Category: சிறப்பு கட்டுரை

மோசடி ‘யூடியுபர்’ விடுதலை; விஜயேந்திரர்  – தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க தேவையில்லை என்கிறார், உயர்நீதிமன்ற நீதிபதி காசியில் ஆர்.எஸ்.எஸ். குரலை ஒலிக்கிறார் மோடி

மோசடி ‘யூடியுபர்’ விடுதலை; விஜயேந்திரர் – தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க தேவையில்லை என்கிறார், உயர்நீதிமன்ற நீதிபதி காசியில் ஆர்.எஸ்.எஸ். குரலை ஒலிக்கிறார் மோடி

கடந்த வாரம் நிகழ்ந்த செய்திகள் குறித்து நமது பார்வை. ‘தினமலரின்’ திமிர் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைப் பட்டமளிப்பு விழாவில் பேசும்போது, ‘பெண்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி படித்து பட்டம் பெறு வதற்கு பெரியார் பெண்கள் விடுதலைக்குக் குரல் கொடுத்ததே காரணம்’ என்று பேசி இருந்தார். ‘தினமலர்’ பார்ப்பன ஏடு, “எல்லாத்துக்கும் ஈ.வெ,ரா. தான் காரணமா?” என்று அமைச்சர் மீது ஆவேசமாகப் பாய்ந்து, ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. பெரியாருக்கு முன்பே பாரதி பாடவில்லையா என்று கேட்கிறது. பாரதி பாடியிருக்கலாம், ஆனால், சமூகத்தில் பெண்கள் வளர்ச்சிக்கு அவர் இயக்கம் நடத்தினாரா? ‘பேராசைக் காரனடா பார்ப்பான்’ என்றுகூட பாரதி பாடியிருக்கிறார். அதை ‘தினமலர்’ ஏற்கிறதா? அவ்வையார், காக்கைப் பாடினியார் என்ற புலவர்கள் பெரியாருக்கு முன்பே இருந்துள்ளனர் என்கிறது ‘தினமலர்’. அவர்களின் தொடர்ச்சி யாக ஏன் பெண் புலவர்கள் உருவாகாமல் போனார்கள்? கணவன் இறந்தவுடன், மனைவியை கணவன் இறந்த...

இளைய தலைமுறை – பெரியாரை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? பூபாலன்

இளைய தலைமுறை – பெரியாரை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? பூபாலன்

ஜாதி ஒரு மன நோயாக பவுதீக உருவமின்றி இருக்கும்போது அந்த மனச்சூழலை எப்படித் தகர்க்க முடியும் என்ற கவலை அம்பேத்கருக்கு இருந்தது. பெரியார், ‘மனநோய்க்கு’ அடித்தளமான பவுதீகக் காரணிகளாக இருந்த கடவுள், மதம், சாஸ்திரம், புனிதங்களைக் கட்டுடைத்து, மக்களிடம் அதைக் கொண்டு செல்ல முடியும் என்று துணிவோடு களமிறங்கி தனது புரட்சியைத் தொடர்ந்தார் என்பதை சமூக அறிவியல் பார்வையில் விளக்குகிறது – இந்தக் கட்டுரை. ‘பெரியார்’ என்ற ஒரு மனிதர் நம்மிடமிருந்து பௌதீகமாய் மறைந்துபோய் நாற்பத்தியாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்; ‘தந்தை பெரியார்’ என்ற இந்தச் சொல் அளவிற்கு இந்த நூற்றாண்டின் தமிழ்நில அரசியல்தளத்தில் அதிகம் வசையிடப்பட்ட, கொண்டாடப்பட்ட ஒன்று இருக்க முடியாது. ‘பெரியார்’ என்று அரசியல் மிகைப்படுத்தும் ஈ.வெ.ராமசாமியின் பேச்சுக்களும் எழுத்துக்களும் வெற்றுக் கூப்பாடுகள் எந்தவொரு சிந்தனையுமற்ற அற்பங்கள். பார்ப்பனர், பார்ப்பனியம் என குறிப்பிட்டு, வெறுப்பரசியலை உருவாக்கி வெறும் பரப்புரையாகவே வீணாகிப் போனது அவரது வாழ்வு என்ற ஒரு தரப்பின்...

எது தமிழ்ப் புத்தாண்டு? நாரதனும்-கிருஷ்ணனும் கூடிப் பெற்ற 60 சமஸ்கிருத ஆண்டுகளா? அல்லது திருவள்ளுவரைக் கொண்டாடும் ஆண்டுகளா?

எது தமிழ்ப் புத்தாண்டு? நாரதனும்-கிருஷ்ணனும் கூடிப் பெற்ற 60 சமஸ்கிருத ஆண்டுகளா? அல்லது திருவள்ளுவரைக் கொண்டாடும் ஆண்டுகளா?

தமிழர் திருநாளையொட்டி தமிழக அரசு வழங்கும் உணவுப் பொருள்களுக்கான பைகளில் பொங்கல் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. உடனே பா.ஜ.க. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றுவதா என்று ஆர்ப்பரிக்கிறது. அ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு மாற்றக் கூடாது என்கிறார். அரசியலுக்குள் கால் பதிக்கத் துடிக்கும் சசிகலாவும் இதே குரலை ஒலித்திருக்கிறார்.  2008ஆம் ஆண்டு கலைஞர் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார். அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா – கலைஞர் ஆட்சி பிறப்பித்த ஆணையை நீக்கம் செய்து சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு சார்பில் உத்தரவிட்டார். உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு தமிழர்களை தை முதல் நாள் தான் கடைபிடிக்கப்பட்டு வந்தது. பிறகு எப்படி சித்திரைக்கு மாறியது என்பதற்கு வரலாறு இருக்கிறது. முன் காலத்தில் வருடப் பிறப்புச்...

நூல் வெளியீட்டு விழாவில் ஆ. ராசா முழக்கம் காவிகளின் இந்துத்துவ அரசியலை முறிக்கும் ஒரே மாமருந்து பெரியார் மட்டுமே!

நூல் வெளியீட்டு விழாவில் ஆ. ராசா முழக்கம் காவிகளின் இந்துத்துவ அரசியலை முறிக்கும் ஒரே மாமருந்து பெரியார் மட்டுமே!

கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், பெரியார் ஒருவர் மட்டுமே நமக்கு வழி காட்டுகிறார். அவரது தத்துவங் களால் மட்டுமே காவி மயமாக்கும் முயற்சியை முறியடிக்க முடியும் என்று குறிப்பிட்டார். நாட்டையே காவி மயமாக்கிட வேண்டும் என்று தீவிரமாக அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வரும் ஒன்றிய ஆட்சியை வீழ்த்த நம்மிடம் உள்ள ஒரே மாமருந்து பெரியார் மட்டும் தான். அம்பேத்கரை கூறலாம் என்றால் அவரையும் ‘இந்துத்துவா’ தனக்குள் இழுத்துக் கொண்டு ‘இந்துத்துவா அம்பேத்கர்’ என்று பேசி வருகிறது. பெரியார் என்ற நெருப்பை மட்டும் தான் அவர்களால் பொட்டலம் கட்ட முடியவில்லை என்று நாடாளு மன்ற உறுப்பினரும் தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ. ராசா குறிப்பிட்டார். கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு சென்னை இராஜரத்தினம்  முத்தமிழ்ப் பேரவை அரங்கில் டிச.4, 2021 மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. திராவிடர்...

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (18) கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றச் சட்டங்கள் விடுதலை இராசேந்திரன்

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (18) கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றச் சட்டங்கள் விடுதலை இராசேந்திரன்

பிரிட்டிஷ் ஆட்சி – காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறு களைத் தொடர்ந்து இத்தொடரில் – அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம். 2017 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பு வாங்கப்பட்டபோது, கடைசி நேரத்தில் 40 திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டார்கள். இந்த திருத்தங்களை மாநிலங் களவைக்கே கொண்டு செல்லவில்லை. நிதி தொடர்பான மசோதாக் களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் மட்டுமே போதுமானது என்ற சட்டம் தந்துள்ள வாய்ப்பை இப்படி குறுக்கு வழியில் முறை கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது மோடி ஆட்சி. இந்த திருத்தங்களில் ஒன்று – வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எல்லை மீறிய அதிகாரங்களாகும். நடுவண் ஆட்சி, அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்குப் பயன்படுத்தும் வலிமையான அதிகார அமைப்புகளில் ஒன்று வருமான வரித் துறை. புதிய திருத்தத்தின்படி, இனி வருமான வரித்...

கொளத்தூர் – புலியூரில் எழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்

கொளத்தூர் – புலியூரில் எழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்

தமிழ் ஈழ விடுதலைப் போராட் டத்தில் களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நவம்பர் 27 அன்று கொளத்தூர் அருகே புலியூர் செல்லும் வழியில் அய்யம்புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விடுதலைப் புலிகள் இராணுவப் பயிற்சி எடுத்த இடத்தின் அருகே திறந்தவெளியில் முகாமுக்கு தலைமையேற்று பயிற்சி யளித்து வீரமரணமடைந்த பொன்னம்மான் நினைவாக அமைக்கப்பட்ட புலியூர் ‘நிழற்குடை’ அருகே இதுவரை இந்த நிகழ்வு நடந்து வந்தது. மழை காரணமாக அருகே உள்ள திருமண மண்டபத்தில் இந்த ஆண்டு நிகழ்வு நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் 2000 பேர் திரண்டிருந்தனர். உலகம் முழுதும் 6.05 மணிக்கு நிகழ்வு நடத்தப்படுவதை யொட்டி அதே நேரத்தில் மாவீரர் வீரவணக்கப் பாடல் ஒலிக்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாவீரர் சுடரை ஏற்றினார். தொடர்ந்து...

