Tagged: பாலமலை பயிலரங்கம்

பாலமலை ‘பெரியாரியல் பயிலரங்க’ மாட்சி

பாலமலை ‘பெரியாரியல் பயிலரங்க’ மாட்சி

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பாலமலையில் மே 17, 18 தேதிகளில் நடந்த பயிலரங்கம் மிகச் சிறப்பாகவும் கருத்துச் செறிவாகவும் நடந்தது. மேட்டூரில் மலை அடிவாரத்தில் இருக்கும் காவலாண்டியூர் கழகத் தோழர்கள் மிகச் சிறப்பாக இந்த பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். காவலாண்டியூரிலிருந்து பாலமலை என்ற பழங்குடி மக்கள் வாழும் மலை கிராமத்துக்குச் செல்ல மலைப் பாதைகள் வழியே பயணிக்க வேண்டும். இயற்கை வளம் சூழ்ந்த அந்த அமைதியான கிராமத்தில் கிறிஸ்துவ நிறுவனம் பயிற்சிக்கான இடத்தை அளித்தது. கிராம எல்லையில் ஊர் மக்கள் கழகத் தலைவர் பொதுச் செயலாளருக்கு ஆடைகள் போர்த்தி வரவேற்றனர். பயிற்சியரங்கம் வந்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் பழங்குடி மக்களின் தலைவர்கள் கழகத் தலைவர் பொதுச் செயலாளருக்கு ஆடைகள் போர்த்தி சிறப்பித்தனர். பயிலரங்கத்தின் முதல் நிகழ்வாக மருத்துவர் எழிலன் காணொலி காட்சிகளைப் பயன்படுத்தி “அறிவியல் சமுதாய உருவாக்கத்தை நோக்கி” என்ற தலைப்பில் 3 மணி நேரம் வகுப்பு...

பாலமலை பெரியாரியல் பயிலரங்கம்

ஏராளமான புதிய தோழர்கள் உற்சாகத்துடன் பங்கேற்க,சிறப்புடன் நடைபெற்றது ! பல்வேறு தலைப்பிலான வகுப்புகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2 நாட்கள் நடைபெற்றது பயிலரங்கம் ! சேலம் மாவட்டம், காவலாண்டியூர், பாலமலையில் கடந்த 17.05.2016 மற்றும் 18.05.2016 அன்று சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 2 நாள் பெரியாரியல் பயிலரங்கு நடைபெற்றது.120 தோழர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றனர். முதல் நாள் நிகழ்வாக 17.05.2016 அன்று காலை 10 மணிக்கு பயிலரங்கம் குறித்த அறிமுகத்துடன் பயிலரங்கு ஆரம்பமானது. காலை 11.00 மணிக்கு முதல் வகுப்பாக ”அறிவியல் சமுதாய உருவாக்கத்தை நோக்கி” எனும் தலைப்பில் மருத்துவர் எழிலன் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.ஜோதிடம்,சாஸ்திரங்களின் பொய்மைகள் குறித்து காணொலிக் காட்சியுடன் விரிவாக விளக்கினார். உயிர்கள் உருவாக்கம் குறித்த மெய்ப்பிக்கப்பட்ட அறிவியல் கருத்துக்களை பகிர்ந்த மருத்துவர் எழிலன் அவர்களின் வகுப்பு மதியம் 2.30 வரை நீடித்தது. தோழர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் வகுப்பைக் கவனித்தனர். மருத்துவர் எழிலன் அவர்களின்...