Author: admin

சமதர்மமும் முதலியாரும்

சமதர்மமும் முதலியாரும்

தோழர் கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் 131136ந் தேதி “நவ சக்தி”யில் நாயக்கர் என்ற தலைப்பில் ஈ.வெ. ராமசாமியை சில கேள்விகள் கேட்டு சில புத்திமதி கூறியிருக்கிறார். அதற்காக முதலியாருக்கு நன்றி செலுத்தி விடையளிப்போம். தோழர் முதலியார் அவர்கள் சர்.கே.வி. ரெட்டி நாயுடும், சர். மகம்மது உஸ்மானும், குமாரராஜா முத்தைய செட்டியாரும் செட்டிநாட்டில் சமதர்மத்தைத் தாக்கிப் பேசி இருக்கிறார்கள் என்றும் இம்மூவர் பேச்சைப் பார்த்த பின்பு ராமசாமியாரே நீர் ஜஸ்டிஸ் கட்சியிலேயே இருக்கப்போகிறீரா? அப்படியானால் உம்மை நம்பிய இளைஞர் நிலை என்ன? என்றும் கேட்டிருக்கிறார். ஆகவே இந்த மூன்று விஷயம் பதிலளிக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. அதற்கு நாம் மகிழ்ச்சியோடு விடை பகருகிறோம். இக்கேள்விகள் கேட்டதை நல்லதொரு சமயத்தில் நமக்கு செய்யாமல் செய்த உதவி போல் கருதி விடை பகருகிறோம். இந்த இடத்தில் தோழர் முதலியார் அவர்கள் பிரயோகித்திருக்கும் சமதர்மம் என்பதற்கு பொருளென்ன? கடவுள், மோட்சம், ஆத்மா என்கின்ற விஞ்ஞானத்துக்கு அதீதப்பட்ட வார்த்தைகள் போன்ற...

பொப்பிலியும் நேருவும்

பொப்பிலியும் நேருவும்

தோழர் நேரு அவர்கள் பொப்பிலிக்குச் சென்றபோது, பொப்பிலியில் வரவேற்பு இல்லையென்றும், பொப்பிலி ராஜாவின் இடத்தில் நேருவுக்கு பேச இடம் கொடுக்கவில்லை என்றும் இவர் யாருடைய தனி வீட்டிலேயோ இருந்து பேசும் போது பொப்பிலி ராஜாவின் சின்னங்கள் அப்பேச்சுகள் மற்றவர்கள் காதில் விழாமல் செய்து விட்டன என்றும் பார்ப்பனப் பத்திரிகைகள் ஓலமிடுகின்றன. அதற்கு ஆக பொப்பிலி ராஜாவைக் குறைகூறுகின்றன. இச்சம்பவங்கள் மிகைபடுத்திக் கூறப்பட்டவை என்று தக்க இடத்தில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது என்றாலும் நாம் அதை உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை. பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்களது கூலிகளும் கூறுவது அவ்வளவும் உண்மை என்றே வைத்துக்கொள்ளுவோம். காங்கிரஸ் நடத்தைக்கும் ஜவஹர்லால் யோக்கியதைக்கும் இச்சம்பவங்களில் எது தகுதி அற்றது என்று உசாவுகிறோம். காங்கிரசுக்காரர்கள் இதற்கும் தகுதி ஆனவர்கள், இன்னும் அதிகமான காரியத்துக்கும் தகுதியானவர்கள் என்று “நெருப்பின் மீது” நின்று மெய்ப்பிப்போம். மாட்டுச்சாமிக்கு புல்லும், பருத்திக்கொட்டையும் வைத்து ஆராதனை செய்வார்கள். நாய்ச்சாமிக்கு மலமும், கசுமலமும் வைத்து ஆராதிப்பார்கள். நல்ல குதிரையை...

தளவாய் குமாரசாமி முதலியாரும் காங்கிரசும்

தளவாய் குமாரசாமி முதலியாரும் காங்கிரசும்

தளவாய் குமாரசாமி முதலியார் கவர்னருக்கு உபசாரப்பத்திரம் வாசித்துக் கொடுத்ததற்கு ஆக அவரை காங்கிரஸ்காரர்கள் விலக்கப் போகிறார்களாம், தேசத்துரோகி என்று கூப்பிடுகிறார்களாம், அவரை ராஜினாமா கொடு என்கிறாராம் சத்தியமூர்த்தியார். கவர்னர் இந்த மாகாணத்துக்கு ராஜப்பிரதிநிதி. அவர் ஆதிக்கத்தில் ஸ்தல ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவருடைய ஆட்சிக்கு அரசருக்கு அரசர் சட்டத்திற்கு உட்பட்டதே ஸ்தல ஸ்தாபனங்களாகும். இந்த நிலையில் கவர்னர் பிரபு ஒரு ஸ்தலத்துக்கு வந்தால் அவருக்கு மரியாதை செய்யக் கூடாது என்பது போக்கிரித்தனமே ஒழிய வேறில்லை. ஸ்தல ஸ்தாபனம் அங்கத்தினர் ஒவ்வொருவரும் ஸ்தல ஸ்தாபனத்திற்குள் கால் வைக்கும் போதே பிரம்ம முடியைப் பிடித்துக் கொண்டு ராஜாவுக்கும், சட்டத்துக்கும், ராஜா பரம்பரைக்கும் பக்தியாய் விஸ்வாசமாய் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று பிரமாணம் செய்துவிட்டுத்தான் உள்ளே போகிறார்கள். இந்த நிலையில் ஒரு ராஜப் பிரதிநிதிக்கு மரியாதை செய்வதில்லை என்றால் எப்படி நியாயமாகும்? அப்படியாவது காங்கிரஸ் கொள்கையில் இது ஒரு திட்டமாக இருக்கிறதா? அநாவசியமாய் திருச்சி, மதுரை முதலிய முனிசிபாலிட்டிகளை...

பட்டேல் வருகிறாராம்!

பட்டேல் வருகிறாராம்!

பத்து லக்ஷம் வேண்டுமாம்!! யார் வீட்டு சொத்து!!! எதற்காக!!!! தோழர் பட்டேல் தமிழ் நாட்டுக்கு வருவதாகவும் அவருக்கு 10 லட்சம் ரூபாயாவது வசூலித்துக்கொடுக்க வேண்டும் என்றும் அதை அவர் தமிழ் நாட்டு காங்கிரஸ் கமிட்டிக்கே கொடுத்து விட்டுப் போவார் என்றும் அந்தப் பணங்கள் சட்டசபை தேர்தலுக்கு செலவிடப்படுமென்றும் காங்கிரஸ் அறிக்கை கூறுகிறது. சட்டசபை தேர்தலுக்கு 10 லட்சமோ அல்லது 5 லட்சம் தானாகட்டும் எதற்கு ஆகவேண்டும்? பணக்காரர்கள் கூடாது என்று காங்கிரஸ்காரர்கள் கூப்பாடு போடுவது எதற்கு? குமாரராஜா பணக்காரர் என்றும் பொப்பிலி ராஜா ஜமீன்தார் என்றும் ஆத்திரப்படுவது எதற்கு? பணத்தால் காரியம் சாதித்துக் கொள்ளுகிறார்கள் என்றும் ஒழுக்கத்தால் கொள்கையால் ஜெயிப்பதில்லை என்றும் சொல்லுவதால்தானே அப்படிச் சொல்லப்படுகிறது. அப்படியானால் காங்கிரஸ்காரர்கள் 10 லக்ஷ ரூபாய் வாங்கினால் என்ன செய்யப் போகிறார்கள்? ஒரு லக்ஷத்துக்கு 100 ஆயிரம் ரூபாய். 10 லக்ஷத்துக்கு ஆயிரம் ஆயிரம் ரூபாய் ஆகிறது. சென்னை மாகாண சட்டசபைக்கு 250 மெம்பர்கள்...

கள்ளனை குள்ளன் ஏமாற்ற முடியவில்லை

கள்ளனை குள்ளன் ஏமாற்ற முடியவில்லை

போடுங்கள் விடலாம் விடுங்கள் போடலாம் காங்கிரசின் பேரால் அபேக்ஷகர்களை நிறுத்துவதற்கு நிறுத்தப்படும் அபேக்ஷகர்கள் பட்டதாரிகளாய் இருக்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் ஒரு தீர்மானம் ஒரு வாரத்துக்கு முன் தான் செய்து கொண்டார்கள். இப்படி இவர்கள் செய்து கொண்டதானது மொத்தத்தில் இந்திய மாகாணங்கள் பூராவுக்கும் ஏற்பட்டதல்ல. அன்றியும் இது அகில இந்திய காங்கிரஸ் செய்துகொண்ட தீர்மானமும் அல்ல. இன்றைய காங்கிரசின் பொது கொள்கையுமல்ல. காங்கிரசினிடத்தில் இன்றைய தினம் எந்தவிதமான ஒத்துழையாமை முறையோ சட்ட மறுப்பு முறையோ பகிஷ்கார முறையோ எதுவும் இல்லை. அவைகளையெல்லாம் நிறுத்திவிட்டு சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதாக பாட்னா காங்கிரசில் தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. மற்ற தேர்தல்கள் விஷயத்திலும் காங்கிரசானது இதுவரை பட்டம் பதவி முதலியவைகளை விட வேண்டும் என்கின்ற எந்த விதமான கொள்கையையும் அனுசரிக்க இல்லை. கள்ளு சாராயக்கடை வியாபாரிகளையும் கண்டிறாக்டர்களையும் உற்பத்தி செய்வதற்கு உடந்தைக்காரர்களையும் உற்பத்தி செய்யும் சொந்தக்காரர்களையும் பல காங்கிரஸ் தேர்தலுக்கு தெரிந்தெடுத்து எலக்ஷனில் வெற்றிபெற...

பட்டம் துறந்த பதி விரதைகள்

பட்டம் துறந்த பதி விரதைகள்

காங்கிரசின் பேரால் சட்டசபை தேர்தலுக்கு நிற்பவர்கள் தங்களுக்கு அரசாங்கத்தாரால் கொடுக்கப்பட்ட பட்டங்களை துறந்துவிடவேண்டும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு நாணயமானது என்பது நமக்கு இன்னமும் விளங்கவில்லை. இந்த நிபந்தனை சென்னை மாகாணத்துக்கு மாத்திரமா அல்லது இந்தியா பூராவுக்குமா அல்லது தோழர் ராமலிங்க செட்டியார், ரத்தினசபாபதி முதலியார் ஆகிய இருவர்களுக்கு மாத்திரமா என்பது விளங்கவில்லை. தோழர் சுப்பராயன் அவர்கள் இன்னமும் அரசாங்க நியமனம் சில வகித்து வருகிறார். ஏதேதோ கமிட்டிகளுக்கு நியமிக்கப்பட்டு இருந்தார். காங்கிரசைச் சேர்ந்த வேறு சில அங்கத்தினர்களுக்கும் சில நியமனங்கள் இன்னும் இருக்கின்றன. அதிக தூரம் போவானேன் திவான் பகதூர் பட்டம் துறந்த தோழர் மாஜி திவான்பகதூர் ராமலிங்க செட்டியார் அவர்களுக்கு சென்னை அரசாங்கத்தாரில் அதுவும் மந்திரிமார்களால் நியமனம் செய்த சில பதவிகள் இருக்கின்றன. தோழர் சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கும் மந்திரிகளால் நியமனம் பெற்ற சில பதவிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ராஜினாமா செய்யாமல்...

