Tagged: கவிதை

வாசகர்களிடமிருந்து

வாசகர்களிடமிருந்து

டி எம் நாயரின் அற்புதமான பேச்சு நீதிக்கட்சியை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான டாக்டர் டி எம் நாயர், 1917ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டில் நிகழ்த்திய உரை வரிக்கு வரி அர்த்தம் பொதிந்தது. எல்லாரும் மதிக்கும் என்னை கேரள நாட்டு நம்பூதிரிப் பார்ப்பான், “ஏடா, நாயர்’ என்று கேவலமாகவே அழைப்பார்கள் என்ற வரிகளைப் படித்தபோது கண்ணீர் வந்தது. நீதிக்கட்சி தலைவர்களிலேயே நாயர் ஒரு பகுத்தறிவாளராக இருந்திருக்கிறார். நான் படித்த ஒரு வரலாற்றுச் செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1904ஆம் ஆண்டு நாயர் சென்னை நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, “சென்னை பார்த்தசாரதி கோயில் குளத்துக்கு வரி இல்லாமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று தீர்மானத்தை நீதிக்கட்சியின் மற்றொரு முக்கிய தலைவராக பிறகு உருவாகிய சர். பிட்டி தியாகராயர் கொண்டு வந்தபோது நாயர் அதை எதிர்த்தார். “கோயில் வருமானத்திலிருந்து வரி செலுத்தித் தண்ணீர் பெறுவதுதான் முறை; இல்லை என்றால் மற்ற கோயில் குளத்திற்கும் வரி...

மரியாதை பெற்றோம்! – -கவிக்கோ அப்துல்ரகுமான்

மரியாதை பெற்றோம்! – -கவிக்கோ அப்துல்ரகுமான்

இடியாகப் பெரியார் இறங்காதிருந்தால் அடியோடு ஒழிந்திருப்போம் எங்கள் அடிச்சுவடும் அழிந்திருக்கும். மதம்பிடித்தால் யானைக்கு வலிமை அதிகரிக்கும் ஆனால் மதம் பிடிக்க வைத்தே எம் வலிமையெல்லாம் அழித்துவிட்ட பாதகரைப் பெரியார் படையன்றோ ஒழித்தது! அவர் தன்மானம் என்ற முதுகெலும்பைத் தந்திரா விட்டால் நிமிர்ந்து தமிழினம் நின்றிருக்க முடியாது ! அவரால்தான் ‘காலில் பிறந்தவன்’ தலைமைக்கு வந்தான் அவரால்தான் ‘மனிதர்கள்’ என்ற மரியாதை பெற்றோம்’’  

காதலாகிக் கசிந்த உயிர்!

காதலாகிக் கசிந்த உயிர்!

தூய அன்புக் காதலொன்று தூரத்தி துரத்தி அடிக்கப் பட்டதே! காயம்பட்ட நெஞ்சோடு அது கல்லறைக்கு விரட்டப்பட்டதே! மூளை சிதற சிதற உன்னை முட்டித் தள்ளியது புகை வண்டித் தொடரா? பகை கொண்ட சதியா? தலைதெறிக்க ஓடிவந்த தாயின் முன்னே நீ தலைவெடித்து வீழ்ந்து கிடந்த கொடுமை என்ன! குலம் மாறி நீ காதலித்தாயென்று களம் அமைத்தோர் உன் கதை முடித்ததென்ன! நீதியின் காலடியில் வீழ்ந்து நியாயம் கேட்பதுபோல் நெடுஞ்சாண் கிடையாய் மாண்டு கிடக்கும் இளவரசனே! சாதிவெறிக் கொடுமைகளுக்கு உன் சாக்காடு சமாதி கட்டுமா! இனிவரும் சந்ததியர்க்காவது உன்னால் ஒரு நீதி கிட்டுமா! மெய்யாத்தூர் சொ. வேல்முருகன்

