Author: admin

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் வழக்கு: எந்த நேரத்திலும் தீர்ப்பு வரலாம் 0

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் வழக்கு: எந்த நேரத்திலும் தீர்ப்பு வரலாம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை குறித்து வழக்கின் விவாதங்கள் உச்சநீதிமன்றத்தில் முடிவடைந்துள்ளன. தீர்ப்பை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. பெரியார் தனது வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்பதாகும். கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ‘மதச் சுதந்திர உரிமை’யைப் பயன்படுத்திக் கொண்டு பார்ப்பனர்கள் தங்கள் ‘பிராமண’ பிறவி மேலாண்மையை சட்டப்படி உறுதியாக்கிக் கொண்டு, பார்ப்பனரல்லாத மக்களை ‘சூத்திரர்கள்’ என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கோயிலுக்குள் நுழையும் உரிமை, அனைத்து ஜாதியினருக்கும் வந்துவிட்டாலும், ‘கடவுளை’ தங்கள் மந்திரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள பார்ப்பனர்கள், ‘கர்ப்பகிரக’ உரிமையை உறுதிப்படுத்த துடிக்கிறார்கள். 1971ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு வழிவிட பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்து, சட்டமன்றத்தில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, ஜீயர்கள் உள்ளிட்ட பார்ப்பனர்கள் நேராக உச்சநீதிமன்றம் சென்றார்கள். ‘சேஷம்மாள் வழக்கு’ என்று அழைக்கப்பட்ட இந்த வழக்கை, உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது. ‘அர்ச்சகர்...

‘தலித்’ அர்ச்சகர் நாகமுத்து தற்கொலை: பின்னணி என்ன?

‘தலித்’ அர்ச்சகர் நாகமுத்து தற்கொலை: பின்னணி என்ன?

பெரிய குளம் கைலாச நாதன் கோயில் அர்ச்சகர் நாகமுத்துவை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தம்பியும், பெரிய குளம் நகராட்சித் தலைவருமான ராஜா என்பவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிகாரச் செல்வாக்குக் காரணமாக அவருக்கு பிணையும் கிடைத்துவிட்டது. இந்த வழக்கிற்கு ‘அர்ச்சகர் தற்கொலை வழக்கு’ என்று ஊடகங்கள் பெயர் சூட்டியிருக்கின்றன. இதற்குப் பின்னால், ஒரு வரலாறு உண்டு. நாகமுத்து, தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர். இவர் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு 2012 செப். 17இல் வெளியிட்டது. அந்த செய்தி இது: “டி. கல்லுப்பட்டியிலுள்ள கைலாசநாதன் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அர்ச்சகராக இருந்து வருபவர் நாகமுத்து. அவர் ஒரு தலித். நான்கு மாதங்களுக்கு முன்பு கோயில் புதுப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மே 5ஆம் தேதி கோயில் நிர்வாகக் குழுவில் இருந்த தலித் அல்லாத சாதியினர், நாகமுத்துவை...

பார்ப்பனர்களின் அறிவு ‘விபச்சாரம்’ – அம்பேத்கர் 0

பார்ப்பனர்களின் அறிவு ‘விபச்சாரம்’ – அம்பேத்கர்

பார்ப்பனர்களின் சங்பரிவார் களும், இந்து தேசியப் பா.ஜ.க. வினரும் அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். பார்ப்பனர் பற்றி அம்பேத்கர் ஆழமாக முன் வைத்த வரலாற்று சித்திரம் இது. பார்ப்பனர்களை எடுத்துக் கொள்வோம். வரலாற்று வழியில் இவர்கள்தான் மொத்த இந்து மக்கள் தொகையில் சுமார் எண்பது சதவீதமாக அமைந்துள்ள அடிமை வகுப்புகளுக்கு (சூத்திரர்களும் தீண்டாதார்களுக்கும்) பரம வைரியாக இருந்துள்ளார்கள். இன்று இந்தியாவில் அடிமை வகுப்புகளைச் சேர்ந்த சாமானிய மனிதனின் இவ்வளவு இழிந்த வனாக, இவ்வளவு தாழ்ந்தவனாக, இப்படிக் கொஞ்சம்கூட நம்பிக்கை யும் ஆவலும் அற்றவனாக இருக் கிறான் என்றால், பார்ப்பனர்களும் அவர்களின் தத்துவமும்தான் இதற்கெல்லாம் முழுக் காரணம். இந்தப் பார்ப்பனிய தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஐந்து: (1) வெவ்வேறு வகுப்புகளிடையே படிப்படியான ஏற்றத் தாழ்வு; (2) சூத்திரர்களையும் தீண்டாதார் களையும் அறவே ஆயுத நீக்கம் செய்தல்; (3) சூத்திரர்களும் தீண்டாதார்களும் கல்வி பெறுவதை அடியோடு தடை செய்தல்; (4) சூத்திரர்களும் தீண்டாதார்களும் அதிகாரம் வாய்ந்த...