சட்ட எரிப்புப் போராட்டம் நடத்திய நவம்பர் 26இல் தோழர்கள் – ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

சட்ட எரிப்புப் போராட்டம் நடத்திய நவம்பர் 26இல் தோழர்கள் – ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

1957 நவம்பர் 26ஆம் நாள் அரசியல் சட்டத்தை அரசியல் நிர்ணயசபை ஏற்ற நாளாகும். அதே சட்டம் மதத்தை அடிப்படை உரிமையாக்கி, அதன் வழியாக ஜாதி இழிவுகளைக் காப்பாற்றுவதற்குப் பாதுகாப்பான பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. ஜாதி ஒழிப்புக்குத் தடையாக இருந்த சட்டத்தின் உட்பிரிவுகளான 13(2), 25(1), 26(1), 26(2) மற்றும் 368 பிரிவுகளை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்துக்கு பெரியார் ‘நவம்பர் 27’அய் தான் தேர்வு செய்தார். ஒரு நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகளையே 10,000 பேர் தீயிட்டுக் கொளுத்திய போராட்ட வரலாறு பெரியார் இயக்கத் துக்கு மட்டுமே உண்டு. சரியாக போராட்டத்திற்கு 24 நாட்களுக்கு முன் தஞ்சையில் நடந்த சிறப்பு மாநாட் டில் போராட்ட அறிவிப்பை பெரியார் அறிவித்தார். 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தோழர்கள் தண்டிக் கப்பட்டனர். தோழர்கள் எவரும் எதிர் வழக்காட வில்லை. ‘சட்டத்தை எரித்தேன்; தண்டனை ஏற்கத் தயாராக உள்ளேன்’ என்று நீதிமன்றத்தில் வாக்கு மூலம் தந்தனர்....

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (17) ஆர்.டி.அய். சட்டத்தைக் குலைத்த ஒன்றிய ஆட்சி விடுதலை இராசேந்திரன்

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (17) ஆர்.டி.அய். சட்டத்தைக் குலைத்த ஒன்றிய ஆட்சி விடுதலை இராசேந்திரன்

மனித மலத்தை மனிதர் சுமக்கும் இழிவுக்கு முற்றுப் புள்ளி வைக்க ஒதுக்கிய நிதி – பாதியளவில் குறைப்பு. மோடி பட்டம் பெறவில்லை என்ற உண்மையை வெளி உலகிற்கு மறைக்க ஆர்.டி.அய். சட்டமே திருத்தப்பட்டது. உயர் கல்விக்கான நிதியும் குறைக்கப்பட்டது.   பிரிட்டிஷ் ஆட்சி – காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறு களைத் தொடர்ந்து இத்தொடரில் – அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம். தலித் மக்களின் வளர்ச்சிக்கான நிதியை படிப் படியாகக் குறைத்த மோடி ஆட்சி, மாணவர் கல்விக்கான உதவித் தொகையிலும் கை வைத்தது. தலித் மக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்தது. பட்டியல் இனப் பிரிவு மேம்பாட்டுக்காகவும் நலனுக்காகவும் அவர்களுக்கான மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு துறை யிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு மிக மிகக் குறைவு என்பதையே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 22.5...

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (16) ஒன்றிய ஆட்சியின் இந்தித் திணிப்புகள் விடுதலை இராசேந்திரன்

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (16) ஒன்றிய ஆட்சியின் இந்தித் திணிப்புகள் விடுதலை இராசேந்திரன்

உள்துறை அமைச்சகத்தில் அனைத்து கோப்பு களும் இந்தியில் மட்டுமே எழுதப்படுவதாக பெருமை பேசுகிறார் அமித்ஷா. மும்மொழிக் கொள்கையிலிருந்து விலக்கு பெற்ற தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்தியைத் திணிக்கிறது, ஒன்றிய ஆட்சி. அஞ்சல் துறை, வங்கித் துறை, ஒன்றிய அரசுத் துறைகளில் இந்தித் திணிப்பு வேகம் வேகமாக நடக்கும்போது – தமிழ்நாட்டில் ஒன்றிய அரசுத் துறைகளில் இந்திக்காரர்களே நியமிக்கப்படு கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சி – காங்கிரஸ் ஆட்சி காலங் களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறு களைத் தொடர்ந்து இத்தொடரில் – அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம். இந்தித் திணிப்பு (3.5.2017 ‘ஆனந்தவிகடன்’ தீட்டிய தலையங்கம்) 2011ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த இந்தி மொழி தொடர்பான பரிந்துரை களுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்களின் மீது இடியைப்போல் இறங்கி யிருக்கும் இந்தப் பரிந்துரைகள் கீழ்வருமாறு… ஜனாதிபதி, பிரதமர், மத்திய...

‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு எதிர்ப்பா? சங்கிகள் அடாவடியை எதிர்த்து – அனைத்துக் கட்சிகளும் திருப்பூரில் ஒன்று திரண்டன

‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு எதிர்ப்பா? சங்கிகள் அடாவடியை எதிர்த்து – அனைத்துக் கட்சிகளும் திருப்பூரில் ஒன்று திரண்டன

பா.ஜ.க.-இந்து முன்னணி அடா வடியை எதிர்த்து அனைத்துக் கட்சி களும் களத்தில் இறங்கும் நடவடிக்கை திருப்பூரில் தொடங்கி இருக்கிறது. திருப்பூர் மாநகராட்சி பள்ளி நூலகத் திற்கு தன்னார்வலர் பெரியார் புத்தகங்களை கொடையாக வழங்கியதை எதிர்த்து பள்ளிக்கு அத்துமீறி நுழைந்து ஆசிரியர் களை மிரட்டிய பாஜகவினர் ! திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் பெரியார் புத்தகம் மொத்தமாக விநியோகம் செய்ததாகக் கூறி, பள்ளியை பாஜகவினர் முற்றுகையிட்டனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகத்துக்கு தன்னார்வலர்கள் புத்தகங்கள் வழங்கி வந்தனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பெரியார் எழுதிய, ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகம் சுமார் 2 ஆயிரம் பிரதிகளை தன்னார்வலர் ஒருவர் வழங்கினார். இதனை அறிந்த திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை யில் பாஜகவினர் சுமார் 10 பேர் பள்ளி வளாகத்துக்கு வந்து, புத்தகங்களை யாருக்கும் தரக் கூடாது...

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (15) ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி பறித்த சமூக நீதி உரிமைகள் விடுதலை இராசேந்திரன்

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (15) ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி பறித்த சமூக நீதி உரிமைகள் விடுதலை இராசேந்திரன்

102ஆவது சட்டத் திருத்தத்தின் வழியாக ‘பிற்படுத்தப்பட்டோரை’ நிர்ணயிக்கும் உரிமையை மாநில அரசிடமிருந்து பறித்த ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி, பிறகு பா.ஜ.க. பிற்படுத்தப்பட்ட எம்.பி.கள் எதிர்ப்பு காரணமாக மீண்டும் 105ஆவது சட்டத்திருத்தம் கொண்டு வந்து மாநிலங்களிடம் ஒப்படைத்தது. மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வழங்க மறுத்த ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக உச்சநீதிமன்றக் கண்டனத்துக்கு உள்ளானதால் மீண்டும் இடஒதுக்கீடு செய்ய முடிவெடுத்தது.   பிரிட்டிஷ் ஆட்சி – காங்கிரஸ் ஆட்சி காலங் களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறு களைத் தொடர்ந்து இத்தொடரில் – அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம். 27 சதவீத இடஒதுக்கீடு மறுப்பு பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையைப் பிறப்பித்தார், சமூக நீதிக் காவலரான பிரதமர் வி.பி.சிங். 24...

வன்னியர் இட ஒதுக்கீடு இரத்தானது ஏன் ?

வன்னியர் இட ஒதுக்கீடு இரத்தானது ஏன் ?

பாட்டாளி மக்கள் கட்சியுடன், தேர்தல் கூட்டணி நோக்கத்துக்காக அக்கட்சி விதித்த நிபந்தனைகளை ஏற்று, கடந்த பிப்ரவரியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அவசரம் அவசரமாக வன்னியர் தனி இட ஒதுக்கீடு மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்தது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பின், அரசு எந்த புதிய முடிவையும் வெளியிட முடியாது என்பதால், ஆணையத்தின் அறிவிப்பு வெளி வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அன்றைய முதலமைச்சர் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இப்போது மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை 10.5ரூ இட ஒதுக்கீட்டை இரத்து செய்து விட்டது. நீதிமன்றம் ஏன் இரத்து செய்தது என்பது குறித்து ஆங்கில ‘இந்து’ நாளேடு(3.11.2021) எழுதியுள்ள தலையங்கத்தின் சில முக்கியமான கருத்துக்கள். 1)         பிப்ரவரி 2021 இல் சட்டசபையில் 10.5ரூ இட ஒதுக்கீடு வந்த போது அரசியல் சட்டத்தின் 102 ஆவது திருத்தம் அமலில் இருந்தது. இதன்படி பிற்படுத்தப்பட் டோர் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும்...

