Category: தலைமை அறிக்கை

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் நேர்காணல் – ஆனந்த விகடன் 

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் நேர்காணல் – ஆனந்த விகடன் 

துக்ளக் விழாவில், ரஜினிகாந்த் பேசியது பொய் என்று சொல்லி மறுக்கும் நீங்கள், 1971-ல், ‘நடந்த விஷயங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்’ என்று அன்றைய முதல்வர் கருணாநிதி பேட்டியளித்திருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?’’ “புராணங்களில் உள்ள ஆபாசக் கதைகள் பற்றி மக்களிடையே எடுத்துச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் ‘மூட நம்பிக்கை ஒழிப்புப்பேரணி’யே அன்றைக்கு நடத்தப்பட்டது. இரண்டு ஆண்களுக்குப் பிறந்ததாகச் சொல்லப்படும் ஐயப்பன் பிறப்பு மற்றும் முனிவரின் மனைவியான அனுசுயாவை கடவுளர்களே நிர்வாணமாக வரச்சொல்லிய வக்கிரங்கள் ஆகியவற்றைத்தான் சித்திரங்களாக வரைந்து ‘இந்த ஆபாசக் கடவுளர்களை நீங்கள் வணங்கலாமா…’ என்று தலைப்பிட்டுப் பேரணியில் எடுத்துச் சென்றோம். வடஇந்தியாவில், ‘ராம லீலா’ என்ற பெயரில் ராவணனைத் தீயிலிட்டுக் கொளுத்துவதை எதிர்த்து, இங்கே ராமர் பொம்மையை எரிக்கத் திட்டமிட்டுத்தான் பேரணி சென்றோம். இதுதான் நடந்த உண்மை! ஆனால், துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி – சீதை உருவங்கள் உடையில்லாத நிலையில் செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது’...

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்த அவதூறு வழக்கின் தற்போதைய நிலை என்ன ? நீதிமன்றம் என்ன கூறியுள்ளது ? துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டி பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு அவதூறை நடக்காத ஒரு சம்பவத்தை பெரியாரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்தோடு பேசினார். நடக்காத ஒன்றை உள் நோக்கத்தோடு பேசிய நடிகர் ரஜினிகாந்தின் இந்த அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்க திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வலியுருத்தினார்.மேலும் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்தோடு பேசிய ரஜினியின் மீது தக்க சட்ட நடவடிக்கை கோரி தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் கழகத்தோழர்கள்...

அவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி!

அவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி!

1971-ஆம் ஆண்டு சேலம் பேரணியில் நடந்த விஷயம் வெளிவந்த துக்ளக் ஏட்டை காண்பிக்காமல் அவுட்லுக்கின் ஜெராக்ஸை ரஜினி காட்டுவது ஏன் என திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார். துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த விழாவில் ரஜினி பேசுகையில் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதையின் சிலைகள் உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து கொண்டு செல்லப்பட்டது. இதை துக்ளக் பத்திரிகையில் இதழின் ஆசிரியர் சோ தைரியமாக வெளியிட்டார். அந்த புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன என்றார் ரஜினி. ரஜினியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் என்பதால் வரலாற்றை தவறாக கூறிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் கழக அமைப்புகள் கோரின. கற்பனை இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது கையில் ஒரு பத்திரிகையை காண்பித்த ரஜினிகாந்த், நான்...

நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக – கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக – கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் மீது கழகத்தின் சார்பாக பல்வேறு இடங்களில் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ள புகார்கள் சம்பந்தமாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை : – அன்பார்ந்த தோழர்களுக்கு, என் வணக்கங்கள். துக்ளக் ஏட்டின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பெரியாரை – பெரியாரின் இயக்கத்தை கேவலப்படுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு நடிகர் இரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பேசிய அவருடைய அவதூறு பேச்சுக்கு தக்க நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையங்களில் புகார் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்திருந்தோம். அவ்வாறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின் நகல் ஒன்றினையும் அந்த காவல்நிலையங்களில் புகாரைப் பெற்றுக்கொண்டதற்காக கொடுக்கப்பட்ட சிஎஸ்ஆர் இரசீது நகலையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் காவல்நிலையத்தில் புகார் பெற்று கொண்ட பின்னாலும் அதற்கான சிஎஸ்ஆர் வழங்கப்படாமல் இருக்குமேயானால்,மீண்டும் ஒருமுறை அந்த புகாரினுடைய படியை வைத்து அதனுடன் “நாங்கள் இத்தனையாம் நாள் உங்களிடம் அளித்த...

நடிகர் ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தி அறிக்கை

1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன் சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் இரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளிவந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி அதன் வழியே தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கோடும், தங்கள் எஜமானர்களை மகிழச் செய்ய வேண்டும் என பேசப்பட்டதாகவே நாங்கள் நம்புகிறோம். இந்த பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதுமட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செ வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியாரியல் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக புகார்...

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களுக்கு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி விட்டீர்களா? கழகத்தின் களப் பணிகளை ஆதரவாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, வாரம் தோறும் நடக்கும் நிகழ்வுகளை பெரியாரியல் பார்வையில் பதிவு செய்து வருகிறது. பெரியாரியல் குறித்த ஆழமான கட்டுரைகள், சமூகம், சுற்றுச் சூழல், கலை, இலக்கியம் குறித்த விரிவான கட்டுரைகளுடன் வெளி வருகிறது ‘நிமிர்வோம்’. தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத ஒரு சமுதாய இயக்கம், 2002ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாக வாரந்தோறும் பெரியார் முழக்கத்தையும், மூன்று ஆண்டுகளாக மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ இதழையும் இடைநிறுத்தமின்றி நடத்தி வருகிறது. அரசியல் கட்சிகளால்கூட ஏடு நடத்த முடியாத நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம் இந்தப் பணியை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது. தோழர்கள் இது குறித்த கவலை புரிதலுடன் களமிறங்கினால் ஏடுகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். தோழர்களே! விரைந்து கழக ஏடுகள் தொடர்ந்து...

தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

  ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு சந்தாக்களை புதுப்பிக்கும் பணிகளை தோழர்கள் விரைந்து தொடங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். – நிர்வாகி பெரியார் முழக்கம் 26122019 இதழ்

2019இல் கழகத்தின் களப் பணிகள்

2019இல் கழகத்தின் களப் பணிகள்

2019ஆம் ஆண்டில் திராவிடர் விடுதலைக் கழகம் ஆற்றிய களப்பணிகளை திரும்பிப் பார்க்கிறது. வழக்கமாக கழகத் தோழர்கள் நடத்தும் பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகள், தமிழர் திருநாள் விழா நிகழ்ச்சிகள், தெருமுனைக் கூட்டங்களைத் தவிர, ஏனைய நிகழ்வுகள், கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வெளி வந்த பதிவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏடுகளுக்கு சந்தாக்கள் சேர்க்கும் பணிகளில் பல மாவட்டங்களில் தோழர்கள் முனைப்புக் காட்டி செயல்பட்டனர். செயல்படாத மாவட்டங்களும் உண்டு. கழகத்தின் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் இதற்காக மாவட்டம் தோறும் கழகப் பொறுப்பாளர்களை சந்தித்து சந்தா சேர்ப்பு இயக்கத்தை விரைவுபடுத்தினர். கழகத்துக்காக சொந்தமாக தலைமைக் கழகம் உருவானது – 2019ஆம் ஆண்டில். இது மிகவும் குறிப்பிடத்தக்கது. மக்களவைக்கான தேர்தல் நடந்ததும் 2019ஆம் ஆண்டில்தான். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற முடிந்தது....

தலைமைக் கழகம்: தோழர்களின் சாதனை

தலைமைக் கழகம்: தோழர்களின் சாதனை

2019ஆம் ஆண்டு கழகத் தோழர்கள் செயல்பாடுகளில் முன்னுரிமை பெற்றிருப்பது கழகத்துக்கு சொந்தமாக தலைமைக் கழகம் ஒன்றை வாங்கியதில் காட்டிய முனைப்பான செயல்பாடுகளாகும். கழகத் தோழர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒவ்வொருவரும் குறைந்தது ரூ.20,000 நிதி திரட்ட வேண்டும் என்று கழக தலைமைக் குழுவால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பெரும்பான்மைத் தோழர்கள் இலக்கை எட்டிக் காட்டினர். கழகத்தின் செயல்பாடுகள் மீது நம்பிக்கையும் கழகத்தின் மீது மதிப்பும் கொண்ட ஆதரவாளர்கள் தாமாகவே முன் வந்து நிதி வழங்கியதோடு, நிதி திரட்டும் இயக்கத்திலும் தங்களை இணைத்துக் கொண்டனர். இது கழகத்திற்குக் கிடைத்த மிகச் சிறந்த பெருமையாகும். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏடும், ‘நிமிர்வோம்’ மாத இதழும் தடையின்றி வெளி வந்து கொண்டிருப் பதற்குக் காரணம் தோழர்கள் திரட்டிய சந்தாக்கள் தான். பெரியார் முழக்கம் 26122019 இதழ்

கழக நாள்காட்டி வெளிவந்து விட்டது

கழக நாள்காட்டி வெளிவந்து விட்டது

செயலவையில் 2020ஆம் ஆண்டுக்கான நாள் காட்டிகள் விற் பனைக்கு கொண்டு வரப்பட்டன. கழகத் தோழர்கள் நாள் காட்டிகளை வாங்கிச் சென்றனர்.  கழக ஏடுகளுக்கான உறுப்பினர்கள் சேர்க்கும் இரசீது புத்தகங்களையும் தோழர்கள் பெற்றுச் சென்றனர். இவ்வாண்டு நாள்காட்டியில் சமூகத்துக்குப் போராடிய பெண் போராளிகள் படம் இடம் பெற்றுள்ளன. தொடர்புக்கு : தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர். பேசி: 9941759641 நாள்காட்டி ஒன்றின் விலை : ரூ. 70/- ஓவியர் பரதன் வடிவமைப்பில் உருவாகும் நாள்காட்டி: ஒவ்வொரு ஆண்டும் கழக நாள்காட்டியை இயக்க ஆதரவாளர் ஓவியர் பரதன் – எம்.எஸ். ஆப்செட் நிறுவனம் வழியாக அதற்கான படங்களை  எந்த கட்டணமும் இன்றி சிறப்புடன் வடிவமைத்து தருகிறார். கழக சார்பில் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். பெரியார் முழக்கம் 02012020 இதழ்

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சிகளை முறியடிக்க மக்களை ஒன்று திரட்டுவோம் பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சியைத் தடுக்க மக்கள் சக்தியை அணி திரட்டுவோம் என்று திராவிடர் விடுதலைக் கழக செயலவை அறைகூவல் விடுத்துள்ளது. நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் ஆபத்தையும் செயலவை எச்சரித்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: இந்தியாவின் மதச் சார்பற்ற அடையாளத்தை உருக்குலைத்து ‘இந்து இராஷ்டிரமாக்கும்’ முயற்சிகளை பா.ஜ.க. நடுவண் ஆட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கான வழிகாட்டும் அதிகாரங்களை ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துக் கொண்டுள்ளது. மெஜாரிட்டி மக்களாக இந்துக்களைக் கொண்ட ஒரு நாடு இந்து நாடாகவே இருக்க வேண்டும் என்று சங்பரிவாரங்கள், பா.ஜ.க. முன் வைக்கும் கருத்துகளின் உள்ளடக்கம் மிக மிக ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ‘மெஜாரிட்டி இந்துக்கள்’ போர்வைக்குள் மைனாரிட்டி பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு மெஜாரிட்டி இந்துக்களின் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகளை சிதைத்து, பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாடே...

“குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்போம்” – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு.

“குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்போம்” – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு.

“குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்போம்” – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு. டிச.23 திங்கள் அன்று அனைத்துக் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற உள்ள ‘குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி’யில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது. – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் RSS ன் திட்டப்படி மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் தான் புதிய குடியுரிமை திருத்த சட்டம் . பாஜக அரசின் இந்த புதிய குடியுரிமை திருத்த சட்டம் இந்த அரசியல் சட்ட சாசனம் உறுதியளிக்கும் மதசார்பற்ற தன்மை எனும் அடிப்படையே தகர்க்கிறது. நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்தி ஒரு மதம், ஒரு மொழி,ஒரு கலாச்சாரம் என்கிற ஆபத்தான ஜனநாயகத்திற்கு எதிரான, பன்முகத்தன்மைக்கும்,அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிரான இந்த புதிய குடியுரிமை திருத்த சட்டம் RSS ன்...

நீலச்சட்டைப் பேரணி ஒத்தி வைப்பு

நீலச்சட்டைப் பேரணி ஒத்தி வைப்பு

டிசம்பர் 22 இல் கோவையில் நடக்கவிருந்த நீலச்சட்டைப் பேரணி, உள்ளாட்சித் தேர்தல்களைக் கருதி ஒத்தி வைக்கப்படு கிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும். பெரியார் முழக்கம் 12122019 இதழ்

கழகச் செயலவை டிச.28இல் சென்னையில் கூடுகிறது

கழகச் செயலவை டிச.28இல் சென்னையில் கூடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 8.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமை குழுவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி,  பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, இணைய தள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈசுவரன், மடத்துக்குளம் மோகன், சூலூர் பன்னீர்செல்வன், அய்யனார், இரா. உமாபதி, பாரி சிவக்குமார், மேட்டூர் சக்தி ஆகியோர் பங்கேற்றனர். கழகத்தின் பரப்புரைத் திட்டங்கள், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், கழக அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. டிசம்பர் 28 சனிக்கிழமை சென்னையில் கழகச் செயலவைக் கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. செயலவையில் தோழர்களின் கருத்துகளைக் கேட்டு, செயல்...

