Category: சிறப்பு கட்டுரை

மனுவாதம் சாகவில்லை; ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது

மனுவாதம் சாகவில்லை; ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது

ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நாட்டில் மனுவாதம் ஆட்சி செய்வது கொடுமையானது என்றும் மநுவாதத்தை ஏற்றக்கொண்டவர்கள்தான் ஒன்றி யத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் ஹரியானாவிலும் ஆட்சி செய் கிறார்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி குற்றம்சாட்டினார். சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி சென்னை சைதாப்பேட்டையில் சனிக்கிழமை (மே 28) தமிழ்  நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: “அனைத்தையும் சாதிய கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் கலப்பு திருமணத்தை ஏற்றுக்  கொள்ள மறுக்கிறார்கள். நமது நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர்,  பருவ வயதை எட்டிய ஆணோ பெண்ணோ அவர்கள் தாங்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்துகொள்ளச் சட்டத்தில் இடம் உண்டு’’ என்று கூறினார். ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் கலப்பு திரு மணத்தை ஒருசிலர் ஏற்க மறுக்கிறார்கள்.  தற்போதைய ஆட்சியாளர்கள் அம்பேத்கர் சிறந்த தலைவர், அரசியல் சாசன...

2024 தேர்தல் களத்தில் இந்தி வெறியைத் திணிக்க பா.ஜ.க. திட்டம்

2024 தேர்தல் களத்தில் இந்தி வெறியைத் திணிக்க பா.ஜ.க. திட்டம்

பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டி விடுவது’ என்ற பழமொழி ஒன்றிய பாஜ அரசுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியது. ஒருபுறம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் சிறப்புகளை பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் மறுபுறம், இந்தியை தேசிய மொழியாக்க அமித்ஷா போன்ற பாஜ தலைவர்கள், வரிந்து கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, ‘இந்தியாவில் அனைத்து பகுதியிலும் உள்ள மக்களின் தகவல் தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும். ஆங்கிலமாக இருக்கக் கூடாது. நாங்கள் மாநில மொழிகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொண்டு வர வேண்டும் என நினைக்கிறோம்,’ என இந்தி திணிப்புக்கு புது விளக்கத்தை தந்தார். இதற்கான காய் நகர்த்தல் டெல்லியில் இருந்து தொடங்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதுடெல்லி நகராட்சி கவுன்சிலில் தனது அனைத்து துறைகளுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், ‘அலுவல் மொழி...

பார்ப்பனியத்தை தோலுரிக்கும் ஜாதி எதிர்ப்புப் படம் ‘நெஞ்சுக்கு நீதி’ ஆ. ராசா

பார்ப்பனியத்தை தோலுரிக்கும் ஜாதி எதிர்ப்புப் படம் ‘நெஞ்சுக்கு நீதி’ ஆ. ராசா

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா, ‘நெஞ்சுக்கு நீதி’ படம் குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்: தாங்கள் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் பார்த்தேன். திகைத்து மகிழ்ந்தேன். பொதுவாக திகைப்பில் மகிழ்ச்சிக்கு வாய்ப்பு குறைவு. ஆனால், ஒரு புதிய வேதியியல் மாற்றம் என்னை படம் பார்த்தபின் தொற்றிக் கொண்டதால் இருவேறுபட்ட பண்புகளைக் கொண்ட வார்த்தைகளை கோர்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானேன். ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை தயாரிப்பதற்கும் அதில் நடிப்பதற்கும், வெளியிடுவதற்கும், வர்த்தகம் மட்டுமே நிச்சயமாக நோக்கமாக இருந்திட இயலாது என்பதை சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட இச்சமூக அமைப்பை உணர்ந்த ‘பெரியார்வாதி’ என்ற அடிப்படையில் உணர்கிறேன். இந்த திரைப்படம் வணிக நோக்கில் இலாபமா நட்டமா என்பதைவிட தமிழ் திரையில் இவ்வளவு அப்பட்டமாகவும், பட்டவர்த்தனமாகவும் சாதி பற்றிய புரிதலை – கண்ணோட்டத்தை – எவரும் இதுவரை தந்ததில்லை என்பதுதான் கொண்டாடப்பட வேண்டிய உண்மை. மகாத்மா பூலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர்...

திராவிட மாடல் காலத்தின் தேவைக்கேற்ற நவீனத்துவக் கோட்பாடு – விடுதலை இராசேந்திரன்

திராவிட மாடல் காலத்தின் தேவைக்கேற்ற நவீனத்துவக் கோட்பாடு – விடுதலை இராசேந்திரன்

இது பண்டைக்கால மன்னராட்சியின் பழைமைவாதக் கோட்பாடு அல்ல. சமகால மானுட விழுமியங்களை உள்ளடக்கிய நவீனத்துவ சிந்தனை. தமிழ்நாடு அரசு செய்தி விளம்பரத் துறை வெளியிட்ட ஓராண்டு ஆட்சி சாதனை மலரில் எழுதிய கட்டுரை. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், ஒரு கதையை கூறினார். அது சமூக நீதித் தொடர்பானது. “ஒரு புல்லாங்குழல் தரையில் கிடக்கிறது, அதற்கு மூன்று சிறுவர்கள் உரிமை கோருகிறார்கள். ஒரு குழந்தை, இந்தப் புல்லாங்குழலை எனக்கு மட்டுமே வாசிக்கத் தெரியும், எனக்குத் தருவது தான் சரி என்று கேட்கிறது. மற்றொரு குழந்தை, என்னிடம் விளையாடுவதற்கு எந்தப் பொருளும் கிடையாது. வாங்கித் தரும் நிலையில் எனது பெற்றோர்களும் இல்லை. எனக்குத் தாருங்கள் என்று கேட்கிறது. மூன்றாவது குழந்தை, இந்தப் புல்லாங்குழலை நானே எனது உழைப்பில் உருவாக்கி தவற விட்டுவிட்டேன், எனக்குத் தான் தர வேண்டும் என்று கேட்கிறது. இந்த மூன்று குழந்தைகளும் தங்களுக்கான நீதியை பேசுகின்றன. மூன்றிலும் நியாயம்...

இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுதியவருக்கு உச்சநீதிமன்ற பதவியா?

இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுதியவருக்கு உச்சநீதிமன்ற பதவியா?

உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு இரண்டு நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் தற்போது பரிந்துரை செய்திருக்கிறது. கொலிஜியம், எஸ்.வி.இரமணா தலைமையில் நான்கு பேர் அடங்கியக் குழுவைக் கொண்டதாகும். பரிந்துரை செய்யப்பட்ட இரண்டு பேர்களில் ஒருவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஜம்ஷெத் பி. பார்த்திவாலா என்பவர் ஆவார். இவரது பின்னணி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 2015 டிசம்பர் 1 இல் ஹர்திக் பட்டேல் பிரிவுக்கு தனி ஒதுக்கீடு கேட்ட வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் வந்த போது, அவர் தெரிவித்த கருத்து கடுமையான சர்ச்சைகளை உருவாக்கியது. அவர் தனது தீர்ப்பில் இவ்வாறு கூறினார். “இந்த நாட்டை அழித்துவரும் இரண்டு கேடுகள் எதுவென்று என்னைக் கேட்டால், ஒன்று ‘இட ஒதுக்கீடு’, மற்றொன்று ‘ஊழல்’ என்று நான் கூறுவேன். நாடு சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்குப் பிறகும் எந்த ஒரு குடிமகனும் இட ஒதுக்கீடு கேட்பது வெட்கக் கேடானது” என்று அவர் கூறியதோடு, “அரசியலமைப்புச் சட்டத்தில், பத்தாண்டுகளுக்கு மட்டுமே இட...

மோடி ஆட்சியில் நடக்கும் வங்கி சூறையாடல் கொழுக்கிறார்கள் – பார்ப்பன பெரு முதலாளி ‘இந்துக்கள்’; வதைபடுகிறார்கள் – ஏழை எளிய ‘இந்துக்கள்’

மோடி ஆட்சியில் நடக்கும் வங்கி சூறையாடல் கொழுக்கிறார்கள் – பார்ப்பன பெரு முதலாளி ‘இந்துக்கள்’; வதைபடுகிறார்கள் – ஏழை எளிய ‘இந்துக்கள்’

அரசு வங்கிகளில் பல்லாயிரம் கடன் வாங்கி பட்டை நாமம் சாத்தி விட்டு வெளி நாட்டில் சொகுசு வாழ்க்கை நடத்துகிறார்கள். பார்ப்பன-பனியா ‘இந்துக்கள்’.உழைக்கும் இந்துக்கள் வங்கிகளில் பெறும் சில ஆயிரம் ரூபாய்க்கு அவமானப் படுகிறார்கள். 17 வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத வழக்கில், 2016ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பியோடியவர் விஜய் மல்லையா. பஞ்சாப் நேசனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் 2018ஆம் ஆண்டில் இந்தியாவை விட்டு தப்பியோடிவர்கள் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது மாமனார் மெகுல் சோக்சியும். அதனைத்தொடர்ந்து நாட்டையே உலுக்கிய 23,000 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் மோசடியில் குஜராத்தைச் சேர்ந்த ஏ.பி.ஜி. ஷிப்யார்டு என்னும் கப்பல் கட்டுமான நிறுவனம் சிக்கியுள்ளது. இன்றைய தேதியில் இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கடன் மோசடி. இந் நிறுவனத்திற்கு இடம் வழங்கியது குஜராத் மாநில பாரதிய ஜனதா...

