மோசடி ‘யூடியுபர்’ விடுதலை; விஜயேந்திரர் – தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க தேவையில்லை என்கிறார், உயர்நீதிமன்ற நீதிபதி காசியில் ஆர்.எஸ்.எஸ். குரலை ஒலிக்கிறார் மோடி
கடந்த வாரம் நிகழ்ந்த செய்திகள் குறித்து நமது பார்வை. ‘தினமலரின்’ திமிர் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைப் பட்டமளிப்பு விழாவில் பேசும்போது, ‘பெண்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி படித்து பட்டம் பெறு வதற்கு பெரியார் பெண்கள் விடுதலைக்குக் குரல் கொடுத்ததே காரணம்’ என்று பேசி இருந்தார். ‘தினமலர்’ பார்ப்பன ஏடு, “எல்லாத்துக்கும் ஈ.வெ,ரா. தான் காரணமா?” என்று அமைச்சர் மீது ஆவேசமாகப் பாய்ந்து, ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. பெரியாருக்கு முன்பே பாரதி பாடவில்லையா என்று கேட்கிறது. பாரதி பாடியிருக்கலாம், ஆனால், சமூகத்தில் பெண்கள் வளர்ச்சிக்கு அவர் இயக்கம் நடத்தினாரா? ‘பேராசைக் காரனடா பார்ப்பான்’ என்றுகூட பாரதி பாடியிருக்கிறார். அதை ‘தினமலர்’ ஏற்கிறதா? அவ்வையார், காக்கைப் பாடினியார் என்ற புலவர்கள் பெரியாருக்கு முன்பே இருந்துள்ளனர் என்கிறது ‘தினமலர்’. அவர்களின் தொடர்ச்சி யாக ஏன் பெண் புலவர்கள் உருவாகாமல் போனார்கள்? கணவன் இறந்தவுடன், மனைவியை கணவன் இறந்த...