Author: admin

ஓலம்! ஓலம்!! ஓலம்!!! ஓ தமிழனே! தமிழ் அன்னை உன் கடமையைச் செய்ய அழைக்கிறாள். ஆரியக் கொடுமையில் இருந்து தன்னை விடுவித்துவிடும்படி ஓலமிட்டுக் கெஞ்சுகிறாள். தாய்நன்றி கொன்ற மகனும், தாய்ப் பணிக் கடமை கொன்ற மகனும் மனிதனாவானா? குடி அரசு – வேண்டுகோள் – 29.08.1937

சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? II

சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? II

சென்ற வாரம் “குடி அர”சில் இன்றைய சரணாகதி மந்திரி சபையானது சுய ஆட்சிக்கு ஆக ஏற்பட்டதல்ல வென்றும் இந்நாட்டு பழந்தமிழ் மக்களை பாதாளத்தில் ஆழ்த்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்திப் பழிவாங்கு வதற்கு ஆக ஏற்பட்டிருக்கிறதென்றும் உதாரணமாக தமிழ் மக்களுக்கு ஆரிய ஆதிக்க பாஷையாகிய வட மொழியை ஹிந்தி என்னும் பேரால் இள வயதிலேயே கட்டாயத்தின் மீது புகுத்தவும் அரசியல் பிரதிநிதித்துவ தேர்தல்களில் யோக்கியமான பிரதிநிதித்துவம் ஏற்படுவதற்கில்லாமல் பித்தலாட்டத்தில் தேர்ந்தவர்களே வெற்றி பெற்று வரவும், சரீரத்தினால் பாடுபட்டு உழைக்க வேண்டியவர்களல்லாதவர்கள் என்று தங்களை விலக்கிக்கொண்டு மற்ற எல்லா மக்களும் பொருளாதாரத் துறையில் தலை எடுப்பதற்கு மார்க்கமில்லாதிருப்பதற்கு சுலபத்தில் பொருள் தேட செளகரியமுள்ள தொழில் முறைகளை தலை எடுக்கவொட்டாமல் தடுத்து இந்நாட்டு பெருங்குடி மக்கள் என்றென்றும் ஆரியர்களுக்கு அடிமையாக இருக்கும்படியாக எவ்விதத்தும் பயனற்ற கதர்த் திட்டத்தைப் புகுத்தி பழி வாங்குகின்றது என்றும் குறிப்பிட்டுக் காட்டி அவற்றுள் ஹிந்தி சூழ்ச்சியைப்பற்றி விளக்கி இருந்தோம். இந்த...

சூழ்ச்சிக்குப் பிறகு வந்த புத்தி

சூழ்ச்சிக்குப் பிறகு வந்த புத்தி

“ஹிந்துமத பரிபாலன போர்டு அவசியமே” கவர்னர் மறுத்த பிறகே மந்திரிக்குப் புத்தி வந்ததா? – ஊர் வம்பு ஜஸ்டிஸ் கட்சியாரின் அரும் பெரும் முயற்சியால் பனகல் ராஜா அவர்கள் காலத்தில் ஹிந்து மத பரிபாலன போர்டுகள் ஏற்பட்டு அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் செய்யப்பட்டது. அக்காலத்தில் தென்னாட்டுப் பார்ப்பனர்களும் பட்டர்களும் குருக்கள் கூட்டத்தார்களும் சோம்பேறி வேதாந்தக் கூட்டப் பார்ப்பனர்களும் பலமாக எதிர்த்தார்கள். “சர்க்கார் மதத்தில் தலையிடக்கூடாது” என்றும், “ஹிந்து மத கோவில், மடம் ஆகிய நிர்வாகங்களில் சர்க்கார் தலையிடுவது அக்ரமம்” என்றும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கோவில் சொத்துக்களைத் தங்கள் சொத்துக்களாகக் கருதி பங்கு போட்டு கொள்ளையடித்துக் கொண்டிருந்த தர்மகர்த்தாக்களும் குருக்கள்களும் பெரும் கூச்சல் போட்டார்கள். “மத விஷயங்களில் சர்க்கார் தலையிடு வதில்லை” என்று மகாராணியார் வாக்குக் கொடுத்திருப்பதாக வக்கீல் கும்பல்கள் வம்பளந்தார்கள். இப்படி பல எதிர்ப்புகளுக்கிடையில் “அறநிலையப் பாதுகாப்பு மசோதா” சட்டம் செய்யப்பட்டு விட்டது. இப்பொழுது எங்கும் “ஹிந்துமத பரிபாலன போர்டுகள்” ஏற்பட்டு...

சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? I

சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? I

அக்கிரகாரச் சனியன்கள் பிரிட்டிஷ் சர்க்காரை சரணாகதி அடைந்து மந்திரி ஸ்தானத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்த ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு துறையிலும் பழி வாங்கும் குணத்தையும் அக்கிரகார ஆதிக்கத்தை என்றென்றும் நிலைநிறுத்தும் கவலையையும் கொண்டு சூழ்ச்சி ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது. அரசியல் துறையில் இச்சரணாகதி கூட்டங்கள் எவ்வித கொள்கைகள் கையாண்ட போதிலும் நமக்கு கவலையில்லை. வெள்ளைக்காரர்கள் விஷயத்தில் எவ்வளவு சீக்கிரமாக விரட்டி அடிக்க முயற்சித்தாலும் நாம் குறுக்கே நிற்கப்போவதில்லை. ஆனால் பொய் பித்தலாட்டங்கள் பேசி பாமர மக்கள் ஏய்த்து பிரிட்டீஷாருக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக் கொடுத்து பிரிட்டிஷ் ஆட்சியை உலகமுள்ளளவும் காப்பாற்றித் தருவதாய் பிரமாண வாக்குக்கொடுத்து பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ் மக்களை பூண்டோடு அழிக்கத்தக்க சூழ்ச்சி ஆட்சி நடத்துவதை யார் தான்- எந்த உண்மைத்தமிழ் மகன் தான் சகித்துக்கொண்டிருக்க முடியும்? பிரிட்டிஷ் ஆட்சி முறையைப்பற்றி நாம் குறை கூற வரவில்லை. ஏனெனில் அவர்களது ராஜ தர்மம் எல்லாம் எப்படியாவது இந்தியாவில் பிரிட்டிஷ்...

முதல் மந்திரி மாய அழுகை!

முதல் மந்திரி மாய அழுகை!

சம்பளம் குறையாவிடில் ஏழைகளுக்கு சோறில்லையாம்! இவருக்கு மாதம் ரூபாய் 800 எதற்கு? சென்னை, ஒய்.எம்.சி.எ. தேகப்பயிற்சி கல்லூரியின் ஆரம்ப விழாவில் 12-8-37ல் சென்னை சரணாகதி முதல் மந்திரி ஆச்சாரியார் பிரசங்கம் செய்ததில் ஒரு பாகம் வருமாறு:- வீண் மாய அழுகை ஏன்? “ஏழை மக்கட்கு அன்னமளிக்கவேண்டி மிக அதிகச் சம்பளங்களைக் குறைக்க வேண்டியது அவசியமாகின்றது. சர்க்கார் செலவைக் குறைக்க வேண்டும். தாங்களாகவே ஒவ்வொருவரும் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி கேட்கப்பட்டது. இதற்கு வந்திருக்கும் பதில்கள் ஏமாற்றமளிக் கின்றன. தாங்களாகவே சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுகிறார்களோ இல்லையோ? சர்க்கார் செலவைக் குறைக்காவிட்டால் ஏழைகட்கு சோறில்லை. எல்லா ஜனங்கட்கும் உணவளிக்க வேண்டுமென்றே நான் கேட்கிறேன்.” என்று வழக்கம்போல் மாய அழுகை அழுகிறார். இந்த வீண் மாய அழுகை எதற்காக? இவருக்கு என்ன செலவு? சென்னை சரணாகதி முதல் மந்திரி ராஜகோபாலாச்சாரியார் அவர்கட்கு மாதச் சம்பளம் ரூ. 500 படிச்செலவு மாதம் ரூ. 300 ஆக ரூ. 800...

அட்ஹாக் கமிட்டிப் புரட்டு

அட்ஹாக் கமிட்டிப் புரட்டு

எந்த இயக்கத்துக்கும் ஸ்தாபனத்துக்கும் சட்ட திட்டங்களும் கட்டுப்பாடும் அவசியமே. சட்டதிட்டங்களும் கட்டுப்பாடும் இல்லாத இயக்கங்களும் ஸ்தாபனங்களும் விருத்தியடையவே மாட்டா. ஆனால் சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகளின் பேரால் சூழ்ச்சிகள் நடைபெற்றால் அந்தச் சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் ஒழித்து ஒழுங்கு முறையை நிலைநாட்ட வேண்டியது முக்கியமாகும். சட்ட சபை, ஜில்லாபோர்டு, நகரசபை, பஞ்சாயத்து போர்டு முதலிய ஸ்தாபனங்களுக்கு பிரதிநிதி களைக் பொறுக்கியெடுக்க காங்கரசிலே அகில இந்திய அட்ஹாக் கமிட்டியும் ஜில்லா அட்ஹாக் கமிட்டிகளும் நகர, கிராம அட்ஹாக் கமிட்டிகளும் நியமிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே காங்கரஸ் காரியங்கள் எல்லாம் ஒழுங்காக நடைபெறுவதாக சாமானிய ஜனங்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் கிரியாம்சையில் நடப்பதென்ன? அட்ஹாக் கமிட்டிகளில் எல்லாம் சூழ்ச்சிகளும் பித்தலாட்டங்களுமே தாண்டவமாடுகின்றன. உதாரணமாக பம்பாயை எடுத்துக்கொள்ளுவோம். பம்பாய் சட்டசபை காங்கரஸ் கட்சிக்கு காங்கரஸ் நியாயப்படி தலைவராய்த் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவரும் பம்பாய் முதன் மந்திரி ஆக வேண்டியவரும் தோழர் நரிமன் ஆகும். அவரே இப்பொழுது பம்பாய் மாகாண காங்கரஸ் கமிட்டித் தலைவராயிருந்து...

பதின்மூன்றாவது ஆண்டு

பதின்மூன்றாவது ஆண்டு

நம் குடி அரசு பத்திரிகை சென்ற இதழோடு 12-வது ஆண்டு முடிந்து இன்று பதின்மூன்றாவது ஆண்டில் பிரவேசிக்கிறது. பத்திரிகை நடத்துவதில் உள்ள கஷ்டங்கள் அறிஞர்கள் உணர்ந்ததே யாகும். சுயநலமற்று சுதந்தரத்தோடு குறிப்பிட்ட ஒரு தனிக்கொள்கைக்கு என்று ஒரு பத்திரிகை நடப்பது என்றால் அது சுலபத்தில் முடியாத காரியமேயாகும். அப்படி இருந்தும் “குடி அரசு” ஆரம்பித்த காலம் முதல் எந்தக் கொள்கைக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதே கொள்கையை உள்ளும்புறமும் உறுதியாய்க் கொண்டு எவ்வித கஷ்ட நஷ்டங்களுக்கும் யாருடைய விருப்பு வெறுப்பு தயவு தாக்ஷண்யங்களுக்கும் அஞ்சாமல் ஒரே போக்கில் தன்னிஷ்டப்படி நடைபெற்று வந்திருக்கின்றது. அரசாங்கத்தார் தொல்லை ஒரு புறமும், மதவாதிகள் தொல்லை மற்றொரு புறமும், பார்ப்பனர்கள் தொல்லையும் சூழ்ச்சியும் எல்லாப் புறமும், “குடி அரசி”ன் மூலம் வாழ்க்கை நடத்தவும் வயிறுவளர்க்கவும் விளம்பரம் பெறவும் வந்து சேர்ந்து ஏமாற்றமடைந்த தோழர்களின் தொல்லை மற்றொரு பக்கமுமாக பல வழிகளில் துன்பமும், தொல்லையும், நஷ்டமும் அனுபவித்துக் கொண்டே “குடி அரசு”...

