மரியாதை பெற்றோம்! – -கவிக்கோ அப்துல்ரகுமான்

இடியாகப் பெரியார்

இறங்காதிருந்தால்

அடியோடு ஒழிந்திருப்போம்

எங்கள்

அடிச்சுவடும் அழிந்திருக்கும்.

மதம்பிடித்தால் யானைக்கு

வலிமை அதிகரிக்கும்

ஆனால்

மதம் பிடிக்க வைத்தே எம்

வலிமையெல்லாம் அழித்துவிட்ட

பாதகரைப் பெரியார்

படையன்றோ ஒழித்தது!

அவர்

தன்மானம் என்ற

முதுகெலும்பைத்

தந்திரா விட்டால்

நிமிர்ந்து தமிழினம்

நின்றிருக்க முடியாது !

அவரால்தான்

‘காலில் பிறந்தவன்’

தலைமைக்கு வந்தான்

அவரால்தான்

‘மனிதர்கள்’ என்ற

மரியாதை பெற்றோம்’’

 

You may also like...