Category: குடி அரசு 1935

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம்

  தோழர் ஈ.வே. ராமசாமி அறிக்கை சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் சமுதாய சம்மந்தமான கொள்கைகளின் எதிரிகளால் கிளப்பிவிடப்பட்ட பலவிதமான கற்பனைச் சேதிகளாலும் விஷமப் பிரசாரங்களாலும் பொது மக்களுக்குள் சில தப்பு அபிப்பிராயங்கள் பரவி வருவதாகத் தெரிகின்றது. இதைப்பற்றி பல சமயங்களில் நாம் பொது ஜனங்களுக்கு விளக்கி இருந்தும் சில பகுதிகளில் அவ்வித தப்பு அபிப்பிராயங்கள் மாறியதாகத் தெரியவில்லை. ஆதலால் முன்பு விளக்கியவைகளையே மறுபடியும் விளக்க வேண்டியிருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான கருத்தெல்லாம் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும், ஏழை மக்களுக்கும் நன்மை செய்வதற்கு உழைப்பதேயாகும். அதாவது அவர்களை தற்போது இருக்கும் கஷ்டமான நிலையிலிருந்து விடுவித்து சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் சமத்துவமாக வாழச் செய்ய வேண்டும் என்பதே. இந்தக் கருத்து வெற்றி பெற வேண்டுமானால் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல் ஆகிய மூன்று துறைகளிலும் கவலை எடுத்து உழைத்து வந்தாலொழிய பயனேற்படாது. ஆதலால், சுயமரியாதை இயக்கமானது முக்கியமாய் இத்...

பார்ப்பனர் சூழ்ச்சி  சாமிநாதய்யர் ஜெயசிந்தி

பார்ப்பனர் சூழ்ச்சி சாமிநாதய்யர் ஜெயசிந்தி

  ஜாதி அகங்காரத்திலும், தாங்கள் தான் எல்லோரையும்விட புத்திசாலிகள் என்னும் ஆணவத்திலும், தாங்கள் தான் எந்தக் காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிக்கக் கூடியவர்கள் என்கின்ற மமதையிலும் பார்ப்பனர்களுக்கு ஈடாக யாரும் இல்லை என்பது நாம் வெகுகாலமாக அநுபவத்தில் அறிந்து பொது ஜனங்களுக்குக் கூறி வரும் விஷயமாகும். இந்த அகங்கார புத்தி கொண்டே பார்ப்பனர்கள் இன்று அரசியல் துறை, சமுதாயத் துறை, சமயத் துறை, பாஷைத் துறை, சங்கீதத் துறை, நாடகத் துறை, வைத்தியத் துறை, பத்திரிகைத் துறை, உத்தியோகத் துறை, வியாபாரத் துறை, காப்பி கிளப்புத் துறை ஆகிய எல்லாத் துறைகளிலும் புகுந்து அவைகளில் பார்ப்பனரல்லாதாரை முன்னேற விடாமல் அமிழ்த்தி வருகிறார்கள். இவ்வுண்மை பார்ப்பனர்களாலும், பார்ப்பனர்களின் செல்வாக்காலும் நடத்தப்படும் பத்திரிகைகளில் இன்று நடைபெறும் கட்டுப்பாடான பிரசாரத்தைக் கவனித்து வரும் சுயமரியாதையும், ரோஷமும், பகுத்தறிவும் உள்ள பார்ப்பனரல்லாதார்க்கு விளங்காமற் போகாது. உதாரணமாக, அரசியல் துறையை எடுத்துக் கொண்டால் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி சாஸ்திரியார்,...

சாரதா சட்டம்  பலன் தர வேண்டுமானால்?

சாரதா சட்டம் பலன் தர வேண்டுமானால்?

    பெண்களை இளம் வயதில் மணம் செய்து கொடுக்கும் இந்துக்களின், அறிவீனமான கொடுமையான செய்கையைத் தடுப்பதற்காகச் சீர்திருத்த வாதியாகிய ஹரிவிலாச சாரதா அவர்களால் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டிருக்கும் பால்ய விவாகத்தடைச் சட்டம் தற்சமயம் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமலே இருந்து வருகிறது என்பதை நாம் பல தடவைகளில் குறிப்பிட்டிருக்கிறோம். அச்சட்டத்தை நிறைவேற்ற இந்திய சீர்திருத்தக்காரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் தோழர் காந்தியார், காலஞ்சென்ற பண்டித மோதிலால் நேரு முதலிய காங்கிரஸ்வாதிகளாகிய வைதீகர்களால்கூட பலமாக ஆதரிக்கப்பட்டும், பொது ஜனங்களின் அபிப்பிராயந் தெரிவதற்கென லெட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து சுற்றுப்பிராயணக் கமிட்டி நியமித்து விசாரணை செய்தும், கடைசியில் உயிரற்ற ஒரு வெறுஞ் சட்டமாகவே நிறைவேறியது. அச் சட்டத்தின்படி தொடுக்கப்படும் வழக்குகளில்கூட வைதீகர்களின் எதிர்ப்புக்கு அஞ்சியோ, அல்லது அரசாங்கத்தின் அலட்சிய புத்தியினாலோ, சாரதா சட்டத்தை மதிக்காதவர்கள் பயப்படுவதற்கு வழியில்லாத மிகச் சாதாரணமான அபராதமும், தண்டனைகளுமே கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் வைதீகர்கள், சாரதா சட்டத்தைச் சிறிதும் லட்சியம் பண்ணாமல்,...

வெற்றியின்  யோக்கியதை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமா?

வெற்றியின்  யோக்கியதை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமா?

    இந்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்து விட்டதைப் பற்றி இந்தியா பூராவிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடந்தன. அது மாத்திரமல்லாமல் வெற்றி பெற்ற காங்கிரஸ் வீரர்கள் இந்திய சட்டசபையில் செய்த  செய்கின்ற வேலைகளோ “”சர்க்காருக்குத் தோல்விக்குமேல் தோல்வியும் காங்கிரசுக்கு வெற்றிக்கு மேல் வெற்றியும்” என்பதாக பிலாக் கொட்டை போன்ற எழுத்தில் போட்டு பத்திரிகைகள் பக்கங்களை நிரப்புகின்றன. இதன் பயன் என்ன என்று பார்த்தால் அரிசிக்கு விலை ஏற்ற வேண்டும். அதற்காக அயல் நாட்டிலிருந்து வரும் நெல்லுக்கும் அரிசிக்கும் நொய்க் குருணைக்கும் வரி போட வேண்டும் என்று சாக்காரைக் கெஞ்சுவதும் தான் வெகு தடபுடலாக அடிபடுகின்றதே ஒழிய மற்றபடியான காரியம் என்ன என்று பார்த்தால் பெரியதொரு சைபர் தான். “”சர்க்கார் தோல்வியடைந்தார்கள்” என்பதனால் ஒரு காதொடிந்த ஊசியளவு பயனாவது மக்களுக்கு ஏற்படும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா? அல்லது வாயினாலாவது சொல்ல முடியுமா? என்று பார்த்தால் அதுவும் ஒன்றுமில்லை என்று தான்...

வைசு. ஷண்முகம் பட்டினி விரதம்

வைசு. ஷண்முகம் பட்டினி விரதம்

  கானாடுகாத்தான் தோழர் வைசு. ஷண்முகம் அவர்களை நமது தோழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர் நாட்டுக்கோட்டை நகரத்து வகுப்பைச் சேர்ந்தவர். இந்நாட்டில் காந்தி கிளர்ச்சி கிளம்புவதற்கு முன்பாகவே அதாவது சுமார் 20 வருஷத்திற்கு முன்பே செட்டிநாட்டில் சமூக சீர்திருத்தம் என்னும் பேரால் ஒரு பெருங் கிளர்ச்சியை கிளப்பி விட்டு அதில் முனைந்து வேலை செய்து கொண்டிருந்த இளம் வாலிபர்களில் தோழர் வைசு. ஷண்முகம் முதன்மை யானவரும், முக்கியமானவருமாய் இருந்தவர். அவரது முயற்சியாலும் அவரது தோழர்களது முயற்சியாலும் செட்டிநாட்டில் சமூகத் துறையில் ஓரளவு சீர்திருத்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதோடு இன்று அச்சமூகத்தில் கலப்பு விவாகம், விதவைகளை மணத்தல், கல்யாண ரத்து விவாகம், பெண்கள் விவாக விஷயத்தில் தங்கள் பெற்றோருக்கு அடிமையாகாமல் தங்கள் இஷ்டப்படி கணவர்களைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுதல், இஷ்டப்படாத கணவரிடம் இருந்து பிரிந்து விடுதல் ஆகிய  காரியங்கள் ஏற்பட்டதும், ஆடம்பரச் செலவுகள் குறைக்கப்பட்டு சிக்கனங்கள் கையாடும் மனப்பான்மை ஏற்பட்டதும், லட்சம் 10 லட்சக் கணக்கில்...

காங்கிரஸ் ஒழிந்து விட்டதா?

காங்கிரஸ் ஒழிந்து விட்டதா?

  ஏன் அபேட்சகரை நிறுத்தவில்லை ஜஸ்டிஸ் கட்சியில் காலியான இரண்டொரு சென்னை சட்டசபை ஸ்தானங்களுக்கு அபேட்சகரை நிறுத்தாததால் ஜஸ்டிஸ் கட்சி ஒழிந்து போய் விட்டதென்றும் அதற்கு நாட்டில் சிறிதும் செல்வாக்கில்லை என்றும் காங்கிரஸ்காரர்களும் காங்கிரசின் பேரால் வாழும் பத்திரிகைகளும் செய்த விஷமப் பிரசாரத்துக்கு எல்லை இல்லை. சில பாமர மக்கள் இதை நம்பிக் கொண்டும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். அப்பொழுது “பகுத்தறிவு’ அதற்குத் தக்க பதில் புள்ளி விபரத்தோடு எழுதியிருந்தது. ஐயோ பாவம்! இந்த விஷமப் பிரசாரம் நடந்து 8 நாள் கூட ஆகவில்லை. இப்போது காங்கிரஸ் ஒழிந்து விட்டதா? நாட்டில் காங்கிரசுக்கு செல்வாக்கு இருக்கிறதா? என்று கேட்கக் கூடிய காலம் வந்துவிட்டது. என்னவென்றால் சமீபத்தில் காலியாகும் சென்னை நகரசபை ஸ்தானங்களுக்கு காங்கிரஸ் அபேட்சகர்களை நிறுத்துவதில்லை என்று தீர்மானம் செய்துவிட்டதாம். இது எல்லா பார்ப்பனப் பத்திரிகைகளிலும் காணப்படுகிறது. ஆகவே எந்த ஸ்தாபனமும் சமய சந்தர்ப்பம் சௌகரியம் ஆகியவை களை கவனித்துத்...