நாயக்கர்மார்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள்

நாயக்கர்மார்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள்

கோயமுத்தூர் ஜில்லாவில் கொங்கு வேளாளர்களுக்கு அடுத்த சமூகம் ஜனப் பெருக்கத்திலும் விவசாயத்திலும் இரண்டாவதாக விளங்கக்கூடியவர்கள் ஆந்திர நாயக்கர்மார் அதாவது கம்மநாயக்கர்மார் சமூகமாகும். இவர்கள் செல்வத்திலும் வியாபாரத்திலும் வேளாளர்களைவிட சிறிது குறைந்தவர்கள் அல்ல என்றே சொல்லலாம். பொள்ளாச்சி, உடுமல்பேட்டை, திருப்பூர், அவனாசி ஆகிய தாலூக்காக்களில் இவர்கள் குறிப்பிடத்தகுந்த ஜன சமூகமுள்ளவர்கள். இவ்வளவோடு மாத்திரமல்லாமல் காங்கிரஸ் கூப்பாட்டிலும் கதர் வேஷத்திலும் ஜெயிலுக்கு போனதிலும் அடிபட்டதிலும் பிழைப்பு இருப்பு முதலியவைகளை லக்ஷியம் செய்யாமல் காங்கிரஸ் காங்கிரஸ் என்று அலைந்ததிலும் இவர்கள் மற்ற எந்த சமூகத்தாரையும் விட குறைந்தவர்கள் அல்ல என்பது மாத்திரமல்லாமல் வேறு பல சமூகங்களை யெல்லாம் விட மேம்பட்டவர்கள் என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட சமூகத்தார் இன்று காங்கிரஸ் பார்லிமெண்டரி கமிட்டியாரால் நாமம் சாத்தப்பட்டு விட்டார்கள். கோயமுத்தூர் ஜில்லாவில் அசம்பளிக்கு உள்ள 8 ஸ்தானங்களிலும் ஒன்றுக்குக்கூட நாயக்கர்களில் யாரையும் நியமிக்காமல் காங்கிரஸ்காரர்கள் பட்டை நாமம் சாத்திவிட்டார்கள். இன்று பெரிய நூல் மில் வைத்து நடத்துபவர்களில் சுமார்...

தண்ணி மயக்கமா? ஆணவ மயக்கமா?

தண்ணி மயக்கமா? ஆணவ மயக்கமா?

தோழர் சத்தியமூர்த்திக்கு தலை கிறு கிறுத்து விட்டது. இடுப்பில் வேஷ்டி இருக்கிறதா இல்லையா மகளா மனைவியா என்பவைகளை உணரக் கூடாத அளவு போதை ஏறிவிட்டது. இது தண்ணி போதையா? அல்லது சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷனில் 10, 15 பார்ப்பனர்கள் வெற்றிபெற்று விட்ட ஆணவ போதையா என்பது நமக்கு விளங்கவில்லை. அசம்பிளி தேர்தலில் பல பார்ப்பனர்கள் வெற்றி பெற்றவுடன் இதுபோன்ற போதை வெறி ஒரு 2, 3 மாத காலம் தலைவிரி கோலமாய் பீச்சாண்டி மாதிரி திரியும்படி செய்தது. பிறகு ஜில்லா போர்டுகளும் முனிசிபாலிட்டிகளும் நல்ல பாடம் கற்பித்து வெறியை இறக்கிவிட்டன. இப்போதும் அதுபோலவே தலைகால் தெரியவில்லை. தெரியவில்லை என்பது ஒருபுறமிருந்தாலும் பொது ஜனங்கள் கண்களில் மண்ணைப்போட்டு அடுத்த சட்டசபைத் தேர்தலில் ஏமாற்றுவதற்கு ஆக அதிக போதை ஏற்றிக்கொண்டு கண்டபடி உளறுகிறார். அவரது ஜாதிப்புத்தி போகவில்லை; போக்கிரித்தனமாக ராக்ஷதன், சூரன், அசுரன் என்று ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களை இழித்துக்கூறும் அற்பத்தனம் ஓய்ந்தபாடில்லை. அதாவது...

கருப்பு காங்கிரஸ்வாதிக்கும் வெள்ளை காங்கிரஸ்வாதிக்கும் சம்பாஷணை

கருப்பு காங்கிரஸ்வாதிக்கும் வெள்ளை காங்கிரஸ்வாதிக்கும் சம்பாஷணை

– சித்திரபுத்தி�ரன் கருப்பு காங்கிரஸ்வாதி: என்னப்பா முதலியார் பட்டத்தை விட வில்லையாமே? வெள்ளை காங்கிரஸ்வாதி: விடாவிட்டால் உனக்கென்ன இத்தனை ஆத்திரம்? க.கா.வா: இல்லை தேசாபிமானம் வேண்டாமா? வெ.கா.வா: என்ன தேசாபிமானம்? பட்டத்தைவிட்டால்தானா தேசாபிமானம்? பட்டத்தை விடவேண்டியது தேசாபிமான சின்னமா? இன்று காங்கிரசில் பட்டதாரிகள் யாருமில்லையா? சென்னைபட்டணத்தில் ராவ்பகதூர் பட்டம்விட்ட தோழர் ஒ. கந்தசாமி செட்டியார் இருக்கிறாரே அது போதாதா? C.I.E. பட்டம் விட்ட தோழர் கு. சீனிவாசய்யங்கார் இருக்கிறாரே அது போதாதா? இவர்கள் தேசாபிமானத்துக்கு இன்று எவ்வளவு மதிப்பு இருக்கிறது பார்! இது உனக்கு தெரியாதா? க.கா.வா: சரி, பழய கதை பேசாதே, முதலியார் டைடிலை விட்டுவிடுகிறேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு இப்போது விடவில்லையே அதற்காகத்தான் சொன்னேன். வெ.கா.வா: எதற்காக முதலியார் டைடில் விடுகிறேன் என்று சொன்னார்? தேசாபிமானத்துக்காகவா? 4 அணா மெம்பர் பிளெஜ்ஜில் டைடிலை விடவேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா? க.கா.வா: 4 அணா பாரத்தில் இல்லாவிட்டால் என்ன? சட்ட...

மகன் செத்தாலும் மருமகள் “முண்டை” ஆக வேண்டும்

மகன் செத்தாலும் மருமகள் “முண்டை” ஆக வேண்டும்

ஜஸ்டிஸ் கக்ஷி தலைவர்களிடம் பொறாமைப்பட்ட பெரியார்கள் சிலரின் வீரப்பிரதாபம் இன்று காங்கிரசின் சாதாரண ஆட்களின் வாலைப் பிடித்துக் கெஞ்சிக்கொண்டு திரியும்படியான நிலைமை ஏற்பட்டது பற்றி நாம் சந்தோஷப்படுவதா வெட்கப்படுவதா என்பது தெரியவில்லை. ஒரு காலத்தில் கோவை ஜில்லா பிரமுகர்கள் என்று சொல்லி முன்னணியில் இருந்து அரசியல் பூஜையில் முதல் தீர்த்தப்பிரசாதம் பெற்று வந்த பெரியார்கள் இன்று காங்கிரசில் பக்தர்கள் ஆன காரணத்தால் தோழர் சத்தியமூர்த்தியாரையும் அவனாசிலிங்கனாரையும் சுப்பய்யா முதலியாரையும் “எனக்கு இன்ன தாலூகா கொடு” “எனக்கு இன்ன பிர்க்கா கொடு” என்று கெஞ்சவும் அவனாசிலிங்கம் போன்றவர்கள் எல்லாம் “அதுதான் கொடுப்பேன் வாங்கினால் வாங்கிக்கொள் இல்லாவிட்டால் போ” என்று சொல்லவும் “இதற்குத் தானா நான் காங்கிரசுக்கு வந்தேன்? என் யோக்கியதை என்ன? அந்தஸ்து என்ன” என்று இந்தபக்தர்கள் கேட்கவும் அதற்கு அவனாசிலிங்கம் அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து தனது மார்பைப்பார்த்துக் கொண்டு “உம்மை யாரய்யா வரச்சொன்னார்? போமே இப்பொழுது வேண்டுமானாலும்” என்று சொல்லவும் இதைக்...

முஸ்லீம்களும் காங்கிரசும்

முஸ்லீம்களும் காங்கிரசும்

தோழர் தாவுத்ஷா சாயபு அவர்கள் முஸ்லீம்கள் பிரதிநிதியாக காங்கிரசில் இருப்பவர். அவர் மற்ற முஸ்லீம்களையும் காங்கிரசுக்கு வரும்படி அழைக்கிறவர். தோழர் சத்தியமூர்த்தியாரை அரசியல் குருவாகவும் தலைவராகவும் கொண்டு ஒழுகுகிறவர். எலக்ஷன் நடக்கும் ஊர்கள் தோறும் அழைப்பில்லாமலே சென்று காங்கிரஸ் அபேட்சகர்களை ஆதரிப்பவர். இவ்வளவு மாத்திரமில்லாமல் ராமாயண பாரத காலக்ஷேபம் செய்வதில் பார்ப்பன சாஸ்திரிகளை விட ஒருபடி முன்னணியில் இருப்பவர். இப்படி எல்லாம் நடந்தும் பார்ப்பனர் தங்கள் பரம்பரை வழக்கம்போல் தோழர் தாவுத்ஷாவை சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷனில் கொடை கவிழ்த்தி விட்டார்கள். அவ்வளவோடு இல்லாமல் உலகம் அறிய பெரியதொரு அவமானத்தையும் உண்டாக்கி வைத்துவிட்டார்கள். கார்ப்பரேஷனுக்கு முஸ்லீம் பிரதிநிதியாக தோழர் தாவுத்ஷாவை ஒரு அபேட்சகராக ஏற்று அவரது பெயரை வெளியிட்டு உலகம் அறியச் செய்துவிட்டு கடசியாக மற்றொரு முஸ்லீமின் வசவுக்கும் கலகத்துக்கும் பயந்து தோழர் தாவுத்ஷாவை வெளியில் நெட்டித் தள்ளி விட்டு தோழர் ஷாபி மகமது சாயபு அவர்களை போட்டுவிட்டார்கள். தோழர் தாவுத்ஷா சாயபு...

ஈரோடு ரேஷனல் புக்ஸ் பப்ளிஷிங் சொசைட்டி (லிமிடெட்)

ஈரோடு ரேஷனல் புக்ஸ் பப்ளிஷிங் சொசைட்டி (லிமிடெட்)

ஈரோடு ரேஷனல் புக்ஸ் பப்ளிஷிங் சொசைட்டி லிமிடெட்டின் ஜனரல்பாடி மீட்டிங்கு டிசம்பர் மாதம் முதல் தேதி மாலை 5 மணிக்கு ஈரோடு சொசைட்டி ஆபிசில் கூடும். அப்போது சொசைட்டியின் நிலையைப்பற்றியும் மேல் நடப்பைப்பற்றியும் யோசித்து முடிவு செய்யப்படும். மெம்பர்கள் வரவேண்டுமாய்க் கோரப்படுகிறார்கள். – ஈ.வெ.ராமசாமி – பிரசிடெண்ட் ஈரோடு 5.11.36 குடி அரசு அறிவிப்பு 08.11.1936

கணக்குத் தெரியவேண்டுமா?

கணக்குத் தெரியவேண்டுமா?

