Category: பெரியார் முழக்கம் 2019

சோதிட மூட நம்பிக்கையால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால்

சோதிட மூட நம்பிக்கையால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால்

உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் ராஜகோபால், ஜூலை 18ஆம் தேதி இறந்தார். ஏழு வயதிலிருந்து உழைத்து உயர்ந்தவர் ராஜகோபால். ஆரம்ப காலத்தில் மெஸ் நடத்தியவர். ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுவிட்டுச் சென்ற பிறகு, அவர்கள் பயன்படுத்திய இலைகளைப் பிரித்துப் பார்ப்பாராம். எந்த உணவு அய்ட்டத்தைச் சாப்பிடாமல் தவிர்த்திருக்கிறார்கள், எதை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனிப்பாராம். அதை வைத்து அடுத்த வேளைக்கான சாப்பாடு மெனுவை மாற்றியமைப்பார். இந்த நுணுக்கத்தைப் பயன்படுத்தித்தான் ஓட்டல் தொழிலில் உச்சத்தை அடைந்தார் ராஜகோபால். ஓட்டல் தொழிலில் பார்ப்பனர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட நாடார் சமூகத்தில் பிறந்த அவர் தொடங்கிய ‘சரவண பவன்’ ஓட்டல்கள் சென்னையில் பார்ப்பனர்கள் ஓட்டலுக்கு மிகப் பெரும் சவாலாக மாறியது. ‘சரவண பவன்’ அதன் கிளைகளை உலகம் முழுதும் கொண்டு சென்றது. பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்க மாநாடு களில் ‘நாடார்...

சமூகநீதியாளர்கள் பங்கேற்று உரை 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சமூகநீதியாளர்கள் பங்கேற்று உரை 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்

நடுவண் அரசே! இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சீரழிக்கும் உயர்ஜாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை இரத்து செய்! தமிழக அரசே; 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்காதே! என்ற கோரிக்கைகளை முன் வைத்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஜூலை 29, 2019 மாலை 4.30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவர் எழிலன் (இளைஞர் இயக்கம்), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), செந்தில் (இளந்தமிழகம்), முனைவர் சுந்தரவள்ளி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்), மருத்துவர் இரவீந்திரநாத் (சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்) ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். சமூக நீதி தத்துவத்தின் நோக்கம் – இடஒதுக்கீடு சந்தித்த தடைகள் – 10 சதவீத இடஒதுக்கீட்டைத் திணித்து இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கும் மனுதர்ம சூழ்ச்சி – பா.ஜ.க ஆட்சியின் தேசிய கல்விக்  கொள்கையின் ‘வர்ணாஸ்ரம-குலக்கல்வி’ கருத்துகள்...

ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

தொடரும் ஜாதி வெறித் தாக்குதல்கள், ஜாதிய ஆணவப் படுகொலைகளை அலட்சியப்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்து  கோவையில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 23/07/2019 செவ்வாய் மாலை நான்கு மணியளவில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காவல் துறையின் தடையை மீறி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தலைமை நிர்மல்குமார் (கோவை மாநகர செயலாளர்), முன்னிலை ப கிருட்டிணன் (கோவை மாநகர அமைப்பாளர்), வரவேற்புரை மா.நேருதாசு (கோவை மாநகர தலைவர்), கண்டன ஆர்ப்பாட்டத்தில் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன், தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில்ராசு உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ...

அன்று ஜெர்மன் இனவெறி மொழி; இன்று ‘இந்தி’ மதவெறிக்கான மொழி!

அன்று ஜெர்மன் இனவெறி மொழி; இன்று ‘இந்தி’ மதவெறிக்கான மொழி!

ஆங்கில ‘இந்து’ ஏட்டின் ஞாயிறு மலரில் (ஜூலை 28, 2019) ருச்சின் ஜோஷி என்ற எழுத்தாளர், ‘ஜெர்மன் காட்டிய வழியில் இந்தியும் பயணிக்கிறதா’ என்ற ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் ஜெர்மன் மொழி 1925லிருந்து 1945 வரை இனவெறி – இனப்படுகொலைகளோடு பிரிக்க முடியாத தொடர்புடைய மொழியாகவே உலக அளவில் கருதப்பட்டதை சுட்டிக் காட்டுகிறார். “இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பிறகு ஜெர்மன் மொழி உலக அளவில் சிலகாலம் வெறுக்கப் பட்ட மொழியாகவே இருந்தது. தலைசிறந்த யூத எழுத்தாளர்கள், ஜெர்மானிய மொழியில் உயர்ந்த இலக்கியங்களைப் படைத்திருந்தாலும்கூட 1925 லிருந்து 1945ஆம் ஆண்டு வரை கொடூரமான மக்கள் விரோத கருத்துகளான இனவெறி – இனப் படுகொலைகளை சுமந்து செல்லும் வாகனமாக ஜெர்மன் மொழி மாற்றப்பட்டதே, இந்த புறக் கணிப்புக்குக் காரணம். ஜெர்மன் கொடூரமான ஆபத்தான மனித வதை மொழியாகவே கருதப் பட்டது. அப்பாவி மக்களை இனப்படுகொலைக் குள்ளாக்கும் இராணுவ உத்தரவுகளுக்கான மொழியாக அது பார்க்கப்பட்டது....

75 சதவீத வேலை மாநில மக்களுக்கே: ஆந்திராவில் சட்டம் நிறைவேறியது

75 சதவீத வேலை மாநில மக்களுக்கே: ஆந்திராவில் சட்டம் நிறைவேறியது

ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன், கடந்த ஜூலை 24, 2019 அன்று ஆந்திர சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். ஆந்திர தொழிற்சாலை மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் சட்டம் இது. மாநிலத்தில் முதலீடு செய்வோருக்கு உதவக் கூடியதாகவும், நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாகவும் இந்தச் சட்டம் இருக்கும் என்றும், இது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் எழுமானால் முதலீட்டாளர்களுடன் பேசித் தீர்க்கத் தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார். ஆந்திர மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஜி.ஜெயராமன், இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசும்போது, இந்தச் சட்டம் மாநிலத்திலுள்ள அனைத்துத் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அரசு தனியார் கூட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கும்  பொருந்தும் என்று கூறினார். வேலைக்கு உரிய தகுதியுடன் உள்ளூர் இளைஞர்கள் கிடைக்கவில்லை என்ற காரணம் காட்டி, சட்டத்திலிருந்து விதிவிலக்கு கேட்டால், அரசு தலையிட்டு இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்கை...

தகவல் அறியும் சட்டமும் நீர்த்துப் போகிறது!

தகவல் அறியும் சட்டமும் நீர்த்துப் போகிறது!

மக்கள் உரிமைகளையும் மாநிலங்கள் உரிமைகளையும் பறித்து, ஒற்றை பாசிச ஆட்சியாக இந்தியாவை மாற்றி வரும் நடுவண் ஆட்சி – இப்போது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்து விட்டது. ஆட்சியாளர் ஊழல் – அதிகாரிகள் முறைகேடுகளை அம்பலப் படுத்துவதற்கு மக்களிடம் இருந்த வலிமையான ஆயுதத்தைப் பிடுங்கி விட்டது, நடுவண் ஆட்சி. தகவல் ஆணையர் என்ற பதவிக்கு தேர்தல் ஆணையத் தலைவர் பதவிக்கு நிகரான அரசியல் சட்ட உரிமை – ஊதியம் வழங்கப்பட்டு இருந்தது. மாநில தகவல் தரும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு நிகரான உரிமை – ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது மோடி ஆட்சி கொண்டு வந்த சட்டத்திருத்தம், இந்த சுயேட்சை அதிகாரத்தைப் பறித்து, இந்த ஆணையர்களுக்கான ஊதியத்தை அவ்வப்போது நடுவண் ஆட்சியே நிர்ணயிக்கும் என்று கூறுகிறது. ஏற்கனவே இருந்த சட்டப்படி தலைமை தகவல் ஆணையர் – மாநில தகவல் ஆணையர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில்...

ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து அஞ்சலகத்திலும் ‘அவாள்’ மோசடி

ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து அஞ்சலகத்திலும் ‘அவாள்’ மோசடி

உயர்ஜாதி கட்ஆப் – 42; பட்டியல் பிரிவுக்கு 94.8 உயர்ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மோடி ஆட்சி அமுல்படுத்திய பிறகு, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ எழுத்தர்  தேர்வுக்கு பார்ப்பனர் உயர்ஜாதியினர் 28.51 கட்ஆப் மதிப்பெண் எடுத்தாலே போதும் என்ற அதிர்ச்சியான தகவல் வெளி வந்தது. பிற்படுத்தப்பட்டோரும், பட்டியல் இனப் பிரிவினரும் 61.25 ‘கட்ஆப்’ மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த சமூக அநீதியின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத நிலையில் தற்போது மேலும் ஒரு பேரிடி செய்தி வெளி வந்திருக்கிறது. இது நடுவண் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அஞ்சல் துறையில் கிளை அதிகாரிகள் என்ற பதவிகளுக்கான தேர்வு. தமிழ்நாட்டில் 4443 காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் கேட்கப்பட்டு, 2019 ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளி வந்தது. குறைந்த பட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி; ‘ப்ளஸ் டூ’ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனாலும் வழக்கமான குளறுபடிகள் அரங்கேறின. இணையதள வழியாக...

நீதிபதிகள் மீது உரிய நடவடிக்கை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகம் கடிதம்

நீதிபதிகள் மீது உரிய நடவடிக்கை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகம் கடிதம்

கொச்சி பார்ப்பன மாநாட்டில் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி அனிதா சுமந்த், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். “அரசியல் சட்டத்தின்படி விருப்பு வெறுப்பு இல்லாமல் நீதி வழங்குவதாக உறுதியேற்று உயர் பொறுப்பிற்கு வந்துள்ள நீதிபதிகள் தங்களின் ஜாதி சங்க மாநாட்டில் பங்கேற்கலாமா? அதுவும் பிராமணர்கள் இரு பிறப்பாளர்கள், உயர்வானவர்கள் என்று கூறி ஜாதிப் பாகுபாட்டை நியாயப்படுத்துவது அரசியல் சட்டத்துக்கே எதிரானது அல்லவா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கடிதத்தில் வற்புறுத்தப்பட்டுள்ளது. (கடிதத்தின் முழு விவரம் பின்னர்) பெரியார் முழக்கம் 01082019 இதழ்

‘பிராமணர்’ சங்க மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ‘அக்ரஹாரங்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வெறிப் பேச்சு

‘பிராமணர்’ சங்க மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ‘அக்ரஹாரங்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வெறிப் பேச்சு

பா.ஜ.க. நடத்தும் ‘இராமராஜ்ய’ ஆட்சியில் பார்ப்பனர்கள் வெளிப்படை யாகவே வீதிக்கு வந்து ‘பிராமணர்களே’ உயர் பிறவிகள் என்று பேசத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளே ‘பிராமணர்கள்’ உயர் பிறவிகள் என்று பெருமைப் பேசி மார்தட்டக் கிளம்பி யிருக்கிறார்கள். கேரள மாநிலம் கொச்சி நகரில் ஜூலை 19 முதல் 21 வரை ‘தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு’ (Tamil Brahmins Global Meet) என்ற மாநாட்டை நடத்தி யுள்ளனர். ‘தமிழ் பிராமணர்கள்’ தமிழ்நாட்டில் இந்த மாநாட்டை நடத்தாமல் கேரளாவில் கொச்சியைத் தேர்வு செய்துள்ளனர். இந்த மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அனிதா சுமந்த், கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சிதம்பரேஷ் ஆகியோரும், நெதர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதர் வேணு ராஜமோனி என்ற பார்ப்பனரும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். பார்ப்பனர்கள் உலகம் முழுதும் உயர் பதவிகளைப் பெற்று சர்வதேச சக்திகளாக வலிமை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் டிரம்ப், அதிபரான பிறகு அந்த நாட்டில்...

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

வழக்கறிஞர் ஒ. சுந்தரம் வழியாக… வழக்கறிஞர் ஒ. சுந்தரம், சென்னை     ரூ. 5,000/- க. காளமேகம், சென்னை  ரூ. 5,000/- பழ. மணி, சென்னை      ரூ. 5,000/- வழக்கறிஞர் இரமேஷ், சென்னை ரூ. 3,000/- வழக்கறிஞர் துரை ரூ. 2,000/- ஞானம் இளங்கோவன், சென்னை ரூ. 2,000/- சுகவனம்    ரூ.  1,000/- ஆக மொத்தம்     ரூ. 23,000/- பெரியார் முழக்கம் 25072019 இதழ்

ஜாதி மறுப்புத் திருமணம் செய்த மகளைத் தாக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்த மகளைத் தாக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம், பிதாரி செயின்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் ராஜேஷ் மிஸ்ரா. இவர், காதல் திருமணம் செய்து கொண்ட தனது மகள் சாக்ஷி மிஸ்ராவையும் (23). அவரது கணவரும் தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான அஜிதேஷ் குமாரையும் (29) படுகொலை செய்யப் போவதாக ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்தார். “நாங்கள் இருவரும் வயது வந்தவர்கள். விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டோம். எங்களது அமைதியான வாழ்க்கையில் போலீசாரோ அல்லது பாஜக எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ராவோ இடையூறு செய்யக் கூடாது” என்று உயர்நீதிமன்றத்தை நாடினர்.  உயர்நீதிமன்றத்தில் சாக்ஷி தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க நீதிபதி சித்தார்த் வர்மா உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி இவ்வாறு தீர்ப்பு வழங்கிய அடுத்த சில நிமிடங்களில், நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே, அங்கிருந்த வழக்கறிஞர்களால், சாக்ஷியும், அவரது கணவர் அஜிதேஷூம் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாஜக எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இதனிடையே, அதே நீதிமன்ற...

சித்தோடு கழகம் எடுத்த காமராஜர் பிறந்தநாள் விழா

சித்தோடு கழகம் எடுத்த காமராஜர் பிறந்தநாள் விழா

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக கல்வி வள்ளல் காமராஜரின் 117ஆவது பிறந்தநாள் விழா கூட்டம் சித்தோடு நீலிக்கரட்டில் 17.07.2019 மாலை 6:30 மணியளவில் மாவட்டச் செயலாளர் எழிலன் தலைமையிலும் புரட்சிகர இளைஞர் முன்னணி ரங்கசாமி முன்னிலையிலும் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தைப் பற்றி விளக்கி உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து சௌந்தர் உரையாற்றினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி, காமராஜரின் கல்வி சாதனைகள் குறித்தும், பெரியாரும் காமராஜரும் இத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றியும் சிறப்புரையாற்றி னார். இறுதியாக அப்பகுதியைச் சார்ந்த வேல்மாறன் நன்றியுரை வழங்கினார். வந்திருந்த கழகத் தோழர்களுக்கு வேல்மாறன் மாட்டிறைச்சி உணவு வழங்கினார். பெரியார் முழக்கம் 25072019 இதழ்

பெட்ரிசியன் கல்லூரி காமராசர் விழாவில் விடுதலை இராசேந்திரன் பேச்சு

பெட்ரிசியன் கல்லூரி காமராசர் விழாவில் விடுதலை இராசேந்திரன் பேச்சு

மாணவச் செல்வங்களே! ஜாதி எதிர்ப்பாளர்களாக மாறுங்கள்! சென்னை அடையாறில் உள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 15, 2019 அன்று காமராசர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கம் பகல் 11 மணியளவில் நடைபெற்றது. முதல் அமர்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘கல்விப் புரட்சி’ எனும் தலைப்பில் உரையாற்றினார். “கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்கே நமது நாட்டில் ஒரு புரட்சி நடத்த வேண்டியிருந்தது என்றால், அதற்கு என்ன காரணம்? ஜாதிய சமூகமாக நாம் இருந்ததுதான். மனுதர்ம அடிப்படையில் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் ‘சூத்திரர்கள்’ என்று இழிவுபடுத்தப்பட்டு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. பிறப்பின் அடிப்படையில் மறுக்கப்பட்ட கல்வி உரிமையை நேர் செய்வதற்கு வந்ததுதான் ஜாதியடிப்படையிலான இட ஒதுக்கீடு. ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்குக் காரணம் ஜாதியடிப்படையில் திணிக்கப்பட்ட பாகுபாடுகளை ஒழித்து, ஜாதி இல்லாத சமத்துவ நிலையை உருவாக்குவதற்கே தவிர, ஜாதியைக் காப்பாற்றுவதற்கு அல்ல. எனவே கல்விப்...