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்ட தலித் மக்களுக்காக போராடிய தோழர்கள் கைது ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டனம் !

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்ட தலித் மக்களுக்காக போராடிய தோழர்கள் கைது ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டனம் !

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்ட தலித் மக்களுக்காக போராடிய தோழர்கள் கைது ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டனம் ! மேட்டுப்பாளையத்தில் மழையில் சுவர் இடிந்து விழுந்து 17 தலித் மக்கள் கொல்லப்பட்டுள்ளதில் ஆபத்தான நிலையில் இருந்த சுவரை பராமரிக்காத உரிமையாளரை கைது செய்யாமல், கொல்லப்பட்ட ஏழை எளிய தலித் மக்களுக்காக போராடிய தோழர்களை காவல்துறை அநாகரீகமான முறையில் கைது செய்யப்ட்டுள்ளதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு, கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு மட்டுமல்லாமல், சுவரை பராமரிக்காமல் தலித் மக்களின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்ட தலித் மக்களுக்கு உடனடியாக இழப்பீடும்,வீடிழந்த மக்களுக்கு உடனடியாக புதிய வீடுகளும் கட்டித்தரவும் தமிழக அரசு முன் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி.காலணியில் 2.12.2019 அன்று அதிகாலை...

ஜாதி-மத-சமூக அரசியல் அதிகாரங்களை வீழ்த்த உறுதி ஏற்போம், வாரீர்!

ஜாதி-மத-சமூக அரசியல் அதிகாரங்களை வீழ்த்த உறுதி ஏற்போம், வாரீர்!

பச்சை என்றால் எப்படிப் பசுமையையும், உழவையும் குறிக்குமோ… வெள்ளை என்றால் எப்படித் தூய்மையையும், அமைதியையும் வெளிப்படுத்துமோ, கருப்பு என்றால் எப்படி அடக்குமுறைகளின் எதிர்ப்பை அடையாளப் படுத்துமோ…. சிவப்பு என்றால் எப்படி எழுச்சியையும் புரட்சியையும் புலப்படுத்துமோ… அப்படி நீலம் என்றால் சாதிய ஒடுக்குமுறைகளால் புறந்தள்ளப்பட்ட வாழ்க்கையையும், அச்சாதிய அடக்குமுறைகளை மறுத்த எழுச்சியையும் அடையாளப்படுத்துகிறது… காணாமை, தீண்டாமை, புறந்தள்ளல், ஒதுக்கி வைத்தல் அடக்குமுறை செய்தல், கல்வி வேலை வாய்ப்புகளை மறுத்தல், நட்பு, காதல் ஈடுபாடுகளைத் தடுப்பதோடு பிரித்தல், கொலையும் செய்தல் – என்றெல்லாம் இன்றைய அளவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எத்தனை எத்தனை வடிவங்கள்… இத்தனையையும் மீறி படிப்படியாகத் தன்னை, தன் அறிவை, தன் வாழ்வை அடையாளப்படுத்திக் கொள்ளவும், மீட்டுக் கொள்ளவும் வேண்டிய நிலையில் இருக்கின்றனர், சாதியால் புறந்தள்ளப்பட்ட மக்கள்… பொதுப்பட மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளைக் காட்டிலும் சாதியால் புறந்தள்ளப்பட்ட மக்களின் மீதான ஒடுக்குமுறைகள் அதிகம்… இன்றைய பார்ப்பனிய இந்திய அரசும் பன்னாட்டு மூலதன...

டிசம். 22 கோவையில் நீலச் சட்டைப் பேரணி: தோழர்களே, தயாராவீர்!

டிசம். 22 கோவையில் நீலச் சட்டைப் பேரணி: தோழர்களே, தயாராவீர்!

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு டிசம்பர் 22இல் கோவையில் நீலச்சட்டைப் பேரணிக்கும் ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி நடத்தி பெரும் வெற்றி பெற்றோம். தொடர்ந்து தமிழ்நாடு ‘காவி’கள் மண் அல்ல என்பதை  உணர்த்தவே நீலச்சட்டைப் பேரணி! திருச்சிப் பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்ததைப் போல் – அந்த எண்ணிக்கையையும் மிஞ்சக் கூடிய அளவில் நீல சட்டைப் பேரணிக்கு திரண்டு வரவேண்டும்! ஜாதி எதிர்ப்பு – மதவெறி எதிர்ப்புக்கு அம்பேத்கரும்-பெரியாரும் நமக்கு இரு கண்கள்; அவர்கள் தான் நமக்கு வழிகாட்டிகள்; பார்ப்பனர்கள் ஆதிக்கம் நிறைந்த அரசியல் சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்ற புரட்சியாளர் அம்பேத்கர், தனது அறிவு ஆற்றல் சட்டப் புலமையால் சமூக நீதி என்ற இடஒதுக்கீடு தத்துவத்தை சட்டத்தின் வழியாக நிலைநிறுத்தினார். பட்டியல் இனப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு மட்டுமல்ல; பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கு சட்டத்தின் கதவுகளைத் திறந்து விட்டவரும்...

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை : அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது. இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது  சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பு தானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்து வைத்த வாதங்கள் அத்தனையையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது  என்பதும், இந்துத்துவாவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இராமர் கோயிலை இடித்து விட்டுதான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன. அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. 1949 ஆம் ஆண்டு வரை அங்கே தொழுகைகள் நடந்தன என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிப்...

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! “சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?”

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! “சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?” திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை : அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது. இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன.ஆனால் இது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்துவைத்த வாதங்கள் அத்தனைதையையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதும், இந்துத்துவாவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ராமர் கோயிலை இடித்து விட்டு தான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன.அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. 1949...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச் செய்யப்படுவதா? அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரான இந்த இந்துத்துவ அடையாள திணிப்புகள் தமிழக அரசின் விழாக்களில் திட்டமிட்டு செய்யப்படுமானால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கை ! பெரியார் பல்கலைக் கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழா 24.10 2019 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பல்கலைக் கழக துணைவேந்தர் பொ. குழந்தைவேலு, உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் பெரியாரின் படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது தற்செயலாய் நடந்தது அல்ல. இந்துத்துவவாதிகளால் திட்டமிடப்பட்ட கடும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும். இந்நிகழ்வு நடைபெற்ற சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் ஆளுயர பெரியார் சிலை உள்ளது. இந்த பெரியார் சிலையின்...

