Tagged: பேரறிவாளன்

பேரறிவாளனின் தந்தை ஐயா குயில்தாசன் பவள விழா சென்னை 28052017

பேரறிவாளனின் தந்தை ஐயா குயில்தாசன் பவள விழாவில் சென்னையில் நடைபெற்றது. அதில் ஐயாவிற்கு மரியாதை செய்யும் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பெரியாரியல்வாதிகள்

ரகசியம்-பரம ரகசியம் அக்கம்-பக்கம்

ரகசியம்-பரம ரகசியம் அக்கம்-பக்கம்

23 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், “என்னுடைய கருணை மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தைக் கூறுவீர்களா?” என்று தகவல் உரிமை தலைமை ஆணையருக்கு கடிதம் எழுதினார். “அது முடியாது; குடியரசுத் தலைவருக்கு அமைச்சரவை எழுதிய குறிப்புகளையோ, குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்வதற்கான காரணங்களையோ வெளியிட வேண்டிய அவசியமில்லை. அதை சட்டம் அனுமதிக்கவில்லை” என்று கண்டிப்பாக பதில் எழுதிவிட்டார் அதிகாரி. அதுவும்கூட, ஒரு வகையில் சரிதான். கருணை காட்டுவதற்குத்தான் காரணம் வேண்டும். கருணையை மறுப்பதற்கு காரணம் ஏதும் தேவையில்லையே! கருணை உள்ளம் இல்லாமல் இருந்தாலே போதும்! குடியரசுத் தலைவர் ‘கருணையுடன் – கருணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று எழுதி யிருப்பார், போலிருக்கிறது! பேரறிவாளன் கருணை மனு நிராகரிப்பு மட்டுமல்ல, தடா நீதிமன்றத்தில் அவர் மீது நடந்த வழக்கு விசாரணைகூட ரகசியமாகத்தான் நடந்தது. அதாவது, நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்குப் பற்றி நடக்கும் வாதங்கள், குறுக்கு விசாரணைகள் மக்களுக்கு தெரிந்துவிடவே கூடாது என்று...

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி எழுச்சிப் பேரணி

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி எழுச்சிப் பேரணி

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய முன் வந்த தமிழக அரசின் முடிவை நிறைவேற்றக் கோரி ஜூன் 11ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் சென்னையில் கோரிக்கை பேரணி எழுச்சியுடன் நடந்தது. 7 தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் சார்பில் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய பேரணி, பிற்பகல் 3.30 மணியளவில் எழும்பூர், லேங்ஸ் தோட்டம் அருகே முடிவடைந்தது. பேரணி யில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி , பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், தமிழகம் முழுதுமிருந்தும் ஏராளமான கழகத் தோழர்களும், புதுவை கழகத் தோழர்களும் பங்கேற்றனர். வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன், அற்புதம் அம்மாள், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, வி.சி.க. செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும்,...

ஜூன் 11  வாகனப் பேரணி கழகத் தோழர்கள் பங்கேற்பீர்!

ஜூன் 11 வாகனப் பேரணி கழகத் தோழர்கள் பங்கேற்பீர்!

பேரறிவாளன் கைது செய்யப்பட்டு ஜூன் 11ஆம் தேதியோடு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவர்  கைது செய்யப்பட்ட நாள் 1991 ஜூன் 11. இதை நினைவு கூர்ந்திடவும் தமிழக அரசு ஏற்கெனவே எடுத்துள்ள 7 தமிழர் விடுதலைக்கு ஆதரவான முடிவை மீண்டும் நினைவூட்டியும் ஜூன் 11 அன்று வேலூர் சிறை வாயில் முன்பிருந்து காலை 8 மணிக்கு வாகனப் பேரணி புறப்படுகிறது. வேலூரிலிருந்து சென்னை கோட்டை நோக்கி வரும் இந்தப் பேரணியில் இரு சக்கரவாகனங்களும், நான்கு சக்கரவாகனங்களும் இடம் பெறுகின்றன. 7 தமிழர் விடுதலலைக்கான கூட்டமைப்பு ஏற்பாடு செய் துள்ள இந்தப் பேரணியில் கழகத் தோழர்கள் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். – கொளத்தூர் மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 09062016 இதழ்

ஏழு தமிழர் விடுதலை கோரி வாகன பேரணி – ஜூன் 11 வேலூர்

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை : ”ஏழு தமிழர் விடுதலை கோரி ஜூன் 11 ஆம் தேதி காலை 8 மணிக்கு வேலூர் சிறைச்சாலை முன்பு துவங்கி சென்னை கோட்டை வரை நடைபெற உள்ள வாகன பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிக்க கோரி இப்பேரணி நடைபெறுகிறது. 25 ஆண்டுகளாக தன் மகனுக்காக மட்டுமல்லாமல் அனைத்து சிறைவாசிகளுக்காகவும் நீண்டதொரு மனித உரிமைப் போராட்டத்தை நடத்திவரும் அற்புதம் அம்மாள் அவர்கள் தலைமையில் 7 தமிழர் விடுதலை கூட்டியக்கம் ஒருங்கிணைக்கும் இந்த பேரணியை 7 பெண்கள் துவங்கி வைக்கின்றனர். சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் 11 ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்ததமாக காவல்துறை விசாரணைக்கு...

தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்

தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்

உண்மைகள் வெளிச்சத்துக்கு வர 23 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை சந்தித்துள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குத் தண்டனைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் மறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது மரணதண்டனை எதிர்ப்பு இயக்கம் தயாரித்து வெளியிட்டுள்ள ‘உயிர் வலி’ ஆவணப்படம் இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. ராஜிவ் கொலைக்கான மனித வெடிகுண்டு ‘பெல்ட்’டில் பயன்படுத்தப்பட்டது, போறிவாளன் வாங்கித் தந்த பேட்டரிதான் என்பதே அவரை தூக்கு மரத்தின் கொட்டடியில் கொண்டுபோய் நிறுத்துவதற்கான ஒரே சான்றாதாரம். தடா சட்டத்தின் கீழ் துன்புறுத்தி பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை இதற்கு சான்று ஆவணமாக உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டது. பேரறிவாளனிடம் சாட்சியத்தைப் பதிவு செய்த சி.பி.அய். அதிகாரி தியாகராசன், அய்.பி.எஸ். இப்போது இந்த ஆவணப் படத்துக்கு வழங்கியுள்ள பேட்டி, புதிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. பேரறிவாளன் தன்னிடம் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உள்ளது உள்ளபடியே பதிவு செய்யாமல் தவிர்த்து...

சஞ்சய்தத்துக்கு ஒரு நீதி; 7 தமிழருக்கு ஒரு நீதியா?

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரு நாள்களுக்கு முன்புதான் தமிழக அரசுக்கு திடீர் ‘ஞானோதயம்’ வந்தது. ராஜீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிப்பது குறித்து மீண்டும் மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. நவம்பர் 2ஆம் தேதி உச்சநீதிமன்றம் இது குறித்து தீர்ப்பளித்தப் பிறகு, 3 மாத காலம் உறங்கிக் கிடந்தது தமிழக அரசு. எதிர்பார்த்தபடியே அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மல்லிகார்ஜுனா, இந்த 7 தமிழர்களை விடுதலை செய்யவே கூடாது; அவர்கள் தேச விரோதிகள்என்று சோனியா சொல்லிக் கொடுத்த மொழி களில் பா.ஜ.க. ஆட்சியை மிரட்டி விட்டார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று கூறி விட்டார். இந்த 7 தமிழர்களும், ராஜீவ் கொலையில் நேரடி தொடர்புடையவர்கள் அல்ல; ‘தடா’ சட்டத்தின் கீழ் மிரட்டி, சித்திரவதை செய்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தையே அவர்களுக்கு...

நீண்டகால முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

மனித நேய மக்கள் கட்சி சார்பில் நேற்று 07.02.2016 அன்று மாலை மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசே அரசியலமைச்சட்டம் 161 அய் பயன்படுத்து ! 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அபுதாஹீர் உள்ளிட்ட முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய் ! பேரறிவாளன் உள்ளிட்ட வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய் ! என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, மக்கள் கண்காணிப்பகம் தோழர் ஹென்றி டிபேன், தோழர் எவிடன்ஸ் கதிர், தமிழ் தேச மக்கள் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் தோழர் புகழேந்தி, சி.பி.அய்( எம்.எல்) மக்கள் விடுதலை தலைவர் தோழர் அருண்சோரி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர் மம

7 தமிழர்களையும் நீண்டகால ஆயுள் சிறைவாசிகளையும் 161ஆவது விதியின் கீழ் விடுதலை செய்ய தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

7 தமிழர்களையும் நீண்டகால ஆயுள் சிறைவாசிகளையும் 161ஆவது விதியின் கீழ் விடுதலை செய்ய தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

இராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 24 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அனைத்துக் கட்சி இயக்கங்களைச் சார்ந்த ‘தமிழர் எழுவர் விடுதலை கூட்டியக்கம்’ வேண்டுகோள் வைத்துள்ளது. 7 தமிழர்கள் மட்டுமல்லாது சிறையில் நீண்டகாலம் வாடும் அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூட்டியக்கம் வலியுறுத்தியது. அண்மையில் வெளி வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்தப் பிரிவை பயன்படுத்தும் மாநில அரசின் உரிமையை உறுதி செய்துள்ளது என்றும், கூட்டியக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சென்னையில் ஜன.4ஆம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டியக்கம் சார்பில் தோழர்கள் வேல் முருகன், தியாகு செய்தியாளர்களிடம் முன் வைத்த அறிக்கை : இராசீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பய°, இரவிச்சந்திரன், ஜெயக் குமார் ஆகிய...

இதில் என்ன குற்றம், சிந்திப்பீர் தமிழர்களே!

இதில் என்ன குற்றம், சிந்திப்பீர் தமிழர்களே!