இதுதான் பெரியார் மண்

இதுதான் பெரியார் மண்

சென்னை தியாகராயர் நகரில் கழகக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மேடையில் மருத்துவர் எழிலன் பேசிக் கொண்டிருந்தார். “கூட்டம் நடக்கும் பகுதியில் அலகு குத்திக் கொண்டு சாமி ஆடிக் கொண்டு ‘ஓம் மகா சக்தி’ என்று முழங்கிக் கொண்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மேளதாளத்தோடு ஊர்வலமாகக் கோயிலை நோக்கிப் போகிறார்கள். அவ்வளவு பேரும் நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக் குடும்பத்தினர். மேடையில் பேசிக் கொண்டிருந்த மருத்துவர் எழிலன், பக்தி ஊர்வலம் சென்று முடியும் வரை தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். ஊர்வலம் சென்று முடிந்த பிறகு இந்த மக்களின் உரிமைகளுக்காகத் தான் பெரியார் தொண்டர்களாகிய நாம் போராடி வருகிறோம்” என்று கூறி தனது பேச்சைத் தொடர்ந்தார். அடுத்து பேச வந்த ஆளூர் ஷா நவாஸ், “இங்கே அமைதியாக பக்தி ஊர்வலத்திற்கு வழிவிட்டு பேச்சைக்கூட நிறுத்திக் கொண்டு பக்தர்கள் கடந்து செல்ல அனுமதித்தோம். இதுதான் பெரியார் மண்! நினைத்துப் பாருங்கள். இதுவே விநாயகன் ஊர்வலமாக இருந்திருந்தால்...

காமராசர், வி.பி.சிங் சாதனைகளை விளக்கிய எழுச்சி பொதுக் கூட்டம்

காமராசர், வி.பி.சிங் சாதனைகளை விளக்கிய எழுச்சி பொதுக் கூட்டம்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் சமூக நீதித் தூண்கள் காமராசர்-வி.பி. சிங் சாதனைகளை நினைவுகூரும் பொதுக் கூட்டம் ஜூலை 21, 2019 அன்று தியாகராயர் நகர் முத்து ரங்கன் சாலையில் மாலை 7 மணியளவில் பறை இசையுடன் தொடங்கியது. விரட்டு கலைக் குழுவினர் பெரியார், மணியம்மையார், அம்பேத்கர், காமராசர், வி.பி. சிங் குறித்த எழுச்சிப் பாடல்களையும் ‘நீட்’ பாதிப்புகளை விளக்கும் நாடகங்களையும் நடத்தினர். நடுவண் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வித் திட்டம் குறித்த விமர்சனப் பாடல் அனைவரையும் கவர்ந்தது. சைதைப் பகுதி கழகத் தோழர் ப. மனோகரன் வரவேற்புரை யாற்றிட தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி, காமராசர்-வி.பி.சிங் சாதனைகளை நினைவு கூர்ந்து சமூக நீதி உரிமைகள் தமிழகத்தில் படிப்படியாக பறிக்கப்பட்டு பார்ப்பனியம் வேகமாக தலைதூக்கி வருவதை சுட்டிக் காட்டினார். இளைஞர் இயக்கத்தின் நிறுவனரும் பெரியாரிஸ்டுமான மருத்துவர் நா. எழிலன், காமராசரால் சத்துணவுத் திட்டம்...

அத்திவரதரின்  அடுத்த கதி….?

அத்திவரதரின் அடுத்த கதி….?

முதியோர், கர்ப்பிணிகள், உடல்நலிவுற் றோர்  மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ‘அத்தி வரதர் தரிசனத்துக்கு வரவேண்டாம்’ என்று தமிழக  அரசின் காஞ்சி மாவட்ட நிர்வாகம் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக அரசு செலவில் விளம்பரம் செய்திருக்கிறது. “அத்திவரதரை தரிசனம் செய்து விட்டதாலேயே உங்களைக் காப்பாற்றி விடமாட்டார். அவருக்கு சக்தி இருக்கிறது என்றெல்லாம் நம்பி வராதீர்கள்” என்ற வாசகங்களையும் விளம்பரத்தில் சேர்த்து அறிவித்திருந்தால் பொது மக்களுக்கு எளிதாகப் புரிந்திருக்கும். பரவாயில்லை. எதற்கு வீண் வம்பு? பக்தர்களே, புரிந்து கொண்டால் சரி. இதுவரை கூட்ட நெரிசல்களில் சிக்கி 7 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆபத்துக்கு உதவிட அவசர மருத்துவ சிகிச்சை, ஆக்சிஜன் சிலிண்டர் எல்லாம் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. என்னுடைய சக்தியை இப்படி எல்லாம் கேலி செய்வதா என்று கோபத்தில் அத்திவரதர் எழுந்து ஓடிப்போய் குளத்தில் மீண்டும் விழுந்து விடப் போகிறாரா என்ன? அப்படியே ஓடினாலும் காவல்துறை விட்டு விடுமா? சரி; அத்திவரதர் இதுவரை...

11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்

11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்

ட    பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, இட ஒதுக்கீட்டை மேலும் பத்து ஆண்டுக்கு நீட்டித்துச் சட்டமியற்றினார். ட    புத்த மதத்தைத் தழுவிய  தாழ்த்தப்பட் டோருக்கும் இடஒதுக்கீடு உரிமைகளை அளித்தார். ட    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கான ஆணைக் குழுவுக்கு (கமிசன்) அமைச்சரக அதிகார உரிமையை வழங்கினார். ட    வானொலி, தொலைக்காட்சிகளில் ஆளுங்கட்சி யின் ஆதிக்கத்தை மாற்றத் தன்னாட்சி உரிமம் வழங்கும் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார். ட    அமைச்சர், முதலமைச்சர் உள்பட எவர்மீது ஊழல் புகார் வந்தாலும், அவற்றை விசாரிக்கும் (ஆராயும்) ‘லோக்பால்’ எனும் உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்கச் சட்டமுன் வரைவுக் கொண்டு வரப்பட்டது, அவரது ஆட்சியில்தான். ட    அஞ்சலுறைகளைப் பிரித்துப் பார்ப்பது, தொலைபேசியின் மூலம் ஒட்டுக் கேட்பது போன்ற, மனித உரிமை மீறல்களுக்கு வழி வகுக்கும் அரசியல் சட்டத்தின் அய்ம்பத்தாறாவது பிரிவை நீக்கினார். ட    ஒரு மாநிலத்துக்கு மட்டும் தனியாக, அவசர நிலையை அறிவித்து, அடிப்படை உரிமையைப் பறிக்கும்...

பா.ஜ.க. ஆட்சியில் சர்வம் சமஸ்கிருத மயமே!

பா.ஜ.க. ஆட்சியில் சர்வம் சமஸ்கிருத மயமே!