இப்படிக்கு ஃபாரூக் – தோழர் கண்மணி கவிதை

எரிபொருளு இல்லாம எங்கேயோ தவிக்கறன்னு, என்வீட்டப் பாக்காம, ஒன்னப்பாக்க வந்தேனே. பகுத்தறிவு அப்பாவோட பாசமாக வளர்ந்தபுள்ள, பாதியில தவிச்சுநிக்க என்னநீயும் கொன்னுபுட்ட. மதமெல்லாம் பொய்யுன்னு, மனிதம் மட்டும் மெய்யுன்னு, பகுத்தறிவு ஊட்டத்தானே பெரியாரின் பிள்ளையாக பூமியிலே வாழ்ந்தேனே. என் கழுத்த அறுக்கையிலே எங்கே என் அப்பான்னு, ஏங்கியழுமே புள்ளைங்கன்னு, ஏன்டா நீயும் மறந்துபுட்ட. கடவுள்தானே இல்லையின்ன, காதல் உண்டு எப்போதும். காவியமாய் வாழ்வதற்குள் காதல்செய்த துணைவியாளை., தவிக்கவிட்டு போறேனே. கடவுளிருக்குனு சொன்ன நீ, கருணைகூட இல்லாம., வயிற்றில்குத்தி துளையிட்டு கழுத்தறுத்து உயிரெடுத்த எந்தன் உயிர்நண்பனே!! இப்போதும் சொல்கிறேனே. மாண்டுபோய்விட்டாலும், மண்ணாகிச் சொல்கிறேனே. கடவுள் எங்கும் இல்லையே! மதத்தாலே நீயும்தா மிருகமாகிப்போனாயே, கடவுள்தா எல்லான்னு கருணையற்று கொன்னாயே. உனக்கும்இனி தோன்றுமே, உந்தன் சிறை வாழ்விலே, கடவுள் எங்கும் இல்லையே. சாவைக்கண்டு அஞ்சாமல், சாகநானும் தயாரானேன். தோள் கொடுக்க கூட்டம் உண்டு. தோழமை என்னும் உறவுண்டு. பகுத்தறிவு பால்குடுக்க, எம்புள்ளைக்கொரு பள்ளியுண்டு. தி.வி.க என்னுமொரு...

என் பெயர் மருதாயி – கவிஞர் இன்குலாப்

ஆன்ற தமிழ்ச் சான்றோரே தொல்காப்பியம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி வளையாபதி குண்டலகேசி கம்பராமாயணம் பெரிய புராணம் மறந்துவிட்டேன் திருக்குறள் எல்லாவற்றாலும் சுட்டப்பட்டவள் நான் தாய்மொழி -தமிழ் பெயர் -மருதாயி தொழில் பரத்தை என்னைக் கடமைகள் எனலாம் மதுரையைக் கொளுத்திய கற்பரசியே தலையாய கற்பினள் அல்லன் உங்கள் முத்தமிழ் அளவுகோலில் கற்புத் தோன்றிய அன்றே நானும் தோன்றி விட்டேன் ஐயா ஆன்ற தமிழ்ச் சான்றோரே என்னிடம் முதலில் வந்தவன் உங்கள் கொள்ளுப்பாட்டன் இப்போது வந்துபோனவன் கொள்ளுப் பேரன் என்றாலும் பாட்டன் எதிர்பார்த்தான் பாட்டியிடம் ‘பெய்யெனப் பெய்ய’ தன் சடலம் எரியும்போது உடல் வேக பாட்டி ஒருபோதும் பாட்டனிடம் கேட்கவில்லை     பெய்யெனச் சொல்க உடல் வேக இருக்கையிலே சில சமயங்களிலும் போகையிலே சிலசமயங்களிலும் பாட்டி தன் தங்கையைத் தாரமாக்குபவள் இல்லாவிடினும் இவன் மேய்வான் பத்தினியைப் பறிகொடுத்த பாட்டனுக்கு மச்சினியை கைப்பிடித்த ஆறுதல் இல்லத்தரசி இருக்க என்னிட ம்  ...

இனம் கூடி சேர்ந்து எழுக!

இனம் கூடி சேர்ந்து எழுக!

