முன் வந்து துண்டறிக்கை விநியோகத்திற்கு உதவியாய் வந்ததும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் துண்டறிக்கையை பெற்றுக்கொண்டு தோழர்களின் பணியை பாராட்டியது, தோழர்களுக்கு பெரும் ஊக்கமாய் அமைந்தது. தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் இரா. உமாபதியுடன் தோழர்கள் துண்டறிக்கையை விநியோகம் செய்தனர். பெரியார் முழக்கம் 10112016 இதழ்

“அய்யப்பசாமி; பறையுங்கோ!”

சபரிமலை அய்யப்பன் ‘கட்டை பிரம்மச்சாரி’ என்பதால் ‘மாதவிலக்கு’ எனும் ‘தீட்டுக்கு’ உள்ளாகும் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாதாம்! ‘அய்யப்பனுக்காக’ அவனது வழக்கறிஞர்கள் இப்படி வாதாடுகிறார்கள். ‘நியூஸ் 18’ தொலைக்காட்சி விவாதத்தில் (நவ. 7) பேசிய இரண்டு பார்ப்பனர்கள் (இதில் ஒருவர் பெண்) – பெண்களை அய்யப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி கூறுவதை ஏற்கவே முடியாது என்று அடம் பிடித்தார்கள். “கூடாது; கூடாது; இது அடாவடி.” அய்யப்பன், பிரம்மச்சாரி கோலத்தில் அங்கே இருக்கிறான். 10க்கு மேல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் ‘பிரம்மச்சாரி’யை நேரில் தரிசித்தால் பகவான் கவனம் திசை திரும்பி விடாதா? பிரம்மச்சரியம் குலைந்து விடாதா? இது நாட்டுக்கே பேராபத்தாகி விடும் – என்று தொலைக்காட்சியில் பதறுகிறார்கள். ஆனாலும், ‘இவாள்கள்’ அய்யப்பனை இப்படியெல்லாம் அவமதிக்கக்கூடாது என்பதே அடியேனின் கருத்து. அய்யப்பன் பிரம்மச்சர்யம் என்ன அவ்வளவு பலவீனமானதா? பெண்களைப் பார்த்தாலே சபலத்துக்கு ஆளாகி விடுவானா? இதைக்...

தலையங்கம் கேள்விக்குறியாகும் எதிர்காலம்!

தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதற்கு அண்மையில் தமிழ்நாடு தேர்வாணை யம் நடத்திய ‘குரூப்-4’ தேர்வே சரியான சாட்சி. 5,451 காலி இடங் களுக்கு தேர்வு எழுதியவர்கள் 15 இலட்சத்து 64 ஆயிரத்து, 471 பேர். 12ஆம் வகுப்புதான் கல்வித் தகுதி என்றாலும், பொறியியல் பட்டதாரிகள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர். 11 மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு 2014இல் நடத்திய தேர்வில் 3000 பேர் தேர்வு எழுதினர். 2015இல் முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) நடந்து முடிந்து 15 மாதங்கள் ஓடிய பிறகும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. துணை ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி போன்ற குரூப்-1 தேர்வுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சிப் பெறக் கூடியவர்கள் குறைந்தது மூன்று முறை தேர்வு எழுதியவர் களாகவே இருக்கிறார்கள். பட்டப் படிப்பு முடித்தது முதல் இந்தத் தேர்வுக்காகவே தயாராகி வரும் மாணவர்களுக்கு இறுதி கட்டத்தில் வயதுத் தடை...

திருப்பூரில் அறிவியல் மன்றம் நடத்திய மகளிர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய மகளிர் சந்திப்பு திருப்பூரில் 23.10.2016 அன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் கோவை பகுதி தோழர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடந்த இந் நிகழ்வு பெரும் உற்சாகத் துடனும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது. முதல் நிகழ்வாக கலந்து கொண் டோர் தங்களைப் பற்றியும் தங்களுக்கு பொது வாழ்விலுள்ள பங்கு பற்றியும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். பிறகு அந்தக் காலப் பெண்கள் வாழ்வு தான் சிறந்தது என்று ஒரு குழுவும் அதனை மறுத்து இந்தக் காலப் பெண்கள் வாழ்வு தான் சிறந்தது என்று ஒரு குழுவும் விவாதித்தனர். இதில் பெண்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்பட்டு விவாதித்தனர். பிற்பகல் பெரியார் ஒர் அறிமுகம் என்ற தலைப்பில் சிவகாமி பேசினார். பிறகு பொட்டு வைத்தல், தாலி ஓர் அடிமைச் சின்னம், அணிகலன்...

