Tagged: கூடங்குளம்

கூடங்குளம்: அவசரமாக ‘இயக்குவது’ ஏன்?

கூடங்குளம்: அவசரமாக ‘இயக்குவது’ ஏன்?

கூடங்குளம் அணுமின் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது என்று அறிவிப்பு வெளி வந்துள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சார்ந்த பொறியாளர் சுந்தர்ராசனிடம் இது குறித்து ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்காக பேசினோம். அவர் விரிவான விளக்கங்களை நியாயங்களை எடுத்துரைக்கிறார். அவர் நம்மிடம் தெரிவித்த கருத்துகளின் சுருக்கமான தொகுப்பு: கூடங்குளம் அணுமின் திட்டத்தின் ஒவ்வொரு உதிரிப் பாகத்தையும் தனித்தனியாக பாதுகாப்பானதா என்பதை சோதித்துக் கண்டறிய வேண்டும் என்று இந்திய அணுசக்திக் கழகம் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. பல லட்சம் உதிரிப் பாகங்கள் அனைத்தையும் இரண்டே மாதத்தில் சோதித்து முடித்துவிட்டதாக கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் சீல் இடப்பட்ட உறையில் பதிவாளரிடம் அறிக்கை அளித்துள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மனுதாரர் களாகிய எங்களுக்கு அந்த அறிக்கையைத் தரவும் இல்லை. நிர்வாகம்...

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும் தமிழக மின்சாரம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும் தமிழக மின்சாரம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

கூடங்குளம் அணுஉலையை எதிர்ப்பது ஏன்? எனும் தலைப்பில் விளக்கப் பொதுக் கூட்டம் 25.3.2012 மாலை 6.45 மணிக்குப் புதுச்சேரி பெரியார் திடலில் (சிங்காரவேலர் சிலையருகில்) நடைபெற்றது. பெருந்திரளாகப் பொது மக்களும் இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்திற்கு  புதுச்சேரி கழக அமைப்பாளர் தந்தைப் பிரியன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். சமர்பா குமரனின் இன எழுச்சிப் பாடல்களுடன் கூட்டம் துவங்கியது. துணைத் தலைவர் வீராசாமி நன்றியுரை வழங்கினார். கூட்டம் இரவு பதினொரு மணி வரை நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றுகையில் – “உலக நாடுகளெல்லாம் இந்தியாவை ஒரு குப்பைத் தொட்டி போலத்தான் நடத்தி வந்திருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது வெடி பொருளாகப் பயன்படுத்தி மிஞ்சிப் போன, மண்ணைக் கெடுக்கின்ற வேதிப் பொருள்களையெல்லாம் உரமாக மாற்றி எம்.எஸ்.சாமிநாதன் என்கின்ற பார்ப்பனனை வைத்து இந்தியாவில் பிரபலப்படுத்தினர். ஆஸ்பெஸ்டாஸ் அதிகமாகக் கொண்ட கப்பலைப் பிரான்சு நாட்டில் உடைத்தால்...

நெல்லையில் அணு உலைப் பூங்கா எதிர்ப்பு மாநாடு

அணு உலைப் பூங்கா என்பது, இரண்டுக்கும் மேற்பட்ட அணுவுலைகளை ஒரே இடத்தில் நிறுவுவதாகும். கூடங்குளத்தில் அமையவிருக்கும் 3,4,5,6 என்று அடுத்தடுத்து அணு உலை அமைக்க நினைக்கிறது அரசு. கூடங்குளத்தில் ஓர் அணு உலைப் பூங்கா அமைப்பதே திட்டம். அணு உலைப் பூங்காக்களால் போர், பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடரால் பேராபத்து  நிகழலாம். எனவே அணு உலை வேண்டாம் என்று தொடர்ந்து பல்வேறு பரப்புரைகளையும், போராட்டங்களையும் நடத்தி வரும், “அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு” சார்பாக 03-12-2016 சனிக்கிழமை அன்று மாலை 3-00 மணி முதல் இரவு வரை, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள கிங்ஸ் சிக் அரங்கில் “கூடங்குளம் அணு உலைப் பூங்கா எதிர்ப்பு மாநாடு” நடைபெற்றது. அமெரிக்கா, ஜப்பான், இரஷ்யாவுடனான அணு ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டும்; கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைப்பதையும், கல்பாக்கத்தில் விரிவாக்கம் செய்வதையும் கைவிட வேண்டும்;...

