Category: கடலுர்

நான்காவது நாளாக 08122015 அன்று கடலூரில் நிவாரண உதவி

நான்காவது நாளாக 08122015 அன்று கடலூரில் நிவாரண உதவி

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி புரிய விரும்புவோர் கவனத்திற்க்கு ! கடலூர் ஒட்டிய கிராமப்புறங்களுக்கு இப்போது வரை நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை. அக்கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்ப்ட்டுள்ளது. அளிக்கப்படும் நிவாரண பொருட்களும் பல்வேறு காரணங்களால் அங்கு சென்று சேர்வதில்லை.கடலூரிலேயே பொருட்களை கொடுத்து செல்வது,உள்கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை,மேலும் பொருட்களை கொண்டு செல்லும் வழியில் சிலரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் ஆகிவற்றால் மக்களுக்கு பொருட்கள் சரியாக கொண்டு சென்று வழங்கப்படாததல் இன்னும் அம்மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர். திராவிடர் விடுதலைக் கழக தோழர்களும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.பொருட்களை சேகரித்து வைக்க இப்போது வடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர்,மூத்த பெரியார் தொண்டர் தோழர் கலிய மூர்த்தி அவர்களின் வடலூர்,ராதா திருமண மண்டபத்தில் நிவாரண பொருட்கள்...

கடலூர் கிராம பகுதிகளுக்கு பொருள் உதவி செய்ய விரும்பும் தோழர்களுக்கு !

வரலாறு காணாத மழை காரணமாக சென்னையைப்போலவே கடலூரும் மிகுந்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. இங்குள்ள உழைக்கும் சாதாரண கிராம பகுதி மக்கள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.இந்த கிராமப்புற மக்களுக்கு நிவாரண பொருட்கள் சரிவர கிடைக்காத நிலை உள்ளது. கடலூர் ஒட்டிய உள் கிராமங்களில் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் தங்கள் பணிகளை மிகுந்த சிரமங்களுக்கு இடையே செய்துவருகிறார்கள். தோழர்களின் இப்பணிக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் உதவிகள் கிடைத்து வருகின்றன. மேலும் இந்த கடலூர் கிராம பகுதிகளுக்கு பணி யாற்றும் கழக தோழர்களுக்கு பொருட்களாக உதவி செய்ய விரும்புபவர்கள், கீழ் காணும் பாதை வழியாக பொருட்களை கொண்டு சென்று கொடுக்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.கடலூர் பகுதிகளுக்கு நிவாரன பொருட்களை கொண்டு செல்வோர் கடலூரிலேயே நின்றுவிடுவதால் உள்கிராமங்களுக்கு பொருட்கள் சேருவதில் மிகவும் தாமதமும்,சரிவர கிடைக்காத நிலையும் உள்ளது. எனவே கடலூர் உள் கிராமப்பகுதிகளில் பணி செய்யும் கழக தோழர்களுக்கு நிவாரண பொருட்களை...

கடலூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள மீட்புப்பணி !

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் பகுதி கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் கோவையிலிருந்து கடலூருக்கு கொண்டு செல்லப்பட்டு கழக தோழர்கள் அதனை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சாதாராண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வழங்கினார்கள். கடலூர் கிராம பகுதிகளில் தொடர்ந்து கழக தோழர்கள் வெள்ள மீட்புபணியில் ஈடுபட்டுள்ளார்கள். கட்லூர் கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களுக்கு உதவி செய்தவர்கள், ஜி.ஆர்.டி..கல்லூரி – 15,000 மதிப்புள்ள பொருட்கள். கழக ஆதரவாளர் தோழர் முத்துரத்தினம் மற்றும் போர்டு நிறுவன ஊழியர்கள் – 10,000 மதிப்புள்ள பொருட்கள். கழகதோழர்கள் – 15,000 இணைந்த கரங்கள் அறக்கட்டலை கோவை,வடவெள்ளி மருதமலை சுப்ரமணிய சாமி திருக்கோயில் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு – 50,000 மதிப்புள்ள பொருட்கள். பொருட்கள் விவரம் : பேஸ்ட் 100, பிஸ்கட் 8 பெட்டி, நாப்கின் 2 பாக்ஸ், பால்பவுடர் 1 பாக்ஸ், அரிசி 150 கிலோ, பெட்சீட் 100,...

வெள்ள மீட்பு பணியில் திராவிடர் விடுதலைக் கழகம்

சென்னையில் பெய்துள்ள வரலாறு காணாத பெருமழையின் காரணாமாக அனைத்து தரப்பு மக்களும் தாங்கொணா துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற வெள்ள மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.இந்த மக்கள் பணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. சாதாரண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் பணிகளை செய்து வரும் கழக தோழர்கள் உணவு தயாரித்து வழங்குதல்,உடைகளை விநியோகித்தல், படகு மூலம் வீடுகளில் சிக்கிகொண்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கழகத்தின் இப்பணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிதியாகவும், உடைகள்,உணவு பொருட்களாகவும் தோழர்கள் பலர் வழங்கிவருகிறார்கள். நிதியாக, கடலூர் பகுதிக்காக கத்தார் நாட்டைச் சேர்ந்த தோழர் காதர் மீரான் அவர்கள் வழியாக ரூ 1,10,000 (ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்) வழங்கியுள்ளார்கள். அத்தொகை கடலூர் ஆலப்பாக்கம் பகுதிக்காக செலவிடப்படுகிறது. சென்னை பகுதிக்காக குவைத்தில் உள்ள கழக...

0

கழகச் செயல்வீரர்கள் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகச் செயல்வீரர்கள் உற்சாகத்துடன் களப்பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் குறித்த செய்தி. சேலம் : தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த தினத்தையொட்டி, 17-09-2015 அன்று, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 7-30 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, தோழர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் கழக கொடியினை கட்டி அலங்கரித்துக் கொண்டு, காடையாம்பட்டி நோக்கி புறப்பட்டனர்; அங்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 8-00 மணியளவில் அப்பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனப் பேரணி திருமலைகிரி, சிவதாபுரம் வழியாக 9-00 மணியளவில் சேலம் மாநகரை அடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார்...

விருத்தாசலத்தில் கழகப் பொதுக் கூட்டம் 0

விருத்தாசலத்தில் கழகப் பொதுக் கூட்டம்

15.03.2015 அன்று மாலை 3 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொடி யேற்றுவிழா நடை பெற்றது. கழக கொடியை கழக தலைவர் கொளத்தூர் மணி ஏற்றிவைத்தார். இந் நிகழ்ச்சியில் கழக தலைமைக்குழு உறுப் பினர்கள் பால் பிரபாகரன், ஈரோடு ரத்தினசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி. சிவக்குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கழக சார்பில் “தமிழ் இன உரிமை மீட்பு பொதுக்கூட்டம்” மாலை 6 மணிக்கு, விருத்தாசலம், வானொலித் திடலில் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். முன்னதாக மாலை 5 மணியளவில் துரை. தாமோதரன் “’மந்திரமா, தந்திரமா?” நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் ஆகிய அமைப்புகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. பெரியார் முழக்கம் 02042015 இதழ்

0

கடலூர் மாவட்டக் கலந்துரையாடல்

13-8-2015 அன்று மாலை 6-00 மணிக்கு, கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், கம்மாபுரம், திருச்சிக்காரர் மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப்  பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னினையிலும் நடைபெற்றது.