Category: கோவை புறநகரம்

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ! கோவை 17092017

கோவையில் பொதுக்கூட்டம் ! நாள் : 17.09.2017 ஞாயிற்றுக்கிழமை, நேரம் : மாலை 5 மணி. இடம் :தோழர் ஃபாரூக் நினைவு மேடை, மசக்காளிபாளையம்,கோயம்புத்தூர். இழந்துவரும் உரிமைகளை மீட்போம், தமிழகத்தின் தனித்தனமை காப்போம் பரப்புரை பயண நிறைவு விழா மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர்,தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு (தலைவர் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

தந்தை பெரியார் 139 வது பிறந்த நாள் விழா மற்றும் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் ! பொள்ளாச்சி 16092017

பொள்ளாச்சியில் பொதுக்கூட்டம் ! நாள் : 16.09.2017 சனிக்கிழமை, நேரம் : மாலை 6 மணி. இடம் : திருவள்ளுவர் திடல்,பொள்ளாச்சி. இழந்துவரும் உரிமைகளை மீட்போம், தமிழகத்தின் தனித்தனமை காப்போம் ! எனும் முழக்கத்தோடு, தந்தை பெரியார் 139 வது பிறந்த நாள் விழா மற்றும் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் கோவை 02092017

இன்று கோவையில் காந்திபார்க்கில் நீட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 02092017 காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் “தோழர் பூர்ணிமா நந்தினி” தலைமையில் சிறப்பாக நடந்தது.. நிமிர்வு குழுவின் பறை முழக்கத்தோடு ஆரம்பமானது. நீட் தேர்வு விலக்கு பெறும்வரை “தினமும் நடக்கும்” இடம் அந்தந்த அமைப்பு தோழரிடம் அறிவிக்கப்படும் . “அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நடக்கும்” என்ற முடிவோடு ஆர்ப்பாட்டம் முடிந்தது. பொதுவாக வேடிக்கை பார்த்தவர்கள் கூட நிகழ்வு முடிவடையும் நேரத்தில் பங்கேற்பாளர்களாக இருந்தார்கள்.. தேன்மொழி தோழர் (bjp+பார்ப்பனர்களின்) நோக்கங்களை அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி விளக்கி சிறப்பாக பேசினார். கண்மனி,வினோத்,இளந்தமிழகம்,CFI தோழர்களும் உணர்வுப் பூர்வமாக பேசினர்..நிமிர்வு சக்தி ,மாதவன் சங்கர் முழக்கங்கள் சிறப்பு. செய்தி நிர்மல்குமார்

அரியலூர் அனிதாவை தற்கொலைக்கு தூண்டிய மத்திய அரசை கண்டித்து திவிக சார்பில் மாநிலம் முழுதும் முற்றுகைப் போராட்டம் 02092017

நீட் தேர்வை திணித்து தமிழக கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான பா.ஜ.கவின் தமிழக தலைமையகம் கமலாயத்தை முற்றுகையிடும் போராட்டம்.. நீட் தேர்வை ரத்து செய் மாணவி அனிதாவின் கொலைக்கு நீதி வழங்கு! நேரம்:மாலை 3.00 மணி நாள்:02.09.2017 திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை   நீட் தேர்வினை திணித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது காலை 10 மணிக்கு, கோவை இரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 3 மணிக்கு, சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை மாலை 5 மணிக்கு, மன்னார்குடி பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

இணையேற்பு விழா ! சோழபுரம் 20082017

”சிவ.விஜயபாரதி – பேரா.பே.சங்கீதா” ஆகியோரின் இணையேற்பு விழா கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. நாள் : 20.08.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 7.30.- 9.00 மணி. இடம் : மங்களம் வீரமுத்து திருமண மாளிகை,சோழபுரம். பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்

இந்து மக்கள் கட்சியை தடை செய் – கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம் 01082017

ஜாதி மத கலவரங்களை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் இந்துமத வேடதாரி, பார்ப்பன அடிவருடி அர்ஜூன்சம்பத்தை கைது செய்… இந்து மக்கள் கட்சியை தடை செய்…  என்ற முழக்கத்தோடு கோவையில் 01082017 மாலை 5 மணிக்கு உக்கடம் பேருந்து நிலையம் அருகில் திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட செயலாளர் நேரு அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் கோவை அணி கலந்துரையாடல் திருப்பூர் 16072017

“இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, “சமூக நீதி – சமத்துவ பரப்புரைப் பயணம்” என்ற தலைப்பில் தொடங்கும் நிகழ்வை ஒட்டி கோவை திருப்பூர் மாவட்ட கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 16072017 அன்று பிற்பகல் 3 மணிக்கு தோழர் துரைசாமி, மாநில பொருளாளர் அவர்களின் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் 35 தோழர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் சூலூர் பன்னிர்செல்வம், நிர்மல் மதி அவர்கள்  பயண ஏற்பாடுகளுக்கு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். 5 நாட்களிலும் 18 தோழர்கள் கலந்துகொள்வதாக உறுதியளித்தனர்.  

