Tagged: தமிழ்நாடு அறிவியல் மன்றம்

மகளிர் சந்திப்பு ஈரோடு 31122016

  தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ஈரோட்டில் 31.12.2016இல் நடந்த பெண்கள் சந்திப்பிற்கு திருப்பூர் சரசுவதி தலைமை தாங்கினார். தி.வி.க. மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். சுதா வரவேற் புரை ஆற்றினார். ‘ஊடகங்களில் பெண்கள்’ என்ற தலைப்பில் இசை மதி, ‘மனுதர்மமும் பெண்களும்’ என்ற தலைப்பில் மணிமொழி, ‘ஆடைக் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் தனலட்சுமி, ‘குடும்பத்தில் முதல் பெரியாரியல் வாதியாக இருக்கும் பெண் சந்திக்கும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் கோமதி, ‘பெரியாரியல் குடும்பங்களில் குழந்தைகள்’ என்ற தலைப்பில் கனல் மதி ஆகியோர் பேசினர்.  பின்னர் “பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் பெண்ணுரிமைக் கோட்பாட்டில் பெரியாரின் தனித்தன்மை” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார். ஈரோடு தோழர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர். மதிய உணவிற்குப் பின்னர் பெரியாரின் இல்லம் சென்று பார்வையிட்டனர். பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு...

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு ! கோபி

“மகளிர் சந்திப்பு.” தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு ! நாள் : 16.10.2016. ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. இடம்: L.கள்ளிப்பட்டி, கோபிசெட்டிபாளையம். தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் மகளிர் சந்திப்பு நிகழ்சி 16.10.2016. ஞாயிறு காலை 10.00 மணி முதல் மாலைவரை கோபிசெட்டிபாளையம்,L.கள்ளிப்பட்டியில் உள்ள தோழர் மணி மொழி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. 17 பெண்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.பல்வேறு தலைப்புகளில் உரையாடல்கள் இடம்பெற்றன.பொது இடங்களில் பெண்களுக்கான இயல்பான உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும் பொது இடங்களில் பெண்களின் உரிமைகளை நிலை நிறுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கலந்து கொண்ட தோழர்கள் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தனர். தொடர்புக்கு: தோழர் மணிமொழி, 9786922952. ந்தி

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு !

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு ! நாள் : 09.10.2016. ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.OO மணி வரை. இடம்: சீதாராம்பாளையம்,தெப்பாறை, திருச்செங்கோடு தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ”மகளிர் சந்திப்பு” 9.10.2016. ஞாயிறு அன்று திருச்செங்கோடு சீதாராம்பாளையம் செப்பாறையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் தனலட்சுமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. காலை 10.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதி பெண்கள் 6 பேர் உள்ளிட்ட 11 பேர் கலந்து கொண்டனர்.இச்சந்திப்பில் கலந்துகொண்ட மகளிர் தங்கள் வாழ்வில் பெரியாரியலின் தாக்கங்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பெரியாரியல் அறிமுகமான பிறகுதான் வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதாக கூறினர்.பெரியாரியல் வாழ்க்கை நெறியில் கணவருடன் சிக்கல்களை ஆலோசித்து முடிவெடுப்பதாகவும் முரண்பாடுகளை எளிதில் களைய முடிகிறது எனவும் மகிழ்ச்சியுடன் கூறினர். மாநில அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் தாய்வழிசமூக...

பெரியாரும் தலித்துகளும் – திருச்சியில் வாசிப்பு முகாம்

பெரியாரும் தலித்துகளும் – திருச்சியில் வாசிப்பு முகாம்

வாசிப்பு முகாம் – II. +++++++++++++++++++ நாள் : 02-07-2016 – சனிக்கிழமை. நேரம் : காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை. தலைப்பு : பெரியாரும் தலித்துகளும். இடம் : இன்னாவோட்டர்ஸ் குரூப்ஸ், தியான லிங்கா டவர், முதல் தளம், உறையூர் பெட்ரோல் பங்க், ஏ ஒன் பாஸ்ட் புட் அருகில், ருக்மணி தியேட்டர் பஸ் ஸ்டாப், சாலை ரோடு, உறையூர், திருச்சி. பங்கேற்பு :தோழர் கொளத்தூர் மணி மற்றும் வாசிப்பாளர்கள். கட்டணம் : ரூ.100 மட்டும். ஏற்பாடு : தமிழ்நாடு அறிவியல் மன்றம். தொடர்புக்கு – 8754316187, 9842448175.

பிரியாவிடை ! கண்ணீர் மல்க பிரிந்து செல்லும் குழந்தைகள் !