நமக்கான அடையாளம் : ‘திராவிட மாடல்’ கலை நிகழ்வு – கருத்துச் செறிவுடன் சென்னையில் முதல் மண்டல மாநாடு

நமக்கான அடையாளம் : ‘திராவிட மாடல்’ கலை நிகழ்வு – கருத்துச் செறிவுடன் சென்னையில் முதல் மண்டல மாநாடு

கழக செயல் வீரர் தோழர் பத்ரி நாராயணன் 18ஆவது நினைவு நாளையொட்டி, 30.04.2022 காலை 9 மணியளவில், பத்ரி நாராயணன் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் நினைவு கூறல் நிகழ்வு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்று பத்ரி நாராயணனின் சமரசம் இல்லாத இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்தனர். இறுதியில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதன்பின் பத்ரி நாராயணன் படிப்பகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. திராவிட மாடல் முதல் மண்டல மாநாடு 30.04.2022 அன்று மாலை 5 மணியளவில் இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் படிப்பகம் அருகில், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜி வரவேற்பு கூறினார். மயிலை சுகுமார், முனு சாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

‘இந்து’ விளிம்பு நிலை மக்களை நசுக்கும் பாரதிய ‘புல்டோசர்’ கட்சி

‘இந்து’ விளிம்பு நிலை மக்களை நசுக்கும் பாரதிய ‘புல்டோசர்’ கட்சி

இராம நவமி விழாக்களில் கலவரம் விளைவித்தார்கள் என்று சிறுபான்மை மக்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்களை பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியினர் புல்டோசரை வைத்து தகர்த்து வருகின்றனர். புது டெல்லியிலும், மத்தியப் பிரதேசத்திலும், குஜராத்திலும் இந்த புல்டோசர் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. உச்ச நீதிமன்றம் அதிர்ச்சியடைந்து தானாக முன் வந்து இந்த வழக்கை எடுத்து ‘உடனடியாக இந்த புல்டோசர் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தடை வந்தப் பிறகும் கூட புல்டோசர் தாக்குதல்கள் தொடர்ந்தன, அதற்கு கடும் எதிர்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி தற்போது “பாரதிய புல்டோசர் கட்சி”யாக உரு மாறியிருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக புல்டோசரை வைத்து வீடுகளை இடிக்கிறார்கள், அதே சமயம் பெரும்பான்மை இந்துக்களுக்குத் தான் நாங்கள் கட்சி நடத்துகிறோம் என்று கூறிக்கொள்ளும் இவர்கள், பெரும்பான்மையான இந்துக்களின் வாழ்வாதாரத்தை புல்டோசரை வைத்து தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜி.எஸ்.டி வரி மேலும் 143 பொருட்களுக்கு உயர்த்தப்படுவதாக...

கியூட்-நீட்-கேட்: தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா? மு. இராமநாதன்

கியூட்-நீட்-கேட்: தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா? மு. இராமநாதன்

ஒரு புதிய நுழைவுத் தேர்வு வந்திருக்கிறது. கியூட் அதன் பெயர் (CUET – Central University Eligibility Test). மத்திய பல்கலைக்கழகங்களுக்கான தகுதித் தேர்வு என்பது பொருள். இனிமேல் மத்திய பல்கலைக் கழக வளாகங்களுக்குள் மாணவர்கள் கால் பதிக்க வேண்டுமானால், இந்தத் தேர்வில் அவர்கள் கை நிறைய மதிப் பெண்கள் வாங்கி வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே மருத்துவக் கல்லூரியில் நுழைய நீட் தேர்வு நடந்துவருகிறது. இது தவிர கேட் என்றொரு நுழைவுத் தேர்வும் நடந்துவருகிறது; இது பொறி யியல் முதுநிலைப் படிப்பிற்கான தேர்வு என்பதால் பரவலாக அறியப்படவில்லை. ஏன் இப்படியான நுழைவுத் தேர்வுகள் நடத்தப் படுகின்றன? ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை யானது பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக்குப் போவதற்கு மாணவர்கள் நாடு தழுவிய நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்கிறது (பத்தி 4. 42, பக்கம் 19). அதாவது அடுத்தகட்டமாக இந்த நுழைவுத் தேர்வுகள் எல்லாக் கலை-அறிவியல் கல்லூரிகளுக்கும்...

ஜெயலலிதாவின் ஆளுநர் எதிர்ப்பும் அ.இ.அ.தி.மு.க.வின் சரணாகதியும்

ஜெயலலிதாவின் ஆளுநர் எதிர்ப்பும் அ.இ.அ.தி.மு.க.வின் சரணாகதியும்

நீட் மசோதா இரண்டாவது முறை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தற்குப் பிறகும், ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு சட்டபூர்வமாக அனுப்பி வைக்கிற கடமையி லிருந்து தவறி, தன்னுடைய ஆளுநர் மாளிகை யிலே முடக்கி வைப்பதற்குத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் நடத்துகிற தமிழ்ப் புத்தாண்டு தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கிறது. திமுக கூட்டணிக் கட்சிகளும் இதே முடிவை எடுத்து இருக்கின்றன. ஆனால் இந்த விருந்தில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதாக அதிமுக அறிவித்திருக் கிறது. சொல்லப்போனால், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது தான், நீட் விலக்கு மசோதாவை அவர் நிறைவேற்றினார். தான் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றிய மசோதாவை இன்னும் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருப்பதை பார்த்து துளியும் கவலை இல்லை. திமுக எதிர்ப்பு, பாஜக தயவு வேண்டும் என்ற பார்வையோடு அவர் தன்னுடைய கொள்கைகளுக்கு, சமூக நீதிக்கு துரோகம் இழைக்கின்ற வகையில் இதில் கலந்து கொண்டு இருக்கிறார் என்பதையும் நாம் தமிழ்நாட்டு மக்களுக்கு...

சுயமரியாதையின் அடையாளம் மாநில சுயாட்சி ச. தேன்மொழி (தமிழ்நாடு மாணவர் கழகம்)

சுயமரியாதையின் அடையாளம் மாநில சுயாட்சி ச. தேன்மொழி (தமிழ்நாடு மாணவர் கழகம்)

ஏப்.14, 2022 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அம்பேத்கர் பிறந்தநாள், சமத்துவ நாள்  கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம். மாநில சுயாட்சியின் அடிப்படை நோக்கம் சுயமரியாதைத் தத்துவம். மாநில சுயாட்சி என்ற வார்த்தைக்கு, மாநிலங்களின் அடிப்படை உரிமை, பொருளாதாரச் சுதந்திரம், அனைவருக்கும் சமமான சரி நிகர் வாழ்வாதாரம், இன உணர்வு என்ற பல்வேறு கோணங்களில் அர்த்தங்களைப் பார்த்திருப்போம், படித்திருப்போம். ஆனால் இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக “சுயமரியாதை” என்ற தத்துவமே மாநில சுயாட்சியின் அடி வேராக விளங்குகிறது என உறுதியாகக் கூறலாம். மாநில சுயாட்சி திராவிடத்தின் கொள்கை : 1962 அக்டோபர் வேலூர் சிறையில் இருந்து விடுதலையான பின் மாநில சுயாட்சிக்காக அண்ணா முன் வைத்த முழக்கம் “திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டு விட்டோமே தவிர அதனைக் கேட்பதற்கு உரிய காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அந்தக் காரணங்களை நான் விட்டுவிடவில்லை” என்றார். நமது பள்ளிப்பருவத்திலேயே படித்து இருப்போம் இந்தியா ஒரு மத...

கொளத்தூர் மணி – விடுதலை இராசேந்திரன் விளக்கம் அனைத்துப் பிரிவு மக்களையும் சமப்படுத்துவதே ‘திராவிட மாடல்’

கொளத்தூர் மணி – விடுதலை இராசேந்திரன் விளக்கம் அனைத்துப் பிரிவு மக்களையும் சமப்படுத்துவதே ‘திராவிட மாடல்’

‘சன்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘திராவிட  மாடல்’ குறித்து விளக்கினார். தமிழ்நாடு முதல்வர் தன்னுடைய ஆட்சியைப் பற்றி குறிப்பிடுகிற போதெல்லாம் அடிக்கடி “திராவிட மாடல்” என்ற சொல்லை பயன்படுத்துகிறார். அது குறித்த பல்வேறு, கேள்விகளும், விமர்சனங்களும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அது எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்த நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, வாய்ப்பு பெறாத மக்கள் கூட்டத்திற்கு அரசின் அனைத்தை யும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கிற முடிவு, ஆங்கிலேயர் ஆட்சியில் எடுக்கப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்டது தான் ‘சைமன் கமிசன்’. அப்போது, தமிழ்நாட்டு அரசியலில், அதாவது சென்னை மாகாண அரசியலில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் (நீதிக் கட்சி) தொடங்கப்பட்டது. அதை தொடங்கியவர்கள், பெரும் பணக்காரர்களும், மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுமாய் இருந்தாலும், இயக்கத்தின் நோக்கமாய் அவர்கள் கூறியது, “அனைத்து மக்களுக்குமான சேவைகளை கொண்டு போய் சேர்ப்பது தான்”. இன்னும் சொல்லப்...

ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் நாய் வாலை வெட்டி, ‘நாய்க்கு’ சூப் தயாரிக்கும் ஒன்றிய ஆட்சி

ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் நாய் வாலை வெட்டி, ‘நாய்க்கு’ சூப் தயாரிக்கும் ஒன்றிய ஆட்சி

மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்கான செலவுகளை மக்களிடமிருந்தே வரியாக வாரிச் சுருட்டும் மோடி ஆட்சி. ‘கோடீஸ்வரர்கள்’ மேலும் கொழுக்க வரிச் சலுகை வாரி வழங்கி, அவர்களை ‘இந்துத்துவா’வுக்குப் பா.ஜ.க. வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதை ப. சிதம்பரம் விளக்குகிறார். வரிகள், நல்வாழ்வு, தேர்தல் வெற்றி ஆகிய மூன்றையும் ஒரே புள்ளியில் இணைக்க வழி கண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சூழ்ச்சித் திறனை நாம் பாராட்டியே தீர வேண்டும். தேர்தல் நிதி நன்கொடைப் பத்திரம், சலுகைசார் முதலாளித் துவம், ஊழல் ஆகிய மூன்றையும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான புதிய முறை என்கிற திட்டத்தின் மூலம் இணைத்து, இதில் எந்தச் சட்ட விரோதமும் இல்லை எனும் மாயை உருவாக்கியதைப் போலவேதான் முன்னதிலும் செய்திருக்கிறது. முதல் மூன்று அம்சங்களுக்கு மீண்டும் வரு வோம். வரிகள், நல்வாழ்வு, வாக்குகள் பற்றியது அது. 2019 மக்களவை பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள், பொருளாதார அடித்தளக் கட்டமைப்பில்...