இந்தியாவுக்கு ஆங்கிலம் “”வரப்பிரசாதம்”

இந்தியாவுக்கு ஆங்கிலம் “”வரப்பிரசாதம்”

  தேசீய  வாதிகளுக்குப்  புத்தி  முளைக்கிறது ஹிந்தி  பக்தர்கள்  என்ன  செய்யப்  போகிறார்கள் மிஸஸ்  சரோஜினி  தேவியின்  பேச்சு தேசீயத் துரோகி இந்தியாவுக்குப் பொதுப் பாஷையாக ஆங்கிலம் வழங்கி வருகிறது. ஆங்கில அரசாங்கத்தார் செய்த நன்மையில்  இதுவொன்று. அவர்கள் நமது நாட்டிற்கு வந்திராவிட்டால் இது பொதுப் பாஷையாக ஆகி இருக்க மாட்டாது. ஆங்கிலங் கற்றதினால் நமது சமுதாயத்திலே சில மாறுபாடுகள் தோன்றின. ஜாதிப் பைத்தியம்  வேற்றுமை கொஞ்சம் அகலத் தொடங்கியது. மூடநம்பிக்கைகளின் பயனாய் வயிறு வளர்க்கும் கூட்டம் தவிர மற்றவர் களிடையில் கொஞ்சம் கொஞ்சம் மூடநம்பிக்கை ஒழிய ஆரம்பித்தன. பழக்க வழக்கங்கள் சிறிது சிறிது மாற ஆரம்பித்தன. சகோதரத்துவத்தைப் பற்றி வாயளவிலாவது பேசும்படியான நிலை ஏற்பட்டது. நடை உடை பாவனைகளிலும் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டு வந்தது. அன்றியும் மக்களுக்குள் சுதந்திர உணர்ச்சி தோன்றவும், தாழ்த்தப் பட்டவர்கள் விழித்தெழவும், பெண் மக்கள் கர்ஜனை செய்யவும், பல துறைகளிலும், சீர்திருத்தக்காரர்கள் தோன்றவும், இந்திய சமுதாயத்தையே...

சிவில் கடனுக்கு ஜெயிலா?

சிவில் கடனுக்கு ஜெயிலா?

  ஆண்பிள்ளை பட்ட கடனுக்கு பெண்டுபிள்ளை பட்டினி கிடப்பதா? கடன்பட்டு கொடுக்க முடியாமல் போய்விட்டவர்களை சிவில் ஜெயிலில் வைக்கும் முறை அனாகரீகமானதும், மிக்க அனியாயமானதுமான காரியம் என்று இதற்கு முன் பலமுறை எழுதி இருக்கிறோம். ஜெயில் என்று சொல்லப்படுவது ஏதாவது ஒரு குற்றம் செய்து தண்டனை அடைந்தவர்களுக்கே உரியதாகும். அப்படிக்கின்றி உலக வாழ்க்கையில் வியாபாரம், விவசாயம், தொழில் முறை முதலிய காரியங்களுக்கு இருதரத்தாரும் லாபத்தை உத்தேசித்து செய்யப்படும் வரவு செலவுகளில் துண்டு விழுந்து கடன் கொடுக்காமல் போய்விட்டால் அதற்காக ஒருவனை ஜெயிலில் வைப்பது என்பது எந்த விதத்தில் நியாயமானது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்து முஸ்லீம் சமூகத்தில், ஏன் ஜர்மனி ஆரிய சமூகத்திலும், ஆண் பிள்ளை வெளியில் சென்று பாடுபட்டு பணம் கொண்டுவர  வேண்டியதும், பெண் பிள்ளை சமையலறையையும், படுக்கை வீட்டையும் அலங்கரித்துக் கொண்டிருந்து புருஷனுடன் கூடி பிள்ளைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டிருக்க வேண்டியதும்தான் தர்மம் என்றும், சில வகுப்புப் பெண்கள்...

சம்பளத்தைப் பற்றி சர்க்காருக்கு ஏன் இவ்வளவு கவலை

சம்பளத்தைப் பற்றி சர்க்காருக்கு ஏன் இவ்வளவு கவலை

  வரி கட்ட முடியவில்லை என்கின்ற கூச்சல் பொதுவாக எல்லா வகுப்பு மக்களிடமிருந்தும் கிளம்பிக் கொண்டே இருக்கிறது. இந்திய சட்டசபையிலும் மாகாண சட்டசபையிலும் ஜனப்பிரதிநிதிகள் என்பவர்கள் சகல வித வரிகளையும் குறைக்க வேண்டும் என்று கூப்பாடு போட்ட வண்ணமாய் இருக்கிறார்கள். சர்க்காராரும், “”ஒவ்வொன்றையும் அனுதாபத்தோடு கவனித்துத் தக்கது செய்கிறோம்” என்று சொல்லிக் கொண்டே வருகிறார்கள். சில இனத்தில் குறைப்பதாகவும் ஒத்துக் கொள்ளுகிறார்கள். இது ஒருபுறமிருக்க மற்றொரு புறத்தில் செலவுக்குப் பணம் போதவில்லை என்று நெருப்புப் பெட்டி போன்றவைகளுக்குப் புதிய வரிகளும் போடுகிறார்கள். காலணா கார்டை முக்காலணாவும், அரையணா கவர் ஒன்றே காலணாவும் ஆக்கினார்கள். இதுவும் தவிர விளை பொருள்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்கின்றது என்பதை சர்க்காரே ஒப்புக்கொண்டு உணவுப் பொருள்கள் மீதும் வரி போட வேண்டுமென்று கருதுகின்றார்கள். இவ்வளவும் அல்லாமல் மக்கள் நலனுக்காக செய்ய வேண்டிய சுகாதாரம், கல்வி, போக்கு வரவு சாதனங்கள், நீதி இலாக்கா ஆகியவை களுக்கு செய்ய...

அன்னிய அரிசிக்கு வரி விதிப்பது அனியாயம்

அன்னிய அரிசிக்கு வரி விதிப்பது அனியாயம்

  அன்னிய அரிசிக்கு வரி போடுவதனால், அரிசி விலை உயர்ந்து விடும் என்றும், அதனால் ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் கஷ்டம் ஏற்படும் என்றும், நாம் சென்ற வாரம் விரிவாக எழுதியிருந்தோம். அன்னிய அரிசிக்கு வரி விதிக்கப் போகிறார்கள் என்ற விஷயம் தெரிந்தவுடனேயே அரிசியின் விலை மூட்டைக்கு 2 ரூபாய் ஏறி விட்டது. தொழிலாளிகளுக்கும் ஏழைகளுக்கும் இப்பொழுதே கஷ்ட காலம் ஆரம்பித்துவிட்டது. 21.2.35ல் சென்னையில், இந்திய அலுமினியம் சங்கத் தொழிலாளர்கள் ஆதரவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னிய அரிசிக்கு வரி விதிக்கக் கூடாதென்றும் அன்னிய அரிசிக்கு வரி விதிக்கும்படி இந்திய சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் பணக்காரர்களின் நன்மையை மாத்திரம் கருதி அரிசிக்கு வரி விதித்து இறக்குமதியைத் தடுக்க வேண்டும் என்று நிறைவேற்றிய தீர்மானத்தைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். 20.2.35ல் கூடிய சென்னை மாகாணத் தொழிற் கட்சியின் கமிட்டிக் கூட்டத்திலும் அன்னிய அரிசிக்கு வரி விதிப்பதைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். மற்ற இடங்களில் உள்ள தொழிலாளர்களும், சுயமரியாதைக்காரர்...

தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது

தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது

ஆரியர்கள் இந் நாட்டுக்கு வந்து குடியேறுவதற்கு முன் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றியும், அவர்களது மதம், தெய்வ வழிபாடு என்பவைகளின் மாதிரியைப் பற்றியும், பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றபடி பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம்  பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்தவ மதத்தையுமே ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம். இஸ்லாம் மார்க்கத்தில் இருந்து வருவதாகக் காணப்படும் கோஷா முறை என்னும்படியான பெண்களுக்கு மூடி இடும் கொடுமை இல்லாமல் அவர்கள் தாராளமாய் ஆண்களைப் போல் வெளியில் ஊசலாடவும், உலக விவகாரத்தில் ஆண்களைப்போல் கலந்து கொள்ளவுமான முறை இருந்திருக்குமானால் இன்றைய “”வைதீகத்” தமிழ் மக்கள் வேண்டும் சீர்திருத்தங்கள் உள்பட சகல அபிலாசைகளுக்கும் இஸ்லாம் மார்க்கத்தில் இடம் இருக்கின்றன என்று சொல்லலாம். சுயமரியாதைக்காரர்கள் கோரும் மாற்றமும் திருத்தமும் அதில் பெரிதும் இல்லையானாலும் இன்று ஆரியர்களை வெறுக்கும் தமிழ் மக்களுக்கு தாராளமாய் இடமிருக்கின்றது....

அனியாயம்!                 அனியாயம்!!

அனியாயம்!                 அனியாயம்!!

  அரிசிக்கு  வரி  போடுவது அனியாயம்!!! காங்கிரஸ்காரர்கள்  கூப்பாட்டுக்கு  பயந்து  இந்திய  சர்க்கார்  அரிசிக்கு  வரி  போடப்போகிறார்களாம்.  இதைத்  தொழிலாளிகளும்,  சு.ம.  சங்கங்களும்  கண்டித்து அரிசிக்கு வரி கூடாதென்று தீர்மானித்து வைசிராய்க்கு  அனுப்பவேண்டுகிறோம். குடி அரசு  பெட்டிச் செய்தி  17.02.1935

காங்கிரஸ் கூத்து

காங்கிரஸ் கூத்து

  வாக்குறுதிகள் தேர்தல் சூழ்ச்சியா? இனியும் பொது ஜனங்கள் ஏமாறப் போகிறார்களா? தேர்தல் காலத்தில் காங்கிரஸ்காரர்கள் வானத்தை வில்லாக வளைக்கிறோம், மணலைக் கயிறாகத் திரிக்கிறோம், வெள்ளைக்கார அரசாங்கத்தை அப்படியே மூட்டை முடிச்சுகளுடன் கப்பலேற்றி விட்டுத் தோழர் ராஜகோபாலாச்சாரியாரை கவர்னர் ஜெனரலாகவும், தோழர் சத்தியமூர்த்தி போன்றவர்களைக் கவர்னர்களாகவும் நியமிக்கப் போகிறோம் என்றெல்லாம் உளறிக் கொட்டினார்கள். (இணிணண்tடிtதtடிணிணச்டூ அண்ண்ஞுட்ஞடூதூ) அதாவது ஜனநாயக  சபை கூட்டி அதன் மூலம் இந்திய சுயராஜ்யத் திட்டத்தை ஏற்படுத்தப்  போவதாகவும், தற்பொழுது பார்லிமெண்டாரால் கொடுக்கப் போகும் சீர்திருத்தத்தை அடியோடு நிராகரிக்கப் போவதாகவும் வகுப்புத் தீர்ப்பு விஷயத்தில் மாத்திரம் நடுநிலமை வகிக்கப் போவதாகவும் பொது ஜனங் களிடம் கூறி ஓட்டு வாங்கினார்கள். அரசியல் சீர்திருத்தத்தை நிராகரிப்பதும், ஜனநாயக சபை கூட்டுவதும் தவிர வேறு காரியங்களில் காங்கிரஸ்காரர்கள் தற்பொழுதைய சட்டசபையில் தலையிடப் போவதில்லை என்றுகூடக் கூறினார்கள். ஆனால் சென்ற 5, 6, 7ந் தேதிகளில் இந்திய சட்டசபையில் நடந்த விவாதங்களிலிருந்தும், 7 ந்...