தலையங்கம் – பாராட்டுகிறோம்; ஆனால்… 0

தலையங்கம் – பாராட்டுகிறோம்; ஆனால்…

இது உண்மைதானா என்று வியக்க வைக்கும், ஒரு செய்தி வந்திருக்கிறது. தமிழக காவல்துறையும் கல்வித் துறையும் இணைந்து, ஜாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக, தமிழகம் முழுதும் வீதி நாடகங்கள் உள்ளிட்ட கலை வடிவங்களில் பரப்புரை நடத்துகிறது என்பதுதான் அந்த செய்தி. தமிழகக் காவல்துறைக்கு இப்படி ஓர் அரிய ஆலோசனை எங்கிருந்து வந்தது என்று நமக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு திட்டத்தை காவல்துறையும் கல்வித் துறையும் உருவாக்கி, களமிறங்கியதற்காக நாம் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், இந்த அடிப்படையான பிரச்சினையை தனது தோளில் சுமந்து, பல ஆண்டுகளாகவே களத்தில் நிற்கும் அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோதே இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, முடிவெட்ட மறுத்தல், செருப்பு அணிய, சைக்கிள் ஓட்ட, அலைபேசி பேச தடை என்று பல்வேறு வடிவங்களில் தீண்டாமைகள் தொடருகின்றன. இவற்றின் விவரங்களைத் தொகுத்தும் இரட்டைக் குவளை முறைகளை பின்பற்றும்...

இளவரசனைத் தொடர்ந்து கோகுல்ராஜ் ஜாதி ஆணவக் கொலை: கழகம் கடும் கண்டனம் 0

இளவரசனைத் தொடர்ந்து கோகுல்ராஜ் ஜாதி ஆணவக் கொலை: கழகம் கடும் கண்டனம்

‘கவுரவக் கொலை’ என்ற பெயரில் ஜாதி வெறிக் கொலை சம்பவங்கள் தமிழகத்தில் தலைதூக்கி வருவது தமிழ்நாட்டுக்கே தலைகுனி வாகும். 2013ஆம் ஆண்டு இளவரசன் என்ற தலித் இளைஞர், திவ்யா என்ற வன்னியப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த ‘குற்றத்துக்காக’ அவர்களை ஜாதி வெறியர்கள் கட்டாயப்படுத்தி அச்சுறுத்திப் பிரித்தனர். கடைசியில் இளவரசன் உடல் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தது. இப்போது பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல் ராஜ், அதே ‘கதிக்கு’ ஆளாகியுள்ளார். ‘உயர்ஜாதி’ என்று சொல்லிக் கொள்ளும் ‘கவுண்டர்’ ஜாதிப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்ததால் அவர் ஜாதி வெறியர்களால் கடந்த 23ஆம் தேதி கடத்தப்பட் டுள்ளார். 24ஆம் தேதி தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் பள்ளிப்பாளையம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே இரயில் தண்டவாளத்தில் அவர் பிணமாகக் கிடந்தார். திருச்செங்கோடு மலைக் கோயிலுக்கு கோகுல் ராஜ், ஒரு மாணவியுடன் சென்று சாமி கும்பிடுவது கண்காணிப்புக் காமிராவில் பதிவாகியுள்ளது. கடைசியாக 7 பேர் கொண்ட ஒரு கும்பல்,...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