பெரியாரியல் பயிலரங்கம் உடுமலை 11062017 மற்றும் 12062017

“பயிற்சியாளர்கள் – தலைப்புகள்” பெரியாரியல் பயிலரங்கம் ! ஜூன் 11,12 – உடுமலை. திருப்பூர், கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நாள் : 11.06.2017 ஞாயிறு, 12.06.2017 திங்கள், இரண்டு நாட்கள். நேரம் : காலை முதல் மாலை வரை. இடம்: கிருஷ்ணா விடுதி,படகுத்துறை, திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை இரண்டு நாள் நடைபெறும் இப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிலரங்கிற்கு வரும் தோழர்கள் சனிக்கிழமை இரவே பயிலரங்கு நடக்கும் விடுதிக்கு வந்து விடும்படி கேட்டுக் கொள்கிறோம். இரண்டு நாள் பயிற்சிக் கட்டணம் : Rs 200/= (ரூபாய் இருநூறு மட்டும்) முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்கள் : திருப்பூர் : முகில் இராசு – 9842248174 நீதிராசன் – 9003430432 உடுமலை : மடத்துகுளம் மோகன் – 8883488222 இயல் – 9842933064 பொள்ளாச்சி...

ஃபா கலெக்சன்ஸ் கடை திறப்பு விழா கோவை 31052017

தோழர் பாரூக் அவர்களின் துணைவியார் துவங்கியுள்ள ஃபா (faa) collections எனும் புதிய ஆயத்த ஆடை அங்காடியை இன்று 31.05.2017 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்தார். உடன் தோழர் பாரூக்கின் குழந்தைகள். Shop address : FAA COLLECTIONS, No:6 60 feet road, North housing unit, OPP TMMK office, Selva puram, Coimbatore – 641026

தோழர் ஃபாரூக் துணைவியார் கடை திறப்பு விழா கோவை 31052017

தோழர் பாரூக் துணைவியார் புதிதாக துவங்கவுள்ள   பா (faa) collection நாளை காலை 10 மணிக்கு  திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துறை அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வருக.. பேச 9677404315

பெரியாரியல் பயிரங்கம் ! திருப்பூர் 1106017 மற்றும் 12062017

பெரியாரியல் பயிரங்கம் ! திருப்பூர் 1106017 மற்றும் 12062017

திருப்பூர், கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், நாள் : 11.06.2017 ஞாயிறு, 12.06.2017 திங்கள், இரண்டு நாட்கள். நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. இடம்: திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை பல்வேறு தலைப்புகளில் இப் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெறுகிறது. தலைப்புகள் மற்றும் பயிற்சியாளர்கள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இரண்டு நாள் நடைபெறும் இப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயிற்சிக் கட்டணம் : Rs 300/= (ரூயாய் முன்னூறு மட்டும்) முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்கள் : திருப்பூர் : முகில் இராசு – 9842248174 நீதிராசன் – 9003430432 உடுமலை : மடத்துகுளம் மோகன் – 8883488222 இயல் – 9842933064 பொள்ளாச்சி : ஆனந்த் – 9842815340 சபரி – 9095015269 கோவை...

தோழர் ஃபாரூக் படுகொலை விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

தோழர் ஃபாரூக் படுகொலை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை ! அதனால் கொலைக்கு “காரணமானவர்களை” கண்டறிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல் துறையின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். தோழர் ஃபாரூக்கை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த முஸ்லீம்கள், இசுலாமிய மதவெறி ஏற்றப்பட்ட வெறும் கருவிகளே. ஆக விரைவில், * ஃபாரூக் படுகொலைக்கு திட்டமிட்டு பின்னிருந்து இயக்கிய இசுலாமிய மத அடிப்படைவாத இயக்கம் கண்டறியப்பட வேண்டும். * அந்த இசுலாமிய மதவெறி அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப் பட வேண்டும். * ஃபாரூக் கொலையை பின்னிருந்து செய்த இசுலாமிய மத அடிப்படைவாத அமைப்பு “இசுலாமிய மத பயங்கரவாத அமைப்பாக” அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட வேண்டும். செய்தி பரிமளராசன்

ஃபாரூக் நினைவேந்தல்: குடும்ப நிதி வழங்கல்

நாள்    :              16.4.2017 ஞாயிறு மாலை 4 மணி இடம்                 :               கோவை அண்ணாமலை அரங்கு (தொடர் வண்டி நிலையம் எதிரில்) உரை :               கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருஷ்ணன், இரா. அதியமான், வழக்கறிஞர் ப.பா. மோகன், கேரளயுக்திவாதி (பகுத்தறிவாளர்கள்) தோழர்களும், பல்வேறு இயக்கங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள். ஏற்பாடு           :               கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்.                 அனைவரும் வருக! பெரியார் முழக்கம் 13042017 இதழ்