துப்பாக்கி ‘ரவை’களை ஜேம்ஸ்வாட் கனவில்தான் கண்டுபிடித்தாரா? எட்வின் பிரபாகரன்

துப்பாக்கி ‘ரவை’களை ஜேம்ஸ்வாட் கனவில்தான் கண்டுபிடித்தாரா? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதியின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (2) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடு கிறோம். புதிர் 3: கனவுகள், அறிவியல் கண்டு பிடிப்புகளின் அடிப்படையாக இருந் துள்ளன. Benzene மூலக்கூற்றின் வடிவத்தை ஃப்ரடரிக் வோன் தன் கனவிலேயே முதலில் கண்டார். நரம்பு அதிர்வுகள் மின்சக்தியாக கடத்தப்பட வில்லை; ரசாயன மாற்றங்களாகத் தான் கடத்தப்படுகின்றன என்று ஓட்டோ லூயி கண்டுபிடித்ததும் கனவில் தான். தையல் இயந்திரத் தின் வடிவமைப்பு, எலியஸ் ஹோவேயின் கனவில் தான் முதலில் வந்தது. துப்பாக்கி ரவை செய்யும் தொழில் நுட்பத்தை ஜேம்ஸ் வாட் கனவாகக் கண்டார். இத்தகைய கனவு களுக்கு அறிவியலில் விளக்கம் இல்லை. விடை: உளவியல் ஆராய்ச்சியாளர் சிக்மண்ட் ஃபிராய்ட், “ஆழ்மனத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாகவே கனவுகள் வருகின்றன” என்றார். தற்கால உளவியல் ஆராய்ச்சி யாளரான டெயர்ட்ரே பாரெட், மூளை...

திராவிடன் மாடல்: ஆரிய-திராவிடர் போராட்டத்தின் புதிய வடிவம்

திராவிடன் மாடல்: ஆரிய-திராவிடர் போராட்டத்தின் புதிய வடிவம்

இந்த நாட்டின் அரசியல், ஆரிய-திராவிடர் போராட்டமேயாகும் என்று பெரியார் சுட்டிக் காட்டினார். அதுவே ‘திராவிடன் மாடல்’, ஆர்.எஸ்.எஸ். மனுவாதத்துக்குமான போராட்டமாக பரிணமித்து இருக்கிறது என்பதை திராவிடர் விடுதலைக் கழகம் (தி.வி.க.) சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஏப்.2, 3 தேதிகளில் ஈரோட்டில் முறையே தி.வி.க. தலைமைக் குழுவும் செயலவையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை யிலும் நடந்தது. இரண்டாம் நாள் (ஏப்.3, 2022) ஈரோடு  கே.கே.எஸ்.கே. மண்ட பத்தில் நடை பெற்ற செயலவைக் கூட்டத்தில் தீர்மானங்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்தார். 90 உறுப்பினர்களில் 86 பேர் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட ‘திராவிடன் மாடல்’ குறித்த தீர்மானம்: திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினரும், கழகத்தின் செயல்வீரரும் எளிய முறையில் தோழர்களுடன் பழகி கழகக் கொள்கைகளை பரப்புவதில் முன்னின்று செயல்பட்ட மடத்துக்குளம் மோகன் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனைகளை தனது புரட்சிகரமான...

எல்லையற்ற அதிகாரத்தால் பங்கு சந்தையை கொள்ளையடித்த ‘மனுவாத’க் கூட்டம்

எல்லையற்ற அதிகாரத்தால் பங்கு சந்தையை கொள்ளையடித்த ‘மனுவாத’க் கூட்டம்

தேசியப் பங்குச் சந்தை நிறுவன நிர்வாகம் குறித்த மிக முக்கியமான தகவல்களையும், நிறுவனத்தின் வணிகப் புள்ளி விவரங்களையும் ஒரு தனிநபரிடம் பகிர்ந்து கொண்ட பல மின்னஞ்சல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் பல ‘ரிக்யஜூர்சாம@அவுட்லுக். காம்’ என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுபற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த சித்ரா, ‘அவர் இமய மலையில் வசிக்கும் ஒரு யோகி. அவருக்கு உருவ மில்லை’ கோடியில் புரளும் பங்கு சந்தை வணிகம் ‘மனுதர்ம’ கும்பலிடம் சிக்கி அவர்களின் கொள்ளைக் கூடாரமாக மாறி இருக்கிறது. இப்போது சி.பி.அய். விசாரணை வளையத் துக்குள் அது வந்திருக்கிறது. கடந்த இதழில் வெளி வந்த தகவல்களை சுருக்கமாகத் தொடர்வோம். பங்கு சந்தையில் மோசடிகள் நடப்பதைக் கண்டறிந்த பிறகு மன்மோகன் நிதியமைச்சராக இருந்த போது தேசிய பங்கு சந்தை என்ற அமைப்பை உருவாக்கினார், இது தனியார் நிறுவனம். ‘செபி’ என்ற பங்கு சந்தையைக் கண்காணிக்கும் அரசு கண்காணிப்பு அமைப்பின் கீழ் இயங்கி...

திராவிடன் மாடலுக்கு கோட்பாடு இல்லையா?

திராவிடன் மாடலுக்கு கோட்பாடு இல்லையா?

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழுரையில் மயங்குவதாகக் காட்ட முயற்சிக்கும் கட்டுரை ஒன்றை தமிழ் இந்து (பிப்ரவரி 21) நாளேடு, அரை உண்மைகள் குழப்பங்களுடன் ‘பட்ஜெட் விவாதம் திசை மாறலாமா’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. பொய்யை விட ஆபத்தானது அரை உண்மை. பாஜகவின் ‘குஜராத் மாடல்’, ஆம் ஆத்மியின் ‘டெல்லி மாடலுக்கு’ மாற்றாக “திராவிட மாடலை” முன்னிறுத்தும் திமுக, திராவிட மாடலுக்கான கோட்பாட்டை விவரிக்காமல் சமூக நலத்திட்டங்களை பட்டியலிடுவதாக குற்றம் சாட்டுகிறது கட்டுரை. குஜராத் மாடல் – பச்சை வகுப்புவாதம், தனியார்மயம். ஆம் ஆத்மி மாடல் என்பதோ தனக்கான எந்த மாடலுமே இல்லை என்ற மாடல். இதோடு திராவிட மாடலை சமன்படுத்துகிறது கட்டுரை. திராவிடன் மாடல் என்பது சமூக நலத்திட்டங்கள் மட்டுமே என்று கூறும் கட்டுரை தன்னுடைய கருத்தை தானே மறுக்கிறது. “தமிழ்நாட்டில் கூலிச் சமமின்மை, குறைந்துவரும் உயர்கல்வியின் தரம் பற்றி பேராசிரியர் கலையரசன் தனது திராவிடன் மாடல் நூலில் சுட்டிக்காட்டி இருப்பதை எடுத்துக்காட்டும்...

ரோஸ்மேரி – ஆவியுடன் பேசி, இசையமைத்தாரா? எட்வின் பிரபாகரன்

ரோஸ்மேரி – ஆவியுடன் பேசி, இசையமைத்தாரா? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதியின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (1) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். சென்னை உச்சநீதிமன்ற பதவியிலிருந்த வெ. இராமசுப்பிரமணியம், பதவியில் இருக்கும் போதே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அறிவியலையே கேள்விக் குள்ளாக்கும் தொடர் கட்டுரை ஒன்றை ‘தினமணி’ நாளேட்டில் எழுதினார். பிறகு உச்சநீதிமன்றத்திலும் நீதிபதியாக இருக்கிறார். அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டிய சட்டக் கடமையி லிருந்து விலகி, ‘அறிவியலுக்கு அப்பால்’ அற்புதங்களைத் தேடிய அவரது கட்டுரைத் தொடர் பிறகு நூலாகவும் வெளியிடப் பட்டது. நீதிபதி எடுத்து வைத்த கருத்துகள் அறிவியலா? அறிவியல் என்ற பெயரில் பரப்பப்பட்ட கற்பனைச் சரடுகளா? இந்தக் கேள்விகளுக்கு ஆணித்தரமான மறுப்பைத் தருகிறது இக்கட்டுரை. முக்கியத்துவம் பெற்ற இக்கட்டுரையை அறிவியலில் பகுத்தறிவில் உடன்பாடு உள்ள அனைவரும் மக்களிடம் பரப்ப வேண்டும். – ஆசிரியர் நூலின் பெயர் “அறிவியலுக்கு அப்பால்”. 2014ஆம்...

ஃபாரூக் நினைவு நாளில் கொளத்தூர் மணி பேச்சு (2) ‘மத அடிப்படை வாதம்’ வளருவது சமூக அமைதியை சீர்குலைத்து விடும்

ஃபாரூக் நினைவு நாளில் கொளத்தூர் மணி பேச்சு (2) ‘மத அடிப்படை வாதம்’ வளருவது சமூக அமைதியை சீர்குலைத்து விடும்

ஃபாரூக் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் தலைமை உரை. (சென்ற இதழ்  தொடர்ச்சி) ஃபாரூக் கொலையில் இருந்து நாம் பார்த்தோம். அதில் பல பேர் கண்டனம் தெரிவித்தார்கள். சென்னையில் ஒரு கண்டனக் கூட்டத்தை சில இஸ்லாமியர்கள் நல்லெண்ணத்தோடு முயற்சி எடுத்து நடத்தினார்கள்.  கோவையில் நடக்கும் என்றார்கள். கோவையில் யாரும் இப்படி கண்டனக் கூட்டம் நடத்தவில்லை. அந்த வருத்தம் எங்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது ஒருபுறம் இருந்தாலும், எந்த ஒன்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது அல்ல; விமர்சனத் திற்கு அப்பாற்பட்டது அல்ல; பெரியாரையும் சேர்த்துத் தான் சொல்கிறோம். இஸ்லாமியர்கள் ஒரு வேளை இங்கே கேள்வி கேட்க வந்திருந்தாலும் நீங்கள் கேளுங்கள். நிகழ்ச்சி முடிந்த பின், உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும். நீங்கள் பேசுங்கள், உங்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப் படும். அதில் ஒன்றும் எங்களுக்கு தயக்கமே கிடையாது. ஒருவேளை எங்கள் கருத்து தவறாக...