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அனைத்து திட்டங்களுக்குமே முழுக்க முழுக்க சமஸ்கிருத பெயர் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது. முக்கிய திட்டங்கள் அனைத்திற்கும் ஆங்கிலம், இந்தி என இரண்டிலும் பெயர் வைக்கப்படவில்லை. சமஸ்கிருதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் அறிக்கையின் தலைப்பு : சங்கல்ப் பாரத், செசாகத் பாரத் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏற்கெனவே இருந்த புதிய திட்டங்களின் பெயர்கள் : பிரதான் மந்திரி கிசான் சம்மான் கிசான் சம்மான் நிதி யோஜனா, பிரதான் மந்திரி ஜன் ஆவாஜ் யோஜனா, சடக் நிர்மார் யோஜனா, பிரதான் மந்திரி ஆஷா யோஜனா, பிரதான் மந்திரி கிரிஷி கின்சாயி யோஜனா, உதாமஷில் உத்தர்பூர்வ யோஜனா, பாரத் மாலா பரியோஜனா, பிரதான் மந்திரி ஷேரெம்யோகி மந்தன் யோஜனா, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா, ஸ்வாஸ்த் சுரக்ஷh யோசுனா, சம்மான் நிதி யோஜனா பெரியார் முழக்கம் 25072019 இதழ்

காமராசர் சாதனைகள் – பறிபோகும் கல்வி உரிமைகளை கிராமம் கிராமமாக விளக்கினர் திருப்பூரில் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயண எழுச்சி

காமராசர் சாதனைகள் – பறிபோகும் கல்வி உரிமைகளை கிராமம் கிராமமாக விளக்கினர் திருப்பூரில் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயண எழுச்சி

திருப்பூர்  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காமராசர் பிறந்த நாள் விழாவை கல்வி உரிமை மீட்புப் பரப்புரையாக 3 நாள்கள் பொது மக்கள் பேராதரவுடன் நடத்தினர். கல்விவள்ளல் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில், கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் மற்றும் தெருமுனை கூட்டங்கள் ஜூலை 14, 15, 16 தேதிகளில் திருப்பூர், பல்லடம், மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் மூன்று நாள்கள் நடைபெற்றது. பரப்புரை பயணம் – கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்று! தமிழ்நாட்டில் நீட் தேர்வை விலக்கு! புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை திணிக்காதே !  போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பயணம் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. முதல் நாள் 14.07.2019 அன்று திருப்பூர் அம்மாபாளையத்தில் அமைந்துள்ள காமராசர் சிலைக்கு, கழக பொருளாளர் துரைசாமி மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து அம்மாபாளையத்தில் முகில் இராசு தலைமையில் தெருமுனைக்...

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

ஈரோடு மாவட்டம் (தெற்கு) ஈஸ்வர மூர்த்தி, திருப்பூர் ரூ. 25,000/- ஆசிரியர் சிவக்குமார், ஈரோடு   ரூ. 20,000/- வேணுமெஸ், மேட்டூர்    ரூ. 20,000/- தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்     ரூ. 15,000/- பவானிடெக்ஸ் பெரியார் தொழிற்சங்க உறுப்பினர்கள்     ரூ. 15,000/- காசிபாளையம் வேலுச்சாமி வழியாக  ரூ. 15,000/- டாக்டர் சக்திவேல் (சக்தி மருத்துவமனை)    ரூ. 10,000/- டாக்டர் சுதாகரன் (சுதா மருத்துவமனை)     ரூ. 10,000/- மா. சீனிவாசன் (தமிழ்நாடு பேக்கர்ஸ்) ரூ. 10,000/- பெரியசாமி, குன்னத்தூர்  ரூ. 10,000/- கொடிவேரி ஜெயக்குமார்  ரூ. 10,000/- பெரியார் முழக்கம் 18072019 இதழ்

அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – நடுவண் ஆட்சிக்கு எச்சரிக்கை

அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – நடுவண் ஆட்சிக்கு எச்சரிக்கை

அணுக்கழிவு சேமிப்பு வைப்பகத்தை தமிழ்நாட்டுக்குள் திணிக்காதே! 14.07.2019 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை  மாநாடு காலை 11 மணி அளவில் தொடங்கியது. ஜப்பானில் புகுசிமாவில் ஏற்பட்ட விபத்தைப் பற்றியும் அணுக்கழிவு வைக்கப்பட்டிருக்கும் நான்காவது வளாகம் பற்றியும் விளக்கும் ஆவணப்  படமும் பிரான்சில் அணுக்கழிவு பாதுகாப்பு எவ்வளவு அபாயகர மானதாக இருக்கிறது என்பதை விளக்கும் ஆவணப்படமும் திரை யிடப்பட்டது. பின்னர் அறிவியல் அமர்வு தொடங்கியது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவரும் பியூசிஎல்-இன் தமிழ் மாநிலத் தலைவருமான தோழர் கண. குறிஞ்சி இவ்வமர்வுக்குத் தலைமை ஏற்றார். கூட்டமைப்பின் நீண்ட காலச் செயல்பாடு குறித்து விளக்கி அமர்வை ஒருங்கிணைத்தார். இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் தி.வேல்முருகன் தொடக்கவுரை ஆற்றினார். அணுக் கழிவுப் புதைப்பதைத் தடுப்பதற்கு இதை வெகுமக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் மோடி அரசு...

கோவையில் கழகம் நடத்திய  கல்விக் கொள்கைக் கருத்தரங்கம்

கோவையில் கழகம் நடத்திய கல்விக் கொள்கைக் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இந்தியை திணிக்காதே! கல்வியை காவி மயமாக்காதே! என்ற முழக்கத்துடன், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019 பற்றிய கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் 12.07.2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கத்தில் மாலை 4:30 மணிக்கு நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு நேருதாசு தலைமை வகித்தார். வெங்கட் வரவேற்புரையாற்றினார். பா.இராமச்சந்திரன், யாழ் வெள்ளிங்கிரி, இரா. பன்னீர்செல்வம், நா.வே. நிர்மல் குமார், ஜெயந்த், கிருட்டிணன், சிலம்பரசன், வைத்தீஸ்வரி, அஜீத்குமார், சபரிகிரி, தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றிய விரிவான கருத்துரையை, பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் மாநில ஒருங் கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வழங்கினார். தமிழ்நாடு மாணவர் கழகத்தின் விஷ்ணு நன்றியுரையாற்றினார். பெரியார் முழக்கம் 18072019 இதழ்

டாக்டர் அறிவுக்கரசி நன்கொடை

டாக்டர் அறிவுக்கரசி நன்கொடை

மேட்டூர் மார்டின்-விஜயலட்சுமி மகள் அறிவுக்கரசி, ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு முடித்து விட்டு டெல்லிக்கு தேர்வெழுத செல்லும்போது ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு ரூ.2,000/- நன்கொடை அளித்தார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 18072019 இதழ்

10 சதவிகித இடஒதுக்கீட்டை அமுல்படுத்த பணியிலிருக்கும் ஆசிரியர்கள் நீக்கம்

10 சதவிகித இடஒதுக்கீட்டை அமுல்படுத்த பணியிலிருக்கும் ஆசிரியர்கள் நீக்கம்

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த, தில்லிப் பல்கலைக்கழகம் மிகவும் அவசரகதியில் நடவடிக்கை எடுத்திருப்பதன் காரணமாக தற்சமயம் பணியிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேலைநீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைக் கண்டித்து, தில்லிப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைமையில், ஆசிரியர்கள், இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில், தில்லிப் பல்கலைக் கழக நிர்வாகமானது, தற்போது பணியிலிருக்கும் தற்காலிக ஊழியர்கள் நூற்றுக்கணக்கானவர்களை வேலையை விட்டு நீக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக, தில்லிப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ரபிப் ராய் குற்றம் சாட்டியுள்ளார். தில்லி பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை சரியல்ல என்றும், தற்சமயம் பணியி லிருக்கும் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படாத விதத்தில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கும் வரை, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழக...

வர்ணாசிரம கல்விக் கொள்கை

வர்ணாசிரம கல்விக் கொள்கை

இந்தியாவில் ஆரியர்கள் குடியேறிய பின் அதிகாரம் பெற்றவர்களாக மாறினார்கள். வேதங்கள் உருவாக்கப்பட்டன. இந்துத்துவா கொள்கையை வேலையின் அடிப்படையில் நான்கு வர்ணங்களை உருவாக்கினார்கள். முதல் மூன்று வர்ணங்களும் சேர்ந்து மனித சமூகத்திற்கு உழைப்பாளிகளாக இருந்த மக்களை அடிமைப்படுத்தினார்கள். அவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.  அக்காலக்கட்டத்தின் குருகுல கல்வி முறை உருவானது. வேதங்கள் கற்றுக் கொள்வதும் கொடுப்பதும் பிராமணர்கள், ஆட்சி புரிபவர் சத்திரியர், வியாபாரம் செய்பவர்கள் வைசியர்கள். இவர்களே கல்வி கற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. சூத்திரர், பஞ்சமர் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்கள் வேதங்களை கேட்டாலே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள் என்று மனுதர்ம கோட்பாடு கூறுகிறது. அக்கால கட்டத்தில் மறைந்திருந்து வில்வித்தை கற்ற வேடர் சமூகத்தை சேர்ந்த ஏகலைவன் கட்டை விரல் வெட்டப்பட்டது வர்ணாசிரம கோட்பாட்டின் அடிப்படையில் தான். இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பொதுக் கல்வி முறை 1968இல் கோத்தாரி கமிஷனால் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி...

