Category: பெரியார் முழக்கம்

ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் உண்டு  ‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்!

ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் உண்டு ‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்!

‘நீட்’ தகுதித் தேர்வு என்ற வாதம் பொய்யானது. உண்மையில் அது கல்வி வணிகக் கொள்ளைக்குக் கதவைத் திறந்து விடுகிறது. நீட் தகுதியை உயர்த்துகிறதா? மருத்துவக் கல்லூரி படிப்பின் தகுதியை உயர்த்தவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் ‘நீட்’ தேர்வை நடத்துவதாக நடுவண் அரசு வாதிட்டு வருகிறது. ஆனால், உண்மையில் ‘நீட்’ மேற்குறிப்பிட்ட இரண்டு பிரச்சினைகளுக்கும் நேர் எதிராகவே செயல்படுகிறது. இயற்பியல், வேதியல் என்ற இரண்டு பாடங் களுக்கான 180 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் கூட பெறாத பூஜ்யம் பெற்ற மாணவர்கள் 2017ஆம் ஆண்டு பஞ்சாபில் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக் கிறார்கள். தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப் படும் என்ற அடிப்படையில் மேற்குறிப்பிட்ட இரண்டு பாடங்களிலும் மதிப்பெண்  குறைவுக்கு உள்ளானவர்கள் இந்த மாணவர்கள் இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 15, 2019) அதிர்ச்சியான ஆய்வுச் செய்தி ஒன்றை வெளியிட் டுள்ளது. வேதியல்,...

7 மாதம் ‘தடா’வில் சிறை சென்றவர் பெரியார் தொண்டர் ஞான. செபஸ்தியானுக்கு கழகம் இறுதி மரியாதை

7 மாதம் ‘தடா’வில் சிறை சென்றவர் பெரியார் தொண்டர் ஞான. செபஸ்தியானுக்கு கழகம் இறுதி மரியாதை

பெரியார் மருந்தியல் கல்லூரியின் தாளாளரும் முதுபெரும் பெரியார் தொண்டருமான தோழர் ஞான செபஸ்தியான் (101), 04.06.2019 அன்று திருச்சியில் முடிவெய்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இறுதி மரியாதை செலுத்தினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி,  திருச்சி புதியவன் மற்றும் கழக முன்னணிப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மறைந்த அய்யா ஞான செபஸ்தியான், விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்த ஈழ ஆதரவாளர். இ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா கொலை வழக்கில் பொய் குற்றச்சாட்டில் 7 மாதம் தடா சிறையில் இருந்தவரும் ஆவார். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

முகிலன் எங்கே?  சென்னை, எடப்பாடியில் ஆர்ப்பாட்டம்

முகிலன் எங்கே? சென்னை, எடப்பாடியில் ஆர்ப்பாட்டம்

சென்னை : சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே, பதில் சொல்! என்ற முழக்கத்துடன், கண்டன ஆர்ப்பாட்டம் 01.06.2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் நிகழ்வை ஒருங்கிணைத்தது. ஆர்ப்பாட்டம்  ஆர்.நல்லக்கண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) தலைமையில் நடைபெற்றது. அனைத்து ஜனநாயக கட்சிகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டனத்தைப் பதிவு செய்தார். எடப்பாடி : சூழலியல் போராளி தோழர் முகிலன் எங்கே? என்ற முழக்கத்துடன் முகிலன் மீட்பு கூட்டியக்கத்தின் சார்பில் 06.06.2019 அன்று சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாலை 4 மணிக்கு, ஆதித் தமிழர் பேரவையின் க.ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஜனநாயக அமைப்புகள் மற்றும் சூழலியல் தோழர்கள் கலந்து கொண்டு...

மேட்டூரில் ஒரு நாள் ‘பெரியாரியல்’ பயிற்சி வகுப்பு

மேட்டூரில் ஒரு நாள் ‘பெரியாரியல்’ பயிற்சி வகுப்பு

மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் ஜூன் 8, 2019 அன்று ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. மேட்டூரில் தொடர்ந்து மாலையில் மழை பெய்து வருவதால் பொதுக் கூட்டமாக நடக்க இருந்த நிகழ்ச்சியை பயிலரங்கமாக மாற்றிட தோழர்கள் திட்ட மிட்டார்கள். பயிற்சியில் 43 மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்றனர். மே 23, 24 தேதிகளில் காவலாண்டியூர் அய்யம் புதூரில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் 15 பேரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “ஏன் தோன்றியது திராவிட இயக்கம்?”, “திராவிடமும் தமிழ்த்  தேசியமும்” என்ற இரண்டு தலைப்பு களிலும் பேராசிரியர் சுந்தரவள்ளி, ‘பெண்ணியம் ஓர் அறிமுகம்’, ‘இந்துத்துவத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகள்’ என்ற இரண்டு தலைப்புகளிலும் வகுப்புகள் எடுத்தனர். காலை 10 மணியளவில் தொடங்கிய வகுப்புகள், இரவு 8 மணி வரை நீடித்தது. பயிற்சியாளர்கள் ஆர்வமுடன் வகுப்புகளைக் கேட்டனர். மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம், பயிற்சிக்கான ஏற்பாடுகளை...

மும்மொழித் திட்டத்தை எதிர்த்து மேட்டூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மும்மொழித் திட்டத்தை எதிர்த்து மேட்டூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மத்திய பா.ஜ.க. அரசு மும் மொழித் திட்டத்தைத் திணிப்பதை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுப் பணிகளில் தொடர்ந்து வட நாட்டவரை பணியமர்த்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் மேட்டூர் பேருந்து நிலையத்தில் 07.06.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.கோவிந்த ராஜ் (சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்) தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திவிக தலைமை செயற்குழு உறுப்பினர் சக்தி கண்டன உரையாற்றியதைத் தொடர்ந்து, முல்லை வேந்தன் கண்டன உரை யாற்றினார். தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் வட நாட்டவர்களைத் தமிழகத்தில் பணியிலமர்த்தும் சூழ்ச்சியையும் விளக்கிப் பேசினார். இறுதியாக மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் நன்றியுரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத் திற்கு மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ், கொளத்தூர், காவலாண்டியூர், நங்கவள்ளி போன்ற பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தோழர்கள்...

மேட்டூர் படிப்பகத்தில்  தருமபுரி  நாடாளுமன்ற உறுப்பினர்  டாக்டர் செந்தில்

மேட்டூர் படிப்பகத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செந்தில், எம்.பி., கழகத் தலைவர் கொளத்தூர் மணியை 07.06.2019 வெள்ளிக்கிழமை மாலை மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

பால். பிரபாகரனிடம் வழங்கிய கட்டமைப்பு நிதி

பால். பிரபாகரனிடம் வழங்கிய கட்டமைப்பு நிதி

தலைமை கழக கட்டமைப்பு நிதிக்காக தூத்துக்குடி எம்.எஸ்.எம். அரிசி கடை அதிபர் எம்.எஸ். மாலவராசு ரூ. 25,000/- (ரூபாய் இருபத்தி அய்ந்தாயிரம் மட்டும்) கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரனிடம் வழங்கினார். பாளையங்கோட்டை கே.ஆர். குளிர்பானம் நிறுவனர் பொ. பொன்ராசு – ரூ. 2000/- மேலகரம் பேரா.பழனிவேல் ரூ. 1000/-   பெரியார் முழக்கம் 13062019 இதழ்

உலக நாடுகளை ஒப்பிட்டு ஆங்கில நாளேடு கட்டுரை குழந்தைகளுக்கு மும்மொழியைத் திணிப்பது இந்தியாவில் மட்டுமே

உலக நாடுகளை ஒப்பிட்டு ஆங்கில நாளேடு கட்டுரை குழந்தைகளுக்கு மும்மொழியைத் திணிப்பது இந்தியாவில் மட்டுமே