0

அணுஉலைப் பூங்கா அமைக்காதே! அணு ஒப்பந்தங்களை இரத்து செய்!

Visual Text Visual</button><br /> <button type=”button” id=”content-html” class=”wp-switch-editor switch-html”>Text</button><br /> </div><br /> </div><br /> <div id=”wp-content-editor-container” class=”wp-editor-container”><div id=”ed_toolbar” class=”quicktags-toolbar”></div><textarea class=”wp-editor-area” style=”height: 300px” cols=”40″ name=”content” id=”content”>Visual&lt;/button&gt;<br /> &lt;button type=”button” id=”content-html” class=”wp-switch-editor switch-html”&gt;Text&lt;/button&gt;<br /> &lt;/div&gt;<br /> &lt;/div&gt;<br /> &lt;div id=”wp-content-editor-container” class=”wp-editor-container”&gt;&lt;div id=”ed_toolbar” class=”quicktags-toolbar”&gt;&lt;/div&gt;&lt;textarea class=”wp-editor-area” style=”height: 300px” cols=”40″ name=”content” id=”content”&gt;Visual&amp;lt;/button&amp;gt;<br /> &amp;lt;button type=”button” id=”content-html” class=”wp-switch-editor switch-html”&amp;gt;Text&amp;lt;/button&amp;gt;<br /> &amp;lt;/div&amp;gt;<br /> &amp;lt;/div&amp;gt;<br /> &amp;lt;div id=”wp-content-editor-container” class=”wp-editor-container”&amp;gt;&amp;lt;div id=”ed_toolbar” class=”quicktags-toolbar”&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;textarea class=”wp-editor-area” style=”height: 300px” cols=”40″ name=”content” id=”content”&amp;gt;Visual&amp;amp;lt;/button&amp;amp;gt;<br /> &amp;amp;lt;button type=”button” id=”content-html” class=”wp-switch-editor switch-html”&amp;amp;gt;Text&amp;amp;lt;/button&amp;amp;gt;<br /> &amp;amp;lt;/div&amp;amp;gt;<br /> &amp;amp;lt;/div&amp;amp;gt;<br /> &amp;amp;lt;div id=”wp-content-editor-container” class=”wp-editor-container”&amp;amp;gt;&amp;amp;lt;div id=”ed_toolbar” class=”quicktags-toolbar”&amp;amp;gt;&amp;amp;lt;/div&amp;amp;gt;&amp;amp;lt;textarea class=”wp-editor-area” style=”height: 300px” cols=”40″ name=”content” id=”content”&amp;amp;gt;Visual&amp;amp;amp;lt;/button&amp;amp;amp;gt;<br /> &amp;amp;amp;lt;button type=”button” id=”content-html” class=”wp-switch-editor switch-html”&amp;amp;amp;gt;Text&amp;amp;amp;lt;/button&amp;amp;amp;gt;<br /> &amp;amp;amp;lt;/div&amp;amp;amp;gt;<br />...

இரண்டு மாதம் மூடப்பட்ட கூடங்குளம் அணுஉலைக்கு 5 இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியது ஏன்?