மதுக்கடைகளுக்கு கடவுள் பெயர் வைக்க ஆந்திர அரசு தடை. – செய்தி அப்படியே மதுக் குடியர்களும் கடவுள் பெயரை வைக்க தடை போட்டுடுங்க… அத்வானி யாரை மனதில் வைத்து அவசர நிலை பற்றிப் பேசினார்? – சிவசேனா கேள்வி தான், ஓரம் கட்டப்படுவதை மனசுல வைச்சுகிட்டுத்தான் பேசினாரு! யோகா செய்யும் கைதிகளுக்கு தண்டனை காலம் குறைக்கப்படும். – ம.பி. அரசு போற போக்கைப் பார்த்தா, யோகா செய்யும் குற்றவாளிகளுக்கு தண்டனை இல்லைன்னு அறிவிச்சிடுவீங்க போல! பூரி ஜெகநாதன் கோயிலில் ‘ஆகம விதிகள்’ மீறப்படுவதை எதிர்த்து ஒரிசாவில் காங்கிர° சார்பில் முழு அடைப்புப் போராட்டம்.  – செய்தி இந்த முழு அடைப்புல பூரி ஜெகநாதன் கலந்து கிட்டானா? அவன் கோயிலும் மூடப்பட்டதா? ஏழுமலையான் கோயிலுக்கு மேல், பாதுகாப்புக் கருதி விமானங்கள் பறக்க தடைவிதிக்க வேண்டும். – திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்குள்ளே விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வச்சிடலாம். அப்பதான் ஏழுமலையானுக்கு பாதுகாப்பு! ஆர்.கே. நகரில்...

‘பிராமணாள்’ பெயர் அழிப்புக் கிளர்ச்சி: நடந்தது என்ன? 0

‘பிராமணாள்’ பெயர் அழிப்புக் கிளர்ச்சி: நடந்தது என்ன?

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ கட்டுரைக்கு மறுப்பு பெரியார் நடத்திய ‘பிராமணாள் ஓட்டல் பெயர் அழிப்புக் கிளர்ச்சிக்’ குறித்து, போராட்டம் நடந்த ‘முரளி கபே’ உரிமையாளரின் மகன் , ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டில் (ஜூன் 19) ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பெரியார் காலங்களில் அவர் நடத்திய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில் வன்முறை நடந்தது இல்லை என்று ஏற்கெனவே வெளிவந்த கட்டுரைக்கு (ஜூன் 26) மறுப்பாக, இது வெளி வந்திருக்கிறது. முரளி கபே ஓட்டல் மறியலில் திராவிடர் கழகத்தினர் வன்முறையில் ஈடுபட்டதாக உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார். ‘பிராமணாள்’ என்பது அசைவ உணவைக் குறிப்பிடும் சொல் என்றும் வாதாடுகிறார். ‘பிராமணாள்’ என்பது ஏனைய பார்ப்பனரல்லாத மக்களை ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தும் குறியீட்டுச் சொல். இதற்கான விளக்கங்களைத் தந்து உரிய வேண்டுகோள் கடிதங்களை எழுதிய பிறகே பெரியார் போராட்டத்தைத் தொடங்கினார். வன்முறையை பின்பற்ற விரும்பியிருந்தால், அந்த பெயர்ப் பலகையை ஒரே நாளில் எடுத்து...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

குடியரசுத் தலைவர் திருப்பதி வருகை: 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தம். – செய்தி இதுக்கெல்லாம், ‘ஆகம’ விதி அனுமதிச்சுடும் போல. சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசிடம் தேவையான நிதி இல்லை. – நீதிமன்றத்தில் அரசு மனு அப்படி, என்ன ‘ஆலிவுட்’ படமா எடுக்கப் போறீங்க! உலகிலேயே குறுகிய காலத்தில் 11 கோடி உறுப்பினர்களை சேர்த்த ஒரே கட்சி பா.ஜ.க. – இல. கணேசன் உலகத்திலேயே கார் வச்சிருக்கிற ஒரே கரகாட்ட கோஷ்டி இருக்குன்னா அது நாமதான். குரு பகவான் – கடக இராசியிலிருந்து சிம்ம இராசிக்கு பிவேசித்தார். – செய்தி எதுலேங்க பிரவேசிச்சாரு? ‘மெட்ரோ’ இரயிலிலா? உலகின் மிக உயரமான பசு – அமெரிக்காவில் இறந்தது. – செய்தி சடலத்தை இந்தியாவுக்கு அனுப்புங்க! தேசிய சின்னம் வச்சுடலாம்! திருச்சி டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம் போலியானது. – பல்கலை மான்யக் குழு இதுல படிச்சிட்டு புரோகிதத் தொழில்...