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (14) ஜனநாயகக் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டன விடுதலை இராசேந்திரன்

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (14) ஜனநாயகக் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டன விடுதலை இராசேந்திரன்

மதச்சார்பின்மை என்பது மோசமான வார்த்தை என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார். டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களின் விளக்கத்தைக் கேட்காமலேயே தேர்தல் ஆணையம் அவர்களின் பதவி பறித்தது. ஊழலை ஒழிப்பதாகக் கூறி பதவிக்கு வந்தவுடன், பல ஊழல் அதிகாரிகளை, தங்களுக்கு உதவி னார்கள் என்று பதவி வழங்கி காப்பாற்றியது மோடி ஆட்சி.   பிரிட்டிஷ் ஆட்சி – காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறுகளைத் தொடர்ந்து இத்தொடரில் – அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம். “தேசியம் – பெரும்பான்மை-மதச்சார்பின்மை” என்ற சொல்லாடல் வழியாக சங்பரிவாரங்கள் திணித்து வைத்துள்ள நச்சு சிந்தனைகளின் அடிப் படையில் அதன் எதேச்சாதிகார அதிகாரப் பறிப்புகள் தொடருகின்றன. அவற்றை சுருக்கமாகப் பட்டியலிடுவோம். திட்டக்குழு – நிதிஅயோக்காக மாற்றப்பட்டது இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு பன்முகத் தன்மை கொண்ட மாநிலங்களுக்கு அதற்கேற்ற திட்டங்களை உருவாக்கவும் அது குறித்து சுதந்திரமான விவாதங்கள் உரையாடல்களுக்கு வழி வகுக்கும்...

‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (3) சமதர்ம புரட்சி ரஷ்யாவில் உருவாகுவதற்கு முன் இந்தியாவில் வராமல் போனது ஏன்?

‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (3) சமதர்ம புரட்சி ரஷ்யாவில் உருவாகுவதற்கு முன் இந்தியாவில் வராமல் போனது ஏன்?

டி    கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதலில் தமிழில் வெளியிட்டார் பெரியார். டி    இந்தியாவில் பணக்காரன்-ஏழை முரண் பாட்டைவிட மேல் ஜாதி – கீழ் ஜாதி முரண்பாடு முதன்மையாக இருக்கிறது என்று அந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டார். டி    1931 விருதுநகர் மாநாட்டில் சமதர்மமே இலட்சியம் என்று அறிவித்து முதன்முறையாக மதங்கள் ஒழிய வேண்டும் என்று தீர்மானம் போடுகிறார். டி    1932 மே மாதம் இரஷ்ய மே தினம் அணி வகுப்பில் அந்நாட்டு பிரதமருடன் பங்கேற்றார். டி    இங்கிலாந்தில் தொழில் கட்சி நடத்திய மாநாட்டில் பங்கேற்று அம்மாநாட்டிலேயே அக்கட்சியைக் கடுமையாக துணிவுடன் விமர்சித்தார் பெரியார்.   குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது. சென்ற இதழ் தொடர்ச்சி எம்.சி.பி.அய்.(யு) என்ற மார்க்சிய கட்சி – தமிழ்நாட்டில் மார்க்சியர்கள் – பெரியாரியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை...

‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ பிரிவு உருவான வரலாறு

‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ பிரிவு உருவான வரலாறு

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் என்ற பிரிவு 1957 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. 1989இல் கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் இந்த மிகவும் பிற் படுத்தப்பட்டோர் பிரிவினருடன் ‘குற்றப் பரம்பரையாக’ பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டு நீதிக்கட்சி ஆட்சியில், அதிலிருந்து விடுவிக்கப்பட்ட வகுப்பினரையும் இணைத்து 20 சதவீத தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1855ஆம் ஆண்டிலிருந்தே சென்னை மாகாணத்தில் தீண்டாமைக்கு உள்ளாகும் தாழ்த்தப்பட்ட வகுப் பினர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்காக கல்வி மான்யம் வழங்கும் விதிமுறைகள் (ழுசயவே in யனை உடினந) ஒன்று உருவாக்கப் பட்டது. கல்விக்காக அரசு நிதி உதவி தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் சிலவற்றுக்கும் கிடைக்கும் வகையில் 1906லும், 1913லும் மேற்குறிப்பிட்ட விதிமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 1954இல் வகுப்புவாரி பிரதிநிதித்து வம் செல்லாது என்று உச்சநீதி மன்றம் அறிவித்தது. பெரியார் போராடினார் அதன்...

‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (2) பிறவி ஆதிக்கம் – பணக்கார ஆதிக்கம் – இரண்டையும் எதிர்க்க  வேண்டும் என்று கூறியவர் பெரியார்

‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (2) பிறவி ஆதிக்கம் – பணக்கார ஆதிக்கம் – இரண்டையும் எதிர்க்க வேண்டும் என்று கூறியவர் பெரியார்

டி           காங்கிரசிலிருந்து கொண்டே பொதுவுடைமை பேசினார், பெரியார். டி           நீதிக் கட்சியை ஆதரித்த பெரியார், அதில் தலைவர்களாக இருந்த ஜமீன்தார்களையும் மிட்டா மிராசுதாரர்களையும் கடுமையாக எதிர்த்தார். டி           தீண்டப்படாத மக்களுக்கு ‘தனிக் கிணறு’ திறக்கக் கூடாது; பொதுக் கிணற்றில் நீர் எடுக்கப் போராட வேண்டும் என்றார். டி           பார்ப்பனரல்லாதாரில் 2 சதவீதம் பேர் மட்டுமே படிக்கத் தெரிந்த காலத்தில் ‘ரிவோல்ட்’ என்ற புரட்சி ஆங்கில இதழை சோவியத் புரட்சி நடந்த நவம். 7ஆம் தேதியை தேர்வு செய்து தொடங்கினார். குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது. முதல் பாகம் தொடர்ச்சி  எம்.சி.பி.அய்.(யு) என்ற மார்க்சிய கட்சி – தமிழ்நாட்டில் மார்க்சியர்கள் – பெரியாரியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற விமர்சன அறிக்கையை வைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இக்கட்சி வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையில், “சாதி-மதப்...

தலையங்கம் இதற்குப் பெயர்  ‘இந்துத்துவா’ ஜனநாயகம்

தலையங்கம் இதற்குப் பெயர் ‘இந்துத்துவா’ ஜனநாயகம்

பா.ஜ.க.வும் சங் பரிவாரங்களும் பேசும் இந்துத்துவா அரசியல் மக்கள் உரிமைகளுக்கும் சுயமரியாதைக்கும் நேர் எதிரானது. சுருக்கமாக இப்படி கூறலாம். பெரும்பான்மை உழைக்கும் மக்களை, பார்ப்பனிய வைதிக ஒடுக்குமுறை பண்பாட்டுக்கு சேவகம் செய்ய வைத்து மக்களின் சுயமரியாதையை அதற்கு விலையாகக் கேட்கும் கொள்கையே இந்துத்துவா. சமூக  அதிகாரம் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சக்திகளிடமே தொடர வேண்டும் என்ற பார்ப்பனிய கோட்பாட்டையே அரசியலிலும் அவர்கள் செயல்படுத்துகிறார்கள். அதற்காக இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையும் பா.ஜ.க.வின் அதிகாரத்துக்குள் கொண்டு வரத் துடிக்கிறார்கள். மதத் தாவல் சட்ட விரோதம் என்று சட்டம் போடுகிறார்கள். ஆனால், ‘கட்சித் தாவல்’ செய்வதை ஊக்குவிக்கிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத மாநிலங்களில் ஆட்சி அதிகாரங்களை முறைகேடுகளாக ஒளிவுமறைவின்றி பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஆட்சிகளைக் கவிழ்க்கிறார்கள். இப்போது புதுச்சேரியிலும் நாராயணசாமி அவர்களை முதல்வராகக் கொண்டு நடந்த காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்திருக்கிறார்கள். அடுத்த வாரத்தில் மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வரப்போகும் நேரத்தில்...

மோடி ஆட்சி கோல்வாக்கர் தத்துவத்தைக் கொண்டாடுகிறது

மோடி ஆட்சி கோல்வாக்கர் தத்துவத்தைக் கொண்டாடுகிறது

மோடி ஆட்சியின் கலாச்சாரத் துறை அமைச்சகம், ஆர்.எஸ்.எஸ். ‘தத்துவத் தந்தை’யான எம்.எஸ். கோல்வாக்கரின் பிறந்த நாளில் அதிகாரப் பூர்வமாக டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட் டிருக்கிறது. “கோல்வாக்கர் மிகப் பெரும் சிந்தனை யாளர்; அறிவு ஜீவி; வரலாற்றில் இடம் பிடித்த மாபெரும் தலைவர்; அவரது சிந்தனைகள் நமக்கு என்றென்றும் ஊக்கம் தரும். நமது அடுத்தடுத்த தலை முறைக்கு வழிகாட்டி நிற்கும்” என்று கோல்வாக்கர் படத்துடன் அந்தப் பதிவு வெளியிடப் பட்டுள்ளது. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஷிதரூர் உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு கலாச்சாரத் துறை அமைச்சரின் பத்திரிகை தொடர்பாளரான நிதின் திரிபாதி என்ற அதிகாரி பதிலளித்துள்ளார். “இந்தியா பல்வேறு கலாச்சாரம் – தத்துவங் களைக் கொண்ட நாடு. எந்தத் தத்துவத்தையும் பேசக் கூடாது என்று ஒதுக்கி வைக்கவோ மவுனிக்கச் செய்யவோ நாங்கள் விரும்பவில்லை” என்று பதில் கூறியிருக்கிறார். இந்தியாவில் பெரியார் தத்துவங்கள் – மார்க்சிய தத்துவங்கள் – மாவோயிச...

‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (1) பெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது

‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (1) பெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது

டி           சாதியத்தை முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் கட்சி என்பதாலேயே பெரியார் காங்கிரசிலிருந்து விலகினார். டி           ஜாதித் திமிர் – பணத் திமிர் அடிப்படையில் இரண்டு சுரண்டல்களையுமே பெரியார் எதிர்த்தார்.   குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது. எம்.சி.பி.அய்.(யு) என்ற மார்க்சிய கட்சி – தமிழ்நாட்டில் மார்க்சியர்கள் – பெரியாரியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற விமர்சன அறிக்கையை வைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இக்கட்சி வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையில், “சாதி-மதப் பிரிவினை சக்திகள் வலிமை பெற்றிருக்கும் இக்காலக்கட்டத்தில் பெரியார், அம்பேத்கரின் தேவையை கட்சி பூரணமாக உணர்ந்துள்ளது” என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அந்தப் பின்னணியில் இந்தக் கருத்தரங்கையும் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. பெரியார் என்பது பெரியாரினுடைய நான்கு கொள்கைகள் தான்.. பெரியாருடைய முதன்மை கொள்கையாக அவர்...

நடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் – கேஸ் விலை உயர்வு

நடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் – கேஸ் விலை உயர்வு

சிலிண்டர் ‘கேஸ்’ விலை 785 ஆகிவிட்டது. பா.ஜ.க.வின் பொருளாதாரப் புலிகள் இதை நியாயப்படுத்துகிறார்கள். இந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.75 உயர்ந்துள்ளது. 2014 மே மாதத்தில் டெல்லியில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் அனைத்து வரிகளும் நீங்கலாக ரூ.47.12; இது பிப்ரவரி யில் 2021இல் வரிகள் நீங்கலாக ரூ.29.34 ஆக குறைந்தது. ஆனால், அடிப்படையான பெட்ரோல் விலை மீது நடுவண் ஆட்சி வரி, டூட்டி, கமிஷன், லெவி என்ற பெயர்களில் 217 சதவீத வரிகளைப் போட்டு குறைந்த விலைக்கு மக்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக்  கொள்கிறது. 2021 பிப்ரவரியில் பெட்ரோலின் சர்வதேச சந்தை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.29.34 காசுகள் மட்டுமே. இத்துடன் மத்திய அரசு போடும் வரி 32.98 (38 சதவீதம்), விற்பனையாளர் கமிஷன் ரூ.3.69 (4 சத வீதம்), விற்பனை வரி ரூ.19.92 (23 சதவீதம்), ஆக அனைத்தையும் சேர்த்து ரூ.86.3-க்கு விற்கப் படுகிறது. (அனைத்து வரிகள் கமிஷன்...

அமெரிக்க நிறுவனம் அம்பலப்படுத்துகிறது: கணிப்பொறியில்  மோசடி செய்து பொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு

அமெரிக்க நிறுவனம் அம்பலப்படுத்துகிறது: கணிப்பொறியில் மோசடி செய்து பொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு

பீமா கோரேகானில் நடைபெற்ற போரில், மராத்திய பேஷ்வா படைகளை வெற்றி கொண்டதன் நூற்றாண்டை, மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தலித்துக்கள் கடந்த 2018 ஜனவரி 1 அன்று விழாவாக கொண்டாடினர். ஆனால், இந்த விழாவிற்குள் புகுந்த சாதி ஆதிக்க வெறியர்கள், தலித் மக்கள் மீது கொடூர வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். அன்றைய ஆளும் பாஜக அரசோ, சாதி வெறியர்களை கைது செய்யாமல், விழாவில் கலந்து கொண்ட ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் உள்ளிட்ட தலித் தலைவர்கள், அறிவுஜீவிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது.இவர்களில் கேரளத்தைச் சேர்ந்த ரோனா வில்சனும் ஒருவராவார். தில்லியில் வசித்து வந்த இவர், ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் எம்.பில் முடித்து, சர்ரே பல்கலைக்கழகம் அல்லது இங்கிலாந்தின் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆராய்ச்சிக்கான உதவித் தொகை எதிர்பார்த்து காத்திருந்தவர் ஆவார்....

‘தேச துரோகச் சட்டம்’ நீடிக்கக் கூடாது

‘தேச துரோகச் சட்டம்’ நீடிக்கக் கூடாது

டி           பத்திரிகையாளர்கள் மீது  தேச துரோகச் சட்டத்தை ஏவுகிறது பா.ஜ.க. ஆட்சி. டி           பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் இப்போது அந்த நாட்டிலேயே நீக்கப்பட்டு விட்டது. டி           அரசியலமைப்பு சபையில் கடும் எதிர்ப்பால் புறக்கணிக்கப்பட்ட இந்த சட்டப் பிரிவு, பிறகு தண்டனைச் சட்டத்தில் திடீரென்று நுழைந்தது.   விவசாயிகள் பேரணி குறித்தும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது, வழக்கு போடப்பட் டுள்ளது. ‘இந்தியா டுடே’ வின் ராஜ்தீப் சர்தேசாய், ‘நேஷனல் ஹெரால்டு’ இதழின் மூத்த ஆசிரியர் மிருணாள் பாண்டே, ‘குவாமி ஆவாஸ்’ ஆசிரியர் ஜாஃபர் ஆகா, ‘கேரவன்’ இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் பரேஷ் நாத், அதே இதழின் ஆனந்த் நாத், வினோத் கே.ஜோஸ் ஆகியோர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. தேச துரோகம், வகுப்புவாத அமைதி யின்மையைத் தூண்டுதல், மத நம்பிக்கைகளை அவமதித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஒரே நேரத்தில் அய்ந்து...

இளைய தலைமுறையினருக்கு இளைஞர்கள் வகுப்பு எடுத்த பெரியாரியல் பயிற்சி முகாம்

இளைய தலைமுறையினருக்கு இளைஞர்கள் வகுப்பு எடுத்த பெரியாரியல் பயிற்சி முகாம்

இளைய தலைமுறையினருக்கு பெரியாரியலை அறிமுகப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் மேட்டூரில் 2021, பிப். 6, 7 தேதிகளில் தாய்த் தமிழ்ப் பள்ளி அரங்கில் சிறப்புடன் நடந்தன. இரு நாள் பயிற்சி வகுப்பிலும் 50 மாணவிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர். முதல் நாள் பயிற்சி வகுப்பை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடங்கி வைத்தார். வாழ்க்கையில் முக்கியமான இளமைக் காலத்தில் பதிய வைக்கும் சிந்தனைகள் மானுட வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவையாகும். இன்றைய சமூகச் சூழல் இளைஞர்களைக் குழப்பக் கூடியதாகவும் பல நேரங்களில் சமூக விரோதிகளாக செயல்படவும் தூண்டுகின்றன. சிலர் ஜாதி சங்கங்களிலும் சிலர் பொழுது போக்கு கேளிக்கைகளிலும் மூழ்கி விடுகிறார்கள். நேர்மையான சமூகக் கவலையுள்ள சமூக மாற்றத்துக்கு பங்களிப்புகளை வழங்கக் கூடிய இளைஞர்களாக உருவாவதற்கு உரிய சிந்தனைகளை நாம் சிந்தனையில் ஏற்றிக் கொள்ள வேண்டும். பெரியார் சிந்தனைகள் வாழ்க்கைக்கான இலட்சியத்தையும் மானுடப் பண்புகளையும் சுயமரியாதை உணர்வுகளையும் பகுத்தறிவையும் பெண்களை சமமாக ஏற்கும்...

தேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்

தேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்

தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் மக்கள் பிரச்சினைகளை நேரடியாக  அறிந்து அவைகளை ஆட்சிக்கு வந்தால் தீர்த்து வைக்கும் ஒரு திட்டத்தோடு தி.மு.க. களமிறங்கியிருப்பது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒரு அணுகுமுறையாகும். கடந்த காலங்களில் குறிப்பாக ‘எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா’ என்ற திரைப்பட பிம்பங்கள் அரசியலுக்கு வந்த பிறகு தேர்தல் பரப்புரையின் முறைமைகளே மாறிப் போனது. இந்த ‘பிம்பங்களை’ நேரில் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண் டிருந்த மக்கள் கூட்டத்தைத் திரட்டி அவர்கள் முன் தோன்றினாலே போதும்  என்ற நிலை உருவாக்கப்பட்டது. தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கான பரப்புரைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு மக்களை உரிய ‘வசதி’களைத் தந்து திரட்டிக் கொண்டு வருவார்கள். இதற்கு பல கோடி ரூபாய் பணம் தண்ணீராய் வாரி இறைக்கப்படும். ஹெலிகாப்டர்களில் தலைவர்கள் வந்து இறங்கி எழுதி வைத்த உரையைப் படிப்பார்கள். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும்போது, அந்த 15 அல்லது 20 நாட்கள் மட்டுமே...

காந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3) ‘ஆனந்த விகடன்’ வார ஏடு, 2019, டிசம்பர் 18 இதழில் சாவர்க்கர் பற்றிய கட்டுரை இது.

காந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3) ‘ஆனந்த விகடன்’ வார ஏடு, 2019, டிசம்பர் 18 இதழில் சாவர்க்கர் பற்றிய கட்டுரை இது.