மதுரையில் 480 தோழர்கள் கைது ஆணவக் கொலைகளைத் தடுக்காத காவல்துறை அலுவலகம் முற்றுகை

ஆணவக் கொலைகளைத்  தடுக்கத் தவறிய காவல்துறையைக் கண்டித்து, தென்மண்டல காவல் துறை ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம் 3.11.2016 அன்று, காலை 11-00 மணியளவில் நடைபெற்றது. மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் அணி திரண்ட தோழர்களிடையே கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்  தமிழ்ப்புலிகள்கட்சித் தலைவர் நாகை. திருவள்ளுவன் நோக்க உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழகத் தலைவர்கொளத்தூர்மணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலைக் கட்சியின் மீ.த.பாண்டியன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிருட்டிணன், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எச்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி, ஆதிதமிழர்ப் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் புதுக் கோட்டை செரீப், மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகப் பொதுச் செய்லாளர் பிரிசெல்லா பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், மே 17 இயக்கம் திருமுருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நேசன், விடுதலைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆற்றலரசு ஆகியோர் உரையாற்றிய பின்னர்...

காஞ்சி கோயிலில் ‘பார்ப்பனர்’ திணிக்கும் தீண்டாமை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் என்றாலே சங்கர்ராமன் என்ற அர்ச்சகர் வெட்டிக் கொலை செய்யப் பட்டது நினைவுக்கு வரும். சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி ஜெயேந்திரன் உள்ளிட்ட அனைவரும் விடுதலையாகிவிட்டார்கள். ஆனால், சங்கர்ராமனை கொலை செய்தது யார் என்பதற்கு விடை கிடைக்கவில்லை. தன் கண் முன்னே தனது பக்தன் வெட்டி வீழ்த்தி இரத்த வெள்ளத்தில் சாய்ந்ததை நேரில் பார்த்துக் கொண்டிருந்த “வரதராஜப் பெருமாளும்” அப்படியே “கல்லு”போலவே இருக்கிறார். அதே வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள் இப்போது பார்ப்பனர் நடத்தும் ‘தீண்டாமை’ வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்குள் ‘மாமுனிவர்’ வைணவ கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலுக்குள் உள்பிரகாரத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அய்யங்கார் பார்ப்பனர்களை மட்டுமே அங்கே உட்கார வைத்து, அவர்களை வழிபடுவதுபோல் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ பாட அனுமதிக்கப்படுகிறது. பார்ப்பனரல்லாத வைணவர்கள் கோயில் உள்புற வளாகத் துக்குள்ளேயே அனுமதிக்கப்படுவது இல்லை. கோயில் வளாகத்துக்குள்ளேயே பார்ப்பனரல்லாதவர்கள் அனுமதிக்கப் படாததை எதிர்த்து சில...

‘இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!’

‘இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!’

9-9-2016 அன்று பிற்பகல் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், தமிழக மக்கள் ஜனயாகக் கட்சியின் ஒருங்கிணைப்பில், அக்கட்சியின் தலைவர் புதுக்கோட்டை ஷெரீப் தலைமையில், பத்து ஆண்டுகள் சிறைவாசம் முடித்த அனைத்து சிறைவாசிகளையும், மத பேதம் இன பேதம் பார்க்காமல் விடுதலை செய் என்ற ஒற்றைக் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ்வார்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சி, அமைப்புகள், ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 13102016 இதழ்

ஆயுத பூஜை நிறுத்தக் கோரி

ஆயுத பூஜை நிறுத்தக் கோரி

சென்னை-கோவையில் கழகம் மனு காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, இதற்கான அரசாணை, நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்டக் கழக சார்பில் கடந்த அக்.5ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் தலைமையில் கழகப் பொறுப்பாளர் இரா. உமாபதி, ஏசு, அய்யனார், வேழவேந்தன் உள்ளிட்ட 20 தோழர்கள் உடன் சென்றனர். கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அரசு அலுவலகங்களில் எந்தவித மத சடங்குகளை நடத்த கூடாது என அரசு பிறப்பித்த உத்தரவையும் நீதி மன்ற ஆணையையும் நடை முறைப் படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையரி டமும் மேட்டுப்பாளையம் இராமசந்திரன் தலைமையில் நேருதாஸ், நிர்மல்குமார், சூலுர் பன்னீர் செல்வம்,  உக்கடம் கிருட்டிணன், ஜெயந்த், ஸ்டாலின், கிருத்திகா, விக்னேஷ், வினோத், இயல் ஆகிய தோழர்கள் மனு கொடுத்தனர். பெரியார்...

