ஆளுநர் தமிழிசைக்கு – தீட்சதர்களின் அவமதிப்பு
தில்லை நடராசர் தரிசனத்திற்கு ஆளுநர் தமிழிசை சென்றிருக்கிறார். அங்கே கோவில் படிக்கட்டில் அவர் அமர்ந்திருக்கிறார். தீட்சதர் ஒருவர் வந்து நீங்களெல்லாம் இங்கே உட்காரக் கூடாது என்று அவரை அவமானப்படுத்தி இருக்கிறார். இதை தமிழிசையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ‘அப்படி ஒரு தீட்சதர் கூறியது உண்மைதான். ஆனால் அந்த இடத்தை விட்டு நான் நகரவில்லை, அங்கே தான் அமர்ந்திருந்தேன். தீட்சதர்கள் பிரச்சனையை தீர்க்கப்போனால் அவர்கள் பிரச்சனையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்’ என்று ஒரு பேட்டியிலே கூறியிருக்கிறார். வந்தவர் ஒரு ஆளுநர். ஆனால் தில்லைக் கோவிலில் ஆளுநரை விட அதிகாரம் படைத்தவர்கள் தீட்சதப் பார்ப்பனர்கள். கோவிலுக்குள் எந்த சட்டமும் செல்லாது என்று உச்சநீதிமன்றத்திலே அவர்கள் தீர்ப்பை வாங்கி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராக இருக்கக் கூடிய அண்ணாமலை, தமிழிசைக்கு ஏற்பட்டிருக்கிற இந்த அவமானம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக இதிலும் தமிழ்நாடு அரசை குறை கூறி ‘சம்பவம் நடந்தது உண்மையா என்று விசாரிக்க...
