சென்னை வெள்ளம் : கழகத் தோழர்கள் உணவு வழங்கினர்

திருவல்லிக்கேணி பகுதிக் கழக சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மயிலாப்பூர் கணேசபுரம்,  ரூதர்புரம், சைவ முத்தையா தெரு, செல்லம்மாள் தோட்டம் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப் பட்டது.

திருவல்லிக்கேணி பகுதிக் கழகத் தோழர்கள் இதற்கான பணிகளை காலை முதலே தொடங்கி இரவு வரை செய்தனர்.

கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் ரூ.5000, கவிப்பிரியா ரூ.2000, பாலாஜி ரூ.500, திண்டுக்கல் மாக்சிம் கார்கி ரூ.600 வழங்கினார்கள்.

மயிலைப் பகுதிக் கழக சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சத்தியவாணி முத்து நகர், சுப்புராயன் சாலை, விசாலாட்சி தோட்டம், கணேசபுரம், முண்டக்கன்னியம்மன் கோவில் அருகிலுள்ள ஆகிய பகுதியில் உணவு வழங்கப்பட்டது.

மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், பிரவின், பார்த்திபன், சிவா, கார்த்திக், பாஸ்கர், வினோத், மனோகர், சுகுமார், சபரி, சுரேஷ், மாரிமுத்து, மணிகண்டன் இப்பணிகளை மேற்கொண்டனர்.

பெரியார் முழக்கம் 07122023 இதழ்

You may also like...