நவீன மருத்துவமும் வைதீகச் சடங்குகளும்!

நவீன மருத்துவமும் வைதீகச் சடங்குகளும்!

சென்னை அரசு தலைமைச் செயலகத்தில் இந்த ஆண்டு ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன என்று ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கு கூறப்பட்டள்ள காரணம் முதலமைச்சர் உடல்நலம் குன்றியிருக்கும் சூழலில் கொண்டாட்டங்கள் கூடாது என்பதாகும். இந்த ‘சூழலில்’ மட்டுமல்ல; எப்போதுமே அரசு அலுவலகங்களில் மத கொண்டாட்டங்கள் நடக்கக் கூடாது. காரணம், அனைத்து மதத்தினரும் பணியாற்றக் கூடிய அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் தனி உரிமைகள் இருக்கக் கூடாது. ‘பூஜை’கள் என்பது பக்திக்காக நடப்பவை அல்ல; அது ‘கொண்டாட்டம்’ என்ற உண்மையை அரசு ஊழியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அதனால்தான் முதல்வர் உடல்நலமின்றி இருக்கும்போது கொண்டாட்டம் கூடாது என்கிறார்கள். மற்றொரு பக்கத்தில் முதல்வர் நலம் பெற வேண்டும் என்று பூஜைகள், யாகங்களை அக்கட்சியின் அமைச்சர்கள், பொறுப்பாளர்கள் நடத்துகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் தமிழக அமைச்சர் ஒருவர் யாகம் நடத்தும்போது அந்த புகையினால் மயக்கமடைந்தார் என்று செய்தி வந்திருக்கிறது. தரையில் சோறு சாப்பிடுகிறார்கள். இது உடல்...

பா.ஜ.க.வின் துரோகம் தோலுரிக்கிறது, ஆதரவு ஏடு

பா.ஜ.க.வின் துரோகம் தோலுரிக்கிறது, ஆதரவு ஏடு

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் செய்வது பா.ஜ.க. தான் என்பதை விளக்கி, பா.ஜ.க. ஆதரவு நாளேடான ‘தினமணி’யே (அக்.5) தலையங்கம் தீட்டியுள்ளது. ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை’ என்பதுபோல் பா.ஜ.க.வின் துரோகத்தை அதன் ஆதரவு ஏடே அம்பலமாக்கும் அந்தத் தலையங்கத்தை இங்கே வெளியிடுகிறோம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மாற்றியமைக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கு தீர்ப்பாகும்வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் உத்தரவை நீதிபதிகள் தள்ளி வைக்கவேண்டும் என்று மத்திய அரசின் வழக்குரைஞர் ரோத்தகி முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, தொழில்நுட்பக் குழுவை அனுப்ப உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது மத்திய அரசுக்கு இதுவரை தெரியாதா? மேலாண்மை வாரியத்தை மூன்று மாதங்களில் அமைக்க உத்தரவிட்ட நேரத்தில் மத்திய அரசு சும்மா இருந்துவிட்டு, அக்டோபர் 4ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றம் கூறிய போதும் சும்மா இருந்துவிட்டு, இப்போது...

அன்று ‘குடவோலை’ இன்று ‘ஏலம்’

அன்று ‘குடவோலை’ இன்று ‘ஏலம்’