  காந்தி கொலையை மறு விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட கபூர் ஆணையம் அமைத்த ஒரு மாதத்திலேயே சாவர்க்கர் பட்டினி கிடந்து மரணத்தை ஏற்றார். விசாரணையில் சிக்கி விடுவோம் என்ற அச்சமே காரணம். பசுவை வணங்கினால் நாமும் சாந்தமாகி விடுவோம்; கோழையாவோம் என்ற காரணத்தால் பசு வணக்கத்தை எதிர்த்தார். நேதாஜியுடன் இணைந்து போரிடாததற்குக் காரணம் நேதாஜியிடம் இஸ்லாமிய எதிர்ப்பு இல்லை என்பதுதான். எந்த நடவடிக்கையிலும் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் திறைமறைவில் இயங்குவதே சாவர்க்கர் பண்பு.   பாட்ஜேவின் வாக்குமூலம் இது… `1948 ஜனவரியில் நாங்கள் இருமுறை சாவர்க்கரை சந்தித்தோம். முதல் சந்திப்பு ஜனவரி 14ஆம் தேதி நடந்தது. நான், நாதுராம், ஆப்தே மூவரும் பாம்பே யில் இருக்கும் சாவர்க்கர் சதனுக்குச் சென்றோம். இரண்டாவது மாடியில் அவரது அறை இருந்தது. நான் கட்டடத்துக்கு வெளியே நின்றேன். நாதுராமும் ஆப்தேவும் உள்ளே சென்றனர். சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தனர். `காந்தியையும் நேருவையும்...

‘ஆக்ஸ்பாம்’ அறிக்கை சுட்டிக்காட்டுகிறது ஜாதி – நிறவெறி – பெண் பாகுபாடுகளால் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பு

‘ஆக்ஸ்பாம்’ அறிக்கை சுட்டிக்காட்டுகிறது ஜாதி – நிறவெறி – பெண் பாகுபாடுகளால் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பு

கரோனா பரவலுக்குப் பிறகு உலகின் ஏற்றத்தாழ்வு இன்னும் உச்சம் அடைந்திருக்கிறது. கரோனா பரவல், உலக நாடுகளில், ஒரே நேரத்தில் ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி இருக்கிறது. வரலாற்றில் இதற்கு முன் இவ்வாறு ஒரே நேரத்தில் அனைத்து நாடுகளிலும் ஏற்றத்தாழ்வு அதிகரித்ததில்லை. கரோனா ஊரடங்கு கால கட்டத்தில் மட்டும் உலக அளவில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. கோடீஸ் வரர்கள் மேலும் மேலும் செல்வத்தைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனையோர் ஏழ்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். உலகின் பொருளாதாரக் கட்டமைப்பு தான் இத்தகைய ஏற்றத்தாழ்வுக்குக்கு காரணம் என்கிறது சமீபத்தில் வெளியான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில், உலகப் பொருளாதார மாநாடு சென்ற வாரம் நடைபெற்றது. அதையொட்டி ஆக்ஸ்ஃபாம், உலகின் ஏற்றத்தாழ்வு குறித்து ‘வாந ஐநேளூரயடவைல எசைரள’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளி யிட்டது. கரோனா வைரஸ் எவ்வாறு உலகில் ஏற்றத்தாழ்வை அதிகரித்திருக் கிறது என்பதையும், உலகின் பொருளாதாரக் கட்டமைப்பு...

ஆங்கிலேயருக்கு சேவகம் செய்யத் தயார், என்றார் சாவர்க்கர் (2)

ஆங்கிலேயருக்கு சேவகம் செய்யத் தயார், என்றார் சாவர்க்கர் (2)

‘ஆனந்த விகடன்’ வார ஏடு, 2019, டிசம்பர் 18 இதழில் சாவர்க்கர் பற்றிய கட்டுரை இது. சாவர்க்கர் 1924-க்கு முன்பு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பதுதானே, நாம் அறிந்தது. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார் சாவர்க்கர். 1911-லேயே அவர் ஒரு கடிதம் எழுதினார். அது இப்போது கிடைப்பதில்லை. ஆனால், 1913 அவர் அனுப்பிய மற்றொரு கடிதத்தில் அந்த முந்தைய கடிதத்தைக் குறிப்பிடுகிறார். கடிதத்தில்,  `அடிபணிதல்’ வாசகங்கள் பளிச்சென்று இருக்கின்றன. ‘கூடி : கூhந hடிஅந அநஅநெச டிக வாந படிஎநசnஅநவே டிக ஐனேயை’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், ‘சிறைக் கொடுமைகளை என்னால் தாங்க முடிய வில்லை. எண்ணெய் ஆலையில் போட்டு வதைக்கிறார்கள். அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால், நான் அரசியலமைப்பின் தீவிர ஆதரவாளனாகச் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் அரசுக்கு சேவகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்....

புனைவுகளை அறிவியலாக்கும் நாட்காட்டி

புனைவுகளை அறிவியலாக்கும் நாட்காட்டி

கோரக்பூர் அய்.அய்.டி. வெளியிட்டுள்ள நாட்காட்டி – போலி அறிவியலை அறிவியலோடு இணைத்து குழப்ப முயற் சிப்பதை படம் பிடிக்கிறது இக்கட்டுரை. ஒரு பிரபல தமிழ் நாளிதழில்  இந்திய அறிவுமுறை குறித்த  நாட்காட்டி பற்றிப் பாராட்டி  ஒரு கட்டுரை  வந்திருந்தது. ஐஐடி காரக்பூரில் இயங்கும் நேரு அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம் சார்பாக வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திற்கும் பண்டைய அறிவு குறித்தும் அதனைப் பாராட்டும் விதமாக மேலைநாட்டு விஞ்ஞானிகளின் பாராட்டுக் கருத்துகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக சொல்ல முயற்சிப்பது, சமஸ்கிருதப் பெருமையும் சமஸ்கிருதம்  சார் அறிவு முறையும் இந்தியாவின் உன்னத வரலாறாகக் கூறப்படு கிறது.  இவை அனைத்தும் ஆதாரமற்ற புனைவு வகை அறிவு என்பதே   முதல் கட்டப் பார்வையாகும். ‘சப்த ரிஷிகள்’ : ஜனவரி மாதத்தை காஸ்யபர், ஜமதக்னி, கௌதமா, பரத்வாஜா, விசுவா மித்திரர், வஷிஷ்டர், அட்ரி உள்ளிட்ட ஏழு ரிஷிகளை சப்த ரிஷிகள் எனக் குறிப்பிடுகிறது. டிசம்பர் மாதத்தை கண் முன்னே...

‘வர்ணாஸ்ரம்’ என்ற பாகுபாட்டை ஆதரித்தார் சாவர்க்கர்

‘வர்ணாஸ்ரம்’ என்ற பாகுபாட்டை ஆதரித்தார் சாவர்க்கர்

சாவர்க்கர் கூறும் இந்துத்துவம் எது?‘ஆனந்த விகடன்’ வார ஏடு, 2019, டிசம்பர் 18 இதழில் சாவர்க்கர் பற்றிய கட்டுரை இது. அமித் ஷாவின் ‘சாவர்க்கர் பாசம்’ அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் வரைபடம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோ வுக்கு போஸே கொடுப்பார் மனிதர். ஆக, விஷயம் தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள் வேகமெடுத்துவிட்டன. ஏற்கெனவே, ‘ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும். இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு உணர்ந்திருக் கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும்கூட. இந்த நேரத்தில், சாவர்க்கர் யார், அவரது அரசியல் எப்படிப்பட்டது, அவர் பாடுபட்டது யாருக்காக என்பதையெல்லாம், விரிவாகப் பேச வேண்டியது...

வேளாண் சட்டம்: உச்சநீதிமன்றம் நியமித்த குழுவின் பின்னணி என்ன?

வேளாண் சட்டம்: உச்சநீதிமன்றம் நியமித்த குழுவின் பின்னணி என்ன?

நீதிமன்றம் வேளாண் சட்டங்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்க ஒரு குழு போட்டுள்ளது. இந்த குழுவிடம் விவசாயிகள் தமது கருத்துகளை கூற வேண்டும் என்பதை கிட்டத்தட்ட ஒரு ஆணையாக நீதிமன்றம் முன்வைத்துள்ளது. இந்த குழு அமைக்கப்பட்டதில்தான் நீதிமன்றத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து பலத்தசந்தேகம் எழுந்துள்ளது. பேச்சு வார்த்தைகளில் அரசு தரப்பிலும் குழுவை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தது. சட்டங்களை அகற்றாமல் எந்த குழுவையும் தாங்கள் ஏற்க இயலாது என தொடர்ந்து விவசாயிகள் கூறிவருகின்றனர். இந்த குழுவின் தலைமைப் பொறுப்புக்கு நீதிபதி லோதாவை நியமிக்கலாம் என 11.01.2021 அன்று துஷ்யந்த் தவே முன்மொழிந்தார். சில நாட்களுக்கு முன்பு இதே ஆலோசனையை முன்வைத்த நீதிமன்றம், கிராமப்புற பிரச்சனைகள் பற்றி ஆழமாக ஆய்வு செய்யும் பிரபல பத்திரிக்கை யாளர் சாய்நாத் போன்றோரை இந்தகுழுவில் இணைக்கலாம் என்று கூட கருத்து தெரிவித்தது. ஆனால் இப்பொழுது அறிவிக்கப்பட்ட குழு உறுப்பினர்களின் பெயர்கள் இமாலய அதிர்ச்சியை உருவாக்கி...