பங்கு சந்தையில் ‘பூதேவர்’ பரம்பரை அடித்த கொள்ளை

பங்கு சந்தையில் ‘பூதேவர்’ பரம்பரை அடித்த கொள்ளை

‘பூதேவர்கள்’ வம்சத்தில் வந்த ‘ஆச்சார சீலர்கள்’ பங்கு சந்தையில் கொள்ளை அடித்து பங்கு போட்டுக் கொண்ட ‘இதிகாசப் பெருமை’ களை ஊடகங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரவில்லை, எந்தத் தொலைக்காட்சியும் விவாதக் கச்சேரிகளையும் நடத்தவில்லை. ‘இந்திரா, ஆனந்து, நிர்மலா’ என்று பல ‘வெங்காய பூண்டு’ வெறுப்பாளர்களின் அரவணைப்பில் அரங்கேறிய ‘ஊழல் மகா காவியத்தை’ ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிடுகிறது. தேசியப் பங்குச் சந்தை உருவாக்கம் மும்பைப் பங்குச் சந்தை, பங்கு வர்த்தகம் மற்றும் வங்கிச் செயல்பாட்டு முறைகளில் ஏராளமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, மேம்பட்ட பங்குச்சந்தை வணிக முறைகளை உருவாக்க ஃபெர்வானியின் தலைமையில், ஒரு குழுவை அன்றைய ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மன்மோகன் சிங் நியமித்தார். அந்தக் குழுவின் பரிந்துரைகளின்பேரில், தேசியப் பங்குச் சந்தை என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிர்வாகம், பங்குச் சந்தை வணிகத்தை இணைய வழியே நடத்த முடிவுசெய்தது. இந்தப் பங்குச் சந்தை, இந்தியப் பங்குப் பரிவர்த்தனை...

கழகம் நடத்திய சட்டப் போராட்டம் வெற்றி: பெரியார் நூல்களை அரசே வெளியிடுகிறது

கழகம் நடத்திய சட்டப் போராட்டம் வெற்றி: பெரியார் நூல்களை அரசே வெளியிடுகிறது

பெரியாருடைய சிந்தனைகளை 21 மாநில, உலக மொழிகளில் வெளியிடு வதற்கு தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு வெளிவந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் மகிழ்ச்சியுடன் இதை வரவேற்கிறது. பெரியாருடைய நூல்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும், இந்தியா முழுவதும் பரவ வேண்டும். மக்களுக்கு அவை எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெரியார் திராவிடர் கழகம் நீண்ட போராட்டத்தை நடத்தியது. 28 தொகுப்பாக பெரியார் எழுத்து சிந்தனைகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டபோது அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் வந்தன. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் அந்த வழக்கைத் தொடர்ந்தது. அந்த வழக்கை பெரியார் திராவிடர் கழகம் எதிர்கொண்டது. அப்படி பெரியாருடைய நூல்களை வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் மேல் அமர்வு தெரிவித்துவட்டன. அந்த வழக்கு இப்போதும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது...

ஃபாரூக் நினைவு நாளில் கொளத்தூர் மணி பேச்சு – ‘சொர்க்கம்’ போவதற்கு அல்ல; தீண்டாமை ஒழிப்புக்கே மதம் மாறச் சொன்னார் பெரியார்

ஃபாரூக் நினைவு நாளில் கொளத்தூர் மணி பேச்சு – ‘சொர்க்கம்’ போவதற்கு அல்ல; தீண்டாமை ஒழிப்புக்கே மதம் மாறச் சொன்னார் பெரியார்

ஃபாரூக் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் தலைமை உரை. இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இங்கே வந்திருந்தால் கேள்விகளைக் கேளுங்கள்; நாங்கள் பதிலளிக்கத் தயார். எங்களைப் போன்ற சுயமரியாதைக்காரர்களுக்கு மத நம்பிக்கை இல்லை என்றும் தீண்டாமை ஒழிவதற்கு மட்டும் இஸ்லாமில் சேரலாம் என்பதே நான் கூறும் கருத்து என்றும் கூறினார் பெரியார். பொது மேடைகளில் பேசும் இஸ்லாமியர்கள்கூட மத மறுப்பாளர்களான எங்களுக்கும்இறைவனின் ஆசி கிடைக்கும் என்று பேசும்போதுகூட நாங்கள் அனுமதித்தே வந்திருக்கிறோம். தோழர் ஃபாரூக், கோவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல்பாட்டாளர். அவர் கொடூரமாக மத அடிப்படைவாதிகளால் மார்ச் 16, 2017இல் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பிப்.19 அன்று சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் 5ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் நடைபெற்றது. ஃபாரூக் கடவுள், மத, இறை மறுப்பாளர்; இஸ்லாத்தின் இறையியல் கொள்கையை உறுதியாக மறுத்தவர். ‘வாட்ஸ்...

‘காதலர் நாளில்’ மனநல மருத்துவர் சிவபாலன் விளக்கவுரை (2) சகிப்புத் தன்மையில்தான் குடும்ப வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது

‘காதலர் நாளில்’ மனநல மருத்துவர் சிவபாலன் விளக்கவுரை (2) சகிப்புத் தன்மையில்தான் குடும்ப வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது

காதல் உறவில் இருக்கும்போது வெளிப் படுத்திய உணர்வுகளைக் குடும்ப வாழ்க்கைக்கு வந்த பிறகு எதிர்பார்க்கக் கூடாது. பிரச்சினையே இல்லாத வாழ்க்கை எதுவும் கிடையாது; அதற்கு மரணிக்கத்தான் வேண்டும். கணவன்-மனைவி ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகிறார்கள்; இதில் பிரச்சினை, அந்த மனிதர்களிடம் இல்லை; அவர்களின் உறவுகளில்தான் இருக்கிறது. வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துப் போவது என்பதால் பிரச்சினைத் தீராது; சகித்துக் கொள்ளும் மனப்பான்மையில் தான் வாழ்க்கையின் வெற்றியே அடங்கியிருக்கிறது என்பதே உளவியல் ஆய்வாளர்களின் முடிவு என்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காதலர் நாள் (பிப். 14, 2022) விழாவில் மருத்துவர் சிவபாலன் விளக்கினார். வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணங்களைவிட, காதல் திருமணங்களில் ஏன் அதிக சிக்கல்கள் வருகிறது? ஏன் காதலித்து திருமணம் செய்தவர்கள் நீதிமன்றங்களில் அதிகமாக விவாகரத்திற்கு வருகிறார்கள்? வீட்டில் ஏற்பாடு செய்த திருமணங்களில் பிரச்சனை என்றால், பெற்றோர்கள் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள். “நாங்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தது தானே,...

தில்லை நடராசன் கோயில் மோசடிகள் – சந்தித்த வழக்குகள்

தில்லை நடராசன் கோயில் மோசடிகள் – சந்தித்த வழக்குகள்

தில்லை நடராசன் கோயில், தீட்சதர்களின் தனிச் சொத்தாகவே இதுவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்போடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோயில் பரப்பு 40 ஏக்கர்; 2700 ஏக்கர் நிலம்; பல கோடி மதிப்புள்ள நகைகள்; உண்டியல் வசூல் அனைத்துமே தீட்சதர்கள் கட்டுப்பாட்டில்தான். தில்லை தீட்சதர்கள் தனி சாம்ராஜ்யம் நடத்துகிறார்கள். பல்வேறு வழக்குகள், படுகொலைகள், தற்கொலைகளோடு தொடர் புடையது தில்லை நடராசன் கோயில். கோயில் பார்ப்பனர் கொள்ளைகளை எதிர்த்து பக்தர்களே அரசு கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது வரலாறு. 1888இல் நீதிபதி முத்துசாமி அ ய்யர் மற்றும் பாஷ்யம் அய்யங்கார் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றும், அரசுக் கட்டுப்பாட்டில் வரக் கூடாது என்று எதிர்ப்பவர்கள், தண்டனைச் சட்டத்தை எதிர்க்கும் திருடர்களைப் போன்றவர்கள் என்றும் கூறினர். (‘இந்து’ ஆங்கில நாளேடு 13.1.2014 தலையங்கத்தில் இத்தகவலைப் பதிவு செய்துள்ளது) பனகல் அரசர் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்து 1927இல் அமுலுக்கு...

‘காதலர் நாளில்’ மனநல மருத்துவர் சிவபாலன் விளக்கவுரை திருமணத்துக்குப் பிறகு தான் உண்மையில் காதலின் தேவையே தொடங்குகிறது

‘காதலர் நாளில்’ மனநல மருத்துவர் சிவபாலன் விளக்கவுரை திருமணத்துக்குப் பிறகு தான் உண்மையில் காதலின் தேவையே தொடங்குகிறது

காதல் குறித்து பெரியார் கூறியது போல் வேறு எந்த தத்துவ சிந்தனையாளர்களும் கூறியது இல்லை. யாரோ ஒருவர் சொல்லிச் சென்றதை கண்முடித்தனமாக பின்பற்றி காதலைப் புனிதப்படுத்துகிறோம். அன்பு, நட்பு தவிர, காதலில் எந்தப் புனிதமும் இல்லை. பிப். 14 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காதலர் நாள் விழாவில் மனநல மருத்துவர் சிவபாலன், காதல்  – காதலுக்குப் பிறகான திருமண வாழ்க்கையில் சந்திக்கும் பிரச் சினைகள் குறித்த ஆழமான உளவியல் சிக்கல்களை விளக்கினார். அவரது உரை: ஒரு மனநல மருத்துவராக பல நிகழ்வு களில் கலந்து கொண்டிருக்கிறேன். பல கூட்டங்களில் பேசியுள்ளேன். அவைகளில் பொதுவாக, மனதை எப்படி அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்? மன அழுத்தம் இல்லாமல் வாழ்வது எப்படி? இப்படியான தலைப்புகள் தான் அதிகம் இருக்கும். காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் மத்தியில் பேசுவது ஒரு தனி அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கும் அப்படியான...

கோகுல்ராஜ் கொலை: கழகம் எடுத்த தொடர் போராட்டங்கள்

கோகுல்ராஜ் கொலை: கழகம் எடுத்த தொடர் போராட்டங்கள்

தலித் சமூகத்தைச் சார்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், ‘கவுண்டர்’ சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்த குற்றத்துக்காக கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த சில ஜாதி வெறியர்கள் கோகுல்ராஜ் தலையைத் துண்டித்து, பள்ளிப்பாளையம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே தண்டவாளத்தில் வீசி ‘தற்கொலை’ என்று ஏமாற்ற முயன்றனர். திராவிடர் விடுதலைக் கழகம் உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்கத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது. ஜாதிவெறிக் கும்பலை உடனே கைது செய்து வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை விடுத்தார். (‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜூலை 2, 2015) வழக்கில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் என்பவர், தலைமறைவாகி காவல்துறைக்கு சவால் விடும் ‘வாட்ஸ்அப்’ பதிவுகளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, 19.7.2015இல் தர்மபுரியில் கூடிய கழகச் செயலவைக் கூட்டத்தில், காவல் துறையில் ஊடுறுவியுள்ள ஜாதிய மனநிலையைக் கண்டித்தும் அவர்களின் அலட்சியப் போக்கால் தான் தேடப்படும் குற்றவாளிகள், காவல்துறைக்கு சவால் விடுகின்றனர்...

