தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர் கழகம் கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை !

தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர் கழகம் கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட மாணவர் கழகம் சார்பாக 21.02.2018 அன்று “மாணவர்களே! இருள் சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்” எனும் தலைப்பில் தமிழக மாணவர்கள் எவ்வாறு இந்த இந்துத்துவ மோடி அரசால் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான அரசுப் பணிகள் எவ்வாறு பிறருக்கு தாரைவார்க்கப்படுகின்றன, 60% இட ஒதுக்கீடு வைத்திருக்கிற தமிழ்நாட்டில் நமக்கான வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெளி மாநில மாணவர்கள் பெரும்பான்மையாக பங்கெடுக்கும் அளவிற்கு கதவை திறந்து விட்டுருக்கிற பா.ஜ.க. எடுபிடி அரசான தமிழக அரசின் நயவஞ்சகத்தை ஒரு துண்டறிக்கையாக தயார் செய்து அதை தூத்துக்குடியில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களிடம் பரப்பி விழிப்புணர்வை உண்டாக்கும் முயற்சியில் துண்டறிக்கை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது..

இதற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. பல மாணவர்கள் இந்த துண்டறிக்கையை படித்துவிட்டு தங்களுக்கு தோன்றிய சந்தேகங்களை தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் பிரபாகரன் போன்றவர்களிடம் கேட்டு, தனக்கு தெரிந்த மாணவர்களிடம் இந்த செய்தியை எடுத்து கூறுகிறோம் என்று சொல்லி தோழர்களின் அழைபேசி எண்களை வாங்கிச் சென்றனர்..

Image may contain: one or more people, outdoor and text

You may also like...