Author: admin

சென்னையில் ஈ.வெ.ரா.  சிறை சென்ற தாய்மார்களுக்குப் பாராட்டு

சென்னையில் ஈ.வெ.ரா. சிறை சென்ற தாய்மார்களுக்குப் பாராட்டு

  தாய்மார்களே! தோழர்களே! அருமைச் சிறுவன் – லூர்துசாமியும், சகோதரி பார்வதியம்மையாரும் பேசிய பேச்சு என் மனதை உருக்கிவிட்டது. அதனால் நான் பேசக் கருதியிருந்ததை மறந்தேன். நிற்க, காலை நடைபெற்ற சம்பவம் நடக்குமென்று நான் நினைக்கவில்லை. இரண்டு குழந்தைகளுடன் சென்ற 5 தாய்மார்கட்கும், 2 தொண்டர்கட்கும் 6 – வாரம் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று ஒரு முத்துக்குமாரசாமிப் பாவலருக்கு 18 – மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே இந்த நாள் மிக வன்மத்துடன் மனதில் வைக்கவேண்டிய நாளாகும். உண்மையுடன் சிறை செல்பவருக்கு அங்கு ஒருவித கஷ்டமுமில்லை. கஷ்டமென்று நினைப்பவருக்கு வெளியில் கூடக் கஷ்டமாய்த் தானிருக்கும். என் அனுபவத்தில் 5,6 முறை சிறை சென்றிருக்கின்றேன். 18 ஆண்டுகளுக்கு முன் நான் சிறைசென்ற காலத்து முத்திரம் கழிப்பது, தண்ணீர் குடிப்பது எல்லாம் ஒரே சட்டியில் தான். அவ்வளவு கொடுமையாவிருந்தது; கேள்வி முறையில்லை. ஆனால் இன்றைய சிறையோ பெரிதும் மாற்றமடைந்துள்ளது. காங்கரஸ்காரர் சிறை சென்ற...

எதிர்ப்பை அடக்க புதிய சூழ்ச்சி

எதிர்ப்பை அடக்க புதிய சூழ்ச்சி

  காங்கரஸ்காரர்கள் எப்படிப்பட்ட காலித்தனம் செய்தாலும் அதை பொது ஜனங்களின் கோபம் என்றும், ஆத்திரமென்றும் “தினமணி”யும் “சுதேசமித்திர”னும் “ஆனந்த விகட”னும் எழுதி வருகின்றன. காங்கரஸ் காலித்தனங்களுக்குப் பொது ஜனங்களால் புத்தி கற்பிக்கப்பட்டால் அது சு.ம.காரர்கள் காலித்தனம் என்றும், சில நாளாக இந்தி எதிர்ப்பவர்கள் காலித்தனமென்றும் அப்பத்திரிகைகள் எழுதி வருகின்றன. இந்தி எதிர்ப்பை அடக்க காந்தியாரும், ஆச்சாரியாரும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாய் விட்டன. கனம் ஆச்சாரியார் புளுகுகளுக்கு இன்று பொது ஜனங்களிடம் அரைக்காசு மதிப்புக்கூட இல்லாமல் போய்விட்டதானது யாவருக்கும் தெரிந்துவிட்டது. மாஜிஸ்ட்ரேட் நற்சாட்சிப் பத்திரம் கனம் ஆச்சாரியார் இந்தி தொண்டர்கள் மீது அபாண்டப் பழி சுமத்தினார். பிரமுகர்கள் வீடுவீடாய் ஏன்? வெள்ளைக்காரர்கள் வீடு வீடாய் சென்று “இந்தி எதிர்ப்பாளர்கள் என்னையும் என் பெண்டுபிள்ளைகளையும் கண்டபடி பேசுகிறார்கள்” என்று நினைக்க முடியாத வார்த்தைகளை கட்டுக் கட்டி கூறினார். அவரது கூலிப்பத்திரிகைகளும் அவற்றை அப்படியே எடுத்துப் பெருக்கி விஷமப் பிரசாரம் செய்தன. அவ்வளவும் தோழர்...

தேசீயப் பத்திரிகைகளின் போக்கு

தேசீயப் பத்திரிகைகளின் போக்கு

ஸர்.ஸி.பி. ராமசாமி அய்யர் திருவிதாங்கூர் திவானாக நியமிக்கப்பட்டு விட்டாராம். தேசீயப் பத்திரிகைகளும் செமிதேசீயப் பத்திரிகைகளும் பத்தி பத்தியாய் அவரைப் பற்றி எழுதுகின்றன. சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையில் தேசீயம் என்றால் பிராமணீயம் என்றுதான் பொருள். எனவே ஒரு பார்ப்பனர் திவான் ஆனதைப்பற்றி பார்ப்பனப் பத்திரிகைகளும் செமி பார்ப்பனப் பத்திரிகைகளும் ஆனந்தக் கூத்தாடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கில்லை. ஸர்.ஸி.பி. திருவிதாங்கூர் திவான் ஆனதைப்பற்றி நாம் பொறாமைப்படவுமில்லை. ஏன்? அதைப்பார்த்துப் பொறாமைப் படக்கூடிய நிலையில் நாம் இப்பொழுது இல்லை. திவான் பதவியை விட பதின்மடங்கு பொறுப்பும் பெருமையும் வாய்ந்த பதவிகளை நம்மவர்கள் வகித்து வருகையில் மேலும் வகிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகுந்து வருகையில் எவ்வளவு உயரிய பதவிகளை வகிக்கவும் நம்மவர்களுக்கு லாயக்குண்டு என்ற உண்மை வெளியாகி உறுதி பெற்று வருகையில், ஸர்.ஸி.பி. திருவிதாங்கூர் திவான் ஆனதைப்பற்றி நாம் பொறாமைப் படக் காரணமில்லை. மேலும் ஜில்லா கலக்டராயிருந்த பார்ப்பனர்கள் பரோடா போன்ற சமஸ்தானங்களில் திவான் உத்தியோகம் பெற்றிருக்கையில், சென்னை மாகாணச்...

காங்கரஸ்காரர் பித்தலாட்டம்

காங்கரஸ்காரர் பித்தலாட்டம்

  ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை காங்கரஸ் பேரால் அயோக்கியர் யோக்கியராகிவிடமாட்டார்கள் ஆளின் யோக்கியதையைக் கவனித்து வோட்டுக் கொடுங்கள் தலைவரவர்களே தோழர்களே! இன்று தேர்தலும் ஓட்டர்கள் கடமையும் என்பதாக பேச இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி நான் முன்னமேயே அநேக தடவை பேசியிருக்கிறேன். தேர்தல்கள் வரும்போதெல்லாம் இந்த விஷயத்தைப்பற்றி பேசுவது சகஜமேயாகும். அதுபோலவே சென்னையில் இப்போது கார்ப்பரேஷன் எலக்ஷன் நடக்கப்போவதால் அதைப்பற்றி பேச ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிகிறது. தேர்தல்களுக்கும் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை நான் எப்போதும் அதாவது காங்கிரசில் இருக்கும்போது முதலே தேர்தலைப்பற்றிப் பேசுவதாய் இருந்தால் குறிப்பாக ஸ்தல ஸ்தாபன தேர்தல்களைப் பற்றி பேசுவதாய் இருந்தால் கட்சிகளைப் பற்றிக் கவனிக்க வேண்டாம் என்றும் ஆட்களின் தராதரங்களைக் கண்டு ஓட்டு செய்யுங்கள் என்றும் ஓட்டர்களை கேட்டுக் கொள்ளுவது வழக்கம். இம்மாதிரியாக கேட்டுக் கொள்ளும் கூட்டங்களில் கட்சிகளைப்பற்றியும் நான் எப்போதாவது பேசியிருப்பேனேயானால் அது காங்கிரசுக்காரர்கள் கட்சிகளைப் பிரதானப்படுத்தி தங்கள் கட்சியே யோக்கியமான கட்சி என்றும்,...

சென்னையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு

சென்னையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு

  தலைவரவர்களே! தாய்மார்களே! இத்தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில், உங்கள் முன்னால் பேச சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி உண்மையிலேயே பெரு மகிழ்ச்சியடைகிறேன். சமுத்திரம் போல் பெண்கள் கூடியுள்ள இக்கூட்டத்தைப் பார்க்க என் மனமே ஒருவித நிலைகொள்ளா மகிழ்ச்சியடைகிறது. ~subhead சென்னையைப் பற்றி ~shend இவ்வளவு பெரிய ஒரு பெண்கள் கூட்டம் சென்னையில் கூடும் என நான் நினைக்கவில்லை. சென்னையைப்பற்றி நான் சில சமயங்களில் பரிகாசமாய் நினைப்பதுண்டு. என்ன வென்றால் சென்னை மூடநம்பிக்கைக்கு இருப்பிடமானது என்று நான் சொல்லுவதுண்டு. இதை நான் அடிக்கடி பத்திரிகையிலும் எழுதி வந்திருக்கிறேன். சென்னையிலுள்ள எனது சில தோழர்களுக்கு நீங்கள் முடநம்பிக்கையை விடுங்கள் பகுத்தறிவுடன் வாழுங்கள் என்று கூறுகின்ற காலத்து அவர்கள் நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்றும் அவற்றை அப்படியே ஒப்புக் கொள்வதாகவும் ஆனால் தங்கள் வீட்டிலுள்ள பெண்கள் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறார்களே என்றும் உங்களை இழித்துக் கூற உங்கள் மீது பழியைப் போட்டதை நான் பல...

சென்னைக் “கலவரங்கள்”

சென்னைக் “கலவரங்கள்”

கட்டாய இந்தியினால் தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஆபத்து உண்டாகுமெனத் தமிழர்கள் நம்புகிறார்கள். கட்டாய இந்தியினால் தமிழர்களுக்கு ஏற்படும் தீமைகளை மறைமலையடிகளும் தோழர் சோமசுந்தர பாரதியாரும், சிறு சுவடி மூலமும், பகிரங்கக் கடிதம் மூலமும் காங்கரஸ் மந்திரி சபையாருக்கு அறிவுறுத்தியுமிருக்கிறார்கள். திருச்சி, காஞ்சீவரம், சோழவந்தான் முதலிய இடங்களில் கூடிய தமிழர் மகாநாட்டிலும் கட்டாய இந்தியால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் இடையூறுகள் விளக்கப்பட்டு கண்டனத் தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. மற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் பொதுக்கூட்டங் கூட்டி கட்டாய இந்தி கண்டிக்கப்பட்டிருக்கின்றது. சென்னைக் கடற்கரையில் கூடிய மூன்று பிரம்மாண்டமான இந்தி எதிர்ப்புக் கூட்டங்களிலும் கட்டாய இந்தி கண்டிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறெல்லாம் தமிழர்கள் கட்டாய இந்தியை பகிரங்கமாக எதிர்த்தும் கனம் ஆச்சாரியார்கள் மனமிளகாததினால் ஆவேசங்கொண்ட தமிழர்கள் நேரடியாக வேலை செய்யத் தொடங்கினார்கள். உடனே அவர்கள் மீது கிரிமினல் திருத்தச் சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டு இன்றுவரை 446 பேர் சிறை புகுந்திருக்கிறார்கள். ஆண்கள் சிறை புகுந்தும் பலன் ஏற்படாததினால் இப்பொழுது பெண்களும்...