“நடுவண் ஆட்சியின் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி வரைவுக் கொள்கை” 3 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பல மொழிகளைக் கற்கும் திறன் அபாரமாக இருக்கிறது என்றும் பல்வேறு ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துவதாகவும் கூறுகிறது. (அறிக்கை பகுதி 4.5) உண்மையில் உலக நாடுகளில் குழந்தைகளுக்கானக் கல்வி முறை – கற்றல் திறனை மேம்படுத்தவும் அவர்கள் மூளை வளர்ச்சி, உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கிறது. மேலை நாட்டுக் குழந்தைகளோடு இந்தியா போன்ற வறுமையின் பிடியில் கல்வி கற்க வரும் கிராமத்துக் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் கூடாது. இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கைகளின் அறிவிப்புகள் அவ்வப்போது வந்தாலும் அது வெற்றுக் காகிதங்களாகி விடுகிறதே தவிர, கல்வியின் தரத்தை உயர்த்தவில்லை. இது தொடர்பாக ‘இந்து’ ஆங்கில நாளேடு ஜூன் 7ஆம் தேதி வெளியிட்ட கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம் இது: மத்திய அரசாங்கம் மும்மொழிக் கொள்கையை வெளியிட்டு ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது....

திருப்பூர் மாவட்டக் கழக முடிவுகள்

திருப்பூர் மாவட்டக் கழக முடிவுகள்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் வீரபாண்டி பிரிவு பொருளாளர் துரைசாமி வீட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் காமராசர் பிறந்த நாள் விழாவையொட்டி ஜூலை 14ஆம் தேதி திருப்பூரிலும், 15ஆம் தேதி பல்லடத் திலும், 16ஆம் தேதி மடத்துக்குளம் பகுதி களிலும் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் திருப்பூர் தோழர்கள் துரைசாமி, முகில்ராசு, நீதிராசன், அகிலன், முத்து, தனபால், விஜயகுமார், அய்யப்பன், பரிமளராசன், சிவகாமி, முத்துலட்சுமி, கனல் மதி, பிரசாந்த், நஜ்முன்னிசா, பல்லடம்  கோவிந்தராஜ், சண்முகம், தேன்மொழி, மடத்துகுளம் மோகன், சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகள்

தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகள்

“தாய்மொழியில் பயில்வதன் மூலம்தான் ஒரு குழந்தை, தன் அறிவுத்திறனின் உச்சத்தை அடைய முடியும். புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, ‘குழந்தைகள், மனதளவில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதுபோல தாய்மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்’ என்கிறார். தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதிசெய்யும் பல ஆய்வுகள் உலக மெங்கும் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமான இரண்டு ஆய்வுகள் அமெரிக்கா வில் நடைபெற்றவை. அமெரிக்க அரசு, தன் நாட்டில் வசிக்கும் மொழிச் சிறுபான்மையினருக்கு எந்தக் கல்விமுறையில் பயிற்றுவிப்பது என்பதை முடிவு செய்ய 1991இல் ‘ரமிரெஸ் எட் அல்’ (சுயஅசைநண நவ யட 1991) என்ற ஆய்வை நடத்தியது. பெரும் பொருள்செலவில் எட்டு ஆண்டு காலம் நடந்த இந்த ஆய்வின் பிரதான நோக்கம், ‘அமெரிக்காவில் வசிக்கும் லத்தீன் இன மாணவர்களுக்கு எந்தக் கல்விமுறையில் பாடம் நடத்துவது? ஆங்கில வழியிலா… தாய்மொழியான ஸ்பானிஷ் வழியிலா?’ என்ற கேள்விக்கு விடை கண்டறிவதே. 2,342 மாணவர்கள் இந்த ஆய்வில்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 10ஆம் கருத்தரங்கம்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 10ஆம் கருத்தரங்கம்

‘நிமிர்வோம்’ மாத இதழின் பத்தாவது வாசகர் வட்ட சந்திப்பு 18.05.2019 அன்று சனிக்கிழமை, சென்னை மந்தைவெளி, செயின்ட் மேரிஸ் சாலை யில் அமைந்துள்ள அப்துல் கலாம் மண்டபத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கியது. நிகழ்விற்கு ந. தமிழரசன் தலைமை வகித்தார். இந் நிகழ்வில், மயிலை மனோகர் ‘பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். ‘பெரியாரின் கல்விச் சிந்தனைகள்’ குறித்து பெரியார் யுவராஜ் உரையாற்றினார். ‘இந்தியாவில் ஜாதிகள்’ என்ற புத்தகம் குறித்து துரையும், ‘நாடார் வரலாறு கருப்பா? காவியா?’ என்ற புத்தகம் குறித்து எட்வின் பிரபாகரனும் உரையாற்றினர். ‘இட ஒதுக்கீட்டின் இன்றைய நிலை’ குறித்து திவிக தலைமைக் குழு உறுப்பினர் கு.அன்பு தனசேகர் கருத்துரையாற்றினார். மேலும், சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த, திராவிட இயக்கச் சிந்தனையாளர் எழுத்தாளர் டான் அசோக், ‘இன்றைய இளைஞர்கள் திராவிட இயக்கம் குறித்து ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். இறுதியாக பிரவீன்குமார்...

தமிழ் பாட நூல்களின் இறை வாழ்த்து வேண்டும் என்று கேட்போருக்கு – சில கேள்விகள்

தமிழ் பாட நூல்களின் இறை வாழ்த்து வேண்டும் என்று கேட்போருக்கு – சில கேள்விகள்

தமிழ்நாடு அரசு 14 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிப் பாடத் திட்டத்தை மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளது. இப்போதைய கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் – இதில் முழு ஆர்வம் காட்டி, பாடத் திட்டத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் படித்து ஒப்புதல் வழங்கினார். தமிழகத்தின் மிகச் சிறந்த கல்வியாளரான அனந்தகிருட்டிணன் தலைமையில் 30 கல்வியாளர்கள் குழு இந்தப் பாடத் திட்டங்களை தயாரித்தது. முதற்கட்டமான 1, 6, 9, 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மீதமுள்ள 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. பாட நூல்கள் மிகவும் வரவேற்பைப் பெற்று நிற்கிறது. இந்த நிலையில், புதிய பாடத் திட்டத்தில் தமிழ் புத்தகங்களில் ‘இறை வாழ்த்து’ நீக்கப்பட்டுள்ளது என்றும், மொழி வாழ்த்து மட்டுமே இடம் பெற்றுள்ளது என்றும் ‘இறை பக்தர்கள்’ சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பாரதிய...

தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்கிய  ‘நீட்’ முடிவுகள்

தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்கிய ‘நீட்’ முடிவுகள்

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வை எழுதிய 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 39.56 சதவீதம். ஆனாலும் அகில இந்திய சராசரி தேர்வு விகிதமான 56.5 சதவீதத்தைவிட தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் குறைவு. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து தேர்வு எழுதிய 17,630 மாணவர்களில் 2,567 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்னர். இந்தப் பள்ளிகளிலிருந்து தேர்ச்சி பெற்றவர்கள் 4.27 சதவீதம் மட்டுமே. அரசு மற்றம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்களில் 300லிருந்து 400 மதிப்பெண் பெற்றவர்கள் 23 பேர். தமிழ் வழிப் பள்ளியில் பயின்றவர்கள் 5 பேர் மட்டும். இந்தியாவிலேயே 25 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. மொத்தம் 3250 மருத்துவக் கல்லூரிக்கான இடங்களோடு மருத்துவ சேவையில் முன்னிலையில் நிற்கும் மாநிலம் நீட் தேர்வில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. தொகுப்பு: ‘ இரா’ பெரியார்...