(மகுடம் இசை முழக்கத்தின் நிறைவு காட்சியாக கலைஞர்கள் வல்லிசையோடு குழுவினர் பாடிய எழுச்சிப் பாடல்) இடிகொண்ட மேகமாய் இசைதந்த வேகமாய்1 இனம்கூடி சேர்ந்து எழுக விடிகின்ற பொழுதுக்கு வென்றநம் வரலாற்றை விரிவாகச் சொல்லித் தருக! உயிருக்குள் ஒளியாகி உணர்வுக்குள் மொழியாகி உலகாள வந்த தமிழே! ஒருபோதும் அடங்காது ஒடுங்காது ஓயாது உன்னோடு நான்கொண்ட உறவே! (இடிகொண்ட) அன்பெங்கள் அறமாக அறிவெங்கள் வரமாக அகற்றுவோம் சாதி நோயை! ஆணுக்கு பெண்சமம் என்பதே நீதியாய் ஆக்குவோம் புதியபாதை! (இடிகொண்ட) எழில்கொண்ட வரலாறு இலக்குகள்  தெளிவோடு இலக்கண இலக்கியங்கள்! இழக்காமல் இன்றைக்கும் எம்மோடு வளர்கின்ற இசைக்கலை வாத்தியங்கள்! (இடிகொண்ட) அழியாத வாழ்வியல் அகத்திணை புறத்திணை அறம்கூறும் நல்ல நூல்கள்! அவ்வையும் கம்பனும் திருமூலர் வள்ளுவன் அடையாளம் தந்த பேர்கள்! (இடிகொண்ட) களம்கண்டு நின்றாலும் கரைதாண்டிச் சென்றாலும் கரையாத எங்கள் உணர்வு! கலையாக மொழியாக காற்றோடு இசையாக கலந்தேஎம் உயிர்வாழும் உறவு! (இடிகொண்ட) கோபங்கள் குறையாமல் கொடுத்ததை...

சாதியும் காதலும் – கவிஞர் இரவிபாரதி

சாதியும் காதலும் – கவிஞர் இரவிபாரதி

உன் சாதி பிறக்கும் முன் என் காதல் பிறந்தது உன் சாதியைவிட என் காதலே சிறந்தது உன் சாதியை காக்கவே எங்கள் காதலை அழிக்கிறாய் நீ பிறந்த சாதிக்காய் பெற்ற மகளை கொல்கிறாய் கூலி கேட்டு போராடிய போது வரவில்லையே சாதி வெண்மணியில் கருகியபோது எட்டி பார்க்காத சாதி திருமணம் என்ற உடன் வந்து விடுகிறதே சாதி சாதிய திருமணம் உன் சொத்தை கொள்ளையடிக்கும் சாதி மறுப்பு திருமணம் சமத்துவம் வளர்க்கும் பற்றிப் படரும் சாதிநோய்க்கு பெரியாரியலே அருமருந்து சாதி நோய்ப்பிடித்த தமிழனே அதை மனம் கோணாமல் நீ அருந்து. (சென்னை காதலர் நாள் விழாவில் வழங்கியது)

காதல்

காதல்

கற்றுக் கொள் – பறவை, விலங்குகளிடம்… காதல் அருகைப் போல் முடிவற்றத் தாவரம். காதல் உயிர்களின் நியதி. அணுக்கமும்..இணக்கமும் புரிதலும்..உறுதியும் சமைந்த உணர்வு.   பறவைகளையும், விலங்கையும்போல் காதலைக் கொண்டாடக் கற்றுக் கொள்ள வேண்டும் மனித இனம்.   ஏனெனில்,   பறவை தத்தம் குஞ்சுகள் இணை தேடுகையில் .. தலை அறுத்து .. தண்டவாள ஓரம் எறிவதில்லை.!   மிருகங்கள் தன் குட்டியின் காதலுக்கெதிராய்.. கும்பலாய் சென்று ஊர் எரிப்பதில்லை. படுகொலைகள் புரிந்து .. ஜாதீயத் திமிரோடு சவங்களை வீசிவிட்டு வருவதில்லை.!   ஜாதி மதங்களை ஒழிக்கும் உபாயங்களில், காதலின் பணி உன்னதமானது.   காதல் புரிவோரே!   பூக்களும் மினுமினுப்புத் தாள் சுற்றிய பரிசுப் பொருள்தாண்டி.. நேசத்தையும், பரிவையும் கொள்கையும், முற்போக்கையும் பகிருங்கள்.! ரத்தவெறி கொண்டு அலைகிற ஜாதி, மதவெறி சக்திகளை வெட்டிச் சாய்த்திடுங்கள். காதல் ஆயுதத்தால்! -பெ.கிருட்டிணமூர்த்தி, ஈரோடு பெரியார் முழக்கம் 16022017 இதழ்