நம் நாட்டில் மூடர்களோ அல்லது பித்தலாட்டக்காரர்களோ மன தறிந்து மக்களை ஏமாற்றுபவர்களோ எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமானால் கதர் கட்டியிருப்பவர்களை சென்செஸ் எடுத்தால் விளங்கிவிடும். குடி அரசு பெட்டிச் செய்தி 08.11.1936

கதர்த் தத்துவம்

கதர்த் தத்துவம்

நம் நாட்டு விடுதலை ஸ்தாபனம் என்று சொல்லப்படும் காங்கிரசானது 1920ல் ஒரு புதிய மாறுதலை அடைந்தது. அதாவது காங்கிரஸ் ஆரம்பம் முதல் 1920 வருஷம் வரை பிரிட்டிஷாரிடம் ராஜபக்தி ராஜ விசுவாசம் ஆகியவை காண்பித்து வெளி வியாபாரம், யந்திரத் தொழில் முறை முதலியவைகள் மூலமே பொருளாதாரமும், தொழில் விருத்தியும் தனது கொள்கையாய் கொண்டிருந்ததோடு அரசியல் முன்னேற்றம், சுதந்திரம் என்பவைகளுக்கு சர்க்கார் உத்தியோகங்கள் பெறுவதும் சர்க்கார் நியமனங்களை விரிவாக்கச் செய்வதும் ஆகிய இரண்டையே முக்கிய வேண்டுகோளாகவும் விண்ணப்பமாகவும் கொண்டிருந்தது. முஸ்லீம்கள் இயக்கமும் பார்ப்பனரல்லாதார் இயக்கமும் தோன்றி காங்கிரஸ் பலனில் பங்குகேட்க ஆரம்பித்த பிறகே அனுபவத்துக்கும் அறிவுக்கும் ஆதாரங்களுக்கும் பொருத்தமற்ற சில கொள்கைகளை வைத்து அறிவுள்ள மக்களும் அனுபவ சாத்தியத்திற்கு உட்பட்டும் மற்ற இடங்களில் நடக்கும் நடப்புகளை கவனித்தும் செய்கையில் இறங்கும் மக்களும் காங்கிரசின் கிட்ட நெருங்குவதற்கு இல்லாத மாதிரியாகவும் உண்மையான பொதுநல கவலையுள்ள மக்களை விரட்டி அடிப்பதற்கு ஆகவுமான முறையில் கொள்கைகளை வகுத்து...

சாஸ்திரியாரே இதற்கு சர்வாதிகாரியாக வேண்டியதில்லை

சாஸ்திரியாரே இதற்கு சர்வாதிகாரியாக வேண்டியதில்லை

சுயராஜ்யம் வந்தாலே போதும் மகா கனம் சாஸ்திரியார் பிரம்மஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்கள் விழுப்புரம் பேச்சில் நான் சர்வாதிகாரி ஆனால் இன்ன இன்னது செய்வேன் என்று விளக்கியதில் சத்தியத்தைச் சொல்லிவிட்டார். அதற்கு ஆக அவரை நாம் பாராட்ட வேண்டும். தோழர்கள் ஜவஹர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரியார் ஆகிய பார்ப்பனர்களை விட கனம் சாஸ்திரியார் 1000 மடங்கு யோக்கியர் என்று சொல்லலாம். எப்படி யெனில் அவர் சர்வாதிகாரியானால் இந்தியாவில் ஒரே மதத்தை ஸ்தாபித்து விடுவேன், வகுப்புரிமையை எடுத்துவிடுவேன், தீண்டப்படாத மக்களுக்கு தனிக்கோவிலும், தனிப் பள்ளிக்கூடமும் கட்டி வைப்பேன், பெண்களுக்கு சம சொத்துரிமை அளிக்கமாட்டேன், ஹிந்தி பாஷையை இந்திய பாஷை ஆக்கி விடுவேன், சமூக சீர்திருத்த சம்மந்தமான காரியம் ஜனங்கள் சம்மதமில்லாமல் செய்யவிடமாட்டேன் என்று கூறி இருக்கின்றார். ஆனால் இதை இப்படியே நிர்வாணமாய்ச் சொல்லாமல் அதற்கு மூடிபோட்டு கழுத்தை மூடிக்குள் வைத்து பேசியிருக்கிறார். இந்தக் காரியங்கள் மாத்திரம் செய்ய வேண்டியதானால் சாஸ்திரியார் சர்வாதிகாரியாக ஆக வேண்டிய...

கார்ப்பரேஷன் தேர்தலில்

கார்ப்பரேஷன் தேர்தலில்

பார்ப்பனர் வெற்றி சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தல் நடந்து முடிவும் வெளியாகிவிட்டது. காங்கிரசுக்கு 27 ஸ்தானமாம். அப்படியானால் மீதி எல்லாம் ஜஸ்டிஸ்கட்சிக்கே என்று வைத்துக்கொண்டாலும் ஜஸ்டிஸ் கட்சி கார்ப்பரேஷன் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரஸின் வெற்றி உண்மையான வெற்றியா அல்லது மற்ற வெற்றிகளைப் போல் வெறும்கொட்டை எழுத்துச்சேதி வெற்றியா என்பது ஒரு புறமிருந்தாலும் பார்ப்பனர்களுக்கு நல்ல வெற்றி என்பதை யாரும் மறுக்கமுடியாது. எழவானாலும் கல்யாணமானாலும் புரோகிதனுக்கு பலன் (வரும்படி) ஒரே மாதிரிதான் என்பது போல் பொய் வெற்றியானாலும் மெய் வெற்றி யானாலும் பார்ப்பனர்களுக்கு 11 ஸ்தானம் கிடைத்து விட்டது. ஆதலால் அவர்களுக்கு தேர்தலின் அரசியல் பின் விளைவு எப்படியானாலும் கவலைப்படத்தக்க காரியம் ஒன்றுமில்லை. பார்ப்பன சமூகம் 100க்கு 3 பேர் வீதம் ஜனத்தொகை கொண்டது. ஆதலால் அவர்கள் 40 ஸ்தானங்களில் 1லீ ஒண்ணரை ஸ்தானத்துக்கே அருகதையுடையவர்கள். ஆனால் காங்கிரசு, தேசீயம், சுயராஜ்யம் என்ற கூப்பாடுகளின் பயனாய் 11...

தீபாவளிப் பண்டிகை

தீபாவளிப் பண்டிகை

இவ் வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப்போகின்றீர்கள்? “அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று சொல்லி விடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப்போகின்றீர்களா? என்பது தான் “நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்” என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி யோக்கியப் பொறுப்பின்றி உண்மைத் தத்துவமின்றி சுயமரியாதை உணர்ச்சி இன்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல் மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே யல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான “பழய வழக்கம்” “பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்” என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப்போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே யல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்....

சம்பாஷணை

சம்பாஷணை

– நாரதர் ஓர் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் ரெயிலில் போகும் போது நடந்த சம்பாஷணை (பார்ப்பனர் சாஸ்திரியார், பார்ப்பனரல்லாதார் கந்தையா) சாஸ்திரியார்: கந்தையா எங்கு போகிறீர். கந்தையா: அது யார் சாஸ்திரியா? சாஸ்திரி: ஆம், ஆசீர்வாதம் (மார்பிற்கு நேரே உள்ளங்கையை வளைத்துக்கொண்டு) கந்தையா: நான் உம்மை ஆசீர்வாதம் கேட்கவில்லை. அது உமக்கே இருக்கட்டும், எது வரைக்கும் பிரயாணம்? சாஸ்திரி: என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்? பிராமணாள் ஆசீர்வாதம் இலகுவில் எல்லோருக்கும் கிடைக்குமா? கந்தையா: எனக்குப் பிராமணனென்றும், மற்றவர்களென்றும், ஆசீர்வாதமென்றும், சாபமென்றும் இருப்பதாகவும், அதன் பெயருக்குத் தக்கபடியான ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாகவும் நம்பிக்கையில்லை. அப்படியிருப்பதெனச் சொல்லுபவர்களையும், நம்புபவர்களையும் நான் பொருட்படுத்துவதுமில்லை. சாஸ்திரி: அப்படியானால் இதுவெல்லாம் உலகத்தில் எப்படி தொன்று தொட்டு நடந்து வருகிறது. கந்தையா: உலகம் என்று எதைச் சொல்லுகிறீர்? நீர் வசிக்கும் இடத்தையா? மற்றுமுள்ள 5 கண்டங்களின் நிலப்பரப்புகளையும் சேர்த்தா? சாஸ்திரி: மற்ற விஷயமெல்லா மெதற்கு? முதலில் நாம் வசிக்கு மிடத்தின் நடப்பைக் குறித்தே சொல்லும்...

காங்கிரஸ் சுயமரியாதைக்காரர் என்று சொல்லிக்கொள்ளுபவருக்கும்

காங்கிரஸ் சுயமரியாதைக்காரர் என்று சொல்லிக்கொள்ளுபவருக்கும்

சுயமரியாதை ஜஸ்டிஸ்காரருக்கும் நடந்த சம்பாஷணை – அனாமதேயம் எழுத�ுவது சு.ம. காங்கிரஸ்வாதி: தோழர் ஜவஹர்லால் ஒரு சமதர்ம வீரர் அவரை சு.ம.காரர் பஹிஷ்கரிக்கலாமா? சு.ம. ஜஸ்டிஸ்வாதி: ஜவஹர்லால் சமதர்ம வீரர் என்பதை உனக்காக வேண்டியே ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் அவர் தோழர் ஈ.வெ.ராவைப் போலவே இப்போது நான் சமதர்மப் பிரசாரம் செய்ய வரவில்லை; காங்கிரஸ் பிரசாரம்தான் செய்ய வந்தேன் செய்கிறேன் என்று சொன்னாரா இல்லையா? சு.ம.கா: அவர் எங்கே அப்படிச் சொன்னார்? சு.ம.ஜ: காங்கரஸ் தலைமைப் பிரசங்கம் முதல் சென்னை பிரசங்கம் வரை படித்திருந்தால் எங்கே சொன்னார் என்று கேட்டிருக்கமாட்டாய். சரி அப்படி சொல்லவில்லை என்றும் வைத்துக்கொள்ளுவோம். ஆனால் சமதர்மத்துக்கு என்னிடம் திட்டம் ஒன்றும் இல்லை என்றும் உலகப் புரட்சியோ மகா யுத்தமோ ஒன்று ஏற்பட்டால் தான் சமதர்ம சம்பந்தமாய் ஏதாவது செய்யலாமே ஒழிய மற்றப்படி இப்போது அதற்காக ஒன்றும் செய்வதற்கில்லை என்றும் சொல்லியிருப்பதையாவது ஒப்புக்கொள்ளுகிறாயா இல்லையா? சு.ம.கா: ஆம், அப்படிச்சொன்னால் சமதர்மம்...