பெண்ணுரிமையை செயல்படுத்திய  ஒரிசா முதல்வர்

பெண்ணுரிமையை செயல்படுத்திய ஒரிசா முதல்வர்

பா.ஜ.க.வின் மிரட்டல்களை முறியடித்து, ஒரிசாவில் அய்ந்தாவது முறையாக வென்றிருக்கிறார் நவீன் பட்நாய்க். அவரது வெற்றிக்குக் காரணம் பெண்களின் மகத்தான ஆதரவுதான். கடும்புயல் சேதத்தை அண்மையில் சந்தித்த மாநிலம் ஒரிசா. பெண்களுக்கான சுயஉதவிக் குழு ஒன்றை உருவாக்கி, அதற்கு ‘சக்தி மிஷன்’ என்று பெயரிட்ட நவீன், அந்த விழாவில் பங்கேற்கும்போதுதான் தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்ததை அதிகாரிகள் அவரிடம் சொன்னார்கள். அமைதியாக அந்த செய்தியைக் கேட்டு தலையசைத்த நவீன், நிகழ்வின் இறுதியிலேயே தேர்தல் அறிவிப்பு செய்தியை அறிவித்ததோடு நிற்கவில்லை. 33 சதவீத இடங்களை பெண்களுக்கு தனது கட்சி ஒதுக்கும் என்று அறிவித்தபோது, பெண்கள் முழக்கமிட்டு இருக்கையிலிருந்து எழுந்து ஆர்ப்பரித்தார்கள். இளம் பெண்கள் சமூக வலைதளங்களில் நவீன் சொன்னதைச் செய்பவர் என்று எழுதினார்கள். 21 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏழு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கினார். அவர்களில் பெரும் பாலோர் வசதியற்றவர்கள். அரசியல் பின்புலம் இல்லாதவர்கள். இந்தியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினராக சென்றிருப்பவர். ஒரிசாவின்...

தமிழ்நாடு ‘பிராமண’ சங்கத்தில்  ‘குடுமிபிடி’

தமிழ்நாடு ‘பிராமண’ சங்கத்தில் ‘குடுமிபிடி’

‘பிராமணர்கள்’ தனியே சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கியவர் இராஜகோபாலாச்சாரி. அனைத்துக் கட்சி அமைப்புகள் அதிகார மய்யங்களில் ஊடுருவி, ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பது அவரது கருத்து. அண்மைக்காலமாக ‘பிராமணர்கள்’ சங்கம் அமைத்துக் கொண்டார்கள். நடந்து முடிந்த தேர்தலில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவையும் தெரிவித்தார்கள். ‘பிராமணர்’ சங்கம் என்பது ஜாதி சங்கம்அல்ல; அது ‘வர்ணாஸ்ரம’ சங்கம். அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா என்ற பல்வேறு ‘பிராமண’ வர்ணப் பிரிவினர் இதில் உறுப்பினராக முடியும். இப்போது ‘அவாள்’ சங்கத்துக்குள்ளே மோதல் தொடங்கியிருக்கிறது. கடந்த ஜூன் 2ஆம் தேதி பழனியில் சங்கத்தின் பொதுக் குழுவைக் கூட்டி இருக்கிறார்கள். ஏற்கனவே மாநிலத் தலைவைராக செயல்பட்ட திருவொற்றியூர் நாராயணன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறது இந்தக் குழு. தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் ரமேஷ்குமார் என்பவர் இதை ...

ஆந்திர முதல்வரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

ஆந்திர முதல்வரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

தமிழ்நாட்டில் பெரியார் தொடங்கி வைத்த வகுப்புகளுக்கு சமநீதி வழங்கும் சமூகநீதிக் கொள்கையை ஆந்திராவின் முதல்வராகியுள்ள ஒய்.எஸ். ஜெகன்மோகன் (ரெட்டி) பின்பற்றியிருக் கிறார். அவரது சமூகம், முன்னேறிய சமூகம். ஆனால், 5 துணை முதல்வர் பதவிகளை உருவாக்கி, அவற்றை சமூகரீதியாகப் பிரித்து வழங்கியிருக்கிறார். பமுலா புஷ்பா சிறிவேணி (பழங்குடி), டில்லி சுபாஷ் சந்திரபோஸ் (பிற்படுத்தப்பட்டோர்) அல்ல கலி கிருஷ்ணசிறினிவாஸ் (கப்பு சமூகம்), கே. நாராயண சாமி (பட்டியல் இனப் பிரிவு), அம்சத் பாஷா (முஸ்லிம்) ஆகியோர் துணை முதல்வர்கள். அனைவருக்கும் வருவாய்த் துறை, மருத்துவக் கல்வி, பழங்குடி நலன், வரிவிதிப்பு என்று முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி உள்துறை அமைச்சர் எனும் அதிகாரமிக்க பதவிக்கு சுச்சரிதா என்ற பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். துவக்கம் நன்றாகவே இருக்கிறது. பெரியார் முழக்கம் 13062019 இதழ்

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களைக் குறி வைத்து தனிப் பயிற்சிகள் தொடக்கம் தமிழகத்தில் காலூன்ற ‘சங்கிகள்’ தீவிரம்

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களைக் குறி வைத்து தனிப் பயிற்சிகள் தொடக்கம் தமிழகத்தில் காலூன்ற ‘சங்கிகள்’ தீவிரம்

தமிழ்நாட்டை ‘காவி’ மண்ணாக்கிட பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தீவிரத் திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கி விட்டனர். கட்சி மேலிடமும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு வலைவீச பெருமளவு பணத்தை வாரி இறைக்கத் தயாராகி விட்டது. இது குறித்தும் அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் ஓர் தொகுப்பு: தமிழகத்தில் வலிமை பெற ஆர்.எஸ்.எஸ். தயாராகிறது சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி எனும் பகுதியில் உள்ள ஏ.வி.எஸ். கல்லூரியில் வட தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 300 இளைஞர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளது. அதேபோல் தென் தமிழகத்திலும் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட அமைப்புகளில் ஆர்வம் காட்டி செயல்படும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களைத் திரட்டி, இந்தப் பயிற்சிகள் தரப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் தரமான உணவோடு 3 பேர் பயிற்சி அளிக்கிறார்கள். முதற்கட்டமாக ஆன்மீகம், யோகா, இந்து, இந்துத்துவம், தேசியம் என்று மென்மையாக மூளைச் சலவை நடக்கிறது. ‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய தேசத்தை இஸ்லாமியர்களிடமிருந்து மீட்டெடுக்க நமக்கு நாமே...

கழகத் தோழர் வி.கஜேந்திரன் – மோகனப்ரியா இணையேற்பு விழா

கழகத் தோழர் வி.கஜேந்திரன் – மோகனப்ரியா இணையேற்பு விழா

12.5.2019 அன்று மாலை 6 மணியளவில் குடியாத்தத்தில் கழகத் தோழர் வி.கஜேந்திரன் – மோகனப்ரியா – இணையேற்பு விழா  சிறப்புடன் நடந்தது கழகத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர், மருத்துவர் எழிலன் மற்றும் கழக முன்னோடிகள், அம்பேத்கரிய அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பறை இசை கலை நிகழ்ச்சிகளும் மண விழா மேடையில் அரங்கேறியது. பெரியார் முழக்கம் 06062019 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கோவை விடியல் நண்பர்கள் ரூ.   4,20,000 (27.5.2019 அன்று மாலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் விடியல் நண்பர்கள் குழுவினரைச்  சந்தித்தபோது தங்கள் நிதியுடன் திரட்டிய நிதியையும் சேர்த்து ரூ. 4,20,000த்தைக் கழகத் தலைவரிடம் வழங்கினர். இவர்கள் ஏற்கனவே ரூ. 20,000 வழங்கியுள்ளனர்.) அ.மாசிலாமணி (கீழப்பாவூர்)  ரூ.         25,000 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட சார்பில்     ரூ.   4,35,000 (ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டக் கழக கட்டமைப்பு நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி 27.05.2019 அன்று கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக ரூ.4,35,000 (நான்கு இலட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) ரூபாயை கழகத் தலைவரிடம் ஒப்படைத்தனர்) மேட்டூர் நாத்திகர் விழாவில்…...

