பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக் கமிட்டிக்கு அன்னோய் தமிழர்களின் உதவி ரூபாய் 117118க்கு “செக்கு”

 

– அன்னோய் 12.9.36

தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கட்கு,

அன்பார்ந்த எமது தலைவரே! வணக்கம்.

“தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசார மத்திய கமிட்டி”யின் சார்பாக விடுத்துள்ள நுங்கள் வேண்டுகோளுக்கிணங்க இவண் வதியும் தமிழர்களாகிய நாங்கள் தோழர் வி.வி. ராமசாமி அவர்கள் பெயருக்கு ரூபாய், 117118க்கு “செக்” ஒன்று இத்துடன் அனுப்புவித்துள்ளோம்; எங்களின் இச்சிறு பொருளுதவியை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வீர்களென நம்புகின்றோம். நிற்க,

தமிழ் நன்மக்களின் நலங்கருதி முனைந்து நின்று அருந் தொண்டாற்றும் தங்கட்கும் தங்களின் கூட்டுத் தோழர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியறிதலையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதோடுகூட தங்களின் புனிதமான நன் முயற்சி பெற்றி பெற வேண்டுமாயும் மிக ஆசைப்படுகிறோம்.

“செக்” கிடைக்கப் பெற்றமையை “குடி அரசு” வாயிலாகத் தெரிவிப்பீர்களென நம்புகின்றோம்.

இங்ஙனம்,

தங்கள் பால் அன்பும் மதிப்பும்மிக்குடைய

அன்னோய் தமிழர்கள்.

குறிப்பு: பிராஞ்சிலாகாவைச் சேர்ந்த அன்னோய் தமிழ் தோழர்களுக்கு நமது மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்வதோடு ஏனைய வெளிநாட்டுத் தோழர்களுக்கு வழிகாட்டியாக முன்வந்த þ தமிழர்களின் உதவித்தொகையின் ஒவ்வொரு காசும் பார்ப்பனரல்லாதார் நன்மையின் பொருட்டுச் செலவழிக்கப்படுவதால் அவர்கள் தம் உதவி என்றும் மறக்க முடியாததென்றும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். செக்கை விருதுநகர் தோழர் வி.வி.ராமசாமி அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

– (பத்திராதிபர்)

குடி அரசு பத்திராதிபர் குறிப்பு 20.09.1936

You may also like...