Category: குடி அரசு 1935

ராம – ராவண ஆராய்ச்சி

ராம – ராவண ஆராய்ச்சி

  சித்திரபுத்திரன் ராமனின் “”தெய்வீகத்தன்மையும்” ராவணனின் “”ராக்ஷதத்தன்மையும்” ராமனின் தெய்வீகத்தன்மையான காரியங்கள் ராமன் தாடகையைக் கொன்று யாகம் நடத்திக்கொடுத்தான். சூர்ப்பநகையின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தம்பிக்கு உத்தரவு கொடுத்தான். வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்குப் பட்டங் கட்டினான். ராவணனைக் கொன்று விபீஷணனுக்குப் பட்டங் கட்டினான். 5மாத கர்ப்பத்தோடு தன் பெண்ஜாதியான சீதையை விபசாரப் பட்டம் கட்டி தனியே காட்டில் கொண்டுபோய் விட்டுவந்தான். இந்த ஐந்து அரும்பெருங் காரியங்களைச் செய்திருக்கிறான் ராமன். இந்தக் காரியங்களிலிருந்து ராமனிடத்தில் தெய்வத்தன்மையோ, நீதியோ, அறிவுடைமையோ, மனுஷ்யத் தன்மையோ ஏதாவது இருக்கிறதாகச் சொல்ல முடியுமா? தாடகையைக் கொன்றதற்காக என்ன சமாதானம் சொல்லமுடியும்? தாடகை செய்த குற்றமென்பதெல்லாம் அவள் தேவர் (ஆரியர்) களுடைய யாகத்தைத் தடுத்துக்கொண்டு வந்தாள் என்பதே.  யாகம் என்றால் என்ன என்பதைப்பற்றி நாம் சொல்லவேண்டியதேயில்லை.  குதிரை, மாடு, ஆடு, மனிதன் முதலிய ஜீவன்களை (சித்திரவதை செய்து) கொன்று பக்குவம் செய்யும் ஒரு காரியமாகும்.  அதுதான் இன்று முறையே அஸ்வமேத...

விதண்டா வாதம்

விதண்டா வாதம்

  குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தது.  குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக்கதை சொல்லுகிறது.  குசேலர் பெண்சாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளை யாகப் பெற்று இருந்தாலும் கைக்குழந்தைக்கு ஒரு வருஷமாயிருக்கு மானால் மூத்த பிள்ளைக்கு 27 வருஷமாவது ஆகியிருக்க வேண்டும்.  ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள்? இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப்போக குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா?  அல்லது இந்தப் பிள்ளைகளுக்காகவது மான அவமானமிருந்திருக்காதா? அல்லது பிச்சைபோட்ட கிருஷ்ண பகவானுக்காவது “”என்ன? பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப்பையல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே வெட்கமில்லையா?” என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா? *  *  * கேள்வி:  என்னடா உனக்கு கடவுள் இல்லையென்று சொல்லுகின்ற அளவு தைரியம் வந்துவிட்டதா? பதில்:  அவர்தான் மனோவாக்குக்  காயங்களுக்கு...

செட்டிநாட்டில் சீர்திருத்தப் புரட்சி

செட்டிநாட்டில் சீர்திருத்தப் புரட்சி

  நாட்டுக்கோட்டை  நகரத்தார்  லேவாதேவியின்  மூலம்  நன்றாய்  பணம்  சம்பாதிக்கக்கூடிய  சமூகத்தார்கள்  என்பது  யாவரும்  அறிந்ததாகும். ஆனால்  அப்பணத்தை  ஒழுங்கான  முறையில்  செலவு  செய்யவோ  அல்லது  தங்கள்  சமூகத்தில்  அல்லது  பின்  தங்கள்  சந்ததிகள்  அறிவுபெற்று  விளங்கும்படி  பயன்படுத்தவோ  அச்சமூகத்தில் அனேகருக்குத்  தெரியாது  என்றே  சொல்லவேண்டும். அவர்களுடைய  பணம்  எல்லாம்  கோயில்  கட்டுதல்,  வேத  பாடசாலை  வைத்தல்,  உற்சவங்களுக்கு  வாகனம்  செய்தல்,  சாமிக்கு  பாலபிஷேகத்துக்கு  பசுமடம் வைத்தல்,  யாத்திரை  செல்லுதல்  ஆகிய  கடவுள்  செலவுக்கும்  மற்றும்  கல்யாணம்  செய்தல்,  புதுமை  செய்தல், 10ம்,  60ம்  கல்யாணம்  செய்தல்,  கருமாதி  திதி  செய்தல்,  உபதேசம்  பெருதல்,  திருவாதிரை  செய்தல்  முதலாகிய  வைதீக  சடங்குகளுக்கும்  பெரிதும்  செலவு  செய்து  வீண்  பெருமை  பெறப்  பயன்படுத்தப்படுகின்றனவே  ஒழிய  செல்வத்தினால்  ஏற்படவேண்டிய  பயனைக்கருதி  செலவழிப்பது  என்பது  மிகவும்  அருமையாகவே  காணப்படும். இவை  தவிர  அவசியமில்லாமல்  1  லக்ஷம்,  2  லக்ஷம்,  5  லக்ஷம்  போட்டு  வீடு  கட்டிக் ...

காங்கிரசின் அலங்கோலம்

காங்கிரசின் அலங்கோலம்

  காங்கிரசிலிருந்து தோழர்கள் காந்தி “”விலகினார்” அன்சாரி “”விலகினார்” ராஜகோபாலாச்சாரியார் “”விலகினார்” இவர்கள் விலகிக் கொண்டதாக காட்டிக் கொண்டதில் ஆச்சரிய மொன்றுமில்லை. ஏனெனில் இவர்கள் காங்கிரசிலிருந்து கொண்டு செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லை. காங்கிரசினுடைய வேலை இப்போது ஓட்டுப் பிரசாரம் செய்வதைத் தவிர வேறு ஒன்றுக்கும் இடமில்லாமல் போய்விட்டது. நிர்மாண திட்டங்கள் நிர்வாணத் திட்டங்களாக ஆகி விட்டது. இந்து முஸ்லீம் ஒற்றுமை விஷயம் “”சுயராஜ்ஜியம் ஏற்பட்டால் ஒழிய, முடியாது” என்று தோழர் காந்தியாரே வட்டமேஜை மகாநாட்டில் சொல்லி விட்டார். மதுவிலக்கு விஷயம் அதுபோலவே “”சுயராஜ்ஜியம் கிடைத்தால் தான் செய்ய முடியுமே ஒழிய மற்றபடி யார் பாடுபட்டாலும் முடியாது” என்று சத்தியமூர்த்தியாராலேயே சொல்லப்பட்டாய்விட்டது. கதர் இனி கதர் விஷயமாக “”ஒரு காலத்தில் கதர் என்கின்ற ஒருவித துணி கையால் நூற்று, கையால் நெய்தது இருந்து வந்தது” என்று சொல்லும் படியாக ஆகிவிட்டது. காந்தி கதர் ஆலயத்தில் தோழர் இராஜகோபாலாச்சாரியாரின் மேல் பார்வையில் இருக்கும்...

தஞ்சை ஜில்லா ஆதி திராவிட  வாலிபர் மகாநாடு

தஞ்சை ஜில்லா ஆதி திராவிட வாலிபர் மகாநாடு

  தோழர்களே! இன்று இம்மகாநாட்டைத் திறந்து வைப்பது என்னும் முறையில் இந்த மகாநாடு சம்பந்தமாய் நான் ஏதாவது சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயமாய் என்னுடைய அபிப்பிராயம் நீங்கள் தெரிந்ததேயாகும். தாழ்த்தப்பட்ட மக்களை, அவர்களுக்கு மற்றவர்கள் இழைத்து வரும் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால் அது ஒரு புரட்சி வேலையே ஆகும். ஏனெனில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. எப்படி என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள், கீழ் ஜாதி மக்கள், தீண்டப் படாதவர்கள் என்பவர்கள் எல்லாம் பிறவியிலேயே கீழ்மைத் தன்மை அடைந்தவர்கள் என்றும், அவர்கள் கடவுள்களாலேயே அந்தப்படி பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும், அதற்கு மதங்களும் மத சாஸ்திரங்களுமே ஆதாரங்கள் என்றும், கடவுள் செயலையோ மத விதிகளையோ யாரும் மாற்றக் கூடாதென்றும், அவை மாற்றுதலுக்கு கட்டுப்பட்டதல்லவென்றும் சொல்லப்படக் கூடிய ஒரு பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டிருக்கிறது....

அருப்புக்கோட்டை மகாநாடுகள்

அருப்புக்கோட்டை மகாநாடுகள்

  ராமனாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையானது சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்படும் வரையில் தீவிர காங்கிரஸ் கோட்டையாய் இருந்து வந்தது என்பதோடு, தோழர் ஈ.வெ.ரா. தமிழ்நாடு மாகாணக் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாகவும், தலைவராகவும் இருந்த காலத்தில், அவருக்கு வலக்கை போல் இருந்து, அவரது நோக்கப்படி தொண்டாற்றி வந்திருப்பதை இன்றும் காங்கிரஸ் ரிகார்டுகளில் பார்க்கலாம். அப்படிப்பட்ட, அருப்புக்கோட்டை சு.ம. இயக்கம் ஆரம்பமானவுடன், ஒரே கூட்டமாக அதில் சேர்ந்து உழைத்து வருவது யாவரும் அறிந்ததே யாகும். இந்த நிலையில் ஜுன் மாதம் 29, 30, ˆ களில் அருப்புக்கோட்டையில் நான்கு மகாநாடுகள் நடந்திருக்கின்றன. அதாவது தோழர்கள் கு.கு.பழனிச்சாமி அவர்கள் வரவேற்புத் தலைவராகவும், கே.முத்துச்சாமி வல்லத்தரசு, ஆ.அ., ஆ.ஃ., M.ஃ.இ., அவர்களை மகாநாட்டுத் தலைவராகவும் கொண்டு சுயமரியாதை மகாநாடும், தோழர்கள் சு.கு. குழந்தைவேல் முதலியார் வரவேற்பு அக்கிராசன ராகவும், விருதுநகர் முனிசிபல் சேர்மென் வி.வி.ராமசாமி அவர்களை மகாநாட்டுத் தலைவராகவும் கொண்டு ஜஸ்டிஸ் மகாநாடும், தோழர்கள் ராஜம்மாள் சாது கந்தசாமி...