சோழர் கால ஆட்சியிலேயே ‘குடவோலை’ முறை வழியாக மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்று பெருமையுடன் வரலாறுகள் பேசப்படுகின்றன. இந்த குடவோலை முறை எப்படி நடந்தது? காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசின் தொல்லியல் துறை கண்டுபிடித்த கல்வெட்டுகள் குறித்து, எழும்பூர் அருங்காட்சியகத்தில் அந்தத்துறை சார்பாக அண்மையில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய தொல்லியல் துறை அதிகாரி நீலகண்டன், ‘உத்திரமேரூர்’ பகுதியில் நடந்த குடவோலை முறை பற்றி விளக்கம் அளித்தார். இந்த முறைப்படி, “தேர்தலில் போட்டியிடுவோர் நான்கு வேதங்களைப் படித்திருக்க வேண்டும்” என்ற நிபந்தனையிருந்திருக்கிறது. கல்வெட்டுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல் இது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பார்ப்பனர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதை இத்தகவல் உறுதிப்படுத்துகிறது. இதுதான் சோழர்கள் காலத்தில் நடந்த ‘குடவோலை ஜனநாயகம்’. குடவோலை முறையை உலகுக்கே அறிமுகம் செய்த ஊர் உத்திரமேரூர்தான் என்று வரலாறுகளில் எழுதுகிறார்கள். அதன் ‘யோக்கியதை’ இப்படித்தான் இருந்திருக்கிறது. இப்போது அதே உத்திரமேரூரில்...

கட்சி நலனுக்காக கூட்டாட்சி தத்துவத்தை பலியிடுகிறது பா.ஜ.க. அலுவலகம்  முற்றுகை: கைது

கட்சி நலனுக்காக கூட்டாட்சி தத்துவத்தை பலியிடுகிறது பா.ஜ.க. அலுவலகம் முற்றுகை: கைது

காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க.வின் துரோகத்தைக் கண்டித்து சென்னை மாவட்ட திரவிடர் விடுதலைக் கழகம், அக்.7ஆம் நாள் பகல் 11 மணியளவில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது. கழகத் தோழர்கள் 65 பேர் கைதானார்கள். ஒரே நாள் இடைவெளியில் இந்தப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளை கழகத்தினர் செய்தனர். தியாகராயர் நகர், பா.ஜ.க. அலுவலகம் அருகே தோழர்கள் திரண்டனர். மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை விளக்கி கீழ்க்கண்ட வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நகர் முழுதும் ஒட்டப்பட்டிருந்தன. “துரோகம் செய்யாதே! பா.ஜ.க. அலுவலகம் முற்றுகைப் போராட்டம்! அன்று வழக்கைக் காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது மோடி ஆட்சி. இன்று உச்சநீதிமன்றம் வாரியம் அமைக்க ஆணை பிறப்பித்தும் ஏற்க மறுக்கிறதுஅதே மோடி ஆட்சி.” என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. பா.ஜ.க.வின் துரோகங்களை அம்பலப்படுத்தும் பதாகைகளை ஏந்தி தோழர்கள் முழக்கமிட்டனர். பா.ஜ.க. அலுவலகம்...

பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை

சமூக நீதியின் நோக்கத்தையே சிதைக்கிறது ‘வடிகட்டும்’ முறை மக்கள் விரோத கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டு போராட்டக் குழு சார்பில் சென்னையில் சேப்பாக்கத்தில் செப்.29 அன்று பகல் 11 மணியளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆயிரக்கணக்கில் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தொடங்கி வைத்தார். கழகச் சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசினார். அவரது உரையிலிருந்து: “குலக் கல்வித் திட்டமாக சமஸ்கிருத திணிப்பாக புதிய கல்விக் கொள்கை வந்திருக்கிறது என்று இங்கே உரையாற்றிய பலரும் சுட்டிக்காட்டினர். குலக் கல்வி, சமஸ்கிருத அடிப்படையில் வரும் எந்தத் திட்டத்தையும் தமிழகம் ஏற்காது என்பதே தமிழகத்தின் பொதுச் சிந்தனை. இந்த சிந்தனையை மக்கள் கருத்தாக கட்டமைத்தது தான் பெரியார் இயக்கத்தின் வெற்றி. இரண்டு சிந்தனைக்கும் பின்னால் இருப்பது பார்ப்பனிய எதிர்ப்பு. மக்கள் விடுதலைக்கான இந்த சிந்தனைப் போக்கை தமிழகத்தின் கருத்தோட்டமாக உருவாக்குவதற்கு இந்த மண்ணில் மகத்தான போராட்டங்கள் நடந்தன. அந்தப் போராட்டத்தின் தாக்கத்தைத்தான் இப்போது...