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் சுப. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை. கூடங்குளத்தில் இன்னும் கூடுதல் அணுஉலைகள் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருக்கிற நிலையில், கூடங்குளம் அணுத்திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்பது, தடுப்பது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் முடிவு செய்திருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பான எங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும், அடுத்தக் கட்டத் திட்டங்களையும் இங்கே பதிவு செய்கிறோம். தரமற்ற உபகரணங்களாலும், உதிரிப் பாகங்களாலும் கட்டப்பட்டிருக்கும், மோசடிகள் நிறைந்த கூடங்குளம் அணுஉலை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடிப் போடப்பட்டிருந்தது. அந்தக் காலக்கட்டத்திலும் கூடங்குளம் அணுஉலை நிர்வாகத்தினர் ஐந்து இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியிருக்கிற தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக கூடங்குளத்தில் திடீரென மின்சார உற்பத்தி துவங்கியது இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பாது காப்பதற்கும், அவரது வருகையை நியாயப்படுத்துவதற்கும் தான். கூடங்குளம் அணுஉலை உண்மையிலேயே அற்புதமாக இயங்குகிறது என்றால், விளாடிமிர் புடினும்,...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

திருவண்ணாமலையில் “உலக நன்மைக்காக” ஜெபம்-பூஜை நடத்திய சாமியார்கள், தங்களுக்கு நிலம், காப்பகம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.         – ‘தமிழ் இந்து’ செய்தி உலக நன்மையை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்; எங்கள் கோரிக்கைகளை அரசுதான் கவனிக்க வேண்டும் என்கிறார்கள். சாமியார்களுக்குக்கூட பகுத்தறிவு வந்துடுச்சு! கூடங்குளம் அணுமின் நிலைய பராமரிப்புப் பணியின்போது ஆறு ஊழியர்கள் படுகாயம் அடைந்ததற்கு வால்வு பழுதடைந்ததே காரணம் என்று கூறுவது தவறு. ஊழியர்கள் சரியாகக் கையாளாமல் போனதே காரணம். – அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் மனிதர்களுக்கு ஆபத்துன்னா, அது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால், எந்திரங்கள் பாதுகாப்பா இருக்குதுன்னு சொல்லவர்றீங்க…. நல்ல மனசு! வங்கிகளில் பெருமுதலாளிகள் வாங்கிய ரூ.2.40 லட்சம் கோடி திருப்பி செலுத்தப்படவில்லை. 10 ஆண்டுகளில் வராத கடனாக தள்ளுபடி செய்யப் பட்டது ரூ.2 லட்சம் கோடி. – வங்கி ஊழியர் சங்கம் தகவல் உஷ்… சத்தமாய் பேசாதீங்க… பெரு முதலாளிகள் காதுல விழுந்தா...

மாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம் – சுப. உதயகுமார்

மாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம் – சுப. உதயகுமார்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகிலுள்ள நீராவி தயாரிப்பான் சரியாக வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. இது ரஷ்யாவிலுள்ள மோசடி நிறுவனமான சியோ பொடால்°க் எனும் கம்பெனியிடமிருந்து வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் கொள்முதல் இயக்குனர் செர்கே ஷுட்டோவ் தரமற்ற எஃகினை வாங்கி உதரிப்பாகங்கள் தயாரித்த ஊழல் குற்றச்சாட்டுக்களால் 2012ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப் பட்டார். இந்திய மக்களிடம் உண்மையைச் சொல்லி நம்மை பாதுகாப்பதற்கு பதிலாக, வருடாந்திர பராமரிப்பு, எரிகோல்கள் மாற்றம் என்று என்னென்னவோ கதைகளை யார் யாரையெல்லாமோ வைத்து சொல்லிக் கொண்டிருக்கிறது அணுசக்தித் துறை. கூடங்குளம் அணுஉலை அக்டோபர் 22, 2013 அன்று மின்தொகுப்பில் இணைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் டிசம்பர் 31, 2014 அன்று வணிக ரீதியிலான மின்உற்பத்தி துவங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மே 31, 2015 வரையிலான 586 நாட்களில் அணுஉலை 226 நாட்கள் ஓடவில்லை. மொத்தம் 64 நாட்கள் அணுஉலை பராமரிப்புக்காக மூடப்பட்டது. டர்பைனில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காகவும், டர்பைனை...