பெரியார் வேலைத்திட்டம்@ நீதிக்கட்சி ஏற்றது

பெரியார் வேலைத்திட்டம்@ நீதிக்கட்சி ஏற்றது

  தாழ்த்தப்பட்டோர் மற்றும் சுயமரியாதை மாநாடுகளில் பெரியார் நிகழ்த்திய உரைகளும்  நீதிக்கட்சிக்கு பெரியார் தந்த வேலைத்திட்டமும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் கூடிய நீதிக்கட்சியின் நிர்வாகக்குழு பெரியார் தந்த வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்கிறது. பெரியாரின் செயல்திட்டங்களோடு நீதிக்கட்சி செயல்படத் தொடங்குவதைக் கண்டு அஞ்சிய காங்கிரசார், இது காங்கிரஸ் கட்சி கராச்சியில் உருவாக்கிய திட்டத்தின் நகல் எனப் பேசத் தொடங்க, “குடி அரசு’  அதை  அழுத்தமாக  மறுக்கிறது. மறைமலை அடிகளாரின் “அறிவுரைக்கொத்து’ நூலில் இடம் பெற்றுள்ள ஒரு கட்டுரையை சென்னைப்பல்கலைக்கழகம் பாடமாக ஏற்றதை எதிர்த்து பார்ப்பன ஏடுகள் கூக்குரலிட்டதற்கு பெரியார் கொதித்தெழுந்து கருத்து மாறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு அடிகளாரை ஆதரித்து அனல் பறக்கும் தலையங்கத்தை எழுதினார்.பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்துக்கு பிரபல பாடகி கே.பி. சுந்தராம்பாளை காங்கிரஸ் பார்ப்பனர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனாலும் பார்ப்பனப் பாடகிகளை மிஞ்சம் வகையில் புகழ் ஏணியை அவர் எட்டும்போது பார்ப்பன ஏடுகள் சுந்தராம்பாளை குறைகூறத் தொடங்கியபோது “குடி அரசு’  கே.பி....

   அருஞ்சொல்  பொருள்

  அருஞ்சொல்  பொருள்

  அகவிலை                    தவச  விலை அசரமாகவும்                             அசைவில்லாதது அசேதனப்  பொருள்கள்                    உயிரற்றப்  பொருள்கள் அம்மன்  காசு                             ரூபாயில் 320  இல்  1  பங்கு  மதிப்புள்ள  காசு அயனம்                          காலம் அக்ஷயமாக                                குறைவு  படாது அக்ஷரங்கள்                               எழுத்துக்கள் உஞ்சிவிருத்தி                         அரிசிப்  பிச்சையெடுத்து  நடத்தும்  வாழ்க்கை உல்லங்கனம்                           நிந்தை,  அவமதிப்பு உளமாந்தை                               கடுநோய்,  உட்புண் எத்தனம்                        முயற்சி கஜான்சி                         கருவூல  அதிகாரி கெம்பு                               சிவப்பு  இரத்தினக்கல் சம்மார                            அழிவு சன்னது                           பட்டம்,  விருது சேதிக்கப்பட்டால்                  வெட்டப்பட்டால் சுனாயுதமாக                             வருத்தமின்றி தர்க்கிப்பது                   வாக்குவாதம்  செய்தல் தர்ப்பித்து                      பயிற்சி தவக்கப்பட்டு                             தாமதப்பட்டு தவறப்பட்டு                                கைவிடப்பட்டு தாற்பரியம்                  பொருள் நிர்த்தாரணம்                             நிலையிடுகை நிர்த்தூளி                       முற்றும்  அழித்தல் நோப்பாளம்                 சினம் ரூபாய் பங்கா                                பட விசிறி (தலைக்கு மேல் தொங்கும்  நீண்ட துணியை ஒருவர் இருபுறமும்  அசையுமாறு  இழுத்து  காற்றமைப்பை  ஏற்படுத்தும்  பொறியமைப்பு.) பத்ததி                              வழிகாட்டும்  நூல்,  ஒழுங்கு,  சொற்பொருள் பந்தக  டிக்ரி                 சொத்தைப்  பிணைத்து  பிறப்பிக்கப்படும்  நீதிமன்ற ...

கடவுள் கருணை

கடவுள் கருணை

சந்தேகவாதி சென்ற வருஷம் பீகார் பூகம்பத்தால் ஏற்பட்ட சொத்து நஷ்டமும், உயிர் நஷ்டமும் ஒருபுறமிருக்க, இவ்வருஷம் குவெட்டா பூகம்பத்தால் அதைவிட பல மடங்கு அதிகமான ஐம்பது அறுபது ஆயிரம் மக்கள் உயிர் நஷ்டமும் பல கோடி ரூ. பொருள் நஷ்டமும் நடந்தது. மற்றொருபுறமிருக்க, இம்மாதத்தில் பெஷாவரில் தீ விபத்து ஏற்பட்டு 2500 வீடுகளும், கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறும்படியான பொருள்களும் சாம்ப லாயினவாம். உயிர்ச் சேதமும் தாராளமாய் இருக்கலாம். எனவே கடவுள் நன்மையையே குணமாய்க் கொண்டு அன்பையும் ஜீவகாருண்யத்தையும், கருணையையுமே ஆபரணமாய்க் கொண்டவர் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணத்தை ஆஸ்திகர்கள் காட்டுவார்களோ தெரியவில்லை. குடி அரசு  செய்தி விமர்சனம்  30.06.1935

குடி அரசு  தேசத்திலும்  அடக்குமுறை

குடி அரசு  தேசத்திலும்  அடக்குமுறை

  ஸ்பெயின்  தேசமானது,  குடி  அரசை  ஒழித்து  முடி  அரசு  ஆக்கிக்கொண்ட  நாடாகும்.  அங்கு  குடி  அரசு  இருந்தும்  அடக்குமுறை  தாண்டவமாடுகின்றது.  ஒரு  அரசியல்  குழப்பத்தின்போது  65  பேர்களை  குற்றம்  சுமற்றி  விசாரித்து  அதில்  4  பேருக்குத்  தூக்குத்தண்டனையும்,  36 பேருக்கு  ஜன்ம  தண்டனையும்,  7  பேருக்கு  12  வருஷத்  தண்டனையும்  விதித்து,  18  பேர்களை  விடுதலை  செய்து  விட்டார்களாம்.  அக்குழப்பத்தில்  3500  பேர்  மாண்டார்களாம்.  எனவே  அன்னிய  ஆட்சி  ஒழிந்து,  சுயராஜ்ஜியம்  வந்து  விட்டால்  தர்ம  ராஜ்ஜியம்  ஆகிவிடும்  என்று  கருதுவது  வடிகட்டின  அறியாமையே  ஆகும்.  அரசியல்  மாற்றத்திலோ,  கிளர்ச்சியிலோ  யோக்கியமானதொரு  கொள்கையை  விரும்புவது  தான்  அறிவுடைமையாகுமே  ஒழிய,  ஒரு  ஜாதியையோ,  ஒரு  தேசத்தையோ  விரும்புவதும்,  வெருப்பதும்  பழயகால  கையில்  வலுத்தவன்  கொள்ளை  அடிக்கப்  பார்க்கும்  சூட்சி  என்றுதான்  சொல்லவேண்டும். குடி அரசு  கட்டுரை  30.06.1935

திருவாங்கூரில்  வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவம்

திருவாங்கூரில்  வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவம்

  கம்மாளர்,  நாடார்,  தீயர்,  புலையர் தாழ்ந்த  ஜாதி  இந்துக்களாம் திருவாங்கூர்  அரசாங்கம்  வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவக்  கொள்கையை   ஒப்புக்கொண்டு,  அந்தப்படி  கவனித்து  உத்தியோகம்  நியமிக்க  ஒரு  பப்ளிக்  சர்விஸ்  கமிஷன்  என்ற  இலாக்காவையும்  ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்தக்  கமிஷனுக்கு  கொடுத்த  அதிகாரப்  பத்திரத்தில்  இந்துக்கள்,  கிறிஸ்தவர்கள்,  முஸ்லிம்கள்  என்னும்  மூன்று    மத  வகுப்புகளும்,  இந்துக்களில்  மேல்  ஜாதி  இந்துக்கள்,  கீழ்ஜாதி  இந்துக்கள்  என்று  இரண்டு  ஜாதி  வகுப்பு களும்  ஏற்படுத்தி  இருக்கிறார்கள். அப்படி  ஏற்படுத்திய   ஜாதி  வகுப்புகளில்  பார்ப்பனர்களையும்,  நாயர் களையும்  மேல்  ஜாதி  இந்து  வகுப்பிலும்,  கம்மாளர்,  நாடார்,  ஈழவர்  புலையர்  என்பவர்களைக்  கீழ்  ஜாதி  இந்து வகுப்பிலும்  சேர்த்திருக்கிறார்கள். இந்த  அக்கிரமம்  ஒரு  சுதேச  அரசர்  ஆட்சிபுரியும்  நாட்டில்  இருந்து  வருகின்றது.  இந்தக்  கொடுமையான  இழிவை  ஒழிக்காமல்,  ஒழிக்க  முயற்சிக் காமல் என்ன சுயராஜ்ஜியம் வேண்டி இருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை. பிரிட்டிஷ்  ராஜ்ஜியத்தில்  விஸ்வப்பிராமணர்கள்  என்று  சொல்லிக்  கொள்ளும் ...

மற்றொரு  பண்டு  வசூல்  ஜாக்கிரதை  ஜாக்கிரதை

மற்றொரு  பண்டு  வசூல் ஜாக்கிரதை  ஜாக்கிரதை

  சுயராஜ்ஜிய  பண்டு தோழர்  காந்தியார்  அவர்கள்  பார்ப்பன  ஆதிக்கத்துக்கு  ஆக  1920,  21ல்  காங்கிரசின்  பேரால்  அதாவது  சுயராஜ்ஜிய  நிதி  என்று  ஒரு  கோடி  ரூபாய்  வசூல்  செய்ததும்,  அது  பெரும்பான்மை  பார்ப்பனர்  கையிலேயே  கொடுக்கப்பட்டுச்  செலவானதும்  யாவரும்  அறிந்ததேயாகும். கதர்ப்பண்டு அதன்  பிறகு  1926,  27ல்  கதரின்  பேரால்  கதர்பண்டு  என்று  சுமார்  30  லட்ச  ரூபாய்  வரை  வசூல்  செய்தார்.  அதுவும்  பெரிதும்  பார்ப்பன  ஆதிக்கத்துக்காகவே  பார்ப்பனர்கள்  கையாலேயே  செலவு  செய்யப்பட்டது. ஹரிஜன  பண்டு மறுபடி  1934ல்  ஹரிஜன  பண்டு  என்ற  பேரால்,  தீண்டப்படாதவர் களுக்கு  ஆக  என்று  20,  30  லட்ச  ரூபாய்  வரை  வசூல்  செய்து,  அதுவும்  பார்ப்பன  ஆதிக்கத்துக்கு  ஆகவே  பார்ப்பனர்  வசம்  கொடுக்கப்பட்டு  அவர்களாலேயே  செலவழிக்கப்பட்டும்  வந்து,  அதன்  பயனால்  இந்திய  சட்டசபைத்  தேர்தலும்  நடத்தப்பட்டாய்  விட்டது. முடிவாக  சுயராஜ்ஜியம்  என்ன  ஆயிற்று  என்பதைப்பற்றி  நாம்  யாரையும்  கேட்க  வேண்டியதில்லை.  எப்படியாவது ...