‘இராமன்’ பட எரிப்பு: த.பெ.தி.க. – தி.வி.க. தோழர்கள் கைது

டெல்லியில் ‘இராவணன்’ உருவத்தை எரித்துக் கொண்டாடும் இராமலீலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ‘இராமன்’ படத்தை எரித்து பதிலடி தந்தனர். இராயப்பேட்டை நல்வாழ்வு மண்டபத்தின் அருகே இராமன் படம் எரிக்கப்பட்டது. 11 தோழர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழக இணையதளம் பொறுப்பாளர் விஜயகுமார், காஞ்சி தினேஷ்குமார் ஆகியோரும் வழக்கில் இணைக்கப்பட்டு ரிமான்ட் செய்யப்பட்டுள்ளனர் பெரியார் முழக்கம் 20102016 இதழ்

அரை ‘டிரவுசர்’ போய் முழு ‘டிரவுசர்’ வந்தது!

அரை ‘டிரவுசர்’ போய் முழு ‘டிரவுசர்’ வந்தது!

ஆர்.எஸ்.எஸ். சீருடையை மாற்றிக் கொண்டு விட்டதாம். அரைக்கால் காக்கி சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டை (பேண்ட்) போட ஆரம்பித்து விட்டார்கள். 90 ஆண்டுகால பாரம்பர்யத்தை மாற்றிக் கொண்டுவிட்டார்கள். ‘காலத்துக்கேற்ப மாற வேண்டும் என்கிறார்’ ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத். சரிதான்; 90 ஆண்டுகாலமாக பெண்களை ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக்க முடியாது என்று தடை போட்டு வைத்திருக்கிறீர்களே, அதையும் மாற்றிக் கொள்ள வேண்டியது தானே! அரைக்கால் சட்டை போடுவதற்குத்தான் பெண்களுக்கு சங்கடம்; இப்போதுதான் முழுக்கால் ‘பேண்ட்’ வந்துவிட்டதே! இனிமேலாவது பெண்களை சேர்க்கலாமே! ‘நாம் எப்போதும் இந்துக்கள்; இந்துக்களுக்குள் பேதம் கூடாது’ என்கிறார் பகவத். நல்லது; இதற்குப் பிறகாவது, “நான் பிராமணன்; உயர்குலத்தவன்; ஏனைய இந்துக்கள் ‘சூத்திரர்கள்’; என்னுடைய ‘பிராமண’ அடையாளத்துக்காகவே பூணூல் போடுகிறேன்” என்று பார்ப்பனர்கள் பூணூல் போட்டு திரிகிறார்களே! ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகிவிட்டால் எந்த ‘இந்து’வும் பூணூல் போடக் கூடாது என்று உடம்புக்கும் ஒரு பொதுவான அடையாளத்தைக் கொண்டு வரலாமே! ‘இந்து’ என்றால் ஒருவர் விபூதியும், ஒருவர் நாமமும்,...

ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (1)

ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (1)

பறிக்கப்படும் தமிழர் நிலங்கள் அருட்தந்தை ஆ. குழந்தை இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஒரு மாத காலம் சுற்றுப் பயணம்செய்து மக்களை சந்தித்து, கள நிகழ்வுகளைக் கண்டறிந்து திரும்பியுள்ளார் அருட்தந்தை ஆ. குழந்தை. தமிழர்கள் மீதான ஒடுக்கு முறைகளை விளக்கி ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்காக அவர் எழுதிய கட்டுரை இது.   15.08.2016 அன்று மருதமடு மாதா கோவில் திருவிழாவில் மன்னார் மறை மாவட்ட பரிபாலகர் ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை அவர்கள் “நாட்டின் இப் போதையை நடைமுறைச் செயல்பாடுகளும் எழுந்துள்ள பிரச்சினைகளும் முரண்பாடான அறிக்கை களும் நம்பிக்கை தருவனவாக இல்லை. மாறாக நல்லாட்சியும் நல்லிணக்கமும் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்பதையே தெளிவாக காட்டுகின்றன. இதனால் நாம் விரக்தி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்று கூறினார். ஈழமக்களின் கோரிக்கை களையும் உரிமை களையும் சிங்கள பேரினவாத அரசு கொடுக்காமல் ஈழத்தமிழ் மக்களை விரக்தியில் தள்ளுகிறது. ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையையும்  தமிழ் இனக் குழுவின் எண்ணிக்கையை சிங்களபேரினவாத அரசு திட்டமிட்டு குறைத்து அழிக்கிறது. அது கையாளுகின்ற...

ஓணம் – தீபாவளி ஒப்பிட்டு சிந்தியுங்கள்!

