பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் நூல்கள் பரிசளிப்பு ஆத்தூர் 26042017

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கடந்த 14-4-2017 அன்று அம்பேத்கர் பிறந்த நாளில், பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது. அதையொட்டி அன்று கழகத் தோழர்களின் முயற்சியில் ஒரு நூலகமும் திறக்கப்பட்டது. நூலகத்தை வடசென்னிமலை அரசினர் கலைக்கல்லூரிப் பேராசிரியரும் பெரியாரியல் சிந்தனையாளருமான பேரா.முருகேசன் திறந்துவைத்தார். அக்கல்லூரிப் பேராசிரியர் அம்பேத்கர் சிறப்புரையாற்றினார்.

26042017 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அந்நூலகத்துக்கு, குடிஅரசு தொகுப்பினையும், அம்பேத்கர் நூல் தொகுப்பினையும் மாவட்டக் கழகத் துணைச் செயலாளரும், நூலகப் பொறுப்பாளருமான ஆத்தூர் மகேந்திரனிடம் வழங்கினார்.

 

You may also like...