எல்லாம்  ஒன்றே

எல்லாம்  ஒன்றே

  இந்தியாவில்  4  கோடி  வேலையில்லாதார் முடி  அரசாகிய  பிரிட்டிஷ்  ராஜ்யத்தில்  70  ஆயிரம்  பேர்கள்  வேலை  இல்லாமல்  திண்டாடுகிறார்கள்.  குடி  அரசாகிய  அமெரிக்காவில்  2  கோடி  பேர்கள்  வேலை  இல்லாமல்  திண்டாடுகிறார்கள். வேற்றரசு  ஆகிய  இந்தியாவில்  4  கோடி  பேர்கள்  வேலையில்லாமல்  திண்டாடுகிறார்கள். ஆகவே  ஜன  எண்ணிக்கைப்படி  கணக்குப்  பார்த்தால்  விகிதாச்சாரத்தில்  ஒன்றும்  மோசமாக  இல்லை.  சற்றேரக்குறைய  சரியாகத்தானிருக்கின்றது.  ஆகவே  வேலை  இல்லாத  காரணத்துக்கு  முதலாளி  அரசு  காரணமே  ஒழிய,  முடி  அரசோ,  வேற்றரசோ  காரணம்  அல்ல  என்பதை  உணர  வேண்டுகிறோம். குடி அரசு  கட்டுரை  30.06.1935

யார் வெட்கங்கெட்ட மடையர்கள்?

யார் வெட்கங்கெட்ட மடையர்கள்?

  ராமசாமி முதலியாரா? “”காங்கிரஸ் தலைவர்களா?” தோழர் எ. ராமசாமி முதலியார் அவர்கள் கோவையில் 16.6.35 தேதி மாலை டவுன்ஹால் கட்டடத்தில் ஒரு உபன்யாசம் செய்தார். அதில் முக்கியமாக காங்கிரசால் இந்திய முற்போக்குக்கும், விடுதலைக்கும் ஏற்பட்ட முட்டுக்கட்டையைப் பற்றியும், அதனால் தேசம் அடைந்த சீர்கேட்டைப் பற்றியும் ஜஸ்டிஸ் கட்சி செய்துள்ள நன்மைகளைப் பற்றியும் விரிவாக விளக்கினார். அது தமிழ்நாடு, விடுதலை முதலிய பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது. இவ்வார குடி அரசிலும் அதன் முக்கிய பாகங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்குச் சமாதானம் சொல்லி மறுக்க வேண்டும் என்கின்ற ஆசை மீது, கோவைக் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள், ஒரு வாரம் பொறுத்து அதே யிடத்தில் ஒரு கூட்டம் போட்டுப் பேசி யிருப்பதாகப் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. அதை ஆதாரமாய் வைத்து “”கோவையில் சவுக்கடி” என்ற தலைப்பு கொடுத்து ஒரு பார்ப்பனப் பத்திரிகை ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது. அதில் அப் பத்திரிகை பல இழி மொழிகளை பிரயோகித்துத் தனது...

யார் கெட்டிக்காரர்கள்?

யார் கெட்டிக்காரர்கள்?

சந்திரலோகத்தைக் கண்டுவிட முடியும் இந்தப் பூலோகத்துக்கும், சந்திரலோகத்துக்கும் 250000 இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல் தூரம் இருக்கிறது. இதை மணி ஒன்றுக்கு 2500 இரண்டாயிரத்து அய்ந்நூறு மயில் வேகம் போகக் கூடிய ஒரு பறக்கும் யந்திரத்தின் மூலம் 100 நிமிஷ நேரத்தில் பூலோகத்தில் இருந்து சந்திரமண்டலத்துக்குப் போய் விடலாம் என்று அமெரிக்க சங்கத்தார் உத்தேச திட்டம் போட்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை நமது இந்திய மகாத்மாக்களும், சங்கராச்சாரிகளும், பண்டார சன்னதிகளும் ஆகிய ஞானிகள் ஆகாயக் கோட்டை யென்றோ, வீண் கனவென்றோ தான் சொல்லுவார்கள். ஆனால் மணி ஒன்றுக்கு 700 மையில் வேகம் போகக் கூடிய ஆகாய விமானம் செய்து பார்த்தாய் விட்டது. இனியும் இதிலிருந்து பல அபிவிருத்திகள் நடந்து வேகத்தைப் பெருக்க வசதி இருக்கிறது என்பதைக் கண்டு வருகிறார்கள். ஆகவே மேல்நாட்டு மக்களுடைய ஆசையும், முயற்சியும் இந்த மாதிரியான துறைகளில் சென்று கொண்டிருக்கின்றன. நம்முடைய முயற்சிகள் கிருஷ்ணன் மனிதனா  கடவுளா? ராமாவதாரம்...

இராமனாதபுரம் ஜில்லா சிவில் கோர்ட்டுகளில் பார்ப்பன ஆதிக்கமும் எதேச்சாதிகாரமும்

இராமனாதபுரம் ஜில்லா சிவில் கோர்ட்டுகளில் பார்ப்பன ஆதிக்கமும் எதேச்சாதிகாரமும்

  பிராமணரல்லாதாருக்கே வேலை கொடுக்க வேண்டுமென்றும், பிராமணர்களுக்கு உத்தியோகம் கொடுக்கக் கூடாதென்றும் ஹைகோர்ட் சர்க்குலர்களும், கவர்ன்மெண்டு ஆர்டர்களும் இருந்தும், அவைகளைக் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு நூற்றுக்கணக்கான பார்ப்பனர்களை திருச்சி, தஞ்சாவூர் ஜில்லாக்களிலிருந்து இந்த ஜில்லாவிற்கு இறக்குமதி செய்து வருகிறார்கள். சமீபமாக ஏற்பட்ட வகுப்புவாரி உத்தியோகம் கொடுக்க வேண்டுமென்ற ஜி.ஓ.வை குயுக்தியாக அர்த்தம் பண்ணி, தங்கள் டிபார்ட்மெண்டுக்கு அமுலுக்கு வரவில்லையெனச் சொல்லி விட்டார்கள். வருஷத்தில் பெயரளவில் சில பிராமணரல்லாதாருக்கு, ஒரு மாச இரண்டு மாசத்தில் வேலை போட்டு விரட்டிவிட்டு, நீடித்த பதிலையும் பெர்மனெண்டு வேலைகளையும் பிராமணர்களுக்கே போட்டு தங்கள் ஆதிக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். 8 வருஷம் 10 வருஷங்களுக்கு முன்னதாகவே இந்த டிபார்ட்மெண்டில் நிலைத்து ஆக்டிங் பார்த்து வரும் பார்ப்பனரல்லாதாரின் சர்வீசைக் கவனித்தால், 2 அல்லது 3 வருஷம் தானிருக்கும். ஏனெனில் வருஷத்தில் 4 மாசம் தான் பதில் போட்டிருப்பார்கள். சமீப காலத்தில் வந்த பிராமணன், துடர்ச்சியாக 2 அல்லது...

கொச்சி திவானின் சமதர்மத் தீர்ப்பு

கொச்சி திவானின் சமதர்மத் தீர்ப்பு

  கொச்சி சமஸ்தானம் திருச்சூரில் ஒரு குளம் சம்பந்தமாக மேல் ஜாதிக்காரர் என்பவர்களுக்கும், கீழ் ஜாதிக்காரர் என்பவர்களுக்கும் ஏற்பட்ட பிரவேசத் தகராரில், திவான் சர். கீ.ஓ. ஷண்முகம் அவர்கள், அக்குளம் சர்க்கார் பராமரிப்பில் இருப்பதால் மகாராஜாவின் பிரஜைகள் எல்லோருக்கும் அதை உபயோகித்துக் கொள்ள சரிசமமான உரிமை உண்டு என்று தீர்ப்புக் கூறிவிட்டார். இது சம்பந்தமாக மேல் ஜாதிக்காரர்கள் இது “”வழக்கத்துக்கு விரோதமாயிருக்கிறது” என்று எவ்வளவோ கிளர்ச்சி செய்தும் தூதுகள் நடந்தும் ஒன்றும் பயன்படவில்லை. திவான் அவர்கள், தூதுக் கோஷ்டிக்குச் சமாதானம் சொல்லுகையில், “”வழக்கத்தையே பிரதானமாக வைத்துப் பார்த்தால், நான்கூட இங்கு திவானாய் இருக்கக் கூடாது என்று தான் ஏற்படும்” என்று சொன்னாராம். பிறகு, இப்போது அதைப் பற்றி எவ்வித பிரஸ்தாபமும் இல்லாமல் அக் குளத்தில் எல்லோரும் சமமாய்ப் புழங்குகிறார்கள். குடி அரசு  செய்தித் துணுக்கு  23.06.1935

மற்றொரு புத்தகம் பறிமுதல்

மற்றொரு புத்தகம் பறிமுதல்

  பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் குடி அரசுக் கலம்பகம் என்ற புத்தகம் சர்க்காரால் பறிமுதல் செய்யப்பட்டிருக் கிறதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. இதற்கு முன் மூன்று புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் விஷயம் நேயர்கள் அறிந்ததே. இது நான்காவது புத்தகமாகும். இனியும் பல புத்தகங்கள் பறிமுதல் செய்யப் படலாம் என்று கருதினால் அது முற்றிலும் ஆதாரமற்றதாகாது. குடி அரசு  செய்தித் துணுக்கு  23.06.1935

கு.ஐ.கீல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்  பாராட்டுகிறோம்

கு.ஐ.கீல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பாராட்டுகிறோம்

    இன்றைய அரசியல் கிளர்ச்சியானது “”சுயராஜ்ஜியம் சம்பாதிக்க” என்று சொல்லிக் கொண்டு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை ஒழிக்கவே பாடுபடுகின்றது என்பதை, நாம் எவ்வளவோ தடவை எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை வேண்டுமென்பதற்கு ஆகவே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. அதி தீவிர காங்கிரஸ் வாதியாகவும், அதி தீவிர தேசீய வாதியாகவும் இருந்த டாக்டர் நாயர், சர்.பி. தியாகராயர் ஆகியவர்களின் முயற்சியே ஜஸ்டிஸ் கட்சி தோன்றலுக்குக் காரணமாகும். அக்கட்சி கல்வியில், அறிவில், உத்தியோகங்களில் பிரதிநிதித்துவத்தில் பிற்பட்டும், ஒதுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும் கிடந்த மக்களுக்குப் பாடுபடுவதை முக்கிய கொள்கையாய்க் கொண்டதால், அதற்குப் பார்ப்பன ரல்லாதார்கட்சி என்றும், ஜஸ்டிஸ் கட்சி என்றும் சொல்ல வேண்டியதாயிற்று. இந்தக் கட்சியின் முன்னேற்றமும், இம் முயற்சியின் வெற்றியும் வெகுகாலமாய்க் கல்வியிலும், உத்தியோகத்திலும், பிரதிநிதித்துவத்திலும் முன் அணியில் இருந்த பார்ப்பனர்களுக்கும், அவர்களது ஆதிக்கத்துக்கும் சிறிது தடையும், ஏமாற்றமும் செய்வதாக இருந்ததால், ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களுடைய எதிர்ப்புக்கும், துவேஷத்துக்கும், விஷமப் பிரசாரத்...

