கேரளா மதச் சடங்குகளை எதிர்த்தே வளர்ந்தது மதச் சடங்குகளுக்கு எதிரான சமூக சீர்திருத்தங்கள் தேவை பினராயி விஜயன் (கேரள முதல்வர்)
16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரையிலிருந்து – சமூக சீர்திருத்த மரபு தான் நமது மகத்தான மரபு… நாம் அத்தகைய சமூக சீர்திருத்த மரபைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம். இங்கு மேலோங்கி நிற்கும் சமூகசீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும் ஸ்ரீநாராயண குரு, சட்டம்பி சுவாமிகள் போன்றவர்களால் தலைமை தாங்கி வழி நடத்தப் பட்டவை. அதனால்தான் “ஒரு பைத்தியக்காரர்களின் கூடாரம்” என்று விவேகானந்தரால் விமர்சிக்கப் பட்ட கேரளம் மாநிலம், இன்று மத பேதமற்ற, ஜாதி பேதமற்ற சமூகமாகமுன்னேறி நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.இங்கே நமது நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், நமது மாநிலத்தின் வரலாற்றை எடுத்துக்கொண்டா லும், எந்த காலகட்டங்களில் எல்லாம் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் உருவெடுத்தனவோ அந்த கால கட்டங்களில் எல்லாம் அதற்கெதிரான ஒரு பகுதியினரும் களத்திலிறங்கி இருக்கிறார்கள். அந்த பிரிவினரில் பிற்போக்கு...