மறுபடியும் வெளியேறும் நாடகம்

மறுபடியும் வெளியேறும் நாடகம்

இனிப் பலிக்காது! காங்கரஸ்காரர்கள் பொதுஜனங்களை ஏமாற்றுவதற்காக புது எலக்ஷன் வரும்போதெல்லாம் அதாவது சட்டசபை காலம் காலாவதி ஆகும் போதெல்லாம் தாங்கள் சட்டசபை ஸ்தானத்தை லட்சியம் செய்யாதவர்கள் என்று காட்டிக்கொள்ளுவதற்காக சட்ட சபையைவிட்டு வெளியேறிவிட்டதாக வேஷம் போட்டு நாடகம் நடிப்பது வழக்கம். இந்த நாடகத்தை தோழர்கள் பெரிய மோதிலால் நேரு முதல் அநேகர் நடித்துப் பார்த்தாய் விட்டது? அப்படி இருந்தும் இப்போது வேறு வழியில் அதே நாடகத்தை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதனாலெல்லாம் பொதுமக்கள் இனி ஏமாந்துவிடமாட்டார்கள். இனி காங்கரசுக்காரர் பொது ஜனங்களை ஓட்டுக் கேட்கப்போனால் இதுவரை நீங்கள் சட்டசபையில் சாதித்ததென்ன என்றும், எந்த தடவையாவது, எதிலாவது நீங்கள் வாக்கு கொடுத்தபடி நாணயமாய் நடந்தீர்களா என்றும் கேட்டு முகத்தில் கரியைத் தடவி அனுப்பப் போகிறார்கள் என்பது உறுதி. குடி அரசு கட்டுரை 06.09.1936

ஆச்சாரியார் இதற்கென்ன பதில் சொல்லுவார்?

ஆச்சாரியார் இதற்கென்ன பதில் சொல்லுவார்?

  சென்னையில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி செய்து சிறைப்பட்ட பெண்களது வழக்கு விசாரணையில் முடிவு சொன்ன நீதிபதி அவர்கள் எழுதிய தீர்ப்பு ்விடுதலை”யில் பிரசுரிக்கப்பட்டிருப்பதை வாசகர்கள் படித்திருக்கலாம். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:- ்கிளர்ச்சி செய்த பெண்களில் இருவர் கவுரவமான பெண்கள்; மற்றும் சிலர் வயதானவர்கள். ஆதலால் அவர்கள் சொல்லுவதை நான் நம்புகிறேன். அதாவது அவர்கள் ்ராஜகோபாலாச்சாரியார் ஒழிக” என்றும் ்பார்ப்பனர் ஒழிக” என்றும் சொல்லி இருக்கமாட்டார்கள் என்றே கருதுகிறேன். அன்றியும் ்இந்தி ஒழிக” ்தமிழ் வாழ்க” என்று கோஷிப்பதாலும் குற்றமில்லை என்றும் அந்த வார்த்தைகள் குற்றமானவை அல்ல என்றும் ஒப்புக்கொள்ளுகிறேன்” என்பதாகும். இதிலிருந்து நீதிபதி அவர்கள் போலீசாரை நம்பவில்லை என்பதும் போலீசார் சொன்ன சாòயம் உண்மை அல்ல என்பதும் நன்றாய்க் காணக்கிடக்கின்றது. இந்தப் போலீசார்தான் இதுவரை அனேகத் தொண்டர்கள் மீது இதே மாதிரி சாò சொல்லி தண்டிக்கச் செய்திருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் உணர்வார்களாக. அதோடு மாத்திரமல்லாமல் சில பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள்...

“ஏழைப் பங்காளர்”

“ஏழைப் பங்காளர்”

சத்தியமூர்த்தி! தீண்டாமையொழிப்பு காங்கரஸ் வாலாக்களுக்குக் கட்டிக் கரும்பாம். எளியோர் விடுதலை பால் சோறாம். கிரியாம்சையில் இவையாவும் வாய்ப்பந்தலாகவே இருக்கிறது. 700 மைல் தூரம் கால்நடையாக நடந்து பட்டினிப்பட்டாளம் கள்ளிக்கோட்டையிலிருந்து சென்னைக்குச்சென்றது. சட்டசபையில் நமது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமென்பது அந்தப் பட்டாளத்தின் நோக்கம். “எதற்காக 700 மைல் தூரம் நடத்துவர வேண்டும்! ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்! சட்டசபை மெம்பர்கள் மூலம் சமர்ப்பித்தால் போதுமே” என்றெல்லாம் சர்க்கார் காரணம் கூறிக்கொண்டார்களாம். சட்டசபை செல்ல பட்டாளம் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஏழைகளுக்காகப் பாடுபடும் காங்கரஸ் பிரதிநிதி அதிலும் தமிழ் மாகாண காங்கரஸ் கமிட்டித்தலைவர் தோழர் சத்தியமூர்த்தி என்ன செய்தார் தெரியுமா? உதவி வேண்டிய பட்டாளத்தின் வார்த்தைகளைத் தம் காதில் கூடப் போட்டுக்கொள்ள வில்லையாம். “உங்கள் கொள்கை எங்கள் கொள்கைக்கு மாறானது. காங்கரஸ் பேரால் உதவி செய்ய முடியாது. வேண்டுமானால் தர்மத்துக்காக ஒரு நாளைக்குச் சோறுபோடலாம். காங்கரஸ் மண்டபத்தில் தங்க இடம் தரலாம். சலாம் போய் வாருங்கள்” என...

தமிழ்க்கொலை

தமிழ்க்கொலை

தற்காலத்தில் பள்ளிக்கூடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பாடப் புத்தகங்களிலுள்ள குற்றங் குறைகளை எழுத வேண்டுமானால் அதற்கே ஒரு தனிப் புத்தகம் எழுதலாம். அந்த வேலை மணற்சோற்றில் கல் ஆராய்வது போன்றது. 315 கோடி! சென்னை ராஜதானிக் கல்லூரியில் ஆசிரியராயிருக்கும் ஒரு வித்வான் எழுதிய தமிழக வாசகம் நான்காம் புத்தகத்தில் இந்தியாவின் ஜனத்தொகை சுமார் 315 கோடியென்று முட்டையெழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கிறது. “செஞ்சி நகரக் கோட்டைச் சிறப்பு” என்பது ஒரு பாடத்தின் பெயர். “தஞ்சையில் விஜயராகவரிடம் வேலை பார்த்து வந்த இராயசம் வெங்கண்ணா என்ற ஒரு கணக்குப்பிள்ளை ஒருவர் இருந்தார்” என்பது ஓர் அழகான வாக்கியம். அநுமானும் சீதையும் என்ற ஒரு பாடத்தில் அநுமான் அசோகவனத்தில் சீதையைக் கண்டு. “தாயே….. தங்களை இராமரிடம் எடுத்துப் போக நான் விரும்புகிறேன். ஓர் இமைப்பொழுதில் நான் அவரிருக்கும் இடம் செல்வேன். தங்கட்குச் சிறு துயரம் நேராது” என்று சொல்வதாகக் கூறப்பட்டிருக்கிறது. சிறு துயரம் நேராது என்பது சென்னை ராஜதானிக் கல்லூரியில்...

இரண்டும் உண்மையே

இரண்டும் உண்மையே

2.9.36ந் தேதி “எது உண்மை?” என்னும் தலைப்பில் “ஜனநாயகம்” பத்திரிகையில் ஒரு உபதலையங்கம் எழுதப்பட்டு அதில் தோழர் பாண்டியன் அவர்களும், தோழர் மந்திரி ராஜன் அவர்களும் கோவை ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் பேசிய பேச்சின் சுருக்கத்தை தனித்தனி எடுத்துப் போட்டு இவற்றுள் எது உண்மை என்று தெரிய ஆசைப்பட்டிருக்கிறது. அதைக் காணும் பொதுமக்களில் சிலராவது மயக்கங்கொள்ளக் கூடுமாதலால் இரண்டும் உண்மையே என்று விளக்க ஆசைப்படுகிறோம். அதாவது தோழர் பாண்டியன் அவர்கள் கோவை மகாநாட்டுக் கூட்டத்தில் ஜில்லா ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களைப் பற்றி பேசுகையில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் “ஜில்லாக்களில் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் (குணிட்ஞு) சிலர் நாங்கள் போனபோது எங்களைப்பற்றி லட்சியம் செய்யவில்லை. சிறப்பாக சென்னையில் நாங்கள் போனபோது ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் சிறிதுகூட உதவி செய்யவில்லை, நாங்களே நோட்டீசு போட வேண்டியிருந்தது, நாங்களே பெஞ்சு நாற்காலி போடவேண்டியிருந்தது, நாங்களே விளக்குக்கு பணம் கொடுக்க வேண்டி வந்தது என்று பேசினார். இது...

காலஞ் சென்ற கெமால் பாஷா

காலஞ் சென்ற கெமால் பாஷா

  1918 – வரை ்ஐரோப்பாவின் நோயாளி” என்ற பழிப்புரைக்கு இலக்காயிருந்தது துருக்கி நாடு. துருக்கி சுல்தான்களின் சோம்பேறி ஆடம்பர வாழ்க்கையும் மதபோதகர்களின் அட்டூழியங்களுமே துருக்கியின் இழிவான நிலைமைக்குக் காரணம். துருக்கி சுல்த்தான்கள் மதாசிரியர்களுக்கு அடிமைப்பட்டே வாழ்ந்து வந்தனர். பகுத்தறிவற்ற பாமர மக்கள் மிகுந்த நாட்டிலே மதாசிரியர்களுக்குச் செல்வாக்குப் பெருகி யிருப்பது இயல்பு. எனவே துருக்கியிலே கிலாபத்தே கிரியாம்சையில் சுல்த்தான்களையும் அடக்கியாண்டு வந்தது. மதாசிரியர்களுக்கு நாட்டு முன்னேற்றத்தில் இயல்பாகவே விருப்பமிராது. அவர்கள் தமது செல்வாக்கு அழியாமல் இருப்பதற்குத் தேவையான காரியங்களையே செய்து வருவார்கள். எனவே சோம்பேறிச் சுல்த்தான்களும் சுயநல கிலாபத்தும் ஆதிக்கம் செலுத்திய நாடு ்ஐரோப்பாவின் நோயாளி” என இகழ்ந்துரைக்கப்பட்டது ஆச்சரியமன்று. துருக்கியிலே மக்களுக்குள் ஒற்றுமை சூனியமாக இருந்தது. மேட்டுக்குடிப் பிரபுக்கள் சதா ஒருவருக்கொருவர் பூசலிட்டுக் கொண்டிருந்தனர். செல்வ வருவாய்க்குரிய மார்க்கங்கள் தடைப்பட்டன. இவ்வாறாக நாடு சீரழிந்து கிடந்த காலத்தில் ஐரோப்பிய மகாயுத்தம் உண்டாயிற்று. ருஷியாவுக்குப் பயந்து துருக்கி மத்திய ஐரோப்பிய...

காங்கிரசும் கல்வியும்

காங்கிரசும் கல்வியும்

  தாவர வர்க்கத்திலே காணப்படும் புல்லுருவிகளைப் போல் மனித வர்க்கத்திலும் புல்லுருவிக்கொப்பான ஒரு கூட்டத்தார் இருந்து வருகின்றனர். அவர்கள்தான் பிறர் உழைப்பினால், பிறர் ரத்தத்தை அட்டை போல் உறிஞ்சி நெற்றி வேர்வை நிலத்தில் விழாமல் நகங்களில் அழுக்கு படாமல், சோம்பேறி வாழ்க்கை நடத்தும் புரோகிதக் கூட்டத்தார். இத்தகையோர் தமது இந்திய நாட்டிலுமல்ல உலகமெங்கும் எல்லா நாட்டிலும் பண்டு தொட்டு இருந்து வந்திருக்கின்றனர். இன்றும் இருக்கின்றனர். ஆனால் ரஷ்யாவில் மட்டும் இவர்கள் ஒரு அளவுக்கு ஒழிக்கப்பட்டிருக்கின்றனர் என்று சொல்லலாம். இவர்கள் தங்கள் சோம்பேறி வாழ்க்கை நடத்துவதற்கு அவர்களுக்கு உபயோகமாகயிருந்து வருவது கல்வியின்மை – அறியாமை – மூடத்தனம் என்பதேயாகும். மக்கள் அறியாமையைப் போக்கிக்கொண்டால் – அறிவு பெற்றுக்கொண்டால் தங்களது சோம்பேறி வாழ்க்கைக்கு கேடு வந்துவிடுமே என்று எண்ணி அக்கூட்டத்தார் மக்கள் கல்வியறிவை பெற முடியாமல் செய்து வந்திருக்கின்றனர். நம் நாட்டிலே வேதங்கள், நீதி நூல்கள் என்று சொல்லுகிற மனுநீதி சாஸ்திரம் போன்றவைகளிலிருந்து இதற்கு...