பார்ப்பனர்கள் ‘தேவர்’கள், அவர்கள் கொடுங்கோன்மையை எதிர்த்தவர்கள் ‘அசுரர்’கள் – இப்படித்தான் புராணங்களுக்கு பார்ப்பனர்கள் கற்பனை வடிவம் கொடுத்தார்கள். ‘தேவ-அசுர’ப் போராட்டம் என்பது ஆரியர்-திராவிடர் போராட்டம் தான். தீபாவளி – திராவிடன் ‘நரகாசுரன்’ என்ற அசுரனை ‘மகாவிஷ்ணு’ எனும் பார்ப்பன அவதாரம் சூழ்ச்சியாக கொன்ற நாள். கொன்ற நாளை கொண்டாடி மகிழச் சொன்னார்கள் பார்ப்பனர்கள். நமது மக்களும் ‘இழிவை’ சுமந்து கொண்டாடுகிறார்கள். ஆனால், கேரள மக்கள் கொண்டாடும் ‘ஓணம்’ – இதற்கு நேர் எதிரானது. ஓணம் ‘மாவலி’ என்ற அசுரனை வரவேற்கும் பண்டிகை. கேரளத்தை ஆண்ட ‘மாவலி’ என்ற திராவிட மன்னன் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். அதை சகிக்க முடியாத தேவர்களாகிய பார்ப்பனர்கள் விஷ்ணுவிடம் முறையிட விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மாவலியை அழித்தான். எப்படி அழித்தான்? “வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு, மாவலியிடம் மூன்றடி நிலம் வேண்டும் என்று யாசகம் கேட்டான். இதற்குப் பின்னால் அடங்கியுள்ள சதியை புரிந்து கொண்ட மாவலியின் குரு...

தீபாவளி : பெரியார் எழுப்பும் வினாக்கள்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள் தனமுமான காரியம் என்று 50 ஆண்டு களாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மானவமானத்தை உணராமல் கொண்டாடி வரு கிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை. அவனது தலைமைக்கு அடிமை, மீட்சிபெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்” என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடு கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித்தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி...

‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாட மறுத்த அதே எம்.எஸ்…

எம்.எஸ். சுப்புலட்சுமியை ஏதோ சமூகத்தை மாற்ற வந்த போராளிபோல் பார்ப்பனர்கள் கொண்டாடுகிறார்கள். அவரது நூற்றாண்டு விழா தொடர்பான செய்திகள் வேறு எந்த நூற்றாண்டு கண்ட தலைவர்களுக்கும் இல்லாத அளவுக்கு விளம்பரப்படுத்தப்படுகின்றன. கல்கி சதாசிவம் என்ற பார்ப்பனரை ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த சுப்புலட்சுமி திருமணம் செய்து கொண்ட பிறகு, அவர் ‘பார்ப்பனியப் பாரம்பர்யத்தின்’ பெருமைக்குரிய குறியீடாக மாற்றப்பட்டார். அதன் காரணமாகவே தமிழ்மொழி வாழ்த்தான மனோன்மணியம் சுந்தரனாரின் ‘நீராடும் கடலுடுத்த’ பாடலை பாடித்தருமாறு அன்றைய தி.மு.க. அரசு கேட்டுக் கொண்டபோது, அதை பாட மறுத்தார். தமிழ் மொழி வாழ்த்து, ‘பார்ப்பனிய மரபுக்கு’ எதிரானதாகவே அவரும் அவருக்கு நெருக்கமான உறவுகளும் உறுதி காட்டின. பார்ப்பன பாரம்பர்யத்திலும் இந்து பழமையிலும் ஆழமான பிடிப்புள்ளதாகவே காட்டிக் கொண்ட அதே எம்.எஸ். சுப்புலட்சுமியைத் தான் வாயில் சிகரெட்டுடன் மேலே படத்தில் பார்க்கிறீர்கள். நடிகையும் பாடகியுமான டி. பாலசரசுவதியுடன் (இடது) எம்.எஸ். சுப்புலட்சுமி, 1937ஆம் ஆண்டு ஒரு புகைப்பட ஸ்டுடியோவில் எடுத்துக்கொண்ட படம் இது....

‘தீபாவளி’ புனிதமா? வணிகமா?

