சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்

திராவிடர் விடுதலைக்கழகத்தின் முன்னணி அமைப்பு ஆகும். திராவிடர் விடுதலைக்கழகத்தின் பிரச்சாரப்பணிகளில் மக்களை ஈர்க்கும் கலை வடிவங்களை தோழர்களுக்கு பயிற்றுவித்து கலைவடிவில் பெரியாரியலை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் செயல்படுகிறது.

ஆண்டாண்டு காலமாக நாட்டின் பெரும்பான்மை மக்களை அடக்கி, அடிமைப்படுத்தி வைத்துள்ள வேத, இந்து மதம் உருவாக்கி வைத்துள்ள இன்றளவிலும் நடைமுறையில் உள்ள பிறப்பு முதல் இறப்பு வரையிலான இந்து மதத்தின் அனைத்து வகைச் சடங்குகள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் அழித்து ஒழித்து இந்து வேத வாழ்வியலுக்கு எதிரான பெரியாரியல் வாழ்வியலை நடைமுறைப் படுத்தும் பணியிலும்,ஜாதி மறுப்புப் பண்பாட்டைச் செயலாக்கும் நோக்கிலும் செயல்படுகிறது.

கலை துறையில் முற்போக்கு கருத்துகளின் மூலம் சமூக விடுதலைக்கு உதவிடும் வகையில் படைப்புகளை அளித்திடும் கலைஞர்களை பாராட்டி ஊக்குவித்து வருகிறது.

சுயமரியாதை கலை பண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளர்கள்

கொளத்தூர் அ.குமார்
தலைமை செயற்குழுஉறுப்பினர்
தொடர்பு எண் – 9842757550

You may also like...