தர்மபுரி ஜில்லா போர்டு பிரசிடெண்டுக்கும் வைஸ் பிரசிடெண்டுக்கும் சுயமரியாதைத் தலைவருக்கும் வரவேற்பு

தர்மபுரி ஜில்லா போர்டு பிரசிடெண்டுக்கும் வைஸ் பிரசிடெண்டுக்கும் சுயமரியாதைத் தலைவருக்கும் வரவேற்பு

அன்புள்ள தோழர்களே! நீங்கள் வாசித்துக் கொடுத்த வரவேற்புப் பத்திரங்களுக்கு உங்கள் ஜில்லா போர்டு தலைவரும் உப தலைவரும் தக்க பதில் கூறினார்கள். அவர்கள் மற்றவர்களைப் போன்று ஏமாற்றும் முறையில் எல்லா வசதிகளையும் செய்து கொடுப்போமென்று ஆசை வார்த்தையோ அல்லது சமயத்திற்கு பதில் என்ற முறையிலோ சொல்லாமல் தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட காரியங்களை தங்களால் முடிந்தவரை செய்வதாகத்தான் கூறினார்கள். அதுதான் உண்மை. ஜில்லா போர்டுகள் மக்களின் தண்ணீர் வசதி, ரோடு வசதி, சுகாதார வசதி, பள்ளிக்கூட வசதி ஆகியவைகளைக் கவனிப்பதற்காகவே இருக்கின்றன. அங்கு பூரண சுயராஜ்யப் பேச்சுக்கு இடமில்லை. அங்கு கட்சி பேதம் வேண்டியதில்லை. வீணாகக் கலகமும் வேண்டியதில்லை. பல ஜில்லா போர்டுகள் கூட்டங்களைப் பார்த்தால் மீன் கடைச் சண்டைகளைப் போல் கலகம் செய்து கொள்ளுவதையும் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதையும் காணலாம். இதனால் ஜில்லா மக்களுக்கு வேண்டிய வசதிகள் கவனிக்கப்படு வதில்லை. ஜில்லா போர்டு மெம்பர்களும் தலைவர்களும் லோகல் போர்டு...

சாக்கடைக்கு பதில் எச்சிலை

சாக்கடைக்கு பதில் எச்சிலை

சேலம் அதி தீவிர தேசபக்தர் (பார்ப்பன பக்தர்) வைதிக காங்கரஸ் வாதி (ஜஸ்டிஸ் கட்சியை சதா வைதவர்) குடும்பத்தோடு பார்ப்பன, காங்கரஸ் ஆரம்பித்த காலம் முதல் – வினா தெரிந்த நாள் முதல் காங்கரஸ்காரராய் இருந்த தோழர் எஸ். வெங்கிட்டப்ப செட்டியார் அவர்களுக்கும் அவரது திருக்குமாரருக்கும் பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன குலாமும் பார்ப்பன எச்சிலைப் பத்திரிக்கைகளும் இவ்வளவு சீக்கிரத்திலேயே நல்லதொரு “நற்சாட்சி பத்திர”மளித்து விட்டன. எடுத்துக்காட்டாக சென்னையில் இருந்து வெளியாகும் ஒரு எச்சிலைப் பத்திரிகையானது சேலம் பாரிஸ்டர் எஸ்.வி. ராமசாமி அவர்கள் சரணாகதி மந்திரி கனம் ஆச்சாரியாருக்கு அளித்த வெடிகுண்டுக்கு பதிலளிக்கிறதாக சாக்கு வைத்துக்கொண்டு மிக்க ஆணவமாகவும் யோக்கியமற்ற முறையிலும் என்னென்னவோ ஆபாசமாக எழுதி இருக்கின்றது. தோழர் எஸ்.வி. ராமசாமி ஆச்சாரியாருக்கு அறைந்த ஆப்புகளை பிடுங்கவோ அசைக்கவோ அவ்வெச்சிலை பத்திரிகை களுக்கு சக்தி இல்லையானால் மரியாதையாகத் தலை குனிவதையோ மெளனமாகத் தலையை மறைத்துக் கொள்ளுவதையோ விட்டு விட்டு அவ்வாப்புகளை வெளியாக்கின பத்திரிக்கையை...

காங்கரசில் சதியாலோசனை

காங்கரசில் சதியாலோசனை

  – ஊர்வம்பன் தேதி. 41-13-107 தத்தாரி நகரம். சோமாரி மண்டபம். தேசபக்த சிகாமணிகள் கூட்டம். இக்கூட்டத்துக்கு பிராமணர்கள் அல்லாத தேசபக்தர்கள் மாத்திரமே ஆஜர் ஆகலாம் என்றும் “வகுப்புவாதம் பேசும் ஜஸ்டிஸ், சுயமரியாதை கட்சியை எப்படி ஒழிப்பது” என்பதற்காக இரகசிய முயற்சிகள் செய்ய திட்டம் போட கூட்டப்படுவதாகு மென்றும் இதில் பார்ப்பனர்கள் கலந்தால் விஷயம் வெளியாகிவிடும் என்றும் வெளிக்கு தெரியப்படுத்தப்பட்டு இருந்தது. நடு ஜாமம் 6-15 மணிக்கு பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்கள் மண்டபம் நிறைய கூடிவிட்டார்கள். வெளி கேட்டில் சரியான காலிகளை நிறுத்தி பார்ப்பனர்கள் உள்ளே பிரவேசிக்காமல் செய்யப்பட்டு விட்டது. வந்திருந்தவர்கள் பெயரைக் குறிக்க முதலில் ஏற்பாடு செய்யப் பட்டது. அதில் கிறிஸ்தவர், ஆதிதிராவிடர், முஸ்லீம், பார்ப்பனரல்லாத இந்து என்பதான பிரிவுப்படி குறிக்கும்படி உத்திரவிடப்பட்டது. லிஸ்ட் முடிந்தது. “இனி பேசலா” மென்றார் லிஸ்ட் எடுத்தவர். “தலைவர் வேண்டாமா” என்றார் ஒரு முஸ்லிம். “ஒரு கிறிஸ்தவரை தலைவராகப் போடுங்கள். ஏனெனில் அச்சமூகம் தான்...

தியாகப் புரட்டு

தியாகப் புரட்டு

பதவியேற்ற காங்கரஸ்காரர் பெரிய தியாகம் செய்து விட்டார்களாம். பிரமாதமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. மந்திரிமார் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டார்கள். ஆனால் சர்க்காரிடமிருந்து 6 கார்கள் சன்மானம் வாங்கத் தவறவில்லை. சென்னை மேல்சபை உதவித் தலைவர் தோழர் வெங்கடசாமி நாயுடு தமது மாதச் சம்பளத்தை வாங்கப் போவதில்லையென்று சர்க்காருக்கு எழுதிவிட்டாராம். அப்பா கம்பெனி புரோப்ரைட்டருக்கு அந்தத் தொகை எம்மாத்திரம்! எனினும் அவருடைய தியாகத்தை மேல் சபைத் தலைவர் டாக்டர் ராமராவ் “காபி” அடிப்பாரா? அவரும் பெருத்த வருமானமுடைய டாக்டர்தான். கீழ்சபை அல்லது அசம்பிளித் தலைவர் தோழர் புலுசு சாம்ப மூர்த்தி பெரிய தியாகியல்லவா? சட்டை, செருப்பு, குடைகளைக்கூட வெறுப்பவரல்லவா? அவருக்கு ஏன் மாதா மாதம் 500 ரூபாய்? தோழர் வெங்கிடசாமி நாயுடு மாதிரி புலுசுவும் அவருடைய சம்பளத்தை இழப்பாரா? அப்பால் வீராங்கனை தோழர் ருக்மணி லôமீபதிக்கு சம்பளம் எதற்கு? அவரும் தியாக ஊழியம் ஏன் செய்யக்கூடாது? குடும்பப் பொறுப்பு அவருக்கில்லை. அந்தப் பாரத்தை ஏற்க அவரது...

பூணூல் அறுப்பு வழக்கு,தோழர்கள் பிணையில் விடுதலை !

சென்னை மயிலாப்பூர்,திருவல்லிக்கேணி பகுதிகளில் பார்பனர்களின் பூணூல்களை அறுத்தாக கூறி 20.04.2015 அன்று ராவணன்,கோபி என்கிற கோபிநாத்,திவாகர்,நந்த குமார்,பிரவீன், பிரபாகரன் ஆகிய 6 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று (08.10.2015) அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற தோழர்களின் பிணை கோரும் வழக்கில் தோழர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இன்று(09.10.2015) காலை தோழர்கள் வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள். இந்த வழக்கில் கழக வழக்கறிஞர்கள் தோழர் திருமூர்த்தி, தோழர் துரை.அருண் ஆகியோர் நீதி மன்றத்தில் ஆஜராகினர்.

கைதிகள் விடுதலை

கைதிகள் விடுதலை

அரசியல் கைதிகளை காங்கிரஸ் அரசாங்கம் விடுதலை செய்கின்றது. இதற்கு பிரிட்டீஷ் அரசாங்கம் மேலொப்பம் போடுகின்றது. இதன் காரணம் என்ன என்பது மக்களுக்கு விளங்க வேண்டாமா? இதிலிருந்து பிரிட்டீஷ் அரசாங்கம் பணிந்துவிட்டதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. அப்படி நினைப்பது களிமண் தலையேயாகும். பிறத்தியாரை அந்தப்படி நம்பும்படி யாராவது எடுத்துச் சொல்வது வடிகட்டின முட்டாள்தனமோ இல்லாவிட்டால் அயோக்கியத்தனமோ ஆகும். ஏனெனில் காங்கிரசானது 14.7.37-ல் பிரிட்டீஷ் அரசாங்கத்தை சரணாகதி அடைந்து “அரசாங்கத்துக்கும் சட்டதிட்டத்துக்கும் அரசருக்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசமாய் நடந்துவருகிறேன்” என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டு அரசாங்கத்தின் அபயம் பெற்றுக்கொண்ட பிறகு அதற்கு முன் செய்த குற்றங்களுக்கு ஆக தண்டிக்கப்பட்டவர்களை பிரிட்டீஷ் அரசாங்கம் லீ வினாடி யாவது ஜெயிலில் வைத்திருக்க அவசிய மென்ன? என்று கேட்கின்றோம். உப்பு சத்தியாக்கிரகத்தின்போது ஜெயில் வைக்கப்பட்ட கைதிகளை காந்தியார், இர்வின் பிரபுவிடம் “இனி உப்பு காச்சுவதில்லை, மறியல் செய்வதில்லை, உத்திரவு மீறுவதில்லை, சத்தியாக்கிரகம் செய்வ தில்லை” என்று வாக்குறுதி...