மின்வாரியத் துறையிலும் வடநாட்டுக்காரனா?

மின்வாரியத் துறையிலும் வடநாட்டுக்காரனா?

தமிழ்நாட்டில் உதவி மின் பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 325 பேரில் 36 பேர் வடமாநிலங்களையும் வெளி மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் என்ற செய்தி தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டைச் சார்ந்த 80,000 பேர் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இதிலிருந்தே பொறியாளர்கள் பட்டம் பெற்ற இளைஞர்களிடம் வேலை இல்லாத் திண்டாட்டம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். வட மாநிலத்துக்காரர்கள் தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்புகளைப் பறிப்பதற்கான காரணம் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் தவறான கொள்கைதான். 2013ஆம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தேர்வாக வேண்டுமெனில் தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தமிழ் மொழிக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இந்த விதியை 2016ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி திருத்தி தமிழக அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம். தமிழக அலுவல் மொழியான தமிழை வேலைக்குச் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளில் கற்றுக் கொள்ளலாம்...

அமைச்சரவையிலும் ‘அவாள்’ ஆதிக்கம்

அமைச்சரவையிலும் ‘அவாள்’ ஆதிக்கம்

பிரதமர் மோடி இரண்டாம் முறையாக நேற்று பதவியேற்ற நிலையில் அவரோடு புதிய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். தேர்தல் பிரச்சாரங்களில் தான், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்பதால் தன் மீது பலரும் பொறாமை பிடித்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார் மோடி. ஆனால் அவரது அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட உயர் சாதியினரே அதிகம் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.  அதன்படி பதவியேற்ற 58 அமைச்சர்களில் உயர் சாதியினர் – 32;  பிற்பட்ட வகுப்பினர் -13; பட்டியல் இனத்தவர் – 6; பழங்குடியினர் – 4; சீக்கியர் – 2; இஸ்லாமியர் – 1. மக்கள் தொகையில் சுமார் 50-60ரூ உள்ள பிற்பட்ட வகுப்பினருக்கு 13 அமைச்சர்கள், சுமார் 10-15ரூ உள்ள உயர்சாதியினருக்கு 32 அமைச்சர்கள், இட ஒதுக்கீடு இருப்பதால் எம்.பி.க்களான தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 10 அமைச்சர்கள் (இட ஒதுக்கீடு இல்லை எனில்!), சுமார் 14ரூ உள்ள இஸ்லாமியருக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவிதான் கிடைத்திருக்கிறது. நிதித்...

பார்ப்பன ஆதிக்கத்தில் புதிய நாடாளுமன்றம்

பார்ப்பன ஆதிக்கத்தில் புதிய நாடாளுமன்றம்

17ஆவது நாடாளுமன்றத்தில் பார்ப்பன உயர்ஜாதியைச் சார்ந்தவர்கள் 232பேர். மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்டோரில் 120 பேர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள். அரசியல் சட்டப்படி பட்டியல் இன / பழங்குடிப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் பட்டியல் இனப் பிரிவில் 86 உறுப்பினர்களும் பழங்குடிப் பிரிவில் 52 பேரும் இடம் பெற்றுள்ளனர். மத அடிப்படையில் மைனாரிட்டிகள் 52 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற 38 இடங்களில் வெற்றி பெற்றவர்களில் 30 பேர் பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட் டவர், தாழ்த்தப்பட்டவர் 7 பேர், பார்ப்பனர் ஒருவர் (கோவை நாடாளுமன்ற உறுப்பினர்). ஆனால் மற்ற மற்ற மாநிலங்களின் நிலை என்ன? மொத்தம் 542 உறுப்பினர்களில் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்ஜாதியினரின் எண்ணிக்கை 232, பிற்படுத்தப்பட்டவர் 120, தாழ்த்தப்பட்டவர் 86, மலைவாழ்மக்கள் 52 பேர், சிறுபான்மையினர் 52 பேர். தெலுங்கானாவை எடுத்துக்கொண்டால் மொத்தம் 17 பேர்களில் பார்ப்பனர்...

காந்தியை கொலை செய்ய 9 முறை பார்ப்பனர்கள் முயற்சி (3) கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே!

காந்தியை கொலை செய்ய 9 முறை பார்ப்பனர்கள் முயற்சி (3) கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே!

“இதுவரை கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு  சீக்கிரம் இறந்து விட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார் காந்தி. கோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும்,  அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்கவில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா? ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் – இந்துத்துவம் என்ற வலைப் பின்னலிலிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா? காந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப் பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங் களும் இந்துத்துவா சக்திகளும் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றன. அது குறித்த வரலாற்று உண்மைகளை ஓரளவு இந்தக் கட்டுரையில்...

இனமும் மொழியும் அடையாளங்கள்தான் கோட்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும் தொல். திருமாவளவன்

இனமும் மொழியும் அடையாளங்கள்தான் கோட்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும் தொல். திருமாவளவன்

இனத் தூய்மைப் பேசுகிறவன் – ஜாதித் தூய்மை பேசுகிறான்; ஜாதித் தூய்மை பேசுகிற சுத்தத் தமிழன்தான் இந்துத்துவத்துக்கும் ஜாதி வெறிக்கும் துணை போகிறான் என்று குறிப்பிட்டார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன். பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரின் இந்தத் தெளிவான ஆழமான பேச்சு சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. உரையின் முக்கியத்துவம் கருதி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. பெரியாரைப் போய் அவர் தமிழர் இல்லை என்று சில அரைவேக்காடுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தந்தை பெரியார் தமிழர் அல்ல கன்னடர் என்று அவர்கள் சொல்வதை அங்கீகரித்தால் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையே புறந்தள்ள வேண்டிய நிலை வரும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழ் உணர்வு உள்ளது. தமிழ் உணர்வு என்பது வேறு, இனத்தூய்மை என்பது வேறு. தமிழனுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பது இன உரிமை. தமிழனின் தாய் மொழியான தமிழுக்கு மரியாதை வேண்டும்...

மருத்துவர் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி

மருத்துவர் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி

அகில இந்திய அடிப்படையில் மருத்துவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை இரத்து செய்தது பா.ஜ.க. ஆட்சி. அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைப்பது சரியல்ல. அவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும். மத்திய அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள செய்தி. அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் ஏறத்தாழ 4600 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்கள் அகில இந்தியத் தொகுப்பில் உள்ளன. பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, இந்த இடங்களில் எஸ்.சி, எஸ்.டி  பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை. பல முறை இது குறித்த கோரிக்கைகளை முன்வைத்த பிறகும், மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு...