மனித உரிமைகளை நசுக்கும் பார்ப்பன தேசம் 0

மனித உரிமைகளை நசுக்கும் பார்ப்பன தேசம்

“அவசர நிலை காலம் மீண்டும் வருமா?” என்ற விவாதங்கள் ஒரு பக்கம் நடந்தாலும், அந்தக் காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்களைவிட இன்னும் மோசமான உரிமை மீறல்கள் இங்கே நடந்து கொண்டுதான் இருக் கின்றன. இது குறித்த செய்திகளின் தொகுப்பு: மனித உரிமைப் போராளி சாய்பாபா அவரால் நடமாட முடியாது; சக்கர வண்டிதான் அவரை நகர்த்தும்; உடலில் ஊனமானாலும் உள்ளத்தில் உறுதியோடு போராடும் சமூகப் போராளி; அவர் பெயர் ஜி.என். சாய்பாபா. மனித உரிமையாளர்களிடையே பிரபலமானவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் பேராசிரியர். சமூகநீதிக்காகவும், பழங்குடி மக்களின் உரிமைக்காகவும் குரல்கொடுத்த குற்றத்துக்காக அவர் ஒரு ‘மாவோ’ தீவிரவாதி என்று காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டு, 2014 மே 9ஆம் தேதி, பல்கலைக் கழகத்திலிருந்து காரில் வீடு திரும்பும்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து நாக்பூருக்கு விமானத்தில் கொண்டு போகப்பட்டு, சித்திரவதை முகாமாகக் கருதப்படும் முட்டை வடிவத்திலுள்ள அண்டா சிறையில் அடைக்கப் பட்டார். அடுத்த 72...

2016இல் விந்தன் நூற்றாண்டு – இராஜாஜியின் ‘பஜகோவிந்தத்’துக்கு எதிராக ‘பசிகோவிந்தம்’ எழுதியவர் 0

2016இல் விந்தன் நூற்றாண்டு – இராஜாஜியின் ‘பஜகோவிந்தத்’துக்கு எதிராக ‘பசிகோவிந்தம்’ எழுதியவர்

சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை தனது படைப்புகளில் எழுதியவர் விந்தன். அவரது நூற்றாண்டு 2016இல் வருகிறது. “போலியைச் சுட்டெரிக்கும் புதுமை களை, வாழ்க்கையை அலசி அலசிப் பரிசீலிக் கும் இரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு ‘மின்சார சிகிச்சையளிக்கும்’ புத்தம் புது முறைகளை குரூர வசீகரங்களைப் படம்பிடித்துக் காட்டி, மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது, தங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப் பும் உணர்ச்சி மிக்க உயிரோவியங்களை, அந்த அபிமானத்துக்கு விரோதமாயிருந்த, இருந்து வருகிற, ‘மனித மிருகங்’களின் மேல் வெறுப்பைக் கக்கி, உங்கள் நல்வாழ்வுக்கு வழிதேட முயலும் நவயுகக் கதைகளை இன்றுபோல் நீங்கள் என்றும் வரவேற்று வாழ்த்தித் தமிழை வளப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும். இதுவே என் எண்ணம். இதுவே என் இருபது வருட கால எழுத்து” (விந்தன்: 15.5.1956: விந்தன் கதைகள்: முன்னுரை) “இன்று மனித வாழ்வில் முக்கியமாக இடம் பெற்றிருப்பவை மூன்று. முதலாவது கடவுள்; இரண்டாவது மதம்; மூன்றாவது...

தலையங்கம் – நகரமயமாகும் தமிழ்நாடு! 0

தலையங்கம் – நகரமயமாகும் தமிழ்நாடு!

இந்தியாவின் “சமூகப் பொருளாதார – ஜாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு” விவரங்கள் வெளியிடப்பட் டுள்ளன. இன்னும் ஜாதி கணக்கெடுப்புப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன்படி கிராமங்களில் வாழும் மக்களில் 30 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக வாழ்க்கையைக் கடப்பதற்கு கூலி வேலை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 23.5 சதவீதம் பேர். கிராமங்களில் உயர்நிலைப் பள்ளியை நிறைவு செய்தவர்கள் 5.4 சதவீதம். 3.4 சதவீதம் மட்டுமே கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள். கிராமப்புறங்களில் 90 சதவீதக் குடும்பங்களில் ஊதியம் பெறும் ஊழியர்கள் எவரும் கிடையாது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ‘கல்வி’க்காக தனிக் கடவுளைக் கொண்டுள்ள நாடு இது. ‘பாரதப் பூமி’, ‘புண்ணிய பூமி’, ‘மகான்கள் அவதரித்த’, ‘வேதம் செழித்த’, ‘அவதாரங்கள்’ எடுத்த பூமி என்று பெருமை பேசப்படும் நாட்டின் நிலை இதுதான். மக்களை வறுமையில் மூழ்கச் செய்துவிட்டு, ‘இந்து’ தேசத்தை உருவாக்கிட துடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் என்ன...