பார்ப்பன ஆட்சி தேவேந்திரன் சபை

பார்ப்பன ஆட்சி தேவேந்திரன் சபை

தேவேந்திரன் – தேவர்கள் சம்பாஷணை – சித்திரபுத்திரன் தேவேந்திரன் கொலுமண்டபத்துக்கு தேவர்கள் வந்து கூடிவிட்டார்கள். தேவேந்திரன் வந்து விட்டான். தேவர்கள் எழுந்து ஜெய ஜெயீபவா கூறி அக்ஷதை புஷ்பம் வீசுகிறார்கள். தேவேந்திரன் ஆசனத்தமருகிறான். தேவர்கள் வாழ்த்துக்கூறி அமருகிறார்கள். தேவேந்திரன்:- தேவர்களே! உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதத்தாலும் எனது அரிய தவத்தாலும் இந்த அரிய தேவேந்திர பதவியை அடைந்திருப்பதோடு இந்திராணியையும் அடைந்து இன்பமாகவும் பெருமையாகவும் வாழ்கிறேன் அல்லவா? தேவர்கள்:- ஆமாம் பிரபு! எங்களுடைய பூரண ஆசீர்வாதமும் தங்களுடைய அரிய தவ மகிமையும் இருக்கும்போது தங்களுக்கு என்ன குறை ஏற்படப் போகிறது? தே-ன்:- சபாஷ்! நன்றாய் சொன்னீர்கள். உலகில் எனக்கு மேல் எவன் இருக்கப்போகிறான்? எவனை இருக்க விடுவேன் நான்? ரம்ப சந்தோஷம். ரம்ப திருப்தி. உலகம் எப்படி நடக்கின்றது? தே-ர்:- பிரபூ! தங்கள் ஆக்கினை சொர்க்க மத்திய பாதாளம் ஆகிய மூன்று லோகங்களிலும் ராம பாணம் போல் நடந்து வருகிறது. என்றாலும், தே-ன்:- உம்...

பொன்மலை சுயமரியாதைச் சங்கம்

பொன்மலை சுயமரியாதைச் சங்கம்

4-வது ஆண்டுவிழா “நானொரு அபேதவாதிதான். நான் தினசரி அபேதவாதத்தைப் பற்றிப் பேசுகிறேன். எழுதுகிறேன். நான் பொருளாதார அபேதவாதத்தை விட சமூக சமத்துவத்தை – உயர்வு தாழ்வை ஒழிப்பதை முதல் அபேதவாத மாகக் கருதுகிறேன். பிறகு தான் பொருளாதார சமத்துவ அபேதவாதம். இது எனது அபிப்பிராயம். அபேதவாதத்தைப்பற்றி பலர் பலவிதமாக பாஷ்யம் கூறலாம். அதுவும் இடத்திற்கும் – சமயத்திற்கும் தக்கபடி அர்த்தம் செய்யும்படி அபிப்பிராயம் கூறலாம். ஆனால் நமது நாட்டில் பிறவி காரணமாக உயர்வு தாழ்வு கூறப்பட்டு முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு உள்ளவரை பார்ப்பான் பறையன் என்ற வித்தியாசமுள்ளவரை பொருளாதார சமத்துவம் பேசுவதால் எவ்வித பயனுமில்லை. இது என்னுடைய அபிப்பிராயம்.” குறிப்பு: 25.07.1937 ஆம் நாள் பொன்மலை தொழிலாளர் சங்கத்திடல் அருகில் நடைபெற்ற பொன்மலை சுயமரியாதைச் சங்கத்தின் நான்காவது ஆண்டு விழாவில் “அபேதவாதத்தைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?” என்ற கேள்விக்குப் பதில் அளித்து பேசியதன் சுருக்கம். குடி அரசு –...

இனி நடப்பதென்ன?

இனி நடப்பதென்ன?

காங்கிரஸ் மந்திரிகள் அதிகாரத்துக்கு வந்துவிட்டார்கள். மக்களுக்கு இனி தண்ணீரே குடிக்க வேண்டிய அவசியமிருக்காது. ஏனெனில் தேனும் பாலுமே அருவியாகவும், ஆறாகவும் ஓடப்போகிறது. ஆகாய கங்கை அகிலமெல்லாம் வேண்டியவுடன் வரவழைக்கப் படப்போகிறது. வரி என்கின்ற வார்த்தையே அகராதியில் கூட இல்லாமல் எடுபடப்போகிறது. இந்திய நாட்டில் எங்காவது பட்டினி என்றோ, வேலை இல்லாத கஷ்டம் என்றோ யாராவது உச்சரித்தால் ராஜத்துவேஷக் குற்றமாகக் கருதி தண்டனைக்குள்ளாக்கக் கூடிய சட்டம் செய்யப்படப் போகிறது. அற்ப ஆயுளில் யாரும் சாகாவண்ணம் எல்லோரும் 120 வருஷம் உயிர் வாழ ஏற்பாடு செய்யப்பட்டு மரணப் பதிவு இலாக்காவே எடுபடப்போகிறது. ஆகவே இனி என்ன வேண்டும்? இந்த சரணாகதி மந்திரிகள் ஆதிக்கத்தில் இவ்வளவு காரியம் ஆனால் போதாதா? இதற்கு மேலும் அனேக காரியம் செய்யப்படும் என்று காங்கிரஸ்காரர்கள் வாக்களித்திருந்த போதிலும் இதற்கு மேலும் மக்கள் ஆசைப்படுவது பேராசையைக் காட்டுவதாகிவிடாதா? ஆனால் சரணாகதி மந்திரிகள் இவ்வளவோடு நிறுத்தி விடமாட்டார்கள். இன்னமும் அதிகமான அனேக நன்மைகளைச்...

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925-ல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக்கூற வேண்டியது அவசியமல்லவா? அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால்தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா? என்பது விளங்கும். ~subhead இளமையில் நம்பிக்கை ~shend எனக்கு சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். கடவுள் மகிழ்ச்சி யடைவார் என்று கருதியோ, சன்மானமளிப்பாரென்று கருதியோ (எனக்கு அவசியமென்று தோன்றாத) எந்தக் காரியத்தையும்...

ஆம்பூர் ஆதிதிராவிடர் மகாநாடு  காங்கிரசால் உங்களுக்கு கதிமோட்சம் கிடையாது  மதம் வேண்டுமானால் இஸ்லாத்தைத் தழுவுங்கள்

ஆம்பூர் ஆதிதிராவிடர் மகாநாடு காங்கிரசால் உங்களுக்கு கதிமோட்சம் கிடையாது மதம் வேண்டுமானால் இஸ்லாத்தைத் தழுவுங்கள்

  தலைவரவர்களே! தோழர்களே! இந்த ஜில்லாவில் முதல் முதலாகக் கூட்டப்பட்ட இந்த மகா நாட்டுக்கு அழைக்கப்பட்ட எனக்கு உங்களால் வாசித்துக் கொடுக்கப் பட்ட வரவேற்புப் பத்திரத்திற்கு எனது மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த வரவேற்பு பத்திரத்தில் என்னை அதிகமாக புகழ்ந்து கூறியிருக்கிறீர்கள். மகாநாட்டைத் திறந்து வைத்த கனம் மந்திரியார் எம்.சி. ராஜா அவர்களும் மகாநாட்டுக்குத் தலைமை வகித்த தோழர் வக்கீல் சாமிநாயுடு அவர்களும் மிகவும் புகழ்ந்து பேசி விட்டார்கள். உண்மையில் இப்புகழ்ச்சிகளுக்கு நான் அருகனல்ல என்பதை மனப்பூர்வமாகவே தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எல்லோருக்கும் என்பால் உள்ள அன்பே அவ்வளவு மெய்மறந்து கண்மூடித்தனமாக புகழச் செய்துவிட்டது. ஆனபோதிலும் அதற்கேற்றாப்போல் உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக நடந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அற்புதமான காலம் உண்மையிலேயே நாம் ஒரு அற்புதமான காலத்தில் இருக்கின்றோம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம் முன்னோர்கள் காதில் கேட்டிராததும் மனதில் நினைத்திராததுமான பல ஆச்சரியமான காரியங்கள் வெகு சுலபத்தில் நடப்பதை நேரில்...

காங்கரஸ் ஒரு சூழ்ச்சி சபை  முஸ்லீம்களுக்கு அதனால் நன்மை இல்லை

காங்கரஸ் ஒரு சூழ்ச்சி சபை முஸ்லீம்களுக்கு அதனால் நன்மை இல்லை

  தலைவர் அவர்களே! தோழர்களே! முஸ்லீம்களும் காங்கிரசும் என்பது பற்றி எனது அபிப்பிராயத்தை தாங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். இதைப்பற்றி பல தடவை பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். சுருக்கமாகச் சொல்லுவதானால் தென்னாட்டில் காங்கிரசும் பார்ப்பனரல்லாதாரும் எப்படியோ அப்படியேதான் காங்கிரசும் முஸ்லீம்களும் என்பதாகும். சூழ்ச்சி சபை தென்னாட்டில் உள்ள பார்ப்பனரல்லாதாராகிய நாங்கள் பெரும்பான்மையோர் காங்கிரசை எங்கள் சமூகத்தை ஏய்த்து பல வஞ்சக காரியங்களால் எங்களைப் பிரித்து அடக்கி வைத்து எங்கள் மீது ஒரு சிறு கூட்டத்தார் ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்ட சூழ்ச்சி சபை என்றே கருதுகிறோம். இந்த எண்ணம் எனக்கு இன்று நேற்று உதித்ததல்ல. நான் தீவிர காங்கிரஸ் வாதியாய் – தென்னாட்டு மாகாண காங்கிரஸ் ஸ்தாபனங்களின் தலைவனாய் தேசத்துக்கு ஆக 3, 4 முறை சிறை சென்று தேசிய வீரனாய் இருந்த காலத்திலே ஏற்பட்டதாகும். அதாவது சுமார் 12 வருஷத்துக்கு முந்தியே ஏற்பட்டு காங்கிரசிலிருந்து வெளி வந்து பல்லாயிரமுறை பேச்சிலும், எழுத்திலும்...