“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”

“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”

இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு பலியான கழகத் தோழர் பாரூக்கின் தந்தை, திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயல்பட  விருப்பம் தெரிவித்தாலும் அவர் கழகத்தில் இணைவதைவிட அவரது பாதுகாப்பையே நாங்கள் முக்கியமாகக் கருதுகிறோம்” என்று கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள செய்தி: “பாரூக்கின் தந்தை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொள்ள முன் வந்தாலும் கோவை மாவட்ட கழகத்தின் தோழர்கள் பாரூக்கின் தந்தை பாதுகாப்பே முக்கியம். அது பற்றித் தான் நாங்கள் கவலைப்படுகிறோம் என்று கூறினார்கள். இப்போது எங்கள் கவலை எல்லாம் பாரூக்கின் இரண்டு குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் கல்வி வழங்க வேண்டும் என்பதுதான். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது ஒரு குழந்தையின் விருப்பம். அது குறித்தே நாங்கள் சிந்தித்து வருகிறோம். மற்றபடி பாரூக்கின் தந்தை எங்களது கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எங்கள்...

தோழர் ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள்  BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி

தோழர் ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள் BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி

ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள் BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி பாரூக் எப்படி கொல்லப்பட்டார்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? தமது அடுத்த கட்ட நகர்வு என்ன? ஃபாரூக் விட்டுச் சென்ற பணியை தொடர்வேன் என கூறினாரா? பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறார். ( 28.03.2017 BBC TAMIL)

தோழர் ஃபரூக் குறித்தும், அவரின் இறுதி நிமிடங்கள் குறித்தும் ஃபரூக்கின் துணைவியார், தந்தை பேட்டி – தி இந்து 25032017

‘கடவுள் மன்னிக்கக் கூடியவர்; தண்டிக்கச் சொல்பவர் அல்ல’: கொலை செய்யப்பட்ட ஃபாரூக் குடும்பத்தினர் வேதனை கோவை உக்கடம் லாரிப்பேட் டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டிய தால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற் றிலும் கண்ணீருடன் உறவினர்கள். ‘‘நாங்கள் யாரும் எம் மார்க் கத்துக்கு விரோதிகள் அல்ல. தின மும் 5 வேளை நமாஸ் செய்பவர் கள். தவறாது நோன்பு மேற்கொள் பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்க ளிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள் கைக்கும் நாங்கள் எதிராக நிற்க வில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமை யாகப் படித்து, புரிந்துகொள்ளாத...

தோழர் கோவை ஃபாரூக் படுகொலை !

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கழகத் தலைவர் வலியுறுத்தல் உடன் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன் அவர்கள். (கோவை அரசு தலைமை மருத்துவமனையில் கழகத் தலைவர் பேட்டி 17.03.17. கோவை.) நேற்று (16.03.2017)இரவு 11.00 மணிக்கு கோவை கழகத் தோழர் ஃபாருக் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் தின விழா கோவை 19032017

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் தின விழா கோவை 19032017

தமிழ்நாடு அறிவியல் மன்றம் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் மகளிர் தின விழா 📎கவியரங்கம் 📎ஆய்வரங்கம் 📎கலை நிகழ்ச்சிகள் 📎கருத்தரங்கம் சிறப்பரை- தோழர் கிரேஷ்பாணு தோழர் கொளத்தூர் மணி 19/03/2017 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்- அண்ணாமலை அரங்கம், இரயில் நிலையம் எதிரில் , சாந்தி திரையரங்கம் அருகில் .. கோவை. அனைவரும் வருக.

ஜாதி மதவாத கூட்டு வன்முறைக்கு எதிரான தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி 11032017

பொள்ளாச்சி அருகே காளியப்பன் புதூரில் இந்து மத சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட சாதி – மதவாத கூட்டு வன்முறைக்கெதிரான தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் 11032017 மாலை 4 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்… திராவிடர் விடுதலை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார்.. *தமிழக வாழ்வுரிமை கட்சி – நிறுவனர் தோழர் தி.வேல்முருகன் *ஆதித்தமிழர் பேரவை – பொ.செயலாளர் தோழர் நாகராசன் *தலித் விடுதலை கட்சி – தலைவர் தோழர் செங்கோட்டையன் *தமிழ் புலிகள் கட்சி – தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் *ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை – தலைவர் தோழர் ஆ.சு.பவுத்தன் *ஆதித்தமிழர் விடுதலை முன்னணி- அமைப்பாளர். தோழர் ரவிக்குமார் *SDPI –  தோழர் சாந் இப்ராகிம் *சமத்துவ கழகம் – தலைவர் தோழர் மு.கார்க்கி *தென்னை தொழிலாளர் சங்கம் தோழர் கருப்புசாமி ஆகிய தோழர்கள் கண்டனவுரை ஆற்றினர்…. *திராவிடர் கழகம் – பொதுகுழு உறுப்பினர் தோழர் பரமசிவம் பொறியாளர் *சமூக நீதிக் கட்சி – நிறுவனர் தோழர் பன்னீர் செல்வம் *மக்கள்...