2024இல் இந்து இராஷ்டிரமாக இந்தியா அறிவிக்கப்படுமாம்

2024இல் இந்து இராஷ்டிரமாக இந்தியா அறிவிக்கப்படுமாம்

உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர், சுரேந்திரா சிங். வாயைத் திறந்தாலே இஸ்லாமிய எதிர்ப்பும், வெறுப்புமாக கொட்டித் தீர்ப்பவர். அந்த வகையில், மீண்டும் இஸ்லாமியர்கள் மீது வன்மத்தைக் காட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைத் தளங்களில் வெளியாகியுள்ளன. அந்த வீடியோக்களில் ஒன்றில், “இஸ்லாமியர்கள் 50 மனைவிகளை மணமுடித்து 1050 குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள்” என்றும், “இது பாரம்பரியம் அல்ல, மிருகத்தனமான செயல்” என்றும் தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல, “2024ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். துவங்கப்பட்டு 100ஆண்டுகள் நிறைவடைகின்றது; அந்த ஆண்டில் இந்தியா இந்து இராஷ்ட்ராவாக அறிவிக்கப்படும்” என்றும் மற்றொரு வீடியோவில் குறிப்பிட்டுள்ள சுரேந்திரா சிங், “மேற்கு வங்க மாநிலம் இலங்கை போன்றது;  இராமரைப் போன்று தாங்கள் ஏற்கெனவே  பாதி மேற்கு வங்கத்தை சிதைத்து விட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவின்போது மீதமுள்ள மேற்கு வங்கமும் சிதைக்கப்படும்” என்றும் ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார். பெரியார் முழக்கம் 18072019 இதழ்

மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் பேச்சு அணுக்கழிவுகளைப் புதைக்கும் பாதுகாப்பான இடம் உலகில் எங்குமே இல்லை

மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் பேச்சு அணுக்கழிவுகளைப் புதைக்கும் பாதுகாப்பான இடம் உலகில் எங்குமே இல்லை

கூடங்குளத்தில் ‘அணுக் கழிவு மய்யம்’ அமைக்கும் நடுவண் அரசின் ஆபத்தான திட்டத்தை எதிர்த்து அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் 14.7.2019 அன்று சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் ஒரு நாள் எச்சரிக்கை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: காலையிலிருந்து மாநாட்டில் தொடர்ந்து பங்கேற்று கருத்துகளைக் கேட்டு வருகிறீர்கள். அணுஉலை ஆபத்துகளை ஆழமாக உணர்ந்து, அதைத் தடுத்து நிறுத்தி, நமது மண்ணை மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை யும் உறுதியும் கொண்டவர்கள் என்பதாலேயே காலை முதல் அர்ப்பணிப்பு உறுதியுடன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். கூடங்குளத்தில் 6 அணுஉலைகளைக் கொண்டு வந்து அணுஉலைப் பூங்காவாகவே மாற்றுகின்றன நடுவண் ஆட்சிகள். இப்போது பா.ஜ.க. ஆட்சி உலகிலேயே மிக மிக ஆபத்தான ‘அணுக்கழிவு கருவூலம்’ என்ற சேமிப்பு கிடங்கினையும் தமிழ்நாட்டிலேயே அமைக்கப் போகிறதாம். அணுக்கழிவு கருவூலம் அல்லது வைப்பகம் ஆபத்துகளை விளக்கி சூழலியல் ஆய்வாளர் நக்கீரன் எழுதிய...

தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் தலைவிரித்தாடுகின்றன. ஜாதிகளைக் கடந்து ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொள்ள அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஜாதிவெறிக் கூட்டம் கையில் எடுத்துக் கொண்டு வீச்சறிவாளையும் கத்தியையும் தூக்கிக் கொண்டு வருகிறது. ‘நாம் எல்லோரும் இந்துக்கள்’ என்று மதவாதம் பேசும் கூட்டம், இந்துக்களுக்குள்ளே நடக்கும் ‘ஜாதிக் கொலைகளை’ எதிர்க்காமல் மவுனம் சாதிக்கிறது. தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளே நடக்கவில்லை என்கிறது, தமிழக அரசு! ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சட்டத்தையும் கொண்டுவர மறுக்கிறது, மத்திய சட்ட ஆணையம். ஜாதியப் படுகொலைகளைத் தடுக்கும் மசோதாவைத் தயாரித்து 2011ஆம் ஆண்டு நடுவண் ஆட்சிக்கு அனுப்பி பல ஆண்டுகளாகியும் மசோதா கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஜாதி ஆணவப் படுகொலைகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுகளுக்கு 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 22 மாநில அரசுகள் பதிலளித்து விட்டன. தமிழ்நாடு மட்டுமே பதிலளிக்கவில்லை. இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய முன் வந்தால் முதியவர்கள்...

மண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே! ஆக. 26-31 வரை கழகத்தின் பரப்புரை 5 முனைகளிலிருந்து தொடங்குகிறது கழகத்தின் தலைமைக் குழு முடிவு

மண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே! ஆக. 26-31 வரை கழகத்தின் பரப்புரை 5 முனைகளிலிருந்து தொடங்குகிறது கழகத்தின் தலைமைக் குழு முடிவு

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, ஜூலை 13, 2019 பிற்பகல் 2.30 மணியளவில் மேட்டூரில் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நிகழ்ந்த குழுவின் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, முகநூல் பதிவு பொறுப்பாளர் பரிமள ராசன், இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், சென்னை இரா. உமாபதி, விழுப்புரம் அய்யனார், மடத்துக்குளம் மோகன், மேட்டூர் சக்திவேல், காவலாண்டியூர் ஈசுவரன், சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கழகக் கட்டமைப்பு நிதி வரவு குறித்து நன்கொடையாளர்கள் அளித்த நிதி விவரங்களை தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன் விரிவாக எடுத்துரைத்தார். தலைமைக் கழகக் கட்டிடத்தை மறு சீரமைப்பு...

பொன்.இராமச்சந்திரன் ரூ.5000 நன்கொடை

பொன்.இராமச்சந்திரன் ரூ.5000 நன்கொடை

கழக ஆதரவாளர் சென்னை பொன். இராமச்சந்திரன், கழகக் கட்டமைப்பு நிதியாக தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரனிடம் ரூ.5000 நிதி வழங்கினார். பெரியார் முழக்கம் 11072019 இதழ்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை

அரசுப் பள்ளிகளில் பதினோராம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில்கூட பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை தான் தொடர்கிறது. அந்த ஒரு ஆசிரியர் பணியிடத்திற்கும் ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் மாணவர்கள் அவதியுறும் நிலை உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் மாணவர்கள் தேர்ச்சி விழுக்காட்டில் சரிவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் சில தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்கிறார்கள். இந்த பெற்றோர்-ஆசிரியர் கழக நியமன ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளை நடத்த முடியாத சூழல்தான் நிலவி வருகிறது. கல்விப் பணி மட்டுமல்லாமல் நிர்வாகப் பணிகளுக்கும் ஆள் பற்றாக்குறையோடு பள்ளிகள் இயங்கி வருகிறது. அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ள...

இந்துத்துவா : ஆயிரம் ஆண்டுகாலமாக நடக்கும் சித்தாந்தப் போராட்டம்

இந்துத்துவா : ஆயிரம் ஆண்டுகாலமாக நடக்கும் சித்தாந்தப் போராட்டம்

பா.ஜ.க. மீது நாம் நடத்துவது சித்தாந்தப் போராட்டம். இது ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் போராட்டம். பா.ஜ.க.வினர் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு கோபம் இல்லை; அவர்கள் சித்தாந்தத்தை என்னுடைய ஒவ்வொரு இரத்த அணுவும் எதிர்க்கிறது. இந்தியாவில் அனைத்து அமைப்புகளையும் ‘இந்துத்துவ’ கொள்கையால் நிறுவனப்படுத்தி முடித்து விட்டார்கள். இனி வரப்போகும் தேர்தல்கள் சடங்குகளாகவே இருக்கும். அதிகாரத்தைத் துறக்கும் மனநிலை கொண்டவர்களால்தான் இந்தத் தத்துவத்தைத் தோற்கடிக்க முடியும். – ராகுல் காந்தி டிவிட்டரிலிருந்து பெரியார் முழக்கம் 11072019 இதழ்

பார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம் தபோல்கரை பின்னாலிருந்து தலையை குறி வைத்து சுட்டேன்!