மாயவரம் நடராஜன் மறைந்தார்

மாயவரம் நடராஜன் மறைந்தார்

நம் அருமைத் தோழன், ஆருயிர் நண்பன், உண்மை உழைப்பாளி மாயவரம் சி. நடராஜன் முடிவெய்திவிட்டார். காங்கிரஸ், ஜஸ்டிஸ், சுயமரியாதை உலகில் நடராஜனை அறியாதார் வெகுசிலரே இருக்கலாம். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை அருந்தொண்டாற்றி வந்தவர். தனக்கென வாழாதவர். தனக்கென ஒரு அபிப்பிராயம் காட்டிக்கொள்ளாத போர்வீரராய் இருந்தவர். பணங் காசைப்பற்றியோ தண்டனை கண்டனைகளைப்பற்றியோ துன்பம் தொல்லை ஆகியவைகளைப் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் என்ன உத்திரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி திடீரென்று முடிவெய்திவிட்டார் என்று தந்தி வந்தது – நம்ப முடியவில்லை. மேலால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. எழுத பேனா ஓடவில்லை. இனி மேலால் தொண்டர் படைநிலை என்ன ஆவது! அப்படிப்பட்ட அஞ்சா நெஞ்சமும் அழியாக் காதலும் கொண்ட அருமை நடராஜனை எப்போது காண்பது! அல்லது நடராஜனைப் போன்ற மற்றொரு காதலனை எங்கே காண்பது! இயற்கையே! உன் கொடுமையே கொடுமை! எங்கும் சிறிதும் இணையில்லாத...

ஒரு தொல்லை ஒழிந்தது

ஒரு தொல்லை ஒழிந்தது

  கடைசி சரணாகதி காங்கிரசுக்காரர்களுக்குப் புத்தி வந்தோ அல்லது வேறு நிவர்த்தி இல்லாத நிலையில் சிக்கிக்கொண்ட நெருக்கடியால் ஞானோதயம் ஏற்பட்டோ கடைசியாக சரணாகதி அடைந்துவிட்டார்கள். இந்தப் பெருமை நமது சர்க்காருக்கே உண்டு. மகா கெட்டிக்காரத் திருடனாய் இருந்த கூளாங்காலன் என்பவனை யாராலும் பிடிக்க முடியாமல் போனவுடன் கடைசியாக அவன் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படியும் அவனைக் கண்ட இடத்தில் சுடும்படியும் உத்திரவு போட்டதாலும் அவன் சுற்றத்தார், உறவினர், அவனது ஊர்க்காரர் ஆகியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கண்காணிப்பு ஏற்படுத்தியதாலும் கூளாங்காலன் தானாகவே ஓடிவந்து எப்படி சரணாகதி அடைந்து சிறைப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டானோ அது போல் சர்க்காரார் காங்கிரஸ் தொல்லையை ஒழிக்க சாதாரண முறையில் எவ்வளவோ காரியம் செய்தும் அவை காங்கிரசுக்குச் சோதிக்காமல் போய்விட்டதால் கடைசியாக ஒரு உத்திரவு போட்டது போல் – வைஸ்ராய் பிரபு காங்கிரசுக்கு இறுதிச் சேதி விட்டது போல் இவ்வளவு நாளைக்குள் வந்து தாங்களாக சரணாகதி அடைந்து அவர்களது...

தெய்வ வரி

தெய்வ வரி

நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க சம்பந்தத்தில் பூமி வரி, வருமான வரி, கள்ளு வரி, துணி வரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிட்டி வரி, போர்டு வரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகளைக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதல்லாமல் தெய்வத்திற்காகவும், மதத்திற் காகவும் கொடுத்து வரும் வரி அளவுக்கு மீறினவைகளாய் இருப்ப தோடு நமக்கு யாதொரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் மேற்சொல்லிய அரசாங்க சம்பந்த வரிகளின் அளவை விட ஏறக்குறைய அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. அன்றியும், இவ்வரிகளால் தத்துவ விசாரணையும், மத விசாரணையும் நாம் கொஞ்சமும் செய்வதற்கில்லாமல் செய்து, நமது மூட நம்பிக்கையால் பிழைக்க வேண்டிய சிலரின் நன்மைக்காக அவர்கள் எழுதி வைத்ததையும் சொல்வதையும் நம்பி நாம் கஷ்டப்பட்டு வரி செலுத்து வதல்லாமல் வேறு என்ன உண்மை லாபம் அடைகிறோம்? தெய்வத்தை உத்தேசித்தோ, ஸ்தலத்தை உத்தேசித்தோ, தீர்த்தத்தை உத்தேசித்தோ, நமது பிரயாணச் செலவு...

பண்டித ஜவஹர்லாலின் மதிப்பு

பண்டித ஜவஹர்லாலின் மதிப்பு

காங்கிரஸ் தலைவரான பண்டிதர் ஜவஹர்லால் அவர்களுக்கு நாட்டில் உண்மை மதிப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை பொது ஜனங்கள் உணரவேண்டும் என்பதற்கு ஆகவே இக்கட்டுரை எழுதுகிறோம். பண்டித ஜவஹர்லால் பல சமயங்களில் முன்பின் யோசனையில்லாமலும் முறட்டு வீரமாகவும் பேசும் பேச்சுக்களையும், எழுதும் எழுத்துக்களையும் பல பத்திரிகைகள் விளம்பரப்படுத்தி பயன்பெறுவது ஒரு பக்கம் இருக்கட்டும். காங்கிரசின் பேரால் ஓட்டு கேட்கும் போது காங்கிரசின் வருணாச்சிரம தருமத் தன்மையையும் முதலாளித்துவ தன்மையையும் மறைப்பதற்கு ஆக பண்டிதரை காந்தியாரும் பார்ப்பனர்களும் பயன் படுத்திக் கொள்ளும் தன்மை மற்றொரு பக்கம் இருக்கட்டும். வகையான வாழ்வுக்கு வகையற்ற வாலிபக்கூட்டமும் தங்கள் தங்கள் சுயநலத்துக்கு ஆக அவ்வப்போது எந்தெந்த பேச்சுக்கும் ஸ்தாபனத்துக்கும் செல்வாக் கிருக்கின்றதோ அந்தந்த பேச்சுப் பேசி அந்தந்த ஸ்தாபனத்தைத் தொங்கிக் கொண்டு பிழைப்பதற்கு ஆக ஜவஹர்லாலுக்கு ஜே என்றும் சமதர்மத்துக்கும் பொது உடமைக்கும் ஜே என்றும் கூறிக் குதிப்பது இனியொரு பக்கத்தில் இருக்கட்டும். இன்றைய சாதாரண நடைமுறை வழக்கில்...

எனது விண்ணப்பம்

எனது விண்ணப்பம்

  இன்று முதல் “விடுதலை” காலணா தினசரியாக வெளிவருகிறது. தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் முக்கியக் கருத்தாகக் கொண்ட ஒரு தினசரி வர்த்தமானத் தமிழ் பத்திரிக்கை வெளியாக்க வேண்டுமென்று கொஞ்ச காலமாகவே கவலைகொண்டு பலவழிகளிலும் முயற்சித்து வந்தேன். இதை அறிந்தோ அறியாமலோ தமிழ் மக்கள் பலரும் இப்படிப்பட்ட பத்திரிகையில்லாக் குறைவை எனது கவனக்குறை என்று குற்றம் சாட்டியும் ஊக்கப்படுத்தியும் பல தீர்மானங்களும் வேண்டுகோளும் செய்த வண்ணமாய் இருந்தார்கள். இதுவரை நான் எடுத்து வந்த பல முயற்சிகள் கைகூடாமல் போய் விட்டதானாலும் தமிழ் மக்கள் வாழ்வுக்கே கேடு உண்டாகும் படியான நிலையில் எதிரிகளின் ஆதிக்கம் பலப்படத் தக்க நிலைமை மேலேறிக் கொண்டு வருவதாக காணப்பட்டதாலும் அதற்கு பெருங்காரணம் ஒரு தமிழ் தினசரி வர்த்தமானப் பத்திரிக்கை இல்லாதது என்று உணர்ந்ததாலும் அதனாலேயே தமிழ்ப் பெருங்குடி மக்கள் பலரும் பயந்து எதிரிகளைத் தஞ்சமடைந்து மற்றத் தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கவும் துணிகிறார்கள் என்றும் நான்...

கடவுள் செயல்  ஏழைகள் துயரம்

கடவுள் செயல் ஏழைகள் துயரம்

  இடம் கோயில். பாத்திரங்கள் புரோகிதர்கள், ஏழை மக்கள், சாது. ஆண், பெண், குழந்தைகள் ஆகியவர்கள் ஒரு கடவுள் விக்கிரகத்தின் முன் நின்று முறையிடுகின்றார்கள்: ஓ கடவுளே! பஞ்சம்! பஞ்சம்!! இதைப் பார்த்துக் கொண்டு சகித்து மௌனம் சாதிக்கும் கடவுளே தங்களை வணங்குகிறோம். எங்களைக் காப்பாற்றும், காப்பாற்றும். சதாகாலமும், தங்களையே தொழுகிறோம். ஆனால் தாங்கள் சிறிதும் செவி சாய்ப்பதில்லை. “அதுவும் எங்கள் நன்மைக்கே” என்று நம்பும்படி கற்பிக்கப்பட்டிருக் கிறோம். அவ்வாறே நாங்களும் நம்புகிறோம். நாங்கள் எப்பொழுதும் நம்புகிறவர்கள். யார் எதைச் சொன்னாலும் நம்புகிறோம். அப்படியெல்லாம் நம்பியும் இன்னும் பட்டினி கிடக்கின்றோம். தயவு செய்து எங்களைக் காப்பாற்றும்! கடவுளே காப்பாற்றும்! நாங்கள் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், மிதிக்கப்படுபவர்கள், உம்முடைய மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டவர்கள், உணவற்றவர்கள், ரத்தமற்றவர்கள். குப்பைமேடுகளிலும், அழுக்கு மூலைகளிலும், குடிசைகளிலும் ஆடுமாடுகளைப்போல் சதா “துன்பம்” என்னும் கருவிலேயே வளர்ந்து வருபவர்கள். ஆதரவற்றவர்கள். ஏனைய ஜனங்களால் வெறுத்து ஒதுக்கித் தள்ளப்பட்ட, பசிப்பிணியால் வாடிவதங்கும் அனாதைகள். எங்களைக்...

ஆண் பெண் சமத்துவம்

ஆண் பெண் சமத்துவம்

ஆண் மக்கள் தங்களுடைய பெண் மக்களை அதாவது தாங்கள் மிகுதியும் மரியாதை செலுத்தும் தாய்மார்களாயிருந்தாலும் சரி, அன்பு செலுத்தும் சகோதரியாயிருந்தாலும் சரி, காதலுக்குரித்தான மனைவிகளா யிருந்தாலும் சரி ஒரே படியாக அவர்களைக் கேவலமாகவே எண்ணியும், மதித்தும் வருவது சகஜமாக இருந்து வருகிறது. நமது நாட்டில் வெகுகாலமாக இம்மாதிரி பெண்களை இழிவாகக் கருதப்படுவதற்கு நமது சாஸ்திரங்களும், பண்டிதப் பெரியோர்களும், முற்றும் துறந்த முனிவர்களென்று சொல்லப் பட்டவர்களும் ஒருவித காரணமுமின்றி பெண்களைக் கேவலமாக வர்ணித்து வந்ததோடு, பாரபக்ஷமாக ஏட்டிலும் எழுதிவைத் திருக்கின்றனர். இதைப் படிக்கும் மக்கள் சாதாரணமாக தங்கள் பகுத்தறிவைக் கொண்டே ஆராயாமல் தங்கள் பெண்மக்களைக் கேவலமாக நடத்தி வந்ததோடு அவர்களுக்கு எவ்விதத்திலும் சமத்துவம் ஏற்படாதபடி சட்ட திட்டங்களையும் செய்து அதைப் பழக்கத்திலும் கொண்டுவந்து விட்டார்கள். இந்தப் பழக்கமானது இந்தியர் ஒவ்வொருவருடைய மனதிலும் ஆழமாகப் பதிந்து விட்டது. சுயமரியாதை இயக்கத்தின் பலனால் மக்கள் சிறிது சிறிதாக உண்மையை உணர்ந்து வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஆண்...