ஜவஹர்லால்

ஜவஹர்லால்

வரவு செலவு ஜவஹர்லால் தேர்தலுக்கு நிற்காதது ஏன்? “காங்கிரஸ்காரர்கள்தான் மூளையில்லாதவர்கள்” காங்கிரஸ் தலைவர் “வந்தார்” “போனார்” உள்ளதும் போச்சு காங்கிரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லாலினது வரவால் ஜனங்களுக்கு ஒன்றும் பலனேற்படா விட்டாலும் ஜனங்களினுடைய நல்லபிப்பிராயத்தை யாவது இவர் பெற்றிருக்கலாம். அப்படியும் ஒன்றும் இல்லாமற் போனதோடு, ஜனங்கள் இவரைப் பற்றி இவர் வருவதற்கு முன் என்ன மதிப்பு வைத்துக் கொண்டிருந்தார்களோ அந்த மதிப்பும் இல்லாமல் போகும்படி நடந்துகொண்டார். அரசியல் சம்பந்தமாகவோ கட்சி சம்பந்தமாகவோ அவருடைய அபிப்பிராயங்கள் எப்படியிருந்தபோதிலும் ஜவஹர்லால் என்பதற்காக ஜனங்கள் கொஞ்சம் மரியாதை வைக்கும்படியான விளம்பரம் பெற்றிருந்தார். எப்படி என்றால் (தோழர் சத்தியமூர்த்தி சொன்னது போல்) இவருடைய தகப்பனாரை உத்தேசித்தேயாகும். அதனாலேயே இவரை முக்கிய புருஷர்களில் ஒருவராகவும் கருதி இருந்தார்கள். இவருக்கு இந்தியாவைத் தவிர மற்ற உலக அனுபவங்கள் இருக்குமென்றும் கருதியிருந்தார்கள். மற்றும் இவர் ஒரு உண்மையான உழைப்பாளியென்பதை இவருடைய எதிரிகள் கூட ஆட்சேபிக்கப் பயந்து வந்தார்கள். இவருடைய சமதர்ம அபிப்பிராயங்களைப்...

அறிக்கை

அறிக்கை

சுயமரியாதைக்காரர்களில் காங்கிரஸ் சுயமரியாதைக்காரர் என்று ஒரு பிரிவு இருப்பதாகப் பத்திரிகைகளில் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் என்று 10, 12 வருஷ காலமாய் இருந்துவரும் இயக்கத்தில் காங்கிரஸ் சுயமரியாதைக்காரர்கள் என்கின்ற சிலரோ, ஒருவரோ இல்லை; இருப்பதற்கு இதுவரை சுயமரியாதை இயக்கம் இடம் கொடுக்கவுமில்லை. சுயமரியாதை இயக்கமானது காங்கிரசில் ஆதிக்கம் வகிக்கும் பார்ப்பனர்களுக்கு எதிராகவும் அவர்களது அரசியல், மத இயல், சமூக இயல் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகவும் ஏற்பட்டதாகும். அதனாலேயே சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்திலிருந்தே காங்கிரசை எதிர்த்து அதன் ஆதிக்கத்தைத் தமிழ் நாட்டில் தலையெடுக்கச் செய்யாமல் இருப்பதற்காகப் போராடி வந்திருப்பதுடன் அதே கொள்கைகளைக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சியுடன் கூடி ஒத்துழைத்து வந்திருக்கிறது; ஒத்துழைத்தும் வருகிறது. அன்றியும் அவ்வியக்கம் (சு.ம. இயக்கம்) இக்கொள்கைகளை ஒப்புக் கொண்டு அதற்கு ஆதரவளிக்கக் கூடியவர்களையே தன்னோடு சேர்த்துக் கொண்டும் அதற்கு மாறாக இருப்பவர்களையும் மாறான அபிப்பிராயம் கொண்டவர்களையும் நழுவ விட்டுக்கொண்டுமே வந்திருக்கிறது. இதற்கு ஆதாரம் ஆதி முதல் இதுவரை சு.ம....

பண்டிதர் கேள்விக்கு பதில்

பண்டிதர் கேள்விக்கு பதில்

பண்டிட் ஜவஹர்லால் சுற்றுப்பிரயாணத்தில் சுயமரியாதைக்காரர்கள் பல இடங்களில் கருப்புக்கொடி பிடித்தும் பஹிஷ்காரம் செய்தும் நடத்தின ஆடம்பர ஊர்வலங்களில் முதலில் சில இடங்களில் அலட்சியமாய் கருதி துச்சமாய்ப்பேசினார் என்றாலும் அனேகமாக ஒவ்வொரு இடங்களிலும் அவர் கருப்புக்கொடியும் பஹிஷ்காரக் கோஷமும் நேரில் கண்டதால் நாகப்பட்டணத்தில் அதன் விபரத்தை “நடு நிலையில்” நின்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்திற்குள்ளானார். அது சமயம் கருப்புக்கொடி பிடிக்கப்படுவதினுடையவும் பகிஷ்காரத்தினுடையவும் காரணங்கள் கண்டறிந்து பண்டிதர் ஆதியில் தனது அறியாமையால் இரண்டொரு இடங்களில் துச்சமாய்ப் பேசினதற்கு ஆக மன்னிப்பும் கேட்டுக்கொண்டு சுயமரியாதை இயக்கத்தலைவர்கள் தனக்கு விளக்கவேண்டும் என்று 6 கேள்விகள் கேட்டிருக்கிறார். அக்கேள்விகள் “மெயில்” “சுதேசமித்திரன்” முதலிய ஆங்கிலம் தமிழ் பத்திரிக்கைகளில் காணப்படுகிறபடி, இந்த பஹிஷ்காரம் சுயமரியாதைக்காரர்கள் முன்னமே ஏற்பாடு செய்துகொண்டு செய்கிறார்களா? இது சுயமரியாதைக்காரர்களின் பொது முறையா? காங்கிரசைப்பற்றி சுயமரியாதைக்காரர்களின் நடைமுறை என்ன? ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி சுயமரியாதைக்காரர்களுடைய நடைமுறை என்ன? சுதந்திரத்தைப் பற்றி சுயமரியாதைக்காரர்களின் அபிப்பிராயம் என்ன? கருப்புக்கொடி பற்றியும்...

பார்ப்பனரல்லாதார் பிரசாரக் கமிட்டிக்கு கோலாலம்பூர் விஸ்வலிங்கம் உதவி பார்ப்பனரல்லாதார் மத்திய பிரசாரக் கமிட்டிக்கு நன்கொடையாக கோலாலம்பூர் தோழர் விஸ்வலிங்கம் அவர்கள் அனுப்பிய 10 ரூபாயும் வரப்பெற்றோம். þ தோழர் விஸ்வலிங்கம் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னவரின் கட்சியபிமானத்தையும் பாராட்டுகிறோம். þ தொகையை மத்தியக் கமிட்டி பொக்கிஷதார் தோழர் வி.வி. ராமசாமி அவர்களுக்கு அனுப்பப்பட்டது. ( ப ர் ) குடி அரசு பெட்டிச் செய்தி 25.10.1936

ஜவஹருக்கு பல ஸ்தல ஸ்தாபனங்களில் வரவேற்பில்லை

ஜவஹருக்கு பல ஸ்தல ஸ்தாபனங்களில் வரவேற்பில்லை

பண்டித ஜவஹர்லாலுக்கு தென்னாட்டிலுள்ள பல ஸ்தல ஸ்தாபனங்களில் வரவேற்பில்லை. சென்னை கார்ப்பரேஷனில் முதலில் வரவேற்பளிப்பதில்லை யென்று தீர்மானிக்கப்பட்டது. பின் கோழி முட்டையும், செருப்புகளும் வீசி காலித்தனம் செய்து வரவேற்பளிப்பதெனத் தீர்மானம் செய்துகொள்ளப்பட்டது. திருச்சியிலும் முதலில் வரவேற்பளிப்பதில்லையென முனிசிபாலிட்டியில் தீர்மானிக்கப்பட்டது. பின் அங்கும் காங்கிரஸ் காலிகள் செருப்புகளும் அழுகல் முட்டைகளும் எறிந்து காலித்தனம் செய்து வரவேற்பளிப்பதெனத் தீர்மானம் செய்துகொள்ளப்பட்டது. மதுரை ஜில்லாபோர்டிலும் வரவேற்பளிப்பதில்லை யெனத் தீர்மானித்து விட்டது. கிருஷ்ணகிரி யூனியன் போர்டில் வரவேற்புக் கொடுப்பதற்கு முயற்சித்தார்கள். ஆனால் அங்கு கொடுப்பதில்லை யென தீர்மானிக்கப்பட்டது. ஈரோட்டிலும் வரவேற்பளிக்க முயற்சித்தார்கள். இங்கு அவர்களுக்கு பலமில்லை யென்று தெரிந்ததும் அந்த முயற்சியை நிறுத்திவிட்டார்கள். திண்டுக்கல்லிலும் வரவேற்பளிக்க முயற்சித்தார்கள். அங்கும் அவர்களுக்கு பலமில்லாததால் அம்முயற்சியும் நிறுத்தப்பட்டது. விருதுநகர் முனிசிபாலிட்டியிலும் வரவேற்பில்லை. இதுபோல் இன்னும் பலவிடங்களில் வரவேற்பில்லை. இம்மாதிரி வடநாட்டிலிருந்து வந்த எந்தத் தலைவருக்கும் நடக்கவில்லை. ஜவஹருக்கு மட்டும் ஏன் இப்படி நடந்ததென்றால் அவரது முட்டாள்தனமான நடத்தையாலே தான். இதுமட்டுமல்ல,...

சிவில் ஜெயில் இல்லை

சிவில் ஜெயில் இல்லை

கடன் பட்டவர்களுக்கு ஜெயில் வாசம் விதிக்க இருக்கும் சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென்று நாம் வெகு காலமாக எழுதி வந்தது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். அதற்காக என்றே சிலர் சிவில் ஜெயிலுக்கு போனதும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். இப்போதுதான் அந்த கிளர்ச்சிக்கு வெற்றி ஏற்பட்டது. அதாவது சென்ற வாரத்தில் இந்திய சட்டசபையில் கடன்காரர்களை ஜெயிலுக்கு பிடிக்கக்கூடாது என்று ஒரு சட்டம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் அதில் பணம் வைத்துக்கொண்டு கொடுக்க மாட்டேன் என்றால் அப்படிப்பட்டவனுக்கு இந்த சட்டம் பயன்படாது என்று ஒரு நிபந்தனை கண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் கடன்காரர்கள் என்பவர்களில் 100 க்கு 10 பேர்கள்தான் இருக்கக்கூடும். அந்த 100 க்கு 10 பேர்களிலும் ஒருவர் இருவர்தான் பணம் வைத்துக் கொண்டிருப்பதை கண்டுபிடிக்கப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆதலால் அந்த நிபந்தனையில் அந்த சட்டம் பாதிக்கப்பட்டு விட மாட்டாது என்பது நமதபிப்பிராயமாகும். இந்த சட்டம் தப்பாக கையாளப்பட்டாலும் கூட பிரமாத குற்றமில்லை என்று கருதுகிறோம். ஏனெனில் வட்டிக்கு ஆசைப்பட்டு...

கோபியில் நடந்தது என்ன?

கோபியில் நடந்தது என்ன?

தோழர் ஜவஹர்லாலுக்கு கோபியில் கருப்புக்கொடி பிடித்து பஹிஷ்கரித்ததைப் பற்றி காங்கிரஸ் பத்திரிகைகள் என்பவை அயோக்கியத் தனமாகத் திரித்துக் கூறி இருக்கின்றன. பத்திரிகை நிருபர்கள் பெரிதும் பார்ப்பனர்கள் என்பதும் அவர்கள் இம்மாதிரி விஷயங்களில் 100க்கு 99ல் அற்பத்தனமாகவே நடந்து கொள்ளுகிறார்கள் என்பதும் எவ்வளவு தான் கண்டித்தாலும் அவர்களுக்கு ரோஷம் என்பது மருந்துக்குக் கூட ஏற்படுவதில்லை என்பதும் நாம் இதற்கு முன் அனேக தடவை வெளியிட்ட காரியமாகும். ஆகவே கோபியில் நடந்த விஷயத்தில் சில பத்திரிகை நிருபர்கள் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டதில் அதிசயமில்லை. ஆனால் “மெயில்” பத்திரிகை நிருபர் அடியோடு அது போல் நடந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் “மெயில்” பத்திரிகை சொந்தக்காரர் முழுப்பார்ப்பனர் அல்ல. ஆதலால் கேள்விக்கு பதில் சொல்லவேண்டி வருமே என்று பயந்து கொஞ்சமாவது உண்மை எழுதவேண்டியதாகி விட்டது. அதாவது கோபியில் கருப்புக் கொடிபிடித்தவர்களை தோழர் ஜவஹர்லால் கூப்பிட்டதாகவும் கருப்புக்கொடி பிடித்தவர்கள் பயந்து கொண்டு நழுவி விட்டதாகவும் பல காங்கிரஸ் பத்திரிக்கைகள்...