பெரியாரை விமர்சிக்கும் தமிழ்த் தேசியர்கள் வாதங்களுக்கு ஆணித்தரமாக மறுக்கும் நூல் (3) விடுதலை இராசேந்திரன்

பெரியாரை விமர்சிக்கும் தமிழ்த் தேசியர்கள் வாதங்களுக்கு ஆணித்தரமாக மறுக்கும் நூல் (3) விடுதலை இராசேந்திரன்

ம.பொ.சி.யின் ஆர்.எஸ்.எஸ். குரல். பெரியார் பேசிய பெண்ணுரிமை உதிரி வாதமா? ஈழத் தமிழர் விடுதலைக்கும் திராவிட இயக்கத்துக்கும் இடையே வரலாற்றுப்பூர்வ உறவுகள் என்ன? ப. திருமாவேலன், ‘இவர்தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ – தொகுப்பு நூல் குறித்த ஒரு பார்வை. ப. திருமாவேலனின், “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” நூலின் இரண்டாம் தொகுதி மொழி, மொழி வழி மாகாணப் பிரிவினையின் வரலாறுகளை விளக்குகிறது. ம.பொ.சி. முன்மொழிந்தது – இந்துத்துவத் தமிழ்த் தேசியம், குணா முன் மொழிந்தது – இறையியல் தமிழ்த் தேசியம், பெ. மணியரசன் முன் மொழிந்தது – நிலப்பிரபுத்துவ தமிழ்த் தேசியம் என்று சான்று களுடன் நிறுவுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் திருவிதாங்கூர், கொச்சி என்ற இரண்டு பகுதிகளும் மன்னர்கள் ஆட்சியின் கீழ் சமஸ்தானங்களாக இருந்தன. மொழி வழி மாகாணப் பிரிவினையின் போது, திருவிதாங்கூர் இணைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக பெரியார் எழுதிய ஏராளமான அறிக்கைகளை தேதி வாரியாகப்...

தீட்சதர்கள் அத்துமீறல்களைக் கண்டித்து தில்லையில் ஆர்ப்பாட்டம்

தீட்சதர்கள் அத்துமீறல்களைக் கண்டித்து தில்லையில் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் நடராசர் கோவிலில், சிற்றம்பல மேடையில் நின்று வழிபாடு நடத்திய பெண்ணை தீட்சிதர்கள் தாக்கினார்கள். தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிதம்பர நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் அனைத்து சாதியினரையும் வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி, மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பாக சிதம்பரம், காந்தி சிலை அருகில் பிப்.28ஆம் தேதி மாலை 3 மணியளவில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். கழகத் தலைவர் செய்தியாளர்களிடத்தில், “தமிழ்நாட்டில், அறநிலையத் துறைக்கு கட்டுப்படாத, அரசுக்கு கட்டுப்படாத எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத இடமாக இந்த சிதம்பரம் நடராசர் கோவில் இருந்து வருகிறது. இங்கு மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல சமய உரிமைகளும் இங்கு மீறப்பட்டிருக்கிறது. வழிபாட்டுக்குச் சென்றவர்கள் தாக்கப்படுகிறார்கள், தேவாரம் பாட சென்றவர் தாக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் சிதம்பரம் நடராசர் கோவிலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வர வேண்டும்....

தமிழை இலக்கியத்துக்காக அல்ல, தமிழர்களுக்காக தாங்கிப் பிடித்தவர் பெரியார் (2) – விடுதலை இராசேந்திரன்

தமிழை இலக்கியத்துக்காக அல்ல, தமிழர்களுக்காக தாங்கிப் பிடித்தவர் பெரியார் (2) – விடுதலை இராசேந்திரன்

தன்னுடன் கருத்து முரண்பட்ட சகஜானந்தா, டி.கே. சிதம்பரனார் போன்ற அறிஞர்களுடன் நட்பு பாராட்டி உரையாடினார் பெரியார். தீவிர சிவபக்தர் ‘கா.சு.’ பிள்ளை இறுதிக் காலத்தில் மாதந்தோறும் பணம் அனுப்பி உதவினார் பெரியார். தேவநேயப் பாவாணரின் நூலை சுமந்து சென்று கூட்டங்களில் விற்றார். திராவிட மொழி ஞாயிறு என்ற பட்டத்தை வழங்கி யவர் பெரியார். சில தமிழ் தேசியர்கள் திராவிடம் என்ற சொல்லை தாங்களாகவே நீக்கி ‘மொழி ஞாயிறு’ என்று சுருக்கி விட்டனர்.   ப. திருமாவேலன், ‘இவர்தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ – தொகுப்பு நூல் குறித்த ஒரு பார்வை. நான்காவது அத்தியாயம் – பெரியாருடன் இணைந்து பணியாற்றிய 50 புலவர்களுடன் பெரியாருக்கு இருந்த நெருக்கமான உறவுகளை விரிவாக அலசுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த கா. சுப்பிரமணிய பிள்ளை (கா.சு.பிள்ளை) மிகச் சிறந்த தமிழ் அறிஞர்; சட்டம் படித்தவர். நீதிபதி பதவிக்கு தகுதியிருந்தும் நீதிக்கட்சியில் ஈடுபாடு காட்டியதால் பதவி...

“வரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்”

“வரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்”

திருப்பூர் தமிழர் எழுச்சி விழாவில் அக்.2, 2005 அன்று காலை-மாலை நிகழ்ச்சிகளில் தலித் சுப்பையா குழுவினரின் ‘விடுதலைக் குரல்’ எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நிகழ்ச்சியில் பாடல்களுக்கிடையே தோழர் தலித் சுப்பையா, அறிவார்ந்த சிந்தனைகளை முன் வைத்தார். அவர் பேசியவைகளிலிருந்து ஒரு தொகுப்பு. தோழர்களே! பெரியார் மரணமடைந்தபோது அதற்கு, தமிழ்நாட்டில் இரங்கல் தெரிவிக்காத அமைப்புகள் இரண்டு. ஒன்று சங்கர மடம்; மற்றொன்று அகில இந்திய பார்வர்டு பிளாக். சங்கரமடம், நமது இன எதிரி. எனவே அது இரங்கல் தெரிவிக்காதது வியப்பு அல்ல. ஆனால் நமது மண்ணின் மைந்தர்களான கள்ளர், தேவர், மறவர் சமூகத்தினர் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை? இதற்கான வரலாற்றுக் காரணத்தை நான் தெரிவிக்க விரும்புகிறேன். 1957இல் முதுகளத்தூரில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான சேரிகள் எரிக்கப்பட்டன. அது ஒரு சாதிப் போர். அப்போது முதல்வராக இருந்தவர் பெரியவர் காமராசர். மாபெரும் மனிதர். எங்களுடைய கல்விக்கு அவர்தான் அடித்தளமிட்டவர். சாதிக் கலவரத்தை...

வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்; ஒன்றிய ஆட்சியின் நிதி ஆயோக் கூறுகிறது

வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்; ஒன்றிய ஆட்சியின் நிதி ஆயோக் கூறுகிறது

தமிழ்நாட்டை திராவிட ஆட்சி சீர்குலைத்துவிட்டது என்று சில தமிழ்த் தேசிய அமைப்புகளும், கழகங்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று பாஜகவினரும் பேசி வருகின்றனர். இதற்கு பதிலடி தருகின்ற வகையில் ஒன்றிய ஆட்சியின் நிதி ஆயோக் என்ற அமைப்பு, இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பிலும், வளர்ச்சியிலும் தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்று நிற்கிறது என்று அண்மையில் வெளியிட்ட மூன்றாவது அறிக்கையில் கூறி இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரையை நிதி ஆயோக் அமைப்பு தன்னுடைய அறிக்கையில் பதிவு செய்து இருக்கிறது. இன்றைய இந்து ஆங்கில நாளேட்டில் பிப்ரவரி 11,2022 இது குறித்து வெளிவந்த கட்டுரையின் சுருக்கமான கருத்துக்களை கீழே தருகிறோம். நிதி ஆயோக் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள். 1)         வறுமை ஒழிப்பில் கேரளா, ஆந்திரா மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ்நாடு மூன்று புள்ளிகள் கூடுதலாக பெற்று முதலிடத்தில் நிற்கிறது. கேரளா 83, தமிழ்நாடு 86 புள்ளிகள்....

பெரியாரியலுக்கு – ஒரு வரலாற்று ஆவணம் (1) – விடுதலை இராசேந்திரன்

பெரியாரியலுக்கு – ஒரு வரலாற்று ஆவணம் (1) – விடுதலை இராசேந்திரன்

பெரியார் தமிழ்ப் புலவர்களை இனம் சார்ந்து அரவணைத்தார். அவர்கள் இருட்டடிப்புக்குள்ளாக்கப் படுவதைக் கண்டு வருந்தினார். தமிழறிஞர்களின் அறிவாற்றலை மனந்திறந்து பாராட்டினார். தமிழ் நூல்களை தனது ‘குடிஅரசு’ ஏட்டில் அறிமுகப்படுத்தினார்.   ப. திருமாவேலன், ‘இவர்தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ – தொகுப்பு நூல் குறித்த ஒரு பார்வை. ப. திருமாவேலன் இரண்டு தொகுதிகளாக 1579 பக்கங்களுடன் வெளி வந்திருக்கிற நூல் “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” என்ற ஆவணம், பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசுவோர்க்கு பதில் தருவதே இந்த நூலின் நோக்கம் என்று நூலாசிரியர் ப. திருமாவேலன் கூறினாலும் நூலின் உள்ளடக்கத்தை அப்படிச் சுருக்கி விடக் கூடாது. பெரியார் சிந்தனை மற்றும் தத்துவங் களுக்கான ஒரு வரலாற்று ஆவணமாக இது வெளி வந்திருக்கிறது என்றே கூற வேண்டும். ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள் படைக்கும் நூல்களைவிட பத்திரிகையாளர் எழுதும் நூல்கள் மக்களிடம் கருத்துகளைக் கொண்டு சேர்ப்பதில்...