பார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம் தபோல்கரை பின்னாலிருந்து தலையை குறி வைத்து சுட்டேன்!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர், 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புனேவில் நடைப் பயிற்சி சென்ற போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து கோவிந்த் பன்சாரே 2015ஆம் ஆண்டு பிப்ரவரியிலும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.எம்.கல்புர்கி 2015 ஆகஸ்டிலும் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவர்கள் மூவருமே இந்துத்துவா மதவெறிச் சிந்தனைக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தவர்கள் ஆவார்கள். பகுத்தறிவாளர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முக பரிமாணங்களைக் கொண்டவர்கள். எனினும், இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடை யாளம் காண்பதில் போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில், கன்னட வார இதழான ‘லங்கேஷ்’ பத்திரிகை யின் ஆசிரியர் கவுரி லங்கேஷ், 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, அவரது வீட்டின் முன்பாகவே சுட்டுக் கொல்லப் பட்டது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், கவுரி லங்கேஷ் படு கொலை வழக்கில், பெரும் அக்கறை எடுத்துக் கொண்ட அன்றைய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்து,...

உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்?

உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்?

1956இல் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகத் தமிழ் இருந்தது. அப்போது தமிழார்வம் கொண்ட ஒரு நீதிபதி சிவில் வழக்கொன்றில் தமிழில் தீர்ப்பளித்தார். சென்னை உயர் நீதிமன்றம் தமிழில் தீர்ப்பு எழுதப்பட்ட ஒரே காரணத்துக்காக அத்தீர்ப்பை ரத்துசெய்தது. பின்னர், 1976இல் 4பி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டு, கீழமை நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சிமொழியாகக் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து ராஜஸ்தானி வழக்கறிஞர் ஒருவர் போட்ட வழக்கை, உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது (1995). அச்சட்டத்திலுள்ள விதிவிலக்கைப் பயன்படுத்தி, பல மாவட்ட நீதிபதிகள் உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டதன் விளைவாக தலைமை நீதிபதி சுவாமி, நீதிபதிகள் விரும்பும் மொழியில் தீர்ப்பை எழுதலாம் என்று சுற்றறிக்கை விடுத்தார். இதனால், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்புகளை ஆட்சிமொழியான தமிழில் எழுதுவது அநேகமாக நிறுத்தப்பட்டது. வக்கீல்களும் தாழ்வுமனப்பான்மையில் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே வாதாடலாயினர். இதைத்தான் 140 வருடங்களுக்கு முன்னால்...

அறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்

அறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்

கிண்டி பொறியியல் கல்லூரிக்கு முதன் முதலாக கணிப்பொறி வந்தபோது தனது 86ஆம் வயதில் கிண்டிக்குச் சென்று அது குறித்த விவரங்களைக் கேட்டு அறிந்தார் பெரியார். அன்றைய சென்னை மாநிலத்தில், மாணவர்கள் முன்னின்று நடத்திய மொழிப் போர் உச்சத்தில் இருந்த 1965ஆம் ஆண்டு, அதே ஆண்டில் நடந்த இன்னும் ஓர் அரிய நிகழ்வு பிற்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது எனப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந் திருந்த அடிப்படைப் பொறியியல் ஆய்வு மையத் துக்கு ஓர் புதுமையான கருவி வந்து இறங்கியது. ஐபிஎம் 1620 வகை கணினி அது. இந்தியாவில் முதன் முதலில் கணினியின் பயன்பாடு தொடங்கப்பட்டது, வடக்கே கான்பூர் ஐஐடியிலும் தெற்கே கிண்டி பொறியியல் கல்லூரியிலும்தான். அக்கணினி மையத்தின் இயக்குநராக வா.செ.குழந்தைசாமி, போர்ட்ரான் முதலான கணினி நிரல்மொழிகளைப் பயிற்றுவித்து வந்தார். ஐபிஎம் 1620 வகை கணினியில் தகவலை ‘பஞ்ச் கார்ட்’ எனப்படும் துளை யிடப்பட்ட அட்டைகள்...

மருத்துவக் கல்வி: மறுக்கப்படும்  27 சதவீத இடஒதுக்கீடு

மருத்துவக் கல்வி: மறுக்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீடு

மருத்துவப் பட்டப் படிப்பு, மேல் பட்டப் படிப்புகளுக்கான இடங்களில் ‘அகிலஇந்திய கோட்டா’ என்ற பிரிவில் நடுவண் ஆட்சி இடங்களைப் பறித்துக் கொள்கிறது. மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 சதவீதமும் மேல்பட்டப் படிப்புக்கான இடங்களில் 50 சதவீதமும் இவ்வாறு பறிக்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுகள், கடந்த பத்து ஆண்டுகளாக மறுக்கப்படுகின்றன. பட்டியல் இனப்பிரிவினருக்கான இடஒதுக்கீடுகள் வழங்கும்போது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உரிமைகளை மறுக்கக் கூடாது என்று சமூக நீதி மருத்துவர் சங்கத்துக்கான பொதுச் செயலாளர் டாக்டர் இரவீந்திரநாத், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார். மத்திய கல்வி நிறுவனங்களுக்கான சட்டத்தில் இடம் பெற்றுள்ள சில பிரிவுகளைக் காட்டி இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அந்த சட்டப் பிரிவுகள் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க தடை செய்யவில்லை என்று வழக்கு  மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 11072019 இதழ்

ஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்

ஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்

அண்மையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை 65 ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஈழத்தில் போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும் தங்களின் தாயகத்தை உறுதி செய்யாமல் நாடற்ற மக்களாக வாழ்கிறார்கள், ஈழத் தமிழர்கள். 1983ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை அகதிகளாகத் தமிழகம் வந்தவர்கள் 95,000 பேர். இவர்களில் 60,000 பேர் மாநில அரசு நடத்தும் 107 அகதிகள் முகாம்களில் இருக்கிறார்கள். மாநில அரசு நடத்தும் இந்த முகாம்களுக்கு கணிசமான நிதி உதவியை மத்திய அரசு வழங்குகிறது. ஏனையோர் முகாம்களில் அல்லாமல் தங்கள் சொந்த செலவிலேயே தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வாழ்கிறார்கள். உள்ளூர் காவல் நிலையங்களில் அவ்வப்போது அவர்கள் தங்களைப் பற்றிய தகவல்களைத் தர வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தோட்டத் தொழிலாளர் களாக அழைத்துச் செல்லப்பட்ட பலர் தமிழ் ஈழப் பகுதிகளிலேயே தங்கி விட்டனர். 1983ஆம்...

வைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்!

வைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்!

‘வைகோ’ இராஜதுரோகி என்று குற்றம்சாட்டியிருக்கிறது சென்னை சிறப்பு நீதிமன்றம். ஈழத் தமிழர் பிரச்சினையில் மன்மோகன் சிங் ஆட்சி செய்த துரோகங்களை அவ்வப்போது கடிதங்களாக எழுதி, பிறகு அதைத் தொகுத்து ‘ஐ யஉஉரளந’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். அதையே தமிழில் மொழி பெயர்த்து, ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளி யீட்டு விழா, சென்னை இராணி சீதை அரங்கில் நடந்தது (அந்த விழாவில் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றார்). அப்போது ஈழத் தமிழருக்கு இந்திய அரசு தொடர்ந்து செய்து வரும் துரோகங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கே கேடு ஏற்பட்டு விடும் என்று எச்சரித்தார். அந்தப் பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 124(ஏ)வுக்கு எதிரான இராஜ துரோகம் என்று அன்றைய தி.மு.க. ஆட்சி வழக்கு தொடர்ந் தது. வழக்கில் ‘ஆம் இராஜ துரோகம் தான்’ என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்து, ஓராண்டு சிறை, ரூ. 10,000 அபராதம் விதித்துள்ளது. ‘ஈழத் தமிழருக்கு, ...

நடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை

நடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கையில் தமிழக முதல்வர் முன் வைத்த கோரிக்கைகள் ஏதும் இடம் பெறவில்லை. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிதிநிலையைப் பாராட்டி மகிழ்கிறார். நிதிநிலை அறிக்கைத் தயாரிப்புக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் இருவரும் தமிழகத்துக்காக ஏராளமான கோரிக்கைகளை முன் வைத்தனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசைகளை அகற்றி இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளுடன் கூடிய வீடுகளைக் கட்ட கூடுதலாக ரூ.6000 கோடியை ஒதுக்க தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார். (பிரதான் மந்திரி அவாஸ் – யோஜனா – கிராமின் என்ற திட்டத்தின்கீழ்) ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை. இயற்கைப் பேரிடர்கள் நிகழும் இடங்களில் அந்தப் பேரழிவுகளின் நேரடித் தாக்குதலிலிருந்து விடுவிக்க “பேரிடர் தடுப்பு பல்நோக்கு மின் மய்யக் கட்டமைப்பு” (ஆரடவi-hயணயசன-சநளளைவயவே யீடிறநச வசயளேஅளைளiடிn iகேசயளவசரஉவரசந) அமைக்க, நிதி நிலை அறிக்கையில் ரூ.7077 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி...

அன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்தவர்கள் இன்று அமுல்படுத்துகிறார்கள் பெரியார் வெற்றி நடைபோடுகிறார்

அன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்தவர்கள் இன்று அமுல்படுத்துகிறார்கள் பெரியார் வெற்றி நடைபோடுகிறார்

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்த பார்ப்பனர்கள், ‘சங்கிகள்’ இப்போது மகாராஷ்டிராவில் அதைப் பின்பற்றுகிறார்கள். வேத மதத்தை ‘பிராமணரல்லாத’ வெகு மக்கள் மீது ‘இந்து’ மதம் என்ற போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு திணித்த பார்ப்பனர்கள் பெரும்பான்மை மக்களை ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ களாக்கியதோடு  ஜாதிக் குழுக்களையும் உருவாக்கி மக்கள் ஒற்றுமையை சிதைத்தனர். குலத் தொழில் அடிமைத் தொழில் பிறப்பின் அடிப்படையில் திணிக்கப் பட்டது. குல தர்மப்படி வேதம் படிக்க வேண்டிய பார்ப் பனர்கள் மட்டும் வழக்கறிஞர்களாக மருத்துவர் களாக நீதிபதிகளாக உயர் அதிகாரிகளாகி பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே அதிகார மய்யங்களை ஆக்கிரமித்துக் கொண்டதோடு ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை ‘இந்து’க்களுக்கு உரிமைகளைத் தடுத்து வந்தனர். அக்காலக் கட்டத்தில்தான், ‘இந்து’ சமூகத்தில் அடக்கப் பட்ட ஒடுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத பெரும் பான்மை சமூகத்தினருக்கு கல்வி – வேலை -அரசியல் உரிமை களுக்காகப் பெரியார் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டு போர்க்கொடி உயர்த்தினார். “அப்போது பெரியார் ஜாதிப் பிரிவினையைத் தூண்டுகிறார்; இந்த கோரிக்கை...

இந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகர்சாமி க. திருநாவுக்கரசு

இந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகர்சாமி க. திருநாவுக்கரசு

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தங்களை ஒப்படைத்து எதிர்நீச்சலில் வாழ்ந்து காட்டிய அஞ்சாநெஞ்சன் அழகிரி குறித்த வாழ்க்கைச் சுருக்கம். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகிய இயக்கங்களின் வளர்ச்சிப் போக்கில், தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர் பட்டுக்கோட்டை அழகர்சாமி! இவரது பெயருக்கு முன்பு பட்டுக் கோட்டை என்று அடைமொழி இருந்தாலும், இவரது சொந்த ஊர் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள காருகுறிச்சி ஆகும். இவரது பெற்றோர் வாசுதேவ நாயுடு – கண்ணம்மாள், தந்தையார் வாசுதேவ நாயுடு பட்டாளத்தில் சுபேதாராகப் பணியாற்றி விட்டுப் பின்னர் காவல் நிலையத் தலைமைக் காவலராக (ஹெட் கான்ஸ்டபிள்) வேலை பார்த்தவர். அழகர்சாமி பசுமலையில் நான்காவது படிவம் (9ஆம் வகுப்பு) வரை படித்தவர். அதன் பிறகு, பட்டுக்கோட்டையில் அந்நாளில் நீதிக்கட்சியில் புகழ்பெற்ற வழக்கறிஞராய் இருந்த வேணுகோபால் நாயுடு என்பவரின் பரிந்துரையின் பெயரில் கூட்டுறவு வங்கியில் எழுத்தராகச் சில காலம் பணியாற்றினார். அந்த பாங்கியில் வேலை பார்த்த பார்ப்பன மேலாளர்க்கும் இவர்க்கும் ஏற்பட்ட...

தலைமை ஆசிரியரின் ஜாதி வெறியை எதிர்த்து களமிறங்கினர் கோவை கழகத் தோழர்கள்

தலைமை ஆசிரியரின் ஜாதி வெறியை எதிர்த்து களமிறங்கினர் கோவை கழகத் தோழர்கள்

கோவை சரவணம்பட்டி அருகே கரட்டு மேடு கந்தசாமி நகர் நகரில் உள்ள அரசு துவக்கப் பள்ளி யில் தாழ்த்தப் பட்ட சமூகத்தை சார்ந்த குழந்தை களிடம் ஜாதி வெறியுடன் தலைமையாசிரியர் ஜெயந்தி நடந்து வந்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் அந்த பகுதி மக்கள் புகார் அளித்ததனர். இதை அறிந்த  திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வெங்கட் கிருஷ்ணன் நிர்மல் அந்த பகுதிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட குழந்தை திவ்யபாரதி மற்றும் அங்கு படிக்கும் சில குழந்தைகளிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொண்டு அந்தப்  பகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அங்கு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது தெரிந்ததால். 26.6.2019 அன்று அந்த தலைமையாசிரியர் மீது சட்டப்படி தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் மாநகர காவல் ஆணையர் இடமும் மாவட்ட...

ஜாதி வெறிப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் நேரில் ஆறுதல்

ஜாதி வெறிப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் நேரில் ஆறுதல்

ஜாதி வெறி மனிதத்தையே சாகடிக்கிறது. மேட்டுப்பாளையம் அருகே தலித் பெண்ணோடு குடும்பம் நடத்தியதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த வினோத்குமார் என்ற 24 வயது இளைஞர், சொந்தத் தம்பியையே வெட்டிப் படுகொலை செய்து விட்டான். தாக்குதலுக்கு உள்ளாகிய தலித் பெண்ணும் மரணமடைந்து விட்டார். 24 வயதுள்ள இளைஞனைக்கூட ஜாதி வெறி எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கே அவமானம். கடந்த 5 ஆண்டுகளில் 185 ஜாதி வெறிக் கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. ‘கவுரவக் கொலை’களே தமிழ்நாட்டில் நடப்பது இல்லை என்று ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது சட்டசபையில் ‘வாய் கூசாமல்’ பேசினார். 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஜாதி வெறிப் படுகொலைகள் குறித்த விவரங்களை மாநில அரசுகளிடம் கேட்டது. 22 மாநில அரசுகள் விவரங்களை அனுப்பின. தமிழ்நாடு அரசு எந்த அறிக்கையையும்  அனுப்பவில்லை. தேசிய சட்ட ஆணையம், ஜாதி வெறியோடு திருமணங்களைத் தடுக்க முனைவதை சட்டப்படி குற்றமாக்கும் மசோதா ஒன்றை 2011ஆம் ஆண்டு...