கருப்புக்கொடி

கருப்புக்கொடி

சென்னை சுற்றுப் பிரயாணத்தில் பண்டிதர் ஜவஹர்லால் அவர்களுக்கு சென்ற இடங்களில் எல்லாம் பஹிஷ்கார பிரசுரங்கள் வினியோகங்களும் பல இடங்களில் கருப்புக் கொடிகள் பிடித்தலும் பல இடங்களில் “பார்ப்பன கங்காணியே திரும்பிப்போ” என்கின்ற கோஷமும் மற்றும் இதுபோன்ற பஹிஷ்காரக் குறிப்பும், அதிருப்திக் குறிகளும் நடந்த வண்ணமாகவே இருந்திருக்கின்றன. இவற்றைப் பார்ப்பனப் பத்திரிகைகள் மறைத்தும் திரித்தும் கூறி வந்திருந்தாலும், எப்படியோ விஷயங்கள் வெளியாகி எல்லாப் பத்திரிகைகளும் அவற்றைத் தெரிந்தோ தெரியாமலோ, இஷ்டப்பட்டோ இஷ்டப் படாமலோ வெளிப்படுத்தி அவற்றின் மீது தங்களது அபிப்பிராயக் குறிப்புகளும் வெளியாக்கி விட்டன. கருப்புக்கொடியானது, தமிழ் நாட்டில் பண்டிதர் ஜவஹர்லாலுக்கு மாத்திரம் பிடிக்கப்பட வில்லை. தோழர்கள் காந்தியார், ராஜேந்திரபிரசாத் முதலாகிய காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களுக்கெல்லாம் பிடிக்கப்பட்டன. அவற்றின் காரணமும் அவ்வப்போதே சொல்லப்பட்டிருக்கின்றன. அதாவது காங்கிரஸ் தலைவர்கள் இங்கு காங்கிரசின் பேரால் தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக பிரசாரம் செய்யவும், பணம் வசூலித்து பார்ப்பனர்களுக்கு கொடுத்து அவர்களின் விஷமப் பிரசாரத்துக்கு ஆக்கமளிக்கவும் வருகிறார்கள்....

பார்ப்பனருக்கு சர்க்கார் உத்தியோகம் வேண்டுமா?

பார்ப்பனருக்கு சர்க்கார் உத்தியோகம் வேண்டுமா?

வெள்ளையரிடம் பார்ப்பனர் சரணாகதி முஸ்லீம்கள் தீண்டாதவர்கள் பிரச்சினை முதலில் ஜஸ்டிஸ் கட்சியார்தான் முகம்மதியர்களுக்கும், ஏழைகளுக்கும், தீண்டாதார்களுக்கும் வேலை செய்தார்கள். அதன் பிறகுதான் காந்தியும் அவர்களைப்போல் வேலை செய்ய ஆரம்பித்தார். காந்தியானவர் மகாத்மா ஆனபின் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாமல் சுயராஜ்யம் வரமுடியாது என்றார். அப்படியே தீண்டாதாரிடம் தீண்டாமை ஒழிந்தால்தான் சுயராஜ்யம் வரும் என்றும், தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் வராது என்றும் வந்தாலும் அது வேண்டாம் என்றும் சொன்னார். பிறகு வட்டமேஜை மகாநாட்டுக்குப் போனதும் சுயராஜ்யம் வந்தாலொழிய ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாதென்றார். இந்த வார்த்தையைக் கேட்டதும் ஜனாப் ஜின்னாவுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் “சுயராஜ்ய கவர்ண்மெண்டில் எங்களுடைய நிலை இன்னது என்று சொல்லிவிட வேண்டு”மென்று கேட்டார். ஏனென்றால் காந்தியின் ராமராஜ்யமானது ஹிந்து ராஜ்யமாகத்தான் இருக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும். காந்தியார் எல்லாரையும் ஏமாற்றி விட முடியாதல்லவா? இவர்கள் ஒரு முடிவுக்கும் வராதது கண்டு இங்கிலீஷ் அரசாங்கத்தார் அந்தந்த சமூகத்திற்கும் ஞாயம்...

ஜவஹர்லால் நாடகம் சபாஷ் சென்னை!

ஜவஹர்லால் நாடகம் சபாஷ் சென்னை!

தோழர் ஜவஹர்லால் சென்னை விஜயமானது தற்போது நடக்க இருக்கும் முனிசிபல் கார்ப்பரேஷன் எலக்ஷன் பிரசாரத்துக்கும் இனியும் ஒரு மாதத்துக்குள் நடக்கும் சில ஜில்லா போர்டு எலக்ஷன் பிரசாரத்துக்கும் பிப்ரவரி முதலில் நடக்கப் போகும் சென்னை சட்டசபை எலக்ஷன் பிரசாரத்துக்கும் ஆக பயன்படுத்திக் கொள்ளவும் மற்றும் அப்பிரசாரங்களுக்கு ஆக பொதுஜனங்கள் இடம் இருந்து பணம் திரட்டிக்கொள்ளவுமே அல்லாமல் வேறொன்றுக்குமாக அல்ல என்று எழுதி இருந்தோம். இதற்கு முன்னும் இதுபோலவே சென்ற வருஷத்திலும் ஜில்லாபோர்டு தேர்தல்கள் மும்முரமாய் நடந்துகொண்டிருந்த காலத்தில் தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்களை அழைத்து வந்து நமது பார்ப்பனர்கள் தங்கள் பிரசாரத்துக்கு அனுகூலம் செய்துகொண்டதோடு பணமும் ஏராளமாக வசூலித்துக் கொண்டார்கள் என்பதும் யாவரும் அறிந்ததேயாகும். அதுபோலவே இந்திய சட்டசபைத் தேர்தல் இருந்த காலத்திலும் நமது பார்ப்பனர்கள் தோழர் காந்தியாரை அழைத்து வந்து பிரசாரத்துக்கு அனுகூலம் செய்து கொண்டார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே. ஆனால் தோழர் காந்தியார் வந்தபோது எலக்ஷனைப்பற்றி தனக்குக் கவலையே...

வரி குறைப்புக்கும் ஜஸ்டிஸ் மந்திரிகளுக்கும் சம்பந்தமென்ன?

வரி குறைப்புக்கும் ஜஸ்டிஸ் மந்திரிகளுக்கும் சம்பந்தமென்ன?

இந்த மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி இருந்ததினால் தாங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை யென்றால் மற்ற மாகாணங்களில் இவர்கள் சாதித்தது என்ன? இவர்கள் என்னதான் தாக்கிப் பேசினாலும், முட்டுக்கட்டை போட்டாலும் மெஜாரிட்டி பாஸ் செய்தாலும் கவர்ன்மெண்டை ஒன்றும் அசைக்க முடியாது. 192324ல் காங்கிரஸ் சட்டசபை பஹிஷ்காரப் போராட்டம் நடத்திய காலத்தில் கழுதைகள்தான் சட்டசபைக்குப் போகும் என்று அட்டையில் எழுதி கழுதை கழுத்தில் கட்டி ஜனக்கூட்டங்களின் முன் விரட்டினார்கள். நாய் கழுத்திலும் அப்படியே எழுதிக் கட்டி வாலில் டின்களையும் கட்டி விரட்டினார்கள். சட்டசபைகளையெல்லாம் கள்ளுக்கடை என்று சொன்னார்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் படம் எழுதி சட்டசபைகளைக் கள்ளுக்கடை போலவும், அப்பால் ஒரு கோவிலைக் காங்கிரஸ் போலவும் காட்டினார். இப்பொழுது அந்தக் கள்ளுக்கடை யெல்லாம் கோவிலாக ஆய்விட்டதா? அல்லது அவர்களே இந்தக் கழுதைகள் ஆய்விட்டார்களா? (சிரிப்பும் கரகோஷமும்) நீங்கள் ஞாயமாகப் பேச விரும்புங்கள்; நானும் ஞாயமாகப் பேச விரும்புகிறேன். நமக்குள் ஏன் சண்டை என்றுதான் நான் சொல்லுகிறேன்....

காலித்தனத்தின் வளர்ச்சி

காலித்தனத்தின் வளர்ச்சி

  காங்கிரஸ் காலித்தனத்துக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது. தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து வேட்டை நாய் ஆகிவிட்டது என்பது போல் கூட்டங்களில் செருப்பும் முட்டையும் போட்டு வெளி முனிசிபாலிட்டிகளில் (திருச்சியில்) செருப்பும் முட்டையும் போட்டு இப்போது சென்னை கார்ப்பரேஷனிலேயே செருப்புகளும், முட்டைகளும் வந்து விழுக ஆரம்பித்து விட்டன. ஆகவே இனி சென்னையைப் பொறுத்தவரை சட்டசபை மண்டபத்தில் வந்து விழுகவேண்டியதுதான் பாக்கி என்று சொல்ல வேண்டிய நிலைமையை எய்தி விட்டது. காங்கிரசுக்காரர்கள் மகாத்மா என்பவர் தலைமையில் 3, 4 கோடி ரூபாய் செலவில் 40, 50 ஆயிரம் பேர் ஆண் பெண் அடங்க “அடி உதைபட்டு சிறை சென்று தியாகம் செய்த” தியாக புத்தியில் காங்கிரசால் படிப்பிக்கப்பட்ட படிப்பு கார்ப்பரேஷனில் மீட்டிங்கில் செருப்புகளும் அழுகல் முட்டைகளும் வந்து விழுந்த பெருமைதான். காங்கிரசுக்காரர்கள் இந்த இடங்களில் மாத்திரமல்லாமல் மற்றும் அநேக இடங்களிலும் மந்திரிகள் கூட்டங்களில் இப்படியே நடந்து வருகிறார்கள். நாமக்கல்லில் கழுதை கழுத்தில் அட்டை...

இன்னுமா சந்தேகம்?

இன்னுமா சந்தேகம்?