கோபி சமூகச் சீர்திருத்த சங்கத்தில்  பிரசங்கம்   காங்கிரஸ் சமூக சீர்திருத்தத்தை ஒப்புக்கொள்ளாது

கோபி சமூகச் சீர்திருத்த சங்கத்தில் பிரசங்கம்  காங்கிரஸ் சமூக சீர்திருத்தத்தை ஒப்புக்கொள்ளாது

  தோழர்களே! சமூகச் சீர்திருத்தம் என்பது நமது நாட்டில் மிகவும் சாதாரணமாய்க் கருதிக் கொண்டிருக்கும் விஷயமாகும். சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்தை பாமர மக்கள் சரியானபடி அறிந்திருக்க வில்லை. படித்தவர்களும், அறிஞர் களுமே சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்தையும், அதன் தத்துவத்தையும் உணர்ந்திருக்கிறார்கள் என்றாலும், அவர்களே உண்மையான சமூகச் சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையாய் இருந்து அதன் பிரதான தத்துவத்தை மக்கள் உணராமல் இருக்கும்படி செய்து வருகிறார்கள். நமது நாட்டில் இன்று முதன்மையாய் நடைபெற வேண்டியது சமூகச் சீர்திருத்தமேயாகும். ஆனால் அதற்கு இன்று நாட்டில் செல்வாக்கில்லை. உண்மையான சமூக சீர்திருத்தக்காரர் ஒருவர் இருவர் இருந்தாலும், அவர்களுக்கும் நாட்டில் செல்வாக்கில்லாமல் மக்களின் எதிர்ப்புக்கும், வெறுப்புக்குமே ஆளாகிறார்கள். பெரும்பான்மையான மக்களுக்கும் மனித சமூகத்தில் சமூகக் கட்டுப்பாட்டின் பயனாய் வெகுகாலமாய் தொடர்ந்து துன்பமனுபவித்து வரும் பாமர மக்களுக்கும், பயனற்றதான அரசியல் சீர்திருத்தம் என்னும் விஷயத்திற்கே இன்று நாட்டில் செல்வாக்கு ஏற்படுத்தப்பட்டு விட்டது. மக்கள் கவனமும் பெரிதும் அதிலேயே இழுக்கடிக்கப்பட்டிருக்கிறது. ஜனங்கள் அரசியல்...

ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு

ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு

  “”ஜஸ்டிஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி ஆலோசித்து முடிவு செய்வதற்காக கோயமுத்தூரில் ஜூன் 15, 16 தேதிகளில் தென் ஜில்லாக்களிலுள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரரின் ஆயத்த மகாநாடு ஒன்று கூடும். ஜஸ்டிஸ் கட்சிக்காரர் திரளாக அந்த மகாநாட்டுக்கு வரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்” என்று “”விடுதலை” பத்திரிகையில் ஒரு விளம்பரம் வெளியாகி இருக்கிறது. இக் கூட்டத்தைக் கூட்ட கோவை பிரபல வியாபாரியும் தனவந்தரும் பொதுநல சேவையில் ஈடுபட்டு மிகுதியும் ஊக்கமாய் உழைத்து வரும் பெரியாரும் கோவை முனிசிபல் சேர்மெனுமான ராவ்சாகிப் எஸ்.என். பொன்னையா அவர்கள் முயற்சித்து, தன் பேரால் பொது மக்களுக்கு பத்திரிகை மூலம் ஒரு பொது அழைப்பும் அனுப்பியிருக்கிறார். இதை நாம் பெரிதும் பாராட்டுகிறோம். உண்மையை ஒளிக்காமல் பேச வேண்டுமானால் சமீப இந்திய சட்டசபைத் தேர்தல் பலனைக் கண்ட பிறகும், சென்னை சட்டசபை உபதேர்தலின் பலனைக் கண்ட பின்பும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுக்கு அதாவது அக்கட்சியின் பேரால் அதிகாரம் பதவி பட்டம்...

பாராட்டுகிறோம்

பாராட்டுகிறோம்

  மற்ற  பாகத்தையும்  நிறைவேற்ற  வேண்டுகிறோம் 171232ந்  தேதி  கூடிய  ஈரோடு  முனிசிபல்  கூட்டத்தில் முனிசிபல்  கௌன்சிலர்  தோழர்கள்  எஸ்.ஆர். கண்ணம்மாள்,  கேசவலால் சேட்  ஆகியவர்கள்  முனிசிபல்  அதிகாரத்திற்குட்பட்ட  உத்தியோங்களில்,  பெண்களையும்  நியமிக்க  வேண்டுமென்று  தீர்மானங்கள்  கொண்டுவந்ததும்  அத்தீர்மானங்கள்  சில திருத்தங்களுடன்  நிறைவேறியதும்  வாசகர்கள்  அறிந்திருக்கலாம். அத்தீர்மானங்களின்படி  முதலாவதாக  அம்மைகுத்தும்  வேலைக்கு  ஒரு பெண்மணியையும், ஆண் பாடசாலைகளுக்கு பல பெண்  உபாத்தியாயனிகளையும்,  ஆண் பிள்ளைகளையும்,  பெண்  பிள்ளைகளையும்  ஒன்றாகச்  சேர்த்தும்,  அவற்றிற்கும் பெண்  உபாத்தியாயனிகளையும்  ஆண்  உபாத்தியாயர்களும்  சேர்ந்து  கற்பிக்கும்படியும்  உத்திரவிட்டிருக்கிறார்கள்.  இதற்காக  நாம்  முனிசிபல்  கவுன்சிலையும்,  சிறப்பாக  கமிஷனரையும்  பாராட்டுவதுடன்,  தீர்மானத்தின்படி  மற்ற  உத்தியோகங்களுக்கும்  பெண்களை நியமிக்கவேண்டுமென்று  கேட்டுக் கொள்ளுகிறோம். நிறைவேறிய  தீர்மானங்கள் இ.கீ. Nணி. 462 நம்பரின்  தீர்மானமாவது பெண்களுக்குஉத்தியோகம்  கொடுக்கும்  விஷயத்தில்  மரணஜனன  பதிவு  செய்தல்,  அம்மை  வைத்தல்,  ஷராவ்,  டைப்படித்தல்,  ஆபீஸ்  பியூன்  வேலை,  மற்றும்  அநேக  விதமான  உத்தியோகங்களைப்  பெண்களுக்கு  வீதாச்சாரப்படி  ஒதுக்குவதுடன்  அவைகளில் ...

தவறுதல்

தவறுதல்

  ஜூன் மாதப் பகுத்தறிவுப் பத்திரிகையின் மேல் அட்டை, பறிமுதலுக்கு முன்பாகவே அச்சாகி விட்டதால் புத்தக விளம்பரத்தில் “”பாதிரியும், பெண்களும், பாவ மன்னிப்பும்” என்ற புத்தக விளம்பரம் எடுக்க முடியாமல் போய் விட்டது. அப்புத்தகம் நம்மிடம் கிடைக்கா தென்றும் எல்லாப் புத்தகமும் சர்க்கார் வசம் ஒப்புவிக்கப்பட்டாய் விட்டதென்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். (பர்) குடி அரசு  பத்திராதிபர் குறிப்பு  09.06.1935

சங்கராச்சாரியின் சங்கடம்  கொள்ளையடித்த பணம் கொள்ளை போயிற்று   யோசிப்போன்

சங்கராச்சாரியின் சங்கடம் கொள்ளையடித்த பணம் கொள்ளை போயிற்று  யோசிப்போன்

  தற்சமயம் காசியில் தங்கியிருக்கும் ஸ்மார்த்த பிராமணக் கூட்டத்தின் தலைவரான “”லோக குரு” சங்கராச்சாரியாரிடம் இருந்த ஏராளமான சொத்துக்கள் திருட்டு போய்விட்டன. அவருடைய பூஜையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 விக்கிரகங் களும், 2லீ தோலா தங்கம் வைத்துக் கட்டப்பட்டிருந்த பெரிய சங்கு ஒன்றும் திருட்டுப் போய்விட்டனவாம். இவற்றின் விலை பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ளதென்று கூறுகிறார்கள். பூஜையில் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களுக்கோ அல்லது “”லோக குரு” என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றித் திரிகின்ற சங்கராச்சாரியாருக்கோ ஏதாவது “”சக்தி” யென்பது இருந்தால், திருடர்கள் அவைகளை எடுத்துக் கொண்டு போயிருக்க முடியுமா? என்று இப்பொழுது தான் மூடஜனங்கள் யோசித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒன்றுந் தெரியாத பாமர மக்களையும், பார்ப்பனர்களின் தயவு பெற அவர்கள் காலை வருடிக் கொண்டு கிடக்கும் பார்ப்பனரல்லாத பணக்காரர் களையும் ஏமாற்றிப் பாத காணிக்கையென்னும் பேரால் பகிரங்கப் பகற் கொள்ளை போல் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பொருள் நிஜமாகவே கொள்ளை போனதில்...

கடவுள் கருணை

கடவுள் கருணை

  சென்ற ஆண்டில் பீகாரில் நடந்த பூகம்பத்தின் அதிர்ச்சி இன்னும் நமது மனதைத் திடுக்கிடச் செய்து கொண்டிருக்கின்றது; அதனால் ஏற்பட்ட கஷ்டங்களினின்றும் மக்கள் இன்னும் விடுபடவில்லை; நஷ்டங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. இதற்குள் திடீரென்று சென்ற 31.5.35 காலை நாலு மணிக்கு மக்கள் அயர்ந்து உறங்குகின்ற சமயத்தில் பலுஜிஸ்தானத்தைச் சேர்ந்த குவெட்டா நகரத்திலும் அதைத் சுற்றியுள்ள கிராமங்களிலும் பூமி அதிர்ச்சி உண்டாகி ஆயிரக்கணக்கான மக்களை அவர்கள் பெண்டு, பிள்ளை, தாய், தந்தை, சோதர சோதரி, உறவினர், வீடு, சேர்த்து வைத்திருந்த சொத்து முதலியவை களுடன் விழுங்கி விட்டது. பூகம்பத்தின் போதும் அதன் பின்னும் மக்கள் பட்ட அவதிகளை நினைக்கும் போது எத்தகைய கல் மனதும் உருகாமற் போகாது. சென்ற ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தைக் “”கடவுள் சித்தம்” என்று தோழர் காந்தியாருள்ளிட்ட சிலர் கூறினார்கள். வைதீக பிண்டங்களும் தலையசைத்தார்கள். இவ்வாண்டு ஏற்பட்ட இந்த பூகம்பத்தை யாருடைய சித்தம் என்று சொல்லுவார்களோ தெரியவில்லை. “”கடவுள்”...

