வெற்றி! வெற்றி!!

வைக்கம் சத்தியாக்கிரகப்போர் கடைசியாக வெற்றி பெற்றுவிட்டது. திருவிதாங்கூரிலுள்ள எல்லாப் பொதுரஸ்தாக்களிலும், சத்திரங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் எல்லா ஜனங்களும் ஜாதி மத வித்தியாசமின்றிப் பிரவேசிக்கலாமென்று திருவிதாங்கூர் மகாராஜா உத்தரவு பிறப்பித்து விட்டதாகத் தெரிகிறது. சமீபகாலத்தில் திருவிதாங்கூரில் எத்தனையோ சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தேவதாசி ஏற்பாட்டை முதன் முதலில் ஒழித்த பெருமை திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கே உரியது. கப்பல் பிரயாணம் செய்த ஜாதி ஹிந்துக்களும் கூட ஆலயங்களில் பிரவேசிக்கக் கூடாது என்றிருந்த தடையும் நீக்கப்பட்டது. நாயர்களுக்கு மட்டும் பிரவேசனமளிக்கப்பட்டு வந்த சர்க்கார் பட்டாளத்தில் எல்லாச் சாதியாரும் சேர அனுமதியளிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அவர்ணர்களுக்கு சிவில் உரிமைகளை அளித்திருக்கும் திருவிதாங்கூர் மகாராஜாவைப் பாராட்டுகிறோம்.

குடி அரசு பெட்டிச் செய்தி 31.05.1936

You may also like...