தோழர் ஜவஹர்லால் அவர்கள் தேர்தலுக்கும் பணம் வசூலித்து பார்ப்பனர்களுக்குக் கொடுக்கவும் வருகிறார் என்று சென்ற இரண்டு வாரமாக எழுதி வந்தோம். அதைப்பார்த்த ஒரு தோழர் நமக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். சென்னை கார்ப்பரேஷன் தேர்தல் இருக்கும்போதும் சில ஜில்லா போர்டு தேர்தல் இருக்கும் போதும் இந்த மாதிரி ஜவஹர்லால் அவர்களை பகிஷ்காரம் செய்வது வரவேற்புபத்திரம் மறுப்பது போன்ற காரியங்கள் நடக்குமானால் தேர்தல் பாதிக்கப்பட்டு விடாதா என்று கேட்கிறார். பிரசாரத்திற்கு தாராளமாய் அனுமதித்து பணம் வசூலுக்கும் இடந்தந்து ஒவ்வொரு முனிசிபாலிடியும் ஜில்லாபோர்டும் வரவேற்பளிக்கும் காரியத்துக்கு உதவி செய்து வந்தால் தேர்தலில் என்ன பலன் கிடைக்குமோ அதைவிட மோசமான பலன் ஒன்றுமே நமக்கு ஏற்பட்டு விடாது என்பதுதான் நமது பதிலாகும். நாம் முன் குறிப்பிட்டது போலவே தோழர் ஜவஹர்லால் எங்கேயோ இருந்துகொண்டு இங்கு தேர்தலில் நிற்கும் ஆட்களின் யோக்கியதைகளையும் தராதரங்களையும் உணராமலே காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்கே ஓட்டுப்போடுங்கள் என்று “ஸ்ரீ முகம்”...

“தமிழ் நாடு”

“தமிழ் நாடு”

“தமிழ்நாடு” பத்திரிகையை தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் நிறுத்திவிடப்போவதாய் 26936ந் தேதி தமிழ்நாடு பத்திரிகையில் தலையங்கம் எழுதி தன் கையெழுத்தையும் போட்டுவிட்டார். இது உண்மையாக இருக்குமோ அல்லது அவரது அரசியல் தந்திரங்களில் இதுவும் ஒன்றோ என்பது நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படியானாலும்சரி “தமிழ்நாடு” பத்திரிகை நிறுத்தப்பட்டு விடுமானால் தமிழ் மக்கள் தோல்விக்கும் பார்ப்பனர்கள் வெற்றிக்கும் இது ஒரு இமயமலை போன்ற பெரியதும் சூரிய வெளிச்சம் போன்ற நிச்சயமானதுமான உதாரணமாகும். இந்த நாட்டில் தமிழ் மக்கள் முயற்சிக்கும், அவர்கள் இதுவரை பாடுபட்டுச் செய்து வந்த வேலைக்கும் சிறிதாவது பயன் ஏற்பட்டதா என்று கண்டுபிடிக்க வேண்டுமானால் அது பார்ப்பனப் பத்திரிகைகளின் செல்வாக்கும் செலவாணியும் எவ்வளவு குறைந்து இருக்கிறது என்பதைக் கொண்டுதான் அளவுக் கணக்கு எடுக்க முடியும். அந்தப்படி பார்த்தால் பார்ப்பனரல்லாதார்களால் நடத்தப்படும் பத்திரிகைகள் எவ்வளவு முதல் வைத்து நடத்தப்படுபவைகளானாலும் வருஷா வருஷம் மலேயா, கொளும்பு, ரங்கூன் முதலிய இடங்களுக்குச் சென்று எவ்வளவுதான் பணங்கள் அரித்துக்...

காங்கிரஸ் ஏற்பட்டது பிரிட்டீசாரை வாழ்த்தவே

காங்கிரஸ் ஏற்பட்டது பிரிட்டீசாரை வாழ்த்தவே

காங்கிரஸ் வருணாச்சிரமம் கோருகிறது ஜஸ்டிஸ் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கோருகிறது ~cmatter தோழர்களே! இன்று நமது மாகாணத்தில் காங்கிரஸ்காரர்கள் என்றும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் என்றும் இரண்டு கூட்டத்தார்கள் பிரமாதமாகவும் மிகவும் வேகமாகவும் பிரசார வேலைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் பெரும்பாலும் எதைப்பற்றி சண்டை என்று நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. சீக்கிரம் நம் தேசத்தில் புதிய சீர்திருத்தங்கள் ஏற்படப் போகிறபடியால் அதற்காக சமீபத்தில் நடக்க விருக்கிற எலெக்ஷன்களில்தான் தான் வெற்றி பெறுவதற்காக ஒரு கட்சியானது மற்ற கட்சியின் மேல் குறைகூறுவது உண்மையென்று உங்களுக்கு அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. நம் தேசத்தில் ஒரு கட்சி மேல் மற்றொரு கட்சி துவேஷப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றது. துவேஷப் பிரசாரம் செய்வது என்ற கருத்து எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. நான் துவேஷப் பிரசாரம் செய்ய வேண்டுமென்று உங்கள் முன் வரவில்லை. நானும் காங்கிரஸில் இருந்தவன் தான். காங்கிரஸ் பார்ப்பனர்களுடன் நான் ஒத்துழைத்திருக்கிறேன். ஆகையால் இப்பொழுதும்...

நாம் எதை நம்பலாம்? எக் காரணத்தால்?

நாம் எதை நம்பலாம்? எக் காரணத்தால்?

தெளிவாகச் சிந்தனை செய்து பழகவேண்டியவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. அதாவது “நீ அதை உண்மையென நம்பக் காரணமென்ன? அல்லது நான் அதை உண்மையென நம்புவதற்கு ஆதாரமென்ன?” என்பதே. பெரும்பாலார் கொண்டிருக்கும் பெரும்பான்மையான அபிப்பிராயங் களுக்கு எத்தகைய ஆதாரமும் இல்லை என்பதை நாம் முக்கியமாக உணரவேண்டும். அவர்கள் அவைகளை ஏன் நம்புகிறார்கள் என்பதற்குக் காரணமே இல்லை; அவர்களுடைய அபிப்பிராயங்கள் சரியென நிரூபிக்க அவர்களுக்கு ஆதாரமும் காட்ட முடியாது. “நீங்கள் அவ்வாறு ஏன் எண்ணுகிறீர்கள், அல்லது அவைகளை நம்புவதற்குக் காரணம் என்ன?” எனக்கேட்டால் அவர்களுக்கு விடையளிக்க முடியாது. அவ்வாறு கேட்டால் அவர்கள் திகைப்படைவார்கள். அம்மட்டோ? அம்மாதிரிக் கேள்விகள் கேட்பதைப் பெரிய தொந்தரவாகவும் எண்ணுவார்கள். அல்லது மிகப் பிரயாசைப்பட்டு ஏதாவது ஒரு மாதிரிக் காரணங்களைக் கூறுவார்கள். ஆனால் அவை பகுத்தறிவுக்கு முரணானவை என்பதை நீங்கள் வெகு சுளுவில் அறிந்துகொள்வீர்கள். ஆதாரமில்லாமலும் ஆராய்ந்து பாராமலும் மக்கள் பல விஷயங் களைச் சுளுவாக நம்பி விடுவதைப்பற்றி...

ஆதாரமற்ற நம்பிக்கைகள்

ஆதாரமற்ற நம்பிக்கைகள்

ஒரு விஷயத்தை ஒருவன் கூறுகிறான் என்று வைத்துக்கொள்வோம். உடனே நாம் என்ன செய்கிறோம். “அது உனக்கு எப்படித்தெரியும்? அது உண்மையென்று நாங்கள் ஏன் நம்பவேண்டும்? அது உண்மை என்று நம்ப ஆதாரமென்ன?” எனப் பொதுவாக மூன்று கேள்விகளைக் கேட்கிறோம். பிரதி தினமும் நாம் எத்தனையோ விஷயங்களை அறிகிறோம். அவைகளில் பலவற்றை நாம் கண்ணைமூடிக்கொண்டு நம்பிவிடுகிறோம். “அது உண்மையா? உண்மை யென்பதற்கு ஆதாரமென்ன?” என்பன போன்ற விஷயங்களை நாம் கவனிப்பதே இல்லை. நமது நம்பிக்கைகளில் பலவற்றை ஆராய்ந்து பார்த்தால் அவற்றிற்கு ஆதாரமே இல்லையெனத் தோன்றா நிற்கும். ஒரு காலத்திலே ஒரு விஷயம் உண்மையென்று யாரோ ஒருவர் சொன்னார். அல்லது ஆராய்ந்து பாராமலே அதை நாம் உண்மையென நம்பிக்கொண்டோம். அல்லது அது உண்மையாகத்தான் இருக்குமென்று சுளுவில் நம்பிக்கொண்டோம். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நாம் முதலிலே கூறிய மூன்று கேள்விகளையும் கேட்டால் எந்த விஷயத்தின் உண்மையையும் நாம் அறிந்துகொள்ளலாம். உண்மையாராய்ச்சியில் தோல்வியடைந்த பிறகும் ஒரு விஷயத்தை...

மறுபடியும் தொல்லை

மறுபடியும் தொல்லை

தூது கோஷ்டிப் புரளி இனாம்தார் மசோதா இரண்டாம் முறையும் சென்னைச் சட்டசபையில் நிறைவேறிச் சட்டமாகிவிட்டது. வைஸ்ராய் அனுமதி பெறவேண்டியதுதான் பாக்கி. வைஸ்ராய் அனுமதியளித்து விட்டால் ஐம்பது லக்ஷம் இனாம் குடிகளின் கஷ்டம் தீரும். நிர்ப்பயமாக உயிர்வாழ்வார்கள். ஆனால் இனாம்தார்கள் இனாம் குடிகளின் தலையில் கைவைக்க மேலும் என்ன வழியென்று பார்க்கப்போவதாகத் தெரிகிறது. இனாம்தார்களுடைய பிரதிநிதி கோஷ்டியார் கவர்னர் அவர்களைப் பேட்டி கண்டு முறையிட முயற்சி செய்தார்களாம். இனாம் மசோதா விஷயம் வெகுகாலமாகப் பொது ஜனங்கள் முன் இருந்து வந்திருப்பதினாலும் இந்த விஷயத்தை ஏற்கனவே நன்றாகச் சர்ச்சை செய்யப்பட்டிருப்பதினாலும் புதிதாக எந்த விஷயத்தையும் தெரிவிப்பதற்கில்லை யெனக் காரணங்கூறி கவர்னர் தூது கோஷ்டிக்கு அனுமதியளிக்க மறுத்து விட்டதுடன் இதர கோஷ்டிகளுக்கும் அனுமதியளிப்பதில்லை யென்று தெரிவித்துவிட்டாராம். இது இரண்டு பார்ப்பனப் பத்திரிகைகளுக்குப் பிடிக்கவில்லை. அவ்விரண்டு பத்திரிகைகளும் தேசீயப் பத்திரிகைகள்தான். ஏழை எளியோர் விடுதலையை தமது லக்ஷ்யமென தேசீய வாதிகளும் தேசீயப் பத்திரிகைகளும் கூறிக்கொண்டாலும் இனாம் குடிகள்...

ஜவஹர்லாலுக்கு உபசாரம் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

ஜவஹர்லாலுக்கு உபசாரம் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தோழர் ஜவஹர்லாலுக்கு கராச்சி முனிசிபாலிட்டி உபசாரப்பத்திரம் கொடுக்க மறுத்துவிட்டது. பம்பாய் முனிசிபாலிட்டியும் உபசாரப் பத்திரம் கொடுக்க மறுத்து விட்டது. கடைசியாக மதராசும் மறுத்து விட்டது. அவ்வளவுதானா என்று பார்த்தால் திருச்சியும் மறுத்தது. தானாகக் கனியாத பழத்தை தடியாலடித்து கனியவைப்பது போல் காங்கிரஸ்காரர்கள் இப்போது மறுபடியும் அந்த முனிசிபாலிட்டிகளில் உபசாரப் பத்திரம் படிக்கச் செய்வதற்கு வாசல் வைத்த வீடு தோறும் அலைந்து திரிந்து 32 பற்களையும் காட்டி “வரவேற்பு செலவை நாங்களே பொறுத்துக் கொள்ளுகிறோம்” என்று கெஞ்சுகிறார்கள். ஜவஹர்லாலுக்கு உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்காத முனிசிபாலிட்டிகள் ஒரு நல்ல பெருமையை இழந்து விட்டதாக பரிதாபக் கண்ணீர் வடிக்கிறார்கள். பார்ப்பனர்கள் மத விஷயங்களிலும் இப்படியே பார்ப்பானுக்கு பணங் கொடுக்காத கை உலக்கை என்றும், பார்ப்பான் உபதேசம் கேட்காத காது நிலைக்காது என்றும், பார்ப்பானைப் புகழாத வாய் நாவாய் என்றும் பிரசாரம் சேர்த்துப் பேசுவது வழக்கம். அதுபோலவே ஜவஹருக்கு வரவேற்பு...