ஒரு நற்செய்தி

ஒரு நற்செய்தி

“”விடுதலை” ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து, தமிழ் பத்திரிகை ஒன்று விடுதலை என்னும் பேரால், வாரம் இருமுறையாக சென்னையில் இருந்து வெளியாகி இரண்டு இதழ்கள் நமது பார்வைக்கு வந்தன. அதைப்பற்றி ஒரு மதிப்புரை எழுத வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனின் 2, 3 வருஷங்களாகவே பரிசுத்த வீர ரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும், இரவும் பகலுமாய் தமிழ் பத்திரிகை! தமிழ் பத்திரிகை!! தமிழ் பத்திரிகை!!! என்கின்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்ததும், அதை எந்தத் தலைவர்களும் கவனியாமல் அலட்சியமாய் இருந்ததும், அதன் பயன்களை சமீபகாலத்தில் ஏற்பட்ட பல தேர்தல்களின் மூலம் அனுபவித்ததும், மறுபடியும் புதிய முறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்கு சப்தத்துடன் தமிழ் பத்திரிகை! தமிழ் பத்திரிகை!! தமிழ் பத்திரிகை!!! என்று மக்கள் கூப்பாடு போட்டதுமான விஷயம் யாரும் அறியாததல்ல. அப்படிப்பட்ட நிலையில் “”விடுதலை” என்னும் பேரால் ஒரு பத்திரிகை வெளியாய்...

10 வருஷ உத்தியோக வேட்டை

10 வருஷ உத்தியோக வேட்டை

  பார்ப்பனரல்லாத மந்திரிகளும், பார்ப்பனரல்லாத இயக்கமும் இந்தப் பத்து வருஷ காலத்தில் பார்ப்பனர்களிடத்திலும், அவர்கள் மாய்கையில் சிக்குண்ட பாமர மக்களிடத்திலும் மற்றும் பொறுப்பும் கவலையுமற்ற சுயநல பார்ப்பனரல்லாத மக்கள் சிலரிடத்திலும், எவ்வளவோ கெட்ட பெயரும் பழிகளும் பெற்றும் உத்தியோக விஷயத்தில் பார்ப்பனர் களுக்கு என்ன கெடுதி செய்திருக்கிறார்கள்? பார்ப்பனரல்லாதாருக்கு எவ்வளவு தான் நன்மை செய்ய முடிந்திருக்கிறது? என்கின்ற விபரத்தைப் புள்ளி விபரங்களைக் கொண்டு பார்ப்போமேயானால் இந்த 10 வருஷ காலத்தில் அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டுமென்ற கூச்சல் பலமாய் கிளம்பி அந்தப்படி கொடுக்க வேண்டுமென்ற முறை கையாளப்பட்டு வந்த காலம் முதற் கொண்டு நாளது வரையிலும், அதைக் கையாண்டு வந்த முறையினால் எவ்வளவு உத்தியோகங்கள் பார்ப்பனர்களுக்கு முன்னிருந்ததைவிட குறைந்துபோய் விட்டது என்பதும், இதனால் பார்ப்பனரல்லாதாருக்கு எவ்வளவு உத்தியோகங்கள் அதிகமாய்க் கொடுக்கப்பட்டுவிட்டதென்பதும் நன்றாய் விளங்கும். மற்றும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கைக்குப் பொது ஜனங்களுடையவும், சர்க்காருடையவும் ஆதரவு எவ்வளவோ இருந்தும், வெகு...

சத்தியமூர்த்தி திருவிளையாடல்

சத்தியமூர்த்தி திருவிளையாடல்

  தோழர் “”சத்தியமூர்த்தியின் நாக்குக்கு நரம்பு கிடையாது. அவர் பேச்சுக்கும் மதிப்பு கிடையாது” என்று ஒரு பழமொழி உண்டு. தோழர் சத்தியமூர்த்தி அய்யர் பொது வாழ்வில் விளம்பரம் பெற்ற பிறகு, சுமார் ஒரு ஆயிரந் தடவைக்குக் குறையாமலாவது, தான் பேசியவைகளுக்கும் நடந்து கொண்டவைகளுக்கும் மன்னிப்பு கேட்டிருப்பார். ஒரு இரண்டாயிந் தடவைக்கு குறையாமலாவது, தான் வெளிப்படுத்திய அபிப்பிராயங்களுக்குத் தத்துவார்த்தமும், சந்தர்ப்ப அருத்தமும், மாற்று சேதிகளும் வெளியிட்டிருப்பார். சந்தையும் அவருடையது; அதில் அடிக்கும் கொள்ளையும் அவருடையது என்பது போல், சத்தியமூர்த்தியும் பார்ப்பனராகவும், அவர் செய்கைகளையும், பேச்சுக்களையும், மன்னிப்புகளையும், மறுப்பு வியாக்கியானங்களையும் வெளியிடும் பத்திரிகைக்காரர்களும் பார்ப்பனர் களாகவும் ஆகிவிட்டதாலும், அவற்றைக் கேட்கும் படிக்கும் மக்களும் ஏறக்குறைய 100க்கு 90 பேர், மூடர்களாகவும் பாமரர்களாகவும் ஆக்கப் பட்டு வருவதாலும் சத்தியமூர்த்தி அய்யரின் திருவிளையாடல்கள் செலாவணி ஆகிக் கொண்டு வருவதற்கு இடமேற்பட்டுவிட்டது. தோழர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு கொஞ்ச நாளைக்கு முன்பு, ஒரு முனிசீப்பு வேலையோ அல்லது ஒரு சப்...

அருப்புக்கோட்டை, திண்டிவனம்,  விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம் முதலிய  இடங்களில் செய்த பிரசங்கம்

அருப்புக்கோட்டை, திண்டிவனம், விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம் முதலிய இடங்களில் செய்த பிரசங்கம்

  தோழர்களே! இன்று பொதுவாகவே மனித சமூகத்துக்கு உள்ள கஷ்டங்களையும், குறைபாடுகளையும் பற்றி உங்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை. குறிப்பாக நமது நாட்டு மக்களிடை உள்ள குறைபாடுகள் மற்ற நாட்டு மக்கள் குறைபாடுகளைவிட அதிகமாகவே இருந்து வருகின்றன. நமது குறைகளுக்கு நிவாரணம் அரசியல் மாறுதலால்தான் முடியும் என்பது சிலருடைய அபிப்பிராயம். ஆனால் சுயமரியாதை இயக்கம் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை. அரசியலானது சமுதாயக் கொள்கைகளையும், மதக் கட்டளைகளையும் ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல் மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டுவிடும் என்று நாம் கனவுகூடக் காண முடியாது. அரசியல் கொள்கைகளை சமூகம் தான் நிர்ணயிக்க வேண்டும். சமூகத்துக்கு ஆதாரம், முன் குறிப்பிட்ட சமுதாய பழக்க வழக்கங்களும், ஜாதி மதக் கட்டளைகளுமே ஆகும். எந்த நாட்டிலும் அரசாங்க ஆட்சித் திட்டம் சமுதாய ஜாதி மத பழக்க வழக்கங்களின் மீதே இருந்து வருகின்றன. ஏதோ இரண்டொரு அற்ப விஷயங்களே இதிலிருந்து விலக்கு பெற்றதாக...

சுயமரியாதை மாகாண மகாநாடு

சுயமரியாதை மாகாண மகாநாடு

  4வது சுயமரியாதை மாகாண மகாநாடு நடத்துவது பற்றி நிர்வாக சபைக் கூட்ட நிகழ்ச்சியும், மகாநாடு நாகப்பட்டிணத்தில் நடத்த முடிவு செய்து வேண்டிய ஏற்பாடுகளை தோழர் காயாரோகணம் பிள்ளை அவர்கள் ஏற்று நடத்தும் விஷயமும், மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கும் சேதியில் இருந்து அறியலாம். பல காரணங்களால் 2, 3 வருஷமாய்த் தவக்கப்பட்டுவிட்டது என்பது உண்மை. ஆனாலும், ஜில்லா, தாலூகா என்னும் பேர்களால் அனேக மகாநாடுகள் நடந்து வந்திருப்பதோடு, பிரசாரம் என்னும் பேரால் நூற்றுக்கணக்கான கூட்டங்கள் 1000, 2000, 3000 பேர் கொண்ட கூட்டங்களாகக் கூட்டப்பட்டு காரியங்கள் நடைபெற்றே வந்திருக்கின்றனவே ஒழிய, மற்றபடி இயக்க வேலை என்பது ஒன்றும் தவக்கப்பட்டுவிடவில்லை. இயக்கத்தின் பேரால் நூற்றுக்கணக்கான திருமணங்கள் மதக் கலப்பு, ஜாதிக் கலப்பு, விதவை மணம், காதல் மணம் என்கின்ற பேர்களால் நடந்து வந்திருக்கின்றன; நடந்தும் வருகின்றன. இயக்கப் பிரசாரமானது சமூக சம்பந்தமான சமத்துவ பிரசார மாத்திர மல்லாமல், பொருளாதார சம்பந்தமான விஷயங்களிலும் சமத்துவத்துக்கு...

நாஸ்திகம்

நாஸ்திகம்

  நாஸ்திகம் என்றால் கடவுள் இல்லை என்று சொல்வது என்பதாக இங்கு ஜனங்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். எல்லா ஜனங்களுக்கும் நாஸ்திகம் என்று சொன்ன உடனேயே அந்த அருத்தம் தான் முதலில் தோன்றுகின்றது. ஆனால் நாஸ்திகம் என்பதற்குப் பல அருத்தங்கள் சொல்லப்படுகின்றன. ஒரு மதக்காரனை மற்ற மதக்காரன் நாஸ்திகன் என்று சொல்லுவதும் வழக்கத்தில் இருக்கிறது. ஒரு மதக்காரனின் ஆதாரத்தை மற்ற மதக்காரனோ அல்லது அதே மதக்காரனோ தர்க்கிப்பதும்,  விவகரிப்பதும், சந்தேகப்படுவதும், சந்தேகம் தெளிய முயற்சிப்பதும் எல்லாம் நாஸ்திகம் என்று சொல்லப்பட்டு விடுகின்றது. ஆதாரங்களைப்பற்றி தர்க்கிப்பது முதலியவைகளே நாஸ்திகமாய் விட்டால் கடவுளைப்பற்றிய தர்க்கம் விவகாரம் முதலியவை நாஸ்திகம் என்கின்ற தலைப்பின் கீழ் வருவது பெரிய காரியமாகி விடுமா? ஆகவே நாஸ்திகம் என்பதும் ஒரு கடிவாளமில்லாத குதிரை என்றே சொல்லிவிடலாம். நாம் இங்கு நாஸ்திகம் என்பதை ஒரு சர்வ சக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுள் என்கின்ற ஒருவர் இருந்துகொண்டு, சிருஷ்டி ஸ்திதி சம்மார, அதாவது...

