சென்னை மாநகர ஆணையரிடம் கழகம் மனு

அரசு ஆணைகளை புறந்தள்ளிவிட்டு, காவல் நிலையங்களை ‘இந்து’ வழிபாட்டு இடமாக்கி, ஆயுத பூஜை போடும் மதவாத நிகழ்வை நிறுத்தக் கோரி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன் தலைமையில் மாநகர ஆணையரிடம் நேரில் தோழர்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக அரசு வெளியிட்ட ஆணை களையும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.  மாநகர காவல் துறை ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரி கருத்துகளை பொறுமையுடன் கேட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மாவட்டத் தலைவர் வேழ வேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, துணை செயலாளர் சுகுமார், அய்யனார் உள்ளிட்ட தோழர்கள் பலரும் உடன் சென்றனர்.

பெரியார் முழக்கம் 29102015 இதழ்

You may also like...