ஏழைகளை வஞ்சிப்பதே

ஏழைகளை வஞ்சிப்பதே

  காங்கிரஸ் தொண்டு சென்னை மாகாணத்து மிராசுதாரர்களுக்கு பூமி வியாபாரத்தில் ஆதாயமில்லாமல் போய்விட்டதாம். அதனால் மிராசுதாரர்கள் தங்கள் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் நில வரியைக் குறைக்க வேண்டும்  என்று “”மகாநாடுகள்” கூட்டி சர்க்காரைக் கேட்கிறார்கள். சர்க்காராருக்கு தாங்கள் வைத்துக் காப்பாற்றும் உத்தியோகஸ்தர் களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணம் வேண்டும். ஆதலால் நிலவரியைக் குறைக்க முடியாது என்கின்றார்கள். இது விஷயமாய் ஒரு போலி யுத்தம் சுமார் 2, 3 வருஷகாலமாகவே நடந்து வருகின்றது. காங்கிரசுக்காரர் என்பவர்கள் இப்போது இந்திய சட்டசபையில் சிறிது “”ஆதிக்கம்” பெற்றவுடன் இதற்கு ஒரு மத்தியஸ்தர் வழியைக் கண்டுபிடித்து மிராசுதாரர்களுக்கு அதிக லாபம் வரும்படியாகவும் சர்க்காருக்கு தங்கள் உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தைக் குறைக்காமல் இருக்கவும், வேண்டுமானால் இன்னும் அதிக சம்பளம் கொடுக்கக்கூட வசதி இருக்கும்படியாகவும் செய்து இருக்கிறார்கள். அது என்னவென்றால்  அதுதான் தொழிலாளிகள், கூலிக்காரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய ஏழை மக்கள் வாயிலும், வயிற்றிலும் மண்ணைப் போட்டு, அவர்களுடைய பட்டினியால் மிராசுதாரர்கள் நஷ்டத்தையும்,...

காங்கிரஸ் வாக்குறுதிகள் எங்கே?

காங்கிரஸ் வாக்குறுதிகள் எங்கே?

  வகுப்பு தீர்ப்புக்கு ஆதரவு சமஷ்டி அரசாட்சி வேண்டாம் இந்திய சட்டசபையில் பார்லிமென்ட் கமிட்டி அறிக்கையைப் பற்றி மூன்று தினங்கள் தொடர்ந்து விவாதம் நடந்தது. காங்கிரசின் சார்பில் þ அறிக்கையை ஒப்புக் கொள்ள முடியாதென்று கொண்டு வந்த திருத்தத் தீர்மானமும், வகுப்புத் தீர்ப்பில் நடுநிலமை வகிப்பதாகக் கொண்டு வந்த திருத்தத் தீர்மானமும் ஏராளமான ஓட்டுக்களால் தோற்கடிக்கப்பட்டன. வகுப்புத் தீர்ப்பை அங்கீகரிப்பதாகவும், மாகாண சுயாட்சித் திட்டத்தைத் திருத்தி அமைப்பதோடு சமஷ்டி சர்க்கார் முறையை விட்டுவிட்டு இந்திய சர்க்காரில் பொறுப்பாட்சியை ஏற்படுத்த வேண்டு மென்பதாகவும் தோழர் ஜின்னா அவர்களால் கொண்டு வரப்பட்ட திருத்தத் தீர்மானங்கள் ஏராளமான ஓட்டுக்களால் வெற்றி பெற்றன. ஜனநாயக சபை கூட்டி இந்திய சுயாட்சியைப் பற்றித் தீர்மானம் செய்யப் போவதாகத் தேர்தல் காலத்தில் சரமாரியாக வாக்குறுதி கூறிய காங்கிரஸ்காரர் ஒருவரேனும், இந்த விவாதத்தின்போது ஜனநாயக சபை கூட்டும் விஷயமாக ஒரு எழுத்தைக்கூட உச்சரிக்கவில்லை. பார்லிமெண்ட் கமிட்டி அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறிச் சென்ற...

சேலம் ஜில்லா பள்ளர் சமூக  மகாநாடு

சேலம் ஜில்லா பள்ளர் சமூக மகாநாடு

  தோழர்களே! ஜாதி வகுப்பு சம்பந்தமான இம்மாதிரி மகாநாடுகள் கூட்டப்படுவது தேசாபிமானத்திற்கு விரோதமானதென்று சில தேசீயவாதிகளும், தேசபக்தர்களும் குறை கூறுகிறார்கள். நான் அவர்களை ஒன்று ஞானமில்லாதவர்களாக இருக்க வேண்டும், அல்லது தேசீயத்தின் பேரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் பழமை விரும்பி, சோம்பேறிக் கூட்டத்தினராக இருக்க வேண்டும் என்றே கூறுவேன். இன்று இந்நாட்டில் நூற்றுக்கணக்கான ஜாதிகள் இருப்பதும், அவர்களுக்குள் ஒன்றுக்கொன்று மலையும் மடுவும் போன்ற வித்தியாசங்களும் ஒருவரை ஒருவர் கொடுமைப்படுத்துவதும், ஒருவர் உழைப்பில் ஒருவர் வாழ்வதுமான அக்கிரமங்கள் இன்று இருந்து வருகின்றது என்பதையும் மறைக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இக் கொடுமைகள் எவ்வளவு காலமாக இருந்து வருகிறது. இதையொழிக்க இது வரையில் யார் முன்வந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். தாங்கள் வேறு ஜாதி நீங்கள் வேறு ஜாதி; தங்களுக்கு வேறு உரிமை, வேஷம் என்று எண்ணாத தேசபக்தர்களோ, மகாத்மாக்களோ யாராவது இருக்கின்றார்களா என்பதை யோசித்துப் பாருங்கள். இந்நிலையில் அவரவர்களது கஷ்டங்களுக்கு அவரவர்கள் பரிகாரம்...

ஜஸ்டிஸ் கட்சி வேலைத் திட்டம்

ஜஸ்டிஸ் கட்சி வேலைத் திட்டம்

  ஜஸ்டிஸ்  கட்சி  தலைவர்  பொப்பிலிராஜா  அவர்களும்  மற்றும்  சில  ஜஸ்டிஸ்  கட்சி  பிரமுகத்  தலைவர்களும்,  தோழர்கள்  ஆர்.கே.  ஷண்முகம்,  ஈ.வெ. ராமசாமி,  ஙி.க.அ. சௌந்திரபாண்டியன்  ஆகிய  சுயமரியாதை  இயக்கப்  பிரமுகர்களும் சென்ற வாரம் மூன்று நான்கு நாள் தொடர்ந்து  பொப்பிலிராஜா  வீட்டில்  ஜஸ்டிஸ்  கட்சி  வேலைத்  திட்டத்தைப்  பற்றியும்,  பத்திரிகைகளைப்  பற்றியும்,  தோழர்  ஈ.வெ. ராமசாமி  கொடுத்திருந்த வேலைத்  திட்டத்தைப்பற்றியும்,  சுயமரியாதை  இயக்கத்துக்கும்  ஜஸ்டிஸ்  கட்சிக்கும்  உள்ள  சம்பந்தா  சம்பந்தத்தைப்  பற்றியும்  கலந்து  ஆலோசித்தார்கள். சில  வாசக  திருத்தத்தோடு  தோழர்  ஈ.வெ.ரா.  தீர்மானங்களை  ஒப்புக் கொண்டு  நிர்வாக  கமிட்டிக்கு  வைப்பதாக  முடிவு  செய்திருக்கிறது.  அடுத்த  மாதம்  முதல்  மாதம்  ஒரு  ஜில்லா  மகாநாடு  கூட்டுவதென்றும்,  ஜஸ்டிஸ்  கட்சியின்  வேலைத்  திட்டத்தையும்  அதற்குள்ளாகவே  முடிவு  செய்து  அம்மகாநாடுகளில்  பிரசாரம்  செய்து  தீர்மானிக்கச்  செய்ய  வேண்டும்  என்றும்  தீர்மானித்தார்கள். தோழர்  ஈ.வெ. ராமசாமி  தெரிவித்தது  போல்  தமிழ்  தெலுங்கு  முதலிய சுய பாஷை...

புத்தக வியாபாரிகள் கொள்ளை

புத்தக வியாபாரிகள் கொள்ளை

  கல்வி மந்திரி கவனிப்பாரா? தற்காலம் பள்ளிக்கூடங்களில் போதிக்கப்பட்டு வரும் படிப்பின் பிரயோஜனம் அற்ற தன்மையைப் பற்றிக் கல்வி நிபுணர்களும், கல்வியதிகாரி களும், அரசியல்வாதிகளும், சீர்திருத்தக்காரர்களும் ஏகமனதாய் ஒப்புக் கொண்டு வெகு காலமாகவே சீர்திருத்தம் பண்ண வேண்டும் என்று கூச்சலிட்டு வருகிறார்கள். நாமும் பல கூட்டங்களில் தற்காலக் கல்வி முறையைக் கண்டித்துப் பேசி வருவதோடுங்கூட பல மகாநாடுகளில் கல்வியைச் சீர்திருத்த வேண்டும் என்றும், மக்களுடைய மூடநம்பிக்கைகள் ஒழியவும், அவர்களுடைய அறிவு விளக்கமுறவும் தகுந்த பாடப் புத்தகங்கள் வெளிவர வேண்டுமென்றும் இந்தப் பத்து வருஷ காலமாகவே தீர்மானங்கள் மூலம் வெளியிட்டிருக்கின்றோம். இப்பொழுது பாடமாக வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் பெரும் பாலும், ஜாதி உயர்வுகளையும் மதச் சண்டைகளையும் தூண்டிவிடக்கூடிய ஒன்றுக்கொன்று முரண்பட்ட மத விஷயங்களையும், அறிவுக்கும் அனுபோகத்துக்கும் ஒத்துவராததும் மக்களுடைய வாழ்க்கையைத் துன்மார்க்க வழியில் செலுத்துவதற்குத் தூண்டக் கூடியதும் ஆகிய புராணக் கதைகளையும் போதிப்பதாகவே இருக்கின்றன என்பதை பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளே  சொல்லிக் காட்டுகின்றார்கள். இதற்கு ஏற்றாற்போல்...

கூட்டுறவு மந்திரி  கவனிப்பாரா?

கூட்டுறவு மந்திரி  கவனிப்பாரா?