வேதம் அல்லது பைபில் விதிகள்

வேதம் அல்லது பைபில் விதிகள்

வினா: பைபில் விதிகள் எவை? விடை: சமயாசாரியர்களால் தேவ வாக்கென மதிக்கப்படுவன வெல்லாம் பைபில் விதிகள் எனப்படும். வினா: பைபில் விதிகள் ஆதி முதல் ஒரே மாதிரியாக இருந்து வந்திருக்கின்றனவா? விடை: இல்லை. ஆதிக்கிறிஸ்தவர்கள் எல்லாம் யூதர்களா யிருந்ததினால் பழைய ஏற்பாடே கடவுள் வாக்கு என்றும் கிறிஸ்து மதத்துக்கு அதுவே ஆதாரமென்றும் நம்பினார்கள். வினா: இதைப்பற்றி அப்போஸ்தலகர்கள் என்ன சொன்னார்கள்? விடை: புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டைப்போல் முக்கியமான தென்று அவர்கள் நம்பவில்லை யென்றே தெரிய வருகிறது. வினா: பழைய ஏற்பாட்டுக்கு சமமான நிலையில் புதிய ஏற்பாடு எப்பொழுது மதிக்கப்பட்டது? விடை: யூதக் கிறிஸ்தவர்களுக்கும் இதர கிறிஸ்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதினால் கத்தோலிக்க திருச்சபை ஸ்தாபனமாயிற்று. மத சம்பந்தமான விஷயங்களில் முடிவு கூற கத்தோலிக்க திருச்சபைக்கே அதிகார முண்டென மதிக்கப்பட்டது. எனவே பொதுவாக கடவுள் வாக்கென மதிக்கக் கூடிய ஒரு நூலுக்குத் தேவையுண்டாயிற்று. உடனே பல வேத விதிகள் தொகுக்கப்பட்டன. கடைசியில் அவை...

தேச மக்களே உஷார்!

தேச மக்களே உஷார்!

வரப்போகும் அரசியல் சீர்திருத்தம் இந்தியர் விரும்பும் அளவுக்கு முற்போக்கானதாயில்லை; மற்றும் பல குறைபாடுகளும் அதில் அடங்கி யுள்ளன. எனினும் அரசியல் ஞானமுடையவர்கள் அதை ஒப்புக்கொண்டு அனுதாபத்துடன் அமல் நடத்தினால் மக்களுக்குப் பல நன்மைகள் செய்ய முடியுமென்றும் மேற்கொண்டு அதிகப்படியான உரிமைகள் பெற அடிகோலலாமென்றும் அனுபவ ஞானமுடைய அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். காங்கிரஸ்காரர் மதிப்பைப் பெற்றவரும் அசம்பிளியில் காங்கிரஸ் பெற்ற “வெற்றி மேல் வெற்றி”களுக்கு உதவி புரிந்தவருமான தோழர் ஜின்னாவின் அபிப்பிராயமும் அனேகமாக இதுவேயாகும். ஆனால் பூரண சுயேச்சை வாதிகளும் “கலப்பற்ற தேசபத்தி”யுடையவர் களுமான காங்கிரஸ்காரர்களோ, வரப்போகும் சீர்திருத்தம் வேண்டவே வேண்டாம் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள். அவ்வாறு அவர்கள் கூறுவதற்கு, மாகாண கவர்னர்களுக்கும் வைசிராய்க்கும் அதிகப்படியான விசேஷ அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருப்பதே காரணமாம். எவ்வளவு திறமையுடைய மந்திரிகளுக்கும் அந்த விசேஷ அதிகாரங்களை மீறி உருப்படியான வேலை செய்யவே முடியாதாம். ஆனால் வரப்போகும் சீர்திருத்தத்தில் அமோகமான விசேஷ அதிகாரங்கள் புகுத்தப்பட்டதற்கு காங்கிரஸ்காரர்களே காரணம் என்று ஸர்.டெஜ்...

காங்கிரசும் ஜவஹர்லாலும்

காங்கிரசும் ஜவஹர்லாலும்

பொது உடமையும் இன்று காங்கிரசினுடைய முக்கிய வேலை வரப்போகும் தேர்தலில் காங்கிரசுக்காரர்கள் வெற்றி பெற வேண்டுமென்கின்ற ஒரே வேலைதான் என்பதைப் பற்றி யாருக்கும் சந்தேகம் இருக்குமென்று நாம் கருதவில்லை. ஆனால் வெற்றி பெற்ற பிறகு என்ன செய்வது என்பதில் காங்கிரஸ் கொள்கை இன்னது என்பதாக ஒருவருக்காவது விஷயம் விளங்கி இருக்கும் என்றோ, அல்லது மக்களுக்கு விளங்கும்படி காங்கிரஸ்காரர்கள் விளக்கி வருகிறார்கள் என்றோ சொல்லுவதற்கில்லை. கட்டுப்பாடாகவே பொது மக்கள் இவ் விஷயத்தில் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். தேர்தல்களின் போது தேர்தல் பிரச்சினையாக இருப்பது “காந்தி பெரியவர்” என்பதும் அவர் “மகாத்மா” என்பதும் ஒரு அத்தியாயமாகவும் “காங்கிரஸ்காரர்கள் ஜெயிலுக்குப் போனார்கள், அடிபட்டார்கள்” என்பதும் “பாரத மாதாவுக்கு ஜே” என்பதும் இரண்டாவது அத்தியாயமாகவும், “ஆதலால் காந்திக்கு ஓட்டுப்போடுங்கள், காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்பது மூன்றாவது அத்தியாயமாகவும் இருந்து எலக்ஷன் பிரசாரம் செய்து வெற்றி உண்டாக்க முயற்சிப்பதாய் இருக்கிறதே ஒழிய வேறில்லை. இவ்வளவோடு தேர்தல் வேலையும் பதவி வேலையும்...

நடந்த விஷயம் என்ன?

நடந்த விஷயம் என்ன?

ஈ.வெ.ரா. சி.ஆர். சந்திப்பு தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் நானும் குற்றாலத்தில் கண்டு பேசிய விஷயம் தமிழ்நாடு பத்திரிகை உலகத்தில் மிகப் பிரமாதப் படுத்தப்பட்டு விட்டது. என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் முதலில் இந்த விஷயத்தை கேட்டு விட்டே மரியாதைக்கு விசாரிக்கும் க்ஷேம லாபங்களைக் கூட விசாரிக்கிறார்கள். சந்திக்க முடியாத அனேகம் பேர்கள் உள்ளத்திலும் இந்த எண்ணமே இருக்கும் என்பதில் ஆக்ஷேபணை இருக்க நியாயமில்லை. ஆகையால் அதை விளக்கி விடுகிறேன். பத்திரிகை நிருபர்கள் பலர் என்னை விசாரித்தார்கள். நான் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல என்றே பதில் சொல்லிவிட்டேன். நிருபர்கள் சேதியில் 100க்கு 90 என் விஷயத்தைப் பொறுத்தவரை திரித்தும் பிசகாயும் மாற்றியுமே எனக்கு காணப்படுகின்றன. ஆதலால் நானே குறிப்பிட்டு விடுகிறேன். எங்கள் சம்பாஷணை ஒன்றும் உண்மையிலேயே அவ்வளவு குறிப்பிடக்கூடிய தல்ல. ஆனால் கவனிக்கக்கூடியதேயாகும். எனக்கு பொதுவாக தோழர் சி.ராஜகோபாலாச்சாரியாரிடம் எப்போதுமே மரியாதை உண்டு. அவருக்கும் என்னிடம் அன்பு உண்டு என்றே கருதிக் கொண்டிருக்கிறேன்....

பாண்டியன், ராமசாமி பிரசாரக் கமிட்டி சுற்றுப்பிரயாண ஏற்பாடு

பாண்டியன், ராமசாமி பிரசாரக் கமிட்டி சுற்றுப்பிரயாண ஏற்பாடு

நாளது 21ந் தேதி கோபி – 22ந் தேதி கோயமுத�்தூர் – 23ந் தேதி ஈரோடு – 24ந் தேதி தஞ்சை – 25ந் தேதி திருச்�சி – 26ந் தேதி திருச்�சி – 27ந் தேதி சேலம் – 28ந் தேதி ராசீபு�ரம் – 29ந் தேதி கடலூர்� – 30ந் தேதி சென்னை� ஜூலை 1, 2 ந் தேதிகளில் செங்கல்பட்டு ஜில்லாவுக்காக சென்னையில் உள்ள பிரமுகர்களைச் சந்தித்துப் பேசுவார்கள். – 3ந்தேதி வேலூர் – 4ந் தேதி அம்பலூ�ர் சந்தர்ப்பங்களை உத்தேசித்து ஜூலை மாதம் புரோகிராம் மாத்திரம் மாற்றப்படலாம். இந்தப்படி தோழர்கள் சௌந்திரபாண்டியன், ஈ.வெ.ராமசாமி, சி.டி.நாயகம், வி.வி.ராமசாமி முதலியவர்கள் சுற்றுப்பிரயாணம் செய்வார்கள். ஆங்காங்கும் மற்றும் அந்தந்த ஜில்லாக்களிலும் உள்ள இயக்கத் தோழர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு வந்து வேண்டிய உதவி செய்ய வேண்டுகிறோம். C.D. நாயகம், E.V. ராமசாமி காரியதரிசிகள். குடி அரசு அறிவிப்பு 14.06.1936

“மெயி”லும் பார்ப்பனரும்

“மெயி”லும் பார்ப்பனரும்

“மெயில்” பத்திரிகையானது ஐரோப்பியர்களுடைய உரிமைகளை காப்பாற்ற நடத்தப்படும் பத்திரிகை என்பது பொதுஜனங்களது அபிப்பிராயம். ஆனால் அது அவ்வளவோடு நிற்காமல் இப்போது பார்ப்பனர்கள் உரிமையைக் காப்பாற்ற தீவிரமாய் புறப்பட்டு விட்டது. இதன் முக்கிய காரணம் இன்னது என்பது நமக்கு புலப்படவில்லை. ஜெர்மன் ஹிட்லர் எப்படி தன்னை ஆரியர் எனக் கருதிக் கொண்டாரோ அதுபோல் மெயில் ஆசிரியர் தன்னையும் ஆரியர் சந்ததி என்று கருதிக் கொண்டாரோ, அல்லது தென்னாட்டுப் பார்ப்பனர்களை தங்கள் சந்ததியார் என்று கருதிக் கொண்டாரோ என்னவோ என்று தான் சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. எப்படியிருந்த போதிலும் எதற்கும் ஒரு அளவு உண்டு. என்ன காரணத்தால் மெயில் தன் அளவைக் கூட மீறிவிட்டதோ தெரியவில்லை. ஏனென்றால் 6ந் தேதி மெயில் பத்திரிகை உபதலையங்கம் ஒன்றில் “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை காங்கிரசுக்காரர் ஒப்புக் கொண்டால் ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் சேர்ந்து விடுகிறோம்” என்று தோழர் நடேச முதலியார் சொன்னதைக் கண்டித்து எழுதும் போது “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்...

பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக்கமிட்டியின்  சுற்றுப்பிரயாண திட்டம்

பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக்கமிட்டியின் சுற்றுப்பிரயாண திட்டம்

  ஜஸ்டிஸ் கட்சியில் வறுமை நீங்குமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் பேசியதாவது: இன்று இந்தியாவில் எந்தக் கட்சியாலும் வறுமை நீங்காது என்றும், வறுமை நீங்க காங்கிரசிலும் கூட திட்டம் இல்லை என்றும் இந்து சமூகத்தில் உள்ள ஜாதிப் பாகுபாடுகளே வறுமைக்கும், செல்வத்துக்கும் பெரும்பாலும் காரணமாய் இருக்கிறதென்றும், அது ஒழிக்கப்பட்டால் இன்றுள்ள இவ்வளவு வறுமை இருக்காதென்றும் வறுமை என்று சொல்லப்படுவது பெரும்பாலும் கீழ் ஜாதிக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்குள்தான் இருக்கிறது என்றும் உதாரணமாக பார்ப்பானையும், “பறையனையும்” எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் பார்ப்பான் எவனாவது வறுமையில் கஷ்டப்படு கிறானா? எவனாவது மூட்டை தூக்குகிறானா? சரீரக் கஷ்டமான வேலை செய்கிறானா? என்றும், பறையர்கள் முதலிய படிப்படியான கீழ்ஜாதிகள் என்பவைகள் எவ்வளவோ கஷ்டப்படுவதுடன் வறுமையால் படிப்பில்லாமல் வீட்டுவசதி, வயித்திய வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்றும், ஜாதி ஒழிந்தால் வறுமைகள் அநேகமாய் குறையும் என்றும், ஒரு அளவுக்கு செல்வமும் உழைப்பும் சமமாக பிரிக்கப்படும் என்றும், காங்கிரஸ் இந்த கொள்கைக்கு...

அரசியல் நிலைமை சேலம் விக்டோரியா மார்க்கட்டில் பிரசங்கம்

அரசியல் நிலைமை சேலம் விக்டோரியா மார்க்கட்டில் பிரசங்கம்

தோழர்களே! இங்கு நாங்கள் இன்று பிரசங்கத்துக்காக வரவில்லை. தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக் கமிட்டி வேலையாக வந்தோம். வந்த இடத்தில் எங்களைக் கேட்காமலே நோட்டீசு போடப்பட்டிருந்தது. இந்தத் தோழர்களுக்கு பயந்து பேசுவதற்கு ஒப்புக் கொள்ள வேண்டி வந்தது. ~subhead பிரசாரம் ~shend தமிழ்நாட்டிற்கு பார்ப்பனரல்லாதார் கட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இயக்கப் பிரசாரம் சிறிதும் கூட நடைபெற வில்லை. பதவிகளில் இருக்கும் தலைவர்களுக்கு பிரசாரத்தைப் பற்றி கவலை இல்லை. பிரசாரத்தில் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை. சமய சஞ்சீவிகளுக்கு பிரசாரம் தேவையில்லை என்று ஒரு பழமொழி உண்டு. அவர்களுக்கு எந்தக்கட்சி வலுக்கின்றதோ அந்தக் கட்சியில் சேர்ந்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் சக்தியும் குணமும் உண்டு. ஆனால் பார்ப்பனரல்லாதார் சமூக நலனுக்கு நாம் அதிகமான பிரசாரம் செய்ய வேண்டியிருக்கிறது. நம் சமூக நலத்துக்கு நம் சமூகத்தவரே சிலர் எதிரிகளாகவும், எதிரிகளின் ஆயுதங்களாகவும் இருந்து நமக்கு எதிர்ப்பிரசாரம் செய்வதால் நமது பாமர மக்கள் ஏமாந்து போக...

கோவை கேசும் பார்ப்பனீயமும்

கோவை கேசும் பார்ப்பனீயமும்

இந்தியாவில் குறிப்பாக தென்னாட்டில் இந்த 20வது நூற்றாண்டிலும், பார்ப்பனர்களின் ஆதிக்கம் மத இயலிலும், சமூக இயலிலும், அரசியலிலும் தலைதூக்கி விளங்குவதற்குக் காரணம் பார்ப்பனர்கள் பத்திரிகை உலகத்தை முற்றுகை போட்டு வெற்றியடைந்து சுவாதீனப்படுத்தி அடிமை கொண்டதேயாகும். இத்தென்னாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரிடையாக எவராலும் பத்திரிகை நடத்துவது என்பது கொஞ்சமும் முடியாத காரியமாகவே ஆகிவிட்டது. ஏதாவது ஒன்று அரை பத்திரிக்கைகள் பார்ப்பனர்களை எதிர்த்து இருக்குமானால் அவற்றின் நிலையும் உயிருக்கு ஊஞ்சலாடும் தன்மையதாகவே இருந்து வரவேண்டியிருக்கிறது. பத்திரிகை நடத்துவதில் கொடுமையையும், கல் நெஞ்சையும், நாணயக் குறைவையும், அதர்மத்தையும் காட்டுவதில் பார்ப்பனர்கள் சிறிது கூடத் தயங்குவதில்லை. உண்மையிலேயே இத்தமிழ்நாட்டில் இந்த 10 வருஷ காலமாய் குடி அரசு என்னும் பத்திரிகை ஒன்று இல்லாமல் இருந்திருக்குமானால் இன்று இத்தென்னாட்டு நிலை, ஏன்? இந்திய காங்கிரஸ் நிலை, அரசியல் சீர்திருத்த நிலை கூட வேறு விதமாகவே இருந்திருக்கும் என்று சொல்லுவதற்கு நாம் சிறிதும் பின்னடையவில்லை. உதாரணமாக இன்று காங்கிரஸ் கொள்கைகளில்...

குற்றாலத்தில் சு.ம. திருமணம்

குற்றாலத்தில் சு.ம. திருமணம்

எனது மதிப்புக்கு உரிய தோழர் ஆச்சாரியார் அவர்களும் தோழர் முதலியார் அவர்களும் இத்திருமணத்தைப் பாராட்டிப் பேசியது எனக்கு மிகவும் பெருமையளிக்கத் தக்கதாகவே இருந்தது. இதுவரை நான் எத்தனையோ திருமணத்தில் கலந்திருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்; தலைமை வகித்தும் இருக்கிறேன் என்றாலும் இன்றைய திருமணத்தில் நான் கலந்திருந்ததை உண்மையாகவே நான் பெருமையாக எண்ணுகிறேன். இத்திருமண முறை இப்பெரியார்களின் ஆமோதிப்பையும் ஆசியையும் பெற்றது உண்மையிலேயே எனக்குக் கிடைக்கக் கூடாத ஒரு சாதனம் கிடைத்தது போலவே இருக்கிறது. மணமக்களுக்கும் இந்த சந்தர்ப்பமானது ஒரு மறக்கக்கூடாததும், என்றும் ஞாபகத்தில் இருக்கக் கூடிய பெருமையானதுமான சம்பவமும் ஆகும். ஆதலால் அவர்களையும் நான் பாராட்டுகிறேன். எனது பணிவிற்குரிய ஆச்சாரியார் அவர்கள் நான் இத் திருமணத்துக்கு புரோகிதன் என்று சொன்னார்கள். இது தான் புரோகித முறையாகவும் புரோகிதத்துக்கு இவ்வளவு தான் வேலை என்றும் இருந்தால் நான் அந்த புரோகித பட்டத்தை ஏற்க தயாராய் இருப்பதோடு புரோகிதத் தன்மையை எதிர்க்கவுமாட்டேன். புரோகிதக் கொடுமையும் புரோகிதப் புரட்டும்...

பாண்டியன் ராமசாமி சுற்றுப்பிரயாணம்  திருநெல்வேலிக் கூட்டம்

பாண்டியன் ராமசாமி சுற்றுப்பிரயாணம் திருநெல்வேலிக் கூட்டம்

  ஆச்சாரியார் ராமசாமி சம்பாஷணை தலைவர் அவர்களே! தோழர்களே!! இயக்கத்தின் அவசியத்தைப்பற்றியும், அது செய்துள்ள வேலையைப் பற்றியும் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மையைப் பற்றியும் எல்லோரும் பேசிவிட்டார்கள். இனி நான் இக்கூட்டத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்களைப்பற்றியே சிறிது பேசுகிறேன். தலைவர் தோழர் நாயகம் அவர்கள் தெரிவித்ததுபோல் திருச்சி மீட்டிங் தீர்மானப்படி மேல்கொண்டு அதுவிஷயமாய் நடைபெற வேண்டிய காரியங்களுக்கு ஆக இங்கு வந்திருக்கிறோம். இயக்கத்தின் பேரால் பதவியும் பட்டமும் பெற்று வாழும் பெரியார்கள் எங்களை லட்சியம் செய்யாவிட்டாலும் இந்நாட்டு பாமர மக்களும் வாலிபர்களும் கிராம ஏழை ஜனங்களும் எங்களை மதிக்கிறார்கள். எங்கள் வேலைக்கு ஆக்கமளிக்கிறார்கள் என்பது இம்மாதிரி கூட்டங்களாலேயே விளங்குகிறது. அந்த தைரியத்தின் மீதே நாங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களை சகித்துக்கொண்டு இந்த தொண்டில் ஈடுபட்டு இருக்கிறோம். திருச்சி மத்தியக் கமிட்டி தீர்மானப்படி ஜில்லாவுக்கு சுமார் 1500 ரூ. வசூலானால் போதுமானது. இது கூட செய்ய நம்மால் ஆகவில்லையானால் நம் செல்வவான்களின்...