நீலச் சட்டைப் பேரணி  டிசம்பர் 22ஆம் தேதி மாற்றம்

நீலச் சட்டைப் பேரணி டிசம்பர் 22ஆம் தேதி மாற்றம்

கோவையில், புரட்சியாளர்  அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்க உள்ள  நீலச்சட்டைப் பேரணிக்கும், சாதி ஒழிப்பு மாநாட்டுக்கும் அழைக்கப்படும் தலைவர்களின்  நாள் ஒதுக்கல் போன்ற சில காரணங்களால்,  கோவை நீலச்சட்டைப் பேரணி டிசம்பர் 22ஆம் நாள் என இறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் 2019, டிசம்பர் 22 என மாற்றிப் பதிவிடுமாறும், பயண ஏற்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் 31102019 இதழ்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி சீமான் கைதட்டலுக்காகப் பேசுகிறார்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி சீமான் கைதட்டலுக்காகப் பேசுகிறார்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இராஜீவ் காந்தி கொலை குறித்து பேசியது, பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து, ஜூனியர் விகடனுக்கு 19.10.2019 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி. “ஆமாம், நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். இந்திய இராணுவத்தை அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பி, தமிழின மக்களை அழித்தொழித்த தமிழின துரோகி ராஜீவ் காந்தியை, தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்தக் கடும் சர்ச்சைப் பேச்சுதான் தமிழக… ஏன் இந்திய அரசியலில் ஹாட் டாபிக். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வரும், சீமானின் அரசியல் முகம் அறியாத கால கட்டத்திலேயே தனது இயக்கத்தின் கூட்டங் களில் மேடையேற்றிப் பேச வைத்தவருமான திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்தோம்....

டிசம்பர் 22 – கோவையில்  நீலச் சட்டைப் பேரணி

டிசம்பர் 22 – கோவையில் நீலச் சட்டைப் பேரணி

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்வைத்து, எதிர்வரும் 2019 டிசம்பர் 22 ஞாயிறு அன்று கோவை மாநகரில் நீலச்சட்டைப் பேரணியும், ஜாதி ஒழிப்பு மாநாடும் நடத்துவதென 20.10.2019 ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், ஜாதி ஒழிப்பில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும், நீலச் சட்டையோடு பேரணியிலும் மாநாட்டிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டு, ஜாதி ஒழிப்புக்கு வலுசேர்க்க,  உடனே திட்டமிடுமாறு உரிமையுடன் வலியுறுத்துகிறோம். கொளத்தூர் மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் டிச 15 இல் இருந்து டிச 22 ஆக மாற்றப்பட்டுள்ளது

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச்செய்யப்படுவதா ?  கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச்செய்யப்படுவதா ? கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !

” *பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச்செய்யப்படுவதா ?* *”கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !”* அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரான இந்த இந்துத்துவ அடையாள திணிப்புகள் தமிழக அரசின் விழாக்களில் திட்டமிட்டு செய்யப்படுமானால் *கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கை !* பெரியார் பல்கலைக் கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழா 24.10 2019 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாநில ஆளுனர் பன்வாரிலால் புரோகித்,தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,பல்கலைக் கழக துணைவேந்தர் பொ.குழந்தைவேலு,உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் பெரியாரின் படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.இது தற்செயலாய் நடந்தது அல்ல. இந்துத்துவ வாதிகளால் திட்டமிடப்பட்ட கடும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும்.(காண்க : அழைப்பிதழ் ) இந்நிகழ்வு நடைபெற்ற சேலம் பெரியார் பல்கலைக் கழக...

கோவையில் 2019 டிசம்பர் 15 நீலச் சட்டைப் பேரணி

கோவையில் 2019 டிசம்பர் 15 நீலச் சட்டைப் பேரணி

கோவையில் 2019 டிசம்பர் 15 நீலச் சட்டைப் பேரணி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்வைத்து, எதிர்வரும் 2019 டிசம்பர் 15 ஞாயிறு அன்று கோவை மாநகரில் நீலச்சட்டைப் பேரணியும், ஜாதி ஒழிப்பு மாநாடும் நடத்துவதென 20-10-2019 ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது கழகத் தோழர்களும், ஜாதி ஒழிப்பில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும், நீலச் சட்டையோடு பேரணியிலும் மாநாட்டிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டு, ஜாதி ஒழிப்புக்கு வலுசேர்க்க, உடனே திட்டமிடுமாறு உரிமையுடன் வலியுறுத்துகிறோம் கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தேசத் துரோக வழக்கு:  கழகத் தலைவர்  கொளத்தூர் மணி கண்டனம்

தேசத் துரோக வழக்கு: கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி: தனி மனிதர்கள் மீது மதத்தின் பெயரால் கும்பலாக தாக்குதல் நடத்தக்கூடாது என்று கடிதம் எழுதியதற்காக ஆய்வாளர் இராமச்சந்திர குஹா, ரேவதி, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காந்தியாரைக் கொன்ற கோட்சேயை புகழ்ந்து தென்னாட்டுக் கோட்சே என்று எச்.இராஜாவிற்கு சுவரொட்டி அடிக்கப்படுகிறது. எது தேசதுரோகம் என்று தெரியாத நிலை உள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி மூலம், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் நகர நாகரிகம் வெளியே தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்வதற்கு மத்திய அரசு விரும்பவில்லை. தமிழகத் தொல்லியல் துறை மூலம், கீழடி ஆய்வை தொடர்ந்து அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அதே நேரம் பூம்புகார், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு உள்ளிட்ட இடங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7...