குலுங்கியது கோவை – எங்கெங்கும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 24022017

கோவை வந்த மோடிக்கு கருப்பு கொடி. வனங்களை அழிக்கும் ஈஷா யோகா விழாவிற்க்கு வருகை தரும் மோடிக்கு எதிராக #திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 24022017 மாலை கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் காட்டப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர் ஈஷா மையத்தில் 122 அடி உயர சிவன் பொம்மையைத் திறக்க வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அணி அணியாய் தோழர்கள் ஆர்ப்பாட்டம்-கருப்புக் கொடி-கைது.. # முதல் அணியில் த.பெ.தி.க, த.மா.கா,வி.சி ,விவசாய சங்கங்களின் தோழர்கள்.. # இரண்டாம் அணியில் தி.க தோழர்கள்.. # மூன்றாம் அணியில் தி.வி.க, சமூக நீதிக் கட்சி,மாதர் சங்கம், DYFI தோழர்கள்.. குறிப்பு: கைது செய்து நேரே மண்டபத்திற்கு கொண்டு சென்றிருந்தால் கூட, நிகழ்வுகளை பொதுமக்கள் அறிய முடியாமல் போயிருக்கும்.. ஆனால் திவிக தோழர்களை கைது செய்து, மண்டபம் கிடைக்காமல் கோவை முழுதும் வீதிவீதியாய்...

மோடிக்கு கருப்புக்கொடி ! கோவை சூலூரில் 24022017

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ! நாள் : 24.02.2017 மாலை 4 மணிக்கு. இடம் : சூலூர் விமானப்படை தளம் அருகில். மோடியே, ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! எனும் முழக்கத்துடன்பிப். 24இல் கோவையில் தோழர்கள் திரளுகிறார்கள் கோவை வனப்பகுதியில் யானைகள், மிருகங்கள் வாழும் பகுதிகளை முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி வரும் ஈஷா மய்யத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், புதிய கட்டுமானங்களைத் திறந்து வைக்க பிரதமர் மோடி பிப்.24 ஆம் தேதி வருகிறார். இதை எதிர்த்து கோவை வரும் மோடிக்கு பிப். 24ஆம் தேதி கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், சுற்றுச் சூழல் மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துகின்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி போராட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் பல்வேறு முற்போக்கு...

ஆதிக்க சாதி இந்துத்துவ கூட்டு வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! கோவை 13022017

13-2-2017, திங்கட்கிழமை மாலை 4-00 மணியளவில், கோவை வாட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, ஜாதி மதவாத ஆதிக்க கூட்டமைப்பின் சார்பில், பொள்ளாச்சி கா.க.புதூரில் ஜாதி,மதவாத ஆதிக்க சக்திகளால், பெரியார் திராவிடர் கழகம், சுயமரியாதை சமதர்ம இயக்கர் தலைவர் தோழர் கா.சு. நாகராசந்தாக்கப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை பிற்பகல் 3-00 மணிவரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த ஆனைமலை காவல்துறையினர் தப்ப விட்டதற்கு உரிய நடவக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆத்தி தமிழர்- பேரவை பொதுச்செயலாளர் நாகராசன், எஸ்.டி.பி.ஐ., சமூகநீதிக் கட்சித் தலைவர் வழக்குரைஞர் பன்னீர்செல்வம், சமுத்துவ முன்னணி வழக்குரைஞர் கார்க்கி, வழக்குரைஞர்முருகேசன், முருகர் சேனை சிவசாமித் தமிழன், தமிழ்க் கல்வி இயக்கம் சின்னப்பா தமிழர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திராவிடர் கழக இளைஞர் அணி சிற்றரசு, புதுவை பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தலைவர் தீனா,  கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன்,...

பொள்ளாச்சி திவிக ஆர்ப்பாட்டம் 06022017

பொள்ளாச்சி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக அரியாலூர் தழித்சிறுமி நந்தினியை பாலியல் செய்து கொலைசெய்த இந்து முண்ணனி காமுகனை கடுமையான தண்டனைச்சட்டம் இயற்றி நந்தினிக்கு நீதிகிடைக்கவேண்டும் எனறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .    