டாக்டர் ரமேசுக்கு நேரில் ஆறுதல்

டாக்டர் ரமேசுக்கு நேரில் ஆறுதல்

கோவை சமூக செயல்பாட்டாளர் டாக்டர் ரமேஷ், மனைவி ஷோபனா சாலை விபத்தில் மரணமடைந்தார். துணைவரை இழந்த நிலையிலும் தொடர் விபத்திற்கு காரணமான அப்பகுதி டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி டாக்டர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அந்த மதுபானக் கடை தற்போது மூடப்பட்டுள்ளது. 26.06.2019 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, டாக்டர் ரமேஷை இல்லத்தில் சந்தித்து நடந்தவற்றை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். கழகத் தோழர்கள் நேருதாஸ், நிர்மல்குமார் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

ஜாதிக் கட்சி – பார்ப்பனர்களுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் ‘தர்ம பிரபு’

ஜாதிக் கட்சி – பார்ப்பனர்களுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் ‘தர்ம பிரபு’

‘காதல்’  – ‘பேய்’ – ‘சண்டை’ என்று மசாலாக்களைக் கொண்ட திரைப் படங்கள் புற்றீசல்களாக வந்து கொண் டிருக்கும் நிலையில் ‘தர்ம பிரபு’ போன்ற சமூகச் சிந்தனைகளைக் கொண்டு மக்களுக்கான அரசியலைப் பேசும் படங்கள் வெளி வருவது மிகவும் அபூர்வம். முத்துக்குமரன் எழுதி இயக்கி, யோகி பாபு கதாநாயகனாக நடித்து வெளி வந்திருக்கும் ‘தர்மபிரபு’ – பார்ப்பனர்கள் சூழ்ச்சி, ஜாதிக் கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலை சாட்டையால் அடித்து நொறுக்குகிறது. ‘துக்ளக்’ சோ, பார்ப்பனர் உருவத்தில் ஒரு பாத்திரமே உருவாக்கப்பட் டுள்ளது. கராத்தேயில் கறுப்பு பெல்ட் வாங்கியவர்கள்கூட வெள்ளை பெல்டுக்கு (பூணூல்) பயப்பட வேண்டும் என்று ‘சோ’ வடிவில் வரும் ‘கோ. அரங்கசாமி’ என்ற பாத்திரம் பேசுகிறது. பெரியாரின் ‘கடவுளை மற மனிதனை நினை’ என்ற கொள்கையின் நியாயத்தை எமதர்மனாக வரும் புராணப் பாத்திரம் புகழ்ந்து பேசுகிறது.  பெரியார், அம்பேத்கர், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் இன்றைய தேவையையும் வலியுறுத்துகிறது....

மேட்டூரில் வட்டார மாநாடு: மாவட்டக் கழகம் முடிவு

மேட்டூரில் வட்டார மாநாடு: மாவட்டக் கழகம் முடிவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்ட கலந்துரையாடல், ஜூன் 30 அன்று மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகிக்க, காவை ஈசுவரன், தலைமைக் குழு உறுப்பினர், முன்னிலை வகித்தார். நிகழ்வில், மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாநாடு நடத்துவது எனவும், மாநாட்டை ஏற்பாடு செய்வது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டு, பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) மேட்டூரில் வட்டார மாநாடு நடத்துவது. 2) வட்டார மாநாட்டின் நோக்கங்களை விளக்கி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியங்களில் தெருமுனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது. 3) மாநாட்டிற்கான பணிகளை புதிய மாணவர் கழக தோழர்கள் செய்வார்கள். – என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில், சூரியக்குமார் சேலம் மேற்கு மாவட்ட தலைவர், டேவிட் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர், ஆர்.எஸ். சக்திவேல் தலைமைக் குழு உறுப்பினர் மற்றும் நகர, ஒன்றிய,...

பரப்புரைப் பயணத்துக்கு ஆனைமலை ஒன்றிய கழகம் தயாராகிறது

பரப்புரைப் பயணத்துக்கு ஆனைமலை ஒன்றிய கழகம் தயாராகிறது

30.06.2019 காலை 10 மணியளவில் ஒன்றிய தி.வி.க சார்பாக, ஆனைமலையில் கலந்துரையாடல்  நடைபெற்றது. பரப்புரைப் பயணத்துக்கு தயார் ஆவது என முடிவு செய்யப்பட்டது. கலந்துரையாடலில், ஒன்றிய தலைவர் அப்பாத்துரை, ஒன்றிய செயலாளர் அரிதாசு, ஒன்றிய அமைப்பாளர் சபரிகிரி, தோழர்கள் சிவா, கணேசன், மணி, பாலன், காஜா, சந்தோசு மற்றும் கோவை மாவட்டச் செயலாளர் யாழ் வெள்ளிங்கிரி, மடத்துக்குளம் இரா. மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்கண்ட தோழர்கள் கட்டமைப்பு நிதி வழங்கினர். ஏ.ஆர்.வி. சாந்தலிங்கம் – ரூ. 10000/-         மருத்துவர் வசந்த ஆல்வா – ரூ. 3000/- பழ.முருகானந்தம் – ரூ. 2000 /-                      – ஆகியோர் கட்டமைப்பு நிதியை அளித்தனர். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

இராஜராஜசோழனின் கதை என்ன? (3) களப்பிரர் காலம் இருண்ட காலமா?

இராஜராஜசோழனின் கதை என்ன? (3) களப்பிரர் காலம் இருண்ட காலமா?

இயக்குநர் இரஞ்சித், இராஜராஜசோழன் குறித்துப் பேசியதற்காகப் பார்ப்பன இராஜாக்களும், ‘அவாளின் எடுபிடி’களான, ‘சூத்திர’ இந்து முன்னணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஓலமிடுகின்றன.  நீதிமன்றங் களும் இராஜராஜசோழனைப் பற்றிப் பேசுவதா என்று கவலைப்படுகின்றன. இராஜராஜ சோழனின் வரலாறுதான் என்ன? சென்ற இதழ் தொடர்ச்சி இராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து இராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக இராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான்.  பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது.  இராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை இராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான். பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.  அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக்...

தெருமுனைக் கூட்டங்கள் : திருச்செங்கோடு கழகம் முடிவு

தெருமுனைக் கூட்டங்கள் : திருச்செங்கோடு கழகம் முடிவு

திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் 30.06.2019 அன்று காலை 10 மணிக்கு பெரியார் மன்றத்தில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு, நகர செயலாளர் பூபதி தலைமை வகிக்க, கழகத் தோழர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். 1) தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவது; 2) ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவுக் கூடம், எட்டுவழிச் சாலை போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை விளக்கும் வகையில் துண்டறிக்கைப் பிரச்சாரம் செய்வது; 3) காமராஜர் பிறந்தநாள் விழாவை ஏதேனும் அரசுப் பள்ளியில் கொண்டாடுவது – ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கார்த்தி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

மாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை!

மாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை!

இந்தியாவின் கல்விச்சூழல் விசித்திரமானது. பிரமாண்டமானது. 30 கோடி பேர் இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். 14 இலட்சம் பள்ளிகள் உள்ளன. 907 பல்கலைக் கழகங்கள் உட்பட சுமார் 50 ஆயிரம் உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. இந்தியக் கல்விச் சந்தையின் மதிப்பு சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான கல்விச் சூழல் நிலவும் இந்தத் தேசத்துக்கு பொதுவான கல்வித் திட்டம் என்பதே பொருத்தமில்லாத ஒன்று! இந்த நிலையில், நம் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை அடியோடு புரட்டிப்போடுகிற பல அம்சங்களைக்கொண்டிருக்கும் இந்தக் கல்விக் கொள்கை, கல்வியாளர்கள் மத்தியில்கூட கவனிக்கத்தக்க அளவுக்கு விவாதங்களை எழுப்ப வில்லை. இந்தியாவின் கல்விமுறையைச் சீர்திருத்து வதற்காக மத்திய அரசு, விண்வெளி அறிவியலாளர் கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒன்பது பேரைக் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்தது. வழக்கமாக, ‘நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடிக் கொண் டிருக்கிறது’ என்கிற ரீதியில்தான் இதுபோன்ற அறிக்கைகள் பேசும். ஆனால், கஸ்தூரிரங்கன் கமிட்டியின்...