ஒரு யோசனை

ஒரு யோசனை

  எங்கு பார்த்தபோதிலும் பார்ப்பன உபாத்தியாயர்களது கொடுமையானது சகிக்கமுடியாத அளவில் பெருகிக் கொண்டு வருகிறது என்ற செய்தி நமக்கு எட்டிக்கொண்டே வருகின்றது. இதற்குக் காரணம் அனேகமாய் கல்வி இலாகா உத்தியோகங்களில் எல்லாம் பார்ப்பனர்களே அதிகாரியாயும் பரீட்சை அதிகாரிகள் பெரும்பாலும் பார்ப்பனர்களாயிருப்பதாலும் அவர்களுடைய சலுகைக்கு பாத்திரர்களாக பார்ப்பன ஆசிரியர்கள் இருப்பதாலும் என்பதே. இந்நிலை ஒழிய வேண்டுமானால் கல்வி இலாகாவில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்றுதான் ஒரு கண்ணியமுள்ள ஒருவன் சொல்வான். ஏனெனில், முதலாவதாக இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பானும் தான் பிறப்பினாலே உயர்ந்த ஜாதியானென்றும், தானே அறிவாளியென்றும், வருணாச்சிரமப்படி தாம் ்பிராமண”ரென்றும், மற்றவர்கள் ்சூத்திர”ரென்றும் எண்ணிக் கொண்டிருக்கிறான். எந்தக் கொள்கைப்படி தங்களை ிபிராமணனென்றும் மற்றவர்களை ்சூத்திர”ரென்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அதே கொள்கைப்படி பிராமணர் சூத்திரரை படிக்க வைக்கக்கூடாது என்றும் சூத்திரர் படித்தால் வருணாச்சிரம தர்மம் கெட்டுவிடுமென்றும் பார்ப்பனரல்லாதார் படித்தால் பார்ப்பனருக்கு ஆபத்தாய் எமனாய் விடுவார்கள் என்றும், 100-க்கு 3 பேர்கள் 97 பேர்களின்...

காங்கரஸ் காலித்தனத்துக்கு ஆப்பு

காங்கரஸ் காலித்தனத்துக்கு ஆப்பு

  அன்பார்ந்த தலைவர் அவர்களே! தோழர்களே! இது இந்தியை எதிர்ப்பதற்காகப் போடப்பட்ட கூட்டமாகும். நாங்கள் இந்தியை எதிர்ப்பதற்குக் கூறும் காரணங்களைக் கேட்டு சிந்தித்துச் சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். பிடிக்காதவர்கள் இங்கு நாளை ஒரு கூட்டம் போட்டு ஆதாரமிருந்தால் நேர்மையான காரணங்களைக் கூறி மறுக்கட்டும். அதைவிட்டுப் பொறுப்பற்ற வகையில் காலித்தனமாக குழப்பம் விளைவிக்க முயலுவது இழிவான காரியமாகும். இதுதான் காங்கரஸ்காரர்களின் சமாதானம் என்றால் அதையும் சமாளிக்க தயாராயிருக்கிறோம். காங்கரஸ் அஹிம்சை என்று கூறிக்கொண்டு காலித்தனத்தைக் கையாளுகின்றது. ஆனால் தாங்கள் அஹிம்சைவாதிகள் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர். ~subhead யார் தேசத் துரோகி? ~shend அதே மாதிரி தாங்கள்தான் வெள்ளையர்களை இந்நாட்டைவிட்டு விரட்டப் போகின்றவர்கள் என்று மக்களிடம் கூறுகின்றனர். ஆனால் வெள்ளைக்காரர்களிடம் சென்று உங்களை இந்நாட்டில் என்றென்றும் நிலைத்திருப்பதற்கு உதவி செய்கிறோம், எங்களுக்கென்ன செய்கிறீர்கள் என வெள்ளையரிடம் ரகசிய ஒப்பந்தம் பேசுகின்றனர். ஆதியில் அன்னிய ஆட்சியை இந்நாட்டிற்கு கொண்டு வந்தது யார்? இதே பார்ப்பனர்கள்தான்....

மேலப்பாளையம் ஆதிதிராவிட மகாநாடு

மேலப்பாளையம் ஆதிதிராவிட மகாநாடு

  தலைவரவர்களே! தோழர்களே! ஆதிதிராவிடர்கள் என்பவர்கள் ஆயிரக்கணக்காகக் கூடியுள்ள இந்த பெரிய கூட்டத்தில் பேசும்படியான சந்தர்ப்பம் கிடைத்ததற்காக நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் ஆதிதிராவிட அபிவிர்த்தி என்பதைப் பற்றி நான் பேச வேண்டுமென்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள். உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி பேசிப்பேசிக் களைத்துப் போய்விட்டது. இனி பேசித் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. உங்கள் நிலை பல நூற்றாண்டுகளாகவே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. அதற்கு முன் ஆயிரக்கணக்கான வருஷங்களாக நீங்கள் இப்படித்தான் இருந்து வந்ததாக புராணங்களும் சரித்திரங்களும் கூறுகின்றன. இவ்வளவு நாள் பேசப்பட்டிராத விஷயம் இனி என்ன பேசப் போகிறேன்? உங்கள் சமூகம் சரித்திரங்களிலும் புராணங்களிலும் இருந்ததைவிட இப்போது அதிலும் இந்த 10 வருஷ காலத்தில் சிறிது மேலான நிலைமையில் இருக்கிறதாக நான் அறிகிறேன். ~subhead கொடுமை சிறிது குறைந்தது ~shend யார் என்ன சொன்னபோதிலும் ஆங்கிலேய அரசாò ஏற்பட்ட பிறகு உங்களுக்கு ஓரளவு...

தமிழர் செய்ய வேண்டிய வேலை

தமிழர் செய்ய வேண்டிய வேலை

  தமிழர்கள் சமூக வாழ்வில் தமிழ்நாட்டிலேயே கீழ் ஜாதியாய் இழி ஜாதியாய் சூத்திரராய் கருதப்படுகிறார்கள். தமிழர் தலையில் சுமத்தப்பட்ட மதங்களும் தமிழர்களை 4-ம் ஜாதி 5-ம் ஜாதி சூத்திர ஜாதி சண்டாள ஜாதி என்று சொல்லுகின்றன. தமிழர்களுக்குள் புகுத்தப்பட்ட கடவுள்களும் தமிழ் பெண்களிலேயே தாசிகள் இருக்கச் செய்வதோடு அக்கடவுள்கள் இந்தத் தாசிகள் வீட்டுக்கு போகும் உற்சவங்களும் கொண்டாடப்படுகின்றன. தமிழர்கள் அறிவும் சமயத்தின் பேரால் மழுங்கச் செய்து மூட நம்பிக்கை குருட்டு பழக்கவழக்கங்களுக்கு ஆளாக்கப்பட்டு உலகிலேயே தமிழ் மக்கள் முதல்தர மூடர்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும் கருதும்படி செய்யப்பட்டுவிட்டது. தமிழன் செல்வ நிலையைப் பற்றி யோசிப்போமேயானால் ஆரியமுறை ஜாதிப்பிரிவு காரணமாகவே தமிழர்களில் 4-ல் ஒரு பங்கு மக்கள் படிப்புக்கும் வைத்தியத்திற்கும் அறவே வழியில்லாமலும் உணவிற்கு அரைவயிற்றுக் கஞ்சிக்குக்கூட வழிஇல்லாமல் கூலி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உழைத்துத் தீரவேண்டும் என்கின்ற நிலையில் தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்கள். மற்ற 3 பாகத்தவர்களில் பெருமக்களும் சரீரப் பாடுபட்டு உழைப்பதே அவர்களது...

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை

இவ் வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப்போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? “அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டாடப்போகின்றீர்களா? என்பதுதான் “நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?” என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே சிறிதும் யோசனையின்றி யோக்கியப் பொறுப்பின்றி உண்மைத் தத்துவமின்றி சுயமரியாதை உணர்ச்சியின்றி சுயமரியாதை இயக்கத்தின்மீது வெறுப்புக்கொள்ளுகின்றீர்களே யல்லாமல் மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப் பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே யல்லாமல் மேலும், உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும் ஜீவனற்ற தன்மையான “பழைய வழக்கம்” “பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்” என்கின்றதான வியாதிக்கு இடங்கொடுத்துக்கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களே யல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள். பணத்தையும், மானத்தையும் எவ்வளவு...

இனி செய்ய வேண்டியதென்ன?

இனி செய்ய வேண்டியதென்ன?

  உலகிலே நாம் எத்திசையை நோக்கினும், எந்நாட்டை நோக்கினும் சுதந்திரத் தீ மூண்டு கொண்டிருப்பதையும், சுவாலை விட்டு எரிந்து கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் சுதந்திரத்தோடு வாழ விரும்புகின்றனர். ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் சுதந்தரமாக வாழ விரும்புகின்றனர். எத்தகைய பழக்கவழக்கத்தையும் கட்டுத் திட்டத்தையும் உடைத்தெரிந்துவிட்டு சுதந்திரத்தோடு, மனிதாபிமானத்தோடு வாழ ஆசைப்படுகின்றனர். ஒரு நாட்டார் மற்றொரு நாட்டாரின் அடிமையிலிருந்து விடுதலை அடைய ஆர்வங் கொண்டுழைக்கின்றனர். ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடையப் போராடி வருகிறது. சமத்துவமாக, சம உரிமையோடு, சம அந்தஸ்தோடு விளங்க வேண்டுமென்று ஒவ்வொரு சமூகமும் பல வருடங்களாக போராடி வருகிறது. இதை எவரும் மறுக்கத் துணிவு கொள்ளார். ஒரு சமூகமோ, ஒரு நாடோ, ஒரு வகுப்போ, மற்றொரு சமூகத்திலிருந்தோ, நாட்டாரிடமிருந்தோ, வகுப்பாரிடமிருந்தோ விடுதலையடைய வேண்டுமானால் அவர்களால் தங்களுக்கு நேர்ந்த இடுக்கண்களையும், அவமானத்தையும், தாங்கள் அடைந்த நிலைமையையும் எடுத்துரைத்தல் நியாயமா அல்லவா? அதற்கு உரிமையிருக்க வேண்டியது அவசியமா அல்லவா?...

சென்னையில் மாபெருங் கூட்டம்

சென்னையில் மாபெருங் கூட்டம்

  தலைவரவர்களே! தோழர்களே! வடசென்னைத் தமிழர் முன்னேற்றக் கழகக் காரியதரிசி தோழர் செ.சி.ந. காசிராஜன் அவர்கள் முயற்சியினால் கூட்டப்பட்ட இம்மாபெருங் கூட்டத்தில், நானும் பேசக் கட்டளை இடப்பட்டது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இந்தி எதிர்ப்பிற்கு நாட்டில் அதிக ஆதரவு கிடைத்துவரும் இக்காலத்தில், இந்தி எதிர்ப்பைப் பற்றி நான் அதிகம் பேசத் தேவையில்லை. இந்தி எதிர்ப்பு செத்துவிட்டதென்று பார்ப்பன பத்திரிகைகளும், சில கூலிப் பத்திரிகைகளும், செய்துவரும் பொய்ப்பிரசாரத்தைக் கண்டு வெளி ஜில்லாவாசிகள் சிறிது ஏமாந்தாலும், சென்னையிலுள்ள நீங்கள் ஏமாற மாட்டீர்களென நினைக்கிறேன். (கைதட்டல்) ஏனெனில் தினம் ஐந்துபேர் நான்குபேர் இரண்டுபேர் இந்தி எதிர்ப்புக்காகச் சிறை செல்வதை நீங்கள் நேரில் பார்த்து வருகிறீர்கள். ஆனால், இந்தி எதிர்ப்புச் செய்திகளை வெளிப்படுத்திவரும் ்விடுதலை”யை ஒழித்தாலொழிய நாம் முன்னேற முடியாதென நினைத்து அதன் ஆசிரியரையும் வெளியிடுவோரையும் கைது செய்தனர் இன்றைய பார்ப்பன மந்திரிகள். (வெட்கம் என்ற கூச்சல்) இன்னும் நாம் பணிவதா. அன்றி யாரைக் கைது செய்யலாம்,...