கழக இளைஞர்கள் தீச்சட்டி ஏந்தி அணிவகுத்து வந்தனர் மேட்டூரில் கொட்டும் மழையில் நாத்திகர் பேரணி

கழக இளைஞர்கள் தீச்சட்டி ஏந்தி அணிவகுத்து வந்தனர் மேட்டூரில் கொட்டும் மழையில் நாத்திகர் பேரணி

மே 25, 2019 அன்று மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா மற்றும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவும் எழுச்சியுடன் நடை பெற்றது.  நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, சென்னையிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். உயர்நீதிமன்றம் வழியாக உத்தரவு பெற்று நடந்த நாத்திகர் பேரணி மேட்டூர் கேம்ப் பகுதியில் தொடங்கி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தத்தில் முடிவடைந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேரணியை மாலை 4 மணியளவில் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணி 2 மணி நேரம் நடந்தது. பேரணி வரும்போதே மழை கொட்டத் தொடங்கிவிட்டது. கொட்டும் மழையில் ஒரு மணி நேரம் தோழர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களை எழுப்பி வந்தனர். பெண்களும் ஆண்களுமாக இளைஞர் கூட்டம். பேரணிக்காகவே தயாரிக்கப்பட்ட ‘டி சட்டைகளை’ அணிந்து முழக்கமிட்டு வந்த காட்சியை வீதியின் இருபுறங்களிலும் மக்கள் திரளாகக் கூடி நின்று பார்த்தனர்....

கொளத்தூர் அய்யம்புதூரில் கழகம் நடத்திய பயிற்சி முகாம்

கொளத்தூர் அய்யம்புதூரில் கழகம் நடத்திய பயிற்சி முகாம்

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கொளத்தூர் ஒன்றியம் அய்யம்புதூர் கிராமத்தில் திராவிடர் விடுதலைக் கழக பெரியாரியல் பயிற்சிமுகாம், மே 23, 24 தேதிகளில் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. இதுவரை பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்காத புதிய இளைஞர் களுக்கான இந்த முகாமில் 20 பெண்கள் உள்பட 45 தோழர்கள் பங்கேற்றனர். காவலாண்டியூர் ஒன்றியக் கழகம் பயிற்சி முகாமை மாவட்டக் கழகம் சார்பில் முன்னின்று நடத்தியது. மே 23 அன்று மாலை 9.30 மணியளவில் முகாமை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தொடங்கி வைத்தார். முதல் வகுப்பாக ‘பெரியார் ஒரு அறிமுகம்’ என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வகுப்பு எடுத்தார்.  மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணியளவில் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், ‘புராணம் – மூட நம்பிக்கைகள்’ என்ற தலைப்பில்  பேசினார். பிற்பகல் 4...

குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். பல்வேறு முயற்சிகளை எடுத்தது (2) கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே!

குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். பல்வேறு முயற்சிகளை எடுத்தது (2) கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே!

1949 நவம்பர் 15ஆம் தேதி தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது. அம்பாலா பொதுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் தூக்கிலிடப்படும் நாளன்று அதிகாலையில் இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே, மதன்லால், கார்கரே மூவரும் நேரில் சந்திக்க வந்தனர். அனைவரும் ஒன்றாக சேர்ந்து ‘பகவத் கீதை’யைப் படித்தார்கள். கோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும்,  அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்கவில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா? ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் – இந்துத்துவம் என்ற வலைப் பின்னலி லிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா? காந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப் பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங் களும் இந்துத்துவா...

விஜயேந்திரன்-குருமூர்த்தி மோதல் வலுக்கிறது  காஞ்சி சங்கர மடத்தில் கலகம் ஜுனியர் விகடன் தரும் தகவல்கள்

விஜயேந்திரன்-குருமூர்த்தி மோதல் வலுக்கிறது காஞ்சி சங்கர மடத்தில் கலகம் ஜுனியர் விகடன் தரும் தகவல்கள்

தான் உயிருடன் இருந்தபோது, தன்னுடைய சொந்த தம்பி இராமகிருஷ்ணனையும் மடத்தின் காரியதரிசியாக இருந்த காலடி விஸ்வநாதனையும் பல்வேறு காரணங்களால் ஜெயேந்திரர் வெளியேற்றினார். இந்த இருவரும் தற்போது மீண்டும் மடத்துக்குள் கொண்டு வரப்பட்டு விட்டனர். பார்ப்பன அதிகார மய்யமான காஞ்சி சங்கர மடத்தின் சொத்துக்களை சுருட்டுவதில் ‘அவாள்’களுக்குள் கடும் போர் நடக்கும் செய்திகள் அம்பலமாகியுள்ளன. இது குறித்து ‘ஜூனியர் விகடன் (22.5.2019) வெளியிட் டுள்ள விரிவான கட்டுரை ஆன்மிகம்… அரசியல்… அதிகாரம் என்று இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வல்லமை படைத்தது காஞ்சி காமகோடி பீடம். குறிப்பாக மடத்தின் பீடாதிபதி, பிரதம மந்திரிக்கே ஆலோசனை சொல்லும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். இன்றைக்கு அந்த ‘பவர் சென்டர்’, பிரச்னைகளின் சென்டராக மாறியிருக்கிறது. “மத்தியிலும் மாநிலத்திலும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சிலர், மடத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் தீவிரமாக ஈடுபட் டுள்ளார்கள். மடத்தின் பீடாதிபதிக்குப் பல்வேறு வழிகளில் இவர்கள் நெருக்கடி கொடுத்து, ஏகப்பட்ட காரியங்களைச்...

பார்ப்பன – மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்

பார்ப்பன – மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்

தனிப் பெரும்பான்மையுடன் – மீண்டும் பிரதமராகவிருக்கும் மோடி – இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது என்று தனது வெற்றியைக் குறிப்பிட்டுள்ளார். ‘மோடியே – இந்தியா’ என்ற சர்வாதிகாரத்தின்  வெளிப்பாடு இது. மோடியின் கூற்றுப்படி மோடியைப் புறக்கணித்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இந்தியாவில் இல்லை என்றே நாம் முடிவுக்கு வர வேண்டி யிருக்கிறது. வடநாட்டுக்கும் தென்னகத்துக்குமிடையே உள்ள முரண்பாடுகளை இந்தத் தேர்தல் முடிவுகள் கூர்மைப்படுத்தியிருக்கிறது என்றே கூறவேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக முன்னனி இந்தியா முழுமைக்கும் 43.86 சதவீதமும், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி 25.81 சதவீத வாக்குகளையும் இரண்டு தேசிய கூட்டணிகளிலும் இடம் பெறாத மாநிலக் கட்சிகள் 30.33 சதவித வாக்கு களையும்  பெற்றிருக்கின்றன. அதிகாரத்தைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான –இரண்டு அணிகளும் 56.14 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர். இந்தியா வின் தேர்தல் அமைப்பு முறையில் வாக்கு களின் சதவீதங்களுக்கு ஏற்ப இடங்கள்...

தலைமைக் கழக நிதி

தலைமைக் கழக நிதி

பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றிய திவிக சார்பில் கழக கட்டமைப்புநிதி ரூ20000  கழகத் தலைவரிடம் தஞ்சைமாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், அறிவுச்செல்வன் பெரியசாமி, அரும்புச்செல்வன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர். பெரியார் முழக்கம் 23052019 இதழ்

மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் மாநில சுயாட்சி  – தென்மாநில கூட்டமைப்புக்கான குரலே முதன்மை பெற வேண்டும்

மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் மாநில சுயாட்சி – தென்மாநில கூட்டமைப்புக்கான குரலே முதன்மை பெற வேண்டும்

5 ஆண்டு  மோடி ஆட்சி வட மாநிலங் களுக்கும்  தென் மாநிலங்களுக்கும் இடை யிலான முரண்பாட்டை கூர்மையாக்கி யுள்ளது. அடுத்து ஆட்சியை பா.ஜ.க. அமைத்தாலும் மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் ஆதரவோடு அமைத்தாலும் “மாநில சுயாட்சி மற்றும் தென் மாநிலங் களுக்கான கூட்டமைப்பு” என்ற முழக்கத்தை முன்னெடுத்தாக வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. தென் மாநிலங்களின் இந்த கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமையும் என்பதை சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திட்டவட்டமாகப் பதிவு செய்தார் அதன் தலைவரான மாநிலங்களவை உறுப்பினர் திரு. என்.கே.சிங். 2017ஆம் ஆண்டின் இறுதியில் ஒன்றிய அரசால் 15ஆவது நிதிக்குழு அமைக்கப்பட்டு, அரசாணை யில் அதன் பணி வரன் முறைகள் (Terms of Reference) வழங்கப்பட்ட உடனேயே அது தென் மாநிலங்களில் மிகப்பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது . அதற்கு முக்கியக் காரணம், 2020-21 முதல் 2024-25...