ககாபுதூர் சாதீய வன்முறை – உண்மையும் தீர்வும் கோவை 31012017

கா.க.புதூர் சாதீய வன்முறை மற்றும் பரவலாக நடைபெறும் ஆதிக்க சாதி இந்துத்துவ கூட்டு வன்முறையைக் கண்டித்து கோவை, பொள்ளாச்சி நகரங்களில் அனைத்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்! கடந்த சனவரி 8ஆம் தேதி கா.க.புதூரில் தோழர் கா.சு. நாகராசன் இல்லத்தில் ஆதிக்க சாதியினரும் இந்து முண்ணனி மதவெறிக் கும்பலும் சேர்ந்து நடத்திய வன்முறை தாக்குதல் பற்றிய உண்மையும்,தீர்வும் என்ற தலைப்பில் 31.01.2017 செவ்வாய் மாலை 05 மணிக்கு கோவை ஆதித்தமிழன் அரங்கில் அனைத்து இயக்கங்களின் கலைந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் “கொளத்தூர்” மணி அவர்கள், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ” ஆதித்தமிழர்” பேரவை நிறுவனர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். திவிக தோழர் பொள்ளாச்சி வெ.வெள்ளிங்கிரி கா.க.புதூர் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அதிக்க சாதி இந்து முண்ணனி கூட்டணி குறித்தும் வரவேற்புரையில் தெளிவுபடுத்தினார்.தொடர்ந்து தோழர் கா.சு.நாகராசன் 8 ஆம் தேதி வன்முறை மற்றும் அதன் பின்னணி குறித்து அறிமுக உரையாற்றினார்....

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம் கோவை 31012017

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம் கோவை 31012017

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம். ******************* 31.01.17 செவ்வாய் மாலை 05 மணி. ஆதித் தமிழன் அரங்கம், மேட்டுப்பாளையம் சாலை, கோவை. தலைமை ———– தோழர் கொளத்தூர் மணி. தலைவர், (திராவிடர் விடுதலைக் கழகம்) முன்னிலை ————- தோழர் அதியமான் தலைவர், ( ஆதித் தமிழர் பேரவை ) சமூக நீதிக்கான களத்தில் நிற்கிற இயக்கங்களின் பொறுப்பாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம். இப்படிக்கு காசு.நாகராசன். #94439 33669

காளியப்பகவுண்டன் புதூரில் கழகத் தலைவர் நேரில் ஆய்வு

காளியப்பகவுண்டன் புதூரில் கழகத் தலைவர் நேரில் ஆய்வு

பொள்ளாச்சி காளியப்பகவுண்டன் புதூரில் ஆதிக்க ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்ட தோழர் காசு.நாகராசன் மற்றும் தோழர்களையும் மருத்துவமனையில் சந்தித்து விட்டு பின்னர் ஊரில் சேதமடைந்த பகுதிகளையும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்… பேட்டி பார்க்க இங்கே சொடுக்கவும் பேட்டியில் காவல்துறை இரண்டு நாள் அவகாசம் அளிக்க கேட்டுள்ளனர் அதற்குள் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்றால் தமிழ்நாடு தழுவிய அளவில் பெரிய போராட்டம் காசு.நாகராசன் க்கு ஆதரவாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.. பின்பு ஊரில் கூடியிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.  காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததால் ஊரில் பொதுகூட்டமாகவே நிகழ்ச்சி நடந்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம், தி.மு.க, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமுமுக, இந்திய ஜவ்ஹீத் ஜமாத் கட்சி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், மக்கள் விடுதலை முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் கட்சி, அம்பேத்கர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு மாணவர் மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10012017

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10012017

பொள்ளாச்சியில் நாளை 10.01.17 “கண்டன ஆர்ப்பாட்டம்” ஜாதி வெறியர்களால் தோழர் கா.சு.நாகராசன் மற்றும் தோழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவல்நிலைய பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தியும், தப்பவிட்ட காவல்துறைமீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க மறுத்த மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அனைத்துக்கட்சிகள்,அனைத்து சமுக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை : தோழர் “கொளத்தூர்மணி” (தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்) நாள் – 10.01.17,காலை -11.00மணி. இடம்: திருவள்ளுவர் திடல்,பொள்ளாச்சி அனைவரும் ஒன்றுபடுவோம் சாதிவெறியர்களுக்கு எதிராக ! பேச : 9842487766, 8344053307

திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் சூலூர் 01012017

சூலூர் ஒன்றியம் பட்டணம் இந்திரா நகரில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தோழர் கொளத்தூ மணி அவர்கள் கலந்து கொண்டு திவிக மாத இதழ் நிமிர் அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். விழாவில் தோழர் வழக்குறைஞர் வெண்மணி அவர்கள் மேடையில் புரட்சி பெரியார் முழக்கம் சந்தா தொகைகளை கழக தலைவரிடம் கொடுத்தார். செய்தி தோழர் சூலூர் பன்னீர்செல்வம் பெரியார் முழக்கம் 12012017 இதழ்  