கருகி நிற்கிறோம்!

கருகி நிற்கிறோம்!

எங்களின் தானியக் குதிர்கள்.. அடகுக் கடை ரசீதுகளும், வங்கி அனுப்பிய “ஜப்தி” நினைவூட்டல் கடிதங்களாலும், மூழ்கிப் போன நகைகளின் விபரக் காகிதக் குறிப்புகளாலும் நிரம்பியுள்ளன…. ஏர்முனை தூக்குமேடை ஆகிவிட்டது பயிர் பூச்சிகளை அழிக்கும் நஞ்சுகள் எங்கள் உயிர்மூச்சை நிறுத்தும் நிவாரணிகளாகி விட்டன… விதைமணிகளை கொன்றாகிவிட்டது, நுகத்தடிகளையும், கால்நடைகளையும் விற்று தின்றாகிவிட்டது. இங்கு… நீர்தருவாரும் இல்லை கண்ணீர் துடைப்பாரும் இல்லை! கருகி நிற்கிறோம் எரியும் பயிர்களுக்கு துணையாக..! ஏறு தழுவதற்கு போராடும் தமிழரே! சோறு தரும் எங்களை சாவு தழுவ விடாதிருக்க இணைவீரா? போராடவில்லை என்றாலும் போகிறது… பொங்கல் வாழ்த்து சொல்லிவிடாதீர்கள் …. பச்சையமுள்ள பயிரைக் காணாதவரை, உழவனுக்கு பொங்கலின் நிறம் எல்லாம் கருப்பே..! -பெ.கிருஷ்ணமூர்த்தி பெரியார் முழக்கம் 19012017 இதழ்

பெரியாரே  சமூகத்தின் ஞாயிறு

பெரியாரே சமூகத்தின் ஞாயிறு

இதுவரை முகநூலில் மூழ்கி முடிப்பேன் ஞாயிறை … இம்முறை முகங்களில் மூழ்கி முடித்தேன் ஞாயிறை … இயந்திர வாழ்வில் இயக்க ஓய்வாய் இரக்கம் பேச ஞாயிறு … இயல்பு மீறிய இயக்க வாழ்வில் இதயம் பேசிட ஞாயிறு … வீதிதனில் இறங்கி பரப்புரையில் கலந்தே மக்களதில் கலந்த ஜாதி புழுதியதை சுட்டெரிக்கும் முயற்சியதில் ( தி.வி.க )பெரியாரின் ஞாயிறுகள் … காஞ்சி மாவட்டமெங்கும் காலடி பதித்தே கருத்ததனை விதைத்தே பெரியாரின் கனவெனவே நின்ற ஞாயிறு … தோழர்களின் பணியதுவோ கடினமன்றோ மக்களின் அறியாமையோ கொடுமையன்றோ சுட்டெரிக்கும் வேளையிலும் சுடாமல் கையேந்திய ஞாயிறு …. களமாடும் கருப்புகளின் கம்பீரம் கண்கொண்டு கண்டேனே கருத்தாடும் கரும்புலிகள் சொல்கீரி சிலிர்த்ததோர் ஞாயிறு … பெரியாரே சமூகத்தின் ஞாயிறு என்றுணர்ந்த எனக்கும் மறக்காதே இந்த ஞாயிறு …. இரா. செந்தில் குமார் ………………. செய்தி : திராவிடர் விடுதலை கழகம் சார்பில் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்...