அம்பலப்படுத்துகிறார், பேராசிரியர் கருணானந்தம் (4) ராகுல சாங்கிருத்தியாயனின் பார்ப்பனியம்

அம்பலப்படுத்துகிறார், பேராசிரியர் கருணானந்தம் (4) ராகுல சாங்கிருத்தியாயனின் பார்ப்பனியம்

  ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’  என்ற புதினம் ஆரியர்களை உயர்த்திப் பேசுகிறது. அதை வைத்து தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார் பேராசிரியர் கருணானந்தம். (சென்ற இதழ் தொடர்ச்சி) ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலில் பார்ப்பன கதாப்பாத்திரங்களின் வழியாக, இராகுல சாங்கிருத்தியாயன் கதைகளை கூறுகிறார். இந்த கதாபாத்திரங்களில் ஒருவர் கூட சூத்திரர் கிடையாது. கதாபாத்திரங்களில் ஒருவர்கூட இராட்சஷனோ, அசுரனோ கிடை யாது. அதாவது பார்ப்பனர்களை தலைவர் களாகக் கொண்டு நூலில் கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். இன்னும் கூற வேண்டு மானால் 3ஆவது அத்தியாயத்தில் ‘அமிர்தாஷ்வன்’ என்ற ஒரு பார்ப்பனன் வழியாக கதையை கூறுகிறார். அவரும் சத்ரியர்கள் செய்வது தவறு என்று கூறுகிறார். நான்காவது அத்தியாயத்தில் ‘புரூகிதன்’, அய்ந்தாவது அத்தியாயத்தில் ‘பிரதானன்’, ஆறாவது கதையில் ‘அங்கீரா’ இவரை மிகவும் முக்கியமான வராக கூறுகிறார். இவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள். குரு ஏழாவது, எட்டாவது அத்தியாயத்தில் தான் மாறுபட்டு கருத்தைக் கூறுகிறார். ‘சுதர்ஷ்’...

பேராசிரியர் கருணானந்தம் விளக்குகிறார் (3) ராகுல சாங்கிருத்தியாயன் இரட்டை வேடம் ஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா?

பேராசிரியர் கருணானந்தம் விளக்குகிறார் (3) ராகுல சாங்கிருத்தியாயன் இரட்டை வேடம் ஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா?

உலக வரலாற்றிலேயே அன்று முதல் இன்று வரை ஒரு சிறு சமூகத்திலேயே புரோகிதம் நிலையாக இருப்பது இந்தியாவில் மட்டும் தான். வேறு எந்த நாட்டிலும் கிடையாது, வேறு எந்த மதத்திலும் கிடையாது.   ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’  என்ற புதினம் ஆரியர்களை உயர்த்திப் பேசுகிறது. அதை வைத்து தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார் பேராசிரியர் கருணானந்தம். (சென்ற இதழ் தொடர்ச்சி) ‘ரிக் வேத கால ஆரியர்கள்’ என்ற நூலில், அசுரர்களிடத்தில் போர் நடைபெற்றதாக குறிப்பிடப் பட்டுள்ளது. சம்பாரன், விருத்தினன், நமூஷி போன்ற பல அசுர மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட் டுள்ளது. அசுரர்கள் எப்படி கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடப்பட் டுள்ளது. நூலின் ஓரிடத்தில், “திவோதஸ் என்ற மன்னன் சம்பாரன் என்ற அசுர  மன்னனுடன் 40 ஆண்டுகால போரில் ஈடுபடுகிறான். மிகக் கடுமையாக நடைபெற்ற போரின்  இறுதியில்  அந்த அசுர மன்னனை கொல்வதாக கூறப்பட்டுள்ளது.   வெற்றி பெற முடியாததற்கு...

ஒருபோதும் பின் வாங்கக் கூடாது – தொல்.திருமாவளவன்

ஒருபோதும் பின் வாங்கக் கூடாது – தொல்.திருமாவளவன் மனுசாஸ்திர எரிப்பு மாநாட்டில் 2013 உரை 1920 களில் தந்தை பெரியார் அவர்களும் எம்.சி. இராஜா போன்றவர்களும், சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த தோழர் கண்ணப்பர் போன்றவர்களும், மனுதர்ம சாஸ்திரத்தை வேண்டிய தேவையை அன்றைக்கு எந்த அடிப்படையில் சொன்னார்களோ, அந்த அடிப்படை இன்னும் அப்படியே இருக்கிற காரணத்தால் மீண்டும் மனுதர்மத்தை எரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. மனுதர்மத்தை எரிப்பதனால் ஜாதி ஒழிந்துவிடுமா? அப்படி எரிப்பதனால் ஒழிந்து விடாது. இங்கே நிலவுகிற இந்த ஜாதிய கட்டமைப்புக்கு ஜாதிய வன்கொடுமைகளுக்கு, எது அடிப்படை என்பதை அடுத்தடுத்த புதிய தலைமுறைகளுக்கு அடையாளம் காட்டுகிற ஒரு போராட்டமாக இந்த போராட்டம் அமையும். மனுதர்மம் என்பது அன்றைய அரசியல் அமைப்பு சட்டம். இந்த நாட்டை மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் அன்றைக்கு அரசர்களுக்குத் தேவையாக இருந்த சட்ட விதிகளாகத் தான் மனுதர்மம் விளங்கியிருக்கிறது. இன்றைய அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியாவை ஆண்டு...

பார்ப்பன தேசிய பத்திரிகைகளால் இருட்டடிக்கப்பட்டார் வ.உ.சி.

பார்ப்பன தேசிய பத்திரிகைகளால் இருட்டடிக்கப்பட்டார் வ.உ.சி.

வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை (3) 05.09.2020 அன்று தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த வ.உ.சி. பிறந்த நாள் இணைய வழி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. இரண்டாம் பகுதி படிக்க 1929 இல் செங்கல்பட்டு முதலாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் பெரியார் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார்,  வணங்கபடுவதற்கும், வணங்கு பவனுக்கும் இடையில் இடைத்தரகர்களோ, வட மொழியோ தேவையில்லை  என்று ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். அதை ஏற்றுக் கொண்டுதான் வ.உ.சியும்  இலஞ்சம் வாங்காத நீதிபதியிடம் தரகர் வேண்டாமே  என்று பேசுகிறார். அதனால் தான் சைவர்கள் வ.உ.சி யையும் ஒதுக்கினார்கள். சைவர்கள் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு சும்மா இருப்பார்களா அவர்களும் கிளர்ந்தெழுந்து வ.உ.சி யை எதிர்க்கிறார்கள். அதில், முத்தையாப் பிள்ளை என்ற ஒருவர், “பிடிவாதத்தால் கப்பல் விடப் போய் அதனால் கிடைக்கும் தண்டனையினால் பாடம் கற்காதவர், சர்வ வல்லமை மிக்க பிரிட்டிஷாரின் கட்டளையையே மதிக்காதவர், அதேபோலத்தான்...

வ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு – பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்

வ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு – பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்

வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை (2) 05.09.2020 அன்று தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த வ.உ.சி. பிறந்த நாள் இணைய வழி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. முதல் பகுதி படிக்க தமிழக வரலாற்றில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் வீரியம் கொண்டதற்கு சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் ஒரு காரணம். அந்த சேரன்மாதேவி குருகுலத்திற்கு 31 ஏக்கர் நிலத்தைத் தன் சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்தவர் கானாடு காத்தான் வை.சு. சண்முகம். ஆனால் குருகுலத்தில் பார்ப்பனரல்லாதார் குழந்தைகளை பாகுபடுத்தி நடத்துகிறார்கள் என்ற செய்தி தெரிந்தவுடன் கடுமையான எதிர்ப்புகள் கிளம்புகிறது. வரதராஜுலு நாயுடுவும், பெரியாரும் கடுமையாக எதிர்க்கிறார்கள். வைக்கம் போராட்டமும் சேரன்மாதேவிப் போராட்டமும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான கலந்துரை யாடல்களெல்லாம் கானாடுகாத்தான் சண்முகம் இல்லத்தில் தான் தொடந்து நடைபெற்றது.  சுயமரியாதை இயக்கத்தில் இயங்கியவரும்கூட. 1935இல் அவரது மகள் பார்வதி, அவரது திருமண மேடையிலேயே, பெரியாரிடம் நான்...

ஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்

ஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்

இந்தி, சமஸ்கிருத திணிப்புகளை ஒவ்வொரு நாளும் மோடி ஆட்சி அரங்கேற்றி வருகிறது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னிடம் விமான நிலையத்தில் இந்தியில் பேசிய பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரிடம், தனக்கு இந்தி தெரியாது என்று கூறியவுடன், நீங்கள் இந்தியர் தானா என்று கேட்டார் அந்த அதிகாரி. ‘ஆயுஷ்’ மருத்துவ அமைச்சகம் நடத்திய ஒரு இணைய கருத்தரங்கில் அந்தத் துறையின் செயலாளர் இந்தி மொழியில் பேசினார். தென்னாட்டிலிருந்து பங்கேற்ற பிரதிநிதிகள் தங்களுக்கு இந்தி தெரியாது; நீங்கள் பேசுவது புரியவில்லை என்றவுடன், தனக்கு இந்தி மட்டும்தான் தெரியும்; புரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று திமிருடன் பேசினார் அந்த அதிகாரி. காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி மோடி ஆட்சி இணையம் வழியாக தமிழ்நாட்டில் மாணவர் மாணவிகளுக்கு நடத்திய புதிர் போட்டியை, இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தி தமிழை புறக்கணித்தனர். அரியலூர் மாவட்டத்தில் தேசியமய வங்கியின் நிர்வாகி உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டு வந்த ஓய்வு பெற்ற...

வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் – வ.உ.சிதம்பரனார்

வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் – வ.உ.சிதம்பரனார்

05.09.2020 அன்று தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த வ.உ.சி. பிறந்த நாள் இணைய வழி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. முதல் பகுதி நாம் தமிழ்ச் சமூகத்திற்கு நினைவூட்ட வேண்டிய ஒரு பெரும் தலைவரைப் பற்றி அவருடைய பன்முகச் செயல்பாடுகளைப் பற்றி எடுத்துரைப்பதற்கான ஒரு வாய்ப்பாக நான் இதைப் பார்க்கிறேன். அவர் தொடக்க காலத்தில் விடுதலை வீரராக, குறிப்பாக திலகரோடு சேர்ந்து பணியாற்றிய தீவிரவாத பிரிவைச் சார்ந்தவராக வாழ்க்கையைத் தொடங்கி சிறைபட்டதை, விடுதலைக்குப் பின்னர் நடந்த மாற்றங்களை பலரும் பல கோணங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். நான் ஒரு பெரியார் இயக்கத் தோழன் என்ற முறையில் பெரியார் இயக்கத்தோடும், சுயமரியாதை இயக்கத்தோடும் அவர் கொண்டிருந்த தொடர்புகளைப் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவில் நடைபெற்ற முதல் தொழிற்சங்க போராட்டமானாலும், அரசியல் ரீதியாக நடந்த முதல் வேலை நிறுத்தப் போராட்ட மானாலும் அதில் குறிப்பிடத்தக்க...

கொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை 80 இணைய வழி கருத்தரங்குகள்

கொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை 80 இணைய வழி கருத்தரங்குகள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இணையக் கருத்தரங்கங்கள் ‘Team Link’ மற்றும் முகநூல் வழியாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 01.04.2020 அன்று ‘Team Link’ வழியாக தொடங்கப்பட்ட கருத்தரங்கங்கள் 31.05.2020 அன்று வரை நடைபெற்ற கருத்தரங்கம் தினமும் காலை 11:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. ‘தோழர் பெரியாரின் சமதர்மம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி – ஏப் 1 அன்றும், ‘இடஒதுக்கீடு சிக்கல்கள்’ என்ற தலைப்பில் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் – ஏப் 2 அன்றும், ‘நாத்திகமும் அறிவியல் மனப்பான்மையும்’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரன் – ஏப் 3 அன்றும்,  ‘மருத்துவத் துறையில் திராவிட இயக்கத்தின் சாதனை’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மாணவர் கழகம் பிரசாந்த் ஏப் 4 அன்றும்,  ‘கொளுத்துவோம் மனுதர்மத்தை’ என்ற தலைப்பில் – தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் ஏப் 5...

சென்னை கருத்தரங்கில் வாலாஜா வல்லவன் பேச்சு ‘மநு’ சாஸ்திரமே இப்போதும் ஆட்சி செய்கிறது

சென்னை கருத்தரங்கில் வாலாஜா வல்லவன் பேச்சு ‘மநு’ சாஸ்திரமே இப்போதும் ஆட்சி செய்கிறது

திருச்சி பெரியார் சரவணன் எழுதிய ‘திராவிடர் விவசாய சங்கம்’ நூலின் திறனாய்வு கருத்தரங்கம் 01.03.2020 அன்று சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி சென்னை மாவட்டப் பொறுப்பாளரும் பெரியாரிய ஆய்வாளருமான வாலாசா வல்லவன் நிகழ்த்திய உரை: திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தை பெரியார் 1952இல் தொடங்கி இருக்கிறார்கள். அது குறித்த இந்த புத்தகம் திராவிடர் விவசாய தொழிலாளர் கழகத்தின் அமைப்பினுடைய நோக்கங்கள் பற்றி 1952இல் வெளிவந்தது. தற்போது 2016ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் ஏன் சங்கம் வைத்திருக்கின்றனர், நாம் ஏன் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் வைத்திருக்கிறோம் என்பதைப் பற்றி பெரியார் சொல்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி அப்போது ஒன்று தான். இந்திய பொதுவுடமைக் கட்சி. சோவியத்தி லிருந்து கட்டளை வந்தால் டெல்லி அதை ஏற்கும். இங்கிருக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு பார்ப்பனிய சூழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில் இந்த மண்ணிற்கு உண்டான ஒரு...

குனிந்து கிடந்தவனை நிமிர வைத்தது திராவிடர் இயக்கம்

குனிந்து கிடந்தவனை நிமிர வைத்தது திராவிடர் இயக்கம்

அரை நூற்றாண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சி சாதனையாக எதைச் சொல்வீர்கள்? நான் வசித்த மயிலாடுதுறையில் மகாதேவ தெரு, பட்டமங்கலம் தெரு என்று இரண்டு தெருக்கள் உண்டு. பிராமணர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெரு. அவர்கள்தான் வழக்கறிஞர்களாக, ஆசிரியர்களாக, மருத்துவர்களாக இருப்பார்கள். சாமானிய மக்கள் அன்றைக்கு அந்தத் தெருக்களில் நுழைந்தாலே, ‘சாமி வீட்டுக்குப் போகிறேன்’ என்று சொல்வார்கள். அய்யர் வீடு என்றுகூட சொல்ல மாட்டார்கள். ‘எந்தச் சாமி வீட்டுக்குப் போகிறாய்?’ என்று கேட்டால், ‘டாக்டர் சாமி வீட்டுக்குப் போகிறேன்; வக்கீல் சாமி வீட்டுக்குப் போகிறேன்’ என்று பதில் வரும். அவ்வளவு பய பக்தி! பிள்ளைவாள் வரச் சொன்னார், முதலியார் வீடு வரை போய் வருகிறேன் இப்படி எல்லோருமே சாதியால்தான் குறிப்பிடப் பட்டார்கள். மேல்சாதி என்று சொல்லிக் கொள் பவர்களுக்கு இதில் உள்ள பேதம் புரியாது. ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை எப்படி அழைத்திருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். எனக்கு விவரம் தெரிந்து முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் வீடுகளில்...

மாநிலங்களவையில் அதிர்ச்சித் தகவல்  ‘அய்.அய்.டி’களில் ‘இடஒதுக்கீடு’ மறுப்பு

மாநிலங்களவையில் அதிர்ச்சித் தகவல் ‘அய்.அய்.டி’களில் ‘இடஒதுக்கீடு’ மறுப்பு

பார்ப்பனப் பிடியில் உள்ள அய்.அய்.டி. உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியல் இனப் பிரி வினருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடுகள் முழுமையாக நிரப்பப்படுவது இல்லை என்ற புள்ளி விவரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை முனைவர் பட்டத்துக்கான தேர்வுத் திட்டங்களில் பட்டியலின பழங்குடிப் பிரிவு மாணவர்கள் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் கடந்த வெள்ளிக் கிழமை (மார்ச் 6, 2020)அரசு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விவரங்கள் அடங்கியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமுள்ள 23 அய்.அய்.டி. நிறுவனங்களில் 25007 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வுத் திட்டங்களில் சேர்க்கப்பட்டனர். இதில் பட்டியல் இனப் பிரிவு மாணவர் 9.1 சதவீதம் மட்டுமே. பழங்குடிப் பிரிவினர் 2.1 சதவீதம் மட்டுமே. இரு பிரிவினருக்கும் சேர்த்து 22.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாதியளவுகூட நிரப்பப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டிருப்பதோ 23.2 சதவீதம்தான்...

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய மக்கள் பதிவேட்டின் (என்.பி.ஆர்.) ஆபத்துகள்

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய மக்கள் பதிவேட்டின் (என்.பி.ஆர்.) ஆபத்துகள்

தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: சென்ற இதழ் தொடர்ச்சி மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census) நாம் சொல்வதை அவர்கள் எழுதிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை மதம் என்னவென்று சென்சசுக்காக கேட்டார்கள்; அவர் ‘திராவிட மதம்’ என்று கூறினார். எம்.ஜி.ஆர்.  இந்து மதம் என்று கூற வில்லை. ஆனால் அப்படி ஒரு மதம் உண்டா என்று கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது; மக்கள் சொல்வதை எழுதிக் கொள்ள வேண்டும். அதற்கென உள்ள கையேடு அப்படித்தான் கூறுகிறது. அதை எழுதிக் கொண் டார்கள். மக்கள் என்ன கூறுகிறார்களோ அதை எழுதிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர்-யை திராவிட...

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய குடியுரிமை-மக்கள் பதிவேடுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தானவை

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய குடியுரிமை-மக்கள் பதிவேடுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தானவை

இந்த தேசிய மக்கள் பதிவேடும், இந்தியக் குடியுரிமைப் பதிவேடும் இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானதா? இல்லை, அனைத்துத் தரப்பினருக்கும் எதிரானது. தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை எனக்கு முன்னர் உரையாற்றிய பலரும்  விளக்கி யிருக்கிறார்கள். குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் விலக்கி, குறிப்பிட்ட நாடுகளை உலகின் கொடூரமான நாடுகள் என்பதாக அடையாளப்படுத்துகிற ஒரு சட்டம்; அதிலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர்களுக்கு மட்டும் – 2014க்குப் பின் அந்த நாடுகளெல்லாம் எந்த கொடுமைகளையும் செய்வதில்லை; 2014உடன் நிறுத்திவிட்டார்கள் என்பதைப்போல  -–இந்த சட்டத்தை ஏன் கொண்டு வந்தார்கள்...