மத ஆட்சி

மத ஆட்சி

  ஓ! அறிவு கெட்ட மனிதனே! இன்றைய மனிதசமூகத்தை ஆட்சி புரியும் மதங்களை யார் உற்பத்தி செய்தார்கள்? மக்கள் மதத்துக்காக ஒரு மகாநாடு கூட்டி, மத உண்மைகளையும், அதன் நன்மை தீமைகளையும், அவற்றின் முன்பின் யோக்கியதைகளையும், பலாபலன்களையும்,  அவசியத்தையும் பற்றி நன்றாகப்பேசி வாதப் பிரதி வாதங்கள் செய்து தீர்மான மூலமாக நிறைவேற்றி அமுலுக்குக் கொண்டு வந்தார்களா? ஏதோ ஒருவன் தீர்மானித்து விட்டதை, செம்மறியாடுகள் ஒன்றின் பின் ஒன்று தலை குனிந்து செல்வதுபோல்,  தலைமுறை தலை முறையாய்ப் பின் வார்சுகளுக்குக் குழந்தைப்பருவத்தில் பாலுடனும் நீருடனும் ஊட்டி வருவதன் மூலம் உயிர் வாழுபவைகள் தானே இன்று மதங்களாய் விளங்குகின்றன? இதற்கு இத்தனை அதிகாரமா?  ஆர்ப்பாட்டமா? செலவா? நேரக்கேடா?  இவ்வளவும் தவிர அதற்கு கொடுங்கோல் ஏகச்சக்ராதிபத்திய ஆட்சி கூடவா? என்ன அனியாயம்! மதத்தை ஏற்றுக்கொள்ளும் யாராவது, ஏற்றுக் கொள்ளுமுன் இவைகளைப்பற்றி சிறிதாவது சிந்திக்கிறார்களா? குழந்தைப் பருவத்தில் பிடித்த மதச் சனியன் சுடுகாட்டில் கூட ஒழிவதில்லையே! இவ்வளவு...

“”விதண்டா வாதம்”

“”விதண்டா வாதம்”

  இந்துக்களின் வேதம் கடவுளால் சொல்லப்பட்டது என்றால் கிருஸ்தவர்கள் வேதம், முகம்மதியர்கள் வேதம் முதலிய வேதங்கள் யாரால் சொல்லப்பட்டன? பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியவர்களைத்தான் கடவுள் பிரம்மாவின் தலை, தோள், இடுப்பு ஆகியவைகளில் இருந்து உற்பத்தி செய்தார் என்றால், கிருஸ்தவர், மகம்மதியர், ஜப்பானியர், (பௌத்தர்) நீக்கிரோவர் முதலாகியவர்களை யார் எதில் எதில் இருந்து உண்டாக்கினார்கள்? ஏசுகிருஸ்து, மகம்மது, சங்கரர், ராமனுஜர் முதலியவர்களை ஜனங்கள் நன்மைக்காக கடவுள் உலகத்துக்கு அனுப்பினார் என்றால், இவர்களை மறுக்கும் ராமசாமி, ராகவன், சிங்காரவேலு, சிதம்பரனார், ஜீவாநந்தம் முதலியவர்களை எதற்காக யார் அனுப்பினார்கள்? பூமியை ஆதிசேஷன் தாங்குகிறான் என்றால் ஆதிசேஷனை யார் தாங்குகிறார்கள்? சுப்பரமணியக்  கடவுளுக்கு ஆறு தலைகள் என்றால் அவன் படுத்துத் தூங்கும்போது தன் தலைகளை எந்தப்பக்கம் எப்படி வைத்து தூங்குவான்? மகாவிஷ்ணுவினுடைய வாகனமாகிய கருட பக்ஷியைக் கண்ட மாத்திரத்தில் கும்பிட்டு வணக்கம் செலுத்தும் மக்கள் மகா கணபதி வாகனமாகிய பெருக்கானைக் (பெருச்சாளி) கண்டால் ஏன்...

இளம் விதவையின் காட்சி

இளம் விதவையின் காட்சி

  திண்டிவனம் பகுத்தறிவுக் கழகத்தின் சார்பில் 19.5.35 மாலை 5 மணிக்கு இவ்வூர் ராஜாங்குளம் வடகரைத் திடலில் பாண்டிச்சேரி தோழர் லகாஸ் அவர்கள் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் ஆண்டுவிழாவிற்கு வந்த ஜனங்களைவிட அதிகமான ஜனங்கள் ஆண்களும்   பெண்களுமாக வந்து கூடிவிட்டார்கள். தலைவர் முன்னுரைக்குப் பிறகு தோழர்கள் மஞ்சுளாபாய், ராஜவேல், நம்பிக்கைமரி, அ. பொன்னம்பலம், ப. ஜீவானந்தம் ஆகியவர்கள் கீதங்கள் பாடினார்கள். தோழர்கள் ப. ஜீவானந்தம், அ. பொன்னம்பலம், நம்பிக்கைமரி, மஞ்சளாபாய், ஈ.வெ. ராமசாமி ஆகியவர்கள் “”சமூக முன்னேற்றம்  மதமும் மக்களும்  பெண்கள் உரிமை  விதவையின் துயரம்  சமூகச் சடங்கு” என்பது பற்றிப் பேசினார்கள். தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் இறுதியாகப் பேசி, முடிக்கப் போகும் சமயத்தில் இக்கூட்டத்திற்கு வந்திருந்த மிகவும் அழகுள்ள 14 வயதுள்ள சரோஜினி என்ற பெயருள்ள ரெட்டியார் ஜாதியைச் சேர்ந்த ஒரு விதவைப் பெண் சமீபத்தில் 8 மாதத்திற்கு முன் புருடனை இழந்த காரணத்திற்காக...

திண்டிவனம் பகுத்தறிவுச் சங்கஆண்டு விழா

திண்டிவனம் பகுத்தறிவுச் சங்கஆண்டு விழா

    “”பகுத்தறிவால்  மனிதன்  தொல்லைப்படுகிறான்” தோழர்களே! திண்டிவனம் தாலூக்கா பகுத்தறிவுச் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் பேற்றை எனக்களித்ததற்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனேயாவேன். அதோடு தாங்கள் அன்பாய் வாசித்தளித்த வரவேற்புப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் புகழ் மாலைகளுக்கு நான் அருகனல்லவானாலும் என்னிடமிருந்து நீங்கள் என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்பதையும் எனது கொள்கைகளையும், ஆசைகளையும் நீங்கள் வரவேற்று ஆதரிக்கிறீர்கள் என்பதையும் அறிவதற்கு இது ஒரு அளவு கருவியாய் இருக்கின்றது என்கின்ற அளவில் வந்தனத்தோடு பெற்றுக் கொள்ளுகிறேன். இந்த ஆண்டு விழாவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் ஆண்களும், பெண்களும் பல ஜாதி மத வகுப்புகளும் கூடி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நமது பகுத்தறிவுக்கு விரோதமான கூட்டத்தார்கள் மனித சமூக முன்னேற்றத்துக்குத் தங்கள் சுயநலத்தின் காரணமாக முட்டுக்கட்டையாய் இருக்கும் வகுப்பார்கள் நம்மைப் பற்றியும் நமது இயக்கக் கொள்கைகளைப் பற்றியும் விஷமப் பிரசாரம் செய்தும், திரித்தும், பழித்தும் கூறி வந்தும்...

வகுப்பு வாதம்

வகுப்பு வாதம்

  இந்திய மக்களின் முன்னேற்றமும், சீர்திருத்தமும் அதன் எதிரிகளுக்கு வகுப்புவாதமாய் விளங்குகிறது. மற்றொரு புறத்தில் “”இந்தியாவின் முற்போக்குக்கும், சீர்திருத்தத் திற்கும் வகுப்புகளும், மதங்களும் முட்டுக்கட்டையாய் இருக்கின்றன” என்கிற விஷயம் இந்தியா மாத்திரமல்லாமல் உலக மக்கள் பெரும்பாலோரால் ஒப்புக் கொள்ளப்படுகிறது. இந்திய சரித்திரம் ஏற்பட்ட காலம் முதல் இந்தியா வகுப்பு வாதங்களால் தொல்லைப்பட்டு வந்ததும் வகுப்புக் கலவரங்களால் மக்கள் உயிரிழந்தது முதல் அடிக்கடி ஏற்பட்ட அரசியல் மாறுதல் வரை அநேக கஷ்டங்கள் நடந்து வந்திருப்பதை எந்த சரித்திர ஆசிரியரினாலும் மறுக்க முடியாததாகும். வகுப்புவாதத்தால் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கிறது என்று மாத்திரம் தான் சொல்லலாமே ஒழிய வகுப்பு வாதம் என்றாவது ஒழிந்திருந்ததாகக் கூறுவதற்கில்லை. உதாரணமாக ராமாயணம், கந்தபுராணம், பெரிய புராணம் முதலிய வைணவ சைவ மத ஆதாரங்களின் சரித்திரம் முழுவதும் வகுப்புவாதமாகவே இருந்து வருகின்றதைப் பார்க்கலாம். ராமாயணத்தில் தேவர்கள், ராக்ஷதர்கள் என்கின்ற வகுப்புகளும், தேவர்கள், வானரங்கள் என்கின்ற...

பெண்கள்  வீட்டுக்குள் 

பெண்கள்  வீட்டுக்குள் 

  இருக்கவேண்டுமாம்! பாய்  பரமாநந்தரின்  பிற்போக்கு அமிர்தசரசில்  பாய்பரமானந்தர்  தலைமையில்  நடைபெற்ற  ஒரு  பொதுக்  கூட்டத்தில்  இந்து  மகாசபை  மகாநாட்டிற்குத்  தலைமைவகித்த,  பொங்கி  உத்தமர்  பேசும்போது  “”அரசியல்  அடிமைத்தனத்தைப்போல  சமூக  அடிமைத் தனத்தையும்  நான்  எதிர்க்கிறேன்.  முக்கியமாகப்  பெண்களுக்கும்,  தாழ்த்தப் பட்டோருக்கும் சுதந்தரம் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். இந்து  மகாசபையின்  நிரந்தரத்  தலைவரான  பாய்பரமானந்தர்  இக்கொள்கையை  மறுத்து  “”இந்துப்  பெண்களை  காலிகள்  துராக்கிரகம்  செய்து  அவமானப்படுத்துகின்றனர்.  இந்து  சகோதரர்கள்  தங்கள்  சகோதரி களின்  மானத்தையும்  சரீரத்தையும்  காப்பாற்றும்படி  போதிய  பலம்  பெறுகிறவரையில்  அவர்கள்  வீட்டுக்குள்ளேயே  இருந்து கல்வியில்லாம லிருப்பது  நலம்”  என்று  கூறியிருக்கிறார். பரமாநந்தருடைய  இத்தகைய  பிற்போக்கான  அபிப்பிராயத்தினால்  இன்னும்  எத்தனை  யுகம்  சென்றாலும்  இந்து  சமூகம்  முன்னேற்றம்  அடைய  முடியுமா?  என்று  கேட்கின்றோம்.  இந்தக்  கொள்கையைப்  பின்பற்றுகிற  எந்தச்  சமூகமாவது  அபிவிருத்தியடையுமா? இந்து சமூகத்தில் ஒரு பாதியாக இருக்கின்ற பெண் சமூகம்,  எப்பொழுதும்  ஆண்மக்களால்  காப்பாற்றப்பட  வேண்டிய  நிலையிலேயே ...