கோவையில் 2019 டிசம்பர் 15 – நீலச் சட்டைப் பேரணி

கோவையில் 2019 டிசம்பர் 15 – நீலச் சட்டைப் பேரணி

கோவையில் 2019 டிசம்பர் 15 – நீலச் சட்டைப் பேரணி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்வைத்து, எதிர்வரும் 2019 டிசம்பர் 15 ஞாயிறு அன்று கோவை மாநகரில் நீலச்சட்டைப் பேரணியும், ஜாதி ஒழிப்பு மாநாடும் நடத்துவதென 20-10-2019 ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது கழகத் தோழர்களும், ஜாதி ஒழிப்பில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும், நீலச் சட்டையோடு பேரணியிலும் மாநாட்டிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டு, ஜாதி ஒழிப்புக்கு வலுசேர்க்க, உடனே திட்டமிடுமாறு உரிமையுடன் வலியுறுத்துகிறோம்   கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

இந்தியாவின் ஒற்றை மொழி இந்தி அல்ல; ‘இந்து’ என்போரின் ஒற்றை மொழியும் சமஸ்கிருதம் அல்ல

இந்தியாவின் ஒற்றை மொழி இந்தி அல்ல; ‘இந்து’ என்போரின் ஒற்றை மொழியும் சமஸ்கிருதம் அல்ல

20.9.2019 அன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். ஒரே நாடு – ஒரே வரி – ஒரே தேர்வு – ஒரே கல்வி – ஒரே குடும்ப அட்டை – ஒரே பண்பாடு என்பதன் தொடர்ச்சியாக ஒரே மொழி என்ற ஒற்றை இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படும் நடுவண் ஆட்சி, இந்தியை ஒற்றை அடை யாளமாகத் திணிக்கத் தொடங்கி விட்டது. இந்தி எதிர்ப்பில் களம் பல கண்ட தமிழ்நாடு இந்தித் திணிப்பை ஒன்றுபட்டு எதிர்த்து வருவது பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியதாகும். அதுபோலவே இறை நம்பிக்கை கொண்ட தமிழர்கள் தங்கள் குடும்ப நிகழ்வுகளிலும்,  அவர்கள் நடத்தும் வழிபாடுகளிரும் ஒற்றை இந்து பண்பாடாக பார்ப்பனியத்தால் திணிக்கப்படும் சமஸ்கிருத புரோகிதத்தைப் புறம் தள்ள வேண்டும் என்று இம்மாநாடு இறை நம்பிக்கைக் கொண்ட பார்ப்பனரல்லாதாரை கேட்டுக் கொள்கிறது. குழந்தைகளுக்கு...

அக்.2 ஆர்ப்பாட்டத்துக்கு தயாராவீர்! தோழர்களே!

அக்.2 ஆர்ப்பாட்டத்துக்கு தயாராவீர்! தோழர்களே!

அனைவருக்குமான கல்வி, சமத்துவத்துக்கான கல்வி பற்றிப் பேசியது எல்லாம் போதும்; சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே அதையே பேச வேண்டுமா? அதைவிட தரமான கல்விதான் இப்போது முக்கியம் என்கிறது – புதிய கல்விக் கொள்கை. போதுமான மாணவர்கள் வராத பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு வேறு பள்ளிகளுடன் இணைத்து விட வேண்டும் என்கிறது புதிய கல்விக் கொள்கை. இராஜகோபா லாச்சாரி பள்ளிகளை மூடிய அதே காலத்துக்கு மீண்டும் இழுத்துச் செல்கிறது, இந்தக் கல்விக் கொள்கை. 5ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு நடத்த வேண்டுமாம்; தேர்ச்சி பெறும் வரை அதே வகுப்பில் குழந்தை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமாம்; இந்தத் தேர்வுக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமாம்; இப்படிக் கூறுகிறது, இந்தக் கல்விக் கொள்கை. 1953இல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிச் சிறுவர்கள், பிற்பகலில் அரை நேரம் அவரவர் பெற்றோர் செய்த குலத் தொழிலை செய்ய உத்தவிட்டார் இராஜ கோபாலாச்சாரி. 5ஆம் வகுப்போடு மாணவர்களைப் பள்ளியிலிருந்து...

மண்ணின் மைந்தருக்கே வேலை: தமிழகத்தில் சட்டம் நிறைவேற்றுக!

மண்ணின் மைந்தருக்கே வேலை: தமிழகத்தில் சட்டம் நிறைவேற்றுக!

தமிழ்நாட்டில் பல இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிலையில், மத்திய அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட நாட்டுக்காரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளமே அழிந்துபோகும் ஆபத்தை நாம் சந்திக்க வேண்டி வரும்.  வேலை வாய்ப்புகளை அழிப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே வடநாட்டுப் பண்பாட்டில் மூழ்கச் செய்யும் ஆபத்தும் இதில் அடங்கியுள்ளது. இந்த பேராபத்தைத் தடுக்க, மகாராஷ்டிரா ஆந்திரா இராஜஸ்தான் மாநில அரசுகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் குறைந்தது 75 விழுக்காட்டு  வேலைவாய்ப்புகளை – தனியார் தொழில் நிறுவனங்களிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதுவே தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வாக இருப்பதைத் தமிழக அரசு உணர வேண்டும் என்றும் மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது. – பள்ளிபாளையம் மாநாட்டுத் தீர்மானம் பெரியார் முழக்கம் 26092019 இதழ்

தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் திருத்தப்பட்ட விதியைத் திரும்பப் பெறுக!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் திருத்தப்பட்ட விதியைத் திரும்பப் பெறுக!

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்காக செயல்படவேண்டிய தமிழக அரசு, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) விதிகளைக் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள்  திருத்தி அமைத்தது. இந்தத் திருத்தத்தின் காரணமாக, வெளி மாநிலத்தவர் தமிழக அரசுப் பணிவாய்ப்புகளைப் பறிப்பதற்கு தமிழக அரசால் கதவு திறந்து விடப்படுள்ளது. இதன் காரணமாக கடந்த 2019, மே மாத இறுதியில் நடத்தப்பட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் பணியிடங்களில் 39 இடங்களைப் பிற மாநிலத்தவர்கள் பெற்றுவிட்டனர். அதுபோலவே  கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் பதவிகளிலும் இதுவே நடந்தது. மின்னணு தொடர்பியல் துறைக்கான விரிவுரையாளர்களுக்கான 36 பதவிகளில் 31ஐயும், இயந்திரப் பொறியியல் துறைக்கான விரிவுரையாளர் பணிகள் 67இல் 46 பணிகளையும் வெளிமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்கள் பறிக்க வழிவகுக்கும் 26.11.2016இல் திருத்தப்பட்ட விதிகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது....

நடுவண் அரசுப் பணிகளுக்கு மாநில அளவிலே தேர்வு நடத்துக!

நடுவண் அரசுப் பணிகளுக்கு மாநில அளவிலே தேர்வு நடத்துக!

தமிழ்நாட்டில் நடுவண் அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர் ஆக்கிரமிப்பைத் தடுக்க மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை அகில இந்திய அடிப்படையில் நடத்தாமல் மாநில அளவிலான தேர்வாக நடத்த வேண்டும் என்பதோடு,  வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் என்ற கோரிக்கையை நடுவண் அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் குஜராத் மாநிலத்திலேயே இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டதைத் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 2017 ஆம் ஆண்டு நடந்த பணியாளர்த் தேர்வில் 116 வேலை வாய்ப்புகளில் 15 மட்டுமே கிடைத்த நிலையில், குஜராத்தியர்  புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் குஜராத் மாநில அரசும் தன்னை இணைத்துக் கொண்டு குஜராத்திகளுக்கே வேலை வழங்கக் கோரியது. அதுமட்டுமின்றி குஜராத்தில் 85 விழுக்காடு வேலை வாய்ப்புகளை குஜராத்தியருக்கு...