இன்றைய பிரச்சினை

இன்றைய பிரச்சினை

  “குடி அரசு” பத்திராதிபரும் பிரசுரகர்த்தாவும் “விடுதலை” பிரசுரகர்த்தாவுமான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமியும், “விடுதலை” ஆசிரியர் பண்டித எஸ். முத்துசாமி பிள்ளையும் 124 எ. ராஜ நிந்தனைச் சட்டப்படியும் 153 (எ) வகுப்புத்துவேஷச் சட்டப்படியும் அக்டோபர் 7-ந்தேதி சென்னை சர்க்காரால் கைது செய்யப்பட்டு ஈரோடு சப்ஜெயிலில் காவலில் வைத்திருக்கின்ற சேதியை தினசரி வாயிலாக அறிவீர்கள். இதிலிருந்து சொந்த மனசாட்சிப்படி எவரும் பொதுநல சேவையில் ஈடுபட முடியாதென்றும், சுய மதிப்போடும், தன் மனசாட்சிப்படியும் ஒருவர் நடக்க வேண்டுமானால் அவர் எத்தகைய கஷ்ட நஷ்டத்திற்கும் அடக்குமுறைக்கும் ஆளாக வேண்டுமென்பது நன்கு புலனாகும். இத்தகைய துன்பங்கள் ஏகாதிபத்தியத்தையே எதிர்க்கிறோம் – உடைக்கிறோம் – தகர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஆட்சியில் ஒருவர் அனுபவிக்க வேண்டியிருக்கிற தென்பதைக் குறித்துதான் நாம் வருந்த வேண்டியிருக்கிறது. இந்தச் சம்பவத்தை நோக்கும்போது கனம் ராஜகோபாலாச்சாரியார் ஹிட்லரைப்போல தனக்கு விரோதமான அபிப்பிராயமுடைய நோக்கமுடைய கட்சியோ இயக்கமோ நாட்டிலேயிருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவருக்கு...

இந்தி செத்தது! இனி ஆச்சாரியாரின் அடுத்த ஆட்டம் என்ன?

இந்தி செத்தது! இனி ஆச்சாரியாரின் அடுத்த ஆட்டம் என்ன?

  நம் சரணாகதி மந்திரிகள் தமிழ் மக்களுக்குள் ஆரியக்கலை ஆரிய நாகரிகம் ஆகியவைகளைப் புகுத்தி வருணாச்சிரம தர்மத்தை புதுப்பித்து நிலைநிறுத்தச் செய்யும் சூழ்ச்சியான இந்தி கட்டாயமாய் கற்பிக்கும் திட்டத்தை எதிர்த்து தமிழ் மக்கள் போர்புரிந்து வருவதும் அதற்காக இதுவரை சுமார் 360 பேர்கள் பார்ப்பன ஆட்சிக் கொடுமைக்கும் வண்நெஞ்ச அடக்குமுறைக்கும் ஆளாகி பலர் வருஷக் கணக்கான கடின காவல் தண்டனை அடைந்து சிறையில் வதிந்து வருவதும் வாசகர்கள் அறிந்ததாகும். நம் சரணாகதி மந்திரிகள் ஆங்கிலேயரிடம் சரணாகதி அடைந்து தன்மானமற்று பெற்ற பதவியை நாட்டு நலனுக்கோ மனித வர்க்க உயர்வுக்கோ கால நாகரிகத்துக்கோ பயன்படுத்தாமல் வஞ்சம் தீர்க்கவும் தம் வகுப்புக்கு நிலையான ஆதிக்கமும் அதிகாரமும் ஏற்படுத்தச் செய்யவும் மற்ற வகுப்பார் என்றென்றும் தலையெடுக்க வகையில்லாமல் அழுத்தி வைக்கவும் முறட்டுத்தனமாய் பயன்படுத்தி வருவதும் “உள்ளங்கை நெல்லிக்கனி” என்பது போல் யாவருக்கும் விளங்கக் கூடிய காரியமேயாகும். சரணாகதி மந்திரிகள் பதவியேற்ற 15 மாத காலத்துக்குள் பார்ப்பனரல்லாதார்...

காங்கரஸ் ஆட்சியில் போலீஸ் நீதி

காங்கரஸ் ஆட்சியில் போலீஸ் நீதி

  தலைவர் அவர்களே! தோழர்களே! கோவை ஜில்லா இந்தி எதிர்ப்புத் தொண்டர் படையை வரவேற்கும் இந்த பெரிய கூட்டத்தில் போலீசார் சம்மந்தமான விஷயங்களை பேசவேண்டாம் என்று இருந்தேன். ஆனால் எனக்கு முன் பேசிய தோழர்கள் அந்த விஷயத்தை இழுத்துவிட்டுவிட்டதாலும், சற்று கடுமையாய் பேசினதாலும் நான் அதைப் பற்றி இரண்டொரு வார்த்தைகளாவது முதலில் பேசவேண்டி ஏற்பட்டுவிட்டது. தோழர் நடேசன் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மகன் ஆதலால் போலீசாரின் யோக்கியதையை நன்றாய் அறிந்தவராதலாலும் வாலிபரானதாலும் சற்று வீரமாகவே பேசினார். ஆனால் என்னால் அப்படிப் பேச முடியாது. அதோடு போலீசாரால் ஏற்படும் நன்மை தீமை இரண்டைப் பற்றியும் பேசவேண்டும். போலீசார் உதவி நமக்கு போலீசார் உதவி இல்லை என்று சொல்லிவிட முடியாது. எனது இந்த 15, 20 வருஷம் பொதுத் தொண்டு வாழ்வில் இம்மாகாணம் பூராவும் குறிப்பாக தமிழ்நாடு பூராவும் சுற்றிச்சுற்றி 100 முதல் ஒண்ணரை லக்ஷம் ஜனங்கள் வரை கொண்ட ஆயிரக்கணக்கான மீட்டிங்குகளில் பேசி...

பகிரங்கப் பேச்சு  – கொறடா

பகிரங்கப் பேச்சு – கொறடா

  “நம் ராஜாஜி ஏதாவது ஒரு காரியத்தைச் செய்தால் அதில் தவறு இருக்குமா? தவறுதான் இருந்தாலும் அதைத் தவறு என்று தான் எண்ண முடியுமா? அப்படியே யாராவது எண்ணிவிட்டாலும் மகாத்மா காந்திதான் அப்படி எண்ணுவதற்கு இடங்கொடுத்து விடுவாரா? ஒருக்காலும் இடங்கொடுக்கமாட்டார் என்பதை, மகாத்மா காந்தி தாம் சமீபத்தில் எழுதிய “ஹரிஜன்” கட்டுரையின் மூலம் காட்டிக்கொண்டுவிட்டார். ஹிந்தி எதிர்ப்பாளர்கள் விஷயத்தில் ராஜாஜி நடந்து கொண்டதும், அதன் சம்பந்தமாக அவர் கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகித்ததும் சரிதான் என்று மகாத்மா காந்தி அக்கட்டுரையில் கூறிவிட்டார். “மகாத்மா காந்தியே சரிதான் என்று கூறிவிட்ட பிறகு, ராஜாஜி செய்தது தவறு என்று கூற யாருக்கு வாயிருக்கிறது?” என்று சில பத்திரிகைகளும் கூறிவிட்டன. ~subhead அனாவசியம் ~shend வாஸ்தவந்தான். மகாத்மா காந்தி ஒருவர் செய்ததில் எது சரி. எது தவறு என்பதை யோசித்துப் பார்க்காமலா கூறுவார்? கூறமாட்டார் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அதோடு அனாவசியமாக மற்றோர் விஷயத்தையும் காந்தி...

காந்தி ஜயந்திக்கு அர்ப்பணம்

காந்தி ஜயந்திக்கு அர்ப்பணம்

  காங்கரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியையும், முஸ்லிம் லீக்கையும் உத்தியோக வேட்டைக் கட்சிகள் என்றும், கண்டிறாக்ட் கொள்ளை கட்சிகள் என்றும் ஆதலாலேயே இவர்கள் கையில் இருக்கும் நிருவாக அதிகாரத்தை எப்படியாவது பிடிங்கிவிட வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டு என்ன என்னமோ சூழ்ச்சிகளும் பிரயத்தனங்களும் செய்து வந்தார்கள். இந்தக் காரியத்திற்காக பார்ப்பனர்கள் ஒரு காந்தி என்பவரை பிரமாத விளம்பரப்படுத்தி அவர் பேரைச் சொல்லி மக்களை பலவழிகளில் ஏமாற்றி வந்தார்கள். இதற்கு ஆக பிரசாரம் நடைபெறுவதற்கு தனிமையில் யோக்கியதை அற்றவர்களையும் சமுதாயத்தில் இழிவான ஈன வாழ்க்கை உள்ளவர்களையும் வாழ்க்கைக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் எப்படிப்பட்ட ஈனக் காரியங்களும் செய்துவந்த அனுபவமுள்ளவர்களையும் பிடித்து கூலியும் கொடுத்து மற்ற கட்சியாரை வையும் படியும் அதாவது தங்களைத்தவிர மற்றவர்கள் உத்தியோக வேட்டைக்காரர் என்றும் கண்டிறாக்ட் ஆட்சிக்காரர் என்றும் நிர்வாகத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் என்றும் கூப்பாடு போட்டு குரைக்கும்படியும் செய்தார்கள். பாமர மக்கள் தங்களது மடமையினாலும் பொறுப்பற்ற தன்மையினாலும் அற்ப சுயநல குணத்தாலும் இவர்கள்...

* சைமன் ராமசாமி மறுப்பு

* சைமன் ராமசாமி மறுப்பு

  காங்கரஸ் பத்திரிகைகளின் புரட்டும் யோக்கியதையும் திருச்சி. செப். 21. பிரபல தினசரிகளாகிய “ஹிந்து” “சுதேசமித்திரன்” “தினமணி” “ஜெயபாரதி” முதலியவைகளில் தமிழ் படையினர் தவிப்பு, காங்கரஸ் கட்சியின் உதவி, தமிழ் படைத்தலைவர் குட்டு வெளியாகியது, வசூல் ரூ.1000 எங்கே? ஈ.வெ.ரா.வின் யோக்கியதை, படையினர் சந்தியில் விடப்பட்டனர், ஊர்போகப் பணங்கிடையாது என்று 17-9-38ந் தேதி “ஜெயபாரதி”யிலும், ஜெயிலுக்குப் போகிறாயா? பட்டினி கிடக்கிறாயா? என்றும் இன்னும் அயோக்கியத்தனமாகவும் 17-9-38 “தினமணி”யிலும், தெருவில் தவிக்கவிடப்பட்டனர் என்று 16-9-38 “சுதேசமித்திர”னிலும் தலைப்புகள் கொடுத்தும் அறிக்கை கொடுத்தவர்கள் நால்வர்களில் என் பெயரை முதலில் பிரசுரித்தும் இருப்பதைப் பத்திரிகைகளில் பார்த்ததும் அப்படியே திடுக்கிட்டுப் போனேன். பத்திரிகா உலகு இவ்வளவு கட்டுப்பாடாயும் கேவலமாயும் நடப்பதையறிந்து மனமுடைந்து போனேன். அவ்வறிக்கையில் கண்டது அத்தனையும் சுத்தக் கட்டுக்கதை என்றும் புராணப் புரட்டு என்றும் அதற்கும் எனக்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் கிடையாது என்றும் இவ்வறிக்கையின் மூலம் எல்லோருக்கும் அறிவிக்க விரும்புகிறேன். இத்துடனில்லாது, சென்னை சட்டசபை காங்கரஸ்...

