Category: பெரியார் முழக்கம் 2018

பொள்ளாச்சியில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம்

பொள்ளாச்சியில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம்

பொள்ளாச்சி பகுதி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சை கவுண்டன்புதூரில் அருள்ஜோதி உணவு விடுதி அரங்கில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் ஜூலை 15, 2018 அன்று நடந்தது. 84 பேர் பயிலரங்கில் பங்கேற்றார்கள். இதில் 10 பேர் பெண்கள். பயிற்சியாளர்கள் அனைவரும் புதிதாக பெரியாரியலை நோக்கி வரும் இளைஞர்கள். பயிலரங்கைத் தொடங்கி வைத்து, மூத்த கழகத் தோழர் மடத்துக்குளம் மோகன் உரையாற்றினார். தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘திராவிடர் இயக்க வரலாறு’ என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார். 2 மணி நேரம் வகுப்பு நடந்தது. மதிய உணவைத் தொடர்ந்து கழகப் பொறுப்பாளர் வெள்ளியங்கிரி, ‘பயிற்சி முகாம் நோக்கம்’ குறித்து விரிவாகப் பேசினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்தார். சுல்லிமேடு காடுப் பகுதியிலிருந்து பெரியாரியல் நோக்கி வந்துள்ள பழங்குடி சமூகத்தைச் சார்ந்த...

ஒரே மேடையில் பெரியார்-காமராசர் பங்கேற்ற விழா

ஒரே மேடையில் பெரியார்-காமராசர் பங்கேற்ற விழா

“நாயக்கர் அடிக்கடி என்னைப் புகழ்ந்து  பேச வேண்டாம் என்று சொல்லுங்கள்.  அதனால் பல பேர்கள் எனக்கு எதிரிகள் ஆகின்றனர் என்று நண்பர் திரு.வி.க.விடம் ஓமந்தூரார் கூறி அனுப்பினார்.” 1955ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் வரதராஜூலு நாயுடு பிறந்த நாள் விழாவில் பெரியாரும் முதலமைச்சர் காமராசரும் ஒரே மேடையில்  பேசினார்கள். தமிழர் சமுதாயத்தின் உரிமைக்கும் விடுதலைக்கும் தன் ‘சுயத்தை’யே இழந்து உழைத்தவர் பெரியார் என்பதை வெளிப்படுத்தும் ஆழமான உரையை காமராசர் பிறந்தநாளை யொட்டி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. தலைவர் காமராசர் என்னைப் பற்றிக் குறிப்பிட்டார் அதற்கு எனது நன்றி. திரு. காம ராசரிடம் நான்அன்பு கொண்டு, என்னால் ஆன வழிகளில் ஆதரவு கொடுத்து வருகிறேன். காரணம், அவர் சில விஷயங்களில் தமிழன் என்கிற உணர்ச்சியோடு ஆட்சி நடத்துகின்றார். அதனால் அவருக்கு, பொறாமை காரணமாகக் காங்கிரஸ் வட்டாரத்திலும், வகுப்பு காரணமாக இரண்டொரு வகுப்பாரிடையிலும் சில எதிரிகள் இருந்துகொண்டு அவருக்குத்  தொல்லை கொடுத்து...

சிறு, குறு தொழில்களை நசுக்கிய ‘ஜிஎஸ்டி’ வரி

சிறு, குறு தொழில்களை நசுக்கிய ‘ஜிஎஸ்டி’ வரி

மோடியால் புதியதாக பிரசவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யால் இன்று தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான பொருட்களுக்கு 18ரூ முதல் 28ரூ வரி விதித்ததாகும், இதனால் தொழில் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. தொழில் நகரமான கோவையில், சிறு, குறு தொழில்களை நடத்திவந்த முதலாளிகள், தொழிற்சாலைகளை மூடி வேலையில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 20 பேருக்கு மேல் வேலையில் அமர்த்தி நிறுவனம் நடத்தி வந்த கிருஷ்ணகுமார் என்பவர் தற்போது சாலை ஓரத்தில் இட்லி விற்று கொண்டு இருக்கிறார். இதே போல் எஞ்சினியரிங் கம்பெனி வைத்து நடத்தி வந்த பாண்டியன் என்பவர், தற்போது ஒரு எஞ்சினியரிங் கம்பெனியில் எந்திரத்தை இயக்கும் கூலித்தொழிலாளியாக தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். ஜி.எஸ்.டி-யால்...

அடுக்கடுக்கான முறைகேடுகள் : நீட் தேர்வு பாடங்களில் 0, -1 மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் மாணவர்கள்

அடுக்கடுக்கான முறைகேடுகள் : நீட் தேர்வு பாடங்களில் 0, -1 மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் மாணவர்கள்

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் 0, -1 போன்ற மதிப்பெண்களை பெற்றிருந்த போதும் அவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகின்றனர். மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மொத்தமாக 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படுகிறது. இயற்பியல், வேதியல், உயிரியல் போன்ற பாடங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்ணை ஒவ்வொரு ஆண்டும் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ முடிவு செய்கிறது. இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் 0, -1 மதிப்பெண்களை பெற்றிருந்த மாணவர்கள் கூட பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லுரிகளில் மருத்துவம் பயின்று வருகின்றனர். தகுதி மதிப்பெண்களை பெற்றிருந்தால் போதும், தனித்தனியாக பாட வாரியாக தேர்ச்சி பெற வேண்டியதில்லை...

“தி.வி.க. பெரியார் செயலி” அறிமுகம் :  திருப்பூரில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

“தி.வி.க. பெரியார் செயலி” அறிமுகம் : திருப்பூரில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் காமராசர் 116ஆவது பிறந்த நாள் விழா, ஜூலை 15, 2018 அன்று திருப்பூர் இராயபுரம் திருவள்ளுவர் வீதியில் சிறப்புடன் நடந்தது. காலை முதல் பகுதி வாழ் இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாலைப் பொதுக் கூட்டம், ‘நிமிர்வு’ கலைக் குழுவின் பறை இசை நிகழ்வோடு தொடங்கியது. 20க்கும் மேற்பட்ட பெண், ஆண் கலைஞர்கள் பறை வரலாற்று விளக்கங்களோடு பறையிசை நிகழ்வை நடத்தியது, மக்களைப் பெரிதும் கவர்ந்தது. க. கருணாநிதி தலைமையில் சு. நீதியரசன் வரவேற்புரை யோடு பொதுக் கூட்டம் தொடங்கியது. செல்லதுரை (தே.மு.தி.க.), இராமகிருஷ்ணன், ஆசிரியர் சிவகாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் உரைகளைத் தொடர்ந்து விடுதலை இராசேந்திரன், கொளத்தூர் மணி உரை யாற்றினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பகுதித் தோழர்கள் சரவணன் (தி.மு.க.), சரவணன் (ம.தி.மு.க.), சாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு பேருதவி புரிந்தனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின்...

பார்வையற்ற சிந்தனையாளர்களின் சாதனை பெரியார் பேச்சு – எழுத்துக்கள் –  86 மணி நேர – ஒலி புத்தகமாகியது

பார்வையற்ற சிந்தனையாளர்களின் சாதனை பெரியார் பேச்சு – எழுத்துக்கள் – 86 மணி நேர – ஒலி புத்தகமாகியது

‘விடியல் பதிப்பகம்’, மலிவுப் பதிப்பாக வெளியிட்ட பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட நூல் ‘பெரியார் – இன்றும், என்றும்’. 1000 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை மலிவுப் பதிப்பாக ரூ.300க்கு ‘விடியல் பதிப்பகம்’ வெளியிட்டது. பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் இந்த நூலை வாங்கினார்கள். இந்த நூலில் பெரியார் கட்டுரைகளை பார்வையற்றோர் அறியும்  நோக்கத்தில் ஒலி வடிவில் பதிவேற்றப்பட்டு ஒலிப் புத்தகமாக (குறுவட்டு) கடந்த ஜூலை 14ஆம் தேதி பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை சார்பில் வெளியிடப் பட்டது. 86 மணி நேரம் பெரியார் எழுத்துகள் குரலாக ஒலிக்கிறது. பெண்கள் பலரும் தாமாக ஆர்வத்துடன் முன் வந்து பெரியார் எழுத்துகளை தங்கள் குரலில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது. சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி அரங்கில் காலை 10 மணியளவில் நடந்த இந்த நிகழ்வில் பார்வையற்ற தோழர்களோடு 300 கல்லூரி மாணவிகளும் பங்கேற்றனர். கல்லூரி முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொண்டனர். ‘ஒலிப்பதிவு குறுவட்டு’வுக்கு...

அமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல!

அமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல!

1989 – அமெரிக்க தேசியக் கொடியை, எரிப்பது முதலான அவமரியாதை செய்யும் நடவடிக்கைகளைக் குற்றமாகக் கருதமுடியாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1984இல்டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற ஒருபோராட்டத்தில் அமெரிக்க தேசியக்கொடிஎரிக்கப்பட்டது. போராட்டத்தில் யாருக்கும்காயம்கூட ஏற்படாவிட்டாலும், தேசியக்கொடியை அவமரியாதை செய்ததற்காக, எரித்தவருக்கு இரண்டாயிரம் டாலர் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டன. இதை எதிர்த்தஅவரது மேல்முறையீடுகளின் தொடர்ச்சியாகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள, (ஒருங்கிணைதல், அரசுக்கு எதிராகப் போராடுதல் முதலானவற்றுக்கான) பேச்சுரிமைக்கு எதிரானது இத் தண்டனை என்று கூறிய இத்தீர்ப்பு, கொடி தொடர்பாக 50இல் 48 மாநிலங்களில் அப்போது இருந்த சட்டங்களைச் செல்லாததாக்கியது. இதைத் தொடர்ந்து, அவ்வாண்டிலேயே கொடி பாதுகாப்புச் சட்டம் என்பது இயற்றப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டிலேயே அதையும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் இதுதொடர்பாகக் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் தோற்றுப்போயின.  கொடிஎரிப்பு என்ற சொற்றொடரே, அரசுக்கெதிரான போராட்டத்தைக்குறிப்பதாக உலகம் முழுவதும் இருந்தாலும்,...

உருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்

உருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்

உருவாகாத ரிலையன்ஸ் கல்வி நிறுவனத்துக்கு,  ‘புகழ்பெற்ற கல்வி நிறுவனத்துக்கான’ தகுதியாம். இந்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் இந்தியாவி லுள்ள ஆறு உயர்கல்வி நிறுவனங்கள், உலக கல்வி தரத்துக்கு இணையான இந்தியாவின் ‘புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாக (Institutions of Eminence)’ அறிவிக்கப்பட்டன. இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (டெல்லி, மும்பை), இந்திய அறிவியல் கழகம் (பெங்களுர்), பிலானியிலுள்ள பிர்லா தொழில்நுட்பக் கழகம் (1964), மணிபால் உயர்கல்வி அகாடமி (1953) என குறைந்தபட்சம் ஐம்பது ஆண்டு கால உயர்கல்வி பயிற்சி அனுபவ முடைய கல்வி நிறுவனங்களோடு, இன்னும் உருவாக்கப்படாத ரிலையன்ஸ் ஜியோ கல்வி நிறுவனத் துக்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவன அந்தஸ்தை இணைத்து வழங்கி யிருக்கிறது இந்திய அரசு. கடந்த 2016ம் ஆண்டைய பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி பத்து அரசு கல்வி நிறுவங்கள், பத்து தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவைகளுக்கு...

கோலாலம்பூரில் பகுத்தறிவு கருத்தரங்கு

கோலாலம்பூரில் பகுத்தறிவு கருத்தரங்கு

மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள பெரியார் அரங்கில் 8.7.2018 ஞாயிறு மாலை மூன்று மணி அளவில் ‘பகுத்தலும்-புகுத்தலும்’ என்ற தலைப்பில் மாண வர்கள் மற்றும் இளை ஞர்களுக்கான கட்டண மில்லா கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கருத்தரங்கில் வரவேற்புரை வழங்கினார், நெறியாளர் சி.மு.விந்தைக்குமரன். எப்.காந்தராஜ் (மலேசியத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர்) தொடக்க உரை நிகழ்த்தினார்.  கெ.வாசு (துணை தலைவர், மலேசியத் தமிழர் தன்மான இயக்கம்) தலைமையேற்றார். மரு.கிருட்டிணன், பாரி சுந்தரம், செம்பியன், பட்டுக்கோட்டை கவிமணி ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினார்கள். மு.முகிலன் நன்றி உரை நிகழ்த்தினார்.  இதுபோன்ற கருத்தரங்கம் நாடளாவிய அளவில் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று  தொகுப்புரை வழங்கிய, மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவர் பெரு. அ. தமிழ்மணி கூறினார். பெரியார் முழக்கம் 12072018 இதழ்

நாமக்கல் தொடர்வண்டி மறியலில் கழகம் பங்கேற்பு

நாமக்கல் தொடர்வண்டி மறியலில் கழகம் பங்கேற்பு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை செயலிழக்கச் செய்யும் தீர்ப்பைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைத்து, ஜூலை 2 ஆம் தேதி திங்கள் கிழமை  நடத்திய ரயில் மறியல் போராட்டம், நாமக்கல் ரயில் நிலையத்தில் மதியம் 12 மணிக்கு மேல் நடைபெற்றது. இதில், திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி, பள்ளிபாளையம் நகர தலைவர் பிரகாசு, பள்ளாளையம் நகர அமைப்பாளர் தியாகு மற்றும் பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 12072018 இதழ்

பார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி

பார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி

பார்ப்பன அதிகாரிகள் நிர்வாக ஒழுங்கீனம் – ஊழல்களால் நலிவடையும் பொதுத் துறை வங்கிகளைக் காப்பாற்ற ஏழை எளிய மக்கள் முதலீடு செய்யும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (எல்.அய்.சி.) குலைக்கும் முயற்சிகளில் நடுவண் ஆட்சி இறங்கியுள்ளது. நாட்டின் நிதி நிலைமை மோசமாகும்போதும், பங்குச்சந்தை பாதிப்பு அடையும் போதும், எல்ஜசி நிறுவனத்தின் அதீதமுதலீடு மூலம், அந்த பாதிப்பு சரிக்கட்டப்பட்டு வருகிறது. இது நீண்டகாலமாக நடந்து வருகிறது. ஆனால், மோடிஆட்சியில் இது அதிகமாகி இருக்கிறது.அந்த வகையில், தற்போது குடைசாய்ந்து நிற்கும் ஐடிபிஐ வங்கியின் 43 சதவிகித பங்குகளையும், பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியிடம் தள்ளிவிடும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. அதாவது, எல்ஐசியிடம் இருந்து ரூ. 13 ஆயிரம் கோடியை பிடுங்கி, ஐடிபிஐ வங்கிக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. இது தற்போது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சாமானியர்கள், தங்களின் குடும்பத் தைக் காப்பாற்ற மாதந்தோறும் நூறும், ஆயிரமுமாய் எல்ஐசி-யின் காப்பீட்டுத் திட்டங்களில்...

கவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது? சங்பரிவார் கும்பல் சதி அம்பலமானது

கவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது? சங்பரிவார் கும்பல் சதி அம்பலமானது

கர்நாடக இதழியலாளரும் முற்போக்கு சிந்தனையாளரும் இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் 05.09.2017 அன்று படுகொலை செய்யப்பட்டார். சில சங்பரிவார ஆதரவு இதழ்கள் இது தனிப்பட்ட விரோதம்காரணமாக நடந்த கொலை என்றனர். இன்னும் சிலர் இது நக்சலைட்டுகளின் செயல் என திசைத் திருப்ப முயன்றனர்.தற்பொழுது 6 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். அனைவரும் சங்பரிவார அமைப்பினர். எனினும் இவர்கள் சங்பரிவாரத்தின் முக்கிய அமைப்புகளுடன் கொண்டிருக்கும் தொடர்புகளை மிகவும் திட்டமிட்டு மறைப்பது மட்டுமல்ல; கொலை செய்ய இவர்கள் தீட்டிய திட்டம் எவ்வளவு நுணுக்கமானது என்பதை அறியும் வகையில் சில செய்திகள் வெளியாகியுள்ளன. கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கீழ்கண்ட ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: படுகொலையை அரங்கேற்றியவர்கள் : பரசுராம் (சிறீராம் சேனா), வாக்மோர், நவீன் குமார் (இந்து யுவசேனா ஸ்தாபகர்), சுஜித் குமார் (இந்து ஜனசகுர்த்தி சமிதி), அமோல் காலே (சனாதன சன்ஸ்தா), மனோகர் (சிறீராம் சேனா எடாவே), பிரதீப் (சனாதன சன்ஸ்தா) காவல்...

இராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்

இராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்

இயக்குனர் ரஞ்சித் உருவாக்கிய ‘காலா’ திரைப்படம் பம்பாய் ‘சேரிப் பகுதி’ மக்களின் குடியிருப்பையும் நிலங்களையும் பெரும் தொழில் நிறுவனம் அரசியல் அதிகாரத்தோடு கைப்பற்றுவதை எதிர்த்து மக்கள் நடக்கும் போராட்டத்தை ‘இராம-இராவண’ப் போராட் டத்தின் பின்புலத்தில் சித்தரித்தது. பெரும் முதலாளி இராமர் பஜனை செய்வார்; மக்களுக்காகப் போராடும் ‘காலா’, ‘இராவண காவியம்’ பேசுவார். தமிழ் ஊடகங்கள் இப் பிரச்சினையை விவாதத்துக்குக் கொண்டு வரா மல் பதுங்கி விட்டாலும் பல தெலுங்கு தொலைக்காட்சிகளில் இது குறித்து விவாதங்கள் நடந்தன. அண்மைக்காலமாக கடவுள் மதத்தை மறுக்கும் நாத்திகராக தன்னைத் துணிவுடன் வெளிப்படுத்தி வரும் தெலுங்கு ஆவணப்பட இயக்குனர் ‘கத்தி’ மகேஷ், இந்த விவாதங்களில் பங்கேற்று ‘இராம’னுக்கு எதிராகப் பேசினார். சங்பரிவார் அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் தந்தன. உடனே அய்தராபாத் காவல்துறை பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. கடந்த 2018 ஜூலை 8ஆம் தேதி இரவு அவரை கைது செய்ததோடு 6 மாதங்களுக்கு...

தலையங்கம் ‘டிரம்ப்’பின் பார்ப்பனியம்

தலையங்கம் ‘டிரம்ப்’பின் பார்ப்பனியம்

அமெரிக்காவில் கறுப்பர்கள், ஆசியர்கள், தென் அமெரிக்காவிலிருந்து குடிபெயர்ந்த ‘ஹிஸ்பெனிக்ஸ்’ எனும் பிரிவினருக்கு தனியார் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் ‘பாகுபாடு’ காட்டாமல், பணி உறுதியாக்கம் (ஹககசைஅயவiஎந ஹஉவiடிn) செய்யும் சட்டம் நீண்டகாலமாக அமுலில் இருந்து வருகிறது. இப்போது நிறவெறியுடன் நடக்கும் ‘டிரம்ப்’ ஆட்சி வெள்ளை நிறவெறியர்களின் அழுத்தத்தை ஏற்று, ‘பாகுபாடு ஒழிப்பு’ சட்டத்தைக் கைவிடும் முடிவுக்கு வந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிர்ச்சி தரும் இந்த அறிவிப்பை டிரம்ப் நிர்வாகம் கடந்த ஜூலை 3ஆம் தேதி அறிவித்துள்ளது. மைனாரிட்டி மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் ‘உறுதியாக்கும் செயல்பாடு’ என்ற பெயரில் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கும் சட்டம் 1967ஆம் ஆண்டு முதல் அங்கே அமுலில் இருந்து வருகிறது. கருப்பின மக்களுக்கு காலங்காலமாக இழைக்கப்பட்டு வந்த அநீதியை அகற்றுவதற்காக 1967இல் நியமிக்கப்பட்ட ‘ஜெர்னர் ஆணையம்’ அமெரிக்கா ஒரு தேசமாக உருவெடுக்க வேண்டுமானால் இந்த ‘பாகுபாடுகள்’ ஒழிக்கப்பட்டு, அவர்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதனடிப்படையில்...

‘சி.பி.எஸ்.இ.’ – ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி

‘சி.பி.எஸ்.இ.’ – ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி

நீட் தேர்வை நத்திய ‘மனுநீதி’ பார்ப்பன ஆணையமான மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மதுரை உயர்நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கருணை மதிப்பெண்கள் சேர்க்கப் பட்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவி களுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நாடு முழுவதும் கடந்த மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் அளிக்கப்பட்டு, அதில்...

தமிழக மசோதா காலாவதி…?

தமிழக மசோதா காலாவதி…?

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக,  தேசிய மருத்துவ ஆணையம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. இந்த ஆணையம் உருவாக்கப்பட்டால், நீட் தேர்வு சட்டபூர்வமாகிவிடும், மருத்துவப் படிப்பை முடித்தவர்கள், அகில இந்திய அளவில் நடக்கும் உரிமத்தேர்வு ஒன்றை எழுதித் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவராகப் பணியாற்ற முடியும். இது நடைமுறைக்கு வரும்வரை, எம்.பி.பி.எஸ். படிப்பின் இறுதியாண்டுத் தேர்வையே அகில இந்திய உரிமத் தேர்வாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி தமிழக சட்டமன்றம் ஒருமனதாக உருவாக்கி அனுப்பிய இரண்டு சட்டமசோதாக்களை ஒரு ஆண்டுக்கும் மேலாக உள்துறை அமைச்சகம் கிடப்பில் போட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நிறைவேற்றப்படுமானால் இந்த இரண்டு மசோதாக்களும் காலாவதியாகிவிடும். அதற்காகவே, உள்துறை அமைச்சகம் காலதாமதம் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள். பெரியார் முழக்கம் 12072018 இதழ்

நீட் உருவாக்கும் அநீதிகள்தான் என்ன?

நீட் உருவாக்கும் அநீதிகள்தான் என்ன?

சென்ற ஆண்டு அனிதா என்றால் இந்த ஆண்டு பிரதீபா.தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் நீட் தேர்வு முடிவுகளை யொட்டி, தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. நீட் தேர்வு என்பது உண்மையில் தகுதியை உறுதிசெய்கிறதா, தாழ்வு மனப்பான்மையையும் ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கிறதா? இந்த ஆண்டு, நாடு முழுவதும் 12,69,922 மாணவர்கள் நீட் தேர்வெழுதினார்கள். 7,14,562 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தமிழகத்தில் தேர்வெழுதிய  1,14,602 பேரில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றவர்கள்.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,337 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தமிழ் வழியில் தேர்வு எழுதிய 24,720 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 460 பேர். நீட் தேர்வைப் பொறுத்தவரை தேர்ச்சி பெற்ற எல்லோருக்கும் இடம் கிடைக்கப் போவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,900 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.  இவற்றில் 455 இடங்கள் மத்தியத் தொகுப்புக்குத் தரப்பட்டுவிடும். மீதமிருக்கும் 2445 இடங்களும் தமிழக...

உலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’

உலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’

பார்ப்பனர்கள் விளையாட்டாக மாறிவிட்ட ‘கிரிக்கெட்’ மட்டுமே இங்கு பிரபலமாக்கப்பட்டதால் கடும் உடல் சக்தியைப் பயன்படுத்தக் கூடிய ஒருவரை ஒருவர் தொட்டு முட்டி மோதி விளையாடக் கூடிய ‘கால்பந்து’ விளையாட்டுகள் ‘புண்ணிய பூமி’யில் ‘சூத்திரர்’ விளையாட்டாகிவிட்டன. இரஷ்யாவில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியில் இந்தியாவில் ஒரு மாவட்டத்தைவிட சிறிய பரப்பளவு கொண்ட அய்ஸ்லாந்து, துனிஷியா, பனாமா, செனகல் போன்ற நாடுகள் எல்லாம் பங்கேற்கும்போது இந்தியா வேடிக்கை பார்க்கும் நாடாகவே இருக்கிறது. 2002இல் உலகப் போட்டியில் இந்தியா பங்கேற்கும் என்றார்கள். 2010இல் உலகப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ‘டி சர்ட்டுகள்’ மட்டுமே தயாரிக்கப்பட்டன. இப்போது 2026இல் பங்கேற்கும் என்கிறார்கள். இதற்கான தயாரிப்புகள் ஏதேனும் நடக்கிறதா? எதுவுமே இல்லை. உள் நாட்டில் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் பெரிய அளவில் நடத்தப்படுவது இல்லை. ‘கால்பந்து’ கிளப் ஏதும் கிடையாது. பார்ப்பன உயர்ஜாதியினர் கடுமையாக உடல் சக்தியைப் பயன்படுத்தக் கூடிய இந்த விளையாட்டைவிட ஒருவருக்கொருவர் தொட வேண்டிய தேவை இல்லாமல்...