காமராசர் நினைவு நாளான அக்.2இல்  புதிய கல்விக் கொள்கை நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம்

காமராசர் நினைவு நாளான அக்.2இல் புதிய கல்விக் கொள்கை நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம் கழக மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த தீர்மானம். ஆரியர்களின் வேத காலத்திலிருந்தே, பெரும்பான்மை உழைக்கும் மக்களான ‘சூத்திர பஞ்சம’ மக்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளன. உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை கல்வி உரிமை தடையின்றி கிடைக்கவும், உயர் கல்வியை நோக்கி அவர்கள் முன்னேறிச் செல்வதற்குமான இலகுவான சமூகச் சூழலை உருவாக்கி சமூக நீதி அடிப்படையிலான கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். அதை முழுமையாக சிதைத்து வெகு மக்களிடம் கல்வி சென்று அடைந்து விடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் தடைகளை எழுப்பி கல்வி அனைவருக்கும் பரவிடாது தடுக்கவே புதிய கல்விக் கொள்கை வந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் நோக்க உரையிலேயே இது வெளிப்படையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  “சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து எல்லோருக்கும் கல்வி – சமமான கல்வி வழங்குவதிலேயேதான் நாம் முயற்சித்தோமே தவிர, அதை விட முக்கியமான ‘தரமான கல்வி’ பற்றி கவலைப்படவே இல்லை என்று...

திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் !  தமிழ் மொழித்தாள் நீக்க அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற தமிழக அரசுக்கு வலியுறுத்தல் !

திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் ! தமிழ் மொழித்தாள் நீக்க அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற தமிழக அரசுக்கு வலியுறுத்தல் !

*தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் -2 தேர்வில் தமிழ் மொழித்தாள் நீக்கம் !* தமிழக அரசின் இந்த அறிவிப்பு *தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்பை முற்றிலும் பறிக்கும் சூழ்ச்சித் திட்டம்* ! *திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் !* *தமிழ் மொழித்தாள் நீக்க அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற தமிழக அரசுக்கு வலியுறுத்தல் !* தமிழக அரசால் தமிழ்நாட்டில் பணிபுரிவதற்காக பணியாளர்களைத் தெரிவு செய்ய தேர்வுகளை நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது நடைபெற உள்ள குரூப்- 2 தேர்வில் தமிழ் மொழித்தாளை நீக்குவதாக அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும். மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் மத்திய அரசுப் பணிக்காக தமிழ்நாட்டில் பணி புரிவதற்கு, தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களுக்கே அந்த வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் மத்தியில் பரப்புரை செய்து போராட்டங்கள் நடத்தி வரும் இச்சூழலில் தமிழக...

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள்

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள்

தீர்மானம் எண் : 1 தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் ! தமிழ்நாட்டில் பல இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட நாட்டுக்காரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளமே அழிந்துபோகும் ஆபத்தை நாம் சந்திக்க வேண்டி வந்துவிடும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அழிப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே வடநாட்டு பண்பாட்டில் மூழ்கச் செய்து விடும். இந்த பேராபத்தைத் தடுக்க, மகாராஷ்டிரா ஆந்திரா இராஜஸ்தான் மாநில அரசுகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் குறைந்தது 75 விழுக்காட்டு வேலைவாய்ப்புகளை – தனியார் தொழில் நிறுவனங்களிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதுவே தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வாக...

பரப்புரைப் பயணம் மீண்டும் செப். 17இல் தொடங்குகிறது

பரப்புரைப் பயணம் மீண்டும் செப். 17இல் தொடங்குகிறது

ஆகஸ்ட் 25ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கிய ‘மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண’த்துக்கு தமிழகம் முழுதும் காவல் துறை வழங்கிய அனுமதியை திடீரென மறுத்தது. வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு, தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுறுவல் ஆகிய பிரச்சினைகளை காவல்துறை காரணமாகக் கூறியது. அதைத் தொடர்ந்து கழகத்தின் பரப்புரைப் பயணம் தள்ளி வைக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளில் மீண்டும் பரப்புரைப் பயணம் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடங்குகிறது. செப். 20இல் நாமக்கல் பள்ளிப் பாளையத்தில் நிறைவு விழா மாநாடு நடைபெறும். காவல்துறைக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. தோழர்களே, தயாராவீர்! பெரியார் முழக்கம் 0509209 இதழ்

காவல்துறை திடீர் தடை:  பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு !

காவல்துறை திடீர் தடை: பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு !

காவல்துறை திடீர் தடை:  பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு ! மண்ணிண் மைந்தருக்கு வேலை கொடு ! தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! என்கிற முழக்கத்தோடு திராவிடர்_விடுதலை_கழகம் ஆக. 26-31 வரை தமிழ்நாட்டின் 5 முனைகளில் இருந்து தொடங்கிய பரப்புரைப் பயணம் முறையாக காவல்துறையின் அனுமதி பெற்று துவங்கப்பட்டது ஆனால் தற்போது ஆக. 25இல் தொடங்கிய கழகத்தின் பரப்புரைக் குழுக்களுக்கும்,ஆக. 26இல் தொடங்கிய பரப்புரைக் குழுக்களுக்கும் காவல்துறை திடீரென அனுமதி மறுத்துள்ளது. எனவே பரப்புரைப் பயணத்திட்டமும் பள்ளிப்பாளையம் நிறைவு விழா மாநாடும் தள்ளி வைக்கப்படுகிறது. புதிய பயணத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். – கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் முழக்கம் 29082019 இதழ்

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஆகஸ்டு 2019 மாத இதழ்

*”நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….* திராவிடர் விடுதலைக் கழகத்தின் *”ஆகஸ்டு 2019″* மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 📚 *தலையங்கம் – ஒற்றை ஆட்சி முறையில் வேத காலத்தை நிறுவ முயற்சி* 📖 *காஷ்மீர்: வரலாறும், துரோகமும்- சிறப்புக் கட்டுரை* 💥 *புரோகிதர் மேலாதிக்கம் உருவான வரலாறு* 📝 *கடும் நெருக்கடியில் இந்திய பொருளாதாரம்-ஓர் அலசல்* ❗ *தேசிய விருது: தமிழ்ப் படங்கள் புறக்கணிப்பு* இன்னும் அரசியல் பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰அஞ்சல் வழியாக பெற – ₹ 300/- 💰தனி இதழ் விலை – ₹ 20/- *தொடர்புக்கு : 7299230363*, *7373684049*

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஆண்டுத் தொகுப்புகள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஆண்டுத் தொகுப்புகள்

பள்ளிப் பாளையம் நிறைவு விழா மாநாட்டில் கிடைக்கும்! நிமிர்வோம் 2018ஆம் ஆண்டு இதழ்களின் தொகுப்பு (அழுத்தமான அட்டையுடன்) விலை: ரூ. 500/- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ 2018ஆம் ஆண்டு தொகுப்பு (அழுத்தமான அட்டையுடன்) விலை : ரூ. 500/- – நிர்வாகி பெரியார் முழக்கம் 22082019 இதழ்

விநாயகர் சதுர்த்தி  – கழகத் தலைவர் அறிக்கை !