கிராமப் புனருத்தாரணப் புரட்டு

கிராமப் புனருத்தாரணப் புரட்டு

Back to Nature  இயற்கை வழிக்குத் திரும்பு! Back to the Village கிராமத்திற்குப் போ!! Support village industries குடிசைத் தொழிலை ஆதரி! என்கிற பல்லவிகளைத் தேச பக்தர்களில் பலர் இதுபோது பாடி வருகிறார்கள். B.A., M.A.  பட்டதாரிகளுக்கெல்லாம் கிராமத்துக்குப் போய் எளிய வாழ்க்கையை யேற்றுக் கொள்ளும்படி உபதேசம் செய்யப்படுகிறது. படித்தவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்கும் பாமரரின் தரித்திரத்தைப் போக்குவதற்கும் எல்லோரும் கிராமத்துக்குப் போய் எளிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது தான் சிறந்த மார்க்கம் என்று சொல்லப்பட்டு வருகிறது. கிராமப் புனருத்தாரணஞ் செய்வதற்காக தோழர் காந்தியார் அகில இந்திய கிராமக் கைத்தொழிற் சங்கம் என்பதாக (கூடஞு அடூடூ ஐணஞீடிச் ஙடிடூடூச்ஞ்ஞு ஐணஞீதண்tணூடிஞுண் அண்ண்ணிஞிடிச்tடிணிண) ஒரு சங்கத்தைத் தோற்றுவித்திருக்கிறார். கவர்ன்மெண்டாரும் இந்த வேலையைச் செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கிவைத்திருக்கின்றனர். ஆனால் நாம் இந்த சந்தர்ப்பத்தில் இயற்கை வழிக்குத் திரும்புவதும், கிராமத்திற்குப் போவதும், எளிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதும் நாட்டு மக்களுக்கு...

கடவுள் கதை

கடவுள் கதை

உலக உற்பத்தி “சந்தேகந்தெளிய” சம்பாஷணை – சித்திரபுத்திமன்   கதை சொல்லுகிறவன்: ஒரே ஒரு கடவுள் இருந்தார். கதை கேட்கிறவன்: ஊம், அவர் எங்கே இருந்தார்? க.சொ: ஆரம்பத்திலேயே அதிகப் பிரசங்கமாய் கேட்கிறாயே. நான் சொல்லுவதை ஊம் என்று கேட்டால் தான் இந்தக் கதை சொல்ல முடியும். க.கே: சரி, சரி சொல்லு, ஒரே ஒரு கடவுள். அப்புறம்? க.சொ: ஒரு நாள் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார். க.கே: சரி, எப்போ? க.சொ: பாரு மறுபடியும், இரட்டை அதிகப் பிரசங்கமாய் கேட்கிறாயே. க.கே: சரி, சரி. தப்பு சொல்லப்பா சொல்லு. க.சொ: உலகத்தை சிருஷ்டிக்கலாம் என்று முடிவு கொண்டார். க.கே: (அதற்கு முன் உலகம் இல்லை போல் இருக்கிறது. உலகம் இல்லாமலே ஒரு நாள் உட்கார்ந்து கொண்டு யோசித்திருக்கிறார் போல் இருக்கிறது. அந்தரத்தில் உட்கார்ந்திருப்பார் பாவம்! என்று நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் பொறுத்து) சரி அப்புறம்...

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்தில் பல பிரபல தோழர்கள் இவ்வியக்கத்தின் கொள்கைகளையாவது ஒப்புக்கொள்ளலாம் என்றாலும் அவ்வியக்கத்தின் பெயரை ஒப்புக் கொள்ள முடியாதென்றும், ஏனென்றால் சுயமரியாதை இயக்கம் என்று சொல்லும்போதே நமக்கு சுயமரியாதை இல்லையென்று ஒப்புக் கொண்டதாக ஆகிறதென்றும் ஆதலால் அந்தப் பெயரை எடுத்துவிட்டு வேறுபெயர் வைக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். பல சமாதானம் சொன்ன பிறகு ஒப்புக்கொண்டார்கள். இப்போது அந்தப்படி சொன்ன தோழர்களையே உங்களுக்கு சுயமரியாதை இருக்கிறதா? என்று கேட்க வேண்டியதாய் விட்டது. உதாரணமாக பல பெரிய இலாகா தலைமை ஸ்தானங்களுக்கு பார்ப்பனரல்லாதார்களே தலைவர்களாயிருந்தும் அவர்கள் கீழுள்ள பார்ப்பனர்கள் எழுதி வைத்ததில் கையெழுத்துப்போட வேண்டியதைத்தவிர வேறு ஒரு காரியமும் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகிறார்கள். சென்னை மாகாணத்தில் ஏறக்குறைய 8 வருஷ காலமாக பார்ப்பன ரல்லாதவர்கள் தான் போலீஸ் இலாகாவில் தலைவர்களாக இருந்து வருகிறார்கள் என்றாலும் போலீஸ் அதிகாரம் பார்ப்பனர்களின் ஏகபோக பிதுரார்ஜிதச் சொத்தாக இருந்து வருகிறது. பார்ப்பனரல்லாத போலீசு...

பரிதாபம்

பரிதாபம்

தோழர் சௌந்திரபாண்டியன் அவர்களின் இரண்டாவது மகன் 14 வயதுள்ள ராஜசேகரன் கொடைக்கானல் ஏரியில் விளையாடுகையில் தவறி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான் என்று கேட்டு விசனிக்கிறோம். ராஜசேகரன் தோழர் சௌந்திரபாண்டியன் அவர்களின் 4 புதல்வர்களிலும் இரண்டாவதவன். ஆனாலும் மிகவும் கெட்டிக்காரனும், புத்திசாலியும், நல்ல குணமும், ஜனங்களிடம் குஷாலாய் பழகும் குணமும் உடைய அபுரூபன். அப்படிப்பட்ட அவனைப் பறிகொடுத்த தாயார், தந்தையர், சுற்றத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் துக்கமும், விசனமும், பரிதாபமும் இல்லாமல் இருக்க முடியாது தான். ஆனால் துக்கமும் விசனமும் இருந்து என்ன பயன்? யாரால் இனி என்ன செய்யமுடியும்? துக்கப்படுவதில் பயனில்லை என்று சொல்லி தேற்ற முயற்சிக்கத்தான் மற்றவர்களால் முடியும். இயற்கையை நன்றாய் உணர்ந்த தோழர் பாண்டியன் குடும்பத்தாருக்கு எவருடைய தேறுதலும் அவசியமிருக்காது என்றே கருதுகிறோம். குடி அரசு இரங்கற் செய்தி 31.05.1936

ஜவஹர்லாலும் சமதர்மமும்

ஜவஹர்லாலும் சமதர்மமும்

பண்டித ஜவஹர்லால் நேரு தலைவராய் இருப்பதால் தாங்கள் காங்கிரசில் சேருவதில்லை என்று பம்பாய் வர்த்தகர்கள் சொல்லி அறிக்கை வெளியிட்டதற்கு பதிலாக நேரு பம்பாய்க்கு ஓடிவந்து வர்த்தகர்களைக் கண்டு தனது சமதர்மம் இன்னது என்று சொல்லி வர்த்தகர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதாவது தனது சமதர்மமானது ஒரு தேசத்தாரையோ, ஒரு சமூகத்தாரையோ, ஒரு கோஷ்டியாரையோ எவ்வித நிர்ப்பந்தமும் செய்வதல்ல வென்றும், ஆனால் நாளாவட்டத்தில் தமது அபிப்பிராயம் பொது ஜனங்களிடை பரவுமாறு செய்யலாம் என்று நம்பி இருப்பதுதான் என்றும் சொல்லி இருக்கிறார். மற்றும் ரகசியமாய் அவர்களுடன் பேசி ஏதேதோ வாக்குக் கொடுத்து இருக்கிறார். (21-5-36 தமிழ்நாடு முதல் பக்கம் 2, 3 கலம்) இதுதான் ஜவஹர்லால் சமதர்மமாகும். இதை அறியாமல் அனுபவமற்ற வாலிபர்கள் ஜவஹர்லாலை சமதர்ம வீரர் என்று கூப்பாடு போடுவதன் மர்மம் முட்டாள்தனமே யாகும். குடி அரசு துணைத் தலையங்கம் 31.05.1936

சத்தியமூர்த்தியும் சமதர்மமும்

சத்தியமூர்த்தியும் சமதர்மமும்

தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆனைமலை ஐரோப்பியர் சங்கத்தில் ஐரோப்பியர் முன்னிலையில் பேசும் போது “காங்கிரஸ் சமதர்மத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் சமதர்மத்துக்கு விரோதமானது, ஜவஹர்லாலை காங்கிரஸ் தலைவராக ஏற்றுக் கொண்டதானது அவருடைய தனிப்பட்ட முறையிலேயே ஒழிய, அவருடைய கொள்கைகளுக்காக அல்ல, சமதர்மம் பணக்காரர்களைப் பாதிக்கும், சமதர்மம் சமூக வேறுபாடுகளை ஒழித்துவிடும், ஏழைகளுக்கு எஜமானர்களாய் எவரும் இருக்க முடியாது, ஆதலால் காங்கிரஸ் சமதர்மத்தை ஆதரிக்காது, காங்கிரஸ் செல்வவான்களைக் காப்பாற்றும், வெள்ளைக்காரரோடு ராஜி செய்து கொள்ளும்” என்பதாக பேசி இருக்கிறார். இதை 27-5-36ந் தேதி தாருல் இஸ்லாம் பத்திரிகை 2ம் பக்கம் 5, 6வது கலத்தில் காணலாம். ஆகவே தமிழ்நாட்டு வாலிபர்களில் சிலர் காங்கிரசானது சமதர்மக் கொள்கையுடையதென்றும், சமூக வேற்றுமையை ஒழிக்கக்கூடிய தென்றும், சமதர்மக்காரரும் சமூக வேற்றுமையை ஒழிக்க வேண்டுமென்பவர்களும் காங்கிரசில் வந்து சேர வேண்டும் என்றும் சொல்லுவார்களேயானால் அவர்களை அறிஞர்கள் என்றோ யோக்கியர்கள் என்றோ எப்படி சொல்ல முடியும். தோழர் ஜவஹர்லாலை காங்கிரஸ்...

கொச்சி மதம் மகாநாடு

கொச்சி மதம் மகாநாடு

தலைவரவர்களே! தோழர்களே!! இன்று இங்கு கூட்டப்பட்டிருக்கும் மதம் மகாநாடு என்பதற்கு என்னையும் அபிப்பிராயம் கூறும்படி அழைத்திருக்கிறீர்கள். பல மதங்களைப் பற்றிய பல அபிப்பிராயக்காரர்கள் இப்போது இங்கு தங்கள் அபிப்பிராயங்களைச் சொல்லிவிட்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதத்தைப்பற்றி அதன் தலைவர்களால் உபதேசிக்கப்பட்ட தர்மங்களின் பெருமைகளை உங்களுக்கு விளக்கினார்கள். இந்த நிலையில் நான் பேசுவது உங்களுக்கு அவ்வளவு திருப்தி அளிக்குமோ என்று பயப்படுகிறேன். நான் எந்த மதத்தையும் ஆதரிப்பவனல்ல, எந்த மதத்தைப் பற்றியும் அதிகம் பாடுபட்டுப் படித்தவனுமல்ல. நான் எல்லா மதங்களையும், அந்தந்த மதக்காரர்களின் வாழ்க்கை நிலை மூலம் வெளியிலிருந்து அறிந்து அதைப்பற்றி மாத்திரமே அபிப்பிராயம் கொண்டிருக்கிறவன். இப்போது நமக்கு மதத்தைப்பற்றிய கவலையும், மத மகாநாடு கூட்டி யோசிக்க வேண்டிய அவசியமும் எதனால் ஏற்பட்டது? எதற்காக மதத்தைப் பற்றி பேசுகிறோம்? என்பவைகளை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். நாம் மத மகாநாட்டில் எந்த மதத்தில் மோக்ஷம் சமீபத்தில் இருக்கிறது என்றோ, எந்த மதத்தில் நமது...