இந்து மதப் பண்டிகையில் ஒன்றான தீபாவளி கொண்டாட்டம் தேவையா? இந்தத் தீபாவளி கதை – தமிழர்களை அழித்தொழித்ததைக் கொண்டாடச் சொல்லும் கதை என்பது ஒன்று. இதையும் தாண்டி இதில் அடங்கியுள்ள கேடுகள் என்ன? உயிருக்கு ஆபத்தான நச்சுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசு தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்த பிஞ்சுக் கரங்கள் வெந்து, நோய்களை சுமந்து வாழ்க்கையை தொலைக் கின்றன. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு இல்லை. வெடி விபத்துக்குள்ளாகி, ஆண்-பெண் தொழிலாளர்கள் உயிர்ப்பலி ஆகிறார்கள். வணிக நிறுவனங்கள் இந்தப் பண்டிகையை நுகர்வோர் கலாச்சாரமாக்கி பொருள்களை வாங்கிக் குவிக்கத் தூண்டுகின்றனர். தள்ளுபடிகள் அறிவிக்கப்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்ன ‘மகாவிஷ்ணு’, தள்ளுபடி விலையில் மிக்சி, கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள், 4ஜி அலைபேசிகளை வாங்கச் சொன்னாரா? இது மதத்தின் புனிதமா? வர்த்தகத் தந்திரமா? புரிந்து கொள்ளுங்கள். மதம், வர்த்தக சந்தையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. எனவே மதப்பண்டிகை ‘வர்த்தகத் திருவிழா’ என்ற வடிவமெடுத்துள்ளது. இனி ‘நரகாசுரனை’ கொன்ற...

விருதுநகரில் பெரியார் பிறந்த நாள் மற்றும் கழக அறிமுக விழா பொதுக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் எழுச்சியோடு தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகரில் தந்தை பெரியாரின் 138வது பிறந்த நாள் விழா மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம். 01.10.2016 அன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கவிஞர் வினோத் முன்னிலையில்,மாவட்ட தலைவர் பாண்டி வரவேற்புரை யாற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற பொருப்பாளர் ஆசிரியர் சிவகாமி, டார்வின்தாசன், புதிய தமிழகம் மாநில மாணவரணி செயலாளர் குட்டிஜெகன், தமிழ்புலிகள் மாநில கொள்கை பரப்புச்செயலாளர் கலைவேந்தன் ஆகியோரின் உரைக்குபின் தியாகி இமானுவேல் பேரவை நிறுவனர் பூ.சந்திரபோஸ், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் கழகப் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின்...

ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (3) வளங்களை சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்கள் அருட்தந்தை ஆ. குழந்தை

ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (3) வளங்களை சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்கள் அருட்தந்தை ஆ. குழந்தை

இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஒரு மாத காலம் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து, கள நிகழ்வுகளைக் கண்டறிந்து திரும்பி யுள்ளார் அருட்தந்தை ஆ. குழந்தை. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளை விளக்கி ‘புரட்சிப் பெரியார் முழக்க’த் துக்காக அவர் எழுதிய கட்டுரை இது. (சென்ற இதழ் தொடர்ச்சி) அடிப்படை வசதி பறிப்பு தமிழர்கள் வீடுகட்ட இலங்கை பணம் ஐந்தரை இலட்சம் அரசு கொடுக்கின்றது. ஆனால் வீட்டுக் கட்டுமான பொருட்களின் விலை அதைவிட இரண்டுமடங்கு அதிகமாக இருக்கின்னறன. காலோபிளாக்ஸ் கல்லை பயன்படுத்தி தட்டிகளை வைத்து வீடு கட்டுகின்றனர். மின் விளக்குகள் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இல்லை. (எ.டு.) ஒட்டுச் சுட்டான் பிரதேசத்தில் உள்ள முத்துஐயன், கட்டுக்குளம், கனகரத்தினபுரம், தட்டயமலை முத்துவிநாயகர்புரம் ஆகிய ஊர்களில் உள்ள 350 குடும்பங்கள் மின்சாரா வசதியின்றி குப்பி (மண்ணெய்) விளக்குகளை பயன்படுத்து கின்றனர். இராணுவ முகாம்களையும் நகரங் களையும் இணைக்கும் முக்கிய சாலைகளை மட்டும் சீனா போட்டுக்...