கோவையில் இரயில் மறியல்

கோவையில் இரயில் மறியல்

“தீண்டாமை ஒழிப் புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்திட்ட, தீர்ப்பைத் திரும்பப் பெற்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை 9ஆவது அட்டவணை யில் இணைத்திடு” என்ற கோரிக்கையை வலி யுறுத்தி 2.7.2018 அன்று தமிழகம் முழுவதும் இரயில் மறியல் நடத்து வதென முடிவு செய்யப் பட்டு அதற்காக மக்களை திரட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 26, 27 இரு தினங்கள் வாகனம் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. இராம கிருஷ்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இரயில் நிலையம் முன் திரண்டனர். காவல்துறைக்கும் தோழர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கே அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் 378பேர் கைதாயினர்.  கு. இராமகிருஷ்ணன் (பொதுச் செயலாளர், த.பெ.தி.க.), யு. சிவஞானம் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), சிறுத்தைச் செல்வன் (தமிழ்ப் புலிகள்), சுசி கலையரசன் (வி.சி.க.), நடராசன், முன்னாள் எம்.பி....

`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!’

`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!’

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திரும்பப் பெறக் கோரி சேலம் இரயில்வே சந்திப்பு முன்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், அம்பேத்கர் மக்கள் இயக்கம், ஆதித் தமிழர் பேரவை, அம்பேத்கர் இந்தியக் குடியரசுக் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். தலைமை தாங்கிப் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் வைத்த வேண்டுகோள் சரியா தவறா என்று தீர்ப்பளிக்க வேண்டிய நீதிமன்றம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக் குள்ளேயே நுழைந்து அதை நீர்த்துப் போகச் செய்தது.  அக்கறை இல்லாமல் வழக்கை நடத்துவதாலும், சாட்சிகள் மிரட்டப்படுவதாரும் இந்தச் சட்டம் முழுமையாகச் செயல்படுத்த முடிய வில்லை என்கிறார்கள். ஆனால், இந்த வன்கொடுமை சட்டத்தைக்...

சென்னையில் நிலத்தடி நீர் வற்றிவிடும் ஆபத்து

சென்னையில் நிலத்தடி நீர் வற்றிவிடும் ஆபத்து

‘நிதி ஆயோக்’ (Ammyy admin) அமைப்பு, ‘கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டை’ (Composite Water Management Index) ஜூன் 14 அன்று வெளியிட்டது. இந்தியா கடும் நீர்த் தட்டுப்பாட்டை எதிர் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வில் சென்னை உள்பட இந்தியாவின் 21 நகரங்களில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. அத்துடன், நாட்டின் தண்ணீர் பிரச்சினை இதே விதத்தில் தொடர்ந்தால் 2030-ம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 05072018 இதழ்

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  ‘நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (21.6.2018 இதழ் தொடர்ச்சி) இட ஒதுக்கீடு இல்லை, எல்லோருக்கும் சம வாய்ப்பு என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதைத் தான் இப்போது மெதுவாகக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்தில் முதுநிலை படிப்பவர்கள் குறைந்தது அரசிடம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். ஆனால் இப்போது, காலம் முழுவதும் செய்ய வேண்டுமென்றும் கூறுகிறார்கள். அதுகுறித்து நமக்குத் தெரியாது. இவர்கள் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றாவிட்டால் 45 லட்சம் ரூபாய்க்கு பாண்ட் எழுதி கொடுத்துவிட்டுத் தான் வெளியே செல்ல வேண்டும்.  அதனால் நமக்கு மருத்துவர்களாக, அறுவை சிகிச்சை நிபுணர்களாக, உயர் சிகிச்சை மருத்துவர்களாக நம் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைக்கிறார்கள். ஆனால்...

ஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை… சீமான் – பிரபாகரனை  இழிவு செய்கிறார்

ஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை… சீமான் – பிரபாகரனை இழிவு செய்கிறார்

இன்றைக்கு சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் பேசப்படுகின்ற ஆமைக் கறிக் கதை ஒன்றும் புதிது இல்லை. என்னுடைய ஞாபகப் பதிவுகள் சரியாக இருந்தால், இந்தக் கதை 2006, 2007களில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அன்றைக்கு அது ஆமைக் கறி அல்ல. ஈழத் தமிழர் வழக்கில் ‘ஆமை இறைச்சி’. சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழ் இணைய ஊடகங்கள் திடீர் என்று அதிகரித்தன. இந்த ஊடகங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சில நோக்கங்களைக் கொண்டு செயற்பட்டன. அதில் முக்கிய நோக்கமாக தலைவர் பிரபாகரனை உல்லாச வாழ்க்கை வாழ்பவராக சித்தரிப்பது என்பதாக இருந்தது. ‘ஏழைப் பிள்ளைகள் களத்தில் சாக, தலைவர் பிரபாகரன் நீச்சல் தடாகத்துடன் கூடிய மாளிகையில் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்’ என்று இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக எழுதின. அப்படியே தலைவர் பிரபாகரன் ஆமை இறைச்சி விரும்பி உண்கிறார் என்றும், அதற்காக தாய்லாந்தில் இருந்து ஆமை இறைச்சி கொண்டுவரப்படுகிறது என்றும் பொய்யாக எழுதின. ஆமை...

‘மோட்சம்’ போக உயிரை மாய்த்த குடும்பம்!

‘மோட்சம்’ போக உயிரை மாய்த்த குடும்பம்!

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். பக்தி நம்பிக்கையில் மூழ்கிப் போன அந்தக் குடும்பம் வீட்டுக்குள் கோயில் கட்டி, இறப்பின் வழியாக ‘மோட்சம்’ போக முடியும் என்ற நம்பிக்கை யில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறது. உடலிலிருந்து பிரிந்த ‘ஆவி’ நேரடியாக ‘சொர்க்கம்’ போக வீட்டுச் சுவற்றில் தனித் தனியாக ஒவ்வொருவருக்கும் 11 குழாய் களைப் பதித்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளை கடிதங்களாக எழுதி வைத்திருக்கிறார்கள். ‘மூடநம்பிக்கையால் குடும்பமே தற்கொலை’ என்று ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. “ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் இவைகளைக் கற்பித்தவன் முட்டாள்; நம்புகிறவன் மடையன்; இவற்றால் பயன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன்” என்று பெரியார் இயக்கம் கூறினால், இந்து மதத்தைப் புண் படுத்துவதாகக் கூப்பாடு போடுகிறார்கள். ‘மனித ஆத்மாவுக்கு மரணமில்லை; அது மறுபடியும் பிறவி எடுக்கும்’ எனவே ‘மோட்சம்’ போகலாம்; ‘மரணம் இல்லை’ என்று ‘கீதை’யில் ‘கிருஷ்ண பகவான்’ கூறும்...

‘தமிழ்நாடு மாணவர் கழக’ பயிற்சி முகாம் காஞ்சியில் கருத்துச் செறிவுடன் நடந்தது

‘தமிழ்நாடு மாணவர் கழக’ பயிற்சி முகாம் காஞ்சியில் கருத்துச் செறிவுடன் நடந்தது

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான பயிற்சி ஜூன் 30, ஜூலை 1, 2018 தேதிகளில் காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தில் சிறப்புடன் நடைபெற்றது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக ஒத்துழைப்புடன் தமிழ் நாடு மாணவர் கழகம் நடத்திய இந்தப் பயிற்சி வகுப்பை மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவகுமார் ஒருங்கிணைத்தார். பயிற்சியில் 45 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 20 பேர் மாணவிகள். முதல் நாள் காலை 10 மணியளவில் மக்கள் மன்றத் தோழர்களின் புரட்சிகரப் பாடல்களுடன் வகுப்புகள் தொடங்கின. தோழர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாணவர் பயிற்சியின் நோக்கங்களை விளக்கினார். தொடர்ந்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ‘கல்வி – நம்முன் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் பேசினார். ‘உயிரினம் சிந்திக்கத் தொடங்கியபோதே உருவாகிவிட்டது கற்றல் செயல்பாடு. மூளையின் புரிதல் சக்தியோடு கற்பது வழியாக செயல்படக் கூடிய கல்வி செயல்பாட்டை பள்ளியில் அடைத்த தால் பள்ளிக்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பில் வி.பி.சிங் படம் திறப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பில் வி.பி.சிங் படம் திறப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத் தின் 5வது சந்திப்பு 23.06.2018 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் விடு தலைக் கழகத்தின் சென்னை தலைமை அலுவலகத்தில் வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலை வர்) தலைமையில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ‘நிமிர்வோம்’ அக்டோபர் மாத இதழ்க் குறித்து ராஜீ மற்றும் இமானுவேல் துரை தங்களது பார்வையை எடுத்துரைத்தனர்.  தொடர்ந்து, சமூகநீதி காவலர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி அவருடைய உருவப்படத்தை மதிமாறன் (எழுத்தாளர்) திறந்து வைத்து “இட ஒதுக்கீடு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 28062018 இதழ்