உண்மையைக் கக்கி விட்டார்

உண்மையைக் கக்கி விட்டார்

  சட்டசபைக்குக் காங்கிரஸ்காரர்கள் செல்வதற்கு காரணஸ்தராயும் சட்டசபைக்குப் போவதற்கும் பார்லிமெண்டு போர்டு ஏற்படுத்துவதற்கும் காரணஸ்தராயும் இருந்தது சில பேர்வழிகள் உண்டென்றாலும் அதில் தென்னாட்டைப் பொருத்தவரையில் அதிகப் பங்கெடுத்துக் கொண்டு அதற்கு வேண்டிய எல்லாவித முயற்சிகளும் செய்தது நம் தோழர் சத்தியமூர்த்தி அவர்களாவார். இது எதற்கு உண்மையில் தேசியத்திற்காகவா? தேசாபிமானத்திற்காகவா? இல்லை. தங்கள் சமூகத்தார் எல்லாவித உயர்ந்த பலவித உத்தியோகமும் தாங்கள் பெரிய பெரிய கௌரவ பதவியும் அடைய மனதில் கொண்டுள்ள ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவேதான் காங்கிரஸ் பேரினால் சட்டசபைக்குப் போகவும் பார்லிமெண்டு போர்டு ஏற்படுத்தவும் இவ்வளவு அதிகமாக முயற்சி செய்ததாகும். இவர் சட்டமறுப்புக் காலத்தில் பதுங்கி இருந்து கடைசியாக லேசான சட்டமறுப்பு செய்துவிட்டு ஜெயிலுக்குச் சென்றவராச்சே! இப்பொழுது மாத்திரம் இவ்வளவு தடபுடலாக சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் மணலைக் கயிராகத் திரித்தோம்! வானத்தை வில்லாக வளைத்தோம் என்று போகிற இடத்திலெல்லாம் பேசுகிறாரே என்று கேட்டு விடாதீர்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுமா? தங்கள் சமூகத்தார்,...

கல்வி இலாக்காவில் பார்ப்பன ஆதிக்கம்

கல்வி இலாக்காவில் பார்ப்பன ஆதிக்கம்

விருதுநகர் மகாநாட்டில் தோழர்கள் சி.டி. நாயகம் அவர்களும், ஈ.வெ.ரா. அவர்களும் சர்க்கார் உதவி பெறும் பள்ளிக் கூடங்களில் உபாத்தியாயர் நியமனம் செய்யப்படும் விஷயங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையைக் கையாளும்படி சர்க்கார் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அந்தப்படி நியமனம் செய்யாத பள்ளிகூடங்களுக்குச் சர்க்கார் உதவித் தொகை கொடுக்கக் கூடாது என்றும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை கல்வி மந்திரி அவர்கள் வேண்டுகோளின் பேரிலும் மகாநாட்டுத் தலைவர் தோழர் ராமசாமி முதலியார் அவர்கள் வேண்டுகோளின் பேரிலும் வாப்பீஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இன்று பார்ப்பனர்கள் ஆதிக்கம் உள்ள பள்ளிக் கூடங்களில் அநேகமாக பியூன், வாசல்கூட்டி தவிர மற்றெல்லோரும் பார்ப்பனர் களாகவே நியமிக்கப்பட்டிருப்பதும், பார்ப்பனரல்லாதார் ஆதிக்கமுள்ள பள்ளிக் கூடங்களிலும் 100க்கு 75, 95 பார்ப்பனர்களாக நியமிக்கப் பட்டிருப்பதும் யாரும் மறுக்க முடியாது. சென்னையில் பார்ப்பன பிரமுகர்களான தோழர்கள் சர். சிவசாமி அய்யர், சர். சி.பி. ராமசாமி அய்யர், சர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்,...

* முடிவைப் பற்றி சொல்ல வேண்டுமா?

* முடிவைப் பற்றி சொல்ல வேண்டுமா?

தமிழ்நாட்டு  காங்கிரஸ்  தலைவர்  பதவியிலிருந்து  விலகும்  தோழர்  இராஜகோபாலாச்சாரியார்  ஸ்தானத்திற்கு  தோழர்கள்  எஸ். சத்தியமூர்த்தி,  வேதாரண்யம்  வேதரத்தினம், ருக்குமணி  ஸக்ஷிமிபதி  முதலியவர்கள்  அபேட்சகர்களாய்  நிற்பார்களெனத்  தெரிகிறது. “தமிழ்நாடு’ குடி அரசு 12.05.1935 பக்கம் 18.

இனி என்ன குறை?

இனி என்ன குறை?

  ஆச்சாரியார் ஓய்வானது தோழர் சத்தியமூர்த்தியை தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவராக ஆக்கிவிட்டது. ஆச்சாரியாருக்கு மற்றவர்களிடமிருந்து சந்தேகமும் காங்கிரஸ் பார்ப்பனர் கையிலேயே இருக்க வேண்டும் என்கின்ற எண்ணமும் சத்தியமூர்த்தியையே பிடித்துத் தலைவராகச் செய்து விட்டது. ஆச்சாரியார் எப்பொழுதும் எதிலிருந்து விலகினாலும் அந்த ஸ்தானத்தில் பார்ப்பனரைத் தான் வைத்து விட்டு விலகுவது வழக்கம். அந்த வழக்கப்படி சத்தியமூர்த்தி தலைவரானார் என்று சென்ற வாரத்தில் “”முடிவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா” என்று ஒரு குறிப்பு* எழுதி இருந்தோம். அதுபோலவே எல்லாரும் எதிர்பார்த்தபடியே ஆகிவிட்டது. சத்தியமூர்த்திக்கு திட்டம் போட்டுக் கொண்டு சூக்ஷி செய்யத் தெரியாது. மக்களை ஏமாற்றவும் சக்தி போதாது. ஆகவே ஒரு அளவுக்கு காங்கிரசின் தொல்லை ஒழிந்ததென்று நினைக்கலாம். நிற்க காங்கிரஸ் என்பதை இந்திய மக்களின் பிரதிநிதித்துவ சபை என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பிரதிநிதித்துவ சபைக்கு 2லீ கோடி மக்களுக்கு, தமிழ்நாட்டுக்குத் தோழர் சத்தியமூர்த்தி பிரதிநிதித்துவ தலைவராகிவிட்டார் என்றால் அவர் புத்தியையும் குணத்தையும் தியாகத்தையும் உத்தேசித்துப்...

ஆச்சாரியார் ஓய்வு

ஆச்சாரியார் ஓய்வு

  தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அரசியல் வாழ்விலிருந்து தற்காலிகமாகவோ அல்லது வேறு எப்படியோ விலகிக் கொண்டதாக சடங்குகள் நடைபெற்று அவர் ஸ்தானத்துக்குத் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் நியமிக்கப்பட்டு விட்டார். ராஜகோபாலாச்சாரியார் விஷயத்தில் நமக்குள்ள மரியாதையும் பக்தியும் குறையவில்லை. குறையுமென்று நம்பவுமில்லை. அவர் தன் சுயநலமில்லாதவர்; தனக்கும் தன் குடும்பத்திற்கும் என்று ஏதும் செய்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரசின் பேரால் தியாகம் செய்த பார்ப்பனர்களில் இவரே முதன்மையானவர். இரண்டாவதானவராக யாரைச் சொல்லுவது என்பது நமக்குத் தெரியவில்லை. அவர் இதுவரை வக்கீலாய் இருந்திருந்தால் தோழர்கள் அல்லாடியையும் எஸ். சீனிவாசயங்காரையும் சுண்டு விரலில் கட்டி ஆட்டி இருப்பார். பணமும் ஏராளமாய்ச் சம்பாதித்திருப்பார். ஹைகோர்ட் ஜட்ஜி பதவி அடைவது அவருக்கு கேவலம் என்றுகூட சொல்லத்தக்க நிலைக்கு வந்திருப்பார். இவ்வளவு சக்தியும் புத்தியும் தியாகமும் எல்லாம் சேர்ந்து பார்ப்பனர் வாழ்வுக்கு மனித சமூக உண்மை விடுதலையையும் சுயமரியாதையையும் அடமானம் வைக்கப் பயன்பட்டதுடன் மநுதர்ம சாஸ்திரத்துக்கு வக்காலத்துப் பேசும்படியும் ஆய்விட்டது...

அரசாங்க (கேபிநட்) மெம்பர்கள் கவனிப்பார்களா?

அரசாங்க (கேபிநட்) மெம்பர்கள் கவனிப்பார்களா?

  சென்னை அரசாங்கத்தில் உத்தியோகஸ்தர்களை அமைக்கும் பொறுப்பும் அதிகாரமும் சென்னை அரசாங்க கவர்னர் பிரபுவைச் சேர்ந்தது என்று சொல்லப்படுமானாலும் அவை பெரிதும் கவர்னர் பிரபுவின் ஆலோசனைச் சபை அங்கத்தினர்களான போலீஸ், லா, ரிவினியூ ஆகிய இலாக்கா தலைவர்களுக்கே நேரிட்ட பொறுப்பும், மேல் பார்வையும், அதிகாரமும் இருந்து வருகின்றன. மந்திரிமார்களோ உத்தியோக நியமன விஷயங்களில் யாதொரு அதிகாரமும் இல்லாமலே இருந்து வருகிறார்கள். மந்திரிமார்கள் கையில் உள்ள உத்தியோகங்களோ மிகச் சிலவேயாகும். அதுவும் ஸ்தல ஸ்தாபன இலாக்கா சம்மந்தப்பட்ட வரையில்தான் அவர்களது அதிகாரம் செல்லலாம். எனினும் இந்த இலாக்காவிற்கும் செக்ரட்டரிகள் என்னும் ஐரோப்பியர்களும், பார்ப்பனர்களும் குறுக்கிட்டு, அவற்றை மந்திரிகள் இஷ்ட்டப்படி நடை பெறாமல் செய்யவும் இடம் வைக்கப்பட்டிருக்கின்றபடியால் அந்த அதிகாரமும் பலனற்றது என்றே சொல்ல வேண்டும். மற்றபடி போலீஸ்லாரிவின்யூ இலாக்காக்களுக்கு முன்னைய மந்திரிசபையின் பயனாய் ஒரு அளவுக்கு பல வகுப்புகளையும் கவனித்து நியமனம் செய்யும்படியான வகுப்புவாரி முறை புகுத்தப்பட்டிருந்தும் மேற்படி இலாக்காத் தலைவர்களின் லட்சியக்...

