தலைமை அறிக்கை

mani

அன்பு தோழருக்கு,
வணக்கம்

எதிர்வரும் 19.07.2015 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு, தருமபுரி பெரியார் மன்றத்தில் (பெரியார் சிலை அருகில்) திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவைக் கூட்டம் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.
அதில் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள், பயிற்சி வகுப்புகள், செயல்திட்டங்கள், கழக அமைப்பு முறைகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்க குறித்த நேரத்தில் தவறாது வருமாறு தோழமையுடன் அழைக்கிறோம்  மேலும், அச்செயலவையில் தனியார் துறை இடஒதுக்கீடு, எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் பயண நோக்கங்களை ஒருங்கிணைத்த பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள – தங்கள் மாவட்டத்தில் பகுதி /ஒன்றிய, கிளைக் கழகங்களுடன் விவாதித்து எந்தெந்த பாதை வழியாக பயணம் மேற்கொள்வது, எங்கெங்கு தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்கிற முன்மொழிவுகளுடன் வருமாறும் வேண்டுகிறோம்

தலைமை கழகம்

You may also like...

Leave a Reply