காங்கரஸ்காரர் இழி செயல்

காங்கரஸ்காரர் இழி செயல்

  இந்தி எதிர்ப்பு இயக்கம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வலுப்பெற்று வருகிறது. கனம் ஆச்சாரியார் கிரிமினல் திருத்தச் சட்டத்தைக் கையாளுவதைப் பார்த்து இந்தியா முழுதும் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. சென்னை மாநகரம் முழுதும் காங்கரசை எதிர்க்கிறது; வெறுக்கிறது. எனவே தமது மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஏதாவது செய்து தீரவேண்டிய நிர்ப்பந்தம் காங்கரஸ்காரருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்காக நேர்மையான முறையில் ஏதாவது அவர்கள் செய்ய முயன்றால் எவரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். ஆனால் இழிவான முறைகளைக் கையாண்டால் யாராவது கண்டிக்காமல் இருப்பார்களா! இந்தி எதிர்ப்பாளர் மானத்தைக் கெடுக்கும் பொருட்டு பலபொய்க் கதைகளை காங்கரஸ் பத்திரிகைகள் கட்டிவிட்டன. சிறையிலிருக்கும் இந்தி எதிர்ப்பாளரை மன்னிப்புக் கேட்டு வெளியேறும்படி விளம்பர மந்திரி கனம் எஸ். ராமநாதன் தூண்டியதாகவும் கூட சென்னை “சண்டே அப்சர்வர்” பத்திரிகை எழுதிற்று. ஸ்டாலின் ஜெகதீசனை விலைக்கு வாங்கி அவரைக்கொண்டு இந்தி எதிர்ப்பாளரைத் தாக்கி ஒரு அறிக்கை வெளியிடும்படியும் காங்கரஸ்காரர் சூழ்ச்சி செய்து பார்த்தார்கள். திருச்சித் தமிழர் பெரும்படை சோற்றுப்படை என்றும்...

காங்கரஸ் அனுபவம்  தொட்டது துலங்காது

காங்கரஸ் அனுபவம் தொட்டது துலங்காது

  ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் ஜில்லா போர்டு நிர்வாகங்களை ஏற்று நடத்திய காலத்தில் அவைகளின் நிர்வாகங்கள் ஒழுங்காகவும் குழப்ப மில்லாமலும் இருந்தமையால் அப்போது அவைகள் கலைக்கப்பட வேண்டும் என்று ஒருவரும் கூறியது கிடையாது. அப்படிச் சொல்வதற்கு அவசியமும் ஏற்பட இல்லை. காங்கிரஸ்காரர்கள் ஜில்லா போர்டு நிர்வாகங்களைக் கைப்பற்றி நடத்திய சில காலத்துக்குள்ளாகவே அவர்கள் நிருவாகம் ஒழுங்காகச் செய்ய முடியாமையால் ஜில்லா போர்டுகளைக் கலைத்து விடவேண்டும் என்று தோழர்கள் சி. ராஜகோபாலாச்சாரியும், திரு. வி. கலியாணசுந்தர முதலியாரும் காங்கரஸ் சார்பாகவே சொல்ல முன்வந்து விட்டார்கள். ஆகவே, இதிலிருந்து காங்கரஸ்காரர்களின் நிர்வாகத் திறமையைப் பொது மக்கள் நன்குணர்ந்து கொள்வார்கள். காங்கரஸ்காரர்கள் எந்தப் பதவியைக் கைப்பற்றினாலும் நிர்வாகம் ஒழுங்காக நடைபெறாதென்பதற்கும், அவர்களுக்கு ஒழுங்காக நிர்வகிக்கத் திறமையில்லை யென்பதற்கும், காரணம் அவர்களுக்குள் கட்டுப்பாடு இல்லாததுதான் என்பதற்கும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? குடி அரசு கட்டுரை 06.09.1936  

காங்கரஸ் ஆர்ப்பாட்டம்

காங்கரஸ் ஆர்ப்பாட்டம்

வீண் ஆர்ப்பாட்டம் செய்வதில் பெயர் பெற்றவர்கள் காங்கரஸ்காரர். ஆனால் அந்த ஆர்ப்பாட்டம் கண்ணியமும் பொறுப்பும் வாய்ந்த பதவி வகிப்பவர்களுக்கு அவமதிப்பையுண்டு பண்ணக்கூடியதாயிருந்தால் அதை அறிவாளிகள் ஆதரிக்கவே மாட்டார்கள். இம்மாதம் 2ந் தேதி இந்தியச் சட்டசபையில் காங்கரஸ்காரர் ஆடிய வெளியேற்ற நாடகமானது தலைவரை அவமதிக்கத்தக்கதாயும் அறிவாளிகள் வெறுக்கக் கூடியதாயும் இருக்கிறது. பிரிட்டிஷ் ஜவுளியின் இறங்குமதி வரியைச் சட்டசபையைக் கலக்காது குறைத்துவிட்டது சம்பந்தமாக சர்க்கார் நடத்தையைப் பற்றி ஆலோசிப்பதற் காகச் சட்ட சபையின் இதர நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டுமென்று கோவை மெம்பர் தோழர் அவினாசிலிங்கம் செட்டியார் ஒரு அவசரப் பிரேரணை கொண்டுவந்தார். தோழர் செட்டியார் பேசியபிறகு எக்கட்சியிலும் சேராத ஸர். கஜ்னாவியும், ஐரோப்பிய மெம்பர் தோழர் ராம்ஸே ஸ்காட்டும் அவருக்குப் பிறகு எக்கட்சியிலும் சேராத ஸர்.ஆர்.எஸ். சர்மாவும் பிரேரணையை எதிர்த்துப் பேசினார்கள். அப்பால் தோழர் கிருஷ்ண காந்த மாளவியாவும் டாக்டர் ஜியாவுதீனும், காங்கரஸ் மெம்பர் பந்தும் பிரேரணையை ஆதரித்துப் பேசினார்கள். தோழர் பந்துவின் பேச்சுக்கு...

காங்கரஸ் நாடகம்  போலி கட்டுப்பாடு

காங்கரஸ் நாடகம் போலி கட்டுப்பாடு

  சென்னை சட்டசபையில் இனாம் மசோதா ஆலோசனைக்கு வந்தபோது அதை ஒத்திவைக்க வேண்டுமென்று வந்த தீர்மானத்தைப் பல காங்கரஸ் மெம்பர்கள் எதிர்த்தார்கள். தோழர் சுப்பராயன் (காங்கரஸ் மெம்பர்) அத்தீர்மானத்தை ஆமோதித்தார். ஆனாலும் காங்கரஸ் சபைதான் கட்டுப்பாடுள்ளதாம். தடி அடி வாழ்த்து காங்கரஸ் தொண்டர்கள் தடியடிபட்ட காலத்தில் போலீஸ் தலைமை உத்தியோகஸ்தரைப் பாராட்டிப் பேசிய தோழர் சுப்பராயன் இன்று காங்கரசுக்கு நண்பர், காங்கரஸ் தலைவர் ஆகிவிட்டார். ஆனால் ஜஸ்டிஸ் கட்சியை இந்த காரணத்துக்காக காங்கரஸ்காரர்கள் வைகிறார்கள். ஆனாலும் காங்கரஸ்காரர்களுக்குத்தான் நியாய புத்தி இருக்கிறதாம். ~subhead காங்கரஸ் அரசியல் ஞானம் ~shend சீர்திருத்தத்தின்படி ஏற்படப்போகும் புதிய சட்டசபையில் புகுந்து சீர்திருத்தத்தை உடைத்து அது நடைபெறவொட்டாமல் செய்ய வேண்டும் என்கின்ற காங்கரஸ்வாதிகள் எந்த யோக்கியதையைக் கொண்டு இனாம் மசோதாவை சீர்திருத்தப்படி ஏற்படப்போகும் புதிய சட்டசபையில் நிறை வேற்றலாம் என்று சொல்லுகிறார்களோ தெரியவில்லை. ஆனாலும் காங்கரஸ்காரர்களின் அரசியல் ஞானம் இதுதானாம். ~subhead என்ன செய்யப் போகிறார்கள்? ~shend...

காங்கிரசும் வகுப்புவாதமும்

காங்கிரசும் வகுப்புவாதமும்

  இந்தியாவில் காங்கிரஸ் என்பதாக ஒரு இயக்கம் ஏற்பட்ட பிறகே இந்தியாவில் வகுப்புவாதம் என்பதாக ஒரு உணர்ச்சி பல்வேறு மதஸ்தர்களுக்குள்ளும் பல்வேறு வகுப்பாருக்குள்ளும் ஏற்பட்டு அது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஆதியில் காங்கிரசானது ஒரு ஐரோப்பிய ஐ. சி. எஸ். கனவானின் முயற்சியாலேயே ஏற்படுத்தப்பட்டது. அவர் பெயர் A.O. ஹியூம் என்பார்கள். அப்படிப்பட்ட காங்கிரசின் கொள்கை பிளவுபட்டுக் கிடக்கும் மக்களை ஒன்றுபடுத்துதல், சமூக கட்டுப்பாட்டிலும் அறிவிலும் ஒழுக்கத்திலும் அரசியலிலும் இந்திய மக்களின் வாழ்கையை புதுப்பித்தல், இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் என்றும் பிரிக்க முடியாத ஐக்கியத்தை ஏற்படுத்துதல் என்பனவாகும். ~subhead 1892 லேயே வகுப்புவாதம் ~shend இந்தக்கொள்கைகளோடு ஏற்படுத்தப்பட்ட காங்கிரசில் அதுஏற்பட்ட 6,7 வருஷத்துக்குள் வகுப்பு உணர்ச்சிகள் ஏற்பட்டு அதாவது 1892ம் Mத்திலேயே 1892ம்Mத்து இந்திய கவுன்சில் ஆக்ட் என்னும் பேரால் ஒவ்வொரு வகுப்பாருக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் கொடுப்பதாகவும் பல ஸ்தாபனங்களுக்கும் சர்க்காரே நாமினேஷன் செய்ய அதிகாரம் வைத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டு அரசாங்கத்தார்...

மத நம்பிக்கைக்கு சாவுமணி

மத நம்பிக்கைக்கு சாவுமணி

உலகத்திலே எத்தனையோ, இயக்கங்களும் ஸ்தாபனங்களும் தோன்றி மறைந்துள்ளன; மறைந்து வருகின்றன. சில இயக்கங்களுக்கும் ஸ்தாபனங் களுக்கும் ஒரு காலத்துத் தேவை ஏற்பட்டிருக்கலாம். அத் தேவை மறையும் போது அவை மறைவது இயல்பே. இந்தப் பொதுவிதிக்குக் கட்டுப்படாத இயக்கங்களோ ஸ்தாபனங்களோ உலகத்தில் இல்லவே இல்லை. தற்பொழுது உலகம் முழுதும் மத நம்பிக்கை குறைந்து வருகிறது. ருஷியாவிலே மதம் அழிந்துவிட்டது; ஆலயங்கள் மறைந்துவிட்டன; புரோகிதர், பூசாரிகளும் ஒழிந்துவிட்டனர். அமெரிக்காவில் ஆலயங்கள் இருந்தாலும் ஆலய வழிபாடு செய்வோர் தொகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன. பாதிரிமார் செல்வாக்குக் குறைந்துவிட்டதாம். அறிவியக்கம் நாளுக்கு நாள் காட்டுத் தீப்போல் பரவி வருகிறதாம். துருக்கியிலும் மத ஆதிக்கம் ஒழிந்துவிட்டது. ராஜாங்கத்துக்கும் மதத்துக்கும் இருந்த தொடர்பு அறுபட்டு விட்டது. மதத்தின் ஸ்தானத்தைப் பகுத்தறிவு கைப்பற்றி விட்டது. இவ் வண்ணம் உலகம் முழுதும் மத நம்பிக்கை குறைந்துவரக் காரணமென்ன? காரணங்கள் இரண்டு; ஒன்று தேசீய சம்பந்தமானது; மற்றொன்று சதாசாரச் சார்புடையது. மதக்கொள்கைகளும்...