கோகுல்ராஜ் படுகொலை: காவல்துறை இயக்குனரிடம் கழகம் மனு 0

கோகுல்ராஜ் படுகொலை: காவல்துறை இயக்குனரிடம் கழகம் மனு

தலித் இளைஞர் கோகுல்ராஜ், ஜாதி ஆணவக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கொலை வழக்காக மாற்ற வலியுறுத்தி, 1.7.2015 பகல் 1 மணியளவில் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சட்டம் ஒழுங்குப் பிரிவு துணை இயக்குனரிடம் மனு அளித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிக்க ஜாதியாக இருக்கும் சமூகப் பிரிவைச் சார்ந்தவர்களை காவல்துறை அதிகாரிகளாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், காவல்துறை கல்வித் துறையுடன் இணைந்து ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்துவதை வரவேற்றும், அதே நேரத்தில் கழகம் நடத்தும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கத்துக்கு காவல்துறை தடை விதிப்பதை நிறுத்தக் கோரியும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகக் கூறிய அதிகாரி, சமூக நீதி, ஜாதி வெறி தலைதூக்கும் ஆபத்துகளை சுட்டிக்காட்டினார். மாவட்ட செயலாளர் உமாபதி, தபசி குமரன், வழக்கறிஞர் அருண், அன்பு தனசேகரன் ஆகியோர் இயக்குனரை சந்திக்க உடன் வந்தனர். பெரியார் முழக்கம் 09072015 இதழ்

ஜூலை 19இல் தர்மபுரியில் கழகத்தின் செயலவைக் கூடுகிறது 0

ஜூலை 19இல் தர்மபுரியில் கழகத்தின் செயலவைக் கூடுகிறது

4-7-2015 சனிக்கிழமையன்று காலை 10-00 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில், சென்னை, கழகத் தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. அதில் கழகத்தின் செயல்பாடுகள், தேவைப்படும் மாற்றங்கள், இந்து மதவெறி இயக்கங்களின் நிகழ்கால நடவடிக்கைகள், கழகத்தின் முன்னணி அமைப்புகளான தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய குழந்தைகள் பழகு முகாம், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சந்திப்பு, சுய மரியாதை கலை, பண்பாட்டுக் கழகத்தின் காட்டாறு இதழ், கழகத் தின் அடுத்த கட்ட செயல்திட்டங்கள் போன்ற பல்வேறு செய்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதன் பின்னர் கீழ்க்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டது. 1) கழகத்தின் செயலவைக் கூட்டத்தை எதிர்வரும் 19-7-2015 ஞாயிறு அன்று தருமபுரியில் நடத்துவது எனத் தீர்மானிக்கப் பட்டது. 2) தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோர் செயலவையைத் தொடர்ந்து மாவட்டக் கழகங் களின் கலந்துரையாடல்களை நடத்துவது, மாவட்டக் கழக அமைப்புகளைப்...

ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் – ஒரு கிராமம் 0

ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் – ஒரு கிராமம்

ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதலர்களுக்கு புகலிடமும் பாதுகாப்பும் தரும் கிராமம் எஸ்.பட்டி. இளவரசனை ஜாதி வெறி பலி கொண்ட அதே தர்மபுரியில்தான் இந்த கிராமமும் இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பட்டிகள் உருவாக வேண்டும். தமிழ்நாட்டில் ஆச்சரியமான காதல் கிராமம் ஒன்று இருக்கிறது. 1500 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் ஏராளமானவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதைவிட அதிசயம் என்னவென்றால், பல்வேறு பகுதிகளில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட 200 ஜோடிகளின் உண்மைக் காதலை உணர்ந்து, அந்த கிராமத்தில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். இந்த அதிசய காதல் கிராமத்தின் பெயர் எஸ்.பட்டி. தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காதல் திருமணங்களுக்கும், கலப்புத் திருமணங்களுக்கும் அடையாள சின்னமாக விளங்கி வரும் எஸ்.பட்டியில் இதுவரை நூற்றுக்கணக்கான காதல் திருமணங்கள் நடந்துள்ளன. அந்த காதல் தம்பதிகள் சமூக இடர்பாடுகளை...