அடுக்கடுக்கான வரலாற்றுச் சான்றுகள் கோட்சே ‘இந்து’ பயங்கரவாதிதான்!

அடுக்கடுக்கான வரலாற்றுச் சான்றுகள் கோட்சே ‘இந்து’ பயங்கரவாதிதான்!

 “காந்தியாரை  இன்று மாலை 5.20 மணிக்கு ஒரு இந்து சுட்டுக் கொன்றான்” என்று, சுட்டவன் இந்து என்பதை வலியுறுத்தி வானொலியில் செய்தி அறிவிக்கப்பட்டது. கோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும்,  அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்கவில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா? ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் – இந்துத்துவம் என்ற வலைப் பின்னலி லிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா? காந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப்பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங்களும் இந்துத்துவா சக்திகளும் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றன. அது குறித்த வரலாற்று உண்மைகளை ஓரளவு இந்தக் கட்டுரையில் விளக்குகிறது. 1948 ஜனவரி 30, பார்ப்பன கொலைவெறிக்கு காந்தியார் பலியான...

“யாகம் வளர்த்தால் மழைபெய்யுமா?”

“யாகம் வளர்த்தால் மழைபெய்யுமா?”

சார்லஸ் டார்வின் தன்னுடைய முதுமையில் ஒரு நாயை வளர்த்தார். அது எப்போதுமே டார்வினுடனேயே இருக்குமாம். டார்வின் படித்துக் கொண்டிருக்கும்போது அவர் அறையின் கர்ட்டன் (திரை) காற்றில் அசைந்ததாம். நாய் குடுகுடுவென்று ஓடிப்போய், யாரது, கர்ட்டனை அசைக்கிறது?!” என்று ஆராய போயிற்றாம். டார்வின் நினைத்தார், “நாய்களுக்குத் தெரியாது, கர்ட்டன் காற்றில் இயல்பாகவே அசையும்” என்று. அதன் அறிவிற்கு எட்டியதெல்லாம் “ஏதாவது நிகழ்ந்தால், நிகழ்த்துபவர் யாரோ ஒருவர் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார்” என்பது மட்டுமே. யாருமே இல்லாமல், இயற்கையின் சக்திகளால் மட்டுமே பலதும் நடக்கும் என்று புரிந்து கொள்ளும் நுணுக்கமான அறிவு நாய்களுக்கு வாய்க்கவில்லை. சிலர் டார்வின் மாதிரி யோசிப்பார்கள், வேறு சிலரோ… மருத்துவர் சாலினி டுவிட்டரில் பதிவு பெரியார் முழக்கம் 23052019 இதழ்

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்று ஆவணம்

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்று ஆவணம்

வடவாரிய பார்ப்பன வந்தேறிகளின் சூழ்ச்சியால் திராவிட இன மக்களாகிய மண்ணின் மைந்தர்களுக்கு இடையே நால்வருண சாதி அடுக்குகளை உருவாக்கி, தீண்டாமையை நிலைப்படுத்தி விட்டனர். இந்த மனிதகுல விரோதக் கட்டமைப்பைச் சீர்குலைத்து விடாது மேலும் கெட்டிப்படுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுவிட்டது சூது மதியினரால்! பிறப்பின் காரணமாக மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வையும், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதத்தையும் கற்பித்துக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை எதிர்த்து மானுடப் பற்றாளரான பெரியார், சாதி-தீண்டாமை ஒழிப்புக்கான பிரச்சாரம் – போராட்டம் என நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த வருண பேதம் கற்பிக்கும் சாஸ்திர-சம்பிரதாயங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்துவேன் என்று போராட்ட அழைப்பை விடுத்து, இன இழிவு நீங்கிட, தீண்டாமை ஒழிந்திடப் போராட்டக் களம் நோக்கி வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்தார் பெரியார்! பெரியாரின் போர்க் குரல் கேட்டு, சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து...

பொன்பரப்பி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்தும், பொன்பரப்பியில் தடுக்கப்பட்ட வாக்குப்பதிவினை மீண்டும் நடத்த வலியுறுத்தியும், இந்து முன்னணி மற்றும் பா.ம.க.வைச் சேர்ந்த சாதிய வன்முறையாளர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை வழங்க வலியுறுத்தியும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 23.4.2019 அன்று சென்னையில் நடத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் அன்பு தனசேகரன், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன் மற்றும் பரந்தாமன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் உலகநாதன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெய்வமணி, தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கண்டன உரை...

அய்.நா. மனித உரிமை ஆணையத்திடம் தொடர்பைத் துண்டித்த நடுவண் பா.ஜ.க. ஆட்சி

அய்.நா. மனித உரிமை ஆணையத்திடம் தொடர்பைத் துண்டித்த நடுவண் பா.ஜ.க. ஆட்சி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்தி வரும் மனித உரிமை மீறல்களை அறிக்கையாக மனித உரிமைக் கவுன்சில் அய்.நா.விடம் சமர்ப்பித்துள்ளதால் ஆத்திரமடைந்த நடுவண் ஆட்சி, இனி அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்துடன் இந்தியாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்திருக்கிறது. அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை வெளி வந்த அதே நாளில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு அரசு சாராத அமைப்புகள், இந்திய இராணுவம் பொது மக்கள் மீது நடத்திய சித்திரவதை படுகொலைகளை விளக்கும் அறிக்கையையும் வெளியிட்டது. 4 குழந்தைகளை இராணுவம் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவமும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த அரசு சாரா அமைப்பின் அறிக்கையை அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து மனித உரிமை மீறல் தொடர்பாக இந்த அறிக்கை வெளி வந்த அதே நாளில் அய்.நா. மனித உரிமை ஆணையமும் அறிக்கை வெளியிட்டது. இது நடுவண் ஆட்சிக்கு கடும் ஆத்திரத்தை உருவாக்கியுள்ளது. ...

தேர்தல் ஆணையத்தின் முகத்திரை கிழிகிறது!

தேர்தல் ஆணையத்தின் முகத்திரை கிழிகிறது!

உலகின் மிகப் பெரிய ‘ஜனநாயக நாடு’ என்று கூறப்படும் இந்தியாவில் பொதுத் தேர்தலை நடத்தும் அதிகாரம் படைத்த ‘தேர்தல் ஆணையம்’ அதன் நம்பகத் தன்மையை இழந்து நிற்கிறது. இதுவரை நடந்த எந்த பொதுத் தேர்தலிலும் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு சார்பாக நடந்து கொண்டதே இல்லை. ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாகவே மாறிப்போய் செயல்பட்டார் தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா. இராணுவத்தின் தாக்குதலை ஆட்சியின் சாதனையாகப் பேசக் கூடாது என்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை பகிரங்கமாக மீறினார் மோடி. நாட்டின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய பிரதமரே இப்படி தரம் தாழ்ந்து செயல்பட்டார். தேர்தல் ஆணையத்தின் ஒரு சார்பு நிலையை மூன்று பேர் கொண்ட ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்த அசோக் லாவசா ஏற்கவில்லை. தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளை மீறிய மோடியின் பேச்சு, விதி மீறல்களுக்குள் வராது என்று தலைமை தேர்தல் அதிகாரி...