தமிழ்நாடு தமிழருக்கே

தமிழ்நாடு தமிழருக்கே

  காங்கரஸ் லôயம் “சுயராஜ்யம்” என முதன் முதல் கூறியது காலஞ் சென்ற தாதாபாய் நவரோஜி. அது போல “தமிழ்நாடு தமிழருக்கே”என தமிழர்களின் பிரதிநிதிகளான மூன்று பெரியார்கள் சென்ற 11-ந்தேதி சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒன்றரை லக்ஷம் தமிழர்கள் முன்னிலையில் கூறிவிட்டார்கள். அக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த மறைமலை அடிகள் மதவாதிகள் பிரதிநிதி, அக்கூட்டத்தில் பேசிய தோழர் பாரதியார் காங்கரஸ்காரர் பிரதிநிதி, அன்று பேசிய ஈ.வெ. ராமசாமிப் பெரியார் பகுத்தறிவுவாதிகள் பிரதிநிதி. ஆகவே தமிழ்நாட்டின் அபிப்பிராயம் அக்கூட்டத்திலே பூரணமாகப் பிரதிபலித்தது என தைரியமாகக் கூறிவிடலாம். தமிழ் நாட்டார் மதவாதிகள், பகுத்தறிவுவாதிகள், காங்கரஸ் வாதிகள் என்ற மூன்று பெரும் பிரிவில் அடங்கி விடுவர். அந்த மூன்று பிரிவார் அபிப்பிராயத்தையே அந்த மூன்று பெரியார்களும் தமிழர்களுக்கு அன்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் இப்பொழுது தோன்றியிருக்கும் தமிழர் இயக்கம் எந்தக் கட்சிக்கும் உரியதல்ல வென்பதும் ஜாதி மத நிற கட்சி வித்தியாசமின்றி தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்பதும்...

சாக்கடை இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி

சாக்கடை இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி

  தமிழ்மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தியின் தேசீயம், அவரது மூளை போலவே விசித்திரமானது; கோணல்மாணலானது. இங்கிலாந்திலிருந்து வரும் ஆங்கில கவர்னர்களுக்குப் பல்லாண்டு பாடலாம்; உபசாரப் பத்திரமளிக்கலாம்; ஆனால் ஒரு இந்திய கவர்னரைப் பாராட்டவோ, உபசரிக்கவோ கூடாதென்று அவர் சென்னைக் கார்ப்பரேஷனில் வெளுத்து வாங்கியதை இந்தியர்கள் மறந்திருக்கமாட்டார்கள். ஜஸ்டிஸ்கட்சி மீதுள்ள வெறுப்பினால் ஒருகால் அவர் அவ்வாறு உளறிக்கொட்டியிருக்கக் கூடும்; அதனால் அவருடைய தேசீயக் கற்புக்கு பங்கம் ஏற்பட்டுவிடாது எனப் பலர் எண்ணியிருக்கக்கூடும். ஆனால் அவரது பம்பாய்ப் பேச்சு அவரது உண்மைச் சுயரூபத்தை சந்தேகத்துக்கு இடமின்றி விளக்கிக் காட்டிவிட்டது. கடுகத்தனை இந்திய பற்றாவது அந்த ஆசாமிக்கு இல்லை யென்பதை அவரது பம்பாய்ப் பேச்சு நன்கு விளக்கிக் காட்டியிருக்கிறது. “குடியாட்சியும் தடியாட்சியும்” என்னும் பொருள் பற்றி தோழர் சத்தியமூர்த்தி பம்பாயில் நிகழ்த்திய ஒரு பிரசங்கத்தின்போது அவர் வாந்தியெடுத்த சில அபிப்பிராயங் களைப் பார்த்து சுயமரியாதையுடைய இந்தியர்கள் கலக்கம் கொள்ளாமலும் கண்ணீர் வடிக்காமலும் இருக்கமாட்டார்கள்....

* சுப்பிரமணியய்யர் புராணம்

* சுப்பிரமணியய்யர் புராணம்

  புத்தக வியாபாரத்தில் பங்கு கேட்ட படலம் கல்விக் கமிட்டி அங்கத்தினரைக் காக்காய் பிடித்த அத்தியாயம் M.S. SUBRAHMANIA AIYER 160, THAMBU CHETTY ST., Author – Journalist Councillor, Corporation of Madras Madras, 23.4.1937 சோதரர் ஸ்ரீமான் இலட்சுமண சுவாமி முதலியாரவர்கள் சமூகம். சுபம். ஆசி பல எல்லாம் வல்ல இறைவனருளால் தங்களுக்கு ஸர்வ மங்களமும் உண்டாகுமாக. நேற்றும் இன்று காலையும் தங்களைக் காண முயன்றேன், ஆனால் முடியவில்லை. தங்கள் கல்வி கமிட்டியில் பாட புத்தகங்களை மாற்றும் யோசனை இருப்பதாகக் கேள்வி. ஸ்ரீமதி அம்முவையும் பார்த்தேன். புதிதாகப் புத்தகங்கள் வைப்பதானால், எனக்கும் ஒரு சிறிது பங்கு தருதல் வேண்டும். மங்கள வாசகங்கள் ஐந்தும் என்னுடையன. வேறு புத்தகங்களில் எனக்குப் பங்கு கிடையாது. எல்லாம் எனக்கே கொடுக்கும்படி கேட்கவில்லை. ஒன்று அல்லது இரண்டு கொடுத்தால் போதும். தங்களைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறேன். மற்றவை நேரில். தங்கள் உதவியை மறக்க மாட்டேன்....

காங்கரஸ் கவுண்சிலர்கள் லஞ்சம் வாங்குவதில்லையாம்

காங்கரஸ் கவுண்சிலர்கள் லஞ்சம் வாங்குவதில்லையாம்

  நண்பர்களுக்கு கண்டிராக்ட் கொடுப்பதில்லையாம் கண்டிராக்டில் பங்கில்லையாம் உத்தியோகத்தை சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்வதில்லையாம் இதற்கு ஆதாரம் ஒரு காங்கரஸ் கவுன்சிலர் தோழர் எம்.எஸ். சுப்பிரமணியய்யர் ஒரு காங்கரஸ் வீரராம். தேசபக்தராம். அவர் சிறைக்குப் போனாரோ என்னவோ தெரியாது. ஆனால் பெரிய தேச பக்தர் நாடகம் ஆடி வருவது ஏதோ உண்மைதான். அவர் சென்னைக் கார்ப்பரேஷனிலே மெம்பராகவுமிருக்கிறார். பார்ப்பனர் நிறைந்த ஒரு தொகுதியால் அவர் இரண்டு முறை கார்ப்பரேஷன் மெம்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். “தினமணி” ஆசிரியர் தோழர் சொக்கலிங்கம் பிள்ளையின் பிரதம தனகர்த்தர். அவர் மூலம் வெளியான கார்ப்பரேஷன் ஊழல் நாடகத்தில் முக்கிய நடிகராயிருந்தவர் தோழர் எம்.எஸ். சுப்பிரமணியய்யரே. அவர் சென்னை கார்ப்பரேஷன் பள்ளிக்கூடப் புத்தக வியாபாரத்தில் பங்கு கேட்ட கதையை விளக்கும் அவருடைய கடிதம்* அடுத்த பத்திகளில் பார்க்கவும். கார்ப்பரேஷன் கவுன்சிலர் அதிலும் காங்கரஸ் கவுன்சிலர் மேற்கண்ட மாதிரி பங்கு கேட்ட விநோதத்தைப் பாருங்கள். சென்னை முனிசிபல் ஆக்ட் செக்ஷன் 53-கிளாஸ் (ஞீ)...

கழுவுக்கேற்ற கோமுட்டி நியாயமா?

கழுவுக்கேற்ற கோமுட்டி நியாயமா?

  காங்கிரஸ்பேரால் திருச்சி நகரசபைத் தலைவர் தேர்தலுக்கு நிறுத்தப்பட்ட தோழர் ரத்னவேலுத் தேவரை ஆதரியாத காங்கிரஸ் மெம்பர்கள் எல்லாம் ராஜிநாமாச் செய்துவிட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் காரியக்கமிட்டியார் தீர்ப்புக்கூறி யிருக்கிறார்கள். ஆனால் நகரசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தோழர் பொன்னய்யா பிள்ளை, திருச்சி ஜனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தாம் மெம்பர் பதவியையோ, தலைவர் பதவியையோ ராஜிநாமாச் செய்யப் போவதில்லையென்றும் வேண்டுமானால் காங்கிரசிலிருந்து விலகிவிட தயார் என்றும் மார் தட்டிக் கூறுகிறார். இதற்காக ஒரு காங்கிரஸ் தினசரி ஜஸ்டிஸ் கட்சி மீது பழி சுமத்துகிறது. “ஸ்தல ஸ்தாபனங்களில் 15 வருஷங்களாக ஜஸ்டிஸ்கட்சி இருந்திருந்தும் ஸ்தல ஸ்தாபன ராஜீய வாழ்க்கை இவ்வளவு மோசமாயிருப்பது ஜஸ்டிஸ் கட்சியின் யோக்கியதையைக் காட்டுகிறது” என அப்பத்திரிகை குருட்டுத்தனமாக எழுதியிருக்கிறது. ஸ்தல ஸ்தாபன விஷயங்களில் அரசியலைப் புகுத்தக் கூடாதென்பது ஜஸ்டிஸ் கட்சியார் கொள்கை. இதுவரை ஸ்தலஸ்தாபனத் தேர்தல்களில் ஜஸ்டிஸ்கட்சி பேரால் அபேட்சகர்கள் நிறுத்தப்படவுமில்லை. “ஜஸ்டிஸ்” கொள்கையை ஆதரிப்பவர்கள் தம் சொந்த ஹோதாவிலேயே நின்று...

“மகாத்மா” புரட்டு

“மகாத்மா” புரட்டு

  “கடவுள்ீகளையும், அவதாரங்களையும் காட்டி மக்களை ஏமாற்றுவது இந்தியாவிலே தொன்று தொட்ட வழக்கமாக இருந்திருக்கிறது. ிகடவுள்ீ ஆகவும், அவதார புருஷர்கள் ஆகவும் விரும்பாதவர்களையும் கூட பாமர மக்கள் பிற்காலத்தில் கடவுள்களாக்கி அவதார புருஷர்களாக்கி ஆலயப் பிரதிஷ்டை செய்து தேர்திருவிழா நடத்திக் கொண்டாடுவது இந்தப் பாழும் இந்தியாவிலே, ஒரு வாடிக்கையாகிவிட்டது. புத்தர் ஒரு சீர்திருத்தக்காரர். மதப்புரட்டையும் பார்ப்பனப் புரட்டையும் வெட்ட வெளிச்சமாக்கி மக்களுக்கு நேரான பகுத்தறிவுக்குப் பொருந்திய சாந்தி வழிகாட்டுவதே அவரது லôயமாக இருந்தது. அவரையும் கூட அவரது சிஷ்யர்கள் பிற்காலத்தில் அவதார புருஷராக்கி ஆலயப் பிரதிஷ்டை செய்து புத்தமதத்தை இந்து மதத்திலும் கீழான மதமாக்கி இந்தியாவிலே புத்தமதம் பூண்டு அற்றுப்போகும்படி செய்துவிட்டார்கள். குருட்டு நம்பிக்கையுடையவர்களை வசியப்படுத்த மதம் ஒரு சுளுவான கருவியாக இருப்பதினால் மத சம்பந்தமில்லாத துறைகளிலும் ஒரு சொட்டு மதத்தைப் புகுத்தி மக்களை ஏமாற்றுவது ஒரு பெருவழக்காகப் போய்விட்டது. இந்த உண்மையை உணர்ந்தே தோழர் காந்தி இந்திய அரசியலில் புகுந்ததும்...

