பரிதாபம்

தோழர் சௌந்திரபாண்டியன் அவர்களின் இரண்டாவது மகன் 14 வயதுள்ள ராஜசேகரன் கொடைக்கானல் ஏரியில் விளையாடுகையில் தவறி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான் என்று கேட்டு விசனிக்கிறோம்.

ராஜசேகரன் தோழர் சௌந்திரபாண்டியன் அவர்களின் 4 புதல்வர்களிலும் இரண்டாவதவன். ஆனாலும் மிகவும் கெட்டிக்காரனும், புத்திசாலியும், நல்ல குணமும், ஜனங்களிடம் குஷாலாய் பழகும் குணமும் உடைய அபுரூபன். அப்படிப்பட்ட அவனைப் பறிகொடுத்த தாயார், தந்தையர், சுற்றத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் துக்கமும், விசனமும், பரிதாபமும் இல்லாமல் இருக்க முடியாது தான். ஆனால் துக்கமும் விசனமும் இருந்து என்ன பயன்? யாரால் இனி என்ன செய்யமுடியும்? துக்கப்படுவதில் பயனில்லை என்று சொல்லி தேற்ற முயற்சிக்கத்தான் மற்றவர்களால் முடியும். இயற்கையை நன்றாய் உணர்ந்த தோழர் பாண்டியன் குடும்பத்தாருக்கு எவருடைய தேறுதலும் அவசியமிருக்காது என்றே கருதுகிறோம்.

குடி அரசு இரங்கற் செய்தி 31.05.1936

You may also like...