  ஸ்தாபன நிர்வாகிகளின் அட்டூழியம் எந்த எந்தக் காரியங்கள் ஒழுங்காகவும், திறமையாகவும், நாணய மாகவும் நடக்க வேண்டும் என்கின்ற கவலை அரசாங்கத்துக்கு இல்லையோ, அந்தக் காரியங்களைப் பொது ஜனங்கள் தலையில் போட்டுவிட்டு அவை பொது ஜனங்களால் ஊழலாய் நடத்தப்படுவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பது நமது சர்க்காரின் திருவிளையாடலாய் இருந்து வருகிறதே என்று நாம் அனேக முறை சந்தேகிப்பதுண்டு. சில  சமயங்களில் உறுதி கொள்வதுமுண்டு. உதாரணமாக  ஸ்தல  ஸ்தாபனங்கள் விஷயத்தில் அதாவது ஜில்லா, தாலூக்கா போர்ட், முனிசிபாலிட்டி, பஞ்சாயத்து ஆகிய விஷயங்களில் பொது ஜனங்களும், ஓட்டர்களும், பிரதிநிதிகளும் நடந்து கொள்ளும் மாதிரியும்,  அதனால் பொது ஜனங்களின் செல்வமும், நலமும் கொள்ளை போய் பாழாவது பற்றியும் நாம் சுமார் 15 M காலமாகவே வறட்டுக் கூப்பாடு போட்டும், சர்க்காராரும் அனேக விஷயங்களில்  கைப்பிடியாய் பிடித்து கண்ணாடியில் தெரிவதுபோல் உண்மைகள் கண்டும், கட்சி அபிமானம் காரணமாகவும் ஜாதி அபிமானம் காரணமாகவும் அதைப் பற்றியதொரு நடவடிக்கையும் திருத்தப்பாடும்...

“”பகுத்தறிவு”க்கு  2000  ரூபாய்  ஜாமீன்

“”பகுத்தறிவு”க்கு  2000  ரூபாய்  ஜாமீன்

  வாரப்  பத்திரிகையாக  நடத்தி  வந்ததும்  இனி  மாதப்  பத்திரிகை யாகவும்,  காலணா  தினப்  பதிப்புப்  பத்திரிகையாகவும்  நடத்த  உத்தேசித்து  சகல  ஏற்பாடுகளும்  செய்து  வந்ததுமான  “”பகுத்தறிவு”  பத்திரிகைக்கும்  உண்மை  விளக்கம்  பிரசுக்கும்  அரசாங்கத்தார்  29135ல்  2000  ரூஜாமீன்  கேட்டிருக்கிறார்கள்.  ஜாமின்  கட்டி  þ  பத்திரிகைகளை  நடத்துவதற்கு  யோசனைகள்  நடந்து  வருகின்றன. குடி அரசு  பெட்டிச் செய்தி  03.02.1935

“”பகுத்தறிவு”  திருத்தம்

“”பகுத்தறிவு”  திருத்தம்

  சென்றவாரக்  (27135)  குடி அரசு  இதழில்  பகுத்தறிவு  மாதப்  பதிப்புக்குத்  தோழர்  சாமி  சிதம்பரனார்  பிரதான  ஆசிரியராக  இருப்பார்  என்று  எழுதி  இருக்கிறது.  அவர்  உடம்பு  அசவுகரியமாய்  இருப்பதால்  சவுகரியம்  ஏற்படும்  வரையில்,  தற்பொழுது  பிரதான  ஆசிரியராக  ஈ.வெ. ராமசாமி  இருந்து  வருவார்  என்பதையும்,  முடிந்த  வரையிலும்  கட்டுரைகள்  மாத்திரம்  எழுதி  வருவார்  என்பதையும்  தெரிவித்துக்  கொள்ளுகிறோம். குடி அரசு  அறிவிப்பு  03.02.1935

மூன்று பிரபல பிராமணர்கள் முடிவு

மூன்று பிரபல பிராமணர்கள் முடிவு

  பார்ப்பனர்களுக்கு நெருக்கடியான காலத்தில் உதவி புரிந்து வந்த தோழர் எல்.ஏ. கோவிந்தராகவ  ஐயர், தோழர் எம்.கே. ஆச்சாரியார், டாக்டர் மல்லைய்யா ஆகிய மூன்று பார்ப்பன பிரபலஸ்தர்கள் இந்த வாரத்தில் மரணமடைந்து விட்டார்கள். தோழர் கோவிந்தராகவய்யர் பிரபல வக்கீலாய் இருந்தவர். தோழர் எம்.கே.ஆச்சாரியார் இன்னாட்டுப் பார்ப்பனர்களின் உள்ளத்தைப் பளிங்குபோல் வெளிக்காட்டி வந்தவர். தோழர் மல்லய்யா அவர்கள் பார்ப்பனக் கட்சிக்கு உழைத்தவர். ஆகவே இவர்களது முடிவு வருந்தத்தக்கதாகும். குடி அரசு  இரங்கற் செய்தி  03.02.1935

காங்கிரசின் குலைவு

காங்கிரசின் குலைவு

  நெல்லூர் ஜில்லாவைச் சேர்ந்த தோழர்கள் பனகா கனகம்மா,  வென்னலகண்டி ராகவய்யா இருவரும் ஆந்திர மாகாண காங்கிரஸ் கமிட்டியிலிருந்து விலகிவிட்டார்கள். தோழர் ராகவய்யா உள்ளூர் ஜில்லாக் காங்கிரஸ் கமிட்டியிலிருந்தும் விலகி விட்டார். வெ.முரு. லெக்ஷ்மய்யா ஜில்லா காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி பதவியில் இருந்து விலகினார். எம். கோபால் ராவ்  நகர காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி பதவியிலிருந்து விலகினார். தோழர்கள் ராகவய்யா, லெட்சுமய்யா, கோபால்ராவ் ஆகியவர்கள் தங்களுடைய ராஜினாமாக் கடிதத்தில் காங்கிரசானது பணக்காரர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பாடுபடுகிறது என்றும்,  தொழிலாளர்களின் முன்னேற்றத்தைக் கவனிக்காமல் அலட்சியம் செய்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைப் போன்ற காரணத்தாலேயே வடநாட்டி லிருந்தும் பலர் காங்கிரசிலிருந்து விலகியிருக்கிறார்கள் என்பதையும் ஞாபகப்படுத்துகிறோம். இதிலிருந்து காங்கிரசின் உண்மையான போக்கு இன்னதென்று நன்றாகப் பொது ஜனங்களுக்கு விளங்குமென்று நம்புகிறோம். காங்கிரஸ் ஒன்றே ஏழை மக்களுடைய நன்மைக்கும், தொழிலாளிகளின் உரிமைகளுக்கும் பாடுபடுகிறது என்று சொல்வது பெரும் புரட்டென்று தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே காங்கிரஸ் ஏழை மக்களுடைய...

கு.ஐ.கீ. கம்பெனியார் கவனிப்பார்களா?

கு.ஐ.கீ. கம்பெனியார் கவனிப்பார்களா?

  ஈரோடு தாலூக்கா சுற்றுப் பக்கங்களில் கன்று காலிகளுக்கு தீவனப் பஞ்சம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் ஈரோட்டு முனிசிபாலிட்டியில் உள்ள கால்நடைகளுக்குத் தீவனத்துக்காக தஞ்சை ஜில்லா நீடாமங்கலம், திருவாரூர் முதலிய இடங்களிலிருந்து தீவனம் (வைக்கோல்) தருவிக்கலாம் என்ற யோசனை மீது விஷயங்களை விசாரணை செய்து பார்த்ததில் வைக்கோல் ஈரோட்டு விலையைவிட பகுதி பங்கு சகாயமாய் இருந்தாலும் ரயில் சார்ஜ்ஜானது அதிகமாய் இருப்பதால் கட்டுபடி இல்லாமல் இருந்து வருவதால் தருவிக்க முடியவில்லை. அதனால் ஈரோடு முனிசிபல் கமிஷனர் அவர்கள் தென்னிந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு வைக்கோலைப் பொருத்தவரை சகாய ரேட்டு ஏதாவது ஏற்படுமானால் ஏராளமான அளவு தருவிக்கக் கூடும் என்று தெரிவித்து வேண்டிக் கொண்டிருக்கிறார். மாடு கன்றுகளுடைய நன்மையை உத்தேசித்தும், தஞ்சை ஜில்லாவில் உள்ள வைக்கோல்கள் பெரிதும் செலவு இல்லாமல் வீணாய் போகாமலும், விவசாயிகளுக்கு வைக்கோல் மூலம் ஏதோ சிறிது பணம் கிடைத்து அவர்களுக்குச் சவுகரியம் ஏற்படும்படியும் தீவனப் பஞ்சமுள்ள இடங்களில் சௌகரியம்...

காந்தியும்  காங்கிரசும்

காந்தியும்  காங்கிரசும்

  காங்கிரசு  ஜெயித்தது  என்று  மகிழ்ந்த  தோழர்களே! காங்கிரசுக்கு  வேலை  செய்த  தேசாபிமானத்  தோழர்களே! இதற்கு  என்ன  சொல்லுகிறீர்கள்? தோழர்  காந்தி  அவர்கள்  காங்கிரசை  விட்டு  விலகி  விட்டதாகப்  பொது  ஜனங்கள்  கருதும்படியாய்  எவ்வளவு சடங்குகளும்,  விளம்பரங்களும்  செய்து  மக்களை  நம்பும்படியாக  நமது  “”தேசபக்த”  கூட்டத்தார்கள்  செய்து  வந்தார்கள்  என்பது  யாவரும்  அறிந்ததேயாகும். ஆனால்,  அவற்றைப்  பற்றி  நாம்  அது  உண்மை  அல்லவென்றும்,  ஒரு  நாளும்  காந்தி  விலக  முடியாது  என்றும்,  நமது  பார்ப்பனர்களும்  அவரை  ஒரு  நிமிடமும்  விட்டு  பிரிய  மாட்டார்கள்  என்றும்,  ஆனால்  தற்சமயம்  நாட்டில்  ஏற்பட்ட  நிலைமையானது  அதாவது  காந்தியாரின்  கொள்கைகள்  பெரும்பாலும்  தோல்வி  அடைந்துவிட்டதாலும்  காங்கிரசின்  பேராலேயே  அக்கொள்கைகள்  தோற்றுப்  போய்  விட்டது  என்றும்,  அவற்றைக்  கைவிட்டுவிட  வேண்டுமானாலும்  முடிவு  செய்து  விட்டதாலும்,  “”குப்புற  விழுந்தாலும்  மீசையில்  மண்  ஒட்டவில்லை”  என்கின்ற  பழமொழிப்படி  “”காங்கிரஸ்  தோற்றுவிட்டதே  ஒழிய  காந்தியார்  தோல்வி  அடையவில்லை”  என்று  சொல்லி  பாமர ...