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

வருகிறது, வருகிறது, வரப்போகிறது, வரப்போகிறது என காங்கிரஸ் காரர்களால் பிரமாதமாக விளம்பரம் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கை கடைசியாக வந்தேவிட்டது. பெரிய தேச பக்தர்களும் அரசியல் ஞானிகளும் பாஷ்யகாரர்களும் வெகுநாள் மூளைக்கு வேலை கொடுத்து அவ்வறிக்கையைத் தயார் செய்தார்களாம். அவ்வாறு வருந்தி உருவாக்கப்பெற்ற அறிக்கையோ இன்னந் தெரியமுடியாத விகார ரூபமுடையதாயிருக்கிறது. அதன் திணை பால் முதலியவைகளை நிர்ணயம் செய்வது வெகு கஷ்டமாக இருக்கிறது. “ஜஸ்டிஸ்” திட்டத்தின் சாயல் ஒருபக்கம் சாடையாகத் தெரிகிறது. சோஷியலிஸ்டு மணமும் ஒருபக்கம் வீசுகிறது. எல்லா கட்சியாரையும் திருப்திப்படுத்தும் இந்திரஜால வித்தையும் அறிக்கை முழுதும் நேர்முகமாயும் மறைமுகமாகவும் தாண்டவமாடுகிறது. சென்ற புதன்கிழமையன்று சென்னை காங்கிரஸ் மண்டபத்தில் கூடிய காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தோழர் சத்தியமூர்த்தி பேசியபோது “அதிதீவிர அபேதவாதியான பண்டித ஜவஹர்லால் முதல், பதவியேற்பதை ஆதரிக்கும் நான் வரையில் எல்லாரும் இந்த தேர்தல் அறிக்கையை ஆதரிக்கிறார்கள்” எனப் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ்காரர் தற்பொழுது ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி இருந்துவருகின்றனர். தற்கால...

பொள்ளாச்சி, கோவை  சுற்றுப் பிரயாணம்

பொள்ளாச்சி, கோவை சுற்றுப் பிரயாணம்

  தலைவர் அவர்களே! தோழர்களே! அடுத்த வருஷ ஆரம்பத்தில் அமுலுக்கு வரப்போகும் சீர்திருத்தத்தில் பல பதவிகளும், அதிகாரங்களும் கொழுத்த சம்பளங்களும் கிடைக்கப் போகின்றன என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை. அவற்றை யார் அனுபவிப்பது என்பது பார்ப்பனர்கள் மாத்திரமா அல்லது எல்லா மத வகுப்பாரும் விகிதாச்சாரமா என்பதுதான் இப்போது அரசியல் கிளர்ச்சியாக இருந்து வருகிறது. அதிலும் இத்தனை நாள் மகா தியாகிகள் போல் நடித்து வந்த காங்கிரஸ்காரர்கள் இப்போது புது அரசியல் சீர்திருத்தம் வெளியானவுடன் எப்படியாவது அந்தப் பதவிகளைப் பெற்று அதிகாரம் செய்து சம்பளங்களை அடையவேண்டும் என்கின்ற ஆத்திரத்தில் தலைகால் தெரியாமல் குதிக்கிறார்கள். என்ன செய்தாவது எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றியாவது பதவி பெறவேண்டியது இன்று காங்கிரசின் ஜீவாதாரமான கொள்கையாக இருக்கிறது. காங்கிரஸ்காரர்கள் பதவி மோகத்தில் தங்களுடைய கொள்கை, நாணயம் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு விட்டு “பிசாசு”கள் போல் பதவி ஆசைபிடித்து அலைகிறார்கள். உத்தியோகத்துக்கும் பதவிக்கும் சம்பளத்துக்கும் ஆசைப்பட யாருக்கும் உரிமை உண்டு என்பதை...

காங்கிரஸ் கட்டுப்பாடு

காங்கிரஸ் கட்டுப்பாடு

காங்கிரஸ் கட்டுப்பாடு கட்டுப்பாடு என்று புலம்பிக் கொண்டு காங்கிரஸ்காரர் வெகு கட்டுப்பாட்டுக்காரர்கள் போல் பறை அடித்துக் கொள்ளுகிறார்கள். காங்கிரசுக்காரர்கள் எதில் கட்டுப்பாடாக இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் உணரவேண்டுகிறோம். காங்கிரஸ் மெம்பர் முறையில் கட்டுப்பாடுண்டா? கதரில் கட்டுப்பாடுண்டா? மெம்பர்கள் சேர்ப்பதில் கட்டுப்பாடுண்டா? அன்று; அன்று. அவசரத்துக்கு ஆள் பிடிப்பதுபோல் யாரையும் சேர்த்துக்கொள்கிறார்கள். மெம்பர்கள் நாணயத்தில் கட்டுப்பாடு இல்லை. அதைப்பற்றி விசாரிப்பதில், கவலை கொள்ளுவதில் கட்டுப்பாடு இல்லை. தோழர் டாக்டர் ராஜன் காங்கிரஸ் கட்டளையை மீறி நடந்துவிட்டு காங்கிரஸ் நன்மைக்கு ஆகவே மீறினேன் என்றார். டாக்டர் டி.எஸ்.எஸ்.சாஸ்திரியும் காங்கிரஸ் கட்டளையை மீறிவிட்டு காங்கிரஸ் நன்மையை உத்தேசித்தே அப்படி செய்தேன் என்கிறார். ஸ்தல காங்கிரஸ் கமிட்டி தலைவர், மேற்படி இருவரும் காங்கிரஸ் கட்டுப்பாட்டை மீறிவிட்டார்கள் என்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வைஸ் பிரசிடெண்டும் காரியதரிசியும் டாக்டர் ராஜன் செய்தது அக்கிரமம் என்கிறார்கள். பத்திரிகைகள் எல்லாம் ஒரே அபிப்பிராயமாக டாக்டர்கள் ராஜனையும் சாஸ்திரியையும் குற்றம் சாட்டுகின்றன. அப்படி...

ஈ.வெ.ரா. அறிக்கை  பரீøை பார்க்க தொண்டர்களுக்கு வேண்டுகோள்

ஈ.வெ.ரா. அறிக்கை பரீøை பார்க்க தொண்டர்களுக்கு வேண்டுகோள்

  இதுவரை எந்த பத்திரிகைகளுக்கும், இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி சம்பந்தமாக நான் ஒரு அறிக்கையும் விடுக்கவில்லை. ஆனால், இப்பொழுது இந்தி எதிர்ப்பு இயக்கத்தை குறித்து எனது அபிப்பிராயத்தை வெளியிட வேண்டும் என நான் கருதுகிறேன். அதோடு கனம் பிரதம மந்திரி தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் இந்தி எதிர்ப்பாளர்களை குண்டர்கள் என்றும் குண்டர்கள் கிளர்ச்சி என்றும் கூறியிருப்பதற்கும் இச் சமயத்தில் பதில் எழுத வேண்டுமென்று கருதுகின்றேன். சென்றவாரம் பொப்பிலிராஜா சாஹிப் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைக் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அது மிக்க பெருந்தன்மையாகவும் அவரது பரம்பரைக்கு ஏற்றதாகவும் இருந்தது என்பதுடன் அதில் நிலைமையை நன்கு ஆராய்ந்து விளக்கப்பட்டுமிருந்தது. மேலும் அதில் இந்தி பிரச்சினையை குறித்து பொதுஜன வாக்கு எடுக்க வேண்டும் என்றும் இரு கட்சியினரும் இதற்கு கட்டுப்பட வேண்டுமென்றும் காட்டப்பட்டிருந்தது. அது ஒரு நேர்மையான யோசனைதான். அதை எவரும் மறுக்கவு மாட்டார்கள். காங்கரசுக்காரர்களும் காந்தியாரும் இந்த பொதுஜன வாக்கை மதித்து வந்திருக்கிறார்கள். ஆனால்...

இந்தியை இன்று எதிர்க்கவில்லை  12 வருடங்களுக்கு முன்பிருந்தே எதிர்க்கிறோம்

இந்தியை இன்று எதிர்க்கவில்லை 12 வருடங்களுக்கு முன்பிருந்தே எதிர்க்கிறோம்

  சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த அதாவது 1923-ம் வருடத்திலிருந்தே இந்தியைக் கண்டித்து வந்திருக்கிறது. அந்த இயக்கத்தின் சார்பில் கூடுகிற ஒவ்வொரு மகாநாடுகளிலும் இந்தியைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றியும் பட்டிருக்கின்றன. உதாரணமாக 1931 வருடம் ஜúன் மாதம் 7-ந் தேதி கூடிய நன்னிலம் தாலூகா சுயமரியாதை மகாநாட்டில் இந்தியை கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அந்த தீர்மானத்தை தோழர் சாமி சிதம்பரனார் அவர்கள் பிரேரேபித்தார். தோழர் கு. ராமநாதன் (இப்பொழுது விளம்பர மந்திரியாக இருப்பவர்) அவர்கள் ஆமோதித்து அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றிப்பேசி இருக்கிறார். அந்தத் தீர்மானத்தின் பேரில் 1931-ம் வருடம் ஜüன் மாதம் 14-ந் தேதி “குடி அரசு” பத்திரிகை ஒரு நீண்ட தலையங்கம் எழுதி இருக்கிறது. அந்தத் தலையங்கத்தில் பெரிதும், அந்தத் தீர்மானத்தை பிரேரேபித்தவரும் ஆமோதித்தவரும் பேசிய பேச்சுக்களையே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது பின்னார் பிரசுரிக்கப்படும். அந்த மகாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் வருமாறு:- “பழைய புராணக் கதைகளைச் சொல்லுவதைத் தவிர...

நமது வேண்டுகோள்

நமது வேண்டுகோள்

  தேச விடுதலைக்காக காங்கரசில் சேர்ந்து உழைத்த அனுபவத்தினால் இந்திய விடுதலைக்கு வெள்ளைக்கார ஆட்சியைவிட பார்ப்பனீயக் கொடுமையே பெரிய தடையாக இருக்கிறதென்றும் காங்கரசில் இருந்து கொண்டு அந்தப் பார்ப்பனீயக் கொடுமையை ஒழிக்க முடியாதென்றும் உணர்ந்த தோழர் ஈ.வெ.ரா. காங்கரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டு அவரது சக்திக்கும் புத்திக்கும் இயன்றபடி உழைத்து வரவே பார்ப்பனீயத்துக்குப் பார்ப்பன மதமும் பார்ப்பனர் சிருஷ்டித்த கடவுள்களும் பெருந் துணையாயிருப்பதினால் பார்ப்பன மதமும் பார்ப்பனர் சிருஷ்டித்த கடவுள்களும் ஒழிந்தால்தான் பார்ப்பனீயம் அழியுமெனக் கண்டு பார்ப்பன மதத்தையும் பார்ப்பனர் சிருஷ்டித்த கடவுள்களையும் தாக்கி வரலானார். அதனால் தென்னாட்டுப் பார்ப்பன சமூகம் முழுதும் அவருக்கு எதிரியாயிற்று. எல்லாத்துறைகளிலும் பார்ப்பனர் ஆதிக்கமே இருந்து வந்ததினால் பலவழியிலும் தோழர் ஈ.வெ.ரா. ஹிம்சிக்கப்பட்டார். டாக்டர் வரதராஜúலு நாயுடு அவர்களை அரசியல் விதவையாக்கி மூலையில் உட்கார வைத்துவிட்டது போல்-தோழர் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவரது தமிழ் உணர்ச்சி முழுமையையும் அடக்கிக் கொண்டு மறைமுகமாகவாவது பார்ப்பனீயத்துக்கு ஆதரவளிக்கும்படி செய்துவிட்டதுபோல்...