பெரியார் பெரும் தொண்டர் வி.ஆர். வேங்கன் தனி முயற்சியில் நிறுவிய பெரியார் சிலை திறப்பு

பெரியார் பெரும் தொண்டர் வி.ஆர். வேங்கன் தனி முயற்சியில் நிறுவிய பெரியார் சிலை திறப்பு

தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிபட்டியை அடுத்த வெங்கட சமுத்திரத்தில் பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை, 2.6.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறந்து வைக்கப்பட்டது. பெரியார் பெருந்தொண்டரும், தமிழ்நாடு அரசால் பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவருமான வி.ஆர்.வேங்கன் தனிமுயற்சியில் அவரால் நிலம் வழங்கப்பட்டு இயங்கிவரும் வெங்கடசமுத்திரம் அரசினர் மேனிலைப் பள்ளியின் எதிர்ப்புறத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. தனியார் நிலத்தில் நிறுவப்படும் சிலைகளுக்கு எவ்வித அரசு அனுமதியும் தேவையில்லை என ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தும் மாவட்ட ஆட்சித் தலைவராலும், காவல்துறையாலும் கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடிகள் காரணமாக இருமுறை உயர்நீதி மன்றத்தில் ஆணை பெற்று வந்த நிலையிலும் மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் சிலையை நிறுவ தடைசெய்து வந்தனர். ஆனால் புதிய மாவட்ட ஆட்சியராய் மலர்விழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் சிலையை நிறுவ உரிய ஒத்துழைப் புகள் வழங்குமாறு வருவாய், காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்....

19 நாட்களே நாடாளுமன்றம் வந்த மோடி

19 நாட்களே நாடாளுமன்றம் வந்த மோடி

நான்கு ஆண்டுகளில், 19 நாட்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருப்பதால், அவர் முறையாக நாடாளுமன்றம் வருகைதர உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜூன் 12 அன்று பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த வழக்கைத் தொடர்ந்திருக் கிறார். கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒட்டு மொத்தமாகவே 19 நாட்கள்தான் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார். அத்துடன், சிலமுறையே மோடி நாடாளு மன்றத்தில் பேசியுள்ளார். அரசின் மசோதா ஒன்றை அறிமுகம் செய்யும் போதும், 5 முறை தனது அமைச்சர்களை அறிமுகம் செய்யும் போதும், நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 6 முறையும், சிறப்பு விவாதத்தின் மீது 2 முறையும் மோடி பேசியுள்ளார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆண்டுகளில் பா.ஜ.க.வின் 800-க்கும் மேற்பட்ட பேரணிகளில் கலந்து கொண்டிருக்கிறார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 28062018 இதழ்

மகர்களைக் கொடுமைப்படுத்திய பேஷ்வா பார்ப்பனர்கள்

மகர்களைக் கொடுமைப்படுத்திய பேஷ்வா பார்ப்பனர்கள்

பேஷ்வா பார்ப்பனர்கள் ‘மகர்’ மக்களுக்கு இழைத்த கொடுமைகள் குறித்து அம்பேத்கர் தரும் தகவல்கள்: அன்றைய மராத்திய பேஷ்வாக்களின் ஆட்சியில், ஒரு தெருவில் எதிரில் வரும் இந்துவின் மீது தீண்டத்தகாதோரின் நிழல் பட்டால்கூட தீட்டாகிவிடும் என்ற காரணம் காட்டி – தீண்டத்தகாதவர்களை தெருவுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இந்துக்கள் தவறி தீண்டத்தகாதவர்களைத் தொட்டு அவர்கள் தீட்டாகி விடுவதைத் தடுக்க, தீண்டத்தகாதவர் தன் கழுத்திலோ மணிக்கட்டிலோ கறுப்புக் கயிறு ஒன்றை அடையாளமாகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. பேஷ்வாவின் தலைநகரான பூனாவில் தீண்டத்தகாதவர், தன்னுடைய இடுப்பில் துடைப்பம் ஒன்றைக் கட்டிக் கொண்டு, தான் போகும் பாதையில் – தன் காலடித் தடத்தின் புழுதியைப் பின்புறமாகக் கூட்டியபடி சென்றாக வேண்டும் என்ற ஆணை இருந்தது. இல்லாவிட்டால், அதே தெருவில் நடக்கும் இந்து தீட்டாகி விடுவானாம். பூனாவில் தீண்டத்தகாதவர் எங்கு போனாலும் தன் கழுத்தில் மண்கலயம் ஒன்றைத் தொங்கவிட்டுக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆணையும் இருந்தது....

வரலாற்றில் இருட்டடிக்கப்பட்ட ‘பீமா கோரேகாவ் யுத்தம்’

வரலாற்றில் இருட்டடிக்கப்பட்ட ‘பீமா கோரேகாவ் யுத்தம்’

வரலாற்றில் இருட்டடிக்கப்பட்ட ‘பீமா கோரேகாவ் யுத்தம்’ ஆவணப் படமாகியுள்ளது ‘மஹார்’கள் ஆண்ட ‘ராஷ்டிரம்’ (தேசம்) என்ற பொருளில் உருவானதுதான், ‘மஹாராஷ்டிரா’ எனும் மாநிலத்தின் பெயர். ஆனால், மஹார் இன மக்களின் வீரம், வரலாற்றில் பல காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது…1927இல், அம்பேத்கர், அந்த வரலாற்றை மீண்டும் மக்களின் நினைவுக்குக் கொண்டுவரும்வரை! அந்த வரலாறுதான் பீமா கோரேகாவ் யுத்தம்! மகாராஷ்டிர மாநிலத்தை பேஷ்வாக்கள் ஆண்டு வந்தனர். அவர்களின் ஆட்சியில், மஹார் இனத்தவர்கள் சாதியரீதியான கொடுமைகள் பலவற்றைச் சந்தித்தனர். அப்போது, ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். அவர்களின் ராணுவத்தில், மஹார் இன மக்கள் சேர, அவர்களுக்குச் சமூகத்தில் கொஞ்சம் மரியாதை கிடைக்கிறது. ஆனால், அது ராணுவ வீரர்களுக்கு மட்டுமேயான மரியாதையாக இருந்தது. இந்நிலையில், ஆங்கிலேயர்களுடன் இணைந்து, பேஷ்வாக்களை (மராட்டியப் பார்ப்பனர்) எதிர்த்தார்கள் மஹார் மக்கள். 1818-ம் ஆண்டில் பீமா கோரேகாவ் எனும் இடத்தில் தோராயமாக 25 ஆயிரம் பேஷ்வா வீரர்களை வெறுமனே 500 மஹார் இன...

வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2இல் இரயில் மறியல்: தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2இல் இரயில் மறியல்: தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

பட்டியல் இன பழங்குடி மக்களுக்குப்  பாதுகாப்பாக இருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனே வழக்குப் பதிவு செய்ய முடியாமலும், கைது செய்ய முடியாமலும் தடுத்திருப்பதோடு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமின் கேட்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இனி வன்கொடுமை சட்டத்தை மீறும் ஜாதி வெறியர்கள் சட்டப் பாதுகாப்பு வந்து விட்டதால் மேலும் வன்கொடுமைகளை நடத்துவதற்கு வழி திறந்து விட்டுள்ளது இந்தத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உ.பி., ம.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் போராடிய பட்டியல் இன மக்ககள் மீது அம்மாநில பா.ஜ.க. ஆட்சி துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகி விட்டனர். இந்நிலையில் இந்தச் சட்டம் ஏற்கனவே இருந்த நிலையில் அப்படியே பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பாதுகாப்பு கூட்டியக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நமது திராவிடர் விடுதலைக் கழகமும் இணைந்திருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு...