தி.வி.க.வின் புதிய 52 மின்னூல்கள்

தி.வி.க.வின் புதிய 52 மின்னூல்கள்

பல்வேறு காலகட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடுகள், பரப்புரைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் தலைவர்களால் பேசப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் அவ்வப்போது எழுத்து வடிவில் வெளியிடுவது உண்டு. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் முழக்கம் இதழ்களில் வெளிவந்த பேச்சுக்கள் மற்றும் செய்திகளின் தொகுப்பு பல்வேறு தலைப்புகளில் திரட்டப்பட்டு இளைய தலைமுறை மீண்டும் பெரியாரியலை உள்வாங்கி கொள்ள கழகத் தலைமையின் வழிகாட்டுதலில் இணைய தளப் பிரிவு தோழர்களால் மின்னூலாக்கி பதிவேற்றி உள்ளோம். கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம். மின்னூல்கள் தொகுப்பு திவிக வெளியீடுகள் பட்டியல் : அணுஉலையின் ஆபத்து –- திவிக வெளியீடு; இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன?  – அப்துல் சமது; இராஜராஜசோழனின் கதை என்ன – திவிக வெளியீடு; இளைய தலைமுறை பெரியாரை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? –...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கம் (3) பெரியார் காண விரும்பியது மதமற்ற சமுதாயத்தைத் தான்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கம் (3) பெரியார் காண விரும்பியது மதமற்ற சமுதாயத்தைத் தான்

ஜாதி இழிவு ஒழிய மதமாற்றம் குறித்துப் பேசினாலும் பெரியார் விரும்பியது மதம் அற்ற ஒரு சமுதாயத்தைத்தான் என்று கழகத் தலைவர் குடியாத்தம் நவம். 07, 2021இல் நடந்த நூல் ஆய்வுக் கூட்டத்தில் குறிப்பிட்டார். அவரது உரையின் தொடர்ச்சி. காந்தியுடன் பெரியார் உரையாடலை நடத்தினார். “இந்து மதத்தை திருத்தலாம் என்று கூறுகிறீர்கள். ஆனால், அதை பின் வருபவர்களும் செய்வார்களே, நீங்கள் அவர்களுக்கு (பார்ப்பனர்கள்) ஆதரவாக இருக்கும் வரை விட்டு வைத்திருக் கிறார்கள். கொஞ்சம் எதிராக திரும்பினாலும்கூட விட்டு வைக்க மாட்டார்கள்” என்று பெரியார் 1927இல் கூறினார். பின் அதுதான் நடந்தது. அப்படிப்பட்ட இந்து மதத்தின் மீது வருகிற கோபம், அதன் பின் வரும் காலங்களில் இந்து மதத்தின் தீமைகளை, சூழ்ச்சிகளை பதிவு செய்து வருகிறார். அரசியல் சட்டத்திலும் புகுந்து கொண்டதே என்றெல்லாம் கோபித்துக் கொண்டார். அதை யொட்டித்தான் சட்ட எரிப்புப் போராட்டத்தையே நடத்துகிறார். இதை காரணமாக வைத்து சிலர் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இடைவெளி...

முற்றுகை; இரயில் மறியல்; ஆர்ப்பாட்டங்கள் ஆளுநருக்கு எதிராகக் கழகம் போர்க்கோலம்

முற்றுகை; இரயில் மறியல்; ஆர்ப்பாட்டங்கள் ஆளுநருக்கு எதிராகக் கழகம் போர்க்கோலம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட’ நீட் விலக்கு’ மசோதாவை, திருப்பி அனுப்பிய,  ஆளுநரைக் கண்டித்தும், ஆளுநரை பதவி விலகக் கோரியும், கழக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை : 04.02.2022 அன்று மாலை 4 மணியளவில் சென்னை சின்னமலை இராஜீவ் காந்தி சிலை அருகில், ஆளுநர் மாளிகை செல்லும் வழியில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை இராசேந்திரன் : ஆர்ப்பாட்டத்தில், கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செய்தியாளர் களிடத்தில், “நீதிபதி ஏ.கே இராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு குழுவை நியமித்து அந்தக் குழு நீட் தேர்வு குறித்து, பல மருத்துவர்களை, சமூகவியலாளர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி இந்த தேர்வு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானது என்று பரிந்துரை வழங்கியுள்ளது. ஆனால் ஆளுநர் கூறுகிறார், ‘இந்த நீட் தேர்வை இரத்து செய்தால், ஏழை எளிய மாணவர்களும், கிராமப்புற...

மருத்துவக் கட்டமைப்பில் ‘திராவிடன் மாடலு’க்குக் கிடைத்த மகத்தான வெற்றி

மருத்துவக் கட்டமைப்பில் ‘திராவிடன் மாடலு’க்குக் கிடைத்த மகத்தான வெற்றி

தமிழ்நாட்டில் சுகாதார கட்டமைப்பு வசதிகள், ஏனைய மாநிலங்களை விட வெற்றிகரமாக செயல்படுவதற்கான காரணங்கள் என்ன ? கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் “திராவிடன் மாடல்” அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூகநீதிக் கொள்கைகளே இந்த வெற்றியை ஈட்டித் தந்திருக்கின்றன என்பதை விளக்கி, இந்து ஆங்கில நாளேட்டில்(ஜனவரி 27, 2022) சிறப்பான கட்டுரை ஒன்று வெளி வந்திருக்கிறது. சென்னை அரசு மருத்துவமனை யில் மருத்துவராகவும், மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களாகவும் பணியாற்றும் டாக்டர் சக்திராஜன் இராமநாதன் (சிறுநீரகத் துறை), டாக்டர் சுந்தரேசன் செல்லமுத்து (புற்றுநோய் கதிர்வீச்சுத் துறை) ஆகியோர் இணைந்து அக்கட்டுரையை எழுதியுள்ளனர். மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவீத ஒதுக்கீடு சட்டப்படி செல்லத்தக்கதே என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தகுதி குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களின் வெளிச்சத்தில் இக்கட்டுரை எழுதப்பட்டு இருக்கிறது. திராவிடம் நாட்டையே கெடுத்துவிட்டது என்ற கூக்குரல்கள் அர்த்தமற்றது என்பதற்கான சான்றாதாரங்கள் அவ்வப்போது வெளி...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கம் (2) சர்ச்சில் – மெக்காலேவை பார்ப்பனர்கள் எதிரிகளாக சித்தரித்தது ஏன்?

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கம் (2) சர்ச்சில் – மெக்காலேவை பார்ப்பனர்கள் எதிரிகளாக சித்தரித்தது ஏன்?

சென்ற இதழ் தொடர்ச்சி   ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுதந்திரம் தரலாம்; ஆனால் இந்தியாஹவக்கு தருகிற சுதந்திரம் அந்நாட்டு 65 மில்லியன் தாழ்த்தப்பட்ட மக்களை பார்ப்பனர்களுக்குஅடிமைகளாகவே பயன்படும் என்று சர்ச்சில் பேசினார். “வைக்கம் போராட்ட வெற்றி விழா நடக்கிறது. பெரியார் 23.11.1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறுகிறார். 27ஆம் தேதி வெற்றி விழா நடைபெறுகிறது. அதில் பெரியார் தான் தலைமை தாங்குகிறார். அந்த மாநாட்டிற்கு வெளியில் இருந்து வந்து கலந்து கொண்டது பெரியார் ஒருவர்தான். வைக்கத்திற்காக இரண்டு முறை சிறை சென்றவரும் பெரியார் தான். கிரிமினல் வழக்கில் கைதானவரும் பெரியார் தான். மற்றவர்களெல்லாம் சிவில் வழக்கில் தான் கைதானார்கள். பெரியாரை விலங்கு போட்டு வைத்திருந்தார்கள். இதை பற்றி பழ.அதியமான் ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நடந்த பரப்புரை தான் மதமாற்றத்தில் கொண்டு வந்து விட்டது பெரியாரை. இஸ்லாமிற்கு மாறலாம் என்று இரண்டு நிகழ்வுகளில் கூறுகிறார். ஒன்று கண்ணனூரில் நடைபெற்ற கூட்டம். மற்றொரு மாநாட்டிலும்...

குடியாத்தத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு பெரியாருக்கும் பவுத்தத்துக்கும் உள்ள உறவு

குடியாத்தத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு பெரியாருக்கும் பவுத்தத்துக்கும் உள்ள உறவு

7.11.2021 அன்று குடியாத்தத்தில் ‘நான் இந்துவாக இறக்கப் போவதில்லை’ என்ற தலைப்பில் பெரியார் உரைகளின் தொகுப்பு குறித்து திறனாய்வுக் கூட்டம் நடந்தது. ‘தலித் முரசு – காட்டாறு’ இணைந்து வெளியிட்ட நூல் இது. இதில் பங்கேற்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையிலிருந்து. “நான் இந்துவாக இறக்கப் போவதில்லை” என்ற தலைப்பின் மேல் சிலருக்கு முரண்பட்ட கருத்து உண்டு. வேறு தலைப்பை வைத்திருக்க லாமே என்று. “இந்து மதத்தை வேரறுப்போம்” என்று வைத்திருக்கலாமே என்றும் கூறினார்கள். புத்தகத்தில், “நான் இந்துவாக இறக்கப் போவ தில்லை” என்று 1926இல் கூறியதாகவும், அம்பேத்கர் 1935இல் கூறியதாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதில் பெரியார் போகிற போக்கில் கூறிய கருத்து. ஆனால், அம்பேத்கர் திட்டவட்டமாக மாற வேண்டும் என்று அறிவித்த கருத்து. இரண்டையும் இணைத்துப் பார்ப்பதில் தான் எனக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இருவரையும் இணைத்து பார்ப்பதற்கு என்றே சேர்த்ததாக தெரிந்தது. சேஷாசலமாக பிறந்து, தமிழ்...