1926ஆண்டுநாடகமே இப்போதும்

1926ஆண்டுநாடகமே இப்போதும்

“வெளியேறிய நேருவின் வீரமொழி” 1924ம் வருஷம் காங்கிரசுக்காரர்கள் இன்றையப் பித்தலாட்டம் போலவே பித்தலாட்டம் செய்து இந்திய சட்டசபைக்குச் சென்று அங்கு ஒரு வேலையும் செய்ய முடியாமல் 3வருஷ காலம் இருந்துவிட்டு சட்டசபை காலாவதி முடிய ஒரு வாரம் இருக்கும் போது “சட்டசபைகளை விட்டு வெளியேறுகிறோம்” என்று சொல்லிக்கொண்டு “வெளியில் வந்து” விட்டார்கள் என்பது யாவரும் அறிந்திருக்கலாம். ஆனால் அந்த வெளியேறுகிற காலம் வரையில் சட்டசபை கமிட்டிகளில் அங்கம் பெற்றார்கள், பெரும் சம்பளம் பெற்றார்கள், சட்டசபை நடவடிக்கை களுக்கு விகிதாச்சார பங்கும் பெற்றார்கள். இவ்வளவும் பெற்று 3 வருஷம் வாழ்ந்துவிட்டு கடைசியாக போலி வெளியேற்றம் செய்தபோது தோழர் பண்டிட் மோதிலால் நேரு அவர்கள் என்ன சொன்னார் என்பதை சற்று யோசித்துப்பார்க்கும்படி இப்போது வெளியிடுகிறோம். ~subhead வெளியேறிய நேருவின் வீரமொழி ~shend “சர்க்காரை நாங்கள் பயமுறுத்தவில்லை. சர்க்காருக்கு மகத்தான சக்தியும் அதிகாரங்களும் உண்டு. சர்க்காரை எதிர்க்கும் பலம் எங்களுக்கில்லை. தேசத்தில் உள்ள சமூக வேற்றுமையால்...

மீண்டும் ஒன்றரைக் கோடி கடன்  ஒரு சம்பாஷணை  – சித்திரபுத்திரன்

மீண்டும் ஒன்றரைக் கோடி கடன் ஒரு சம்பாஷணை – சித்திரபுத்திரன்

  காங்கரஸ்காரன்: இப்படி கோடி கோடியாய் கடன் வாங்குகிறீர்களே! இது அடுக்குமா? நாமோ எந்த சமயத்தில் விட்டுவிட்டு ஓடப்போகிறோமோ யார் கண்டார்கள். அப்புறம் இந்தக் கடனை யார் கட்டுவது? மந்திரி: கடன்பட்டவன் கட்டிவிட்டு சாகிறானா, சம்பாதித்தவன் சாப்பிட்டு விட்டு சாகிறானா? என்னமோ நம்ம காலம் வரை சக்கரம் ஓடினால் சரி. எவனோ கட்டுகிறான் நமக்கு அந்தக் கவலை எதற்கு? கா: முன்னமே மூன்றேகால் கோடி. இப்பொழுது வேறே ஒன்றரை கோடியா? இது என்ன ஊரா, பாழா? பொது ஜனங்கள் மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போட்டவர்கள் கேட்க மாட்டார்களா? ம: கேட்டு அவர்கள் தாலி அறுந்தது. எங்கேயோ அடித்துப் பிடித்து பணக்காரனிடம் பணம் பிடிங்கி தங்களுக்கு நல்லது செய்வதாகத்தான் கருதுவார்கள். மற்றபடி இது தங்கள் மீது சுமத்தப்படப்போகும் கடனே என்று ஒருவருக்கும் தெரியாது. கா: காங்கரசல்லாத பத்திரிகைகள் இவற்றை வெளியாக்கி விடுமே அப்புறம் கூடவா தெரியாது? ம: நாம்தான் காங்கரசல்லாத பத்திரிகைகள் எல்லாம்...

காங்கிரசும் பார்ப்பனீயமும்

காங்கிரசும் பார்ப்பனீயமும்

அகில இந்திய தேசியக் காங்கிரஸ் என்பது பார்ப்பனர்களின் கை ஆயுதமென்று நாம் இந்த பத்து பன்னிரண்டு வருஷகாலமாக கூறி வந்திருக்கிறோம். காங்கிரசில் மிக்க பக்தியுடனும் உண்மையான கவலையுடனும் ஊக்கத்துடனும் உழைத்து வந்த தோழர் ஈ.வெ.ராமசாமி போன்றவர்கள் இதை அதாவது காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்பதை உண்மையாய், சந்தேகமற உணர்ந்ததினாலேயே காங்கிரசை விட்டு வெளியில் வந்து காங்கிரசின் மூலம், பார்ப்பனர்கள் ஆதிக்கம் பெறாமல் இருப்பதற்குத் தங்களாலான முயற்சிகள் எல்லாம் செய்து காங்கிரசையும் பார்ப்பனச் சூழ்ச்சிகளையும் தோற்கடித்தே வந்திருக்கிறார்கள். பார்ப்பனர்களும் காங்கிரசின் பேரால் பிழைக்கிறவர்களும் காங்கிரசின் சார்பில் நடக்கும் பத்திரிகைகளும் பூனையானது கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தால் உலகோர் கண்களும் மூடப்பட்டிருக்குமென்று கருதிக் கொள்ளும் பாவனை போல் இன்று பார்ப்பனர்கள் காங்கிரஸ் வளர்ச்சி பெற்றுவிட்டது, வெற்றிபெற்றுவிட்டது, வெள்ளைக்காரர்கள் கையிலிருந்து ராஜ்யம் பிடுங்கப்பட்டாய் விட்டது, அதோ சுயராஜ்ய தேவி தோன்றி விட்டாள், இதோ பாரதத் தேவி கைவிலங்கு உடைபட்டுவிட்டது என்பன...

நான் சிறை புகுந்தால்?

நான் சிறை புகுந்தால்?

  அன்புமிக்க சுயமரியாதைத் தோழர்களே! இந்தி எதிர்ப்புத் தோழர்களே!! நான் இன்று சென்னைக்கு செல்லுகிறேன். பார்ப்பன ஆட்சி அடக்கு முறையின் பயனாய் அநேகமாக 11-ந் தேதி கைது செய்யப்பட்டு விடுவேன். எனக்கு சுமார் மூன்று நான்கு வாரங்களுக்கு முன்பே வாரண்டு பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்றும் என்னை சென்னைக்கு வெளியில் பிடித்தால் கிளர்ச்சி பலப்பட்டுவிடுமோ என சர்க்கார் யோசித்து நான் சென்னைக்கு வந்தவுடன் கைதியாக்கிவிட வேண்டுமென்று காத்திருக் கிறார்கள் என்றும் கொஞ்ச நாளைக்கு முன்பே கேள்விப்பட்டேன். என்றாலும் கொஞ்ச நாள் வரையில் நான் சென்னைக்கு வருவேன் என்று சர்க்கார் காத்திருந்து பார்த்துவிட்டு அப்புறம் சென்னைக்கு வெளியில் வந்து என்னை கைதியாக்குவார்கள் என்று கருதி நானும் கொஞ்சநாள் தயாராக காத்திருந்து பார்த்தேன். ஆனால் என்ன காரணத்தினாலோ சர்க்கார் அந்தப்படி செய்ய துணிவு கொள்ளவில்லை என்பது எனக்கு தெரிந்துவிட்டது. ~subhead சர்க்கார் மனோபாவம் ~shend சர்க்கார் தங்களுடைய அபிப்பிராயத்துக்கு மாறுபட்டவர்கள் எவ்வித எதிர்ப்பு கிளர்ச்சியும் செய்யக்கூடாது என்கின்ற...

சாரதா சட்டத் திருத்த மசோதா  லண்டனில் ஆதரவு  பிரபலஸ்தர்கள் அறிக்கை

சாரதா சட்டத் திருத்த மசோதா லண்டனில் ஆதரவு பிரபலஸ்தர்கள் அறிக்கை

  லண்டன், ஆகஸ்டு 4. இந்திய சட்ட சபையில் கொண்டு வரப்பட்டிருக்கும் சாரதா சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து, பிரிட்டிஷ் காமண்வெல்த்து லீக் சார்பாக லார்டு லோதியன், வைகொண்டஸ் ஆஸ்டர் உள்ளிட்ட 9 பிரபலஸ்தர்கள் “லண்டன் டைம்ஸ்” பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த திருத்த மசோதா மிகவும் அவசியமான தென்றும் தற்கால சாரதா சட்டத்தினால் அது விரும்பிய பலன் ஏற்படவில்லையென்றும் இந்தியச் சட்டசபை அந்த மசோதாவை கட்டாயம் நிறைவேற்றி வைக்க வேண்டுமென்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பு : லண்டனில் இருக்கும் பிரபலஸ்தர்கள் சாரதா சட்ட திருத்த மசோதா விஷயத்தில் மிக்க சிரத்தை காட்டுகிறார்கள். ஆனால் இந்தியாவின் ஏக பிரதிநிதி ஸ்தாபனம் என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸோ, பிரஸ்தாப மசோதா விஷயமாக மௌனஞ் சாதித்தே வருகிறது. இப்பொழுது இந்திய சட்ட சபையில் ராவ் பகதூர் எம்.ஸி. ராஜாவின் ஒடுக்கப்பட்டோர் சிவில் உரிமைப் பாதுகாப்பு மசோதாவும், டாக்டர் தசமுகரின் மாதர் வார்சுரிமை மசோதாவும், பிரஸ்தாப...

கோவை தமிழர் படை  பவானியில் மாபெருங் கூட்டம்  காங்கரஸ் காலித்தனம்

கோவை தமிழர் படை பவானியில் மாபெருங் கூட்டம் காங்கரஸ் காலித்தனம்

  இன்று இங்கு தமிழர் படை வந்திருக்கிறது என்றும், அந்தப்படை வரவேற்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கே தான் வந்திருப்பதாகவும், இந்த ஊருக்கு தான் 10, 12 வருடத்திற்கு முன் வந்து பேசி இருப்பதாகவும், இன்று தமிழர் படை செல்வதின் நோக்கத்தைப்பற்றிப் பேசப்போவதாகக் கூறினார். இது சமயம் பார்ப்பனரால் தூண்டப்பட்ட ஒரு பார்ப்பனரல்லாத கூலி “வந்தே மாதரம்” என்று கூறினார். அதற்குத் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் “இப்போது வந்துதான் ஏமாற்றுகிறீர்களே இன்னுமா ஏமாற்ற வேண்டும்?” என்று கூறிவிட்டு தான் கூறுவதில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் நாளைக் கூட்டம் போட்டு பதில் கூறுங்கள். இல்லாவிட்டால் பேசுவதில் ஏதாவது சந்தேகமேற்பட்டால் சந்தேகங்களை தலைவர் மூலம் எழுதிக்கொடுத்தால் பதில் சொல்வதாகவும், வீணில் கூட்டத்தில் கலகம் செய்து காலித்தனம் செய்தால் நான் பயந்து விட்டு ஓடி விடப்போவதில்லை யென்றும், தான் இந்த ஊரில் பழகினவரென்றும் தன்னை பயமுறுத்தினால் பயந்து விட மாட்டாரென்றும், இவர்கள் கலகம் செய்வதால் இவர்கள் சூழ்ச்சிகளை...