தோழர்  சிவராஜ்  தீர்மானமும்

தோழர்  சிவராஜ்  தீர்மானமும்

  சுவாமி  சகஜானந்தம்  வேஷமும் தாழ்த்தப்பட்டோன் பூனா  ஒப்பந்தமானது,  தாழ்த்தப்பட்டவர்களுக்குப்  பாதகத்தை  உண்டாக்கி  விட்டதென்பதையும்,  அதைத்  தாழ்த்தப்பட்டவர்கள்  ஆதரிக்க வில்லை  என்பதையும்  தெரிவிப்பதற்காகச்  சென்னை  சட்டசபையில்  தோழர்  சிவராஜ்  அவர்களால்  கொண்டு  வரப்பட்ட  பூனா  ஒப்பந்தக்  கண்டனத்  தீர்மானம்  பெரும்பான்மையோரின்  ஆதரவு  பெற்று  நிறைவேறிவிட்டது.  அத்  தீர்மானத்திற்கு,  ஜாதி  இந்துக்களின்  வால்  பிடித்துத்  திரியும்  நமது  வைதீகத்  தோழர்  சுவாமி  சகஜானந்தம்  அவர்களும்  சாதகமாகவே  ஓட்டுக்  கொடுத்ததாகப்  பத்திரிகைகள்  கூறுகின்றன.  ஆனால்,  தீர்மானம்  முடிந்து  வெளியில்  வந்தவுடன்  அவர்  மனதில்  என்ன  தோன்றியதோ  என்னமோ  பூனா  ஒப்பந்தத்தைக்  கண்டித்த  தோழர்கள்  சிவராஜ்,  ஜகநாதன்  முதலியவர்கள்  செய்கையைக்  கண்டித்து  ஒரு  அறிக்கையை  வெளியிட்டிருக்கிறார்.  உள்ளொன்று  செய்துவிட்டுப்  புறமொன்று  வெளியிடும்  செய்கையை  நமது  சுவாமிகள்  எதற்காகச்  செய்தார்  என்று  கேட்கின்றோம். பிரிட்டிஷ்  முதன்மந்திரி  தாழ்த்தப்பட்டவர்களுக்குச்  சென்னை  சட்டசபையில்  18  ஸ்தானங்களே  அளித்திருந்தார்.  ஆனால்  “”மகாத்மா”  காந்தியின்  முயற்சியால்  30  ஸ்தானங்கள்  கிடைத்தன  என்று  கூறுகின்றார். ...

குடி  அரசு  ஆபீஸ்  சோதனை

குடி  அரசு  ஆபீஸ்  சோதனை

  20135ந்  தேதி  ஞாயிற்றுக்  கிழமை  பகல்  ஒரு  மணி  சுமாருக்கு  சென்னை  அரசாங்கத்தாரால்  அனுப்பப்பட்ட  ஒரு  இ.ஐ.ஈ.  போலீஸ்  அதிகாரி,  உள்ளூர்  போலீஸ்  இன்ஸ்பெக்டர்,  சப்  இன்ஸ்பெக்டர்,  இரண்டு  மூன்று  ஹெட்கான்ஸ்டேபிள்கள்  பத்துப்  பனிரண்டு  கான்ஸ்டேபிள்களுடன்  குடி  அரசு  ஆபீசுக்குள்  புகுந்து  ஆபீசைச்  சுற்றியும்,  ஆபீசுக்குள்  இருந்த  ஆளுகளுக்கும்  காவல்  போட்டு  விட்டு  ஒவ்வொரு  அரையையும்  ஒவ்வொரு  ரிகார்டுகளையும்  பரிசோதித்தார்கள்.  அங்கு  ஒன்றும்  அவர்கள்  இஷ்டப்படி  கிடைக்காததால்  பகுத்தறிவு  நூற்பதிப்புக்கழக  நிலயத்துக்குள்  புகுந்து  அங்கும்  அதுபோலவே  பதினாயிரக்கணக்கான  புத்தகங்களையும்,  புத்தகக்கட்டுகளையும்  கலைத்து  விட்டார்கள்.  அங்கும்  ஒன்றும்  கிடைக்கவில்லை. பிறகு  தோழர்  ஈ.வெ.கி.  அவர்கள்  வீட்டிற்குச்  சென்று  அங்கும்  பல  புத்தக  அலமாரிகளைத்  திறந்தும்  மற்ற  இடங்களையும்  சுற்றிச்  சுற்றி  சோதனை  போட்டும்  ஒன்றும்  கிடைக்கவில்லை. கடைசியாக  பகத்சிங்கைப்  பாராட்டி  தோழர்  ஈ.வெ.ராவால்  எழுதப் பட்ட  ஒரு  கட்டுரை  அடங்கிய  குடி  அரசு  மலர்  ஒன்றை  எடுத்துக் கொண்டு  சென்று  விட்டார்கள். ...

இந்தியா  சட்டசபைக்கு  ஒரு  பாரபக்ஷமற்ற  சுயேச்சையுள்ள  தலைவர்

இந்தியா  சட்டசபைக்கு  ஒரு  பாரபக்ஷமற்ற  சுயேச்சையுள்ள  தலைவர்

  சர். அப்துர்  ரஹிம்  அவர்களை  இந்தியா  சட்டசபைக்குத்  தலைவராகத்  தேர்ந்தெடுத்த  அங்கத்தினர்களை  நாம்  மனமாறப்  பாராட்டுகிறோம்.  சர். அப்துர்  ரஹிம்  அவர்கள்  பாரபக்ஷமற்ற  ஒரு  திறமை  வாய்ந்த  சுயேச்சையான  நீதிபதியாக  நமது  சென்னையில்  இருந்து  வந்தவர்  என்பது  யாவரும்  அறிந்ததாகும்.  அத்தகையார்  தற்போது  இந்தியா  சட்டசபைக்கு  ஏற்பட்டுள்ள  சந்தர்ப்பத்துக்குத்  தகுதியான  முறையில்  நீதிவழங்கத்  தலைமைப்பதவி  ஏற்றுக்  கொண்டிருக்கிறார்.  இவருக்கு  þ  பதவி  கிடைக்காமல்  இருக்கவேண்டுமென்று  தேசபக்தப்  பெருமையில்  மிகுதி யடைந்ததாகச்  சொல்லிக்  கொள்ளுபவர்களால்  சில  இடையூறுகளும்  சூழ்ச்சிகளும் நேரிலிருந்து செய்யப்பட்டிருந்தாலும்கூட மற்ற  அங்கத்தினர்கள்  அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் கடமையை  நிறைவேற்றினமைக்கு  நாம்  மகிழ்ச்சிப்பெருக்கடைகிறோம். குடி அரசு  துணைத் தலையங்கம்  27.01.1935

பகுத்தறிவு’

பகுத்தறிவு’

  மாதப்பதிப்பு பகுத்தறிவு  என்னும்  பேரால்  ஒரு  மாதப்பத்திரிகை  பகுத்தறிவு  நூற்பதிப்புக்கழக  ஆதரவில்  குடி அரசு  பதிப்பகத்தில்  இருந்து  வெளியிடப் படும்.  பொறுப்பாசிரியர்  ஈ.வெ. கிருஷ்ணசாமி,  அதன்  பிரதான  ஆசிரியர்  பண்டிதர்  சாமி  சிதம்பரனார்.  மற்றும்  தோழர்கள்  ஈ.வெ. கிருஷ்ணசாமி,  ஈ.வெ. ராமசாமி,  கைவல்ய  சாமியார்,  M. சிங்காரவேலு  ஆ.அ.ஆ.ஃ.,  க. சிதம்பரம்  ஆ.அ.ஆ.ஃ.,  கு. லட்சிமிரதன்  பாரதி  M.அ.ஆ.ஃ.,  ஓ.M. பாலசுப்பிரமணியம்  ஆ.அ.ஆ.ஃ., கு. குருசாமி, கு. குஞ்சிதம் அம்மாள், நீலாவதி அம்மாள்,  இந்திராணியம்மாள்,  ஓ.அ.க. விஸ்வநாதம்,  அ. இராகவன்,  இ. சுப்பையா  ஆ.அ.,  பிரமச்சாரி  M.அ.ஃ.கூ.,  பாரதிதாசன்,  ஜீவானந்தம்,  “”சித்திரபுத்திரன்”  முதலிய  50  அறிஞர்கள்  சந்தர்ப்பம்போல்  கட்டுரைகள்  எழுதுவார்கள்.  அனேக சர்க்கார் உத்தியோகஸ்தர்களும், மதத் தலைவர்களும்,  புனைப்பெயருடன்  எழுதுவார்கள். அமெரிக்கா,  இங்கிலாந்து,  ஜெர்மனி,  ரஷ்யா  முதலிய  தேசங்கள்,  பகுத்தறிவு முதலிய சங்கத்தார்களின் வெளியீடுகளுடையவும்,  அபிப்பிராயங் களினுடையவும்,  மொழிபெயர்ப்புகளும்,  சுகாதாரம்,  வைத்தியம்,  சட்டம்  முதலியவைகளும்,  சிறுகதைகளும்,  ஹாஸ்யங்களும்,  வாக்குவாதங்களும்,  பாட்டுகளும்,...

உயிரைக்  காத்ததற்கு  உபகாரம்

உயிரைக்  காத்ததற்கு  உபகாரம்

  1932ம்  வருஷத்தில்  காந்தியாரின்  உயிரைக்  காப்பாற்றின  வீரர்கள்  ஆதிதிராவிட  தோழர்களாகும். பிரிட்டிஷ்  அரசாங்கம்  ஏற்பட்ட  200  வருஷகாலங்களுக்குப்  பிறகே  ஆதிதிராவிடர்களுக்கு  அரசியலில்  பிரதிநிதித்துவம்  பெற  வசதி  அளித்தார்கள். இந்த  வசதியும்  இந்திய  மக்களின்  பிரதிநிதி  ஸ்தாபனம்  என்று  சொல்லிக்கொள்ளும்  காங்கிரசும்,  அக்காங்கிரசிற்கு  சர்வாதிகாரி  என்று  சொல்லப்பட்டவர்,  தாழ்த்தப்பட்ட  மக்களுக்குத்  தொண்டு  செய்ய  வசதி  அளிக்காவிட்டால்  பட்டினிகிடந்து  உயிரை  விடுவேன்  என்று  சொன்னவர்,  தீண்டாமை  ஒழிக்கப்பட்டால்  அல்லாது  தீண்டப்படாதார்  என்பவர்களுக்கு  மற்ற  இந்து  மக்கள்  மீது  நம்பிக்கை  ஏற்பட்டாலல்லாது  இந்தியாவுக்கு  சுயராஜ்யம்  கிடைக்காதென்றும்,  கிடைத்தாலும்  நிலைக்காதென்றும்  சொன்னவர்  ஆன  தோழர்  காந்தியாரால்  “”தாழ்த்தப்பட்டவர்களுக்கு  அரசியலில்  தனிப்  பிரதிநிதித்துவம்  கொடுத்தால்  என்  உயிரைக்  கொடுத்தாவது  எதிர்ப்பேனே  ஒழிய  என்  உயிர்  போமளவும்  சம்மதிக்கமாட்டேன்”  என்று  சொன்ன  பிறகே  தான்  அரசாங்கத்தார்  கருணைவைத்து  தனிப்பிரதிநிதித்துவம்  கொடுத்தார்கள். அதுவும்  கூட  ஏன்?  எப்படி?  கொடுத்தார்கள்  என்று  யோசிப்போமே யானால்  சைமன்  கமிஷன்  இந்தியாவுக்கு  முதலில்  வந்த ...