காவிரி உரிமை: மன்னையில் கண்டன கூட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மன்னார்குடியில்  திராவிடர் விடுதலைக் கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார்  தலைமையில் நடைபெற்றது. மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன், காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க.வின் துரோகங்களை விளக்கிப் பேசினார். பெரியார் முழக்கம 03112016 இதழ்

தூத்துக்குடியில் புதிய கல்விக்கு எதிர்ப்பு

தூத்துக்குடியில் புதிய கல்விக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தூத்துக்குடியில்  வடக்கு சோட்டையன் தோப்பில் 24.9.2016 சனிக்கிழமை மாலை 6 மணியளவில்  பெரியார் 138ஆவது பிறந்த நாள் விழா கல்வியை காவி மயக்கும்  புதிய கல்வி கொள்கை 2016யை கண்டித்து பொதுக் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமை வகித்தார். வடக்கு சோட்டைன், தோப்பு தோழர்கள் கே. சந்திரசேகர், செ. செல்லத் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் ச.கா. பால சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். இந்திய பொதுவுடைமை கட்சி மாநகரச் செயலாளர் எஸ்.பி. ஞானசேகரன், இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) ஒன்றிய செயலாளர் சங்கரன், கழக மாவட்ட துணைத் தலைவர் வே. பால்ராசு, ஆதித் தமிழர் கட்சி துணைப் பொதுச் செயலாளர் க. கண்ணன், விடுதலை சிறுத்தைக் கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர்காமை. இக்பால், கழகத் தோழர் கோ. அ. குமார், வி.சி.க....

பெண்ணுரிமை பேசும் விளம்பரப் படம்

பெண்ணுரிமை பேசும் விளம்பரப் படம்

பொம்பளை பொம்பளையா இருக்கணும்’, ‘பொம்பளை மாதிரியா நடந்துக்குற?’, ‘பொம்பளைன்னா என்னனு தெரியுமா உனக்கு?’ – இப்படிப் பெண் என்கிற சொல்லே ஒரு குறியீடாகப் பிரயோகிக்கப்படுகிறது. எப்போதெல்லாம் ஒரு பெண் ‘பெண்’ணாக நடந்து கொள்ளும்படி நிர்பந்திக்கப்படுகிறார்? நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, யார்க்கும் அஞ்சாத நெறிகளைப் பெண்கள் வென்றெடுக்கும்போதெல்லாம் அது அவர்களுக்கான பண்புகள் அல்ல எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், ஆண்களிடம் இத்தகைய பண்புகள் காணப்படும்போதெல்லாம் அவர்கள் போற்றிப் புகழப்படுகிறார்கள். எப்படிச் செய்துகாட்டுவது? நம் சமூகச் சூழலில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் இதே நிலைமைதான் என்பதை நிரூபித்திருக்கிறது ஓர் அமெரிக்க விளம்பரப் படம். பிரபல அமெரிக்க நிறுவனமான பி அண்டு ஜி (ஞ&ழு) தங்களுடைய தயாரிப்பான ‘ஆல்வேஸ்’ (யடறயலள) சானிட்டரி நாப்கின்னை விளம்பரப்படுத்த ஆவணப்பட பாணியில் குறும்படம் ஒன்றைத் தயாரித்திருக்கிறது. ‘டூ திங்க்ஸ் லைக் எ கேர்ள்’ (னுடி கூhiபேள ‘டுமைந ஹ ழுசைட’) என்கிற இந்தப் படத்தில் சில விளம்பர மாடலிங் பெண்கள்,...

அறிவுத் திறனை முடக்கும் மனப்பாடக் கல்வி

அறிவுத் திறனை முடக்கும் மனப்பாடக் கல்வி

அறிவுசார்ந்த கல்வியை மறுத்து, தொழில் சார்ந்த பயிற்சி யாளராக மட்டும் இளைஞர்களை மாற்றுவதே மோடி அரசின் கல்விக் கொள்கை! இத்தகைய கல்வி முறையைக் கண்டித்து, 1954ஆம் ஆண்டிலேயே பெரியார் எழுதிய கட்டுரை இது. நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை; அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்யோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள். இவர்களும் இதற்குத்தான் முயற்சிக் கிறார்கள் என்றால், மாணவர்களும் அந்த நோக்கத்தைத் தான் எதிர்பார்த்துத் தம்முடைய பள்ளிப் படிப்பைக் கற்றுப் பட்டம் பெற வேண்டும் என்ற ஒரே...