அம்பலப்படுத்துகிறது, நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய தேர்வாணையத்தின் பார்ப்பன தர்பார் 0

அம்பலப்படுத்துகிறது, நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய தேர்வாணையத்தின் பார்ப்பன தர்பார்

நாட்டின் உயர்பதவிகளுக்கு வேட்பாளர்களாக தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டது மத்திய தேர்வாணையம். இந்தத் தேர்வாணையத்தை தனது பிடிக்குள் வைத்திருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், ஒடுக்கப்பட்டோரின் நியாயமான உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறது. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற அகில இந்திய சர்வீசுகளுக்கான தேர்வு களிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரின் நியாயமான உரிமைகளை இந்த ஆணையம் தொடர்ந்து பறித்து வருகிறது. திறந்த போட்டியில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரை, இடஒதுக்கீடு கோட்டாவின் கீழ் தொடர்ந்து நிரப்பி வருகிறது இந்த ஆணையம். அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் – இந்த முறைகேட்டைக் கண்டித்ததோடு, 2004 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய சர்வீசுகளுக்கான தகுதி அடிப் படையில் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் அனைத்தை யும் முழுமையாக ரத்து செய்து பாராட்டத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. (பார்க்க – தலையங்கம் – ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மார்ச் 27) இந்த நிலையில் மத்திய தேர்வாணையத்தின் அதிர்ச்சியான பார்ப்பன மோசடிகள் மேலும்...

அவமதிக்கிறது, உச்சநீதிமன்றம் 0

அவமதிக்கிறது, உச்சநீதிமன்றம்

மீண்டும் உச்சநீதிமன்றம் தனது கொடுவாளை வீசி விட்டது. உரிமை கோரும் பிற்படுத்தப்பட்டோரை அவமதித்துவிட்டது. உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத பிற்படுத்தப்பட்டோ ருக்கு மாணவர் சேர்க்கை நிகழ இருக்கும் நேரத்தில் உச்சநீதி மன்றம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி இடைக்கால தடை விதித்து விட்டது. அஜீத் பசாயத், லோகீஸ்வர்சிங்பட்னா ஆகிய இரு நீதிபதிகள், இந்தத் தடையை விதித்துள்ளனர். நீதி மன்றம் தடைக்கு தெரிவித்துள்ள காரணங்கள் ஏற்கவியலாதவை! 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரியாக நடத்தப் பட்டது. அதற்குப் பிறகு சாதிவாரியாக கணக்கெடுப்பு நடக்கவில்லை. எனவே பிற்படுத்தப்பட்டோரை – 1931 ஆம் ஆண்டு கணக்கெடுப்பை வைத்து தீர்மானிப்பதை ஏற்க முடியாது என்று கூறுகிறது, உச்சநீதிமன்றம். இந்தியாவில் வாழும் மக்களில் பிற்படுத்தப்பட்டோர் 52 சதவீதம் பேர் என்று மண்டல் குழு பரிந் துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி யான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மண்டல் குழு...

ஜெயலலிதா ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி 0

ஜெயலலிதா ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி

தென்னகத்தில் – சங் பரிவார் சக்திகள் வேகமாகக் காலூன்றி வருவது பற்றி ‘பிரன்ட் லைன்’ இதழ் (மார்ச் 26, 2004) கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளம், கருநாடக மாநிலங்களின் நிலை அதில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் சங் பரிவார் எப்படி வளர்ந்து கொண்டிருக் கிறது; குறிப்பாகக் கல்வி நிறுவனங்களில்; என்பது பற்றி, எஸ்.விசுவநாதன் எழுதியுள்ள கட்டுரையை – இங்கு தமிழில் வெளியிடுகிறோம். மூத்த பத்திரிகையாளர் விசுவநாதன், ஆழமான சமூகக் கண்ணோட்டத்தோடு, தலித் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து எழுதி வருபவர். “தமிழ்நாட்டில் இன்று ஜெயலலிதா தலைமையில் ஆன்மீக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” குடந்தையில் – மகாமகக் குளத்தில் புனித முழுக்குப் போட்டுவிட்டு – தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.இராமசாமி, மார்ச் 6ம் தேதி இவ்வாறு பத்திரிகையாளர் களிடம் கூறினார். குடந்தை மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டவர்கள் சுமார் 10 லட்சம் பக்தர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் – திரிசூலங்களைக்...