இடஒதுக்கீடு வரலாற்றில் புதிய மைல்கல் தகுதி, திறமை, புரட்டு வாதங்களைத் தகர்த்து எறிந்தது உச்சநீதிமன்றம்

இடஒதுக்கீடு வரலாற்றில் புதிய மைல்கல் தகுதி, திறமை, புரட்டு வாதங்களைத் தகர்த்து எறிந்தது உச்சநீதிமன்றம்

மருத்துவப் படிப்பு – உயர்மட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதே என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா கடந்த ஜன.20, 2022இல் வழங்கி யுள்ளனர். இது வரை வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டுக்கான தீர்ப்புகளைவிட இது முக்கியத்துவம் பெறுவதோடு இடஒதுக்கீடுக்கு எதிராக முன் வைக்கப் பட்டு வந்த வாதங்களை தகர்த்தெறிந் திருக்கிறது. தீர்ப்பின் முக்கிய பகுதி: பொதுத் தேர்வுகள் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் போட்டி யிடுவதற்கான சம வாய்ப்புகளை உருவாக்கு கிறது என்றாலும் இதில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதன் வழியாக வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவது உறுதி செய்யப்படு கிறது. எப்படி என்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இந்த வாய்ப்புகளின் வழியாகவே பயனடைய முடிகிறது. இந்தப் பயன் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்து விடாமல் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றனர். அதற்கு அடிப்படையான காரணம், சமூகத் தடைகள்; அதாவது நமது சமூகக் கட்டமைப்பு இந்தப் பயன்களை கிடைக்க விடாமல் தடுத்து...

அமெரிக்க ஏட்டில் ‘பார்ப்பனர்’ கூக்குரல்! ஆதாரங்களுடன் மறுக்கிறார், அமைச்சர் பி.டி.ஆர்.

அமெரிக்க ஏட்டில் ‘பார்ப்பனர்’ கூக்குரல்! ஆதாரங்களுடன் மறுக்கிறார், அமைச்சர் பி.டி.ஆர்.

திராவிட இயக்கம் மற்றும் சோஷலிசக் கொள்கை களால் தமிழ்நாட்டிலிருந்து ‘பிராமணர்கள்’ துரத்தப் பட்டார்கள் என்று ‘வால்ஸ்ட்ரீட் ஜெர்னல்’ ஏட்டில் துமா என்ற பார்ப்பனர் எழுதிய கட்டுரையை மறுத்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். சமூக நீதி இயக்கம், அனைவரையும் உள்ளடக் கியது. அதன் பயன்களை இன்றைக்குத் தமிழ்நாடு அடைந்துள்ளது. மக்களுடைய அனுபவங்களால் மட்டுமல்லாது, அசைக்க முடியாத தரவுகளின் அடிப் படையிலும் இது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழ்நாட்டைப் பற்றி வேறொரு சித்திரமும் தீட்டப்படுகிறது. சமூக நீதி இயக்கமான திராவிட இயக்கத்தால் தமிழ்ப் பிராமணர்கள் துரத்தப்பட்டார்கள் என்ற பொய் பிரச்சாரமே அது! அமெரிக்காவின் மூன்று பெரும் பத்திரிகைகளில் ஒன்றான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ அப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ‘கமலா ஹாரிஸ் தனது தாயின் பின்னணியைப் பற்றிச் சொல்லாதது ஏன்?’ என்ற தலைப்பில் துமே என்பவர் எழுதியதே இப்படி ஒரு கட்டுரையை...

ஜாதி ஒழிப்புக்கான ஓர் உரையாடல் விடுதலை இராசேந்திரன்

ஜாதி ஒழிப்புக்கான ஓர் உரையாடல் விடுதலை இராசேந்திரன்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில்  வெளிவரும் ‘அணையா வெண்மணி’ காலாண்டிதழில் வெளியிடப்பட்ட கட்டுரை. உற்பத்தி உறவுகளில் மாற்றங்கள்; வாழ்வியல் மாற்றங்கள்; அறிவியல் சாதனைகளைப் பயன்படுத்துவதில் பாய்ச்சல்; வேகமான கல்வி வளர்ச்சி; அதிகார மிக்க பதவிகள்; அரசியல் அதிகாரங்கள் – இவ்வளவையும் கட்டுடைத்து, ஜாதி அடுக்கு இப்போதும் தன்னை தகவமைத்துக் கொண்டே இருக்கிறது. புதிய புதிய உருமாற்றங்களை எடுத்து மனித சமூகத்தைக் ‘கவ்வி’ நிற்கிறது. ஜாதியக் கட்டமைப்புக்கான சமூக வேர்கள் குறித்து தமிழ்நாட்டில் பேசப்பட்ட அளவுக்கு வேறு எங்கும் பேசப்பட்டதே இல்லை. பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலேயே இது குறித்த விவாதங்களும் போராட்டங்களும் தொடங்கிவிட்டன. ‘சுயராஜ்யம்’ பேசுகிறவர்கள், சுயமரியாதையை மறுக்கும் ஜாதியத்தை பார்ப்பனியத்தை ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்விகள் அன்றைக்கே பெரியாரும் – அம்பேத்கரும் கேட்டனர். அயோத்திதாசரும் அவர்களுக்கு முன்பு இதே கேள்வியைத் தான் கேட்டார். வேத காலத்தில் உருவாக்கப்பட்டது. வர்ணாஸ்ரமம், அதுகூட அப்போது பிறப்பின் அடிப்படையில் இல்லை என்று அம்பேத்கர் உள்ளிட்ட...

சமூக நீதித் தத்துவத்தின் முன் இந்துத்துவா அரசியல் தோற்கிறது உ.பி. தேர்தல் களம்: நடப்பது என்ன?

சமூக நீதித் தத்துவத்தின் முன் இந்துத்துவா அரசியல் தோற்கிறது உ.பி. தேர்தல் களம்: நடப்பது என்ன?

உ.பி. தேர்தல் களத்தில் இந்துத்துவா அரசியலை ஆளும் பா.ஜ.க.வும் எதிர்கட்சிகளும் பின்னுக்குத் தள்ளி விட்டு  ‘சமூகநீதி’ அரசியலையே முன்னிறுத்தி வருகின்றன. இந்துத்துவா அரசியலின் ‘சோதனைக் களமாக’ செயல்பட்டது உ.பி.யில் ஆதித்யநாத் தலைமை யிலான பா.ஜ.க. ஆட்சி. ஆனால் படுதோல்வியை சந்தித்து வருகிறது -‘இந்துத்துவா’ அரசியல். இந்துக்களை மதத்தின் அடிப்படையில் ஓரணியில் திரட்ட இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். தத்துவம். விரைவில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க விருக்கும் மாநிலம் உ.பி. இஸ்லாமிய வெறுப்பை ஊதி விட்டாலும் இந்துக்களை அணி திரட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆதித்ய நாத் ஆட்சி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி, பா.ஜ.க.வி லிருந்து ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர்களும் விலகி வருவது பா.ஜ.க.வையும் சங்பரிவாரங்களையும் அதிர்ச்சிக் குள்ளக்கியுள்ளது. ஆதித்யநாத் ஒரு பார்ப்பன ரல்லாத உயர்ஜாதியைச் சேர்ந்தவர். அம்மாநில பார்ப்பனர்களும் பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராகவே அணி திரண்டிருக்கின்றனர். கடந்த ஜனவரி...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு (2) பெண்கள் இடஒதுக்கீடு; திருமண வயது உயர்வு பிரச்சினைகளில் கழகம் பெரியாரியப் பார்வையில் எடுத்த தனித்துவ நிலைப்பாடுகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு (2) பெண்கள் இடஒதுக்கீடு; திருமண வயது உயர்வு பிரச்சினைகளில் கழகம் பெரியாரியப் பார்வையில் எடுத்த தனித்துவ நிலைப்பாடுகள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் டிசம். 24, 2021 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய தலைமை உரையின் கடந்த இதழ் தொடர்ச்சி. அனைத்து மதத்தினருக்குமான பொதுவான பண்டிகையாக இருந்தும்கூட அரசு அலுவலகங் களில் கொண்டாட வேண்டாம்  என்ற  கேரளா  அரசு ஆணையை வரவேற்று எழுதுகிற போது பல செய்திகள் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த் தலையங்கத்தில் பகிரப்படுகிறது. குஜராத்தில் ஒரு வழக்கிற்காக 2006இல் ஒரு தீர்ப்பு வருகிறது. பொது இடங்களில் இருக்கின்ற கோவில்களை பற்றிய தீர்ப்பு அது. இதுவரை கட்டியிருக்கும் கோவில்கள் இருக்கட்டும் இனிமேல் புதிய கோவில்கள் கட்டக் கூடாது. திரும்பவும் அதற்கு 2013இல் ஒரு தீர்ப்பு, 2018இல் ஒரு தீர்ப்பு என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் கோபால கவுடா என்று ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி கொஞ்சம் முற்போக்காக சிந்திக்கின்ற ஒரு நீதிபதியாக இருந்தார். அவரோடு அருண் மிஸ்ரா இருவரும்...

திரிபு வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு பெரியார் இஸ்லாமியர்களை எதிர்த்தாரா?

திரிபு வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு பெரியார் இஸ்லாமியர்களை எதிர்த்தாரா?

கடந்த சில மாதங்களாக பெரியாரை இஸ்லாமியருக்கு எதிரானவராக சித்தரிக்கும் ஒரு பரப்புரையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப் பாளர் சீமான் இறங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘அறிவு ஜீவி’யாக அறியப்படும் ஒருவர், 25 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி பெரியாருக்கு எதிரான ஒரு இயக்கத்தைத்  தொடங்கும் முயற்சியில் இறங்கி, பிறகு தோல்வி யடைந்து  தனது குரலை மாற்றிக் கொண்டார். வேடிக்கை என்னவென்றால் அண்மையில்தான் சீமான் இஸ்லாமியர்களுக்கு ‘நீலிக் கண்ணீர்’ வடிக்கிறார். பெரியார் பேசிய ‘திராவிடர்’ என்ற கோட்பாட்டுக்கு அடிப்படையே பார்ப்பனரால் வஞ்சிக்கப்பட்ட சூத்திரர், ஆதி சூத்திரர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை ஒரே அணியாக அடையாளப்படுத்தி பார்ப்பனர்களை தனிமைப்படுத்துவதுதான். சீமான் பேசும் ‘தமிழர்’ என்ற அடையாளத்துக்குள் தமிழ்  பேசும் பார்ப்பனர்களும் நாங்களும் தமிழர் என்று ஊடுறுவுகிறார்கள். பார்ப்பன வர்ணாஸ்ரமக் கொடுமையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் சுயமரியாதை வர்ணாஸ்ரம எதிர்ப்புப் போரில் ‘பிராமணர்’களும் ஊடுறுவி விட்டால் போராட்டத்தின் நோக்கமே சிதைந்து ஒழிக்கப்படும் என்பதால் பெரியார் திராவிடர் அடையாளத்தைத் தேர்வு செய்தார்....