தோழர் பாரூக் கோவையில் வரவேற்பு

75 நாள் சிறை வாசம் 23 சசிகுமார் கொலையினால் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில் கடைக்கு சென்ற திவிக தோழர் பெயர் பாரூக் என்ற ஒற்றை காரணத்திற்காக நள்ளிரவில் கைது செய்ப்பட்டு சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் அடுத்த சிலதினங்களில் தோழர் மீது குண்டாஸ் பாய்ந்தது கடந்த மாதம் 8 ம் தேதி கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சென்னையில் அறிவுரை குழுமத்தில் வாதாடினார் தோழருக்காக மட்டும் அல்லாமல் கோவையில் நடந்த கலவரத்தை அப்பட்டமாக்கினார் உடைந்தது குண்டாஸ் அனைவர் மீதும் தோழர் கலையரசன் வழக்குறைஞரால் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று பினையில் விடுதலை பெற்றார் தலைவருடன் தலைமைகழக அமைப்பாளர் இரத்தினசாமி தோழர்கள் பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட தோழர்கள், ஈரோடு தோழர்கள் அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, கவிஞர்கனல்மதி, திருப்பூர் முகில்ராசு, சங்கீதா உள்ளிட்ட தோழர்கள் அனைத்து விதத்திலும் உதவிகரமாக இருந்த தோழர் நங்கவள்ளி கிருஷ்னன் ,திருசங்கோடு வைரவேல் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் வழக்கறிஞர்...

கழகத் தோழர் பாரூக் மீதான குண்டர் சட்டம்: அறிவுரைக் குழுமம் இரத்து செய்தது

கழகத் தோழர் பாரூக் மீதான குண்டர் சட்டம்: அறிவுரைக் குழுமம் இரத்து செய்தது

கோவையில் 22.9.2016 அன்று இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் டி.சசிக்குமார் என்பவர் அடையாளம் தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை யொட்டி கோவை நகர் முழுதும் கலவரம், தீ வைப்பு, உடைமைகளை அழிப்பது என இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்கள். இதற்காக தமிழகம் முழுதுமிருந்தும்  ஆட்கள் அழைக்கப்பட்டனர். காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அப்போது உக்கடம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் பாரூக், குழந்தைக்கு பால் வாங்க வந்தபோது கலவரக்காரர்கள் சூறையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. காவல்துறை ‘இந்து அமைப்பைச் சார்ந்த சிலரையும், இ°லாமியர்கள் சிலரையும் கணக்கு காட்ட கைது  செய்தது. அதில் பால் வாங்க வநத தோழர் பாரூக்கையும் கைது செய்து பின்பு அவர் மீது குண்டர் சட்டத்தையும் ஏவியது. அதைத் தொடர்ந்து குண்டர் சட்ட விதிமுறை யின் கீழ் நவம்பர் 8ஆம் தேதி சென்னையிலுள்ள அறிவுரை குழுமத்தின் முன்பு பாரூக் நேர் நிறுத்தப் பட்டார். குண்டர் சட்டத்தில்...

மத சார்ப்பற்ற அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை வைப்பதும் , ஆயுத பூஜை செய்வதும் சட்டப்படி குற்றமாகும் – பொள்ளாச்சி ஆனைமலை

திராவிடர் விடுதலைக் கழகம்- பொள்ளாச்சி & ஆனைமலை பகுதியில் மதசார்பற்ற அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்கள் வைப்பதும் ஆயுதபூஜை வழிபாடு நடத்துவதும் சட்ட விரோதமாகும் என்றும், அரசு மற்றும் காவல்துறையை நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே என்றும் கழகத் தோழர்களின் பதாகை மற்றும் சுவரொட்டிகள்  

கோவை மதவெறிக் கலவரத்துக்கு பச்சைக் கொடி காட்டிய காவல்துறை

கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்த டி.சசிக்குமார் (35) என்பவர் 22.09.2016 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை யொட்டி கோவை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை கடைகள் அடைக்க வைக்கப்பட்டது. இந்து முன்னணியினர் இருசக்கர வாகனங்களில் சென்று அதிகாலை முதலே கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டிச் சென்றனர். காலை 9 மணி வரை பெரும்பகுதி அரசு, தனியார் பேருந்துகள் இயங்கின. பிறகு காலை 9 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்கவில்லை. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது, பள்ளிகள் கல்லூரிகள் மதியத்திற்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டது. வன்முறையாளர்கள் நகரம் முழுவதும் கலவரத்திலும், தாக்குதலிலும், சொத்துக்களை அழிப்பதிலும், வாகனங்களை கொளுத்துவதிலும், சூறையாடுவதிலும் ஈடுபட்டனர். மாவட்ட காவல்துறையினர் இந்த நிகழ்வுகளில் எல்லாம் உரிய முறையில் தடுக்கவோ, கலைக்கவோ நடவடிக்கை எடுக்காததோடு, சார்பு தன்மையோடும் நடந்து கொண்டனர். அதிகாலை முதல் கலவரச் சூழல் உருவாகும் என்று தெரிந்தும் நடவடிக்கை போதுமானதல்ல, பள்ளி...