சமூக நீதி என்பதும் பண்பாடுதான் விடுதலை இராசேந்திரன்

சமூக நீதி என்பதும் பண்பாடுதான் விடுதலை இராசேந்திரன்

பார்ப்பனியம், இந்துமதம், வேதம், சாஸ்திரம், புராணம் ஊடாக மனித உணர்வுகளில்  நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜாதிய வேர்களை எதிர்க்க வேண்டும். ஆதித் தமிழ்ச்சமூகம் சாதி, மத அடையாளமற்றதாக இருந்தது. இடையில் புகுந்த ஆரியப் பண்பாட்டை தமிழ்ச் சமூகம் எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே தான் தமிழகத்தில் நான்கு வருணமுறை முழுமையாக இல்லை. சத்திரியர், வைசியப் பிரிவு தமிழகத்தில் கிடையாது. வேதத்திலும் சாதிகள் இல்லை. நெகிழ்ச்சித் தன்மையுடன் இருந்த வருணாசிரமத்தை பார்ப்பனியம் சூழ்ச்சியால் கெட்டிப்படுத்தியது. வர்ணா சிரமத்தில் 4 பிரிவுகளுக்குள் ஏற்பட்ட இனக்கலப்பு, வாழ்ந்த இடம், தொழில் அடிப்படையில் சாதி முறை உருவானது. தமிழகத்தில் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழர்கள். தெலுங்கு, கன்னடம் பேசுகிறவர்கள் தமிழர்கள் இல்லை என்று சில அமைப்புகள் பிளவை ஏற்படுத்துகின்றன. பேசுகிற மொழியைவிட சாதி அடையாளமற்ற அல்லது சாதியற்ற கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களையே தமிழன் என்பதற்கான அடையாளமாக முற்போக்குவாதிகள் பார்க்கிறோம். சாதியற்ற தமிழரையும், சமூகத்தையும் உருவாக்க முடியுமா? சாதி அற்ற...

விபூதியை அழிக்கக் கூடாதா? பொன் இராதாகிருஷ்ணன் மிரட்டுகிறாரா?

விபூதியை அழிக்கக் கூடாதா? பொன் இராதாகிருஷ்ணன் மிரட்டுகிறாரா?

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் அர்ச்சகர் பூசிய விபூதியை அழித்து விட்டார் என்பதற்காக அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்கிறார், மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன். மத அடையாளங்களை தரித்துக் கொள்வது தனி உரிமை; அதைக் கட்டாயப் படுத்த முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் நெற்றியில் விபூதி பூச மாட்டார் என்பது தெரிந்தும், அர்ச்சகர் பூசியபோது அதை மறுக்காமல் பண்பாடோடு எதிர்க் கட்சித் தலைவர் தடுக்கா மல் ஏற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு, அதை அகற்றிக் கொண்டிருக்கிறார். அர்ச்சகர் விபூதி பூசி விட்டார் என்ப தற்காக அதை அழிக்கவே கூடாது என்கிறாரா அமைச்சர்? விபூதி, குங்குமம் வைக்கும் பழக்கமுள்ள அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், வைணவக் கோயிலுக்குப் போகும்போது அய்யங்கார் அர்ச்சகர் அவரது நெற்றியில் நாமத்தைப் போட்டு விட்டால், அதுவும் இந்துமத புனித சின்னம்தான் என்று அமைச்சர் அதை அழிக்காமல் அதே நாமத்தோடு பவனி வருவாரா? வடகலை நாமம், தென்கலை நாமத்தை மறுக்கிறது;...

பயிலரங்கத்துக்கு நன்கொடை வழங்கிய தி.மு.க தோழர் பாலுவுக்கு பாராட்டு

பயிலரங்கத்துக்கு நன்கொடை வழங்கிய தி.மு.க தோழர் பாலுவுக்கு பாராட்டு

பயிலரங்கத்துக்கு  ரூ.25,000 நன்கொடை வழங்க முன் வந்து முகாமை நடத்துமாறு கூறியவர் முன்னாள் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளரும், இராசிபுரம் பகுதியைச் சார்ந்த தி.மு.க. பிரமுகருமான பாலு ஆவார். அவருக்கு கழகத் தலைவர்  கொளத்தூர் மணி சால்வை போர்த்தி, பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார். நிகழ்வை முழுமையாக ஒளிப்பதிவு செய்து, வீடியோ பதிவாக்கிய சித்தோடு கழகத் தோழர் எழிலன் மற்றும் அவருக்கு உடனிருந்து உதவிய தோழர்களுக்கும் இரண்டு நாளும் சிறப்பாக உணவு தயாரித்து வழங்கிய ஏற்காடு பிரபாகரன் உணவு விடுதி உரிமை யாளரும் கழகச் செயல் பாட்டாளருமான பெருமாள் ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசு மற்றும் நூல்களை கழகத் தலைவர் வழங்கினார். பயிலரங் கத்தை  முன்னின்று ஏற்பாடு செய்த இராசிபுரம் கழகச் செயல்பாட்டாளர் சேகுவேரா, அவரது இணையர் மற்றும் கமலக் கண்ணன் நிகழ்வில் பாராட்டப் பெற்றனர். பெரியார் முழக்கம் 28062018 இதழ்

கிராமப்புற பெண்-ஆண் இளைஞர்கள் சம அளவில் பங்கேற்றனர் சிந்தனைக் கூர் தீட்டிய, ஏற்காடு பயிலரங்கம்

கிராமப்புற பெண்-ஆண் இளைஞர்கள் சம அளவில் பங்கேற்றனர் சிந்தனைக் கூர் தீட்டிய, ஏற்காடு பயிலரங்கம்

இராசிபுரம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்காட்டில் ஜூன் 23, 24ஆம் தேதிகளில் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம், கருத்துக் களமாகவும், விவாத அரங்கமாகவும் சிறப்புடன் நடந்து முடிந்தது. இந்தப் பயிலரங்கில் பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முன் பதிவு செய்திருந்தனர். ஆனாலும் பங்கேற்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பதால் கவனச் சிதைவு மற்றும் ஏற்பாட்டு வசதிக் குறைவு கருதி எண்ணிக்கைக் குறைக்கப்பட்டு முதல் முறையாக பெரியாரியல் குறித்து அறிய விரும்பு வோருக்கு முன்னுரிமை தரப்பட்டு, பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே பயிலரங்கில் பங்கேற்ற கழகத் தோழர்கள் இதில் பங்கேற்காது தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் புதிய தோழர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தேர்வு செய்தார். மொத்தம் பங்கேற்ற 51 பயிற்சியாளர்களில் பெண்கள் 21 பேர் என்பது இப்பயிலரங்கின் சிறப்பாகும். கிராமத்தி லிருந்து முதல் தலைமுறையாகப் படித்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்ற இந்த முகாமில் இளம் பெண் தோழர்கள் முனைப் புடன் பங்கேற்று கருத்துகளை குறிப்பெடுத்து...

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்தும் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்தும் பயிற்சி வகுப்பு

நாள் :  30.6.2018, 1.7.2018 (சனி, ஞாயிறு) இடம் :  மக்கள் மன்றம், காஞ்சிபுரம் முதல் நாள் 30.06.2018 சனிக் கிழமை காலை 9.30 மணி     :     தோழர்கள் அறிமுகம் காலை 10 – 1 மணி   :     பிரின்ஸ் கசேந்திர பாபு  (கல்வி -நம்முன் உள்ள சவால்கள்) மதியம் 1 – 2 மணி    :     உணவு இடைவேளை மதியம் 2- 3.30 மணி  :     தேவா  (மாணவர்களின் திறன் மேம்பாடு) மாலை 4- 5.30 மணி   :     விடுதலை இராசேந்திரன் (தனியார் துறையில் இடஒதுக்கீட்டின் தேவை) மாலை 5.30 – 6.30 மணி     :     இன்றைய பயிற்சி வகுப்பு குறித்து தோழர்கள் கலந்துரையாடல் இரண்டாம் நாள் : 01.07.2018 ஞாயிறு காலை 10 – 1.00 மணி      :     மருத்துவர் எழிலன்  (மூட நம்பிக்கை) மதியம்  1...

சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல; விடுதலை இயக்கமே

சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல; விடுதலை இயக்கமே

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல; விடுதலை இயக்கம் என்று சுவிட்சர்லாந்து நாட்டின் கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை ஜூன் 16, 2018இல் வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூறி இந்த அமைப்புக்கு நிதி திரட்டிய தாகவும், அதில் உறுப்பினர்களாக இருந்து சுவிஸ் நாட்டில் செயல்பட்ட தாகவும், திரட்டிய நிதியில் மோசடி நடந்ததாகவும் குற்றம் சாட்டி 13 ஈழத் தமிழர்கள் மீது கடந்த ஜனவரி 2018இல் சுவிஸ் நாட்டில் வழக்குப் பதிவு செய்தது. விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதால் போர் நடவடிக்கை களை மேலும் தீவிரமாக்கவும், நீண்ட காலம் போர் நடப்பதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காரணமாக இருந்தார்கள் என்றும் குற்றப் பத்திரிகை கூறியது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஈழத் தமிழர்கள் பெரும் பொருட் செலவில்...

‘சாதியற்ற தமிழர்; காவியற்ற தமிழகம்’ விடுதலை இராசேந்திரன் உரை

‘சாதியற்ற தமிழர்; காவியற்ற தமிழகம்’ விடுதலை இராசேந்திரன் உரை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் முடிவெய்திய ‘கலை இலக்கிய ஆளுமைகள்’ கே.பி.பாலச்சந்தர், டி.ஏ. விசுவநாதன் நினைவுச் சொற்பொழிவு, ஜூன் 15ஆம் தேதி மாலை 7 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் கே.வி.பி. அரங்கில் மாவட்டத் தலைவர் சி.எம்.குமார் தலைமையில் நடந்தது. க.மலர்விழி வரவேற்புரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘சாதியற்ற தமிழர்; காவியற்ற தமிழகம்’ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் நினைவு சொற்பொழிவாற்றினார். மாவட்ட தலைவர் சந்தானம், முடிவெய்திய கே.பி. பாலச்சந்தர், டி.ஏ.விசுவநாதன் தொண்டுகளை நினைவு கூர்ந்தார். முன்னதாக மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை பொருளாளர் வெ. கண்ணன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 21062018 இதழ்

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே!

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே!

ஏப்ரல் 30, 2018 அன்று பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி ‘நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. இந்த தன்மானம்-தன்னுரிமை மீட்பு மாநாட்டில் விவாதிப்பதற்கு ஆயிரக்கணக்கான செய்திகளை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள். 2014ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சி தொடங்கிய காலத்திலிருந்து மிக வேகமாக இந்த வேலையைச் செய்து கொண் டிருக்கிறார்கள். இதையெல்லாம் காங்கிரசு செய்ய வில்லையா என்றால் அது நமக்குத் தேவையில்லை. அவர்கள் இருட்டில் திருடிக்கொண்டு போனார்கள். இவர்கள் பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் கத்தியைக் காட்டி வெட்டுகிற கொலைகாரர்களைப் போல மிகத் துணிச்சலாக மனிதாபிமானமற்றவர் களாக, எதையும் மதிக்காதவர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் மறைவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால், 1955 டிசம்பரில்தான் மொழிவழி மாநிலங்கள் பற்றிய சிந்தனையைப்...

ஏற்காடு பெரியாரியல் பயிலரங்கம்

ஏற்காடு பெரியாரியல் பயிலரங்கம்

நாள் :  23, 24 ஜூன் 2018 இடம் :  ஏற்காடு, சேலம் மாவட்டம். 23.06.2018 சனிக் கிழமை காலை 10.00 மணி    :     தோழர்கள் அறிமுகம் காலை 11.00 மணி    :     விடுதலை இராசேந்திரன் (பெரியார்- அன்றும்’ இன்றும்) மதியம் 1.00 மணி     :     உணவு இடைவேளை மதியம் 2.00 மணி     :     வீரா கார்த்திக் (கடவுள் மறுப்பு தத்துவமும் – பெரியாரும்) மாலை 3.30 மணி     :     தேனீர் இடைவேளை மாலை 3.45 மணி     :     கொளத்தூர் மணி (இந்துத்துவம் – பெரியார் – அம்பேத்கர்) மாலை 6.00 மணி     :     தனித் திறமை (பேச்சு பயிற்சி, வீதி நாடகம்) இரவு 8.30 மணி  :     இரவு உணவு இரவு 9.15 மணி :     கலந்துரையாடல் 24.06.2018 ஞாயிறு காலை 7.00 மணி     :     பால்.பிரபாகரன் (இட ஒதுக்கீட்டு வரலாறு) காலை...

வங்கிகளின் வாராக் கடன்கள் மதிப்பு குறைந்தது ஏன்?

வங்கிகளின் வாராக் கடன்கள் மதிப்பு குறைந்தது ஏன்?

இந்திய வங்கிகளின் செயற்படா சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை குறைந்துவிட்டது என்று கூறப்படும் நிலையில், 55 சதவிகித வாராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டதே இதற்கு காரணம் என்பது அம்பலமாகியுள்ளது.2017-18 நிதியாண்டின் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் இந்திய பொதுத்துறை வங்கிகளின் செயற்படா சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 960 கோடி குறைந்துள்ளதாக செய்தி வெளியாகி யுள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் நாடாளுமன்ற நிதிக் குழுவுக்கு வழங்கியுள்ள விவரங்களின் படி, பொதுத்துறை வங்கிகளின் மேற்கூறிய செயற்படா சொத்து மதிப்பில் வெறும் 27 சதவிகித மட்டுமே திருப்பிச் செலுத்தப்பட்ட கடன்கள் எனவும் சுமார் 55 சதவிகித அளவுக்கான கடன்கள், வங்கிகளே பார்த்து தள்ளுபடி செய்து விட்டால் ஏற்பட்ட மதிப்பு குறைவு என்பதும் தெரிய வந்துள்ளது. வராக் கடன் மீட்பு நடவடிக்கை மூலமாக ரூ. 41 ஆயிரத்து...

கழகக் களப்பணியாளர்களுக்குப் பாராட்டு கொளத்தூர் ஒன்றியத்தில் கிராமப் பரப்புரை தொடங்கியது

கழகக் களப்பணியாளர்களுக்குப் பாராட்டு கொளத்தூர் ஒன்றியத்தில் கிராமப் பரப்புரை தொடங்கியது

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் உக்கம்பருத்திக் காடு பெரியார் திடலில் 16.06.18 மாலை 6 மணியளவில் துவங்கி நடைபெற்றது.  பறை முழக்கத்துடன் தோழர்கள் கிராம மக்கள் அனைவரும் ஊர்வலத்தோடு நிகழ்வு தொடங்கியது. பின்னர் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர் வினையாக சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய தோழர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவரும் மேடையில் அமர்ந்தனர். சரவணபரத் கடவுள் மறுப்பு ஆத்மா மறுப்பு வாசகங்களை முழக்கமிட மற்றவர் உடன் முழுக்கமிட்டனர். தொடக்க நிகழ்வாக கழக சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்ற நங்கவள்ளி தி.வி.க தோழர்கள் கிருஷ்ணன், மனோஜ், ராஜேந்திரன் ஆகியோருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேட்டூர் மகளிர் தின பொதுக் கூட்டத்திற்காக பணி செய்து நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய தோழர்கள். காயத்திரி, சுதா,...

‘பசுமை’ வழிச்சாலையை எதிர்த்துப் பேசினாலே கைதா? கழகம் கண்டனம்

‘பசுமை’ வழிச்சாலையை எதிர்த்துப் பேசினாலே கைதா? கழகம் கண்டனம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை – சேலம் இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பதாக அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடியும் சட்டசபையில் அறிவித் துள்ளார். இதன் பின்னணி உள்நோக்கம் குறித்த ஒரு தகவல் சமூக ஊடகங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. இது குறித்து அந்த பதிவில், “மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை – சேலம்இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பதாக அறிவித்துள்ளார். இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய், தமிழ் நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத, மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா? அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம் அமையவிருக்கும் சாலை யானது கார்ப்பரேட் நிறுவனமான ஜிண்டாலுக்காக.  ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது, ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம்...