பிரியாவிடை ! கண்ணீர் மல்க பிரிந்து செல்லும் குழந்தைகள் ! ”குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2016” தமிழ்நாடு அறிவியல் மன்றம் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள் திண்டுக்கல்,ஐ.சி.எம். ஹவுசில் நடத்திய ”குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2016” ல் பங்கேற்ற குழந்தைகள் முகாம் நிறைவுற்று தத்தமது இல்லம் திரும்பும் போது கண்ணீர் மல்க சக நண்பர்களுக்கு பிரியாவிடை கொடுத்த நெகிழ்ச்சியான நிகழ்வு. 42 குழந்தைகள் பங்கேற்புடன் இம்முகாம் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்சியுடனும் நடைபெற்றது.  

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய ”குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2016 ”

திண்டுக்கல்,ஐ.சி.எம். ஹவுசில் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள் நடைபெற்ற குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் 42 குழந்தைகள் பங்கேற்புடன் சிறப்புடன் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் பகிரப்பட்ட இப்பழகு முகாமில் ”விமர்சன சிந்தனை மற்றும் பாலின சமத்துவம்” குறித்து தோழர் பூங்குழலி கருத்துரைத்தார். கதை சொல்லல் மற்றும் கதை உருவாக்கல் ஆகியவற்றை தோழர்கள் கோவை வெங்கட்,திருப்பூர் சதீஸ்குமார் ஆகியோர் நிகழ்த்தினர். ”நாடகம் மற்றும் திறன் வளத்தல் ”குறித்த கருத்துக்களை தோழர் சந்திரமோகன் அவர்களும்,”இளம் பருவத்தினருக்கான சவால்கள்” வகுப்பினை தோழர் நீலாவதி அவர்களும், ”வாசிப்பும்,விமர்சனமும்” வகுப்பினை தோழர் சிவகாமி அவர்களும் வழி நடத்தினர். சமூக சிற்பிகள் அறிமுகத்தினை தமிழ்செல்வன் அவர்களும், மீளாய்வுகளை மணிமாறன் அவர்களும் நெறிப்படுத்தினர்.ஓவிய வகுப்புகளுக்கு சிகரன்,பாடல் வகுப்புகளுக்கு யாழினி ஆகியோரும் பொறுப்பேற்று நடத்தினர். சித்தன்னவாசல் புதுக்கோட்டை அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு குழந்தைகள் சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர். அறிவிற்கும் மன வளர்ச்சிக்குமான செய்திகளும்,கொண்டாட்டமும் நிறைந்த இம்முகாம் இனிதே நிறைவடைந்தது. இறுதி...

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பில் விடுமுறைக் காலங்களில் குழந்தைகள் பழகு முகாம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக வரும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களான டிசம்பர் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் திண்டுக்கல்லில் முகாம் நடைபெற உள்ளது. 3 நாட்களுக்கான பயிற்சி, உணவு, தங்குமிடம் மற்றும் சுற்றுலா அனைத்திற்கும் சேர்த்து கட்டணம் ரூ.750. டிசம்பர் 24 இரவே பெற்றோர்கள் குழந்தைகளை திண்டுக்கல் பயிற்சி மய்யத்திற்கு அழைத்து வந்துவிட வேண்டும். பெற்றோர்கள் மய்யத்தில் தங்க இயலாது. நகைகள், செல்போன்கள் அனுமதிக்க இயலாது. – ஆசிரியர் சிவகாமி / பேசி: 9842448175 மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் மன்றம் பெரியார் முழக்கம் 21112013 இதழ்

குழந்தைகள் பழகு, மகிழ்வு முகாம்

குழந்தைகள் பழகு, மகிழ்வு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு,மகிழ்வு முகாம்”. நாள் : மே மாதத்தில், 20.05.2016 முதல் 24.05.2016 முடிய, 5 நாட்கள் இடம் : மதுரை கட்டணம் : 1000 ரூபாய் மட்டும். குறிப்பு : 10 வயது முதல் 15 வயது உள்ள குழந்தைகள் இருபாலரும் பங்கேற்கலாம். ”முன் பதிவு அவசியம்” பதிவு செய்ய அழைக்கவும் : 9842448175,9688856151.

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்: பங்கேற்பாளர்களுக்கு வேண்டுகோள்

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்: பங்கேற்பாளர்களுக்கு வேண்டுகோள்

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்: பங்கேற்பாளர்களுக்கு வேண்டுகோள் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பாக கோடை விடுமுறைக் காலத்தில் கொடைக்கானலில் குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் 15 முதல் 19 வரை 5 நாள்கள் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். 5 நாள்களுக்கு உணவு தங்குமிடம், சுற்றுலா உள்பட ரூ.1000 மட்டும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முகாமிற்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் கவனத்திற்கு: பயிற்சி நடைபெறும் இடம் : கொடைக்கானல் வரவேண்டிய இடம் : திண்டுக்கல் பேருந்து நிலையம் வரவேண்டிய நேரம் : 14.05.2014 புதன் கிழமை 4 மணிக்குள் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட வேண்டும். அங்கிருந்து கொடைக்கானலுக்கு குழந்தைகளை மட்டும் தனிப் பேருந்தில் நாங்களே அழைத்துச்...