பெரியார் பிறந்தநாள் விழா ஆனைமலை

தலைவர்பெரியாரின் 138-வதுபிறந்தநாள் விழா ஆனைமலையில் கழகதோழர்களால் சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் சமத்துவபுரத்தில் பெரியார்சிலைக்கு மாலைஅணிவித்தனர். கழககொடியை புனிதா, கீதாஆகிய தோழர்கள்ஏற்றி வைத்தனர். பின்பு பெரியார்படத்திறப்பு நிகழ்வு நடந்தது. விழாவில்பெரியார் திராவிடர்கழக ஒருங்கிணைப்பாளர் காசு.நாகராசு. அம்பேத்கர்இளைஞர் முன்னணி தலைவர்   கவி.மணிமாறன் மற்றும்கழகத்தோழர்கள் வே.வெள்ளிங்கி, ராசேந்திரன், அப்பாதுரை, அரிதாசு, மணிமொழி, ஆனந்த், கணேசு, முருகேசன் உள்படதோழர்கள் 75பேர்கலந்து   கொண்டனர். மதியம் மாட்டுக்கறி விருந்தில் பொதுமக்கள்என 200பேர்பங்கேற்றனர்

கோவையில் குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் “புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு.”

கோவையில் குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் “புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு.” கழக தலைவர் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகிறார். நாள் : 18.09.2016 ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. இடம்: நல்லாயன் திருமண மண்டபம், டவுன் ஹால், கோவை.

விநாயகர் சிலை ஊர்வலம் – ஆனைமலை திவிக மனு

​பொள்ளாச்சி-ஆனைமலை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 5ம் தேதி இந்துமத வெறியர்களால் மற்ற சமூகத்தாரின் வன்மத்தை தூண்டுவது போல் சென்னை உயர் நீதி மன்றம் பிறப்பித்த விதிகளுக்கு மாறாக செயல்படுவதை கண்டித்தும் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்துகின்ற நீர் நிலைகளில் கரைப்பதும் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்வதும் காவல்துறைகளின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதை கண்டித்தும் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் 20க்கும் மேற்பட்ட தோழர்களால் மனு வழங்கப்பட்டது  

கோவை திவிக சார்பில் மனு

விநாயகர் சிலை கரைப்பது தொடர்பாக சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காமல் தடுக்க கோரி 25-08-2016 (வியாழக்கிழமை ) காலை 11:00 மணியளவில் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிபாளர், இந்து சமய அறநிலையத்துறை, மசுகட்டுபாட்டு வாரியம், கோவை மாநகராட்சி, ஆகியோருக்கு கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மனுவாக வழங்க பட்டது. தோழர்நேருதாஸ் தலைமையில் , நிர்மல்குமார் செயலாளர், இராமச்சந்திரன் புறநகர் மாவட்ட தலைவர், சூலூர்பன்னீர்செல்வம் சூலூர் ஒன்றியம் , மாநகர அமைப்பாளர்ஜெயந்த், பொருளாளர் கிருஷ்ணன், வடவள்ளி ஸ்டாலின், விக்னேஷ், சித்தன், சங்கர்,  அன்ட்ரோஸ், கணேஷ், வெங்கட், விஜயபாரதி, கனி ஆகிய மாவட்டகழக பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர் திராவிடர் விடுதலைக் கழகம் கோவை மாவட்டம் பேச: 9677404315

குலக்கல்வியை மீண்டும் திணிக்கும், ”புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு”

இந்திய அரசின் துணையுடன் காவி பயங்கரவாத அரசியல் நமது கல்வி, உணவு, பண்பாட்டின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இயக்கங்களின் ஒன்றிணைந்த முயற்சிகளை முன்னெடுக்க கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ ) மக்கள் விடுதலை(தமிழ்நாடு) ஒருங்கிணைப்பில் ஆலோசனைக் கூட்டம் 15.08.16 அன்று பிற்பகல் கோவை மாவட்டம் சூலூரில் தோழர் ஆனைமுத்து அவைக்கூடத்தில் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் – தோழர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் – தோழர் தியாகு, சி.பி.எம்.எல் – மக்கள் விடுதலை – தோழர் பாலன், தமிழ்த் தேச மக்கள் கட்சி – தோழர் தமிழ்நேயன், பி.யூ.சி.எல் – தோழர்கள் குறிஞ்சி, பொன்.சந்திரன், தனலட்சுமி, சி.பி.ஐ ( எம்-எல் ) ரெட்ஸ்டார் – தோழர் குசேலர், தியாகி இம்மானுவேல் பேரவை – தோழர் புலிப் பாண்டியன், தமிழக மக்கள் முன்னணி – தோழர் அரங்க.குணசேகரன், தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி...