விநாயகர் சதுர்த்தி – கழகத் தலைவர் அறிக்கை !

விநாயகர் சதுர்த்தி – கழகத் தலைவர் அறிக்கை !. விநாயகர் சதுர்த்தியின் போது மீறப்படும் உச்சநீதி மன்ற உத்தரவுகள்,அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஆதாரங்களோடு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்காத காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டி கழகத் தோழர்கள் செய்ய வேண்டியவை குறித்து கழகத் தலைவர் அறிக்கை ! ________________________________ அன்பார்ந்த தோழர்களே! கடந்த சில ஆண்டுகளாக – பல விதிமீறல்களை, அத்துமீறல்களை செய்து சர்ச்சைகளை,கலவரங்களை உருவாக்கவே உருவாக்கப்பட்டுள்ள பிள்ளையார் சதுர்த்தி எதிர்வரும் செப்டம்பர் இரண்டாம் நாள் வருகிறது. ஏறத்தாழ செப்டம்பர் 6ஆம் நாள் முதல் பிள்ளையார் ஊர்வலங்கள் தொடங்கிவிடும். இது தொடர்பாகவே சில செய்திகளை, அதற்கென நாம் எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள் குறித்து நினைவூட்டவே இதை எழுதுகிறோம். 1) பிள்ளையார் சிலைகளை பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சுட்ட களிமண் ஆகியவற்றால் செய்யக்கூடாது; இரசாயன வண்ணம் பூச கூடாது என்பதும், பச்சைக் களிமண்ணால் மட்டுமே...

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை

மண்ணின் மைந்தர்களின்  வேலை வாய்ப்பு உரிமையைப் பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை திணிக்காதே! தமிழ் நாட்டை வட நாடாக்காதே! நாம் மண்ணின் மைந்தர்கள் தலைமுறை தலைமுறையாக இந்த மண்ணில் பிறந்தோம், வாழ்கிறோம், ஆனாலும், பிற வட மாநிலங்களைவிட – நாம் வேறுபட்டுள்ளோம். எவ்வளவு ஒடுக்கப்பட்ட ஜாதியானாலும் சரி; ஏழ்மையும், வறுமையும் நம்மை வாட்டினாலும் சரி; எப்பாடுபட்டாவது – நமது மகளை,  மகனை  படிக்க  வைக்க வேண்டும்; உயர் கல்வியைத் தர வேண்டும் என்ற கொள்கையே நமது பண்பாடு! பெரியார் இட ஒதுக்கீட்டுக்காக 1919 முதலே போராடினார். உரிமையைப் பெற்று தந்தார். காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்- அந்த  உரிமைகளை படிப்படியாக வளர்த்தார்கள். அம்பேத்கர் சட்டத்தின் வழியாக நமக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை உறுதிப்படுத்தினார். வி.பி.சிங் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தந்தார். போராடிப் பெற்ற சமூக நீதி உரிமைகளை தற்போது பறிகொடுத்து வருகிறோம் . இப்போது...

பரப்புரைப் பயணத்திற்கான புதிய வெளியீடுகள்

பரப்புரைப் பயணத்திற்கான புதிய வெளியீடுகள்

1)            பள்ளிகளிலிருந்து குழந்தைகளை விரட்டும் புதிய கல்விக் கொள்கை 2)            தமிழர்கள் வேலை வாய்ப்பைப் பறிக்கும் – வடநாட்டுக்காரர்கள் 3)            பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் – போராட்ட வரலாறுகளின் ஒரு தொகுப்பு 4)            10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி 5)            ஆர்.எஸ்.எஸ். கேள்விகளுக்கு அதிரடி பதில். 6)            கருஞ்சட்டைக் கலைஞர் 7)            ‘வீர’ சாவர்க்கர் யார்?   பெரியார் முழக்கம் 15082019 இதழ்

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

எங்கள் தலைமுறையை வாழவிடு ! தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயணம் !

உரிமை முழக்க பரப்புரை பயண நிறைவு விழா மாநாடு ! 30.08.2019 வெள்ளி மாலை 6.00 மணி – நேரு திடல் பள்ளி பாளையம். எங்கள் தலைமுறையை வாழவிடு ! தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயணம் ! 2019 ஆகத்து 26 முதல் 30 வரை ! சிறப்புரை : தோழர்.#கொளத்தூர்_மணி தலைவர், திராவிடர் விடுதலை கழகம். தோழர்.#விடுதலை_ராசேந்திரன். பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம்.

மண்ணின் மைந்தர் உரிமை முழக்கப் பரப்புரைப் பயணம் நிறைவு விழா பள்ளிபாளையம்

மண்ணின் மைந்தர் உரிமை முழக்கப் பரப்புரைப் பயணம் நிறைவு விழா பள்ளிபாளையம்

பயண நிறைவு நாள் மாற்றம்: #அறிவிப்பு மண்ணின் மைந்தர் உரிமை முழக்கப் பரப்புரைப் பயணம் நிறைவு விழா – இடம் மற்றும் நாள் மாற்றம் அறிவிப்பு கடந்த ஜூலை-18″ 2019 பெரியார் முழக்கத்தில் வெளிவந்த #பரப்புரை_பயண_நிறைவு_விழா – இடம் *மேட்டூர்* , நாள் – 31. 08. 2019 என அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்படி பயண நிறைவு விழா *#பள்ளிபாளையத்தில்* ( #நாமக்கல்மாவட்டம்) *30.08.2019* *வெள்ளி* மாலை நடைபெறும் என அறிவிக்கிறோம். பயணக் குழு பொறுப்பாளர்கள் 30.08.2019 அன்று பள்ளிபாளையத்தில் பரப்புரை பயணம் நிறைவடையும் வகையில் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கும்படியும், தேவையெனில் மாநில பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு பயண திட்டத்தை வகுத்துக் கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம். #கொளத்தூர்மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்.