ஈழத்தில் நடந்தது உள்நாட்டுப் போர் அல்ல;  இன அழிப்பில் சர்வதேச சதி அடங்கியுள்ளது சென்னையில் கூடிய பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு விவாதம்

ஈழத்தில் நடந்தது உள்நாட்டுப் போர் அல்ல; இன அழிப்பில் சர்வதேச சதி அடங்கியுள்ளது சென்னையில் கூடிய பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு விவாதம்

சர்வதேச தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் மாநாடு சென்னையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி கூடி ஈழத் தமிழர் இன அழிப்பை சர்வதேச சட்டங்களின் வெளிச்சத்தில் விரிந்த தளத்தில் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை விவாதித்தது. தமிழ்நாடு, சென்னையில் பிட்டி. தியாகராயர் அரங்கில், ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியா வினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஈழத் தமிழர் களுக்கான குற்றவியல் நீதியும், ஈடுசெய் நீதியும் மறுக்கப்படக்கூடாது, இலங்கையே தன்னைத் தானே விசாரித்துக்கொள்ளும் உள்ளக விசாரணை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்...

ஜாதி வெறிப் படுகொலைக்கு உள்ளான கச்சநத்தம் கிராமத்தில் கழகத் தோழர்கள் நேரில் ஆறுதல்

ஜாதி வெறிப் படுகொலைக்கு உள்ளான கச்சநத்தம் கிராமத்தில் கழகத் தோழர்கள் நேரில் ஆறுதல்

ஜாதி வெறி படுகொலை – தாக்குதலுக்குள்ளான கச்சநத்தம் கிராமத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் குழு நேரில்  சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்துப் பேசியது. அது குறித்து கழக வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் தரும் செய்தி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மானாமதுரை, திருப்பாச்சேத்தி அருகே உள்ள ‘கச்ச நத்தம்” என்ற ஊரில் நடைபெற்ற படுகொலைகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிடவும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 06.06.2018 புதன் கிழமை காலை 10 மணிக்கு கழகத்தின் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர்  இராம. இளங்கோவன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்  வைரவேல், பள்ளிபாளையம்  முத்துப்பாண்டி, கோபி ஒன்றிய செயலாளர் அருளானந்தம், பழனி வட்டம் பொறுப்பாளர் மருதமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு மதுரை சென்றடைந்தது. அங்கு மதுரை மாவட்ட பொறுப்பாளர்  காமாட்சி பாண்டியன், காளையார்கோவில் பொறுப்பாளர்  முத்துக்குமார், காரைக்குடி  பெரியார் முத்து, வினோத் ராஜா, ...

தூத்துக்குடி படுகொலை-வேல்முருகன் கைதைக் கண்டித்து  கழகம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி படுகொலை-வேல்முருகன் கைதைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

மேட்டூரில் : தூத்துக் குடி படுகொலைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம்  23.5.2018 அன்று மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் முன்பு சேலம் மேற்கு மாவட்டம் சார்பில்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்த ராசு தலைமை தாங் கினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் அப்துல்கபூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்பண்ணன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கோ. சூரியக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி  மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், நாம் தமிழர்க் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, கழகத் தோழர் மா.சுந்தர் ஆகியோரின் கண்டன உரைகளைத் தொடர்ந்து இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார். குமரேசன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தோழர்களும் பொறுப்பாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். காஞ்சியில்  : திராவிடர் விடுதலைக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் பாலாறு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம்...

கவுரி லங்கேஷ் கொலையாளிகள் பிடிபட்டனர் குற்றப் பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்கள்

கவுரி லங்கேஷ் கொலையாளிகள் பிடிபட்டனர் குற்றப் பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்கள்

பெங்களூரில் சுட்டுக் கொல்லப் பட்ட இந்துத்துவ எதிர்ப்பாளரும் பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் – அவரது இந்து எதிர்ப்பு கருத்து களுக்காகவே சுடப்பட்டார் என்று சிறப்புப் புலனாய்வுக்குழு குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக நவீன் குமார் மற்றும் அவரது மத்தூரைச் சேர்ந்த கூட்டாளிகள் மூன்று பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. நீதிபதி முன் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளனர். ஆனால் இந்த ஒப்புதல் வாக்குமூலம் சிறப்புப் புலனாய்வுக் குழு வேண்டு கோள்படி வெளியிடப்படவில்லை. இது வெளியிடப்பட்டால் தேடப் படும் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடும் என்பதுதான் காரணம். கைது செய்யப்பட்ட நவீன்குமார் என்பவர் எந்த அமைப்பைச் சார்ந்தவர் என்பது குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட வில்லை. ஆனாலும் அவரது மனைவி சி.என்.ரூப்பா, சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தந்த வாக்குமூலத்தில் தனது கணவர் ‘சந்தான் தர்ம சன்ஸ்தா’ என்ற அமைப்போடு தொடர்புடையவர் என்று கூறியிருக்கிறார். “2017ஆம் ஆண்டு இந்த அமைப்பு நடத்திய...

கழக மாநாட்டில் திருமுருகன் காந்தி பேச்சு காவிரி உரிமையில் வஞ்சிக்கப்படுகிறோம்

கழக மாநாட்டில் திருமுருகன் காந்தி பேச்சு காவிரி உரிமையில் வஞ்சிக்கப்படுகிறோம்

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு – நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ‘நீர் மறுப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை.: நமக்கு நிலம் பாழ்பட்டிருக்கிறது, நீர் மறுக்கப்பட் டிருக்கிறது, நீட் திணிக்கப்பட்டிருக்கிறது. இதிலே நீர் மறுப்பைப் பற்றி என்னுடைய கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ்நாட்டுக்கான நீர் மறுப்பு என்பது இந்திய அரசுடைய சதித் திட்டமாகத்தான் ஒட்டுமொத்த தரவுகளையும் பார்க்கும்போது நாம் உணர முடியும். இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு என்பது நீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலமாக உள்ளது. வற்றாத நதியான காவிரியிலிருந்து ஒரு பகுதி நீர் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. காவிரி நீர் உரிமை தொடர்பாக வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் அன்றைய மைசூர் மாகாண அரசுக்கும், சென்னை மாகாண...

ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம்

ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜூன் 23, 24 தேதிகளில் ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், பால் பிரபாகரன், பேரா. சுந்தரவள்ளி, வீரா கார்த்திக், வகுப்புகளை எடுக்கிறார்கள். பயிற்சிக் கட்டணம் ரூ.100/-                      முன் பதிவு அவசியம். தொடர்புக்கு:  ஃபிடல் செகுவேரா, இராசிபுரம். பேசி: 9788593863 பெரியார் முழக்கம் 07062018 இதழ்

4139 சட்டமன்ற உறுப்பினர்களில் பா.ஜ.க. எண்ணிக்கை 1516 மட்டுமே

4139 சட்டமன்ற உறுப்பினர்களில் பா.ஜ.க. எண்ணிக்கை 1516 மட்டுமே

இந்தியா முழுமையும் பா.ஜ.க. பிடிக்குள் வந்திருப்பதாக ஒரு பொய்யான தோற்றத்தை அக்கட்சி உருவாக்கி வருகிறது. உண்மையில், இந்தியாவின் 29 மாநிலங்களில் உள்ள 4139 சட்டமன்ற உறுப்பினர்களில் பா.ஜ.க.வின் எண்ணிக்கை 1516 மட்டும்தான். அதுவும் பெரும்பாலான 950 சட்டமன்ற உறுப்பினர்கள் குஜராத், மகாராஷ்டிரா, கருநாடகம், உ.பி., ம.பி., இராஜஸ்தான் என்ற 6 மாநிலங்களில் மட்டும் இருக்கிறார்கள். 10 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியில் இருக்கிறது. மாநிலங்கள் வாரியாக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் விவரம்: தமிழ்நாடு  –     ஒருவர்கூட இல்லை சிக்கிம்    –     ஒருவர்கூட இல்லை மிசோராம் –     ஒருவர்கூட இல்லை ஆந்திரா   –     175 எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. 4 பேர் கேரளா    –     140  எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. ஒருவர் மட்டும் பஞ்சாப்    –     117  எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. 3 பேர் மேற்கு வங்கம்  –     294  எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. 3 பேர் தெலுங்கானா    –     119  எம்.எல்.ஏ.க்களில்                      பா.ஜ.க....