திருப்பூர் அணியின் பயண பரப்புரை தொகுப்பு

090816 செவ்வாய்   காலை 1030 மணி கிணத்துக்கடவு தலைமை நிர்மல் குமார்தி.வி.க.கோவை மாவட்டச்செயலாளர் தொடக்கவுரை .தோழர் மணிமொழி அவர்கள் வாழ்த்துரை  தமிழ் பித்தன் தி.மு.க அவர்கள், தோழர்.வானுகன் அவர்கள் ஆதி தமிழர்பேரவை அவர்கள் இயக்க பாடல் தோழர்கள் .சங்கீதா உக்கடம் கிருட்டிணன் அவர்கள், தோழர் ராமசந்திரன் தி.வி.க. புற நகர் மாவட்ட தலைவர் அவர்கள், தோழர் பொள்ளாச்சி.வெள்ளிங்கிரி தி .வி.க அமைப்பாளர் பொள்ளாச்சி நகரம் தோழர் காவை இளவரசன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கநிகழ்ச்சி தோழர் திருப்பூர்.சு.துரைசாமி திவிக. மாநில பொருளாளர் தோழர்.கோபி வேலுச்சாமி தி.வி.க. தலைமைக்கழகப்பேச்சாளர். நன்றியுரை தோழர்  வடபுதூர் ராமகிருட்டிணன் அவர்கள் மதிய உணவு ஏற்பாடுகள். தோழர்கள் திமுக பொருப்பாளர் நடராசன் தமிழ்பித்தன் வெள்ளக்கிணறு மருதகனி கொண்டம்பட்டி செல்வராசு வடவள்ளி ஒவியர் தமிழேந்தி மிக சிறப்பாக ஏற்ப்பாடுகள் செய்து கொடுத்தனர் நன்றி மாலை 0415க்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தலைமை பொள்ளாச்சி வெள்ளிங்கிரி அவர்கள் தி வி க.நகர...

பல்லடத்தில் பரப்புரை பயணக்குழு !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணத்தில் நேற்று பல்லடத்தில் பரப்புரை நடைபெற்றது. பல்லடம் பரப்புரை பயணம் மதியம் 11.30 க்கு துவங்கியது. பல்லடம் நகர தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.மாநில பெருளாளர் திருப்பூர் துரை சாமி, ஆனைமலை மணிமொழி, திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் முகில் ராசு,ஒன்றியச் செயலாளர் சண்முகம், பயண ஒருங்கிணைப்பாளர் சூலூர் பன்னிர் செல்வம், மந்திரமா தந்திரமா காவை இளவரசன் தி.வி க நன்றியுரை சங்கீதா அவர்கள். ,

திராவிடர் வாழ்வியல் உறுதிமொழி ஏற்பு !

பொள்ளாச்சி ஆனைமலை,கா.க.புதூரில் கிருத்திகா – ஸ்டாலின் இணையருக்கு, கழக தலைவர் தலைமையில் நடைபெற்ற ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் ! ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக ஆணவப்ப டுகொலைகள் நடந்து வருகிற இந்த நேரத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கா.க.புதூர் கிராமத்தில் 29.05.2016 ஞாயிற்றுக்கிழமை 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்த கிருத்திகா – ஸ்டாலின் ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் கழக தலைவர் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கா.க. புதூர் ஜாதி ஒழிப்பு போராளிகள் நினைவுத் தூண் முன்பிருந்து ஊர்வலமாக சென்ற பின் மதியம் 12.30 மணியளவில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் மணவிழா துவங்கியது.பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தோழர் காசு.நாகரஜ்.அவர்கள் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெரியார் சரவணன்,தோழர் அறக்கட்டளை சாந்த குமார் கோவை கதிரவன்,அறிவியல் மண்ரம் ஆசிரியர் சிவகாமி, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, பேராசிரியர்...

ஜாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு – கோவை 17042016

கோவையில், ”ஜாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு” நாள் : 17.04.2016 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. இடம் : அண்ணாமலை அரங்கு, தொடர்வண்டி நிலையம் எதிரில், சாந்தி திரையரங்கு அருகில்,கோவை. ”ஜாதி ஒழிப்பும்,ஜனநாயக கடமைகளும்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். மற்றும் பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு கருத்துரையாற்ற உள்ளார்கள். நிகழ்சி ஏற்பாடு : ஜாதிமறுப்பு மக்கள் கூட்டியக்கம்,தமிழ்நாடு.