ஈழத் தமிழர் பிரச்சினை: இலங்கை – இந்திய அரசுகளின் துரோகம்

ஈழத் தமிழர் பிரச்சினை: இலங்கை – இந்திய அரசுகளின் துரோகம்

முள்ளி வாய்க்கால் இனப் படுகொலை நடந்து 10 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அய்.நா.வின் தலையீட்டுக்குப் பிறகும் இலங்கை அரசு தமிழர் உரிமைக்கான எந்த முன்னெடுப்பையும் செய்ய வில்லை. இப்போது என்ன நடக்கிறது என்பதை விளக்கி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை: இந்திய வான்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்டு அவரது புகைப்படமும் காணொளியும் வெளிவந்தபோது ஜெனீவா உடன்படிக்கையின்படி போர் கைதிகளின் புகைப்படத்தை வெளியிடக் கூடாதென்று இந்தியா தெரிவித்தது. மேலும் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இதுபற்றி முறையிடப் போவதாகவும் சொன்னது. அதே சர்வதேச சட்டவிதிகள் மீறப் பட்டே ஈழத்து இசைப்பிரியாக்களும் பாலசந்திரன் களும் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டனர். தன்னாட்டு வீரர்கள் பொருட்டு ஜெனீவா மன்றத்தில் முறையிடப் போவதாக சொல்லும் இந்திய அரசு, ஈழத் தமிழர் களின் பொருட்டோ குற்றமிழைத்த இலங்கையை ஆதரித்து நிற்கிறது. அபிநந்தன் வர்த்தமான்களுக்கு ஒரு நீதி? பாலசந்திரன்களுக்கு ஒரு...

வெளிவந்து விட்டது ‘நிமிர்வோம்’ –  மே 2019 இதழ்

வெளிவந்து விட்டது ‘நிமிர்வோம்’ – மே 2019 இதழ்

தலையங்கம் – வடநாட்டார் ஆதிக்கம் பெரியார் தமிழ்நாட்டுக்கு எதிரியா? ‘அய்.எஸ்.அய்.எஸ்.’ – ‘இந்து சேனை’களின் வெடிகுண்டு கலாச்சாரம் இந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகிரி இராமன் அயோத்தியில் பிறந்தானா? செம்மொழித் தமிழ் மீது நஞ்சுக் கக்கும் நாகசாமி (2) காதலில் கவனம் தேவை! லெமூரியா (குமரிக் கண்டம்) என்பது ஒரு கற்பனை! மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 16052019 இதழ்

மே 25இல் மேட்டூரில் நாத்திகர் விழா: சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி

மே 25இல் மேட்டூரில் நாத்திகர் விழா: சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி

நாத்திகர் பேரணி தொடர்பாகத் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கில், பேரணி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சென்னை உயர்நீதிமன்றத்தில் நாத்திகர் விழாவுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். ஏப்ரல் மாதம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சேலம் மேட்டூரில் நாத்திகர் பேரணி மற்றும் விழா நடத்தவிருப்பதாகவும், அதற்கு அனுமதி கோரி மார்ச் மாதம் கருமலைக் கூடல் காவல் நிலையத்தில் மனு அளித்ததாகவும், கருமலைக்கூடல் காவல் நிலைய ஆய்வாளர் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டுமென்று கோரித் தங்களது மனுவை நிராகரித்தார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்திருப்பதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி சட்டத்துக்கு உட்பட்டு முடிவெடுக்க வேண்டுமென்று கூறி...

மேடை தோறும் திராவிடர் இயக்கக் கருத்தை முழங்கிய கோவை இராமநாதன் குரல் அடங்கியது

மேடை தோறும் திராவிடர் இயக்கக் கருத்தை முழங்கிய கோவை இராமநாதன் குரல் அடங்கியது

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல் மிக்க பேச்சாளரும், திராவிடர் இயக்கக் கருத்தியலை தனது உரையின் உயிர் மூச்சாகக் கொண்டு பேசியவரும் பெரியார் இயக்கக் கழக மேடைகளில் தொடர்ந்து பங்கேற்றுப் பேசிய வருமான கோவை இராமநாதன் (87) மே 11ஆம் தேதி கோவையில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய புலவர் குழந்தை நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுஅவர் நிகழ்த்திய நீண்ட உரையும், பழனியில் தமிழ் வழிபாட்டை ஆதரித்து பெரியார் இயக்க மேடையில் அவர் ஆற்றிய உரையும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவையாகும். 1977, 1984ஆம் ஆண்டுகளில் தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும், 1996இல் நாடாளுமன்ற உறுப் பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றம் முன்னணியினர் அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களுடன் மே  11 அன்று மாலை அவரது இல்லம் சென்று குடும்பத் துக்கு ஆறுதல் கூறினார். கடந்த 2018ஆம்...

தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? (2) பாவலர் தமிழேந்தி

தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? (2) பாவலர் தமிழேந்தி

“நா. கதிரைவேற்பிள்ளை என்கிற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவுக் கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடம் கண்டேன் என்று சொன்னதற்கு, உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி, என்னிடம் வாங்கிக் குடித்தப் பாலை விரலைவிட்டு வாந்தி எடுத்துவிட்டார்.”                                – பெரியார் பாவலர் தமிழேந்தி தொகுத்த ‘திராவிடம், பெரியாரியம் இன்றும் தேவையே’ நூலில் ‘பெரியாரும் தமிழ் இலக்கியமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ அவர் நினைவாகப் பதிவு செய்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி) மதுரையை எரிக்கக் கண்ணகிக்குப் பயன்பட்ட தீக்கடவுள்கூடப் பார்ப்பனக் கோலத்தில் (பால்புரை வெள் எயிற்றுப் பார்ப்பான் கோலத்து) தோன்றித்தான் புகார் நகரத்தை எரித்ததாக இளங்கோவடிகள் இசைக்கின்றார். இவ்வாறு, விரிவாக இலக்கியங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டி எழுதுவதற்கான காரணம் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று காய்ந்த பெரியாரின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குத்தான். தமிழை...

கழகத் தலைமைக் கழகத்தைத் தக்கவைக்க ஆர்வத்துடன் நிதி குவிக்கும் தோழர்கள்

கழகத் தலைமைக் கழகத்தைத் தக்கவைக்க ஆர்வத்துடன் நிதி குவிக்கும் தோழர்கள்

கழகத் தோழர்களே! தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்பு நிதி திரட்டும் களப் பணியை தொடங்கி விட்டீர்களா? அதற்கான துண்டறிக்கை – நன்கொடை ரசீதுகள் – தோழர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைச் சந்திக்க வருகிறார்கள். தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த ரூ.20,000/- நன்கொடை திரட்டும் இயக்கத்தில் தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது நமக்கு நல்ல நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறிவித்த சில நாட்களிலே சில தோழர்கள் ரூ.20,000/- நன்கொடையை வழங்கியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். கடந்த இதழ்த் (9.5.2019) தொடர்ச்சி: திருவெறும்பூர் அரசெழிலன்   -ரூ.   20,000/- (மாதவன் மென்பொருள் அங்காடி) டாக்டர் சக்திராஜன்     –      ரூ.   20,000/- டாக்டர் நவீன்    –      ரூ.   10,000/- டாக்டர் சிவபாலன்      –      ரூ.  5,000/- டாக்டர் மோகன்ராஜ்    –      ரூ.   3,000/- திருநாவுக்கரசு    –      ரூ.   5,000/- செம்மொழி...