இடஒதுக்கீடு வரலாற்றில் புதிய மைல்கல் தகுதி, திறமை, புரட்டு வாதங்களைத் தகர்த்து எறிந்தது உச்சநீதிமன்றம்

இடஒதுக்கீடு வரலாற்றில் புதிய மைல்கல் தகுதி, திறமை, புரட்டு வாதங்களைத் தகர்த்து எறிந்தது உச்சநீதிமன்றம்

மருத்துவப் படிப்பு – உயர்மட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதே என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா கடந்த ஜன.20, 2022இல் வழங்கி யுள்ளனர். இது வரை வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டுக்கான தீர்ப்புகளைவிட இது முக்கியத்துவம் பெறுவதோடு இடஒதுக்கீடுக்கு எதிராக முன் வைக்கப் பட்டு வந்த வாதங்களை தகர்த்தெறிந் திருக்கிறது. தீர்ப்பின் முக்கிய பகுதி: பொதுத் தேர்வுகள் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் போட்டி யிடுவதற்கான சம வாய்ப்புகளை உருவாக்கு கிறது என்றாலும் இதில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதன் வழியாக வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவது உறுதி செய்யப்படு கிறது. எப்படி என்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இந்த வாய்ப்புகளின் வழியாகவே பயனடைய முடிகிறது. இந்தப் பயன் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்து விடாமல் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றனர். அதற்கு அடிப்படையான காரணம், சமூகத் தடைகள்; அதாவது நமது சமூகக் கட்டமைப்பு இந்தப் பயன்களை கிடைக்க விடாமல் தடுத்து...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் கழக ஏட்டின் தலையங்கங்கள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் கழக ஏட்டின் தலையங்கங்கள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் தலையங்கங்கள் வரலாற்று ரீதியான பதிவுகளையும் கழக நிலைப்பாடுகளையும் நினைவூட்டுகின்றன என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். டிசம். 24, 2021 அன்று சென்னையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமையேற்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்டியமைக்கப் பட்டது. அப்போது, ‘பெரியார் காலத்து தமிழ் நாட்டை உருவாக்குவோம்’ என்பதைத் தான் இலட்சியமாக வைத்து தொடங்கினோம். பகுத்தறிவை முதன்மையாகக் கொள்ளாமல், ஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு, கலந்து பேசி இந்த இயக்கத்தைத் தொடங்கினோம். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார், பெரியாரின் சுயமரியாதை இயக்க காலத்து சிக்கல்கள் வேறு, தற்போது சமுதாயத்தில் நிலவும் சிக்கல்கள் வேறு’ என்று அதுபோல  பெரியார் காலத்தில் மரண தண்டனை சிக்கல்கள் இல்லை. சுற்றுச் சூழல்...

ஊரடங்குக் கட்டுப்பாடுகளுக்கிடையே கழக செயல்பாடுகள் 2021இல் கழகம் கடந்து வந்த பாதை

ஊரடங்குக் கட்டுப்பாடுகளுக்கிடையே கழக செயல்பாடுகள் 2021இல் கழகம் கடந்து வந்த பாதை

2020ஆம் ஆண்டைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டிலும் கொரானா பாதிப்புகளால் மக்கள் கூடுகை தடை செய்யப்பட்ட சூழலில் திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் சந்திப்பு இயக்கங்களையும் கருத்தரங்குகள் – பொதுக் கூட்டங்களையும் ஏனைய இயக்கங்களைபோல் நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அவ்வப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்ட நிலையில் கழக நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனாலும் இணையம் வழியாகக் கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. கூட்டமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களிலும் கழகம் தனியாக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின. கொரானா மோசமான நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையானதால் அச்சகங்கள் இயங்காத நிலையில் 2021, மே 6ஆம் தேதி முதல், ஜூலை 1, 2021 வரை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏழு இதழ்கள் நிறுத்தப்பட வேண்டிய சூழல் உருவானது. ‘நிமிர்வோம்’ மாத இதழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிவராமல் தடைபட்டு நிற்கிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் கழகம் தனது இயக்கத்தை இயன்ற அளவு முனைப்புடன் முன்னெடுத்தது. அந்த செய்திகளின் சுருக்கமான தொகுப்பு: ஜனவரி...

இளைய தலைமுறை பெரியாரியலை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? (3) புரோகித ஆதிக்கத்தின் மாறாதப் போக்கை உணர்ந்து அஞ்சாது கட்டுடைத்தவர் பெரியார் பூபாலன்

இளைய தலைமுறை பெரியாரியலை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? (3) புரோகித ஆதிக்கத்தின் மாறாதப் போக்கை உணர்ந்து அஞ்சாது கட்டுடைத்தவர் பெரியார் பூபாலன்

பார்ப்பனியம் என்ற அரசியல் சமூகக் கோட்பாட்டை தகர்க்க பெருந்திரளான மக்களிடம் படிந்து நிற்கும் உளவியலுக்கு எதிரான கருத்தியலைக் கட்டமைக்க வேண்டும் என்று பெரியார் சரியாக சிந்தித்தார். புராணப் புரட்டு – பனிப் போரின் பெருமைகளை மக்கள் மொழியில் போட்டுடைத்ததன் விளைவாக பார்ப்பனியம் தனக்காக நிலைநிறுத்திக் கொண்ட உயர்தனிப் பெருமைகள் சிதையத் தொடங்கின. மானுடகுல படிமலர்ச்சியில் வேட்டை சமூக காலம் முதல் எந்திரங்களை சிந்திக்கச்செய்யும் இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்திலும், உலகமெங்கும் ஒரு சமூகமென்பதின் அடிப்படை அலகான தனிமனித மனங்கள் மீதான உண்மையான அதிகாரம் என்பது புரோகித வர்க்கத்திடமே (ஞடிவேகைநஒ ஊடயளள) இன்றும் குவிந்துள்ளது என்பதை எளிதில் உணரமுடியும். இது நவீன அமைப்பியல் கருத்தியல்களான சமூகம், அரசதிகாரம், படைத் துறை, பொருளியல் உற்பத்தி என்பவை தாண்டிய தனிமனிதன அகநிலையை கைக்கொள்ளும் அதிகாரம். இந்த அதிகாரம் செயல்படும் புள்ளி என்பது ஒவ்வொரு தனித்த அகத்தின் ஆதி அச்சம் சார்ந்தது. இது மனித மனங்களுக்கானது மட்டுமானதல்ல...

திருமண வயது 21ஆக உயர்வதை வரவேற்கிறோம் சமுதாய விழிப்புணர்வின் மூலமே சட்டத்தைச் செயல்படுத்த முடியும்

திருமண வயது 21ஆக உயர்வதை வரவேற்கிறோம் சமுதாய விழிப்புணர்வின் மூலமே சட்டத்தைச் செயல்படுத்த முடியும்

பெண்களின் திருமண வயதை ஆண்களுக்குச் சமமாக உயர்த்திட ஒன்றிய  அமைச்சரவை எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. அதற்கான உள்நோக்கம் எது என்று ஆராய்வiதைவிட சட்டத்தின் நோக்கங்கள் உருவாக்கிடும் தாக்கங்கள் குறித்தே நாம் சிந்திக்க வேண்டும் என்பதே நமது கருத்து. குறிப்பாக, மதச் சிறுபான்மையினராகிய இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் மதம் விதிக்கும் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று வாதாடு கிறார்கள். பெண்களுக்கான சமத்துவத்தை சம உரிமைகளை மறுப்பதில் அனைத்து மதங்களுமே ஒன்றுபட்டு நிற்கின்றன. காரணம், மதங்களை உருவாக்கியதும் அதற்கான விதிகளை நிர்ணயித்தவர் களும் ஆண்களாகவே இருப்பது தான். எப்படி, இலக்கியங்கள் எழுதிய ஆண்கள் பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளையும் அடங்கிப் போவதையும் ‘சமூக ஒழுங்காக’ நிர்ணயித்தார்களோ, அதுபோலவே தான் மதங்களும்.  நாம் வலியுறுத்த விரும்புவதெல்லாம் சட்டங்கள் இயற்றுவது மட்டுமே முழுமையான சட்டத்தின் நோக்கத்தை வெற்றி பெற வைத்து விடாது. சமூகத்தில் அதற்கான விழிப்புணர்வை உருவாக்கி, மக்களிடையே கருத்துருவாக்கத்தை விதைப்பதன் வழியாகவே சட்டங்களின் நோக்கம் இலக்கை அடையும். தீண்டாமையை...

இளைய தலைமுறை பெரியாரியலை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? (2) ஜெர்மனியின் நாசிச எதிர்ப்பும் பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பும் ஒன்றே! பூபாலன்

இளைய தலைமுறை பெரியாரியலை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? (2) ஜெர்மனியின் நாசிச எதிர்ப்பும் பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பும் ஒன்றே! பூபாலன்

பார்ப்பனியம் என்ற அரசியல் சமூகக் கோட்பாட்டை தகர்க்க பெருந்திரளான மக்களிடம் படிந்து நிற்கும் உளவியலுக்கு எதிரான கருத்தியலைக் கட்டமைக்க வேண்டும் என்று பெரியார் சரியாக சிந்தித்தார். புராணப் புரட்டு – பனிப் போரின் பெருமைகளை மக்கள் மொழியில் போட்டுடைத்ததன் விளைவாக பார்ப்பனியம் தனக்காக நிலைநிறுத்திக் கொண்ட உயர்தனிப் பெருமைகள் சிதையத் தொடங்கின. மானுடச் சமூகப் பரிணாமத்தில், ‘அடிமைச் சமூகம்’ (Slavery) என்ற பண்புக்கூறு உலகம் முழுவதும் தோன்றிய ஒரு ‘உழைப்புச் சுரண்டல்’ ஏற்பாடு. அது ஒரு விதத்தில் உழைப்பிலிருந்து ஒரு சிறு மக்கள் திரளை விலக்கி அமர வைத்ததிலேயே, மனித சமூகம் கலை இலக்கிய உருவாக்கம் நோக்கி நகரமுடிந்தது. ஆனால், உலக நிலப் பரப்பெங்கும் இந்த அடிமை சமூக முறையில்; உழைப்பைச் சுரண்டி பயன் படுத்தும், அனுபவிக்கும் சமூகப் படிநிலைகளில் மாற்றங்கள், ஏற்றத் தாழ்வுக் கட்டமைப்புத் திருப்பங்கள் என்பவை வரலாறு நெடுகிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்த வகையில், ஒரு எளிய புரிதலிலே;...