ஏன் ஜூப்பிலியை?

ஏன் ஜூப்பிலியை?

  காங்கிரஸ்காரர்கள் ஜூப்பிலியை ஏன் பகிஷ்கரிக்கவில்லை என்றா கேட்கிறீர்கள். அவர்கள் தான் சட்டசபைக்குச் சென்று அரசரிடமும் அரசரின் பின் வார்சுகளிடமும் பக்தியாய் விசுவாசமாய் இருப்பதாக சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்தவர்களாயிற்றே. அப்படியிருக்க அவர்கள் பொது ஜனங்களிடம் சத்தியம், நாணையம், யோக்கியம் தவரி நடந்து அவர்களை எப்படி மோசம் செய்தாலும் சர்க்காரிடத்தில் மாத்திரம் எப்போதும் சத்தியம் தவர மாட்டார்கள். ஏன் என்றா கேட்கிறீர்கள்? சர்க்காரிடம் சும்மா தவரினாலோ அவர்களுக்கு நன்றாய் புத்தி கற்பிக்க தெரியும். அப்படிப்பட்ட சர்க்காரார் சத்தியம் தவரினாலும் இவர்களை சும்மாவா விட்டு விடுவார்கள்.  திம்மு திம்மென்று திம்மி இன்னொரு தடவை நிமிர்த்தி விட்டுவிட மாட்டார்களா? சூடுகண்ட பூனைகள் ஆயிற்றே காங்கிரஸ்காரர்கள். இனியுமா அவர்களுக்குப் புத்தி வந்திருக்காதென்று நினைக்கிறீர்கள். எந்த தேசியப் பத்திரிகையாவது மூச்சு விட்டதா? எந்த தேசியத் தலைவராவது கீச்சு மூச்சுக் காட்டினார்களா? தலைவர் முதலா வாலர் வரையில் குந்தினாயே குரங்கே என்று ஆகிவிடவில்லையா? குடி அரசு  செய்தி விமர்சனம் ...

நாஸ்திகம் எது?

நாஸ்திகம் எது?

  உலக நடவடிக்கைகள் சகலத்தையும் நடத்திக்கொண்டும், வணக்கத்திற்கும், பிரார்த்தனைகளுக்கும் பிரதி பயன் அளித்துக் கொண்டும் இருக்கும்படியான ஒரு கடவுளை நம்பவில்லை யென்று சொல்லுவது நாஸ்திகமானால் அந்த நாஸ்திகப் பட்டத்தை ஏற்றுக் கொள்ள எந்தப் பகுத்தறிவு வாதியும் வெட்கப்பட மாட்டான். குடி அரசு  பெட்டிச் செய்தி  12.05.1935

கடவுள்

கடவுள்

  சித்திரபுத்திரன் கேள்வி@ கடவுள் நன்மையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு. பதில்@ நல்ல காற்று, நல்ல தண்ணீர், வாசனை உள்ள புஷ்பம், ருசியுள்ள ஆகாரம், சத்துள்ள பழ வகை, மழை, நதி, நந்தவனம், பால், பசு, நல்ல பெண்கள், சந்திரன், சூரியன் முதலிய அனேக அருமையான வஸ்துக்களை உற்பத்தி செய்து நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆதலால் கடவுள் நன்மையே உருவாகக் கொண்டவர். கேள்வி@ கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு. பதில்@ கெட்ட காற்று, விஷப் புகை, நோய்க் கிருமிகள் உள்ள தண்ணீர், துர்வாடையுள்ள மலம், கசப்பான ஆகாரம், உபயோகமற்றதும் நோயை உண்டாக்குவதுமான பழம், துஷ்டமிருகங்கள், விஷஜந்துக்கள், கொடிய வியாதி, கடும் வெய்யில், இடி, பூகம்பம், முரட்டு வெள்ளம், இருட்டு, நோய் உள்ள பெண்கள், தரித்திரம், முள்ளுள்ள புதர்க்காடுகள் முதலானவைகளை எல்லாம் கடவுள் உற்பத்தி செய்திருக்கிறார். ஆதலால் கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர். கேள்வி@ இந்தக் கெடுதிகளையெல்லாம்,...

நீடாமங்கலத்தில்  சுயமரியாதைத்  திருமணம்

நீடாமங்கலத்தில்  சுயமரியாதைத்  திருமணம்

  சுயமரியாதைத் திருமணம் என்பது  சீர்திருத்தத் திருமணமே ஒழிய மற்றபடி வேறு அல்ல என்பதாக பல மேற்கோள்களுடன் சிறிது நேரம் பேசினார். அதில் 40 வருஷத்துக்கு முன்னால் நடந்த தனது திருமணமும் இந்த மாதிரி தன் தகப்பனாருக்கு இஷ்டமில்லாமல் நடந்ததாகவும் தனது மனைவியை மணக்க திருமணத்தின் போது தந்தை தனக்கு இஷ்டமில்லை என்று சொன்னதாகவும், அதனால் தந்தையார் சாப்பாடு இடத்திலேயே இருந்தாரே ஒழிய மணக் கொட்டகைக்கு வரவில்லை என்றும், மற்றபடி செலவு விஷயத்தில் அவர் ஏதும் குறுக்கிடவில்லை என்றும், ஐரோப்பியர் வந்தபோது மாத்திரம் வரவேற்க வந்ததைத் தவிர மற்றபடி எந்த காரியத்தையும் கவனிக்கவில்லை என்றும், பிறகு தன் மனைவி விஷயத்தில் தன் தகப்பனார் மிக பட்சமாக இருந்தார் என்றும் ஒவ்வொன்றுக்கும் மனைவிக்காக சிபார்சுக்கு வந்து தன்னைக் கண்டித்தாரென்றும் சொல்லி அதுபோலவே இப்போது மணமகன் தந்தையாருக்கு ஏதோ சிறிது அதிருப்தி இருந்தாலும் அது சீக்கிரம் சரிப்பட்டுப் போகும் என்றும் சொன்னார். குறிப்பு:            05.05.1935 ...

தேவக்கோட்டையில்

தேவக்கோட்டையில்

  மே தினம் (ஈ.வெ. ராமசாமி அவர்கள்) மே தினம் என்பது பற்றியும் சீர்திருத்தத் திருமணம் என்பது பற்றியும் யாகம் என்பது பற்றியும் பேசினார். கூட்டத்தில் இரண்டொரு பார்ப்பன வக்கீல்கள் வந்து யாகத்தைப் பற்றி பேசக் கூடாது என்று ஆட்சேபித்தார்கள். அவர்களை ஜனங்கள் ஆதரிக்காமல் தடுத்துப் பேசினார்கள். தோழர் ஈ.வெ.ரா. ஜனங்களை அமைதிப்படுத்தி வக்கீலை நன்றாய்ப் பேசுவதற்கு இடம் கொடுத்து அவர் பேச்சைக் கேட்கச் செய்தார். தலைவர் அவரை மேடைக்கு வந்து பேசும்படி பல தடவை கூப்பிட்டும் அவர் வரவில்லை என்றாலும் அவர் பேச்சு முழுவதும் இடையூறு இல்லாமல் கேழ்க்கச் செய்தார். பிறகு ஒவ்வொன்றுக்கும் பதில் சொன்னார். அய்யருடைய வாதமெல்லாம் யாகம் ரிஷிகளால் சொல்லப்பட்ட தென்றும் யாகத்தில் செய்யப்படும் ஜீவ இம்சையும் கொலையும் இம்சையும் கொலையுமாகாதென்றும் யாகத்தில் கொல்லப்பட்ட ஜீவன் மோட்சத்தை அடைகிறதென்றும் அதைப்பற்றிப் பார்ப்பன ரல்லாதார் பேசுவதற்குப் பாத்தியமில்லை என்றும் குறிப்பாக ராமசாமி, சாஸ்திரம் படிக்காதவர் ஆனதால் அவர் இதைப்பற்றிப்...

மே தினம் என்றால் என்ன?

மே தினம் என்றால் என்ன?

  இந்தியாவுக்கு ஏற்ற மே தினம் தோழர்களே! மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதானாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெய்னில் கொண்டாடப்படுவது போல் பிரஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது. அதுபோலவே தான் மேல் நாடுகளில் ஐரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை. ஏனெனில் ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகின்றது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை. ஆரம்ப தசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது. இன்று ரஷ்யாவில் மே தினத்தைக்...

கோவில் பிரவேசம்

கோவில் பிரவேசம்

  பொதுவுடமைத் தத்துவமாம் கோவில் பிரவேசத்தைப் பற்றி ஒரு கெட்டிக்கார பேர் போன வக்கீல் ஒருவர் நம்மிடம் பேசும் போது “”கோவில் பிரவேசம் கேட்பது பொதுவுடமைத் தத்துவமேயாகும்” என்றார். எப்படி என்று கேட்டதற்கு அவர் பதிலளித்ததாவது@ ஒருவனுக்கு அல்லது ஒரு கூட்டத்தாருக்கு மாத்திரம் ஆதாரப் பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும், பழக்க வழக்கமாகவும், இருந்து வரும் ஒரு சொத்து அல்லது ஒரு கட்டிடம் ஒரு குறிப்பிட்ட இடம் முதலியவை களில் மற்றொருவனோ அல்லது மற்றொரு கூட்டத்தார் என்பவர்களோ உரிமை வேண்டும் என்பதும் பொதுவுடமைக் கொள்கையேயாகும். ஆதலால் ஒரு கோவிலுக்குள் அனுபவபாத்தியமில்லாத ஒருவன் போக வேண்டுமென்பது அதாவது ஒரு கூட்டத்தார் மாத்திரம் போகலா மென்றோ ஒரு கூட்டத்தார் மாத்திரம் தான் உபயோகித்துக் கொள்ளலாம் என்றோ உள்ள நிபந்தனையில் சட்டப்படிக்கு உள்ள காலாவதிக்கு மேற்பட்ட காலமாய் பழக்கத்திலும் அனுபோகத்திலும் இருந்து வந்த இடங்களில் (கோவில், சத்திரம் முதலிய இடங்களில்) அக்கூட்டத்தாருக்கு வேறுபட்டவர்களும் வேறுபட்டவர்களாய்க் கருதப்பட்டவர்களும் அனுபவ...