எர்ணாகுளம் நாத்திகர் மாநாட்டில்  கழகத் தலைவர்  கொளத்தூர் மணி பேச்சு மத உணர்வாளர்கள் – மதவெறி வன்முறையைக் கண்டித்துக் குரல் எழுப்ப முன்வரவேண்டும்

எர்ணாகுளம் நாத்திகர் மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு மத உணர்வாளர்கள் – மதவெறி வன்முறையைக் கண்டித்துக் குரல் எழுப்ப முன்வரவேண்டும்

11-5-2019அன்று எர்ணாகுளத்தில் ‘யுக்திவாத பாடன கேந்திரத்’தின்  மாநில மாநாடு 2019, மே மாதம், 11,12 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இது கடவுள் – மதம் – ஜாதியை மறுக்கும் நாத்திக அமைப்பு. முதல் நாள் நிகழ்ச்சிகள் அமைப்பின் தலைவர் ஜார்ஜ் தலைமையில் தொடங்கின. தொடக்க உரையைப் பேராசிரியர் கே.எஸ். பகவான் ஆற்றினார். அதனைத் தொடர்ந்து நரேந்திர தபோல்கர் உருவாக்கிய ‘மகாராஷ்டிர அந்தாஷ்ரத்த நிர்மூலன் சமிதி’க்கு, 2018ஆம் ஆண்டின் பகுத்தறிவுத் துறையில் ஆற்றிய சிறந்த பணிகளுக்கான விருது வழங்கப் பட்டது. பரிசு பெற்ற அமைப்பினை வாழ்த்தியும், தமிழ்நாட்டில் பெரியாரின் பணிகளை விளக்கியும், தோழர் பாரூக்கைக் கொன்றொழித்த இஸ்லாமிய மதவெறிப் போக்கு தமிழகத்தில் உருவாகியுள்ள சூழலை விளக்கியும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசினார். சிறப்பு விருந்தினர்களுக்கு ‘ரிவோல்ட்’ ஆங்கில இதழ் தொகுப்புகளை வழங்கினார். கேரளா, எர்ணாகுளம் பகுத்தறிவாளர் கழகம் நடத்திய தேசிய மாநாடு மற்றும் சரவாகம் 11-05-2019 அன்று நடைபெற்றது. அதில் கழகத்...

வேத கலாச்சாரத்துக்கு உயிரூட்டும் தமிழக அரசு

வேத கலாச்சாரத்துக்கு உயிரூட்டும் தமிழக அரசு

தமிழ்நாட்டில் மழை பெய்வதற்காக யாகங்கள் – வருண பகவானை வேண்டும் வேதச் சடங்குகள் – மழை பெய்விப்பதற்கான அமிர்த வர்ஷினி இசை நிகழ்ச்சிகளை நடத்துமாறு அற நிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.  சிண்டைத் தட்டி விட்டுக் கொண்டு பூணுலை உருவிக் கொண்டு புரோகிதர் கூட்டம் ஒவ்வொரு கோயிலாக யாகம் நடத்தக் கிளம்பிவிட்டது. மழை கொட்டப் போகிறதோ இல்லையோ, புரோகிதக் கூட்டத்துக்கு வருமானம் மழையாகக் கொட்டத் தொடங்கிவிட்டது. வேத காலத்தில் பார்ப்பனர்கள் ‘வானுலக தேவர்களை’ மகிழ்விக்கிறோம் என்று மக்களை ஏமாற்றி உருவாக்கிய வேத சடங்குகள் 2019ஆம் ஆண்டிலும் மதச்சார்பற்ற ஆட்சி நடத்த வேண்டிய அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு அதற்கு அரசு நிதியே செலவிடப்படுகிறது என்றால் நாட்டின் பண்பாட்டு – அரசியல் ஆதிக்கம் இப்போதும் பூதேவர்களாகிய பார்ப்பனர்களிடமே இருக்கிறது என்பதைப் புரிந்து  கொள்ள முடியும். ‘தமிழர் கலாச்சாரம்’, ‘தமிழர் பண்பாடு’ – தமிழர் அடை யாளத்தைக் காப்பாற்ற  வந்திருக்கிறோம் என்று கிளம்பி மேடைதோறும் ‘வீர வசனங்களைப்’ பேசி...

7 தமிழர் விடுதலை – நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி – இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு உச்சநீதிமன்றத்தின் பாராட்டத்தக்கத் தீர்ப்புகள்

7 தமிழர் விடுதலை – நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி – இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு உச்சநீதிமன்றத்தின் பாராட்டத்தக்கத் தீர்ப்புகள்

உச்சநீதிமன்றம் அண்மையில் வெளியிட்டுள்ள இரண்டு தீர்ப்புகளும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும். முதலில் 7 தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் குறிப்பிட வேண்டும். இராஜீவ் கொலையில் நேரடி தொடர்பில்லாத மறைமுக உதவி செய்ததார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் என்ற ஏழு தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார்கள். இதில் 3 பேர் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக தண்டனைக் குறைப்புக்கு உள்ளானோர். இப்போது அனைவருமே தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகள். சிறைவாசிகளை தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்யும் உரிமையை அரசியல் சட்டம் மாநில அரசுகளுக்கு 161ஆவது விதியின் கீழ் வழங்கியுள்ளது. இவர்கள் சி.பி.அய். என்ற மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உள்ளானவர்கள் என்பதால் மாநில அரசு இவர்களை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய காங்கிரஸ் ஆட்சி கூறி வந்தது....

மே 25, 27இல் மேட்டூர் – திருப்பூரில் கழக தோழர்கள் கட்டமைப்பு நிதி வழங்குகிறார்கள்

மே 25, 27இல் மேட்டூர் – திருப்பூரில் கழக தோழர்கள் கட்டமைப்பு நிதி வழங்குகிறார்கள்

கழகத் தோழர்கள், களப்பணி யாளர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்ச நன்கொடை ரூ.20000/- என்று கழகம் அறிவித்தத் திட்டத்தைத் தோழர்கள் உற்சாகத்துடன் செயல்படுத்தி வருகிறார்கள். கழகத் தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான இந்த நிதி திரட்டும் இயக்கத்தின் முதல் கட்டமாக மேட்டூர், திருப்பூரில் நிதி வழங்கும் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. மே 25ஆம் தேதி  காலை 11 மணியளவில் மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கழகங்கள் சார்பில் கழகத் தலைவர், பொதுச் செயலாளரிடம் நிதி வழங்கப்படுகிறது. மே 27 அன்று திருப்பூரில் ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி மாவட்டக் கழகத் தோழர்கள் முதல்கட்ட நிதியை கழகத் தலைவரிடம் வழங்குகிறார்கள். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்கிறார்கள். பெரியார் முழக்கம் 09052019 இதழ்

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஏப்ரல் 14 அன்று காலை 10.00 மணிக்கு அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் மு. நாகராஜ், பெரியார் பிரபு, பெரியார் துளசிராஜா, பெரியார் பாரதிதாசன் (த.மா.கழகம்), நீதிபதி செ.வே. ராஜேஷ் (சங்கை, ஒன்றிய செயலாளர்), ஜெ.க. வேலாயுதம், கல்லை ஆசைத் தம்பி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 09052019 இதழ்  

மூத்த பெரியாரியலாளர் ஆனைமுத்து துணைவியார் முடிவெய்தினார்

மூத்த பெரியாரியலாளர் ஆனைமுத்து துணைவியார் முடிவெய்தினார்

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் வே.ஆனைமுத்து  வாழ்க்கைத் துணைவியார் சுசீலா அம்மையார் (83), ஏப். 30 அன்று முடிவெய் தினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை தாம்பரம் இரும்புலியூரில் உள்ள அவரின் வீட்டில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்ட செயலாளர்இரா. உமாபதி, கரு. அண்ணாமலை, திருப்பூர் விஜயகுமார், மேட்டூர் முத்து ராஜா உள்ளிட்ட தோழர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். திருமதி சுசீலா அம்மையாரின் உடல் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு உடற்கொடையாக அளிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09052019 இதழ்