ராஜிவ் கொலையில் சதி செய்த குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு, 23 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடந்த 7 பேரை  உச்சநீதி மன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு விடுதலை செய்ய முன் வந்தது. காங்கிரஸ் கட்சியினர் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யலாமா என்று போராட்டம் நடத்துகிறார்கள். நாட்டின் பிரதமரைக் கொன்றவர்களையே விடுதலை செய்தால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்புக் கிடைக்கும் என்கிறார், ராகுல் காந்தி. தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிறார் சுப்ரமணியசாமி. மக்களின் சிந்தனைக்கு நாம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம்: ராஜிவ் காந்தி கொலையில் சி.பி.அய். 41 பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் கண்டது. இதில் நேரடி தொடர்புடையவர்களான தாணு, சிவராசன், சுபா உள்ளிட்ட 12 பேர் ஏற்கனவே தேடுதல் வேட்டையில் இறந்து விட்டார்கள். 26 பேர் குற்றம்சாட்டப்பட்டு, ‘தடா’ நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டனர். பூந்தமல்லி ‘தடா’ நீதிமன்றம் 26 பேருக்கும் தூக்குத் தண்டனை அறிவித்தது. இந்த...

7 தமிழர் விடுதலைக்கான உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்போம்!

7 தமிழர் விடுதலைக்கான உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்போம்!

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் முடிவை தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது கரைபுரண்ட உற்சாகம் – உச்சநீதிமன்றம் – இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தபோது தலைகீழாக மாற்றி ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது. 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கு தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய 7 சட்டப் பிரச்சினைகளை முன் வைத்துள்ளது, தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு. சட்டங்களின் நுணுக்கங்கள் விவாதங்கள் எப்படி இருந்தாலும், ஒரு சாமான்யனின் பார்வையில் நீதி மறுக்கப்படுகிறது என்ற வேதனைதான் மிஞ்சுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்ட இவர்கள், 23 ஆண்டுகாலம் சிறையில் கழித்துவிட்டார்கள். மரண தண்டனையைக் குறைக்கக் கோரி கருணை மனு தாக்கல் செய்யப்பட்டு, அது 11 ஆண்டுகாலம் அது கிடப்பில் போடப்பட்டது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான உயிர் வாழும்...

தலையங்கம்: ‘ஏழு தமிழர் விடுதலை’யை அரசியலாக்குவதா?

தலையங்கம்: ‘ஏழு தமிழர் விடுதலை’யை அரசியலாக்குவதா?

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு சதாசிவம் கோவையில் 18-04-2014 அன்று நடைபெற்ற நீதிபதிகளின் மாநாட்டின் முடிவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் “வழக்கின் தீர்ப்பினை ஒரு வாரத்திற்குள் (தான் ஓய்வு பெறும் நாளுக்கு முன்னதாக) வழங்கப்படும், அதுவரைப் பொறுத்திருங்கள்” எனக் கூறியுள்ளார். அவரது பதவிக்காலம், அவரது பிறந்த நாள் அடிப்படையில் 26-04-2014 – உடன் நிறைவடைகிறது. அந்த அடிப்படையில் 25-04-2014க்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அதுவரை பொறுத்திருங்கள் என்றும் கூறியுள்ளார். அவர் பேட்டியில் கூறியிருக்காவிட்டாலும், எந்த ஒரு நீதிபதியும் தான் விசாரித்த வழக்குகளின் தீர்ப்பை, தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக வழங்குவது என்பது மரபான ஒன்றுதான். ஆனால் ஏதோ 24-04-2014 அன்று தமிழ்நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுவதைக் கணக்கில் கொண்டே, பேட்டி கொடுக்கப்பட்டதைப் போல, தலைமை நீதிபதியின் இயல்பான பேட்டியை விமரிசனம் செய்து தி.மு.க. தலைவர் கலைஞர்...

பேரறிவாளன் மனம் திறக்கிறார்!

பேரறிவாளன் மனம் திறக்கிறார்!

வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தூக்குத் தண்டனை ரத்து, தமிழக அரசின் விடுதலை முயற்சி, தன் தாய் அற்புதம்மாளின் போராட்டம் பற்றி பல கேள்விகளுக்கு வழக்கறிஞர் மூலம் விடை அளிக்கிறார். அரசியல் சாசன அமர்விற்கு உங்கள் விடுதலை வழக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் என்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்? அரசியல் சாசன அமர்வில் நீதியரசர்கள் யார் யார் பங்கு பெறப் போகிறார்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இருப்பினும் தற்போது அமைந்துள்ள புதிய மத்திய அரசு இதில் எவ்வகையான நிலைப்பாடு எடுக்க உள்ளது என்பதையே நான் மிக ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். காரணம் தண்டனை குறைப்பு அதிகாரம் என்பது முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என நன்கு தெரிந்திருந்தும் அரசியல் காரணங்களுக்காக சென்ற காங்கிரசு மத்திய அரசு தமிழக அரசின் முடிவை எதிர்த்தது – வழக்கு தொடுத்தது. தற்போது அமைந்துள்ள புதிய மத்திய அரசு மாநில உரிமைகளை மதிக்கிற அரசாக...