அடுத்து தொடர்ச்சியாய் செய்ய வேண்டியது…

அடுத்து தொடர்ச்சியாய் செய்ய வேண்டியது…

அன்பார்ந்த தோழர்களே, அண்மைக்காலமாக பொதுவெளியிலும் சமூக வலை தளங்களிலும் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களுக்காக அந்த கருத்துகளில் சமூக அமைதிக்கு எவ்வித நெருடலும் சீர்குலைவும் ஏற்படாத நிலையிலும் கூட காவல்துறையும் நீதித்துறையும் முன்னெடுக்கும் பக்க சார்பான நடவடிக்கைகளை தொடர்ந்து காண முடிகிறது. ராஜராஜ சோழனைப் பற்றிய திறனாய்வு பேச்சுக்கு காவல்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்கிறது 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்தவற்றை ஏன் இப்போது பேச வேண்டும் என்கிறது நீதிமன்றம்.முன் பிணைக்கு கூட இனி பேச மாட்டேன் என உறுதி கேட்கிறது நீதித்துறை . பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று பேசியதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தாலும் ஊடகங்கள் அனைத்தும் சில நாட்கள் அது குறித்தே பேசியிருந்தாலும் பல புகார் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில் தயங்கி நின்ற துறைகள்தான் நம்மைப் போன்றோர் மீதான புகார்களுக்கு நடவடிக்கைகளை எடுக்க அவசர அவசரமாக செயல்படுகிறார்கள் உயர் நீதிமன்றத்தை பற்றியே பொது...

தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் தலைவிரித்தாடுகின்றன. ஜாதிகளைக் கடந்து ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொள்ள அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஜாதிவெறிக் கூட்டம் கையில் எடுத்துக் கொண்டு வீச்சறிவாளையும் கத்தியையும் தூக்கிக் கொண்டு வருகிறது. ‘நாம் எல்லோரும் இந்துக்கள்’ என்று மதவாதம் பேசும் கூட்டம், இந்துக்களுக்குள்ளே நடக்கும் ‘ஜாதிக் கொலைகளை’ எதிர்க்காமல் மவுனம் சாதிக்கிறது. தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளே நடக்கவில்லை என்கிறது, தமிழக அரசு! ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சட்டத்தையும் கொண்டுவர மறுக்கிறது, மத்திய சட்ட ஆணையம். ஜாதியப் படுகொலைகளைத் தடுக்கும் மசோதாவைத் தயாரித்து 2011ஆம் ஆண்டு நடுவண் ஆட்சிக்கு அனுப்பி பல ஆண்டுகளாகியும் மசோதா கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஜாதி ஆணவப் படுகொலைகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுகளுக்கு 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 22 மாநில அரசுகள் பதிலளித்து விட்டன. தமிழ்நாடு மட்டுமே பதிலளிக்கவில்லை. இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய முன் வந்தால் முதியவர்கள்...

மண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே! ஆக. 26-31 வரை கழகத்தின் பரப்புரை 5 முனைகளிலிருந்து தொடங்குகிறது கழகத்தின் தலைமைக் குழு முடிவு

மண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே! ஆக. 26-31 வரை கழகத்தின் பரப்புரை 5 முனைகளிலிருந்து தொடங்குகிறது கழகத்தின் தலைமைக் குழு முடிவு

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, ஜூலை 13, 2019 பிற்பகல் 2.30 மணியளவில் மேட்டூரில் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நிகழ்ந்த குழுவின் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, முகநூல் பதிவு பொறுப்பாளர் பரிமள ராசன், இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், சென்னை இரா. உமாபதி, விழுப்புரம் அய்யனார், மடத்துக்குளம் மோகன், மேட்டூர் சக்திவேல், காவலாண்டியூர் ஈசுவரன், சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கழகக் கட்டமைப்பு நிதி வரவு குறித்து நன்கொடையாளர்கள் அளித்த நிதி விவரங்களை தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன் விரிவாக எடுத்துரைத்தார். தலைமைக் கழகக் கட்டிடத்தை மறு சீரமைப்பு...

கழகத் தலைமைக் கழகத்தைத் தக்கவைக்க ஆர்வத்துடன் நிதி குவிக்கும் தோழர்கள்

கழகத் தலைமைக் கழகத்தைத் தக்கவைக்க ஆர்வத்துடன் நிதி குவிக்கும் தோழர்கள்

கழகத் தோழர்களே! தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்பு நிதி திரட்டும் களப் பணியை தொடங்கி விட்டீர்களா? அதற்கான துண்டறிக்கை – நன்கொடை ரசீதுகள் – தோழர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைச் சந்திக்க வருகிறார்கள். தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த ரூ.20,000/- நன்கொடை திரட்டும் இயக்கத்தில் தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது நமக்கு நல்ல நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறிவித்த சில நாட்களிலே சில தோழர்கள் ரூ.20,000/- நன்கொடையை வழங்கியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். கடந்த இதழ்த் (9.5.2019) தொடர்ச்சி: திருவெறும்பூர் அரசெழிலன்   -ரூ.   20,000/- (மாதவன் மென்பொருள் அங்காடி) டாக்டர் சக்திராஜன்     –      ரூ.   20,000/- டாக்டர் நவீன்    –      ரூ.   10,000/- டாக்டர் சிவபாலன்      –      ரூ.  5,000/- டாக்டர் மோகன்ராஜ்    –      ரூ.   3,000/- திருநாவுக்கரசு    –      ரூ.   5,000/- செம்மொழி...

மே 25, 27இல் மேட்டூர் – திருப்பூரில் கழக தோழர்கள் கட்டமைப்பு நிதி வழங்குகிறார்கள்

மே 25, 27இல் மேட்டூர் – திருப்பூரில் கழக தோழர்கள் கட்டமைப்பு நிதி வழங்குகிறார்கள்

கழகத் தோழர்கள், களப்பணி யாளர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்ச நன்கொடை ரூ.20000/- என்று கழகம் அறிவித்தத் திட்டத்தைத் தோழர்கள் உற்சாகத்துடன் செயல்படுத்தி வருகிறார்கள். கழகத் தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான இந்த நிதி திரட்டும் இயக்கத்தின் முதல் கட்டமாக மேட்டூர், திருப்பூரில் நிதி வழங்கும் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. மே 25ஆம் தேதி  காலை 11 மணியளவில் மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கழகங்கள் சார்பில் கழகத் தலைவர், பொதுச் செயலாளரிடம் நிதி வழங்கப்படுகிறது. மே 27 அன்று திருப்பூரில் ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி மாவட்டக் கழகத் தோழர்கள் முதல்கட்ட நிதியை கழகத் தலைவரிடம் வழங்குகிறார்கள். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்கிறார்கள். பெரியார் முழக்கம் 09052019 இதழ்