இந்தியா  சட்டசபைக்கு  ஒரு  பாரபக்ஷமற்ற  சுயேச்சையுள்ள  தலைவர்

 

சர். அப்துர்  ரஹிம்  அவர்களை  இந்தியா  சட்டசபைக்குத்  தலைவராகத்  தேர்ந்தெடுத்த  அங்கத்தினர்களை  நாம்  மனமாறப்  பாராட்டுகிறோம்.  சர். அப்துர்  ரஹிம்  அவர்கள்  பாரபக்ஷமற்ற  ஒரு  திறமை  வாய்ந்த  சுயேச்சையான  நீதிபதியாக  நமது  சென்னையில்  இருந்து  வந்தவர்  என்பது  யாவரும்  அறிந்ததாகும்.  அத்தகையார்  தற்போது  இந்தியா  சட்டசபைக்கு  ஏற்பட்டுள்ள  சந்தர்ப்பத்துக்குத்  தகுதியான  முறையில்  நீதிவழங்கத்  தலைமைப்பதவி  ஏற்றுக்  கொண்டிருக்கிறார்.  இவருக்கு  þ  பதவி  கிடைக்காமல்  இருக்கவேண்டுமென்று  தேசபக்தப்  பெருமையில்  மிகுதி யடைந்ததாகச்  சொல்லிக்  கொள்ளுபவர்களால்  சில  இடையூறுகளும்  சூழ்ச்சிகளும் நேரிலிருந்து செய்யப்பட்டிருந்தாலும்கூட மற்ற  அங்கத்தினர்கள்  அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் கடமையை  நிறைவேற்றினமைக்கு  நாம்  மகிழ்ச்சிப்பெருக்கடைகிறோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  27.01.1935

You may also like...