வெற்றி! வெற்றி!!

வெற்றி! வெற்றி!!

வைக்கம் சத்தியாக்கிரகப்போர் கடைசியாக வெற்றி பெற்றுவிட்டது. திருவிதாங்கூரிலுள்ள எல்லாப் பொதுரஸ்தாக்களிலும், சத்திரங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் எல்லா ஜனங்களும் ஜாதி மத வித்தியாசமின்றிப் பிரவேசிக்கலாமென்று திருவிதாங்கூர் மகாராஜா உத்தரவு பிறப்பித்து விட்டதாகத் தெரிகிறது. சமீபகாலத்தில் திருவிதாங்கூரில் எத்தனையோ சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தேவதாசி ஏற்பாட்டை முதன் முதலில் ஒழித்த பெருமை திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கே உரியது. கப்பல் பிரயாணம் செய்த ஜாதி ஹிந்துக்களும் கூட ஆலயங்களில் பிரவேசிக்கக் கூடாது என்றிருந்த தடையும் நீக்கப்பட்டது. நாயர்களுக்கு மட்டும் பிரவேசனமளிக்கப்பட்டு வந்த சர்க்கார் பட்டாளத்தில் எல்லாச் சாதியாரும் சேர அனுமதியளிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அவர்ணர்களுக்கு சிவில் உரிமைகளை அளித்திருக்கும் திருவிதாங்கூர் மகாராஜாவைப் பாராட்டுகிறோம். குடி அரசு பெட்டிச் செய்தி 31.05.1936

ஈரோடு வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம்

ஈரோடு வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம்

தோழர்களே! ஈரோடு வர்த்தகக் குமாஸ்தாக்களின் சங்கத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு நிரம்பவுண்டு. நான் எனது 11வது வயதில் வியாபாரத் தொழிலுக்கு வந்தவன். எனது 42வது வயதுவரை வியாபாரியாகவே இருந்தேன். ஈரோடு வர்த்தக சங்கம் 1916ம் வருஷம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. அதற்கு முன்பு இருந்தே அதில் தலைவனாக பல வருஷம் இருந்தேன். கடைசியாக நான் முனிசிபல் சேர்மென் ஆனதும், காங்கிரசில் சேர்ந்ததும்தான் எனது வியாபாரம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். நான் ஏற்றுக்கொண்ட பொதுவேலைகளில் அதிகக் கவனம் செலுத்தியதாலேயே என் சொந்த வேலைகள் கவனிக்கப்படாமல் போய் விட்டன. ஆனபோதிலும் இந்த ஊர் வர்த்தகர்களிடமும் வர்த்தகக் குமாஸ்தாக்களிடமும் எனக்கு மிகவும் பற்றுதலும் மரியாதையும் உண்டு. நான் உள்ளுரிலேயே இருக்க முடியாததாலும் போதிய சாவகாசமில்லாததாலேயும் அடிக்கடி அவர்களுடன் கலந்து கொள்ள முடியாமல் போகிறது. என்றாலும் இன்று இந்த அதாவது ஈரோடு வர்த்தகர்களும், வர்த்தகக் குமாஸ்தாக்களும் கலந்த இந்தப் பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டதை நான்...

டாக்டர் அன்சாரி மரணம்

டாக்டர் அன்சாரி மரணம்

டாக்டர் அன்சாரி பிரிவு பொதுவாக தேசத்துக்கு பெரிய நஷ்டமே. சட்டமறுப்பு மூலம் சுயராஜ்யம் பெற முயல்வது முட்டாள்தனமென உணர்ந்த பின்னரும் நேர் வழியைப் பின்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் தயங்கிக் கொண்டிருந்தனர். தவறை ஒப்புக்கொள்வது அகௌரவமாகாதென உணர்ந்த டாக்டர் அன்சாரியோ துரபிமானத்துக்குக் கட்டுப்பட்டுப் பின்னடையவில்லை. தைரியமாக முன் வந்து சட்ட மறுப்புக் கொள்கையை மாற்றி சட்டசபை மூலம் வேலை செய்யப் பிரசாரம் செய்தார். காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு ஸ்தாபனத்துக்கும் அவரே காரணம். பார்லிமெண்டரி போர்டின் முதல் தலைவராயிருந்தவரும் அவரே. அசௌக்கியம் காரணமாக அரசியல் வாழ்வைத் துறந்ததாகக் கூறப்பட்டாலும் சுயநலக்காரர் சூழ்ச்சிகளினால் காங்கிரஸ் அலங்கோலப்பட்டு வருவதை யுணர்ந்தே அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க வேண்டும். வகுப்புத் தீர்ப்பு உடைபடாமலிருப்பதற்கும் அவரே காரணம். காங்கிரஸ் ஹிந்து மெம்பர்கள் வகுப்புத் தீர்ப்பை ஆதரிக்கா விட்டாலும் டாக்டர் அன்சாரிக்குப் பயந்தே நடுநிலைமை வகித்து வருகின்றனர். முஸ்லீம்கள் க்ஷேமத்தை அவர் கண்ணும் கருத்துமாய்க் காப்பாற்றி வந்தார். வகுப்புத் தீர்ப்பை ஹிந்து மகா...

தலைவர்களுக்கு புத்தி வருமா?

தலைவர்களுக்கு புத்தி வருமா?

சென்னை கார்ப்பரேஷன் கௌன்சிலர் தோழர் எம். சுந்தரம் நாயுடு ஜஸ்டிஸ் கட்சியை விட்டுப் பிரிந்து விட்டதாகத் தெரிய வருகிறது. பிரிவதற்குள்ள காரணத்தை விளக்கி அவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்தது முதல் நான் அதில் அங்கத்தினராக இருந்து வந்திருக்கிறேன். கௌன்சில் வேலையைத் தவிர்த்து அதை (கட்சியை) ஒழுங்குபடுத்துவதற்கோ நல்ல தேசீய வழிகளில் அதைத் திருப்புவதற்கோ அதன் தலைவர்கள் கொஞ்சம் கூட இஷ்டப்படுவதாகத் தோன்றவில்லை. நகரத்தில் ஆதரிப்பவர்களோடோ அல்லது மற்ற இடங்களில் தங்களை ஆதரிப்பவர்களோடோ அவர்கள் சம்பந்தம் ஒன்றும் வைத்துக் கொள்வதில்லை. முக்கியமான தீர்மானங்களைச் செய்வதிலும் அவர்கள் கலப்பதில்லை. ஒரு அரசியல் கட்சி முறையில் யதார்த்தமாக வேலை செய்வதை அது நிறுத்திவிட்டது”. தோழர் சுந்தரம் நாயுடு கூறியிருக்கும் மேல்காட்டிய அபிப்பிராயங்கள் முற்றிலும் சரியானவைகளாகும். ஜஸ்டிஸ் கட்சியின் தற்கால நிலைமையை படம் பிடித்ததுபோல் அவர் விளக்கிக் காட்டியிருக்கிறார். சென்ற அசம்பிளித் தேர்தல் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்காக அந்தரங்க சுத்தியாக...

சேலத்தில் சத்திய மூர்த்தியார் சவடால்

சேலத்தில் சத்திய மூர்த்தியார் சவடால்

  பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றித் தோழர் சத்திய மூர்த்தி சேலம் மகாநாட்டில் பேசிவருகையில் “பண்டித ஜவஹர்லால் சொல்லுவதை நான் ஆதாரமாய் எடுத்துக்கொள்ள முடியாது” “காந்தி அபிப்பிராயம் என்ன என்பது எனக்குத் தெரியாது” “ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்கு ஆக சிறை செல்லத் தயாராய் இருக்கிறேன்” “மந்திரி ஆகி மேட்டூர் தண்ணீரை சேலத்துக்கு கொண்டுவர வேண்டும்” என்று பேசி இருக்கிறார். இது 20536ம் தமிழ்நாடுவில் இருக்கிறது. ஜஸ்டிஸ் கட்சி ஒழிவதற்கு ஆக ஒரு பார்ப்பனர் சிறை செல்லுவதாய் இருந்தால் பார்ப்பனப்பூண்டு ஒழிவதற்கு ஆக எத்தனை பார்ப்பனரல்லாத மக்கள் சிறைச் செல்லத் தயாராய் இருப்பார்கள் என்பதை சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அறியார் போலும். பார்ப்பன ஆதிக்கமானது மனித சமூகத்துக்கு சிறப்பாக பார்ப்பன ரல்லாத சமூகத்துக்கு செய்துவந்த கொடுமைக்கும் துரோகத்துக்கும் நிவர்த்திக்காக ஆயிரக்கணக்கான பார்ப்பன மக்கள் ஜெயிலுக்குப் போவது மாத்திரமல்லாமல் தூக்கு மேடைக்கு போனாலும் தகும் என்றும் தகுதியான காரியம் என்றும் சொல்லலாம். ஆனால் பார்ப்பனரல்லாத சமூகம்...

சேலம் காலித்தனம்

சேலம் காலித்தனம்

சேலத்தில் 18536ந் தேதியில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் சில காங்கிரஸ் தொண்டர்கள் ஜஸ்டிஸ் கட்சியையும், சுயமரியாதைக் கட்சியையும் ஈனத்தனமாய் வைது பிரசங்கம் செய்ததை சுயமரியாதைக்காரர்கள் பொறுமையுடன் கேட்டுக் கொண்டு நின்றிருக்கிறார்கள். அதற்கு காரணம் அத்தொண்டர்கள் மீது குற்றமில்லை என்றும், அவர்களை கூலி கொடுத்து ஏவி விட்டவர்கள் காரணம் என்றும், இந்தியாவின் வறுமை நிலைமையானது இம்மாதிரி இழிவான தொழிலாவது செய்து வயிறு வளர்க்க வேண்டி இருப்பதால் அதைப் பொறுத்துத்தான் ஆக வேண்டும் என்றும் கருதியிருந்ததேயாகும் என்று தெரிகிறது. ஆனால் அதே மாதிரி தன்மையில் தோழர் சத்தியமூர்த்தி அவர்களும் பேசியதால் அவரை சில தோழர்கள் கேள்வி கேட்க வேண்டியவர்களானார்கள். காரணம் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்றும், அதன் தலைவர்கள் தேசத் துரோகிகள் என்றும் மற்றும் கேவலமாகவும் பேசியதேயாகும். இந்நிலைமையில் தோழர் சத்தியமூர்த்தியோ அல்லது அவர்களது கூலிகளோ ஆண்மையும், சுயமரியாதையும், வீரமும் உடையவர்களானால் கேள்விகளுக்கு தக்க விடையளித்திருக்க வேண்டும். விடையளிக்காவிட்டால் அம்மாதிரியான பேச்சுக்களை பேசாமலாவதிருந்திருக்க வேண்டும்....