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (5) பார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே  இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (5) பார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் – குடியுரிமை பதிவேடு – தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை யாற்றினார். அவரது உரையிலிருந்து: (சென்ற இதழ் தொடர்ச்சி) இந்திரா காந்தி பிரதமராகிறார். பிரதமர் ஆனவுடன் ‘ஆர்கனைசர்’ பத்திரிக்கை என்ன எழுதுகிறதென்றால், ‘பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்ததே தேவையில்லாத ஏமாற்றுத்தனமான முயற்சி. ஓட்டுரிமை அளிக்கக் கூடாது. It is becoming clear that the Female franchise is unnecessary duplicate of effort. பெண்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது போலித்தனமான முயற்சி’ என்று எழுதினார்கள். ஏனென்றால் அப்போது இந்திரா காந்தி பிரதமரானார். கணவர் இறந்த பின்பு கணவர் இல்லாத பெண்மணியாக அவர் இருக்கிறார். 1966 ஜனவரி 30 அன்று ஆர்கனைசர் ஒரு தலையங்கத்தைத் தீட்டியது. அதில் ஆர்.எஸ்.எஸ்....

கோவை நீலச்சட்டைப் பேரணி மாநாட்டுத் தீர்மானங்கள்

கோவை நீலச்சட்டைப் பேரணி மாநாட்டுத் தீர்மானங்கள்

அயோத்திதாசர் பிறந்த நாளான மே 20இல் மனு சாஸ்திர எரிப்புப் போராட்டம்   ஜாதி மறுப்பு திருமணப் பாதுகாப்பு ஆணையம் அமைத்திடுக! பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் திருவள்ளுவராண்டு 2051 (9.2.2020) – அன்று வ.உ.சி. திடலில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்: வீரவணக்கத் தீர்மானங்கள் : 1.  சாதிக் கொடுமைகளை எதிர்த்தும், சாதி  ஆதிக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தோடும் களமாடிய வலியுறுத்திக் கருத்துப்போர் நிகழ்த்திய திருவள்ளுவர், ஒளவையார் தொடங்கி எண்ணற்ற தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், கருத்தாளர்கள் மற்றும் 1957ஆம் ஆண்டு சாதி ஒழிப்புக்காக சாதியைப் பாதுகாக்கின்ற சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்திச் சிறை சென்றதோடு மட்டுமின்றி, அப்போராட்டக் காலச் சூழலில்  ஈகியர்களான எண்ணற்ற தோழர்கள் உள்ளிட்ட 20ஆம் நூற்றாண்டின் சாதி ஒழிப்புப் போராளியர்களாக முனைந்து எழுந்த அறிஞர்கள், இயக்கச் செயற் பாட்டாளர்கள், களப் போராளியர்கள், முன்னின்ற பொதுமக்கள் என அனைவருக்கும் மற்றும் அண்மையில் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்த...

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (4) ‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே  குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (4) ‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் – குடியுரிமை பதிவேடு – தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை யாற்றினார். அவரது உரையிலிருந்து: (சென்ற இதழ் தொடர்ச்சி) தற்போது சுப்ரயமணிசாமி அயோத்தி வரலா றும் இந்து மறுமலர்ச்சியும் என்ற நூல் எழுதியிருக் கிறார். இந்த நூலில், ‘இந்திய நாட்டினுடைய வரலாற்றை புராணங்களின் அடிப்படையில் எழுத வேண்டும். நமக்கு முன் நமது வரலாற்றை எழுதியவர்கள் நமது அந்நியர்கள். நாம் எழுதுகிற வரலாறு புராணங்களின் வரலாறாக இருக்க வேண்டும்’ என்று சுப்ரமணியசாமி எழுதியுள்ளார். சுப்ரமணியசாமி எதனடிப்படையில் இப்படி எழுதுகிறார்? எதனால் புராணங்களின் படி இந்தியாவை வரையறுக்க வேண்டும்? என்று கூறு கிறார். இந்த சிந்தனை யாரிடமிருந்து சுப்ரமணிய சாமிக்கு வருகிறது? ஆர்.எஸ்.எஸ்-இன் குரு கோல்...

இல்லாத சரஸ்வதி நதி – நிதிநிலை அறிக்கைக்குள் எப்படி வந்தது?

இல்லாத சரஸ்வதி நதி – நிதிநிலை அறிக்கைக்குள் எப்படி வந்தது?

2020-21ஆம்  ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிந்து சமவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்று பல முறை குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. மத்திய அமைச்சரின் பேச்சை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நிதியமைச்சர் முதலில் தவறாகப் படிக்கிறார் என்று எண்ணினேன். ஆனால், அவர் மீண்டும் மீண்டும் ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்றே குறிப் பிட்டார். இது புதிதல்ல. ஆர்.எஸ்.எஸ் தொடர்ச்சி யாக இதையே சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்துத்துவவாதிகள் இந்திய வரலாற்றை புதியதாக கட்டமைக்க இதைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.  வேதப் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு. வேத நாகரிகம் தான் இந்திய நாகரிகம் என்று மீண்டும் மீண்டும் நிறுவ நினைக்கிறார்கள். அதற்கான குறியீடாகத்தான் சரஸ்வதி நதியை பயன்படுத்து கிறார்கள். சரஸ்வதி நதி என்று...

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (3) இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (3) இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை

குடியுரிமைத் திருத்தச் சட்டம் – குடியுரிமை பதிவேடு – தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை யாற்றினார். அவரது உரையிலிருந்து: (சென்ற இதழ் தொடர்ச்சி) உத்திர பிரதேசத்தின் முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடு கிறவர்கள் எங்களின் ஒடுக்கு முறையைக் கண்டு அஞ்சி ஓட வேண்டும்’ என்று பதிவிடும் அளவிற்கு அங்கு நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கிறது. மோடி சொல்கிறார், குடியுரிமைப் பதிவேடு பற்றி நாங்கள் விவாதிக்கவே இல்லை என்று. எதிர்ப்பு வந்த பின்பு இந்தக் கருத்தை கூறுகிறார். ஒரு நாட்டினுடைய பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர் இதைவிட ஒரு தரம் தாழ்ந்தவராக இருக்க முடியாது. ஏனென்றால், அசாமில் இருந்து கொண்டு அமித்ஷா கூறுகிறார் இந்தியா...

பார்ப்பனர் வாதங்களுக்கு மறுப்பு தமிழ் குடமுழுக்குக்கு ஆகமங்கள் தடையா?

பார்ப்பனர் வாதங்களுக்கு மறுப்பு தமிழ் குடமுழுக்குக்கு ஆகமங்கள் தடையா?

தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை பார்ப்பன புரோகிதர்கள் எதிர்க்கிறார்கள். சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே சக்தி வாய்ந்தவை. தமிழுக்கு அந்த சக்தி இல்லை என்று தொலைக்காட்சி விவாதங் களில் வாதிடுகிறார்கள். காலங்காலமாக சமஸ்கிருதத்தில் தான் ‘கும்பாபிஷேகம்’ நடக்கிறது என்றும் வாதாடுகிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை போர்த்தி பெரியாரைத் தமிழ் விரோதி என்றும், தாங்களே தமிழ்ப் பற்றாளர்கள் என்றும் நீட்டி முழங்கி வந்த பா.ஜ.க.வினர், தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து மவுனம் சாதிக்கிறார்கள். தங்களது சமஸ்கிருதப் பார்ப்பனப் பற்றை வெளிக் காட்டாமல் மூடி மறைத்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் வழிபாடுகள் தான் நீண்டகால மரபாக இருந்திருக்கிறது என்றும், சிவன், சக்தி, திருமால் வழிபாடுகள் வேதத்திலேயே இல்லாத போது எப்படி சமஸ்கிருத வழிபாடு இருந் திருக்கும் என்றும் தமிழ் ஆய்வாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பார்ப்பனர்களிடமிருந்து பதில் இல்லை. தமிழ் வழிபாடு குறித்து பல ஆய்வு நூல்களை...

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (2) குடியுரிமைச் சட்டங்கள்: மோடியின் பொய்யுரைகள்

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (2) குடியுரிமைச் சட்டங்கள்: மோடியின் பொய்யுரைகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் – குடியுரிமை பதிவேடு – தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை யாற்றினார். அவரது உரையிலிருந்து: (சென்ற இதழ் தொடர்ச்சி) முதன் முதலாக இந்த குடியுரிமைச் சட்டம் எப்போது உருவானது? அரசியல் சட்டம் வந்த போது இந்த குடியுரிமை சட்டம் உருவாகவில்லை. குடியுரிமை சட்டங்கள் பற்றி விவாதங்கள் நடந்தன. அம்பேத்கர் அப்போது சொன்னார், ‘ எதிர்காலத்தில் நாடாளுமன்றம் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள இந்த அரசியல் நிர்ணய சபை அதிகாரத்தை வழங்குகிறது. நாடாளுமன்றம் அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். குடிமக்களாக யார் இருக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றம் நிர்ணயித்துக் கொள்ளலாம்’ என்று அம்பேத்கர் கூறினார். அதன் பிறகு 1955 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் வருகிறது....