அருஞ்சொல் பொருள்

அருஞ்சொல் பொருள்

  அகவிலை – தவச விலை அக்காரவடிசில் – சருக்கரைப் பொங்கல் வகை அசூயை – பொறாமை அடப்பக்காரன் – வெற்றிலைப் பை வைத்திருக்கும் ஏவலன், வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஊழியக்காரன். அந்தகாரம் – இருள், அறியாமை அந்தர் – நிறுத்தல் அளவு (50 கிலோ எடை) அமரிக்கை – அமைதி அனாசாரம் – தீய நடத்தை ஆக்கினை – கட்டளை ஆப்பு – மூளை ஆயுள்பரியந்தம் – வானாள் முழுவதும் இஞ்சிநீயர் – பொறிஞர் இதோபதேசம் – நல்லறிவூட்டல் ஈடுமெடுப்பும் – ஒப்புயர்வும் உண்டை கட்டி – கோயிலில் தரும் சோற்று உருண்டை உருவாரமாய் – பிரதிமையாய் உளைமாந்தை – கடுநோய், உட்புண் ஒட்டை வேட்டு – பத்து விரற்கடை வெடி கந்தமூலம் – கிழங்கு வேர் கனிகள் கலி – வறுமை, துன்பம் குச்சுக்காரி – விலைமகளிர் குதவை – அடமானம் குமரி இருட்டு – விடியற்கு முன்...

தென் ஜில்லாக்கள் ஜஸ்டிஸ் மகாநாடு

தென் ஜில்லாக்கள் ஜஸ்டிஸ் மகாநாடு

திண்டுக்கல் தோழர்களே! தமிழ்நாட்டின் தென் ஜில்லாக்கள் சார்பாய்க் கூடும் இம்மகாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்கு அளித்ததற்காக வரவேற்புக் கழகத்தாருக்கு நான் எனது நன்றியறிதலை தெரிவித்துக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். நமது சங்கம் நமது தென் இந்திய நல உரிமைச் சங்கம் தோன்றி இன்றைக்கு கிட்டத்தட்ட 20 வருஷ காலமாகிறது. இதன் முக்கியக் கொள்கை: சட்ட ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டு கிளர்ச்சி செய்து அரசியல் விடுதலை (அதாவது சுயராஜ்யம் என்பது) பெறுவதும், அரசியல் பிரதிநிதித்துவத்திலும் உத்தியோகங்களிலும் நம் நாட்டிலுள்ள எல்லா மதக்காரருக்கும் ஜாதிக்காரருக்கும் விகிதாச்சாரம் உரிமை வழங்குவதுமாகும். அதாவது சகல சமூகங்களுக்கும் சம சந்தர்ப்பம் அளிப்பதாகும். இந்தக் கொள்கையில் இருந்து இதுவரை நாம் சிறிதும் பிறழாமல் கொள்கைக்கு ஏற்ப நம்மால் கூடியதை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் செய்து கொண்டு வந்திருக்கிறோம். நமது சங்க ஆரம்பத்தில் இந்திய அரசியலில் பிரதிநிதித்துவத்திலும் உத்தியோகங்களிலும் ஏகபோக உரிமைகள் அனுபவித்துக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் நீங்க, மற்ற எல்லா சமூகத்தார்களும் நமது...

நமது லòயம்

நமது லòயம்

  சுயமரியாதை இயக்கம் இதுவரை சமூக முன்னேற்ற இயக்கமாக இருந்ததுமாறி இப்போது பொருளாதாரத்திலும், அரசியலிலும் பிரவேசித்துவிட்டதாகவும் இதனால் இயக்கம் ஆதரவற்று அரசாங்க அடக்குமுறைக்கு ஆளாகி நசித்துப்போகுமென்றும் சொல்லுகிறார்கள். சிலர் தாங்கள் அரசாங்க ஆக்கினைக்கு தயாராயில்லை என்றும் ஆதலால் இதில் கலந்துகொள்ள முடியாது என்றும் சொல்லுகிறார்கள். இக்கூட்டத்தார் எல்லோருக்குள்ளும் மகிழ்ச்சி யடையத்தக்க ஒரு விஷயமிருக்கிறது. அதென்னவென்றால் அரசாங்க அடக்குமுறைக்கு ஆளாக முடியாது என்கின்ற காரணம் மாத்திரமே அல்லாமல், இக்கொள்கை விஷயத்தில் ஆட்சேபனை யிருப்பதாகக் காணப்படவில்லை என்பதேயாகும். இது எப்படியிருந்தபோதிலும் விஷயத்தை சற்று கவனித்துப் பார்ப்போம். ~subhead சமூக முன்னேற்றம் ~shend சமூக முன்னேற்றமென்றால் என்ன? எந்த சமூக முன்னேற்றம்? என்பதை நாம் கவனிக்க வேண்டும். மனித சமூக முன்னேற்றம் என்பது மனிதர்கள் குளிப்பது, மதக்குறி இடுவது, புராணங்கள் படிப்பது, கோவில்களுக்கு யாத்திரை உற்சவம் செய்வது முதலாகிய இவைகள் தானா? அல்லது ஜாதி வித்தியாசம் ஒழிப்பது, சத்திரம் சாவடி கட்டுவது, பள்ளிக் கூடம் வைப்பது...

பெரியார் திருநாள்

பெரியார் திருநாள்

  தமிழரியக்கத் தந்தையாரான ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழ்நாட்டிலும், தெலுங்கு நாட்டிலும் மலையாள நாட்டிலும் வெகு விமரிசையாகச் சென்ற டிசம்பர் 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. தமிழரியக்கத் தந்தையாரின் பிறந்தநாள் மலையாள நாட்டிலும் தெலுங்கு நாட்டிலும் கொண்டாடப்பட்டது பலருக்கு விநோதமாகத் தோன்றலாம். தமிழர் இயக்கத் தந்தையார் தமிழர் விடுதலைக்காக மட்டும் உழைக்கவில்லை, திராவிட மக்கள் அனைவருடையவும் விடுதலைக்காகவே உழைக்கின்றார். தமிழர் விடுதலையின் பயனாக மலையாளரும் தெலுங்கரும் விடுதலை பெறுவது உறுதி. அதனாலேயே மலையாளரும் தெலுங்கரும் மிக உற்சாகத்துடன் கொண்டாடியிருக்கின்றனர். மற்றும் சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு 60-வது பிறந்த நாள் கொண்டாட்டம் புதுமையாகத் தோன்றலாம். பெரியார் வெளியிலிருந்திருந்தால் இத்திருநாள் கொண்டாட சம்மதித்திருக்கவுமாட்டார். திருநாள், பெருநாள் போன்ற ஆடம்பரங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் அவருக்குப் பெரிய வெறுப்பு. பாராட்டுகளும் உபசாரங்களும் அவருக்கு வேப்பங்காய். ஆனால் இந்த அறுபதாவது பிறந்தநாள் ஒரு மதச்சடங்காகவோ சமுதாய மரியாதைச் சடங்காகவோ கொண்டாடப்படவில்லை. பெரியார் சிறைபுகுந்த காரணத்தினால் தமிழரியக்கம் தளர்ச்சியடையாமலிருக்கவும் அவரது...

இரண்டு மாநாடுகள்

இரண்டு மாநாடுகள்

  வேலூரில் 27-12-1938 ல் நடைபெறப்போகும் 4-வது சென்னை மாநிலத் தமிழர் மாநாடும் சென்னையில் டிசம்பர் 28-ம் 29-ம் 30-ந் தேதிகளில் நடைபெறப்போகும் தென்னிந்திய நல உரிமைச் சங்க 14 வது மாநாடும் தென்னாட்டுச் சரித்திரத்திலே மிகவும் முக்கியமான மாநாடுகள் ஆகும். வேலூர் மாநாடு தமிழர்களுக்கெல்லாம் பொதுவான மாநாடு. ஜாதி மத வித்தியாசமின்றி – அரசியல் கொள்கை வித்தியாசமின்றி, தமிழராகப் பிறந்தோரெல்லாம் அம்மாநாட்டில் பங்கு கொள்ளப் போகிறார்கள். ஆதியிலே தமிழர்களாக இருந்து ஆரிய மதக் கொடுமை காரணமாகப் பிற மதம் புகுந்து பிறந்தவர்களும் அரசியல் அபிப்பிராயங் காரணமாகப் பிரிந்தவர்களும் தம் தாய்மொழிக்கு இடுக்கண் நேர்ந்திருப்பது கண்டு சர்வ வித்தியாசங்களையும் மறந்து ஐக்கியப்பட்டு வேலூரில் கூடப் போகிறார்கள். வேலூர் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கப் போகும் ஸர்.எ.டி. பன்னீர் செல்வம் அம்மாநாட்டுக்கு தலைமை வகிக்க எல்லாவற்றாலும் தகுதியுடையப் பெரியார். ~subhead பன்னீர் செல்வம் மாட்சி ~shend தமிழர் முன்னேற்ற இயக்கமான இந்தி எதிர்ப்பு இயக்கத்தில்...

பெரியார் ஈ.வெ.ரா. வழக்கு  சர்க்கார் தரப்பு சாட்சியம்  பெரியார் வாக்கு மூலம்  3 வருஷம் கடுங்காவல்  2000 ரூபாய் அபராதம்

பெரியார் ஈ.வெ.ரா. வழக்கு சர்க்கார் தரப்பு சாட்சியம் பெரியார் வாக்கு மூலம் 3 வருஷம் கடுங்காவல் 2000 ரூபாய் அபராதம்

  சென்னை, டிச. 5 தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் 14-வது மகாநாட்டின் தலைவரும், சுயமரியாதை இயக்கத் தலைவருமான பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் மீது, சென்னை அரசாங்கத்தாரால் 117-வது 7(1) ஏ செக்ஷன் கீழ் கொண்டுவரப்பட்ட வழக்கு, இன்று காலை 11-25 மணிக்கு சென்னை ஜார்ஜ்டவுன் போலீஸ் கோர்ட்டு 4-வது நீதிபதி தோழர் மாதவராவ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் காலை 10-45 மணிக்கே படுக்கையுடன் தயாராகக் கோர்ட்டிற்கு வந்துவிட்டார். வழக்கைக் கவனிக்கத் தோழர்கள் ஸர்.ஏ.டி. பன்னீர் செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி, டி. சுந்தரராவ் நாயுடு பி.எ. பி.எல்., கி.ஆ.பெ. விசுவநாதம், எஸ்.வி. ராஜன், பி.எ.பி.எல்., தாமோதரம்பிள்ளை, ராவ்சாகிப் தர்மலிங்கம் பிள்ளை, டி.ஆர். கோதண்டராம முதலியார் பி.எ., பி.எல்., சி. பாசுதேவ் பி.எ. பி.எல். திருவெற்றியூர் சண்முகம் பிள்ளை, சேலம் எ. சித்தையன், ஓ.எஸ். சதக்தம்பி மரைக்காயர், ஜமால் இப்ராஹிம், டி.எஸ். முகம்மது இப்ராகிம், சாமி...

சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு  பெரியார் அறிக்கை  சிறைபுகு முன் கூறியது

சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு பெரியார் அறிக்கை சிறைபுகு முன் கூறியது

  சென்னை, டிச. 6 நான் இன்னும் சிறிது நேரத்துக்குள் சிறைக்குள் அனுப்பப்படுவேன். நமது இயக்க சம்பந்தமாக இனி நடக்கவேண்டியவைகளை தலைவர் செளந்திரபாண்டியனும், தோழர் கி. ஆ. பெ. விஸ்வநாதமும் இருந்து கவனித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன். இயக்கத் தோழர்களும் தலைவர்களுடன் ஒத்துழைத்து நான் வெளிவரும் வரை செவ்வனே நடைபெற ஒத்தாசை செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். ஜஸ்டிஸ் கட்சிக்கு நான் தற்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதிலும் பொப்பிலி அரசர் இருந்து எல்லா காரியங்களையும் கவனித்துக் கொள்வார் என்கிற திட நம்பிக்கை எனக்கிருப்பதினாலும் அவருடைய தலைமைப் பொறுப்பு நீங்கி விட்டதாக மற்ற தோழர்களும் கருதமாட்டார்கள் என்ற நம்பிக்கையிருப்பதாலும் அதைப்பற்றி கவலையில்லாமலே செல்லுகிறேன். இந்தி எதிர்ப்பு இயக்கம் பொது ஜன இயக்கமானதினாலே, தமிழ் மக்கள் எல்லோரும் அந்த இயக்கத்தைப் பற்றி கவலை எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எனக்கு பெருத்த நம்பிக்கையுண்டு. இதைப்பற்றி யாருக்கும் நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. ஆனால் பலாத்காரமில்லாமலும், துவேஷ உணர்ச்சி இல்லாமலும்...

பெரியார் சிறைவாசம்

பெரியார் சிறைவாசம்

  டிசம்பர் 6-ந்தேதி தென்னாட்டு சரிதத்தில் ஒரு முக்கியமான நாளாகும். அன்றுதான் சுயமரியாதை இயக்கத் தலைவரும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் ஆகப் போகிறவரும், தமிழர்களைத் தட்டி எழுப்பி சுயமரியாதையுடன் வாழக் கற்பித்தவரும், தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவருமான பெரியார் ஈ.வெ.ராமசாமி தமிழர் விடுதலைக்காகச் சிறை புகுந்தார். தமிழர் சரிதம் எழுதப்படும் போது அந்நன்னாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதற்கு ஐயமே இல்லை. ஒரு பெரியார் சிறை புகுந்தநாளை நன்னாள் எனக் கூறியது பலருக்கு வியப்பாக இருக்கலாம். சிறை புகுவது துன்பம் தரக்கூடியதாகையால் சிறைபுகும் ஒரு நாளை நன்னாள் எனக் குறிப்பிடுவது பலருக்குப் பிடிக்காதிருக்கலாம். நாம் வேண்டுமென்றே அந்நாளை நன்னாள் என்றோம். அந்நாள் பெரியாருக்கு துன்பகரமான நாளாயிருந்தாலும் தமிழர்களுக்கு நலந்தரக்கூடிய நாளாகும். பெரியார் சிறை புகுந்தது மூலம் தமிழுலகம் புத்துயிர் பெறப்போகிறது; தமிழர்கள் அடிமை வாழ்வு நீங்கி சுயமரியாதை வாழ்வு – சுகவாழ்வு வாழப் போகிறார். நமது சந்ததிகள் ஆரியப் பீடையிலிருந்து விடுபட்டு தனித்தமிழ்...

பெரியார் சென்னைப் பிரசங்கம்

பெரியார் சென்னைப் பிரசங்கம்

  பெருமை மிக்க தலைவரவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இன்றைய கூட்டத்தை, நாளை நான் எனது அருமை நண்பர் ஆச்சாரியாரின் விருந்தினராகப் போகப் போகின்றேனெனக் கருதி, என்னை உங்கள் எல்லோருக்கும் காட்டுவிக்க இவ்வளவு அவசரத்தில் கூட்டினார்கள் போலும். நானும் நாளை எனது சீட்டுக்கிழிந்து விடுமென்று கருதினேன். ஆனால், 1-ந் தேதி விசாரணை போட்ட பழைய சம்மன் ரத்தாகி 5-ந்தேதி வாய்தா போட்டு இன்று புதிய சம்மன் என்னிடம் கொடுக்கப்பட்டது. எனவே எனது வழக்கு நாளைக்கல்ல; 5-ந்தேதியாகும். நானும் அதற்குள் ஊருக்குச் சென்று வரவும், 4-ந்தேதி காரைக்குடியில் நடைபெறும் தமிழர் மகாநாட்டிற்குச் சென்று வரவும் ஏற்பாடு செய்துள்ளேன். தலைவரும் காரைக்குடிக்கு வருவார். எனவே மீண்டும் ஒன்றிரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குச் சென்னையில் இது எனது கடைசிப் பேச்சாக இருக்கலாம். மீண்டும் வருவேன் என்ற தைரியத்தில்தான் செல்லுகின்றேன். ~subhead கெமால் செய்த நன்மைகள் ~shend உலகத்திற்கே-மனித சமூகத்திற்கே வழிகாட்டியாயிருந்த இரண்டு பெரியார்கட்கு இங்கு அனுதாபத் தீர்மானம்...

தற்கால அரசியல்

தற்கால அரசியல்

  தஞ்சை ஜில்லா சுற்றுப்பிரயாண பிரசங்கம் Dr. சுப்பராயன் கம்பெனிக்கு பதில் தோழர்களே! இந்தப் பக்கத்துக்கு சுமார் 3,4 மாதத்துக்கு முன் ஒரு தடவை வந்து பேசி இருக்கிறேன். இப்போது பட்டுக்கோட்டை தோழர் சிவராமகிருஷ்ணன் ராஜலக்ஷ்மி திருமணத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில் இந்த ஜில்லா சுற்றுப் பிரயாணத்தில் சில பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்து இதில் தற்கால அரசியல் என்பது பற்றிப் பேசும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ~subhead பதவியும் சம்பளமுமே இன்றைய அரசியல் ~shend தற்கால அரசியல் என்பதைப்பற்றிப் பேசுவது என்றால் அது நாம் அதாவது இந்தியர்களாகிய நாமும் (இந்தியர்களாகிய) நம்மில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பாரும் ஒருவரை ஒருவர் வைது கொள்வது தான் தற்கால அரசியலாக இருக்கிறது என்று சொல்ல வருத்தப்படுகிறேன். நம்மில் ஒருவரை ஒருவர் வைதுகொள்வதைத் தவிர மற்றபடி அரசியல் என்பதின் காரணமாய் கொள்கைகள் திட்டங்கள் என்பவற்றில் இந்தியர்களுக்குள் ஏதும் முக்கியமான வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. மேல் குறிப்பிட்டபடி வைது கொள்ளுகின்ற...

ஈரோடு தமிழர் பெருங்கூட்டம்

ஈரோடு தமிழர் பெருங்கூட்டம்

  கோவை ஜில்லா போர்டில் காங்கரஸ் ஆதிக்கமும் கட்டுப்பாட்டுப் புரட்டும் வெளியாகிவிட்டது குறித்தும் காங்கரஸ் ஒழுங்கையும் மீறி காங்கரஸ் அபேட்சகர் வெள்ளியங்கிரிக் கவுண்டரையே ஒரு காங்கரஸ் எம்.எல்.ஏ.வான தோழர் வேணுடையாக்கவுண்டர் (சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர்) முறியடித்ததை மக்கள் ஆரவாரத்திற்கிடையே எடுத்துக் கூறினார். அவர் மேலும் பேசுகையில் முன்னால் பேசிய தலைவர்கள் தம்மை மிகைப்பட புகழ்ந்து கூறியதற்கு தாம் அருகதையுடையவரல்லவென்றும் அவர்கள் தம்மைப் பொதுத் தொண்டில் தீவிரமாக ஈடுபடவே அவ்வாறு உற்சாக மூட்டினர் எனக் கருதுவதாகவும் கூறிவிட்டு சர்.பன்னீர்செல்வமும் மற்ற தலைவர்களும் ஆதிகால முதற்கொண்டு பார்ப்பனரல்லாத மக்களுக்கும் பெரிதும் தமிழர்களுக்கும் செய்த சேவைகளைப் புகழ்ந்துவிட்டு குறிப்பாக சர். பன்னீர்செல்வத்தைப் பாராட்டிப் பேசினார். சென்னைச் சம்பவங்கள் சென்ற 21-11-38-ந் தேதி சென்னையில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் ஆர்ப்பாட்டங்களைப்பற்றி பெரியார் பிரஸ்தாபித்துத் தொடர்ந்து பேசுகையில் இந்தி எதிர்ப்பியக்கத்தை எவ்வழியிலேனும் – அவ்வழிகள் எவ்வளவு கேவலமாயிருந்த போதிலும் – அவற்றின் மூலம் ஒழித்துவிடவேண்டுமென்று கங்கணம் பூண்ட ஒரு கோஷ்டியார் கட்டுப்பாடாக...

பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக் கமிட்டிக்கு அன்னோய் தமிழர்களின் உதவி  ரூபாய் 117118க்கு “செக்கு”

பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக் கமிட்டிக்கு அன்னோய் தமிழர்களின் உதவி ரூபாய் 117118க்கு “செக்கு”

  – அன்னோய் 12.9.36 தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கட்கு, அன்பார்ந்த எமது தலைவரே! வணக்கம். “தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசார மத்திய கமிட்டி”யின் சார்பாக விடுத்துள்ள நுங்கள் வேண்டுகோளுக்கிணங்க இவண் வதியும் தமிழர்களாகிய நாங்கள் தோழர் வி.வி. ராமசாமி அவர்கள் பெயருக்கு ரூபாய், 117118க்கு “செக்” ஒன்று இத்துடன் அனுப்புவித்துள்ளோம்; எங்களின் இச்சிறு பொருளுதவியை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வீர்களென நம்புகின்றோம். நிற்க, தமிழ் நன்மக்களின் நலங்கருதி முனைந்து நின்று அருந் தொண்டாற்றும் தங்கட்கும் தங்களின் கூட்டுத் தோழர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியறிதலையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதோடுகூட தங்களின் புனிதமான நன் முயற்சி பெற்றி பெற வேண்டுமாயும் மிக ஆசைப்படுகிறோம். “செக்” கிடைக்கப் பெற்றமையை “குடி அரசு” வாயிலாகத் தெரிவிப்பீர்களென நம்புகின்றோம். இங்ஙனம், தங்கள் பால் அன்பும் மதிப்பும்மிக்குடைய அன்னோய் தமிழர்கள். குறிப்பு: பிராஞ்சிலாகாவைச் சேர்ந்த அன்னோய் தமிழ் தோழர்களுக்கு நமது மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்வதோடு ஏனைய வெளிநாட்டுத் தோழர்களுக்கு வழிகாட்டியாக முன்வந்த...