முட்டாள்களுக்கு  வரி

முட்டாள்களுக்கு  வரி

  சித்திரபுத்திரன் முட்டாள்களுக்கு  வரி  விதிக்க  வேண்டும்  என்கின்ற  ஆசையின்  மீதே  நமது  அரசாங்கத்தார்  லாட்டரி  சீட்டுகளையும்,  போட்டிப்  பரிசுகளையும்,  குதிரைப்  பந்தயங்களையும்  அனுமதித்துக்  கொண்டிருக்கிறார்கள்  என்று  தரும  தேவதை  சொற்பனம்  அருளுகிறது. இதை  மிகவும்  சரி  என்றே  சொல்ல  வேண்டும். உதாரணமாக  ஒரு  தாசி  தன்  தாயாரை  நோக்கி  எனக்கு  இன்பம்  கொடுக்கும்  ஆடவர்கள்  எனக்குப்  பணத்தையும்  கொடுத்து  என்னை  வணங்குவதும்  ஏன்  என்று  கேட்டபோது  அந்த  தாசியின்  தாயாரானவள்  மகளைப்  பார்த்து,  நல்ல  காரியத்துக்கு  தங்கள்  பணத்தைச்  செலவு  செய்யாத  அயோக்கியர்கள்  பணம்  செலவாவதற்காக  வேசிகளாகிய  நம்மையும்,  கள்ளு  சாறாயத்தையும்,  சூது  ஆட்டங்களையும்  கடவுள்  அனுமதித்துக்  கொண்டிருக்கிறார்  என்று  சொன்னாளாம். அதற்கு  ஒரு  பாட்டும்  உண்டு. அன்னையே  அனையதோழி அறந்தனை  வளர்க்கும்மாதே, உன்னையோர்  உண்மை கேட்ப்பேன்,  உரை தெரிந்துரைத்தல்  வேண்டும், என்னையே  வேண்டுவோர்கள் எனக்கும் ஓர்  இன்பம்  நல்கி, பொன்னையும்  தந்து பாதப்  போதினில் வீழ்வதேனோ?  (அம்மா) பொம்மெனப்புடைத்து...

தஞ்சை  ஜில்லா  4வது   சுயமரியாதை  மகாநாடு

தஞ்சை  ஜில்லா  4வது  சுயமரியாதை  மகாநாடு

  தோழர்களே! ஒரு வருஷ  காலத்துக்குப்  பிறகு  இன்று  சுயமரியாதை  மகாநாடு  இங்கு  கூடுகின்றது.  மாதத்திற்கு  2,  3  மகாநாடுகள்  கூட்டிக்  கொண்டிருந்த  நாம்  அடக்குமுறையில்  அடக்கப்பட்டது  போல்  ஒரு  வருஷ  காலமாக  ஒன்றும்  இல்லாமல்  இருந்து  இன்று  இங்கு  கூடி  இருக்கிறோம்.  மகாநாடு  என்கின்ற  முறையில்  நாம்  இந்த  ஒரு  வருஷ  காலமாய்  கூட்டம்  கூட்டி  இருக்காவிட்டாலும்  பிரசாரம்  என்கின்ற  முறையில்  ஏறக்குறைய வாரம்  ஒரு  முறையாவது  ஒவ்வொரு  இடங்களில்  பலர்  தனித்தனியேயும்,  கூடியும்  பிரசாரம்  என்கின்ற  முறையிலும்  சுயமரியாதைத்  திருமணம்,  சங்கத்  திறப்பு  விழா,  ஆண்டு  விழா  முதலிய  பெயர்களிலும்  கூட்டம்  கூட்டி  நமது  தொண்டுகளை  ஆற்றி  வந்திருக்கிறோம்.  ஆகையால்  நாம்  சோர்ந்தோ,  அயர்ந்தோ,  அலட்சியமாயோ,  அடக்கு  முறையில்  பின்  வாங்கியோ  இருந்து  விட்டோம்  என்று  யாரும்  சொல்லிவிட  முடியாது. வேலை  செய்ய  வேண்டும்  என்கின்றவர்களுக்கு  மகாநாடு  இருந்தாலும்,  இல்லாவிட்டாலும்  வேலை  செய்ய  இடமிருந்து  கொண்டுதான்  இருக்கும். ஆதலால் ...

பொப்பிலி  ராஜாவும்  வைசிராய்  பேட்டியும்!

பொப்பிலி  ராஜாவும் வைசிராய்  பேட்டியும்!

  இ.ஐ.ஈ.  எழுதுவது பொப்பிலி  ராஜா  அவர்கள்  கல்கத்தாவுக்குச்  சென்றபோது  வைசிராய்  பிரபு  பேட்டி  அளிக்க  மறுத்து  விட்டதாகச்  சில  பத்திரிகைகள்  எழுதுகின்றன. இதை  ஒரு  பொருப்பும்  நாணையமுள்ள  பத்திரிகையின்  நடவடிக்கை  என்று  சொல்ல  முடியாமைக்கு  வருந்துகிறேன். பொப்பிலி  ராஜா  கல்கத்தாவுக்கு  ஜனவரியை  உத்தேசித்தும்,  சில  நண்பர்களைக்  காணவும்  சென்றாரே  ஒழிய  வைசிறாயைப்  பார்க்க  செல்லவில்லை. வைசிராயைப்  பேட்டி  கேழ்க்கவும்  இல்லை. பொப்பிலி  ராஜா  வைசிறாய்  பிரபுவைப்  பார்க்க  வேண்டுமென்று  விரும்பினால்  வைசிராய்  பிரபு  பார்க்க  முடியாது  என்று  சொல்லி  விடுவாரா? அவ்வளவு  பெரிய  துரோகம்  அவரை  நம்பினவர்களுக்கோ,  சர்க்காருக்கோ  அல்லது  வைசிறாய்  வருத்தப்படும்படியோ  என்ன  செய்து  விட்டார்  என்று  அறிவுள்ளவர்கள்  நினைக்க  மாட்டார்களா? பொப்பிலி  என்பதற்காக  இல்லாவிட்டாலும்  ஒரு  மாகாண  முதல்  மந்திரியை  வைசிராய்  பார்க்க  மறுத்துவிட்டார்  என்பது  எந்த  பைத்தியக்  காரனாவது  நம்பக்கூடிய  சேதியா?  அல்லது  எந்தப்  பைத்தியக்காரனாவது  சொல்லக்கூடிய  சேதியா?  செட்டி  நாட்டு  ராஜாவின்  பணமானது  சில ...

முனிசாமி  நாயுடுவின்  முடிவு

முனிசாமி  நாயுடுவின்  முடிவு

  தோழர்  ஆ. முனிசாமி  நாயுடு  திடீரென்று  முடிவு  எய்திய  செய்தி  கேட்டு  திடுக்கிட்டு  விட்டோம். அவருக்கு  வயது  இப்போது  50தேதான்  ஆகின்றது.  இவர்  ஒரு  கெட்டிக்கார  வக்கீல்  என்று  பெயர்  வாங்கியர்.  அவர்  ஜஸ்டிஸ்  கட்சியில்  ஒரு  பிரபலஸ்தராய்  விளங்கினார்.  பனகால்  ராஜா  முடிவெய்திய  பிறகு  அக்கட்சிக்குத்  தலைவராக  ஆனார்.  அதன்  பயனாய்  முதல்  மந்திரி  ஸ்தானமும்  பெற்றார்.  மந்திரி  போட்டியின்  பலனாகவும்,  காங்கிரசை  சில சந்தர்பங் களில்  ஆதரித்ததின்  பயனாகவும்  மந்திரி  உத்தியோகம்  விட்டுவிட  வேண்டி  நேர்ந்தது என்றாலும்  கட்சியை  விட்டு  விலகாமலும்  எதிர்கட்சியாகிய  காங்கிரசினிடம்  சேராமலும்  ஜனநாயக  ஜஸ்டிஸ்  கட்சி  என்பதாக  ஒரு  கட்சி  ஏற்படுத்தி  அதற்கு  தலைவராய்  விளங்கி  வந்தார். சமீப  காலத்தில்  ஜஸ்டிஸ்  கட்சியில்  இரண்டரக்  கலந்து  விடுவதற்கு  வேண்டிய  ஏற்பாடுகள்  நடந்து  இந்த  மாத  முடிவிலோ,  அடுத்த  மாத  துவக்கத்திலோ,  ஒரு  மந்திரி  பதவியை  அடையக்கூடிய  நிலையில்  இருந்தார். அதன் பயனாக ஜஸ்டிஸ்...

வக்கீல்  தொல்லைகள்

வக்கீல்  தொல்லைகள்

  ஒரு  தேசத்தில்  எவ்வளவு  கொடுங்கோல்  ஆட்சி  இருந்தாலும்,  ஒரு  தேசத்தில்  எவ்வளவு  வழிப்பறி  தீவட்டிக்  கொள்ளை  பகல்  கொள்ளை  போன்ற  வெளிப்படையாய்,  பலாத்காரமாய்  மனம்  பதறப்  பதற  பரித்துக்  கொள்ளும்  கொடுமைகள்  இருந்தாலும்  மற்றும்,  சமூக வாழ்க்கையில்  சமாதானத்துக்கும்,  சாந்திக்கும், நல்லொழுக்கத்துக்கும்  விரோதமானது  என்று  சொல்லப்படும்  கள்ளு,  சாராயக்  கடைகள்,  தாசி  வேசி  வீடுகள்,  சூது  மடங்கள்  ஆகியவைகள்  இருந்தாலும்,  சாமான்கள்  விலை  பேசுவதுபோல்  நீதிக்கும்,  தீர்ப்புக்கும்  லஞ்சம்  வாங்கும்  அனியாய  அயோக்கிய  நீதிமுறைகள்  இருந்தாலும்,  அவைகளையெல்லாம்  விட  இன்றைய  வக்கீல்  தன்மை  என்பது  மனித  சமூகத்துக்கு மிக  மிக  கஷ்டமானதும்,  தொல்லையானதும்,  சித்திரவதைக்கு  ஒப்பானதுமான  துன்பங்களைக்  கொடுக்கக்  கூடியது  என்பது  நமது  பல நாளைய  அபிப்பிராயமாகும். மனித  சமூகத்துக்கு  காலரா,  பிளேக்கு,  க்ஷயம்,  உளமாந்தை  போன்ற  கொள்ளை  நோய்கள்  எப்படியோ,  அதுபோலவே  தான்  மனித  சமூக  ஒழுக்கத்துக்கும்,  நாணையத்துக்கும்,  சாந்திக்கும்  வக்கீல்  சமூகம்  ஒரு  பெரும்  வியாதியேயாகும். வக்கீல் ...

தமிழ்  எழுத்து  சீர்திருத்தம்

தமிழ்  எழுத்து  சீர்திருத்தம்

  தமிழ்  பாஷை  எழுத்துக்கள்  விஷயமாய்  பல  சீர்திருத்தங்கள்  செய்யப்பட  வேண்டும்  என்பது  அனேகருக்குள்  வெகுகாலத்திற்கு  முன்பு  இருந்தே  ஏற்பட்டிருந்த  அபிப்பிராயங்களாகும். தோழர்  குருசாமி  அவர்கள்  எழுதியது  போல்  பெருத்த  பண்டிதர்களில்  கூட பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய், வெகு காலமாகவே பேசி  வந்திருக்கிறார்கள். தமிழ்  எழுத்துக்களைப்  பற்றி  அழுக்கு  மூட்டைப்  பண்டிதர்கள்  எவ்வளவு  தத்துவார்த்தம்  சொன்னாலும்  அது  எவ்வளவோ  விஷயத்தில்  சீர்திருத்தமடைய  வேண்டும்  என்பதில்  நமக்குச்  சிறிதும்  சந்தேகமில்லை. ஒரு  பாஷையோ,  ஒரு  வடிவமோ  அல்லது  வேறு  பல விஷயமோ  எவ்வளவு  பழையது,  தெய்வீகத்  தன்மை  கொண்டது  என்று  சொல்லிக்  கொள்ளுகின்றோமோ,  அவ்வளவுக்கு  அவ்வளவு  அவற்றில்  சீர்திருத்த  வேண்டிய  அவசியமிருக்கின்றது  என்பது  அதன்  உண்மைத்  தத்துவமாகும். உதாரணமாக  நெருப்புக்கு  சுமார்  நூறு  ஆயிரம்,  பதினாயிரம்  வருஷங் களுக்கு முந்தி  சக்கி  முக்கி  கல்லுகள்  தான்  ஏற்படுத்தப்பட்டிருந்தன. இது  ஒரு  “”கடவுளால்”  ஆதியில்  பொதிய  மலையில்  இருந்தோ,  கைலாச மலையில்  இருந்தோ ...

ஈரோடு  முனிசிபாலிட்டி

ஈரோடு  முனிசிபாலிட்டி

  மிருகக்  காக்ஷி  சாலை இவ்வூர்  பீபிள்ஸ்  பார்க்கிலிருக்கும்  மிருக  காக்ஷிற்கு  முனிசிபல்  கமிஷனரின்  வேண்டுகோளுக்  கிணங்கி  சென்னை  கார்ப்பொரேஷன்  சங்கத்தார்  2  பெண்  சிங்கங்களும்,  2  மான்களும்  இலவசமாய்  அளித்ததை  இவ்வூர்  முனிசிபாலிட்டியார்  தங்களிடமிருக்கும்  லாரி  மூலம்  சென்னையி லிருந்து  அம்  மிருகங்களை  கொண்டுவந்திருக்கிறார்கள்.  ஏற்கனவே  மிருகக்  காக்ஷியில்  இருந்து  வரும்  கரடி,  முதலை  ஆகிய  நூதன  மிருகங்களுடன்  இம்மிருகங்களையும்  வைத்து  நன்கு  போஷிக்கப்பட்டு  வருவதோடு  பொதுஜனங்கள்  சொற்ப  கட்டணத்தில்  மிருகங்களைப்  பார்வையிடவும்  ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே  இருக்கும்  கரடிகள்  இரண்டும்  பெண்  கரடிகளாக  விருப்பதால்  அவைகளில்  ஒரு  பெண்  கரடியைக்  கொடுத்து  ஒரு  ஆண்  கரடியை  இந்த  சிங்கம்  கொண்டு  வந்த  இடத்திற்கே  கொடுத்து  பெற்றுக்கொண்டால்  மிக  நலமாக  விருக்கும்  அதேபோல்  சிறுத்தையையும்  மாத்திக்  கொள்ளலாமென  நினைக்கிறோம். (பர்) குடி அரசு  பத்திராதிபர் குறிப்பு  13.01.1935

காங்கிரஸ்  முதலாளிகள்  கோட்டை

காங்கிரஸ்  முதலாளிகள்  கோட்டை

  லாகூரில்  கூடிய  காங்கிரஸ்  அபேதவாதிகள், “”காங்கிரஸ்  திட்டத்தில்  முதலாளிகளுக்கு  நன்மை  இருக்கின்றதே யொழிய பொது  ஜனங்களுக்கு  எவ்வித  பயனும்  கிடையாது”  என்றும் “”காந்தியின்  கிராமப்  புனருத்தாரணத்  திட்டத்தால்  கிராம  வாசிகளுக்கு  எவ்வித  நன்மையும்  ஏற்படப்  போவதில்லை”  என்றும் “”ஒரு  சில  சுயநலக்கூட்டத்தார்களே  அரசியலின்  பேரால்  பலனடைந்து  வருகிறார்களே  ஒழிய  பாமர  ஜனங்களுக்கு  யாதொரு  பலனும்  ஏற்பட  இடமில்லை”  என்றும் “”முதலாளிகளைக்  காப்பாற்றவும்,  சமதர்ம  இயக்கத்தில்  கிராம  ஜனங்கள்  சேராமல்  இருப்பதற்காக  கிராமத்தார்களை  ஏமாற்றவுமே  காந்தியார்  கிராமப்  புனருத்தாரண  சங்கம்  ஏற்படுத்தி  இருக்கிறாரே  ஒழிய  வேறு  இல்லை”  என்றும் “”மதம் என்பதை அடியோடு ஒழிந்தாலொழிய ஜனசமூக  முன்னேற்றமும், பொதுஜன ஒற்றுமையும் ஏற்படாது” என்றும் “”மதத்தில்  ஏமாற்றம்  தவிர  வேறு  ஒன்றுமே  இல்லை”  என்றும்  பட்டவர்த்தனமாக  பல  பொதுக்கூட்டங்களில்  பேசினார்கள். இதைச் சுயமரியாதைக்காரர்கள் சொன்னால் அவர்களை தேசத்  துரோகிகள்  என்றும்,  அரசாங்கக்  கூலிகள்  என்றும்,  நாஸ்திகர்கள்  என்றும்,  தென்னாட்டுக்  காங்கிரஸ்  கூலிகள்  ஊளை ...

தெரிவிப்பு

தெரிவிப்பு

  எழுத்து  வடிவங்கள்  திருத்தம் Ù. à. ùண. ùல. ùள. ùன. ஆகிய எழுத்துக்களை  முறையே ணா.  றா.  னா.  ணை.  லை.  ளை.  னை.  என்பதாகத்  திருத்தி  அச்சுக்  கோர்த்திருக்கிறோம். (பர்) குடி அரசு  அறிவிப்பு  13.01.1935

“”பகுத்தறிவு”

“”பகுத்தறிவு”

“”பகுத்தறிவு” என்னும் பெயரால் மாத வெளியீடு ஒன்று  வெளிப்படுத்த  உத்தேசித்து  உள்ளோம்.  இந்த  உத்தேசமானது  சுமார்  4, 5 வருஷத்துக்கு முன்னாலேயே செய்யப்பட்டதானது குடிஅரசு வாசகர் களுக்குத் தெரியும். அதைப்பற்றிய விபரம் சீக்கிரத்தில் தெரிவித்துக்  கொள்ளுவோம். குடி அரசு  அறிவிப்பு  13.01.1935

குடி அரசு”

குடி அரசு”

குடி அரசு  பத்திரிகை  துவக்கப்பட்டு  இன்றைக்கு  11வது  வருஷம்  நடக்கின்றது.  மத்தியில்  ஒரு வருஷ  காலம்  அது  அஞ்ஞாத  வாசம்  செய்ய  வேண்டி  ஏற்பட்டு  அதன்  கொள்கைகள் “புரட்சி’,  “பகுத்தறிவு’  என்னும்  பெயரால்  வெளியிடப்பட்டு  வந்து  இப்போது  மறுபடியும்  1935வது  வருஷம்  ஜனவரி  N  முதல்  பழயபடி  குடி அரசு  என்னும்  பெயராலேயே  அது  வெளியாக்கப்பட்டு  முன்  நிறுத்தப்பட்டதிலிருந்தே  தொடர்ந்து  9ம்  மாலை  23வது  மலராய்  வெளி  வருகிறது.  ஆதியில்  “”குடி அரசு”  மனித  சமூகத்துக்கு  என்ன  தொண்டு  செய்ய  முன்  வந்ததோ,  அதே  தொண்டை  எப்படிப்பட்ட  கஷ்டமான  காலத்திலும்,  நெருக்கடியான  காலத்திலும்  பின்னடையாமல்  செய்து  வந்திருப்பதோடு  இப்போதும்  அதையே  கடைப் பிடித்து  தன்னாலான  தொண்டாற்ற  துணிவுடன்  முன்  வந்திருக்கிறது. குடி அரசு  அறிவிப்பு  13.01.1935

ஜஸ்டிஸ்  கட்சி  செய்த  “”பாவம்

ஜஸ்டிஸ்  கட்சி  செய்த  “”பாவம்

” ஜஸ்டிஸ்  கட்சியை  பார்ப்பனர்கள்  ஆசை  தீர  வைது  விட்டார்கள்.  இனி  வைவதற்கு  வார்த்தைகளும்,  விஷயங்களும்  கிடைக்காமல்  திண்டாடிக்  கொண்டு  திரியும்  இந்த  நெருக்கடியான  சமயத்தில்  ஜஸ்டிஸ்  கட்சியில்  இருந்து  பிரிந்தவர்களும்  விறட்டி  அடிக்கப்பட்டவர்களுமான  ஆசாமிகள்  இன்று  ஜஸ்டிஸ்  கட்சியை  வைவதற்கு  மூன்று  புதிய  காரணங்கள்  கண்டுபிடித்து  பார்ப்பனர்களுக்கு  காணிக்கையாகக்  கொடுத்திருக்கிறார்கள். அதாவது: கமிஷனர்களைநியமித்தது. தாலூக்காபோர்டுகளை  எடுத்தது. ஜில்லாபோர்டுகளை  இரண்டாகப்  பிரிப்பது. இந்தக்  காரியங்கள்  ஜஸ்டிஸ்  கட்சி  சட்டசபை  அங்கத்தினர்கள்  ஏகமனதாய்  அபிப்பிராயம்  கொடுத்தும்,  பார்ப்பனர்களும்,  பார்ப்பன  தாசர்களும்  தாராளமாய்  ஸ்தானம்  பெற்ற  சட்டசபையின்  மெஜாரிட்டியாரால்  தீர்மானங்கள்  செய்யப்பட்டும்,  பிறகுதான்  அமுலில்  செய்யப்பட்டு  வருகின்றனவே  ஒழிய  கட்சித்  தலைவரின்  சர்வாதிகார  முறையில்  செய்யப்பட்ட  காரியங்கள்  அல்ல.  இவை  எப்படி  இருந்தாலும், முனிசிபாலிட்டி  விஷயத்தில்  அனேக  சேர்மென்கள்  யோக்கியதை களும்,  நிர்வாகங்களும்,  நாணையமாகவும்,  நியாயமாகவும்  இல்லை  என்றும்  சொல்லி  அவர்களது  அயோக்கியத்தனங்களையும்,  நாணையக்  குறைவுகளையும்  ஏதேச்சாதிகாரங்களையும்,  புள்ளி  விவரங்களோடு  காட்டி  வந்ததுடன்  கண்ட்ராக்ட் ...

வரி  குறைப்பும்  சம்பளக்  கூடுதலும்

வரி  குறைப்பும்  சம்பளக்  கூடுதலும்

  சென்ற  வாரம்  தஞ்சை  ஜில்லா  மிராசுதார்கள்  மகாநாடு  கூட்டி  நஞ்சை  பூமி  வரிகளை  100க்கு  50  பாகம்  வீதம்  குறைக்க  வேண்டுமென்று  தீர்மானம்  செய்திருக்கிறார்கள். மகாநாட்டில்  கலந்து  கொண்ட  தோழர்கள்  எல்லோரும்  அதாவது  யார்  யாருடைய  பெயர்கள்  மகாநாட்டு  நடவடிக்கையில்  காணப்பட்டனவோ  அவர்கள்  பெரிதும்  மிராசுதாரர்கள்,  லட்சாதிபதிகள்,  கோடீஸ்வரர்கள்  என்று  சொல்லத்தக்க  பிரபுக்களே  யாவார்கள். இன்னும்  சற்று  விபரமாய்ச்  சொல்ல  வேண்டுமானால்  நிலத்தை  உழுவதும்,  விதை  விதைப்பதும்,  மண்வெட்டி  கொண்டு  வரப்பு  வெட்டி  நீர்  பாய்ச்சுவதும்,  அறுப்பதுமான  காரியங்கள்  செய்வது  மகா  பாவமானது  தோஷமானது என்று  எந்த  எந்தக்  கூட்டத்தாருக்கு  மனுதர்மத்தில்  விதி  விதிக்கப்பட்டிருக்கிறதோ  அந்தக்  கூட்டத்தார்களும்  ஆளைத்  தூக்கி  ஆள்  மேல்  போட்டு  வீண் கலகங்களையும்,  வம்புகளையும்,  வழக்குகளையும் உண்டாக்கி  மக்களின்  சமாதானத்தையும்,  சாந்தியையும்  பாழாக்கி  நோகாமல்  வாழ்ந்து வக்கீல்,  வைத்தியம்,  உத்தியோகம்  முதலிய  பேர்களால்  மாதம்  10000,  20000  போல்  சம்பாதிக்கும்  கூட்டத்தார்களுமான  அய்யர்,  ஆச்சாரியார்,  பந்துலு, ...

200000 கோவா கிறிஸ்தவர்களின் சுயமரியாதை

200000 கோவா கிறிஸ்தவர்களின் சுயமரியாதை

  இரண்டு லக்ஷம் பேர் சுயமரியாதைக்காக இந்து மதத்தில் சேரப் போகின்றார்களாம். கோவாவில் உள்ள கத்தோலிக்க கிருஸ்தவக் கோவில்களில் வகுப்பு வேற்றுமையும், ஜாதி வித்தியாசமும் பாராட்டப்படுவதை சகிக்கமாட்டாமல் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் பூனாவில் கூடப்போகும் இந்திய கத்தோலிக்கக் கிறிஸ்தவர் மகாநாட்டுக்கு ஒரு தீர்மானம் அனுப்பப் போகிறார்கள்.  அதாவது: “”இப்பொழுது நடமுறையில் இருந்து வரும் வகுப்பு வேற்றுமையில் இரண்டு லக்ஷம் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு மதத்தின்  மீதும் துவேஷம் ஏற்பட்டிருக்கிறது.  இதை மாற்றாவிட்டால் இரண்டு லக்ஷம் பேரும் இந்து மதத்தில் சேர்ந்து விடுவோம்”  என்று சொல்லப்போகின்றார்களாம்.  இந்து மதத்தில் பார்ப்பனர்கள் எப்படியோ, அப்படியே நமது ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்களும் ஆவார்கள். அவர்கள் இந்த மாதிரி பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டார்கள்.  ஒரு இந்து  இருந்தாலும் போதும் அவனை புழுமாதிரி அரித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம் என்று எப்படி நமது பார்ப்பனர்கள் கருதிக்கொண்டு அறிவுக்கும், மானத்துக்கும் பொருத்தமில்லாத முறைகளை வைத்து  வாழுகின்றார்களோ அதுபோலவே ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவன்...

எழுத்துக்கள்  மாற்றம்

எழுத்துக்கள்  மாற்றம்

  சென்ற  வாரம்  பகுத்தறிவில்  எழுத்தில்  சீர்திருத்தம்  என்று  ஒரு சிறு  உபதலையங்கம்  எழுதி  இருந்ததில்  இவ்வார  முதல்  கொண்டு  நமது  பத்திரிக்கை  பழய  பெயராகிய  குடி அரசு  என்னும்  பெயராலேயே  வெளியிடலாம்  என்று  கருதி  அதில்  t, Ù, à, ùண, ùல, ùள, ùன  என்கின்ற  எழுத்துக்களை  முறையே  ணா  றா  னா  ணை  லை  ளை  னை  என்று  அச்சில்  பிரசுரிக்கப்படும்  என்பதாக  எழுதி  இருந்தோம்.  அந்தப்  படிக்கே  விஷயங்களை  எழுத்துக்  கோர்த்து  இருந்தோம்.  எவ்வளவோ  முயற்சி  எடுத்தும்  குடி அரசுக்கு  இன்று  வரை  போஸ்டல்  உத்திரவு  கிடைக்காததால்  சனிக்கிழமை  இரவு  வரை  தந்தியை  எதிர்பார்த்தும்  கடைசியாக  இவ்வாரம்  பகுத்தறிவு  என்னும்  பெயராலேயே  பிரசுரித்து  அனுப்ப  நேர்ந்தது.  வாசகர்கள்  விஷயத்தைப்  படிக்கும்போது  ணா  றா  னா  என்கின்ற  எழுத்துக்கள்  வரும்  போது  அவற்றை  t, Ù, à  என்ற  உச்சரிப்புப்  போலவும்  ணை  லை  ளை  னை ...

சனாதனப்  பார்ப்பனர்  மகாநாடு

சனாதனப்  பார்ப்பனர்  மகாநாடு

  சென்ற வாரம் தஞ்சையில் சனாதனப் பார்ப்பனர்கள் மகாநாடு  ஒன்று கூட்டப்பட்டு அதில் அடியில் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. “”சனாதன  தர்மத்தை  நிலைபெறச்  செய்யத்தக்க  சுதேசி  கைத்தொழில்களை  ஆதரிக்க  வேண்டும்.  சனாதன  தர்மத்தை  பாதுகாக்க  ஒரு  நிதி  திரட்ட  வேண்டும். குருகுலங்கள்  ஆரம்பித்து  புராணங்களை  போதிக்க  வேண்டும்.  பார்ப்பனர்கள்  சமுதாயப்  பழக்க  வழக்கங்களுக்கும்,  சாஸ்திரங்களுக்கும்  விரோதமில்லாமல்  நடக்க  வேண்டும். பிராமணர்களுக்கு  சாகுபடிக்காக  சர்க்காரார்  நிலங்கள்  வழங்க  வேண்டும். பிராமணர்களிடையே ஏற்பட்டுள்ள வேலையில்லாத்  திண்டாட்டத்தைப்  போக்க  வேண்டும். பிராமணர்களுக்கு  வேலையில்லாத்  திண்டாட்டத்தைப்  போக்க  மற்ற  ஜாதியார்கள்  அடியில்  கண்ட  முறைகளால் ஏற்பாடு  செய்ய  வேண்டும். (அ)       திண்ணைப்  பள்ளிக்  கூடங்கள்  வைக்க  வேண்டும். (ஆ)      அறுவடையின்போது  பிராமணர்களுக்கு  தானியங்கள்  கொடுக்க  வேண்டும். (இ)       விசேஷ  தினங்களில்  பிராமணர்களுக்குச்  சன்மானங்கள்  வழங்க  வேண்டும். (ஈ)        கிராமங்களில்  பிராமணர்களைக்  கொண்டு  புராணக்  காலச்÷க்ஷபங்கள்  செய்விக்கச்  செய்ய  வேண்டும். (உ)       பிராமணர்களை  ஆயுர்வேத  வைத்தியர்களாக  தர்ப்பித்து ...

வருஷப்  பிறப்பு

வருஷப்  பிறப்பு

  இங்கிலீஷ்  புது  வருஷம்  பிறந்தது  என்று  மக்கள்  அதை  ஒரு  பண்டிகை  போல்  கொண்டாடினார்கள்.  “”புதிய  வருஷம்  உங்களுக்கு  ஒரு  சந்தோஷகரமான  வருஷமாய்  கழிய  வேண்டும்”  என்று  ஒருவருக்கொருவர்  வாழ்த்துச்  சொல்லிக்  கொண்டார்கள். தமிழ்  வருஷப்  பிரப்புக்கும்  கூட  சில  இடங்களில்  இம்மாதிரி  வாழ்த்துச்  சொல்லிக்  கொள்வதும்,  சன்மானம்  வழங்கிக்  கொள்வதும்  உண்டு. இவை  ஒருவருக்கொருவர்  கடிதம்  எழுதிக்  கொள்ளும்போது  தலைப்பில்  மகா„„ஸ்ரீ  என்று போடுவதும்,  மேல்  விலாசம்  எழுதும்  போதும்  ஒருவருக்கொருவர்  மகா„  என்று  போடுவதும்  எப்படி  ஒரு  பத்ததியாகவும்,  வழக்கமாகவும்  இருந்து  வருகின்றதோ  அதுபோல்  தான்  புதிய  வருஷப்  பிறப்பு  வாழ்த்தும்  இருந்து  வருகின்றது. அனுபவத்தில்  எவ்வித  வாழ்த்தும்  மக்களுக்கு  யாதொரு  பயனும்  அளிப்பதில்லை.  அவனவனுடைய  நிலைமையில்  இவ்  வாழ்த்துக்களால்  எவ்வித  மாறுதலும்  ஏற்படுவதுமில்லை. ஆகவே  இவ்வாழ்த்துக்களையும்,  புது  வருடப்  பிறப்புக்  கொண்டாட்டங் களையும்  பலவித  மூடப்  பழக்க  வழக்கங்களில்  ஒன்றாகத்தான்  கருத  வேண்டுமே  யொழிய  மற்றபடி ...

“விடுதலை’ ஏடு வெளிவரத் தொடங்கியது

“விடுதலை’ ஏடு வெளிவரத் தொடங்கியது

  “”வாழ்துக்களையும், புது வருடப் பிறப்புக் கொண்டாட்டங்களையும் பலவித மூடப் பழக்க வழக்கங்களில் ஒன்றாகத்தான் கருத வேண்டுமே யொழிய மற்றபடி இதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை. ஆதலால் இதை நாம் கொண்டாடவில்லை என்பதோடு புது வருடப் பிறப்புக்காக நாம் யாரையும் வாழ்த்தவும் போவதில்லை” என்று புத்தாண்டு வாழ்த்து மறுப்புடன் இத்தொகுதி தொடங்குகிறது.  6.1.1935 “பகுத்தறிவு’ வார ஏட்டில் தான் முதன்முதலாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அறிமுகமாகிறது. இடையில் ஓராண்டு காலம் நிறுத்தப்பட்டிருந்த “குடி அரசு’ மீண்டும், 13.1.1935 முதல் பயணத்தைத் தொடருகிறது. “குடி அரசு’க்கு இது 11 ஆவது வருடம். வார ஏடான “பகுத்தறிவு’ நிறுத்தப்பட்டு, அறிவியல் பரப்பிடும் மாத ஏடாக மே மாதம் முதல் தேதியிலிருந்து வெளிவரத் தொடங்கியது. இக்காலப் பகுதியில் “பகுத்தறிவு’ வெளியிட்ட இலக்கியச் செறிவுள்ள எட்டு “படைப்புகள்’ இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. சமதர்மத்தை வலியுறுத்தியும், பொருளாதாரம் பற்றியும் பெரியார் பல தலையங்கங்களைத் தீட்டியுள்ளார். விருதுநகரில் கூடிய நீதிக்கட்சியின்...